ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
டி.எல்.ஜவ்பர்கான் 'மட்டக்களப்பு மாவட்ட தொழிற்சந்தை வழிகாட்டுதலுக்கான திறவு கோள்' எனும் தொனிப்பொருளில், 'மாவட்டச் செயலக மனிதவள மேம்பாட்டுத் திறன் அபிவிருத்தித் திணைக்களம், எஸ்கோ நிறுவனம் என்பன இணைந்து, தொழில் வழிகாட்டும் சந்தையை, மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள செல்வநாயகம் மண்டபத்தில், நேற்று (27) நடத்தின. இந்தச் சந்தையை, மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா, சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட மேலதிகச் செயலாளர் சுதர்சினி ஸ்ரீகாந், உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், எஸ்கோ நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி கோதை, தொழில்நுட்பக் கல்லூரி அதிபர்கள், தேசிய தொழிற் பயிற்சி கைத்தொழில் அதிகார சபை, இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம்,…
-
- 1 reply
- 387 views
-
-
(ஆர்.விதுஷா) நுண்கடன்களை பெற்றவர்களிடமிருந்து அவற்றை மீளப்பெறாது நிறுத்துமாறும்., நுண்கடன் வழங்கும்நிறுவனங்களை ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவருமாறும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார். பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது , நாட்டு மக்களின் ஜீவனோபாயம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அவர்களால் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்நுண்கடன் திட்டத்தின் காரணமாகவும் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும்பெண்தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பலருடைய வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. அவர்கள் , கடன் சுமையை தாங்க இயலாது தற்கொலை செய்து கொள்ள…
-
- 1 reply
- 414 views
-
-
-டி.விஜித்தா சென். ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் ஆரம்பிக்கப்பட்டு 40ஆவது வருடங்கள் நிறைவடைந்ததையிட்டு, அதன் நிகழ்வுகள், யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்றது. யாழ். மாவட்ட ஆணையாளர் எஸ். சேல்வரஞ்சன் தலைமையில், இன்று (28) முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து, பாடசாலை வளாகத்தில் சென்.ஜோன்ஸ் அம்பியூலன்ஸுக்கான புதிய அறை ஒன்றை அதன் தலைவர் சரத் சமரகே, மத்திய கல்லூரி அதிபர் எஸ்.கே.எமில்வேந்தன் ஆகியோர் திறந்து வைத்தனர். அதன்பின்னர், கடந்த ஆண்டு சிறந்தமுறையில் அம்பியூலன்ஸ் பாசறையில் பயிற்சி பெற்ற மற்றும் சேவையாற்றிய மாணவர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டதுடன், சென்.ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் தலைவருக்கான சின்னமும் சூட்டப்பட்டன. http://www.tamilmirror.lk/யாழ்ப்பா…
-
- 1 reply
- 413 views
-
-
ஜெனிவா பிரேரணையிலிருந்து இலங்கை விலகுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்று ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் தேசிய பொருளாதாரத்தை முன்னேற்றவில்லை. அபிவிருத்தி என்ற பெயரில் நாட்டின் இறையாண்மையை விட்டுக் கொடுக்க முடியாது என வியத்மக அமைப்பின் இணைப்பேச்சாளர் பேராசிரியர் நாலக கொடஹேவா தெரிவித்தார். .கம்பஹா நகரில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கை தொடர்பில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜெனிவா பிரேரணை நாட்டுக்கு எதிரான காட்டிக்கொடுப்பு என்றே குறிப்பிடவேண்டும். தூர நோக்கு கொள்கையை அடிப்படையாகக் கொண்டே அ…
-
- 0 replies
- 164 views
-
-
சஜித்தின் கூட்டணிக்கு மு.கா ஆதரவு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பொது, தமது சமகி ஜனபலவேகய கட்சிக்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கவுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட மு.காவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், சமகி ஜனபலவேகய எனும் கூட்டணிக் கட்சிக்கு, தமது கட்சி முழுமையான ஆதரவை வழங்குமென்றார். http://www.tamilmirror.lk/செய்திகள்/சஜததன-கடட…
-
- 1 reply
- 397 views
-
-
-எஸ்.நிதர்ஷன் தற்போதைய சூழ்நிலையில் சர்வதேசத்தின் முழுமையான மேற்பார்வையுடன் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என தெரிவித்த டெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன், சர்வதேசம் தமிழ் மக்களின் பக்கம் ஒன்றிணைந்து நிற்க முக்கிய காரணம், சர்வதேசத்தினுடைய நிகழ்ச்சி நிரலுக்கு தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பு சாணக்கியமாக காய் நகர்த்தியமையே என்றும் கூறினார். யாழ். ஊடக அமையத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட் தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ்குணவர்த்தன அறிவித்திருந்தாரெனவும்…
-
- 0 replies
- 232 views
-
-
-மு.தமிழ்ச்செல்வன் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரிவின் பிரதானியான அந்தோனி எப் ரென்ஸ்சுள்ளி அவர்களுக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாருக்கிடையிலான சந்திப்பொன்று, கிளிநொச்சியில் உள்ள சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில், நேற்று நடைபெற்றது. இதன் போது, இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, ஜெனீவா விடயம், அதிகரித்த வேலையின்னை, முதலீடுகளின் தேவை போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற விடயம் கண்டறியப்படல் வேண்டும் என்பதோடு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும், அவர்களுக்கு நீதி வ…
-
- 0 replies
- 461 views
-
-
800 பயனாளிகளுக்கு 4 மாதங்களில் 17 கோடி ரூபாய் வருவாய் February 27, 2020 வடமாராட்சி பிரதேசத்தில் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் நீர் வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் சுமார் 170 குடும்பங்கள் சுமார் 4 மாத காலப் பகுதியில் அண்ணளவாக 17 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட்டது. வடமாராட்சி பிரதேசத்தில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 40 இலட்சம் இறால் குஞ்சுகளை தொண்டமானாறு மற்றும் உப்பாறு நீர் நிலைகளில் இடுவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கிய ஆலோசனைக்கு அமைய கடந்த 02.02.2020 அன்று முதற்கட்டமாக இறால் குஞ்சு விடும் நிக…
-
- 2 replies
- 647 views
-
-
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா மார்ச் 6 -7 கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் 6 ஆம் 7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இம்முறை இந்த திருவிழாவில்சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் வரையில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து 3,000 பக்தர்களும், இலங்கையில் இருந்து 7,000 பக்தர்களும் இந்த புனித தேவாலய திருவிழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை கடற்படை ஊடக போச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பக்தர்களின் வசதி கருதி போக்…
-
- 1 reply
- 431 views
-
-
'கமிசன்' கேட்டால் தக்க பாடம் புகட்டுங்கள் - ஆயிரம் ரூபா உறுதி என தொண்டமான் மீண்டும் அறிவிப்பு! "மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் தனி வீட்டுத் திட்டத்துக்கு பயனாளிகள் பணம் வழங்க வேண்டியதில்லை. எனவே, யாராவது தரகு பணம் கேட்டு வந்தால் தக்க பாடம் புகட்டுங்கள்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபை ஊடாக பதுளை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கான காணி உறுதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நிகழ்வு இன்று (28) சமூக வலுவூட்டல்…
-
- 1 reply
- 324 views
-
-
தினேஸ் குணவர்தன UNHRCயில் சமர்ப்பித்த எழுத்து மூலமான புதுப்பித்தல் அறிக்கை (தமிழில்) தினேஸ் குணவர்தன UNHRCயில் சமர்ப்பித்த எழுத்து மூலமான புதுப்பித்தல் அறிக்கை (தமிழில்) நிகழ்ச்சி நிரல் விடயம் 2 - பொது விவாதம்: மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 40/1, ´இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்´ குறித்த மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கைக்கு அமைவான மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 ஐ நடைமுறைப்படுத்துவது குறித்த எழுத்துமூலமான புதுப்பித்த தகவல்களை மனித உரிமைகள் ஆணையாளர் வழங்குதல் (A/HRC/43/19) 27 பெப்ரவரி 2020 இலங்கையின் வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்…
-
- 0 replies
- 288 views
-
-
எம்.இஸட்.ஷாஜஹான் வருகின்ற காலம் மிக சவாலான காலமாகும் எனத் தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஹுப் ஹக்கீம், நடைபெறவுள்ள தேர்தலில், எமது சமூகம் சார்ந்த அரசியல் பிரிதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பிலும், அதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும் என்றார். நீர்கொழும்பு-அல் - ஹிலால் மத்திய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்விக் கண்காட்சி நிகழ்வில், நேற்று(26) பங்கேற்று உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், மஹர சிறைச்சாலையிலுள்ள பள்ளிவாசல், ஏப்ரல் குண்டுத் தாக்குதலின் பின்னர் மூடப்பட்டுள்ளது. தற்போது அங்கு வேறு மதச் சின்னங்க…
-
- 3 replies
- 723 views
-
-
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு! ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க, முன்னர் செயற்பட்டிருந்தார். இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக சாட்சியமளிக்க ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.பீ.பி. ஹேரத் தெரிவித்துள்ளார். லலித் பத்திநாயக்க இதற்கு முன்னரும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்ததுடன், ஆணைக்குழுவில் இது வரையில் 72 பேர் சாட்சியமளித்துள்ளனர் என…
-
- 0 replies
- 634 views
-
-
காணாமல் போனவர்களை கண்டுபிடித்த உதய கம்மன்பில. ! இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன எனக்கூறும் தமிழ் அடிப்படைவாதிகள், அதற்கான சாட்சிகளை இன்னும் முன்வைக்கவில்லை. 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு ஊகத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ளது – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஜெனிவா கூட்டத்தொடர் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ” தமது நாட்டுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கே இணை அனுசரணை வழங்கிய ஒரே நாடு இலங்கை என்ற சாதனையை 30/1 தீர்மானம் நிறைவேற்றப்படும்போது ஐக்கிய தேசியக்கட்சி படைத்தது. நல்லிணக்கம…
-
- 4 replies
- 954 views
-
-
2021 ஆம் ஆண்டுவரை ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக முடியாது – ரணில் அதிரடி! போருக்குப் பின்னரான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதாக ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. எவ்வாறாயினும், 2021 ஆம் ஆண்டு வரை குறித்த தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேற முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்திருந்த நல்லாட்சி அரசாங்கமே குறித்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக தி ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெர…
-
- 3 replies
- 994 views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் சிறந்த நிர்வாகத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே சீர்குலைக்கின்றார் என்று மக்கள் கருதுவது முற்றிலும் தவறானதாகும். நீதிமன்றத்தினால் குற்றவாளி என்று குறிப்பிடப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி அரச உயர் பதவிகளை வழங்கியுள்ளார். என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டினார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், இந்நாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கும் எவ்வித வேறுப்பாடுகளும் கிடையாது. தேர்தல் காலத்தில் தேசதுரோக ஒப்பந்தமாக விமர்சிக்கப்பட்ட எம்.சி.சி. ஒப்பந்தத்தை பொதுத்தேர்தலுக்கு பிறகு இரகசியமான முறையில் கைச்சாத்திடும் முயற்சியினை அரசாங்கம் முன்னெடுக்கின்றது எனவும் குறிப்பிட்டார். மக்கள் விடுதலை மு…
-
- 2 replies
- 447 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஒரு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்போம் February 27, 2020 நாங்கள் தொலைத்தது ஆடுகளையோ அல்லது மாடுகளையோ இல்லை. தொலைத்தது எங்களுடைய உயிர்களையும், பிள்ளைகளையுமே. எங்களுக்கான ஒரு நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்போம் என்பதனை அரசாங்கத்திற்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் மனுவல் உதையச்சந்திரா தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை (27) மதியம் மன்னாரில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். -அவர் மேலும் தெரிவிக்கையில்,,,, மன்னார் நீதிமன…
-
- 2 replies
- 681 views
-
-
-எஸ். நிதர்ஷன் கொடிகாமம் - மாசேரி பகுதியில் உள்ள ஆவா குழு உறுப்பினர் ஒருவரின் வீட்டின் மீது, நேற்று (25) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானும் வீட்டின் தளபாடங்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. பட்டா ரக வாகனத்தில் வந்த 15 பேர் கொண்ட கும்பலொன்றே, இந்தத் தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டதாக, கொடிகாமம் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஆவா-வீட்டில்-தாக்குதல்/71-246078
-
- 4 replies
- 670 views
-
-
யாழில் தொடரும் அடாவடி – நேற்று மட்டும் 3 இடங்களில் தாக்குதல்! யாழ். வண்ணார்பண்ணை மற்றும் கொக்குவில் மேற்கு பகுதிகளில் 3 இடங்களில் வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. நேற்று மாலை 6 மணியளவில் வண்ணார்பண்ணை முருகமூா்த்தி ஆலயத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்ற வாள்வெட்டு கும்பல், கடையை அடித்து நொருக்கியதுடன், உரிமையாளரையும் தாக்க முயற்சித்துள்ளது. இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை நடாத்தியிருக்கின்றது. குறித்த கும்பல் தாக்குதல் நடாத்திவிட்டு கொக்குவில் மேற்கு வராகி அம்மன் கோவிலடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றின் மீதும், அதற்கு அருகில் உள்ள வீடொன்றின் மீதும் தாக…
-
- 2 replies
- 953 views
-
-
ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை by : Dhackshala நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நுகோகொடை நீதவான் நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்தே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்தோடு அவருக்கு வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற செயற்பாடுகளில் தலையிட்ட குற்றச்சாட்டு தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ரஞ்சன்-ராமநாயக்க-பிணையில/
-
- 3 replies
- 715 views
-
-
வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது பேரப்பிள்ளைக்கு நீதிகோரி கடந்த மூன்றுவருடங்களாக முல்லைத்தீவில் இடம்பெற்றுவரும் தொடர் போராட்டத்தில் பங்கெடுத்திருந்த தாயார் ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளார் . செல்வம் சிவபாக்கியம் என்ற தாயாரே இவ்வாறு மரணமடைந்துள்ளார் . முகமாலையை பிறப்பிடமாகவும் மந்துவில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட செல்வம் சிவபாக்கியம் என்ற தாயே நேற்று காலமானார். இவரின் இறுதிக் கிரியைகள் இன்று (27) காலை அவரது இல்லத்தில் நடைபெற்றது . தனது மகளின் மகனான அல்பிரட் தினு என்ற தனது பேரப்பிள்ளை 2009 இறுதியுத்த பகுதியில் வட்டுவாகல் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் ஏக்கத்தோடு ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் மழை வெயில் பனி என்று எதையுமே பொருட்…
-
- 0 replies
- 784 views
-
-
இரண்டு வார கால அவகாசத்தை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளோம். முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு உடனடி தீவைப்பெற்றுக்கொடுக்காவிடின் மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அதிபர் , ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுதத்த போரட்டத்தில் ஈடுப்படுவதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த தேசிய கல்வி சேவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரியந்த பத்லேரிய , மேலும் கூறுகையில், ஆசிரியர் - அதிபர் சேவையை வரையறுக்கப்பட்ட சேவையாக கடந்த அரசாங்கம் அறிவித்தது. இந்நிலையில்,அந்த நடவடிக்கைளை முன்னெடுக்கும் வரையிலான இடைக்கால கொடுப்பணவை வழங்குமாறு கோரிக்கையொன்றினை அரசாங…
-
- 0 replies
- 511 views
-
-
தேர்தல் காலத்தில் பரப்பப்படும் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், “உண்மைச் சதுக்கம் - பொய்களை முடக்குவோம்” எனும் அமைப்பொன்று, இன்று (27) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. ஒவ்வொரு கட்சிக்குள்ளிருக்கும் எதிர்கால அரசியல் சந்ததிகளை உள்வாங்கி, நேர்த்தியான அரசியல் கலாசாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே, இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/உணமச-சதககம-பயகள-மடககவம-அமபப-உதயம/175-246132
-
- 3 replies
- 615 views
-
-
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணம் தீவப் பகுதி மீனவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை இன்று முன்னெடுத்தனர். யாழ். பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணி யாழிலுள்ள இந்திய துணைத் தூதரம் வரை சென்று நிறைவடைந்தது. இதன் போது கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களம், கடற்தொழில் அமைச்சர் , இந்திய துணைத் தூதரகம் ஆகியவற்றுக்கு மகஐரொன்றையும் கையளித்தனர். இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைப் படகுத் தொழிலால் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன் கடற்தொழிலாளர்களும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றதாகவும் தெரிவித்த மீனவர்கள் இந்திய மீனவ…
-
- 0 replies
- 546 views
-
-
புனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து சவுதி அரேபிய அரசாங்கம், மக்காவுக்குப் புனிதப் பயணம் செல்வதற்கான விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு முழுவதும் COVID-19 வைரஸ் பரவி வருவதால், யாத்திரிகர்களுக்கான விசாக்களை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டதாக சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. உம்ராவுக்காக சவுதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. ஓர் ஆண்டில் ஒவ்வொரு மாதமும், உம்ரா செய்வதற்காக உலக நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள்…
-
- 5 replies
- 512 views
-