ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
மர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு -க. அகரன் வவுனியா - நொச்சிமோட்டை பகுதியில் பெண் ஒருவருக்கு மர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரரை, பொதுமக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பெண் தெரிவிக்கையில், குறித்த நபர் தனது வீட்டுக்கு முன்பாக வந்து சிறுநீர் கழித்ததுடன், மர்ம உறுப்பை காட்டி தன்னை அழைத்ததாகவும் தெரிவித்தார். பின்னர் தான் இன்னுமொருவருடன் சேர்ந்து குறித்த நபரை நோக்கி சென்ற போது அவர் ஓடியுள்ளார். பின்னர் எமது உறவினர்கள் ஒன்று கூடி அவர…
-
- 49 replies
- 5k views
-
-
மட்டக்களப்பில் 14 நாள்களில் 248 பேருக்கு டெங்கு மட்டக்களப்பில் இந்த ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரையும் 248 பேர் டெங்கு நோய் ஏற்பட்டுள்ளதென, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் தெரிவித்தார். இதற்கமைய, டெங்கு தாக்கத்தினால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்;டக்களப்பில் இதுவரை 36 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஆரையம்பதியில் 51 பேர்;;, களுவாஞ்சிகுடி 20 பேர்;;,; வாழைச்சேனை 41 பேர்;;, செங்கலடி 29 பேர்; ;;, காத்தான்குடி 16 பேர்;;, ஏறாவூர் 16 பேர்;;, வெல்லாவெளி 03 பேர்;;, வவுணதீவு 01 பேர் ;;,பட்டிப்பளை 05 பேர்;;, ஓட்டமாவடி 07 பேர் ;;, கோரளைப்பற்று மத்தி 17…
-
- 2 replies
- 449 views
-
-
யாழ்ப்பாணத்தில் 689 அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை புதிய அரசால் கொண்டுவரப்பட்ட சப்ரி கமக் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளுக்குட்பட்ட 435 கிரம அலுவலகர் பிரிவுகளில் முன்னுரிமை அடிப்படையில் மக்களால் கோரப்பட்ட 689 அபிவிருத்தித் திட்டங்கள் முன்மொழியப்பட்டன.இந்நிலையில் இந்த 689 திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான நிதியிலிருந்து ஒரு பகுதி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதுடன் திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்குமாறும் வேலைகளின் முன்னேற்ற அறிக்கைக்கு அமைய மிகுதி நிதி விடுவிக்கப்படும் என்றும் நிதி அமைச்சின் செயலாளரால் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகனுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செ…
-
- 0 replies
- 494 views
-
-
யாழ். போதனா வைத்தியசாலை கொரோனா வைரஸ் பரவாதிருப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை குறித்து எச்சரிக்கை உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. மேலும், சீனா முழுவதும் 1287 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.சீனாவில் தீவிரமாக பரவிவந்த கொரோனா வைரஸ், தற்போது அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், இந்தோனேசியா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் மற்றும் பிரான்ஸில் இரு நகரங்களில் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாதிருப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர், சி.யமுனானந்தன் தெரிவித்தார். சீனா…
-
- 0 replies
- 292 views
-
-
5 இறுவட்டுக்களை பாராளுமன்றில் கையளித்த ரஞ்சன்! அரசியலமைப்புச் சபை நாளை (24) பிற்பகல் 1.30 க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த குழுவில் 10 உறுப்பினர்கள் அடங்குவதுடன், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இதில் பிரதான பங்கை வகிப்பர். 19 வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு இணங்க பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் அணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்களுக்காக உறுப்பினர்களை நியமிக்கும் பொறுப்பு அரசியலமைப்புச் சபைக்கே உள்ளது. அதேபோல் கட்சி தலைவர்கள் கூட்டமும் நாளை இடம்பெறவுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக இலங்கை மத்திய வங்கியால் தயாரிக்கப்பட…
-
- 3 replies
- 741 views
-
-
காற்றில் பறந்த தமிழர் கலாசாரம் முதலிடம் பிடித்தது…. January 16, 2020 தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்ட போட்டி நடத்தப்பட்டது. ஆயிர கணக்கான மக்கள் பங்கேற்று பட்டப் போட்டிகளை பார்த்து மகிழ்ந்தனர். இந்தப் போட்டியில் வித விதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட பட்டங்கள் ஏற்றப்பட்டன. அதில் பறக்கும் இசைக்கச்சேரி பட்டம் முதலிடம் பிடித்தது. காற்றில் பறந்து தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் முகமாக பறை, உடுக்கு,்யாழ், தவில், மிருதங்கம், கடம் போன்ற இசைக்கருவிகளை இசைத்த கலைஞர்களை கொண்டதாக இந்தப் பட்டம் இருந்தது. http://globaltamilnews.net/2020/136231/
-
- 12 replies
- 1.8k views
-
-
புதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை முன்னாள் போராளிகள் பலரின் ஒருங்கிணைவில் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை என்ற அரசியல் கட்சியொன்று உதயமாகின்றது. இந்த கட்சியின் முதலாவது அங்குரார்ப்பண மாநாடு எதிர்வரும் 25ஆம் திகதி கிளிநொச்சியில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது. அண்மையில் வவுனியாவில் ஒன்று கூடியிருந்த முன்னாள் போராளிகள் அணிகளான ஜனநாயக போராளிகள் கட்சி, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போரளிகள் அணி, தமிழர் தாயகக் கட்சி, தமிழர் தேசியக் கட்சி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக சமூக செயற்பாடுகளில் பங்கேற்றிருந்த தரப்பினர் உள்ளிட்டவர்கள் சமகால சூழலில் ஒருங்கிணைந்து செயற்படுவதன் அவசியம் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தனர். மாவீர்களின் உறவுகளையு…
-
- 56 replies
- 5.5k views
- 1 follower
-
-
இறுதி தீர்மானத்தை அடுத்த வாரம் அளவில் அறிவிக்க உத்தேசம்... எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்து போட்டியிடுவது குறித்த இறுதி தீர்மானத்தை அடுத்த வாரம் அளவில் அறிவிக்கவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். தலவாக்கலையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/232969/இறுதி-தீர்மானத்தை-அடுத்த-வாரம்-அளவில்-அறிவிக்க-உத்தேசம்
-
- 0 replies
- 525 views
-
-
இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; 13 பேருக்கு பிணை முன்னாள் கடற்படைத் தளபதியும் அண்மையில் அட்மிரல் ஒப் த ப்ளீட் ஆக பதவி உயர்வு பெற்ற வசந்த கரன்னகொடவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு தமிழ் இளைஞர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை. அதனையடுத்து, அவரை நீதிமன்றில் முன்னிலையாகும…
-
- 0 replies
- 406 views
-
-
அமைதியின்மை சுமூகமாக்கப்பட்டுள்ளது பாறுக் ஷிஹான் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு விண்ணப்பப்படிவங்களைப் பெற சென்றவர்கள் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நிறைந்தமையினால் ஏற்பட்ட அமைதியின்மையானது, சமூகமாக்கப்பட்டுள்ளது. இன்று (24) காலை முதல் குறித்த வேலைவாய்ப்பு தொடர்பான விண்ணப்பப்படிவங்கள், நாவிதன்வெளி பிரதேச எல்லைக்குட்பட்ட வேலையற்ற குடும்ப உறுப்பினர்கள் பெறுவதற்காக வருகை தந்திருந்தனர். இதன் போது பிரதேச செயலகத்தில் அதிகளவான மக்களின் வருகையினால் சிறிது அமைதி இன்மை ஏற்பட்டதுடன் பின்னர் பொலிஸார் இராணுவத்தினரின் வருகையை தொடர்ந்து சுமூக ந…
-
- 0 replies
- 385 views
-
-
கொழும்பில் பொலிஸ் பதிவை தடுத்தீர்களா? மனோவிடம் CID விசாரணை கொழும்பில் வீடுகள் தோறும் பொலிஸார் மேற்கொண்ட விபரக்கோவை திரட்டு என்ற பொலிஸ் பதிவை ஏன் தடுத்து நிறுத்தினீர்கள்? இதன் மூலம் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு குற்றவாளிகளை முன்கூட்டியே கண்டு பிடிக்க முடியாமல் போனதை ஏற்றுக் கொள்கிறீர்களா? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனிடம் விசாரணையை மேற்கொண்டுள்ள குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் வீட்டுக்கு சென்று அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுபற்றி பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது, …
-
- 0 replies
- 603 views
-
-
தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்கள் விநியோகம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. குறித்த துண்டு பிரசுரங்கள் மட்டக்களப்பு பேருந்து நிலையத்திற்கு மேல் உள்ள மட்டு. ஊடக அமையத்தின் அலுவலகத்திற்குள் போடப்பட்டுள்ளது. மட்டு. ஊடக அமையத்திற்குள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு ஊடக சந்திப்பிற்காக ஊடகவியலாளர்கள் சென்று அலுவலகத்தை திறந்தபோது குறித்த துண்டு பிரசுரங்கள் போடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர். குறித்த துண்டு பிரசுரத்தில், “எச்சரிக்கை! எச்சரிக்கை! இவர்கள்தான் வெளிநாட்டுப் புலிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அரசுக்கு எதிராக செயற்படும்…
-
- 2 replies
- 496 views
-
-
வில்பத்து காடழிப்பு குறித்த வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு by : Dhackshala பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் 27ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்டவிரோத கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் சூழலுக்கு பாரியளவு பாதி…
-
- 1 reply
- 419 views
-
-
ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரிற்கு மகஜர் அனுப்பி வைப்பு… January 24, 2020 இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் , சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களை யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளாகியும் வெளிப்படுத்தப்படவில்லை- வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரிற்கு மகஜர் அனுப்பி வைப்பு. இலங்கை அரசு மேற்கொண்ட இனவழிப்பு யுத்தத்தின் போது அரச படைகளாலும்,துணை இராணுவக் குழுக்களாலும் கைது செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள்,மற்றும் யுத்தத்தின் இறுதி நாட்களில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது…
-
- 1 reply
- 425 views
-
-
இனவாத, மதவாத, பேரினவாத சிந்தனைகளைக் கொண்ட கூட்டமே ராஜபக்ச அரசின் கூட்டம் -மாவை சேனாதிராஜா இனவாத, மதவாத, பேரினவாத சிந்தனைகளைக் கொண்ட கூட்டமே ராஜபக்ச அரசின் கூட்டம். இதில் விமல் வீரவன்ச மோசமான இனவாதி என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.அவர் மீண்டும் தனது சண்டித்தனத்தைக் காட்டியுள்ளார். மன்னாரில் அவர் செய்த வேலை படுகேவலமானது. எமது தாய் மொழியாம் தமிழை அவர் கொச்சைப்படுத்தியுள்ளார்.அவரின் மோசமான இந்த நடவடிக்கையைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சார்பில் நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.ராஜபக்ச ஆட்சியில் தமிழர்களைப் புறக்கணிக்கும் வகையில் அரங்கேற்றப்படும் அராஜக நடவடிக்கைகளை சர்வதேசம் கைகட்டி வேடிக்கை பார்க்காது. விபரீத விளைவுகளை இந்த அரசு சந்திக்க வேண்டி வரும் என யாழ்…
-
- 2 replies
- 556 views
-
-
அனர்த்தங்களால் பெரிதும் பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாமிடம் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இயற்கை அனர்த்தத்தினால் இலங்கைக்கு வருடாந்தம் 50 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் இது மொத்த உற்பத்தியில் 0.4 சதவீதமாக அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் இந்தப் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இயற்கை பேரழிவில் இருந்து எதிர்பாராத சுமை ‘Contingent Liabilities from Natural Disasters Sri Lanka’ …
-
- 0 replies
- 311 views
-
-
நோர்வே தூதுவர் – யாழ். மேயர் சந்திப்பு இலங்கைக்கான நோர்வே நாட்டின் தூதுவர் டிரினி ஜோர்னலி ஸ்கெடல் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டை சந்தித்துக் கலந்துரையாடினார். இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் யாழிற்கு விஜயம் செய்த தூதுவர் குழுவினர் நேற்று (புதன்கிழமை) யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் உடன் யாழ்.மாநகர சபையில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது, யாழ். மக்களின் அரசியல் நிலைமைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக தூதுக்குழுவினருக்கு ஆளுநரால் எடுத்துரைக்கப்பட்டது. சுமார் 2 மணித்தியாலங்களாக நடைபெற்ற இச்சந்திப்பின் பின்னர், தூதுவரால் நோர்வே நாட்டின் பிரபல இடத்தின் புகைப்ப…
-
- 0 replies
- 378 views
-
-
ராணுவச் சிப்பாயைத் தாக்கியவரின் சகோதரன் கைது: முன்னாள் போராளியைத் தேடி வலைவீச்சு! ராணுவச் சிப்பாயைத் தாக்கியவரும் அவரது சகோதரனும் தலைமறைவாகியிருந்த நிலையில் வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் சகோதரன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரிக்கு அண்மையாகவுள்ள யாரும் வசிக்காத வீடொன்றில் சந்தேகநபர், நண்பர்களுடன் இருந்தவேளை, அந்த வீட்டை இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் ராணுவத்தினர் சுற்றிவளைத்து அவரைக் கைது செய்தனர் என்றும் பொலிஸார் கூறினர். வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பகுதியில் கடந்த 15ஆம் திகதி தைப்பொங்கல் நாளன்று ராணுவச் சிப்பாய் ஒருவர் பொதுமகனால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் முன்னாள் போராளி என அவரைக…
-
- 0 replies
- 343 views
-
-
புலிகளின் எழுச்சிப்பாடல்கள் அடங்கிய சீ.டிகளை விற்றவருக்கு பிணை! தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்கள் அடங்கிய இறுவெட்டை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் ஒரு வருடத்தின் பின்னர் சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன், சட்ட மா அதிபரிடம் எழுத்துமூலம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு தருமபுரம் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. தருமபுரம் பொலிஸாரின் அறிக்கைக்கு அமைய சந்தேகநபரை பிணையில் செல்ல கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் நேற்று(வியாழக்கிழமை) அனுமதி வழங்கியுள்ளது. கிளிநொச்சி, தருமபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளின் எழு…
-
- 0 replies
- 736 views
-
-
கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழக முன்னாள் சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது தொடர்பில் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதியை வழங்குமாறு இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு பணித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு இன்று இந்த அறிவுறுத்தலை வழங்கியது. பொதுநல வழக்குகள் பலவற்றை பாதிக்கப்பட்ட தரப்புகள் சார்பில் முன்னெடுத்து வருபவரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலை…
-
- 6 replies
- 921 views
-
-
’படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில்’ “கண்டி மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுவந்த வீட்டுதிட்டங்களைக்கூட இந்த அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளமையானது பெரும் அநீதியான செயலாகும்”என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில் என்பதுபோல்தான் இந்த அரசாங்கத்தின் பயணம் அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட செயற்பாட்டாளர்களுடன், கண்ட…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் மாறாக அந்த தலைமைத்துவத்தை தனக்குத் தாருமாறு கேட்பது அல்ல என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு கேள்விக்கு பதிலளித்து அவர் அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச மத்தியஸ்தத்துடனேயே இனப் பிரச்சினைக்கான பேச்சு வார்த்தை முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் இலங்கை பூராகவும்…
-
- 3 replies
- 673 views
-
-
கடனில் மூழ்கும் இலங்கை | ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு திசைகளில்! வேறு திசைகளில் பயணிக்கும் ஜனாதிபதியும் பிரதமரும் கடன் சுமையில் நாட்டின் பொருளாதாரம் அமிழ்ந்துகொண்டிருக்கையில், ஜனாதிபதியும், பிரதமரும் வெவ்வேறு நிர்வாகப் பாதைகளில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள் எனவும், அரசாங்கம் இரு வேறு முகாம்களாகப் பிரிந்திருக்கிறது என்றும், ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே ஊடகவியாளருடன் பேசும்போது தெரிவித்தார். “பொருளாதார நிர்வாகம் பிழைத்துப்போனதால் மேலும் கடன்களைப் பெறமுடியாத நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கிறது. இதற்குள், ஜனவரி 31ம் திகதி அடுத்த கடன் கொடுப்பனவு வருகிறது” என விதானகே மேலும் தெரிவித்தார். 20…
-
- 0 replies
- 420 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவி பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை! [Wednesday 2020-01-22 16:00] யாழ்ப்பாணம்- பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் கற்கும் சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று மதியம் 2.30 மணியளவில் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றுள்ளது. கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், குறித்த …
-
- 6 replies
- 1.7k views
- 1 follower
-
-
தமக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் இரா.சம்பந்தன் சபையில் விளக்கம் எழுத்தாளர் Bella Dalima Colombo (News 1st) அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ இல்லம் மற்றும் வாகனம் வழங்கப்பட்டமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவராக தெரிவாகி இரண்டு வருடங்களின் பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில், 2017-இல் தமக்கு மாளிகை வழங்கப்பட்டதாக இரா. சம்பந்தன் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவருக்காக ஒதுக்கப்படுகின்ற நிதியின் கீழ் வாடகைக்கு மாளிகையொன்றையும் பணியாளர்களையும் அமர்த்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை முன்வைத்ததாக ச…
-
- 3 replies
- 987 views
-