Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக நிர்வாக சேவை அதிகாரி கேசவனை நியமிக்க தீர்மானம்? யாழ் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக நிர்வாக சேவை அதிகாரி கேசவனை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய அரசாங்க அதிபர் வேதநாயகன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்தநிலையில் அவரை அரச திணைக்களம் ஒன்றுக்கு இடமாற்றம் செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்கவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக அங்கு அரச அதிபராக கடமைபுரிந்த புஷ்பகுமார சேவை…

  2. தமிழர்களின் காணிகளை அபகரிப்பது அரசாங்கத்தின் கொள்கையல்ல – வாசுதேவ நாணயக்கார! தமிழர்களின் காணிகளை அபகரிப்பது அரசாங்கத்தின் கொள்கையல்ல என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வவுனியா – தச்சங்குளத்தில் தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கும் வகையில் இனவாதச் செயற்பாடுகள் அரங்கேற்றப்படுவதாக குற்றம் சுமத்தியிருந்தார். இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழர்களின் காணிகளை அபகரிப்பது அரசாங்கத்தின் கொள்கையல்ல. எவரும் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் வகையில் செயற்பட்டால் அதுதொடர்பான தகவல்களை …

    • 2 replies
    • 476 views
  3. கூட்டமைப்பின் வெற்றி அரசாங்கத்திற்கு சிம்ம சொற்பணமாக இருக்கும் – சரவணபவன்! தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றி அரசாங்கத்திற்கு சிம்ம சொற்பணமாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 22 ஆசனங்களை பெற்றுக் கொள்ளும் எனவும், அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள அரசாங்க அதிபர்களை மாற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும், தேர்தலினை இலக்காக கொண்டே இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது க…

  4. 367 பில்லியன் ரூபாயை பெற்றுக்கொடுக்க குறைநிரப்பு பிரேரணை கடந்த அரசாங்கம் ஒப்பந்தக்காரர்கள், விநியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு மீள செலுத்த வேண்டிய 367 பில்லியன் ரூபாய் நிதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த நிதியை பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் குறைநிரப்பு பிரேரணையொன்றை முன்வைக்க வேண்டுமென, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பந்துல குணவர்தன, “நாட்டில் கடந்த அரசாங்கத்தைப்போன்று வேறெந்தவொருஅரசாங்கமும் பாரிய மோசடி மற்றும் வீண் செலவுகளை மேற்கொள்ளவில்லை. நிதி ம…

  5. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம்! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று(வெள்ளிக்கிழமை) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள அவர், 11ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயம் இலங்கை மற்றும் இந்தியாவின் உயர்மட்ட பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகும் என இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். புதுடெல்லி தவிர்ந்து வாரணாசி, சாரநாத், போத் கயா மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விஜயத்தின் போது, இலங்கை தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது, பிராந்திய பாதுகாப்பு, மற்றும் வர்த்தக உறவுகளை அ…

  6. முல்லைத்தீவு நிலக்கடலைச் செய்கையாளர் பிரச்சினை .

    • 0 replies
    • 294 views
  7. ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகே “ஆர்ப்பாட்ட இடம்” அமைக்கப்பட்டுள்ளது! by : Jeyachandran Vithushan கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகே, “ஆர்ப்பாட்ட இடம்” என புதிதாக அடையாளமிடப்பட்ட பலகை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட புதிய இடம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இன்று அந்த பகுதிக்கு சென்ற பொதுமக்கள் இதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்தவகையில் ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு வருபவர்கள் வாகனங்களை தரித்து நிறுத்தும் வாகன தரிப்பிடத்தில் இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் காலி முகத்திடலில் பிரதான வீதியைத் தடுத்து ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு…

    • 5 replies
    • 984 views
  8. பெரும் நிதி நெருக்கடியில் திணறும் ஸ்ரீலங்கா அரசு! எச்சரிக்கை மணி அடித்தார் மங்கள அரசாங்கம் தற்போது பெருமளவில் நிதி நெருக்கடியில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஆட்சிப் பொறுப்பினை ஏற்றவுடன், அரசாங்கமானது பெரும்பாலான வரிகளை குறைத்தது. இதனால் நாடு பெரும் பொருளாதார சரிவினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அது மாத்திரமல்லாது அரசாங்கம் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. உண்மையில் தற்போதுள்ள சூழலில் வரிக் குறைப்பானது பொருத்தமற்ற செயலாகவே அமைந்திருக்கிறது. நிதிப்…

  9. -என்.ராஜ் “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2019ஆம் ஆண்டில் 612 பேர் தற்கொலைக்கு முயன்று 105 பேர் உயிரிழந்துள்ளனர்” என, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், 2019ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கையானது, கடந்த நான்கு ஆண்டுகளினை விடவும் அதிகரித்தே கானப்படுகின்றது. இருப்பினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைவடைந்துள்ளதென்றார். “இவற்றின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டில் 578 பேர் தற்கொலைக்கு முயன்று அனுமதிக்கப்பட்டபோதும் அதில் 110பேர் உயிரிழந்தனர். 2017ஆம் ஆண்டில் 579 பேர் தற்கொலைக்கு முயன்று 59 பேர் உயிரிக்க ஏனையோர் காப்பற்றப்பட்டனர். இதேபோன்று 2018ஆம் ஆண்டில் 582 பேர் தற்கொலைக்கு…

  10. சுதந்திரதின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது தமிழர்களை தனிமைப்படுத்தியிருக்கும் நிலையில் வடக்கில் சோதனைச் சாவடிகளை அமைத்து மேலும் அவர்களை சிரமத்துக்கு உள்ளாக்க வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்சுச் சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே; இவ்வாறு தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தப்படுவதாக கூறி வடக்கில் முப்படையினர் மூலம் பல்வேறு சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வவுனியா, கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இவ்வாறு திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பஸ்கள் முதல் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்…

  11. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியில் அரசியல் ரீதியான அச்சுறுத்தல்கள் அதிகரித்துவருகின்றன. இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அமீர் அலி கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், நாட்டில் அனைத்து இனமக்களும் சமமாகவே நடத்தப்படுவார்களென ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால், மட்டக்களப்பு கல்குடா தொகுதியில் சிலர் பொது மக்களை அரசியல் ரீதியாக அச்சுத்துகின்றனர். குறிப்பாக தாமரை மொட்டுச் சின்னத்துக்கே எதிர்காலத்தில் வாக்களிக்க வ…

    • 0 replies
    • 331 views
  12. ஆரம்பகாலத்தில் ஆங்கில மொழியே போதனா மொழியாக கற்பிக்கப்பட்டது. அப்போது மக்களுக்கிடையில் எவ்வித பாகுபாடும் காணப்படவில்லை. ஆனால் சிங்களம் மற்றும் தமிழ் போதனா மொழியாக கற்பிக்கப்பட்டதை அடுத்து பிளவுகள் தோற்றம் பெற்றன. அதன் பிரதிபலனாகவே நாட்டில் யுத்தமொன்றும் இடம்பெற்றது என்று அமைச்சுகளுக்கான செயலாளர்களின் தேசிய அமைப்பின் தலைவர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க&nbsp தெரிவித்தார். கொழும்பு - வொன்டர் ஹோட்டலில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, நாடு சுதந்திரம் அடைந்து 72 வருடங்கள் கடந்துள்ள நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமாக இருக்கின்றார்களா? அவர்களிடத்தில் நல்லிணக்கம் பேணப்படுகின்றதா? என்பது தொடர்பில் சிந…

    • 0 replies
    • 274 views
  13. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைஇதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இரண்டு கட்சிகளும் முதலில் கூட்டமைப்பாகபுரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது என்றும் பின்னர்ஏனைய கட்சிகள்மற்றும் அமைப்புக்களைஇணைத்துக்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டணி தொடர்பான புதிய யாப்பும் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்தப் பொதுக்கூட்டணியை பதிவு செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின்பெயரை மாற்றிபுதிய சின்னம் ஒன்றைப் பெற்றுபொதுக்கூட்டணியாகபோட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக்கூட்டணிக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்று பெயரிடப்படவுள்ளது. இதற்கான அங்கீகாரத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளத…

    • 0 replies
    • 571 views
  14. கூட்டமைப்பு மாற்று அணிக்கு பயப்படுகிறது. அதனால்தான் சம்பந்தர் இப்பொழுது அடிக்கடி ஐக்கியத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்.அவர் ஐக்கியம் என்று கருதுவது தமிழ் வாக்காளர்கள் ஒரு கொத்தாக கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்பதுதான். சுமந்திரன் தாங்கள் மாற்று அணிக்குப் பயப்படவில்லை என்று கூறுகிறார். அவர் மெய்யாகவே பயப்படுகிறார். அதனால்தான் பயம் இல்லை என்று கூறுகிறார். எனினும் அவர்கள் இல்லாத ஒன்றுக்கு பயப்படுகிறார்களா என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் மாற்று அணி என்று ஒன்று இன்னமும் பலமான ஒரு கூட்டாக மேலெழவில்லை. அது இப்பொழுதும் ஒரு நல்ல கனவாகவே காணப்படுகிறது. மாற்று அணி என்று அழைக்கப்படும் கட்சிகளுக்கிடையே இன்னமும் ஓர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்ப…

    • 6 replies
    • 968 views
  15. அரசாங்கம் அறிவித்தபடி 1000 ரூபாய் நாளாந்த வேதனம் வழங்குவது உறுதி – பிரதமர் மஹிந்த by : Jeyachandran Vithushan தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் என்ற நாளாந்த வேதனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வின்போது, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க இந்த விடயம் தொடர்பாக கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த, கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது, தோட்டத்தொழிலார்களுக்கு சம்பள அதிகரிப்பினை வழங்க அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். …

    • 4 replies
    • 671 views
  16. ஸ்ரீலங்காவில் வருகிறது புதிய நடைமுறை! Ronees வதிவிடத்தை உறுதிப்படுத்த இனிமேல் கிராம சேவையாளரின் ஊடாக வழங்கப்படும் சான்றிதழ் மாத்திரம் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமையவே இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். இது குறித்த வர்த்தமானி அறிவித்தலை அரச பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. வதிவிடத்தை உறுதிபடுத்தும் ஆவணங்கள் கிராம சேவையாளரினால் வழங்கப்படும் பட்சத்தில் அதனை மீள உறுதிப்படுத்திக்கொள்ள பிரதேச செயலாளரை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதால் பொது மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்தி…

    • 0 replies
    • 645 views
  17. அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான கலந்துரையாடல்களில் அரசியல் ஆய்வாளர் யதீந்திரா இந்தோ பசிபிப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை என்னும் தலைப்பில் இடம்பெறும் கலந்துரையாடல் ஒன்றுக்காக அரசியல் ஆய்வாளரும் பத்தி எழுத்தாளருமான யதீந்திரா அமெரிக்காவிற்கு பயணமாகியுள்ளார். மூன்று வாரங்களை உள்ளடக்கிய இந்தக் கலந்துரையாடல்களின் போது, இந்து சமூத்திர பிராந்தியத்தில் அமெரிக்காவின் கொள்கை இலக்கு அதன் முக்கியத்துவம் தொடர்பில் பல்வேறு துறைசார் நிபுனர்களுடன் பல்வேறு கலந்துரையாடல்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த துறைசார் நிபுனர்கள் பலரும் பங்குபற்ற உள்ளனர். ஆரசியல் ஆய்வாளர் யதீந்திரா இந்து சமூத்திர பிராந்தியத்தை மையப்படுத்தி நகிழும…

    • 3 replies
    • 480 views
  18. இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக கொண்டாட அனைவரையும் ஒன்றினைந்து வலுச்சேர்ககுமாறும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தில் இன்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் இதனை அறிவித்துள்ளனர். அச் சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவித்தள்ளதாவது, “ஈழத்தமிழர்கள் இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் இன்று வரையில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் எம்மக்களும் காலாதி காலமாக நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கின்றபோதும் எமது மக்களின் போராட்டங்களை யாருமே கண்டு கொள்ளாத நிலையிலே விரக்த்தியின் விளிம்பில் நின்று இ…

    • 10 replies
    • 1.5k views
  19. அவுஸ்திரேலியாவில் இருந்து குடாநாட்டை நோக்கி படையெடுக்கும் பறவைகள் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் யாழ்ப்பாணம் கல்லுண்டாய், வடமராட்சி வல்லைவெளி மற்றும் தீவகத்துக்கு அவுஸ்திரேலியாவில் இருந்து பிளமிங்கோ உள்ளிட்ட பல இன வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வந்துள்ளன. இனப்பெருக்கம் மற்றும் பருவ நிலை மாற்றங்களை அனுபவிக்க வரும் அரிய வகை வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக குறைந்து காணப்பட்டன.எனினும், இம்முறை சீரான மழைவீழ்ச்சி காணப்பட்டதால் யாழ்ப்பாணம் – காரைநகர் வீதி கல்லுண்டாய் பகுதி மற்றும் தீவகம் அல்லைப்பிட்டி முதல் நாரந்தனை வரையான தரவைப் பகுதி என்பவற்றில் வரத்து நீர் காணப்படுகின்றது. சாம்பல் நாரை, அரிவாள் மூக்கன், புதிய வகையான ஆசிய ஓபன் பில் நாரைகள் அ…

    • 1 reply
    • 721 views
  20. இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் பரிசீலனை கடந்த அரசாங்க காலத்தில் கையொப்பமிடப்பட்ட இலங்கை மற்றும் சிங்கப்பூரிற்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இலங்கை மற்றும் சிங்கப்பூரிற்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு கோரி அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட 8 பிரிவினர் தாக்கல் செய்த மனுக்கள் இன்று (06) மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த மனுக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஜூலை மாதம் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. …

    • 0 replies
    • 491 views
  21. ஶ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் CEO மற்றும் அவரது மனைவி ஆகியோர் நீதிமன்றத்தில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி இருந்த ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர் குறித்த இருவரும் இன்று காலை அவர்களின் சட்டத்தரணிகள் ஊடாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தனர். http://tamil.adaderana.lk/news.php?nid=125437 விமானக் கொள்வனவு மோசடி – கபில சந்திரசேன நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் by : Dhackshala ஶ்ரீலங்கன் எயார்ல…

    • 0 replies
    • 306 views
  22. யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களில் விசேட சோதனை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வரும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வவுனியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் முன்னெடுத்துள்ளனர். வவுனியா புளியங்குளம், ஓமந்தை, நொச்சிமோட்டை மற்றும் இரட்டை பெரியகுளம் ஆகிய பகுதிகளில் வீதி தடைகளை ஏற்படுத்தி இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக வவுனியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ள…

  23. மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் அடிகாயங்களுடன் சடலமாகக் கண்டெடுப்பு மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள மூன்றாங் கட்டை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அடிகாயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை கண்டெடுக்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 55 வயதுடைய தம்பாப்பிள்ளை சிவராசா என்பவரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது பண்ணையினை பார்வையிடுவதற்காக நேற்றிரவு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இனந்தெரியாத நபர்களினால் இதன்போது அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாம…

    • 3 replies
    • 983 views
  24. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டின் தலைவர்களான கோத்தாபய ராஜபக்ஷ- மஹிந்த ராஜபக்ஷவுடன் மிகவும் நெருக்கமான நாடான சீனாவை இப்போது கைவிட இலங்கை தயாராக இல்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றில் தெரிவித்தார். அத்துடன் இலங்கையில் இந்த நோய் தொடர்பாக மக்கள் வீனாக அச்சமடையத் தேவையில்லை. இது இலங்கையில் பரவுவதற்கான எந்தவித நிலைமையும் ஏற்படவில்லை. அத்துடன் ஆரோக்கியமானவர்கள் இந்த நோய் பரவும் என்று முகக் கவசங்களை அணிய வேண்டிய அவசியம் இருப்பதாகவும் நான் நம்பவில்லை. அத்துடன் தேவையான முகக் கவசங்களை சந்தைகளுக்கு விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இலவசமாக முகக் கவசங்களை விநியோகிக்கும் வகையில் அவசர நிலைமை ஏற்படுமாக இருந்தால் அவற்றை வழங்க நட…

    • 4 replies
    • 1.3k views
  25. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் புதிய பெயர் மாற்றத்தினை நிராகரித்தது தேர்தல்கள் ஆணைக்குழு! ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் புதிய பெயர் மாற்றத்தினை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பெயரை தமிழர் ஐக்கிய முன்னணியாக மாற்றுவதற்கான கோரிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும், தமிழர் விடுதலை கூட்டணி, தமிழர் ஐக்கிய முன்னணியாக ஆரம்பிக்கப்பட்டு, அதன் பின்னரே தமிழர் விடுதலை கூட்டணியாக பதிவு செய்யப்பட்டமையால், அது தொடர்பான அபிப்பிராயத்தினை தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்கு தமிழர் ஐக்கிய மு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.