ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
சுவிஸ் தூதரக பெண் பணியாளர் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டார்? சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட பின்னர் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டார் என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் நவம்பர் 25ஆம் திகதி சுவிஸ் தூதரகம் அமைந்துள்ள ஆர்.பி.சேனநாயக்க மாவத்தையில் இடம்பெற்றதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. இந்த பகுதியிலேயே அவுஸ்ரேலிய ஜப்பான் தூதரகங்களும் அமைந்துள்ளன என தெரிவித்துள்ள சண்டேடைம்ஸ், பாதிக்கப்பட்டவர் இலங்கையை சேர்ந்த பெண் என்றும் இவர் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் குடியேற்ற விவகாரங்களிற்கு பொறுப்பான சுவிட்சர்லாந்தை சேர்ந்த அதிகாரியின் உதவியாளராக பணியாற்றி…
-
- 0 replies
- 515 views
-
-
யுஎன்டிபியின் ஆசிய- பசுபிக் பிராந்திய பணிப்பாளராக இலங்கைத் தமிழ்ப் பெண் இலங்கைத் தமிழ்ப் பெண்ணான, கன்னி விக்னராஜா ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தின் (யுஎன்டிபி) ஆசிய -பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளராக நாளை டிசெம்பர் 1ஆம் நாள் பதவியேற்கவுள்ளார். முன்னதாக இவரை ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், ஐ.நா அபிவிருத்தித் திட்டத்துக்கான உதவி செயலாளர் நாயகமாகவும், உதவி நிர்வாகியாகவும் நியமித்திருந்தார். கன்னி விக்னராஜா ஐ.நா முறைமைகளில் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான நீண்டகால அனுபவம் கொண்டவராவார். இவர் யுஎன்டிபியின் நாடு, பிராந்திய மற்றும் அனைத்துலக அளவில் ஆசிய மற்றும் ஆபிரிக்க கண்டங்களில் பணியாற்றியுள்ளார். சிறிலங்காவில் பிறந்த கன்னி விக்ன…
-
- 4 replies
- 787 views
-
-
கொழும்பில் சிங்களப் பெண் ஊடகவியலாளர் நான்கு மணிநேர விசாரணைக்குப் பின்னர் விடுதலை கட்டுரை தொடர்பாக எழுத்துமூல அறிக்கை பெறப்பட்டமைக்கு ஊடக அமைப்புகள் கண்டனம் சிங்களப் பெண் ஊடகவியலாளர் துஷாரா விதாரன (Thushara Vitharana) கொழும்பில் உள்ள இலங்கைக் குற்ற்வியல் திணைக்களத்தின் நான்காம் மடியில் வைத்து விசாரணைக்கு உடபடுத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை சுமார் நான்கு மணித்தியாளங்கள் விசாரணை இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் ஊடக அதிகாரியாகச் செயற்பட்ட துஷாரா விதாரன theleader.lk இன் செய்தி செய்தி வெளியீட்டிற்கும் பங்களிப்புச் செய்க…
-
- 1 reply
- 606 views
-
-
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரக பணியாளர் கடத்தபட்டு அச்சுறுத்தப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் குறித்து இலங்கையின் தேசிய மனித உரிமை ஆணையம் கடும் கவலை வெளியிட்டுள்ளது. பதில் பொலிஸ்மா அதிபர் சிடி விக்கிரமரட்ணவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தீபிக உடகம இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள தூதரகமொன்றின் பணியாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாகவும்,குறிப்பிட்ட தூதரகத்தின் மூலம் பாதுகாப்பு பெற்ற இலங்கையர்கள் குறித்து விபரங்களை கோரியதாகவும் வெளியான தகவல்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தீபிக உடகம தெரிவித்துள்ளார். இந்த அச்சம் தரும் சம்பவம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அவர் பதில் பொலிஸ்மா அதிபரை க…
-
- 1 reply
- 476 views
-
-
தமிழர் பிரச்சினை குறித்து மூச்சு விடாத சிறிலங்கா அதிபர் தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் நல்லிணக்க செயல்முறைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றும் என்று நம்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்ட போதும், அதுபற்றி சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. நேற்று புதுடெல்லியில் நடந்த சந்திப்புக்குப் பின்னர், கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கோத்தாபய ராஜபக்ச, “பிரதமர் நரேந்திர மோடியும் நானும் இன்று காலை பல விவகாரங்கள் குறித்து விவாதித்தோம். இந்தக் கலந்துரையாடல்கள் மிகவும் இயல்பான மற்றும் உறுதியளிக்கும் வகையிலானதாக இருந்தன. இதன்போது, எங்கள் இரு நாடுகளின் பாதுகாப்பிற்…
-
- 1 reply
- 552 views
-
-
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தமிழர் தரப்பு அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் சரா ஹூல்ரன் கேட்டறிந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனை பிரித்தானியத் தூதுவர் சந்தித்து பேசினார். தூதரகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தேர்தலின் பின்னரான அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பிலும் கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்தும் சுமந்திரன் இந்த சந்திப்பின்போது விளக்…
-
- 1 reply
- 352 views
-
-
இலங்கை: தமிழர் பகுதிகள் ராணுவ மயமாக்கப்படுகிறதா? - செந்தில் தொண்டமான் பதில் ரஞ்ஜன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளதாகத் தமிழகத்தில் வெளியிடப்படும் கருத்தானது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என …
-
- 0 replies
- 699 views
- 1 follower
-
-
கனடாவில் வசித்துவந்த தம்பிராஜா அம்பலவானர் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் இலங்கை வந்த போது கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாவீரர் தினத்திற்கு முந்திய தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்ட அவரது சடலம் புத்தளத்தில் இரயில் தண்டவாளங்களுக்கு இடையில் போடப்பட்டிருந்தது. சித்ரவதை செய்யப்பட்ட காயங்கள் அவரது உடலில் காணப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள். கொலைக்கான காரணமும் இதுவரை தெரியவில்லை. இதேவேளை, இந்த படுகொலை விவகாரம் இலங்கை ஊடகங்களில் வெளியிடப்படாததானது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது. இலங்கையில் முதலீடு செய்வதற்காக அங்கு செல்வதற்கு தயாராக இருக்கும…
-
- 22 replies
- 3.3k views
-
-
-
அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களையும் பணிப்பாளர்களையும் இராஜினாமா செய்ய அறிவித்தல் விடுக்குமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் P.B.ஜயசுந்தரவினால் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. https://www.newsfirst.lk/tamil/2019/11/29/அனைத்து-அரச-நிறுவன-உயரதி/
-
- 8 replies
- 1.3k views
- 1 follower
-
-
இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது என இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவிக்கின்றார். மக்களுக்கு இயலுமான உதவிகளை செய்யும் வகையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளை தாம் வெற்றிக் கொண்டதாகவும், அதன்படி, மக்களுக்கு தாம் உதவிகளை வழங்கவுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். நாட்டின் தேசிய பாதுகாப்பு அத்தியாவசியம் என்பதை தாங்கள் அறிந்துள்ள நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேவைக்கு அதிகமாக நிலை நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தையே அகற்ற வேண்டும் என தாங்கள் கோரியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. அதைவிடுத்து, ராணுவத்தை முழுமையாக அகற்ற வேண்டும் என ஒருபோதும் க…
-
- 0 replies
- 797 views
-
-
கிளிநொச்சி சிவநகர் உருத்திரபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி யாழ். பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியை சேர்ந்த 22 வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிவநகர் பகுதியில் அமைந்துள்ள தந்தைக்குச் சொந்தமான அரிசி ஆலைக்கு இன்று காலை வெள்ள நீரை மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்ற முற்பட்டபோது மின்சாரம் பாய்ந்ததில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின் தாக்கத்திற்குள்ளான குறித்த இளைஞனை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/70109 யாழ்ப்பாண…
-
- 0 replies
- 769 views
-
-
(செ.தேன்மொழி) கடற்படையினர் மீதான நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் , கடற்படையை தொடர்பு படுத்தி நாட்டில் பதற்ற நிலைமையை ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ள கடற்படை இவ்வாறான பிரசாங்களை முன்னெடுக்கும் அரசியல்வாதிகளுக்கு தாம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. முன்னிலை சோசலிஷ கட்சியின் ஊடக சந்திப்பில் கட்சியின் கல்விச் செயற்பாட்டாளர் புபுது ஜயகொடவினால் வெளியிடப்பட்ட கருத்துகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள கடற்படை , அவரால் குறிப்பிடப்பட்ட விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை என்று தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலே கூறப்பட்டுள்ளதாவது, கடற்படையினால் முகாம்கள் அமைக்…
-
- 0 replies
- 339 views
-
-
இலங்கையில் தமிழ் மக்களின் சமத்துவம் , நீதி, சமாதனம், கௌரவம் ஆகியவை குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையொன்று முன்னெடுக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கின்றேன் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அதேவேளை, ஸ்திரமான மற்றும் வளமான முன்னேற்றகரமான இலங்கை இந்தியாவின் நலனுக்கு மிகவும் உகந்த விடயம். இது முழு இந்து சமுத்திரத்திற்கும் நன்மையளிக்கக்கூடிய விடயமாகுமெனவும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்ட பின்னர் உரையாற்றும் பேதே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்டவாறு தெரிவித்தார். நரேந்திர மோடி மேலும் தெரிவிக்கையில், கோத்தாபய ராஜபக்ஷ இந்தி…
-
- 3 replies
- 1.3k views
-
-
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு குறித்து ஆராய்வதற்காக இன்று கூடுகிறது பேரவை ! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவுக்கான தேர்தல் நாளைத் தீர்மானிப்பதற்கும், துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்தவர்களின் தகுதி, தராதரங்களை ஆராய்வதற்கான மதிப்பீட்டுக் குழுவை அமைப்பதற்காகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி கடந்த ஒக்டோபர் மாதம் முடிவடைந்த நிலையில் இரண்டு புலம்பெயர் தமிழ்ப் பேராசிரியர்கள் உட்பட ஒன்பது பேர் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர். கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் துணைவேந்தர் தெரிவுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
சுவிஸ் குமார் தப்பி சென்ற வழக்கு – விளக்கத்திற்கு திகதியிடப்பட்டது November 29, 2019 புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவி காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் இல்லாமலேயே வழக்கை விளக்கத்துக்கு எடுக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் வழக…
-
- 0 replies
- 391 views
-
-
சஜித் எதிர்க்கட்சித் தலைவர்? நவம்பர் 29, 2019 இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவைத் தெரிந்தெடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான மனோ கணேசன் டுவீட் செய்தி மூலம் தெரிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரியாவின் அழைப்பின் பேரில் கூட்டப்பட்ட கூட்டமொன்றில் இம் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது எனத் தெரியவருகிறது. பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்ப்பதற்கு சஜித் பிரேமதாசவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையே சந்திப்பொன்றை ஏற்படுத்துவதற்கு கடந்த சில நாட்களாக கரு ஜயசூரியா முயற்சிகளை எடுத்துவந்தாரெனினும் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்க சஜித் பிரேமதாச மறுத்து வந்தார். …
-
- 0 replies
- 446 views
-
-
தமிழர் பிரதேசங்களில் இன்றையதியம் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷடிக்கப்பட்டது. குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு உட்பட பல தமிழர் பிரதேசங்களில் கார்த்திகை 27 ஆம் திகதி மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. திருகோணமலை, மூதூர் கிழக்கு - சம்பூர் ஆலங்குளம் திருகோணமலை, மூதூர் கிழக்கு - சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள் இன்று (27)மாலை இடம் பெற்றது. மிகவும் பாதுகாப்புகெடுபிடிக்கும் மத்தியில் மக்கள் தோரணங்கள் அமைத்து மாவீரர் நினைவு நாளை கொண்டாடினர். இதில் பெருந்திரளான மக்கள் ஆலங்குளம் துயிலுமில்லத்தி…
-
- 3 replies
- 1.4k views
-
-
ரிஷாட், ஹக்கீம், ராஜித உள்ளிட்டவர்களை கைது செய்யுமாறு கோரிக்கை! முன்னாள் அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம், ராஜித சேனாரத்ன, ஹிஸ்புல்லா உள்ளிட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராவணா பலய அமைப்பின் இணைப்பாளரான இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளரான ஷாணி அபேசேகரவையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கடந்த காலங்களில் ரிஷாட், ஹக்கீம், ஹிஸ்புல்லா உள்ளிட்டவர்கள் இனவாதிகளாகவே செயற்பட்டார்கள். கிழக்கு மாகாணத்தை இந்த நாட்டின் வேறே ஒரு பகுதியாக இய…
-
- 5 replies
- 697 views
-
-
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் தனது பணியாளர் கடத்தப்பட்டமை குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2019 நவம்பர் 25 ம் திகதி தூதரகத்தின் இலங்கை பணியாளர் தொடர்பில் பாரதூரமான சம்பவமொன்று இடம்பெற்றதாக தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தூதரக பணியாளர் பலவந்தமாக கொழும்பு வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டார், காரில் ஏறுமாறு மிரட்டப்பட்டார்,அதன் பின்னர் இனந்தெரியாத நபர்களால் கடுமையான அச்சுறுத்தப்பட்டதுடன் தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு மிரட்டப்பட்டார் என தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பல பிழையான தகவல்கள் பரவுகின்றன,என தெரிவித்துள்ள சுவிஸ் தூதரகம் பின்வரும் தெளிவுபடுத்தல்களை வெளியிட விரும்பு…
-
- 5 replies
- 1.6k views
-
-
முன்னாள் போராளி கானகன் தற்கொலை… November 29, 2019 மட்டக்களப்பு, ஆரையம்பதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆரையம்பதி, செல்வா நகர் கிழக்கு, காளிகோயில் வீதியில் உள்ள வீடு ஒன்றின் பின்புற பகுதியில் இருந்தே குறித்த சடலம் நேற்று (28.11.19) மாலை மீட்கப்பட்டுள்ளது. வன்னியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரிவின் காணி பிரிவில் கடமையாற்றிய கானகன் என இயக்கத்தில் அழைக்கப்படும் சுந்தரலிங்கம் பரமேஸ்வரன் என்னும் 47 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் இறுதிப்போர் வரையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வன்னியில் செயற்பட்ட…
-
- 2 replies
- 797 views
-
-
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர், கேணல் சஜ்ஜாத் அலி பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிளை இன்று சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது பாதுகாப்பு ஆலோசகர் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு செயலாளருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/70071
-
- 0 replies
- 429 views
-
-
இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு 12:11 pm November 29, 2019 0 32 Views இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை இன்று (29) முற்பகல் புதுடில்லியில்சந்தித்தார். ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து இந்திய பிரதமரின் அழைப்பையேற்று தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளமை குறித்து இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அயல் நாடுகளான இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே காணப்படும் நீண்டகால நட்புறவு ஜனாதிபதி அவர்களின் இந்த பயணத்தின் ஊடாக மேலும் பலப்படுமென தான் நம்புவதாக குறிப்பிட்ட இந்தி…
-
- 0 replies
- 438 views
-
-
புதிய அரசாங்கம் வந்து சில நாட்களிலேயே வடக்கில் கெடுபிடிகள் அதிகரிப்பு - தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் புதிய அரசாங்கம் வந்து சில நாட்களிலேயே வடக்கில் இராணுவத்தினரின் சோதனைகள் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன எனத் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் திட்ட இணைப்பாளர் அண்டனி ஜேசுதாசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் நேற்று (29) நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரின் அரசாங்கம் உருவாக்கி சில நாட்கள் தான் ஆகின்றன. …
-
- 0 replies
- 346 views
-
-
மஹிந்த தேசப்பிரிய பதவி விலகத் தீர்மானம் Published by R. Kalaichelvan on 2019-11-29 12:57:31 தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவி விலகும் தீர்மானத்தினை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் காரியாலயம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் சபாநாயகர் கரு ஜெயசூரியவிற்கும் தனது கடித்தை அனுப்பி வைத்துள்ளார். கடந்த காலங்களிலும் , அண்மையில் இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் பங்களிப்பு பாரிய அளிவில் இருந்தமை குறிப்பிடத்தக்கது https://www.virakesari…
-
- 0 replies
- 433 views
-