ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142985 topics in this forum
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் சமரசம் ஏற்பட்டு விட்டதாக அக்கட்சி கூறுகிறது விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய கருணா அவர்களின் தலைமையில் செயல்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்கிற அமைப்பின் தலைவர் கருணா அவர்களுக்கும், அந்தக் கட்சியில் உள்ள பிள்ளையான் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக அந்தக் கட்சியில் பிளவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின. அதனால் ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் பிள்ளையான் அணியின் ஆதரவாளர் எனக் கூறப்படும் சிந்துஜன் என்பவர் கொல்லப்பட்டதாகவும் ஊடகங்கள் மேலும் தெரிவித்தன. தமது அமைப்பில் கருத்து மோதல்கள் ஏற்பட்டது உண்மை எனவும், அவை இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது தீர்க்கப்பட்டன எனவும் அந்தக் கட்சியின் சார…
-
- 13 replies
- 3.6k views
-
-
http://www.yarl.com/files/110719_mano_ganesan.mp3
-
- 0 replies
- 455 views
-
-
பாராளுமன்றில் பெரும்பான்மையை இழந்தது மஹிந்த அரசு - சபாநாயகர் அதிரடி அறிவிப்பு ஜனாதிபதி சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு பெரும்பான்மையில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய அறிவித்துள்ளார். பராளுமன்றத்தில் சற்று முன்னர் நிலவிய அமைதியின்மை காரணமாக பாராளுமன்றத்தின் அமர்வுகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே சபாநாயகரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாகரினால் சப…
-
- 2 replies
- 595 views
-
-
யாழில் பிரச்சனை இல்லை என்பதைக் காட்ட திருவிழாக்களை கோலாகலமாக நடத்த இராணுவம் உத்தரவு யாழ். குடாநாட்டில் மக்களுக்கு எதுவித பிரச்சினைகளும இல்லை என்று காட்டுவதற்காக கோவில்களின் திருவிழாக்களை கோலாகலமாக நடத்துமாறு சிறிலங்கா இராணுவத்தினர் உத்தரவிட்டுள்ளனர். பிரதேச ரீதியாக இராணுவ முகாம்களிலிருந்து கோவில்களின் அறங்காவலர் சபையினருக்கு இந்த உத்தரவை இராணுவத்தினர் பிறப்பித்து வருகின்றனர். எந்த தடைகளும் இன்றி திருவிழாக்களை கோலாகலமாக நடத்தும் படியும் அதற்கு தமது ஒத்துழைப்புக்கள் தரப்படும் என்றும் இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் பல கோவில்களில் திருவிழாக்கள் எளிமையாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கி
-
- 0 replies
- 701 views
-
-
அமைச்சர் அந்தஸ்துடன் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு MAR 12, 2015 | 11:47by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு வழங்கி, அவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கு இருக்கும் சிறப்புரிமைகள் மற்றும் அதிகாரங்களை வழங்குவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் சரத் பொன்சேகாவை வரும் 22 ஆம் நாள் முதல் மீண்டும், சேவையில் இணைத்துக் கொண்டு, அவருக்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு வழங்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அனுமதியை வழங்கியுள்ளார். நாடு இரண்டாக பிளவுபடுவதை தடுத்து, நாட்டைப் பாதுகாப்பதற்கு தலைமைத்துவம் வழங்…
-
- 0 replies
- 451 views
-
-
வெள்ளி 25-05-2007 14:32 மணி தமிழீழம் [மோகன்] யாழில் கப்பம் கேட்டு எச்சரிக்கை கடிதங்கள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் பீடாதிபதிகள் உட்பட பலரிடம் கப்பம் கேட்டு வீட்டு முகவரிகளுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன நாட்டைக்காக்கும் கூட்டமைப்பு என்ற அமைப்பினால் இந்தக் கடிதங்கள் அனுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட அமைப்பு பல்கலைக்கழ வளாகத்தில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பீடாதிபதிகள் விரிவுரையாளர்களுக்கு என கொலைப் பயமுறுத்தல் விடுத்து துண்டுப்பிரசுரங்களை ஒட்டியிருந்தார்கள். இந்நிலமையில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியுடன் யாழ் மாவட்டத்தின் பொது அமைப்புப் பிரத…
-
- 0 replies
- 937 views
-
-
சுட்டுக்கொலை செய்யப்பட்ட காவல்துறையினருக்கு பதவி உயர்வு : December 1, 2018 மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை சார்ஜன்ட் ஆக குறித்த இரண்டு காவல்துறையினருக்கும் பதவி உயர்வு வழங்க காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் மற்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஆகியோர் நேற்று மட்டக்களப்புக்குச் சென்றிருந்தனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்க…
-
- 0 replies
- 295 views
-
-
28 OCT, 2023 | 02:28 PM தையிட்டி நாக தம்பிரான் கோவிலில் சைவ முறைப்படி பொங்கலிட்டு, பக்திப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டபோது இந்த ஒலியானது அருகில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையின் பிரித் ஓதுதலுக்கு இடையூறாக இருப்பதாகவும், அதனால் பாடல் ஒலிப்பதை நிறுத்துமாறும் காவல்துறையினர் மக்களோடு முரண்பட்டுள்ளனர். இந்நிலையில், அங்கு நின்றிருந்த மூத்த சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், சட்ட விரோத விகாரையின் பிரித் ஓதும் ஒலியை நிறுத்தும்படி கூறி, காவல்துறைக்கு விளக்கமளித்ததையடுத்து பிரித் ஓதும் ஒலி நிறுத்தப்பட்டு நிலைமை சீரானதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/167952
-
- 1 reply
- 625 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 08 NOV, 2023 | 11:19 AM மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பாடசாலைக்கு வீதியால் சென்ற மாணவர்கள் மீது பனை மரத்தில் இருந்த குளவி தாக்குதலில் 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை (08) காலை 7.00 மணியவில் இடம்பெற்றுள்ளது. குறிஞ்சாமுனை பகுதியில் பனைமரத்தில் கூடுகட்டியுள்ள குளவிகள் வீதியால் நடந்து சென்ற மாணவர்களை தாக்கியுள்ளது. இந்நிலையில், 8 மாணவர்கள் அருகிலுள்ள தாண்டியடிபிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த குளவி கூடுகட்டியுள்ள பனை மரங்களில் இருந்து கூடுகளை அகற…
-
- 0 replies
- 274 views
- 1 follower
-
-
சிங்களவாதம் கூட போர் தமிழ் மக்களுக்கு எதிரானது என்ற உண்மையை ஒளித்துக் கொண்டே போரிட வேண்டி இருக்கின்றது. எனவே இந்தியப் போக்குக்கு மட்டும் அந்த தேவை இல்லாமல் போகுமா? "புலிவேறு, மக்கள் வேறு" என்று சிங்களம் சொல்லும் போது அது காதுகுத்த விரும்புவது தமிழர்களயோ, சிங்களவர்களயோ அல்ல வெளி உலகத்தை மட்டுமே! "புலிகள்வேறு, மக்கள் வேறு" என்று ஜெயாவோ, பார்ப்பானியமோ சொல்லும் போது அவை காதுகுத்த முற்படுவது தமிழ்நாட்டு மக்களை மட்டுமே, மற்றவர்கள் உணர்வு அவர்கள் அரசியலுக்கு ஒரு மண்ணும் போடாது. தினமலர் என்ற பார்ப்பானிய நாளேடு ஈழத்தின் அழிவுக்கு தன்பங்குக்கு கனகச்சிதமாய் எண்ணை ஊற்றும் பணியில் ஒன்று தான் இதுவும். புதினத்தில் இருந்து...... இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செ…
-
- 1 reply
- 1.7k views
-
-
நாட்டு நிலமை கருதி இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவு December 21, 2018 நாட்டில் நீடிக்கும் நிலைமையை கருத்திற் கொள்ளும் விதமாக இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவு அளிக்கப் போவதாக மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஸவின் இந்த தீர்மானத்தை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க அறிவித்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மை சீர்குலைவதை தடுப்பது அவசியம் எனவும் இதன் காரணமாக இடைக்கால கணக்கறிக்கையை ஆட்சேபிக்க கூடாது எனவும் மகிந்த ராஜபக்ச கருதுவதாக அவர் மேலும் தெரிவித்தார். மேலும் அரசாங்கம் அடுத்த வருடத்திற்காக சமர்ப்பிக்கும் நிதி ஒதுக்க…
-
- 0 replies
- 239 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபாக்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்காது அவர் இருக்கும் இடத்திற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டதாரர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/04/21/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%…
-
- 0 replies
- 278 views
-
-
கிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதியது ரிப்பர் ரக வானகம் மூவர் வைத்தியசாலையில்… December 27, 2018 கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக இன்று(27.12.18) பிற்பகல் இரண்டு ரிப்பர் ரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு சாரதிகள் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பேருந்து தரிப்பிடத்தில் பிற்பகல் ஒன்று முப்பது மணிக்கு இடம்பெற்ற விபத்தில் இரண்டு டிப்பர் சாரதிகளும் வீதியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்னாள் உள்ள…
-
- 1 reply
- 490 views
-
-
Published By: VISHNU 28 NOV, 2023 | 05:04 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மத்திய வங்கிக்குள் திருடர்கள் உள்ளார்கள் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், லக்ஷ்மன் ஆகியோர் பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே இவர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்படுமா? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா, நிதி இராஜாங்க அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான கப்ரால், லக்ஷ்மன் ஆகியோருக்கு ஓய்வூதிய கொடுப்பனவு விங்குவது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர், சட்டம…
-
- 1 reply
- 185 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணமும் ஒட்டுக்குழுக்களும் யாழ்குடாநாட்டில் ஏற்கனவே இருந்த ஒட்டுக்குழுவினரைவிட மேலதிகமாக ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்குழுவினர் தற்போது புதிதாக களம் இறக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. யாழ்.குடாநாட்டை படையினர் ஆக்கிரமித்த கையுடன் குடாநாட்டில் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப், வரதர் அணி, புளொட், ஈ.பி.டி.பி யில் இருந்து பிரிந்து இயங்கிய சனநாயகப் பேரவை ஆகிய ஆயுதம் தாங்கிய ஒட்டுக்குழுவினர் தங்களை அரசியல் கட்சிகள் எனப் பதிவு செய்து கொண்டு குடாநாட்டில் தமது தமிழர் விரோத நடவடிக்கைகளை விரிவு படுத்தி வந்தனர். இக்காலப்பகுதியில் குறிப்பாக 1996ம் ஆண்டு காலப்பகுதியில் தான் இந்த குழுவினரின் நடவடிக்கைகள் குடாநாட்டில் தீவிரமாக இருந்தன இக்குழுவினரை நேரடியாக…
-
- 0 replies
- 585 views
-
-
வடக்கு நிர்வாகத்தை இரண்டு வருடங்கள் புலிகளின் தலைவர் பிரபாவிடம் வழங்க வேண்டும் நிஷாந்தி இனப்பிரச்சினை தீர்வுக்கு இது வழிவகுக்கும் என்கிறார் அமைச்சர் மஹிந்த விஜயசேகர வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவது அவசியமாகும். வடக்கு மாகாணத்தை இலங்கையின் வலயமாக பிரகடனப்படுத்தி, அதன் நிர்வாகத்தை இரண்டு வருடங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் வழங்க வேண்டும். இதன்மூலம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று விசேட செயற்றிட்ட அமைச்சர் மஹிந்த விஜயசேகர தெரிவித்தார். வடக்கு நிர்வாகத்தினை இரு வருடங்களுக்கு பிரபாகரனிடம் வழங்குவதன்மூலம் இனப்பிரச்சினை தீர்வுக்கு அவர…
-
- 4 replies
- 2.6k views
-
-
அரசுக்கு எதிரான பிரசாரங்களை விநியோகித்தார் என்ற குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஏழாலை இளைஞரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் யாழ். பொலிஸாரால் ஏழாலை மேற்கைச் சேர்ந்த செல்வராஜா செல்வகிரீஷன் (வயது 31) என்ற இளைஞர் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். இரவு 9.30 மணியளவில் வீட்டில் வைத்துக் கைது செய்யப் பட்ட செல்வகிரீஷன் நேற்று யாழ். நீதிமன்றத்தில் பொலிஸாரால் முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிவான் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தவிட்டுள்ளார் என இளைஞர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தவபாலன் தெரிவித்தார்.இந்த இளைஞர் விநியோகித்ததார் எனப் பொலிஸாரால் கூறப்பட்ட துண்டுப் பிரசுரத்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையின் புதிய அரசின் செயற்பாடுகளைப் பாராட்டுவதற்காகவே அமெரிக்க ராஜாங்க செயலர் ஜோன் ஹெரி இலங்கை வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோன் ஹெரி வெளிநாடுகளுக்கான தனது ஒருவார கால விஜயத்தின் ஒரு பகுதியாக சனிக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளார். 2004 சுனாமி அனர்த்தத்தின்போது அப்போதைய அமெரிக்க இராஜாங்க செயலாளர் கொலின் பவல் விஜயம் மேற்கொண்ட பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜோன் ஹெரி இந்த விஜயத்தின்போது சந்திப்பார். முன்னைய அரசாங்கத்தின் ஏதேச்சாதிகார பாணியிலான நிர்வாகத்தை மாற்றியமைக்கப்போவதாக சிறிசேன உறுதியளித்துள்ளார். ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைப்பது உட்பட …
-
- 0 replies
- 470 views
-
-
January 8, 2019 இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிப் பிரச்சினைகளுக்கு சர்வதேச நீதிமன்றம் தேவை என வடக்கு கிழக்கில் வலியுறுத்தப்படுவதாகவும், ஆனால் இலங்கைக்குள் சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை என்பது நிரூபணமாகியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், வடக்கு கிழக்கில் பிரச்சினைகள் இடம்பெற்றமை உண்மை என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் ஆனால் அதற்கு சர்வதேச நீதிமன்றம் தேவை என்று கோரப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிடுள்ளார். …
-
- 0 replies
- 817 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவன் உள்ளிட்ட நான்கு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை இன்று (19) வாழைச்சேனை நீதிமன்றில் இடம்பெற்ற போது பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைவாக, வாழைச்சேனை பொலிஸாரினால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வாழைச்சேனை நீதவான் ரிஸ்வான் சந்தேகநபர்கள் நால்வருக்கும் பிணை வழங்கினார். இந்த வழக்கு மீண்டும் ஜனவரி முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் பாடசாலை மாணவன் உள்ளிட்ட நான்கு பேரும் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டி…
-
- 2 replies
- 456 views
- 1 follower
-
-
http://www.yarl.com/files/110913_mannar_situation.mp3
-
- 0 replies
- 334 views
-
-
இலங்கைக்கு கடர்சார் பாதுகாப்பு அமெரிக்கா பாதுகாப்பு உதவி: [Tuesday 2015-05-05 21:00] சிறிலங்காவுக்கு கடர்சார் பாதுகாப்பு உதவிகளை வழங்கும் திட்டம், அமெரிக்காவுக்கு இருப்பதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர் ஜெப் ரத்கே தெரிவித்துள்ளார். வொசிங்டனில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பிராந்திய விவகாரங்களின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியிருப்பதாகவும், எனவே கடல்சார் பாதுகாப்பில் அமெரிக்காவின் பங்கு என்ன என்றும், இந்த விவகாரத்தில் சிற…
-
- 1 reply
- 374 views
-
-
அரசியல் ஆசீர்வாதத்துடன் குடாநாட்டில் மீண்டும் மணல் 'மாபியாக்கள்' [ஆதவன்] யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடந்த காலங்களில் அரசியல் பின் புலத்துடன் மணல் வியாபாரத்தை முன்னெடுத்த தரப்புகள் மீளவும் மணல் விநியோகத்தில் தலையீடு செய்வதாகக் குற்றம் சுமத்தப்படுகின்றது. யாழ். மாவட்டச் செயலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகரித்த விலையில் அந்தத் தரப்புகள் மணலை விற்பனை செய்வதாகவும் கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் மாத்திரம் மணல் அகழ்வுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பிரதேச செயலர் பிரிவிலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கம் மணல் அகழ்வுகளை பிரதேச செயலரின் அனுமதியுடன் மேற்கொண்டு வருகின்றது. அகழப்படும் மணல் யாழ். மாவட்ட பாரவூர்தி உரிமையா…
-
- 0 replies
- 256 views
-
-
டென்மாக்கில் Struer நகரில் உள்ள ஒரு திரையரங்கில் பல தேசியங்களின் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. தமிழீழத் தேசியக்கொடியும் அங்கே பறக்கவிடப்படவேண்டும் என நகரத்தில் வாழும் சில தமிழீழப்பற்றாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இப்பொழுது தமிழீழ தேசியக்கொடியும் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. முதலில் அங்கே பறக்க விடப்பட்டிருந்த சிங்கக்கொடி இனம் தெரியாதவர்களினால் அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://youtu.be/voNh53NtQN4 http://www.eeladhesa...ndex.php?option
-
- 1 reply
- 1.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. புதிய காத்தான்குடி, ஏத்துக்கால்,பூநொச்சிமுனை, பாலமுனை, நாவலடி, பாலமீன்மடு உட்பட பல இடங்களில் கடற்றொழில் நடவடிக்கைகள் முற்றாக செயலிழந்துள்ளன. இதனால் கடல் மீன்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கடற்றொழிலாளர்கள் தமதுபடகுகளையும் வள்ளங்களையும் கரையிலிருந்து நீண்ட தூரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இடம்மாவட்டத்தில் சுமார் 26 ஆயிரம் குடும்பங்கள் கடற்றொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இம்மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கடும் மழை பெய்துள்ளது.24 மணிநேரத்தில் 19.2மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட காலநிலை அவதான நிலையம் தெரி…
-
- 0 replies
- 439 views
-