Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சஜித்திற்கு ஆதரவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சந்திரிகா கைச்சாத்து ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சற்றுமுன் கைச்சாத்திட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆலோசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்சியில் உள்ள தனது நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்களுடன் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்திருந்த நிலையிலேயே குறித்த ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையிலேயே இன்றைய தினம் சந்திரிக்கா குமாரதுங்க தரப்பினர் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்திற்கு ஆதரவு வழங்…

    • 5 replies
    • 846 views
  2. பதவி விலகுவதாக சிவாஜிலிங்கம் அதிரடி அறிவிப்பு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். கட்சியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி என்.சிறிகாந்தாவிடம் நேரடியாக கையளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான டெலோ அமைப்பின் தவிசாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் ஐனாதிபதி தேர்தலில் சுயேட்சயாக போட்டியிடப்போவதாக அவர் அறிவித்தார். இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட கட்சி நிர்வாகம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று ந…

    • 2 replies
    • 340 views
  3. சஜித் பிரேமதாசா யார்? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதில் என்ன?

    • 0 replies
    • 299 views
  4. “இரண்டாவது வாக்கைக் கோதாவுக்குப் போடுங்கள்” – ஹிஸ்புல்லா நவம்பர் 03, 2019 எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கோதபாயவின் வெற்றிக்காகவே தேர்தலில் போட்டியிடுகிறார் என்று பலரும் சந்தேகப்பட்டது உண்மையென நிருபிக்கிறது அவரது தேர்தல் விஞ்ஞாபனம். கடந்த வாரம் வெளியிட்ட அவரது விஞ்ஞாபனத்தின் மூலம் ‘இரண்டாவது தேர்வாக கோதபாய ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்’ என அவர் முஸ்லிம் வாக்காளர்களைக் கேட்டுள்ளார். முதலாவது சுற்றில் 50% + 1 வாக்குகளைப் பெற்று வேட்பாளர் ஒருவர் வெற்றி பெறாத பட்சத்தில் இரண்டாவது தேர்வாகக் கொடுக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையே வெல்பவரைத் தீர்மானிக்கும். இதன் மூலம் ஹிஸ்புல்லா போன்றவர்கள் வெல்பவர்களுடன் பேரம் பேசும் பலத்தைப் பெறுவார்கள். …

    • 0 replies
    • 273 views
  5. மீண்டும் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து பிரதான வேட்பாளர்களும், தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ள நிலையில், மீண்டும் ஐந்து தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் செயற்பாட்டில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அல்லது நாளை (திங்கட்கிழமை), ஐந்து கட்சிகளுக்கிடையிலான சந்திப்பொன்றை மீண்டும் நடத்துவதற்கு மாணவர்கள் ஆர்வமாக காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சி ஏறக்குறைய தீர்மானமொன்றியை எடுத்து விட்டது. அதேபோன்று, தமிழ் மக்கள் யாருக்கு வாக்களி…

  6. இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் சஜித் இல்லாத நிலையில் அரசியல் தீர்வு பற்றிப் பேசுகிறார் ரணில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதுவரை சந்திக்கவில்லை சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவதோடு இலங்கை நாடாளுமன்றத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து குறைந்தது நூற்றி 20 உறுப்பினர்களைத் தெரிவு செய்தால் நிரந்த அரசியல் தீர்வு கிடைக்குமெனக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சிப் பொதுச் சந்தை மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஒரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறினார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான ரவி கர…

    • 0 replies
    • 471 views
  7. தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 கட்சிகளும் (தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் அரசு கட்சி) கையொப்பமிட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பையடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த ஆவணம் இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரிடம் முன்வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் இலங்கைத் தமிழ் அரசுக் க…

    • 46 replies
    • 3.6k views
  8. புதிய அரசியலமைப்பின் ஊடாக அதிகார பகிர்வு வேண்டுமானால் அன்னத்திற்கு வாக்களியுங்கள் - கிளிநொச்சியில் ரணில் 2015 ஆம் ஆண்டு அன்னத்திற்கு வாக்களித்த எம்மிடம் ஆட்சியை வழங்கியமையால்தான் நாட்டில் ஜனநாயகம் ஏற்பட்டது. எனவே புதிய அரசியலமைப்பினை உருவாக்கி அதன் ஊடாக அதிகாரபகிர்வு வேண்டுமானால் மீண்டும் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வருகின்ற 16 ஆம் திகதி அன்னத்திற்கு வாக்களித்து சஜித்தை ஜனாதிபதியாக்க வேண்டும் என கிளிநொச்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று 03-11-2019 கிளிநொச்சி பொது சந்தை வளாகத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங…

  9. ஐடிஎன்னின் அரசியல் நிகழ்ச்சிகளிற்கு தடை – மகிந்த தேசப்பிரிய உத்தரவு- ரட்ணஜீவன் கூல் கடும் எதிர்ப்பு ஐடிஎன்னிற்கு எதிராக தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய விடுத்துள்ள தடையுத்தரவு தொடர்பில் கடும் சர்ச்சை வெடித்துள்ளது. ஐடின் அரசியல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதற்கு தடை விதித்துள்ள தேர்தல் ஆணையாளர் அரசியல் நிகழ்ச்சிகள் தொடர்பான உள்ளடக்கங்கள் தொடர்பில் தேர்தல் ஆணையகத்திடம் அனுமதி பெறவேணடும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் ஐடிஎன்னிற்கு கடிதமொன்றை மகிந்த தேசப்பிரிய அனுப்பிவைத்துள்ளார். பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவிற்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும் விதத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதாக தேர்தல் ஆணையகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ள…

  10. சஜித்துக்கான த.தே.கூ.வின் ஆதரவு ; சம்பந்தன் தலைமையில் இடம்பெற்று வரும் முக்கிய கலந்துரையாடல் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் ஐ.தே.கவின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாஸவுக்கு தனது பூரணமான ஆதரவை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான தரப்பான இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அக்கட்சியின் வவுனியா மாவட்டக் கிளை அலுவலகமான 'தாயகம்' பணிமனையின் பிரதான கேட்போர் கூட்டத்தில் நடைபெற்று வருகின்றது. தமிழ்…

  11. ‘அப்பே ஸ்ரீ’ கட்சியின் கூட்டம் இன்று – உறுப்பினர்களுக்கு சந்திரிகா அழைப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘அப்பே ஸ்ரீ’ அமைப்பின் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. அத்தனகலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் உட்பட தம்முடன் இணைந்து பயணிக்க விரும்பும் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இச்சந்திப்பின்போது எதிர்வரும் ஐந்தாம் திகதி கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறுகின்ற மாநாடு குறித்தும் ஆராயப்படவுள்ளது. அத்துடன் சந்திரிகா தலைமையேற்றுள்ள அப்பே ஸ்ரீ …

    • 2 replies
    • 252 views
  12. தடுப்பில் இருக்கும் அரசியல் கைதிகளை அனைவரையும் எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னர் ஏன் விடுதலை செய்ய முடியாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு இத்தருணத்தில் எந்த விதமான எதிர்ப்பும் உருவாகப் போவதில்லை. அரசியல் காரணங்களுக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூட இந்நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு, இன்று அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ள சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார். அந்த கடிதத்தில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த ஒகஸ்ட் மாதம் 19ம் திகதி என்னால் அனுப்பபட்ட கடிதத்தில் அரச…

    • 6 replies
    • 1.2k views
  13. தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளைகூட ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு வாக்களிக்க தயாாில்லை என்பதை காட்டுவதற்காகவே தனக்கு வாக்களிக்குமாறு கோருவதாக தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளா் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளாா். மேலும் தான் ஒரு குறியீடு மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் இவ்வாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஒரு தமிழன் இலங்கையில் ஜனாதிபதியாவது கனவிலும்கூட நடக்காத ஒன்று. ஆனாலும் நான் எதற்காக தோ்தலில் நிற்கிறேன்? என பலா் கேட்டுள்ளனா். கேட்ககூடும். வடக்கில் உள்ள அரசியல் தரப்புக்கள்…

    • 21 replies
    • 2.1k views
  14. தமிழ் மக்கள் அழிந்த போது ஓடாத ஓட்டத்தை சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்த பின்னர் அதனை நிறுத்துவதற்காக ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஓடியிருந்தார் என வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் சுயாதீன குழு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் நாம் சிவாஜிலிங்கம் அவர்களுக்கு கட்டுப்பணம் செலுத்துவதற்கு முன்னர் பேசியிருந்தார்கள். அதில் ஜோதிலிங்கம், நிலந்தன், சின்மியாமிசன், ஜெயக்குமார் மதகுரு ஆகியோர் அங்கத்துவம் வகித்திருந்தனர். இதன்போது பொது வேட்பாளரை இறக்குவது தொடர்பில் நான் சிந்தித்து இருந்தேன்…

    • 1 reply
    • 535 views
  15. 2019-11-01 11:39:34 சுமார் 800 ஆண்டுகள் பழைமையான சீனத்தயாரிப்பு மட்பாண்டமொன்று யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் பி.புஷ்பரட்ணம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி உறவுக்கு இந்த மட்பாண்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார். சீன அகழ்வாராய்ச்சிக்குழுவினரால் அல்லைப்பிட்டி பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. http://valampurii.lk/valampurii/content.php?id=19702&ctype=news

    • 12 replies
    • 1.6k views
  16. கொழும்பு 7 பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஊழியர்கள் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் மாத்திரமே உரையாட வேண்டும். தமிழில் உரையாட வேண்டாம் என்று அறிவிப்பு பலகை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ், முஸ்லிம், சிங்கள சமூக வலைத்தள வாசிகளினால் கடும் விமர்சனம் வைக்கப்படுகிறது. இந்நிலையில் “ஊழியர்கள் தமிழில் பேசுவதாகவும், அது கேலி செய்வது போலும் இருப்பதாக வாடிக்கையாளர்கள் முறையிட்டனர்” எனவே தான் அவ்வாறு காட்சிப்படுத்தியுள்ளோம் என்று குறித்த உணவகம் விளக்கமளித்துள்ளது. குறித்த விளக்கத்தை தொடர்ந்து விமர்சனம் மேலும் வலுத்துள்ளது. …

    • 21 replies
    • 3.3k views
  17. அனைத்து மக்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் பாதுகாப்பதற்கும் நாட்டின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை பாதுகாப்பதற்கும் ஒருமைப்பாட்டுடன் செயல்படும் பொருத்தமான வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு அனைத்து குடிமக்களும் புத்திசாலித்தனமான மற்றும் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று இலங்கை கத்தோலிக்க பேராயர் கேட்டுக்கொள்கிறார். இலங்கை கத்தோலிக்க பேராயர் சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை மிருகத்தனமான தாக்குதலால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை நினைவுகூரவும், மத தீவிரவாதத்தையும் வகுப்புவாதத்தையும் ஒழிக்கவும், நாட்டின் அனைத்து மதங்கள் மற்றும் மதங்களிடையே அமைதியான சகவாழ்வை ஏற்படுத்தவும் இலங்கை பேராயர் அனைத்து தலைவர்களையும்…

    • 2 replies
    • 763 views
  18. பிரதான வேட்பாளர்கள் யாரும் நேரடியாக இந்த 5 கட்சி தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். நாளைய தினம் வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்று இருக்கின்றது. அக் கலந்துரையாடலில் நீங்களும் கலந்து கொள்கிறீர்களா? ஐந்து கட்சியினுடைய முடிவு இறுதியில் எவ்வாறு அமையப்போகிறது? என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் வவுனியாவிலுள்ள அவரது காரியாலயத்தில் இன்று ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். மூன்றாம் திகதி கூடுகின்ற கூட்டம் தொடர்பாக எங்களுக்கு எவ்விதமான அழைப்பும் இல்லை. நாங்கள் ஏற்கனவே ஐந்து கட்சிகளும் கூட்டாக சேர்ந்து 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிர…

    • 1 reply
    • 361 views
  19. பிரச்சார மேடை முஸ்லிம் பிரதேசங்களில் 'கோட்டா பயம்'காட்டும் ரவூப் ஹக்கீம். 19 வருட நாடாளுமன்ற அனுபவத்தில் சஜித் எத்தனை

    • 0 replies
    • 287 views
  20. “பிள்ளையானை சந்தித்தேன் அவரை வாழ்த்தினேன்” - மகிந்த October 27, 2019 “நான் இன்று பிள்ளையானை சந்தித்து அவருடன் கலந்துரையாடினேன். அவருடைய தலைமையில் நேற்றைய தினம் ஒரு பாரிய கூட்டம் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதன் காரணமாகவே அவரை வந்து நான் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று மதியம் பிள்ளையானை மட்டக்களப்பு சிறையில் சென்று பார்வையிட்டதுடன் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். அதையடுத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், “முதலில் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் . மலையக மக்களுக்கு தீபாவளி முற்பணம் கொடுப்பார்கள் அதுவும் இம்முறை கொடுக்கப்படவில்லை அதற்கும் எமது எதிர்ப்ப…

    • 16 replies
    • 1.9k views
  21. இந்து கோயில்களுக்குள் பௌத்த துறவிகள் உடல் தகனம் செய்யாமல் இருக்க சிவாஜிலிங்கத்திற்கு வாக்களியுங்கள் எனத் தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்தார். நேற்று வவுனியாவில் காணாமல் போன உறவுகள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். நாங்கள் 986 ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். நேற்றைய தினம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் எமது போராட்ட களத்திற்கு வந்திருந்தார்கள். தமிழ் மக்களை மீன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி நாங்கள் கூறுகின்றோம். தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் …

    • 0 replies
    • 353 views
  22. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக, 108 தேங்காய்கள் உடைத்து விசேட வழிபாடு ஒன்று, இன்று (1) கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற விசேட வழிபாட்டைத் தொடர்ந்து 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டன. கிளிநொச்சியில் உள்ள சஜித் பிரேமதாஸவின் ஆதரவாளர்களால் குறித்த விசேட வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்றுடன் தபால்மூல வாக்களிப்புகள் நிறைவடையும் நிலையில், இந்த விசேட வழிபாடு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். http://www.tamilmirror.lk/வன்னி/சஜததன-வறறககக-சதறததஙகய-உடபப/72-240637

    • 3 replies
    • 705 views
  23. தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளை இனங்கண்டு நெறிப்படுத்தவேண்டியது எமது கடமை ; எம்.ஏ.சுமந்திரன் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளை நாமே வேட்பாளரை இனங்கண்டு நெறிப்படுத்தவேண்டியது எமது கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தென்மராட்சியின் தொகுதிகளை மற்றும் வட்டாரக் கிளையினருடனான சந்திப்பு முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் தலைமையில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதித் தேர்தலில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று நாம் ஆராய்ந்துகொண்டிருக்க முடியாது இருவரும் கெட்டவர்கள்தான். கோத்தபாய ராஜபக்ஷ ஏற்கனவே கூறிவிட்டார் சிறுபான்மை மக்…

  24. டி.ஷங்கீதன் கொழும்பில் வாழ்கின்ற மலையக இளைஞர், யுவதிகள், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்குத் தயாராக வேண்டும் என்று, விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிஷ்ணன் தெரிவித்தார். அதேபோன்று கொழும்பில் வாழ்கின்ற மலையக இளைஞர், யுவதிகளுக்கு உரிய வகையில் விடுமுறை வழங்கி வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு, கொழும்பு வாழ் வர்த்தகர்களும் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வெற்றியை உறுதி செய்யுமுகமாக, தமிழ் முற்போக்குக் கூட்டணி, கொழும்பு வர்த்தகர்களுடன் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு, கொழும்பு தாஜ்சமுத்ரா விருந்தகத்தில், நேற்று (31) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரைய…

  25. கொழும்பு துறைமுக நகர காணி உறுதிப் பத்திரம் சீனாவிடம் கையளிப்பு Oct 30, 2019by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் கொழும்பு துறைமுக நகரததின் திருத்தப்பட்ட காணி உறுதிப் பத்திரம், நேற்று சீன நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், இந்தப் பத்திரம் சீன நிறுவன அதிகாரிகளிடம் சீனத் தூதுவர் செங் ஷியுவான் மற்றும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில், ஒப்படைக்கப்பட்டது. முதலில் இந்த காணி, நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதையடுத்து, சீனாவின் CHEC போர்ட் சிற்றி கொழும்பு நிறுவனத்துக்கு, குத்தகை உடன்பாட்டின் கீழ், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ளது. …

    • 35 replies
    • 3.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.