Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (நா.தனுஜா) ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் கண்டிக்கு விஜயம் மேற்கொண்டு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். இன்று காலை 8 மணியளவில் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாச, அங்கு இடம்பெற்ற பௌத்தமத அனுஷ்டானங்களில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாவிகாரைகளுக்குச் சென்று மல்வத்துபீட, அஸ்கிரியபீட மகாநாயக்க தேரர்களிடம் ஆசிபெற்றுக்கொண்டார். அத்தோடு ராமஞ்ஞ மற்றும் அமரபுர பீடங்களின் மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து சஜித் பிரேமதாச ஆசிபெற்றார். மேலும் மீரா…

    • 2 replies
    • 427 views
  2. நீராவியடி விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை ஏன் மீறினோம்? – பொலிஸார் விளக்கம் இன முரண்பாட்டை தடுப்பதற்காகவே நீதிமன்றத் தீர்பை கவனத்தில் கொள்ளவில்லை என முல்லைத்தீவு பொலிஸார் மனித உரிமை ஆணைக்குழு விசாரணையில் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணி பகுதியில் நீதிமன்றத்தின் கட்டளையை மீறி பௌத்த பிக்குவின் சடலத்தை எரியூட்டியமை மற்றும் பொது மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அடாவடி தொடர்பாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்தமாதம் 25 ஆம் திகதி முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. பிள்ளையார் ஆலய நிர்வாகிகளும், தமிழர் மரபுரிமை பேரவையினரும் இணைந்து குறித்த முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தனர். குறித்…

    • 2 replies
    • 460 views
  3. பிரபாகரனாலேயே தமிழர்களின் பெருமையை உலகம் கண்டது – பாரதிராஜா தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனாலேயே தமிழர்களின் பெருமை உலக அளவில் போற்றப்பட்டதாக தென்னிந்தியாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா தெரிவித்தார். பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் நோக்கில் இலங்கை வந்துள்ள அவர், மட்டக்களப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார். மேலும் கூறிய அவர், “பெரும் கலைஞர்கள், அறிஞர்கள் எல்லாம் தமிழ் நாட்டில் பிறந்து தமிழைப் பற்றி சொன்னார்கள். அகநானூறு, புறநானூறு எல்லாம் கூறினார்கள். அப்போது கூட தமிழர்கள் உலக அளவில் கவனிக்கப்படவில்லை. என்றைக்கு பிரபாகரன் தலையெடுத்து நின்றானோ அன்றுதான் தமிழர்கள் பெருமை கொண்டனர். …

  4. கிளியின் கழுத்தைத் தவிர மற்றெல்லாம் தெரிகிறது அகண்ட பாரதத்திலிருந்து பாகிஸ்தானைப் பிரித்தெடுத்து அதனைத் தனிநாடாக்கிய பெருமை ஜின்னாவையே சாரும். மகாத்மாகாந்தியுடன் இணக்கப்பாட்டை செய்து கொண்டு பாகிஸ்தானைத் தனி நாடாக்கி தனது இலக்கை ஜின்னா அடைந்து கொண்டார். இத்தனைக்கும் ஜின்னா கடுமையான இருதய நோயாளியாக இருந்தார். எனினும் தனது கடுமையான இருதய நோய் பற்றி அவர் வெளியில் எதுவும் கூறவில்லை. இதற்குக் காரணம் தனக்கு இருதய வியாதி இருப்பதை அறிந்தால் பாகிஸ்தானைப் பிரிப் பதைக் காலம் கடத்துவார்கள். தன் மரணத்துக்குப் பின்னர் பாகிஸ்தான் என்ற தனிநாட்டுக்கு இடமில்லாமல் போகும். ஆகையால், தான் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக ஜின்னா காட்டிக் கொண்டார்…

    • 1 reply
    • 1.5k views
  5. ரத்ன தேரர் - ஹிஸ்புல்லா ஒரே நோக்கத்தின் இருவேறு முனைகள் : துஷார இந்துநில் Published by R. Kalaichelvan on 2019-10-08 15:09:42 (எம்.மனோசித்ரா) சிங்கள பௌத்த வாக்குகளை பிளவடையச் செய்யும் வகையில் செயற்படும் அத்துரலியே ரத்ன தேரரும், முஸ்லிம் வாக்குகளை பிளவடையச் செய்யும் வகையில் செயற்படும் ஹிஸ்புல்லாவும் ஒரே நோக்கத்தின் கீழ் வெளிவேறாகச் செயற்படுகின்றனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் அமரசேன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், அத்துரலியே ரத்ன தேரர் கோதாபயவிற்கு ஆதரவளிப்பதற்காக ஐ…

    • 1 reply
    • 371 views
  6. எமது ஆட்சிக்காலத்திலும் வீடுகளுக்கு வெள்ளை வேன் வந்தது -பிரதமர் Published by J Anojan on 2019-10-08 14:20:30 (நா.தனுஜா) எமது ஆட்சிக்காலத்திலும் உங்களுடைய வீட்டிற்கு வெள்ளை வான் வந்தது. ஆனால் அதன் இருபக்கத்திலும் 'சுவசரிய' என்று எழுதப்பட்டிருக்கும். நாட்டின் சுகாதாரத்துறையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். ஓய்வூதியக் கொடுப்பனவு போன்ற மேலும் பல விடயங்களுக்கு அதிகளவு நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு எமது பொருளாதாரம் மேலும் வளர்ச்சியும், உறுதியும் அடைய வேண்டும். நாட்டின் பொருளாதாரம் ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாறுவதுடன், பொருளாதார வளர்ச்சி வேகம் 4.5 வீத…

    • 0 replies
    • 429 views
  7. ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சபாநாயகர் விசேட வேண்டுகோள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சூழல் மீதான தங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வழி, பொலிதீன், பிளாஸ்டிக், பட்டாசுகள் மற்றும் பாரிய பதாகைகளை தவிர்த்து சூழல் நேய கொள்கையொன்றை கடைபிடிப்பதன் மூலம் முன்னுதாரணமாக திகழ்வதாகும் என அவர் தெரிவித்துள்ளார். சபாநாயகரின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தி பதிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ) 2019-10-08 Editor 02 …

    • 0 replies
    • 260 views
  8. உத்தரவை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – கன்னியா வழக்கில் இளஞ்செழியன் உத்தரவு திருகோணமலை – கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் புதிய கட்டுமானங்களை அமைப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கன்னியா வெந்நீர் ஊற்று பகுதிக்கு செல்வோருக்கு மாத்திரம் அனுமதி சீட்டுக்களை விநியோகிப்பதற்கு தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு அனுமதி அழிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் சார்பில் கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி தாக்கல் செய்யப்…

  9. அனுரவின் சொந்த ஊரில் இன்று முதலாவது பிரசாரக் கூட்டம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான ஜாதிக ஜன பலவேகய கூட்டணியின் வேட்புமனுத் தாக்கலின் பின்னர் நடைபெறும் முதலாவது பிரசாரக் கூட்டம் தம்புத்தேகமவில் இன்று (8) இடம்பெறவுள்ளதாக ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். எமது நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற கருப்பொருளின் கீழ் இக்கூட்டணியின் தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. அக்கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திஸாநாயக்கவின் சொந்த ஊர் தம்புத்தேகம என்பது குறிப்பிடத்தக்கது. (மு) http://www.dailyceylon.com/190482/

    • 0 replies
    • 252 views
  10. சுவரொட்டிகளை ஒட்டவேண்டாம் என தடுத்த யாழ். மாநகர உறுப்பினருக்கு மிரட்டல் – நள்ளிரவில் சம்பவம் தேர்தல் விதிமுறைகளை மீறி தனது வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என தடுத்த யாழ்.மாநகர சபை உறுப்பினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவின் ஆதரவாளர்களே இவ்வாறு மிரட்டி நள்ளிரவில் வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்டிச் சென்றுள்ளதாக யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் த.ரஜீவின் ஆதரவாளர்களே இவ்வாறு அடாவடியில் ஈடுபட்டதாகவும் அவர்கள் வெள்ளை நிற ஹயஸ் ரக வாகனத்தில் வந்தே சுவரொட்டிகளை ஒட்டி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் …

  11. வரலாற்றில் முதல் முறையாக ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடையில்! ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஒரே மேடையில் நாட்டு மக்களுக்கு தமது கொள்கைகளை விளக்கவுள்ளனர். பெப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இந்த கூட்டம் இன்று (சனிக்கிழமை) மாலை ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் பிரதான வேட்பாளர்கள் மூவரும் இங்கு உரையாற்றுவதாக பெப்ரல் அமைப்புக்கு அவர்கள் வாக்குறுதியளித்துள்ளனர். இதுதொடர்பாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கருத்து வெளியிடுகையில், “நாட்டின் சிறந்த ஜனாதிபதியை தெரிவுசெய்ய மக்களுக்கு ச…

    • 5 replies
    • 907 views
  12. (ஆர்.யசி) ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னூ­டாக தமிழ் மக்­களின் ஆத­ரவை பெற்­று­­க்கொள்­வதில் பொது­ஜன பெர­மு­ன­வினர் கடும் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­, ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ இரு­வ­ருமே தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் எம்.எ.சுமந்­தி­ர­னுடன் தனித்­த­னியே பேச்­சு­வார்த்­தை­க­ளையும் முன்­னெ­டுத்­துள்னர். இந்­நி­லையில் மஹிந்த, கோத்­த­பாய , பசில் ராஜபக் ஷவினர் வெகு விரைவில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனை சந்­தித்து பேசு­வ­தற்கும் திட்­ட­மிட்­டுள்­ளனர். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­தி­ர­னுடன் நேற்று முன்­தினம் தொலை­பே­…

  13. (நா.தனுஜா) ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் சஜித் பிரேமதாசவிற்கும் தனக்குமிடையில் கொள்கை ரீதியில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பினும், அவருக்கு மதிப்பளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழுவில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த கோத்தாய ராஜபக்ஷ, ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் புகைப்படத்தை அவருடைய உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருப்பதுடன், அதன் கீழ் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார். 'இன்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாத…

    • 1 reply
    • 329 views
  14. நாங்கள் எங்கள் தேசத்தில் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்றால் அனைவரும் ஒருமித்து முடிவு எடுக்கவேண்டும் அவ்வாறு செய்வதுதான் எமது எதிர்கால சந்ததிக்கு நாம் செய்யும் கடமையாகும் எனத் இலங்கைத் தழிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிறாஜா தெரிவித்துள்ளார், அத்தோடு விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் நாம் போதைக்கு எதிராகவும் போராடவேண்டியவர்களாகவுள்ளோம் எனவும் தொரிவித்தார் புத்தூர் ஆவரங்கால் உதவுங்கரங்கள் சமூகசேவை அமையத்தினர் நடத்திய சர்வதேச முதியோர் தின நிகழ்வு உதவுங்கரங்கள் சமூகசேவை அமையத்தின் தலைவர் தலையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் அதனைத் தெரிவித்தார் அவர் அங்கு மேலும் உரையாற்றுகை…

  15. சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவன் Published by T. Saranya on 2019-10-07 14:43:33 கடந்த கால யுத்தத்தின் போது தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து புலமைப்பரிசில் 183 புள்ளிகள் பெற்று சாதித்த மாணவன் கோபிநாத் கோபிதன் தான் ஒரு வைத்தியராக வந்து இந்தப் போரில் துன்பங்களை அனுபவித்த மக்களுக்காக வைத்திய சேவையை ஆற்ற வேண்டும் என்பதே தனது இலட்சியம் என தெரிவித்திருக்கிறார். 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற செல் வீச்சு தாக்குதலில் தந்தையை இழந்த நிலையில் தந்தையின் முகத்தை கூட தெர…

  16. (எம்.மனோசித்ரா) போலியான செய்திகள், வெறுக்கத்தக்க பேச்சுக்கள் என்பவற்றை தவிர்த்துக் கொள்வதன் மூலம் ஜனநாயக ரீதியிலான தேர்தலை நடத்த முடியும் எனத் தெரிவித்த சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அனைத்து வேட்பாளர்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட்டால் மாத்திரமே சுதந்திரமான தேர்தலை நடத்த முடியும். அந்த உரிமையையும் சுதந்திரத்தையும் நாம் அனைவருக்கும் வழங்கியிருக்கின்றோம். தமது கருத்துக்களை கூறுவதற்கு இருக்…

    • 1 reply
    • 292 views
  17. கோத்தா வென்றாலும் ரணில் தான் பிரதமர் Oct 07, 2019 | 3:25by கி.தவசீலன் in செய்திகள் அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால், ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக இருப்பார் என்று ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். ”ஐதேகவுக்கு இப்போது எந்த தலைமைத்துவப் பிரச்சினையும் எழவில்லை. கட்சியின் தற்போதைய தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐந்து ஆண்டுகளுக்கு – 2024 வரை, தலைவர் பதவியில் இருப்பார். இது தொடர்பாக எந்தப் பிரச்சி…

    • 1 reply
    • 525 views
  18. இன்று 35 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இரண்டு மனுக்களுக்கு எதிராக எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன. சுயாதீன வேட்பாளராக போட்டியிடுத் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக இந்த எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன. எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு எதிராக பத்தரமுல்லே சீலரத்ன தேரர் எதிர்ப்பினை முன்வைத்தாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக சரத் மனேமேந்திரா என்பவர் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். எவ்வாறியினும், இந்த இரண்டு எதிர்ப்புகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவால் நிராகரிக்கப்பட்டன. பத்தரமுல்லே சீலரத்ன தேரர் மற்றும் சரத் மனேமேந்திரா ஆகிய இருவரும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுக…

    • 2 replies
    • 678 views
  19. (நமது நிருபர்) ஜனா­தி­பதி தேர்­தலில் பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­­வுக்கு, ஸ்ரீ­லங்கா சுதந்­திரக்கட்சி நிபந்­த­னையற்ற ஆத­ரவு வழங்க முடிவு செய்­தி­ருப்­பதை அடுத்து, கட்சி மூன்­றாக பிள­வு­படும் நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. கடந்த வௌ்ளிக்­கி­ழமை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்­பா­ளர்­க­ளு­ட­னான கூட்டம் இடம்­பெற்­றது. இதன்­போது ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. அதில், பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு பெரும்­பான்­மை­யானோர் இங்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளனர். .இதே­வேளை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின…

    • 3 replies
    • 499 views
  20. சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் : ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித்திற்கு ஆதரவு! தற்போதுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் எந்த வேட்பாளருக்கு ஆதரவினை வழங்கவேண்டும் என்பது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை தெளிவுப்படுதும், பிரதேச மட்ட கலந்துரையாடல் ஏறாவூரில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “அடுத்து வரப்போகின்…

    • 4 replies
    • 542 views
  21. போட்டிக் களத்தில் உள்ள 35 வேட்பாளர்கள் – விலகிய 6 பேர் விபரங்கள் Oct 07, 2019by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்காவின் எட்டாவது அதிபர் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவினால் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. கட்டுப்பணம் செலுத்திய ஆறு வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களில், ஆறு பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவில்லை. சமல் ராஜபக்ச குமார் வெல்கம, சிறிதுங்க ஜயசூரிய ஜயந்த லியனகே, மஹிபால ஹேரத் பஷீர் சேகு தாவூத் ஆகியோரே …

    • 3 replies
    • 793 views
  22. இறுதித் தறுவாயில் இறுதி முடிவு ! ஆதரவு எவருக்கு ! ஜனாதிபதி முடிவெடுப்பார் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாத நிலையில் அக்கட்சி யாருக்கு தனது ஆதரவை வழங்கும் என்ற தீர்மானத்தை அக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன எடுக்கவுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ள நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று இரவு கூடவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக நேற்று காலை 11 மணியளவில் விஷேட ஊடக சந்திப்பொன்றை நடத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இறுதி தீர்மானத்தை ஜனாதிபதி…

    • 1 reply
    • 569 views
  23. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி யுள்ளது. அதிலும் குறிப்பாக தென்பகுதி அரசியல் பரப்பில் ஜனாதிபதித் தேர்தல் சூடுபற்றி விட்டது. இனி எங்கும் தகதகிப்பாக இருக்கும். இவை ஒருபுறமிருக்க, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதாக இருந்தால் தமிழ் மக்களின் வாக்குகள் தேவை என்பது மறுதலிக்க முடியாத உண்மை. எனவே தமிழ் மக்கள் தங்கள் வாக்குப்பலத்தை முதன்மைப்படுத்தி தங்களுக்கான தீர்வைப் பெறுகின்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். எனினும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தரப்புகள் இன்னமும் ஒரு நிறுதிட்ட மான முடிவுக்கு வரவில்லை. மாறாக ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் அவர்கள் சார்ந்த கட்சியினருடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்…

    • 4 replies
    • 878 views
  24. கூட்டணி குறித்த ஸ்ரீ ல.சு.கட்சியின் அறிவிப்பு இன்று ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதா? இல்லையா? என்பது தொடர்பான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் இன்று (07) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. நேற்றுமுன்தினம் சு.கவின் மத்திய செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவையே கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(7) அறிவிக்க இருப்பதாக சு.க தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுன் முடிவு நேற்று அறிவிக்கப்படும் என சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க அறிவித்திருந்த போதிலும், அது இன்று வரை பின்போடப்பட்டுள்ளது. http://www.dailyceylon.com/190453/

    • 0 replies
    • 229 views
  25. தரம் 5 பரீட்சையில் தேசிய மட்ட முதலிடங்கள் வெளியிடப்படாது – ப.ஆ. தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சையின் தேசிய மற்றும் மாவட்ட ரீதியான கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் பெயர்களை வெளிப்படுத்தாமல் இருக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, தேசிய ரீதியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெயர்கள் வெளியிடப்பட மாட்டாது எனவும் கூறப்படுகின்றது. தேவையற்ற போட்டித் தன்மையினால் மாணவர்களிடையே அநீதி இழைக்கப்படுவதை தடுப்பது திணைக்களம் எடுத்துள்ள இந்த தீர்மானத்துக்குரிய காரணமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் புஜித தெரிவித்துள்ளார் http://www.dailyceylon.com/190442/

    • 0 replies
    • 303 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.