Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் செய்தியாளர் கொழும்புக்கு அழைக்கப்பட்டு விசாரணை கோட்டாபய ராஜபக்ச, டக்களஸ் தேவானந்தா, வரதராஜபெருமாள் ஆகியோர் குறித்த செய்தியே காரணம் கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரிப் பத்திரிகையில் பிரசுரமான செய்தி தொடர்பாக வீரகேசரி நிறுவனத்தின் யாழ்ப்பாண அலுவலகச் செய்தியாளர் தி.சோபிதன் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை விசாரணை இடம்பெற்றது. இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவோடு ஈபிடிபி செயலாளர் டக்களஸ் தேவானந்தா, முன்னாள் வடக்குக் கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜபெருமாள் ஆகியோர் இணைந்து தமிழ் மக்களை மேலும் நசுக்க முற…

    • 0 replies
    • 319 views
  2. கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் உள்ள செஞ்சோலை காணியில் குடியிருக்கும் செஞ்சோலைப் பிள்ளைகளை வரும் 15 ஆம் திகதிக்கு முன் காணியை விட்டு வெளியேறுமாறு கரைச்சி பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் கரைச்சி பிரதேச செயலகம் எழுத்து மூலமான அறிவித்தலை செஞ்சோலை காணியில் குடியிருக்கும் செஞ்சோலை பிள்ளைகளின் தற்காலிக வீடுகளில் ஒட்டியுள்ளனர். இதனால் செஞ்சோலைப் பிள்ளைகள் செய்வதறியாது நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த வருடம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து குறித்த காணி விடுவிக்கப்பட்டிருந்தது. இதன் பின் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இருந்து வளர்ந்த பிள்ளைகள் திருமணம் செய்த நிலையில் குறித்த காணியில் மீள்குடியேறியிருந்தனர். குறித்த காணி செஞ்சோலை மற்றும்…

    • 0 replies
    • 568 views
  3. அரசாங்க, தனியார் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் அதிபர், ஆசிரியர்களுக்கு அன்பளிப்பு மற்றும் பரிசுகள் வழங்குவதற்கு மாணவர்களிடம் பண அறவிடுவதை கல்வி அமைச்சு தடை செய்து, சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது என இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சியின் ஒப்பத்துடன் இச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பாடசாலையில் நடைபெறும் ஆசிரியர் தினம் மற்றும் ஆசிரியர் கௌரவிப்பு, பிரியாவிடை வைபவம் போன்ற நிகழ்வுகளுக்கு பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் பெறுவதும் அதற்கான குழுக்களை ஏற்படுத்துவதும் முற்றாகத் தடை செய்யப்படுகிறது. பண இது பாடசாலை மாணவர்களிடையே…

    • 2 replies
    • 382 views
  4. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட ரீதியான வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை போன்றன காணப்பட்டால் அவற்றை எதிர்வரும் 2 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக அமைச்சு, அமைச்சின் செயலாளர், குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் தேசிய திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோத்தபாயவின் குடியுரிமை தொடர்பில் இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. https://www.tamilwin.com/politics/01/2…

    • 9 replies
    • 968 views
  5. சஜித் பிரேமதாசவின் வெளிவிவகார கொள்கை எவ்வாறானதாக காணப்படும்- இராஜதந்திர சமூகத்தினர் மத்தியில் அவரின் உரை இலங்கை தானாக முன்வந்து வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவோம் என ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் இராஜதந்திர சமூகத்தினர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர்மேலும் குறிப்பிட்டுள்ளதாவது நாங்கள் இந்து சமுத்திர பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள அனைத்து நாடுகளுடனும் நட்புறவை பேணும் கொள்கையில் உறுதியாக உள்ளோம். இலங்கையின் புவிசார் அமைவிடத்தை கருத்தில்கொள்ளும்போது எங்களது வெளிவிவகார கொள்கை அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவதை நோக்கமாக கொண்டிருக்கும் இலங்கையை அறிவை…

    • 1 reply
    • 333 views
  6. புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் குறித்து முக்கிய அறிவிப்பு! 2019ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் வாரம் வெளியிடப்படவுள்ளன. பரீட்சை முடிவுகள் இன்று வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய பரீட்சை முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் எதிர்வரும் வாரம் முதல் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலமாக 2 இலட்சத்து 55 ஆயிரத்து 529 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அதேபோன்று தமிழ் மொழி மூலமாக 83 ஆயிரத்து 840 …

  7. முன்னாள் ஜனாதிபதிகளின் சுகபோகங்களுக்கு அதிக நிதியை அரசாங்கம் செலவிடுகிறது- அநுர குற்றச்சாட்டு தற்போதைய ஜனாதிபதி மட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதிகளின் சுகபோகங்களுக்கும் அதிக பணத்தை இந்த அரசாங்கம் செலவிடுகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். எல்பிட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அநுர குமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “தற்போதை ஜனாதிபதி மட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதிகளின் சுகபோகங்களுக்கும் அதிக பணத்தை இந்த அரசாங்கம் செலவிடுகின்றது. முன்னாள் ஜனாதிபதியின் பிள்ளைகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோரின் சுககோகங்களுக்குக் கூட இந்த…

  8. கோட்டாவின் சட்டத்தரணிகள் உள்ளிட்டோருக்கு கடும் எச்சரிக்கை! கோட்டாபய சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் சில கனிஷ்ட சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்களை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட கடுமையாக எச்சரித்து தனது விசனத்தையும் தெரிவித்துள்ளார். கோட்டாபாயவிற்கு எதிராக கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்ற வழக்கின் தீர்ப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் நீதியரசரால் மேன்முறையீட்டு நீதிமன்றின் 301ம் இலக்க அறையில் இடம்பெற்றது. இதன்போது நீதியரசர் தீர்ப்பை வாசித்து வழக்கை தள்ளுபடி செய்கின்றேன் எனத் தெரிவித்த சமயம் சில சட்டத்தரணிகளும் அவர்கள் திசையில் இருந்த எதிராளியின் ஆதரவாளர்களும் கூக்குரல் இட்டு ஆரவாரித்தனர். இதன்போதே நீதியரசர் மேற்கண்ட…

  9. முல்லைத்தீவு – நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி அடாவடியில் ஈடுபட்ட பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை பதிவு செய்யுமாறு முல்லைத்தீவு காவற்துறை பொறுப்பதிகாரிக்கு அமைச்சர் மனோ கணேசன் பணிப்புரை விடுத்துள்ளார். https://newuthayan.com/?p=6538

    • 4 replies
    • 1.4k views
  10. 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் – யாழில் சம்பவம் யாழ்ப்பாண மானிப்பாயில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 62 வயது முதியவர் மானிப்பாய் பொலிஸாறால் கைது செய்யப்பட்டுள்ளார். முத்துதம்பி வீதி மானிப்பாய் பகுதியில் வசிக்கும் 62 வயதுடைய நாகலிங்கம் யோகராசா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். தனது வீட்டிற்கு தனது நண்பனின் மகளான 14 வயது சிறுமிக்கு இனிப்பு வகைகளை பெற்றுக்கொடுத்து சிறுமியை தனது இச்சைக்கு பயன்படுத்தி வந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சுகயீனம் அடைந்திருந்த குறித்த சிறுமி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தபோது சிறுமி கர்ப்பமடைந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர் சிறுமியிடம் பொலிஸ…

  11. ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வதா இல்­லையா என்­பது குறித்து எதிர் வரும் 5ஆம் திகதி அறி­விக்­க­வுள்­ள­தாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலா­நிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்தார். ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வது குறித்து ஏற்­க­னவே முன்னாள் ஆளுநர் ஹிஸ்­புல்லாஹ் கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்த நிலையில் அவ­ரிடம் இது தொடர்­பாக நேற்று கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், ஜனா­தி­பதி தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தமது முடி­வினை அறி­விக்­க­வுள்­ளது. இந்த நிலையில் நான் தற்­போது வெளி­நாட்டில் நிற்­கின்றேன். நான் நாட்­டுக்கு வந்­த­வுடன் அவ­ச­ர­மாக முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் தலை­வர்கள், ம…

    • 0 replies
    • 326 views
  12. வீரகேசரி பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் யாழ்.பிராந்திய அலுவலக செய்தியாளர் தி.சோபிதனிடம் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு இன்று விசாரணைக்கு சமுகமளிக்குமாறு பொலிஸ் தலைமையகத்திலிருந்து ஊடகவியலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கோத்தாபய ராஜபக்ஷவுடன் டக்ளஸ் , வரதராஜப் பெருமாள் தரப்புக்கள் இணைந்து தமிழ் மக்களை மேலும் நசுக்க கங்கணம் கட்டியுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத் தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை தொடர்பிலான செய்தி வெளியாகியமை தொடர்பிலேயே அவரிடம் சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்…

    • 0 replies
    • 316 views
  13. மஹிந்த தரப்பின் மாயா­ஜால அர­சி­ய­லுக்கு மயங்­காது பகுத்­த­றிந்து முடி­வெ­டுக்­க­வேண்டும் - வேலு­குமார் ஜனா­தி­பதித் தேர்­தலில் சஜித் பிரே­ம­தாச வெற்­றி­பெ­றுவார் என்­பது உறு­தி­யா­கி­யுள்ள நிலையில், அவ­ருக்கு எதி­ராக சேறு­பூசும் நட­வ­டிக்­கையில் மஹிந்­தவும் அவரின் சகாக்­களும் தீவி­ர­மாக இறங்­கி­யுள்­ளனர். மஹிந்த தரப்பின் மாயா­ஜால அர­சி­ய­லுக்கு மயங்­காமல் பகுத்­த­றிந்து முடி­வு­களை எடுக்க வேண்டும் என்று ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் பிரதித் தலை­வரும், இந்து சமய விவ­கார அமைச்சின் கண்­கா­ணிப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வேலு­குமார் தெரி­வித்தார். ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் கண்டி மாவட்ட அர­சியல் செயற்­பாட்­டா­ளர்­க­ளுடன் கொழும்பில் நேற்று நடை­பெற்ற தேர்தல் ப…

  14. இது அமெரிக்க ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தல் அல்ல – மஹிந்த அணி! இது அமெரிக்க ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தல் அல்ல என மஹிந்த அணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட அவர், ‘அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஆறுமுகன் தொண்டமானை சந்தித்துள்ளனர். ஏன் சந்திக்கின்றனர்? ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக சந்திக்கின்றனர். இது அமெரிக்க ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தல் அல்ல’ எனக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க பிரதி தூதுவர் மார்டின் டீ கெலி மற்றும் அரசியல் தல…

  15. யாழ் பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றம் பெறுகிறது… October 3, 2019 போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சமர்ப்பித்த பரிந்துரை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமன சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச விமான நிலையமாக இருந்து வந்த யாழ்ப்பாண பலாலி விமான நிலையம் பிராந்திய மற்றும் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணி போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமானது. இந்த அபிவிருத்தி பணிகள் இந்த மாதம் 10 ஆம் திகதி அளவில் பூர்த்தி செய்வதற்கு எ…

  16. மஹிந்தவை நேரடி விவாதத்திற்கு அழைக்கிறார் மங்கள சமரவீர! நாட்டின் நிதி நிலவரம் குறித்து நேரடி விவாதத்திற்கு வருமாறு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் அனைத்தும் பயனற்றவை எனவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தங்களின் அதிகாரத்தையும், ஆட்சி பெருமைகளையும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே, பாரிய நிதி செலவிடப்பட்டு கடந்த அரசாங்கத்தினால் சில அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு உருவாக்கப்பட்ட அபிவிருத்திகள் ஏதும் தேசிய வர…

  17. “கோத்தாபய வென்றால் தமிழர்கள் மீண்டும் பழைய நிலைக்குப் போய் விடுவார்கள் என்று தமிழர்கள் அஞ்சுவது புரிகின்றது. அவ்வாறு அவர் நடந்து கொள்ளமாட்டார் என்றே தோன்றுகின்றது. அந்த அளவுக்கு உலக நாடுகள் அவரை உற்று நோக்கிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் அவர் வந்தால் சர்வதேச ரீதியாக எமக்கு நன்மையே அல்லாது தீமையில்லை”என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் கேள்வி ஒன்றிற்கான பதில் என அவர் அனுப்பிவைத்த அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கேள்வி:- உங்கள் கருத்துப்படி ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்? பதில்:- இம்முறை ஜனாதி…

    • 67 replies
    • 5.8k views
  18. கைது செய்யப்பட்ட யாழ் இந்துவின் அதிபருக்கு விளக்கமறியல் கைது செய்யப்பட்ட யாழ் இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலனை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவால் கடந்த 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட யாழ் இந்துக் கல்லூரி அதிபரை இன்று (வியாழக்கிழமை) கொழும்பு உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/கைது-செய்யப்பட்ட-யாழ்-இந/

    • 1 reply
    • 542 views
  19. கோத்தாபயவிற்கு சட்ட சிக்கல் ஏற்பட்டால் சமல் ராஜபக்ஷவை களமிறக்குவோம் - பொதுஜன பெரமுன Published by R. Kalaichelvan on 2019-10-03 18:24:46 (இராஜதுரை ஹஷான்) பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வழக்கில் அவருக்கு பாதகமான தீர்ப்பு கிடைக்குமானால் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவினை பெயர் குறிப்பிட்டு வேட்புமனுத்தாக்கல் பத்திரங்களை சமர்ப்பிக்க கட்சி ரீதியில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என எதிரணியின் தோழமை கட்சிகளின் மூத்த உறுப்பினர் வாசு தேவ நாணயகார தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு…

    • 2 replies
    • 492 views
  20. மக்களின் குடிநீா் கிணற்றிலிருந்து தண்ணீா் எடுக்காதீா்கள்..! மாற்று வழியை தேடுங்கள். ஆளுநா் இராணுவத்திற்கு அறிவுரை.! முல்லைத்தீவு- கணுக்கேணி கிராமத்தில் குழாய் கிணற்றிலிருந்து அளவுக்கு அதிகமான நீரை படையினா் எடுப்பது தொடா்பாக பொதுமக்கள் கொடுத்த முறைப்பாட்டினடிப்படையில் இந்த விடயம் தொடா்பா இன்று ஆளுநா் சுரேன் ராகவன் தலமையில் ஆராயப்பட்டுள்ளது. இந்த கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.இதனுடன் தொடர்புடைய கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர், இராணுவத்தினர், பிரதேசத்தின் மக்கள், பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் இப்பிரச்சனை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது குறித்த கணுக்கேணி கிராமத்தில் நீர் எடுப்பதற்கு…

    • 1 reply
    • 563 views
  21. இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான இராணுவத்தால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு எதிராக, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறிந்துகொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் ஒழுங்குவிதி இல. 07 படி, தமிழ்மிரர் ஊடகவியலாளரால், இறுதி யுத்தத்தில் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான தகவல்கள் இராணுவத்திடம் கோரப்பட்டிருந்தது. இறுதி யுத்தத்தின்போது புலிகள் இராணுவத்திடம் சரணடையவில்லை எனவும் அவர்கள் அரசாங்கத்திடமே சரணடைந்தார்கள் எனவும் தெரிவித்திருந்த இராணுவம், புனர்வாழ்வு ஆணையாளர் பணியகத்தில் இது தொடர்பானத் தகவலைப் பெற்றுக்கொள்ள முடியுமென பதிலளித்திருந்தது. இரா…

    • 1 reply
    • 401 views
  22. -க. அகரன் வவுனியா வடக்கு – கச்சல் சமனங்குளம் பகுதியில், விஹாரைகள் நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த வவுனியா மாவட்ட உண்மை, நல்லிணக்க மன்றம், இது, எதிர்காலத்தில் இன ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் செயற்பாடாக இருக்கிறதெனவும் கூறினார். வவுனியா மாவட்ட உண்மை, நல்லிணக்க மன்றத்துக்கும் வவுனியா மாவட்டச் செயலாளர் எம். ஹனீபாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில், நேற்று (02) நடைபெற்றது. இதன்போதே, அம்மன்ற உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். அங்கு தொடர்ந்ரைத்த மன்ற உறுப்பினர்கள், வவுனியா வடக்கு பிரதேசத்தில், தமிழ்மக்களின் பூர்விக கிராமமான கச்சல் சமனங்குளம் பகுதியில், விஹாரை அமைக்கும் பணி இடம்பெற்றுவருதாகவும் அதேவ…

    • 0 replies
    • 412 views
  23. Started by ampanai,

    -என்.ராஜ் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இன்ரறக்ம் கழகத்தின் ஏற்பாட்டில், கல்லூரியின் நூலக மண்டபத்தில், இன்று (03), இரத்ததானம் நிகழ்வு நடைபெற்றது இதில், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இன்ரறக்ட் கழகத்தால், “ஒரு துளி உயிர்தரும்” எனும் தொனிப்பொருளில் வருடாந்தம் இந்த இரத்த தானம் நிகழ்வு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/இரத்ததானம்/71-239552 மாபெரும் குருதிக் கொடை முகாம் -செல்வநாயகம் ரவிசாந் யாழ்., ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க வித்தியாசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பழைய மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின…

    • 0 replies
    • 279 views
  24. வேறு சின்னத்தில் போட்டியிடுவதற்கு சட்டப் பிரச்சினையுள்ளது- மஹிந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு தாமரை மலர் மொட்டு சின்னத்தில் அன்றி, வேறு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில், சட்டப் பிரச்சினை காணப்படுவதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பபிலியான சுனேத்ரா மஹாதேவி பிரிவெனாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ தவிர்ந்த இரண்டாம் வேட்பாளர் குறித்து எந்தவித தீர்மானங்களும் இல்லை. நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.dailyceylon.com/190276/

    • 0 replies
    • 252 views
  25. திருமணத்துக்காக பதவி உயர்த்தப்பட்ட யோஷித ராஜபக்ச Oct 03, 2019by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா கடற்படையில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்ட யோஷித ராஜபக்ச, திருமணத்துக்காக லெப்.கொமாண்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். சிஎஸ்என் தொலைக்காட்சி நிதி முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து, சிறிலங்கா கடற்படையில் இருந்து- கடந்த 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8 ஆம் நாள் தொடக்கம், லெப். யோஷித ராஜபக்ச இடைநிறுத்தப்பட்டிருந்தார். இந்தநிலையில் அண்மையில் கோத்தாபய ராஜபக்சவுடன் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடத்திய சந்திப்பை அடுத்து, பணிஇடைநிறுத்தம் செய்யப்பட்ட அதே நாளில் இருந்து லெப். யோஷித ராஜபக்சவை மீண்டும் பண…

    • 0 replies
    • 326 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.