Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐதேக மாநாட்டு நேரலை ஒளிபரப்பை நிறுத்திய தேர்தல் ஆணைக்குழு Oct 03, 2019 | 11:52by கி.தவசீலன் in செய்திகள் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய சம்மேளனக் கூட்டம் தொடர்பான தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பை சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது. கொழும்பு சுகததாச உள்ளரங்கில் ஐதேகவின் சம்மேளனம் இன்று காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இதனை சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி நேரலை ஒளிபரப்பு செய்தது. இதையடுத்து, நேரலை ஒளிபரப்பை நிறுத்துமாறு தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டது. இதையடுத்து, நேரலை ஒளிபரப்பு இடைநிறுத்தப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், இவ்வ…

    • 0 replies
    • 275 views
  2. சிறிலங்கா அதிபர் தேர்தலில் குமார வெல்கம Oct 03, 2019 | 8:16by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடா விட்டால், வரும் அதிபர் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து அவர் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட வேண்டும் என்றும், அவ்வாறு போட்டியிடாவிட்டால், சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பின் சார்பாக தான், சுயேட்சையாக போட்டியிடுவேன் என்றும், குமார வெல்கம தெரிவித்துள்ளார். அத்துடன் ஏனைய கட…

    • 0 replies
    • 311 views
  3. முஸ்லிம் விவாக சட்டத்தை திருத்தவும் – பைஸர் முஸ்தபா முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் குறித்த பிரச்சினைக்கு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார். இராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில் இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (02) மாலை இடம்பெற்றது. இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அடிக்கடி கலந்துரையாடி வந்துள்ளேன். இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் முஸ்லிம் விவாக, விவாகரத்துத்…

    • 0 replies
    • 335 views
  4. உலகின் பலம்மிக்க படைகளின் தரவரிசையில் சிறிலங்காவுக்கு 90 ஆவது இடம் Oct 02, 2019 | 10:52by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் தெற்காசியாவின் ஐந்தாவது பெரிய இராணுவ பலத்தைக் கொண்ட நாடாக, சிறிலங்கா, Global Firepower- 2019 பட்டியலிட்டுள்ளது. உலகின் 137 நாடுகளைக் கொண்ட இந்த தரவரிசையில் சிறிலங்கா 90 ஆவது இடத்தில் உள்ளது. இதற்கு முன்னர் இருந்த நிலையில் இருந்து சிறிலங்காவின் நிலை மாற்றமடையவில்லை. தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை அடுத்து, சிறிலங்கா இராணுவமே மிகப் பெரியதாக இடம்பிடித்துள்ளது. இதனை அடுத்து, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளே இடம்பெற்றுள்ளன. மால…

  5. கிளிநொச்சியிலும் இராணுவத்தின் புதிய சோதனைச்சாவடி அச்சத்தில் மக்கள் புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டநிலையில் வடக்கு கிழக்கு பகுதியில் திடீர் திடீரென புதிய சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு மக்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் புதிய இராணுவச் சோதனைச் சாவடி ஒன்று திடீரென ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் சோதனையிடப்பட்டு வருகின்றனர்.கிளிநொச்சி ஏ-9 வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு முன்பாக குறித்த புதிய சோனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக நாளாந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மக்கள் கடும் அச்சத்துக்கு மத்தியில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதேவேளை அம்பாறை மாவட்டத்தின…

  6. தமிழ் மக்கள் பேரவையினால் தமிழ் அரசியல் கட்சிகளை சந்திக்கும் பணி ஆரம்பம் Oct 03, 2019 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான பொதுவான தீர்மானத்தை எட்டும் வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளை சந்திக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையால் அமைக்கப்பட்ட குழுவானது சுயாதீனமாக இயங்கும் என்பதுடன் சூழ்நிலைகளுக்கு ஏற்ப புத்திஜீவிகள், புலமைசார் வல்லுனர்களை குழுவில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் சுயாதீனக் குழு மேற்கொள்ளும். தமிழ் அரசியல் கட்சிகள் ஒருமித்த முடிவை எடுக்கும் வகையில் மேற்படி சுயாதீன குழுவின் அங்கத்தவர்கள் நேற்று புதன்கிழமை தமி…

  7. கூட்டமைப்பு நிபந்தனைகளை விதிக்கவில்லை – சஜித் கார்வண்ணன்Oct 03, 2019 | 2:35 by in செய்திகள் தம்மை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்றும், எவரிடம் இருந்தும் ஆதரவைப் பெறுவதற்காக நிபந்தனைகளுக்கு இணங்கப் போவதில்லை என்றும் என்றும் ஐதேகவின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தற்போதைய நிலவரங்கள் குறித்தே பேசப்பட்டது, அரசியல் விடயங்களில் கவனம் செலுத்தப்படவில்லை. சிறிலங்கா அதிபருடன் எந்த சிறப்பாக விடயம் குறித்தும் கலந்துரையாடப்படவில்லை சிறிலங்கா அதிபருடன் சிறப்பு விடயங்கள் குறித்து கலந்…

  8. மக்கள் சக்திக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்தால் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைப்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். இதன்படி காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகள், காணி விடுவிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் மக்கள் சக்தியின் ஐனாதிபதி வேட்பாளருமாகிய அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு நேற்று (புதன்கிழமை) விஜயமொன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது மக்கள் வீழ்ச்சியடைந்த தேசத்தைக் கட்டியெழுப்புவோம் நாம் எனும் தொனிப்பொருளில் யாழ். ரிம்பர் மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சப…

    • 0 replies
    • 335 views
  9. இந்தியாவின் தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்பான ராஷ்ரிய சுயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் கிளைகள் சிறிலங்காவிலும் செயற்படுவதாக, பாஜகவின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின், திருமண வரவேற்பு நிகழ்வு கடந்த 17ஆம் நாள் கொழும்பில் இடம்பெற்றது. இந்த திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க வந்திருந்த சுப்ரமணியன் சுவாமி, ஊடகங்களுடன் பேசும் போதே, சிறிலங்காவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 17 கிளைகள் இயங்குவதாக தெரிவித்துள்ளார். எனினும், எந்தெந்த அமைப்புகள் ஆர்எஸ்எஸ் பின்னணியுடன், அதன் கிளைகளாக இயங்குகின்றன என்ற விபரத்தை சுப்ரமணியன் ச…

    • 17 replies
    • 2.1k views
  10. (நா.தனுஜா) இலங்கை - இந்தியாவிற்கு இடையிலான உறவு அண்மைக்காலமாக மிகவும் நேர்மறையானதும், முன்னேற்றகரமானதுமான மாற்றங்களை அடைந்திருப்பதாக இந்தியா தெரிவித்திருக்கிறது. இலங்கையின் அபிவிருத்தி செயற்திட்டங்களை மையப்படுத்தி ஒத்துழைப்பை வழங்கும் வகையில் ஒன்றிணைந்து பயணிப்பதற்குத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து கூறியிருக்கிறார். இலங்கை - இந்திய அமைப்பின் வருடாந்தக் கூட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. அவ்வமைப்பின் காப்பாளரான இந்திய உயர்ஸ்தனிகர் தரன்ஜித் சிங் சந்து நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். இருநாடுகளும் சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து 1949 ஆம் ஆண்டில் இலங்கை - இந்திய அமைப்பு உருவாக்கப்பட்டது. இ…

    • 2 replies
    • 446 views
  11. 1 Min Read September 29, 2019 நாட்டுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவளிப்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் சுதந்திர கட்சியின் தனித்துவத்தையும் கொள்கையையும் பாதிக்கும் வகையில் தாமரை மொட்டு சின்னத்தின் கீழ் அந்த ஆதரவை வழங்க தயார் இல்லை என ராஜபக்ஸக்களுக்கு தெளிவாகக் கூறிவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குருணாகலில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர் மகி…

    • 32 replies
    • 5.2k views
  12. -கே.தயா தமிழ் மக்களின் பரந்துபட்ட அபிப்பிராயங்களை தெரிந்து கொண்டதன் பின்னரே யாருக்கு ஆதரவளிப்பதா அல்லது அவ்வாறு யாருக்கும் ஆதரவு கொடுக்காவிட்டால், தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளரொருவரை நிறுத்த முடியுமா அல்லது வேறு வழிகளை கையாள முடியுமா என்பது தொடர்பில், தமிழ்க் கட்சிகள் அனைத்து இணைந்து ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டுமென, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். மகாத்மா காந்தியின் ஜனன தின நிகழ்வுகள், வல்வெட்டித்துறை - வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரன் கோவில் முன்றலில், இன்று (02) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஜனாதிபதித்-தேர்த…

    • 0 replies
    • 395 views
  13. ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் உத்தியோகபூர்வ அறிவிப்பு! (ஆர்.யசி) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது முழுமையான ஆதரவை ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வழங்குவதை உறுதிபடுத்தியுள்ளதுடன் வடக்கு கிழக்கு முஸ்லிம் பிரச்சினைகள் குறித்தும் யுத்த காலத்தில் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் உரிய பகுதிகளில் குடியமர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் தனித்தனியே அவர்களின் ஆதரவை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வழங்கி வருகின்ற நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் தமது முழுமையான ஆதரவை சஜித் ப…

    • 2 replies
    • 523 views
  14. (நா.தனுஜா) முல்லைத்தீவு நாயாறு குருகஹந்த விகாரை தொடர்பில் ஆராய்ந்து அதன் வரலாறு மற்றும் உண்மைத்தன்மையை அறிந்துகொண்ட பின்னரே இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்கள் கருத்து வெளியிட வேண்டும். அவ்வாறின்றி இதனைப் பயன்படுத்தி தேவையற்ற விதமாக பௌத்தர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையிலான முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கக் கூடாது என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். முல்லைத்தீவு நாயாறு பகுதியில் எந்தவொரு இந்து ஆலயமும் இருக்கவேயில்லை. ஆரம்பத்திலிருந்து குருகஹந்த என்ற பௌத்த விகாரை மாத்திரமே காணப்பட்டது. அந்த விகாரையின் விகாரதிபதியே சில இந்து தெய்வங்களின் சிலைகளை குறித்த விகாரையில் வைத்து பூஜித்தார். அதேபோன்று இது பௌத்தர்களின் வ…

    • 0 replies
    • 912 views
  15. (ஆர்.யசி) யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நீண்ட காலம் கடந்தும் இன்னமும் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வுகள் கிடைக்காதுள்ளமை கவலைக்குரிய விடயம் என்பதை கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பொதுநலவாயம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தெற்காசியாவிற்கான அமைச்சரும், முரண்பாடுகள் உள்ள இடங்களில் பாலியல் வன்முறைகளை தடுப்பதற்குமான பிரதமரின் விசேட பிரதிநிதியுமான தாரிக் அஹமத்திடம் எடுத்துக்கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் தமது பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் வகையில் செயற்பட இரு நாடுகளிற்குமிடையிலான உறவின் அடிப்படையிலான செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஆர்வத்துடன் ஈடுபடுவதாக தாரிக் அஹமத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனிடம் உறுதியளித்த…

    • 0 replies
    • 222 views
  16. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – இழப்பீடு வழங்கும் நடவடிக்கை பூர்த்தி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை பூர்த்தி அடைந்திருப்பதாக இழப்பீட்டிற்கான காரியாலயம் தெரிவித்துள்ளது. மரணித்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்கள் என 707 பேருக்கான இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் இதற்காக சுமார் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளான 1,142 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதுடன் இதற்காக 177 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்துடன் மேலும் 750 பேருக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.d…

    • 0 replies
    • 409 views
  17. படுதோல்வியை தவிர்ப்பதற்கே, கோட்டாபயவைக் கைது செய்ய முயற்சி- மஹிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏற்படப் போகும் படுதோல்வியை அறிந்த ஐக்கிய தேசியக் கட்சி கோட்டாபய ராஜபக்ஸவை சிறைப்படுத்தியாவது வேட்பாளர் பதவியிலிருந்து அவரை நீக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ குற்றம்சாட்டியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸவின் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சோடித்து அவரது வெற்றியைத் தடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். நாம் எமது வேட்பாளரை வேண்டா வெறுப்புடன் பெயரிடவில்லை. தகுதி இருக்கின்றதா? என நன்கு கண்டறிந்தே அறிவித்தோம். ஐக்கிய தேசியக் கட்சி கோட்டாபயவை சிறைப்படுத்த தயாராகி வருகின்றது. இவ்வளவு அச்சப்படுவது …

    • 0 replies
    • 268 views
  18. ஜனாதிபதி தேர்தல் – இதுவரை 17 வேட்பாளர்கள் கட்டுப்பணம் ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை 17 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்கள ஊடக நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் http://www.dailyceylon.com/190194/ -தகவல் திணைக்களம்-

    • 0 replies
    • 252 views
  19. நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானங்கள்! நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 1. கிராம மட்டத்தில் சேதன விவசாய மதிப்பீட்டு செய்கை செயலி தொடர்பான அபிவிருத்தி திட்டத்திற்கான பொது வசதிகளை மேம்படுத்துதல் - சிறிய அளவிலான விவசாய வர்த்தக பங்களிப்புத் திட்டம் (SAPP) இலங்கை அரசாங்கம் விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் (IFAD) மற்றும் தனியார் துறை பங்களிப்பு நிதி நிறுவனம் மற்றும் பயனாளிகளின் ஒன்றிணைந்த 105 அமெரிக்க டொலர் முதலீட்டின் மூலம் அரச தனியார் மற்றும் உற்பத்தி பங்களிப்பு (4P) மூலம் மேற்கொள்ளப்படும் சேதன விவசாய மதிப்பீடு ஊடாக விவசாயிகளுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக சிறிய அளவில…

    • 0 replies
    • 401 views
  20. தன்னை போன்ற ஒருவரை நாட்டின் ஜனாதிபதியாக நியமிப்பதன் ஊடாக நாட்டினுள் நல்ல ஒழுக்கத்தைஉருவாக்கும் ஆற்றல் காணப்படுவதாக தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகள் இராணுவ அதிகாரிகளின் தலைமையின் கீழ் வழி நடாத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.களனி விகாரையில் மத வழிபாட்டில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது மஹேஷ் சேனாநாயக்க இதனை தெரிவித்தார். https://www.madawalaenews.com/2019/10/blog-post_50.html

    • 1 reply
    • 303 views
  21. ஊடகங்களிடம் பேச கோத்தாவுக்குத் தடை Oct 02, 2019 | 11:12by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் ஊடகங்களிடம் எதுவும் பேசாமல் ஒதுங்கியிருக்குமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளதாக, அவரது இணைப் பேச்சாளர்களில் ஒருவரான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டலஸ் அழகப்பெருமவிடம், கோத்தாபய ராஜபக்ச ஊடகங்களைச் சந்திக்காமல்- செய்தியாளர் சந்திப்புகளை நடத்தாமல் தவிர்ப்பது ஏன் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “சட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலேயே கோத்தாபய ர…

    • 0 replies
    • 289 views
  22. மொட்டு இணங்காவிடின் ஐதேகவுக்கு ஆதரவளிக்க மைத்திரி இணக்கம் Oct 02, 2019 | 10:57by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி பேச்சுக்கள் தோல்வியடைந்தால், சஜித் பிரேமதாசவை முன்னிறுத்தியுள்ள ஜனநாயக தேசிய கூட்டணிக்கு ஆதரவு அளிக்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐதேகவின் மூத்த தலைவர்களை நேற்றிரவு சந்தித்துப் பேச்சு நடத்திய போதே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த உறுதிமொழியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒக்ரோபர் 5ஆம் நாள் நடக்கவுள்ள சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், பொதுஜன ப…

    • 0 replies
    • 223 views
  23. நேரடி விவாதத்துக்கு இணங்காத கோத்தா – சஜித், அனுர இணக்கம் Oct 02, 2019 | 10:48by கார்வண்ணன் in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களை ஒரே மேடையில் அமர வைத்து, முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக அவர்களின் நிலைப்பாட்டை அறியும், நேரடி விவாத நிகழ்வு வரும் 5ஆம் நாள் இடம்பெறவுள்ளது. மார்ச் 12 அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு, ஒக்ரோபர் 5ஆம் நாள் மாலை 4 மணி தொடக்கம், 6 மணி வரை சிறிலங்காவின் அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க ஐதேக வேட்பாளர் சஜித் பிரேமதாசவும், ஜேவிபி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளனர். …

    • 0 replies
    • 231 views
  24. இரு முன்னாள் அமைச்சர்கள் சஜித்துக்கு ஆதரவு Oct 02, 2019by கி.தவசீலன் in செய்திகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த இரண்டு முன்னாள் அமைச்சர்கள், ஐதேகவின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் அதாவுட செனிவிரத்ன, முன்னாள் பிரதி அமைச்சர் டபிள்யூ.பி.ஏக்கநாயக்க ஆகியோரே, சஜிஜத் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இவர்கள், தமது முடிவை அறிவித்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அதாவுட செனிவிரத்த அமைச்சராக பதவி வக…

    • 0 replies
    • 275 views
  25. அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய நிரந்திர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன், சாய்ந்தமருது பகுதிகளில் இராணுவத்தினரின் குழு ஒன்று மற்றுமொரு பாரிய தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இன்று திங்கட்கிழமை (30) மாலை திடிரென உழவு இயந்திரத்தில் வந்த சுமார் 15 க்கும் அதிகமான இராணுவத்தினர் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அருகே உள்ள சவளக்கடை சந்தியில் நிரந்திர சோதனை சாவடி ஒன்றை அமைத்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அதே போன்று இராணுவத்தினருக்கு இன்று கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து கனரக வண்டி ஒன்றில் சுமார் 40க்கும் அதிகமான இராணுவத்தினர் சாய்ந்தமருது பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர். கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.