Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த 10 வருடங்களில் பாரிய வளர்ச்சி பாதையை எட்டியிருந்தது. யுத்தம் நிறைவடைந்த அமைதியான சூழ்நிலை நிலவும் பின்னணியில், தெற்காசியாவில் சுற்றுலாத்துறையின் இலங்கை பாரிய மைல் கல்லை எட்டியிருந்தமை யாவரும் அறிந்த உண்மை. கடந்த 10 வருடங்களில் 2018ஆம் ஆண்டு இலங்கையை நோக்கி பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்ததாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Image caption இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை 2018ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம், 2,333,796 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதுடன், அது 10.3 வீத சுற்றுலாத்துறை வளர்ச்சி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 201…

    • 0 replies
    • 960 views
  2. 21/4 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தககுதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மொஹம்மட் சஹ்ரானுடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாக கூறப்படும் மூன்று பேரை மேலதிக விசாரணைகளுக்காக இன்று பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர். நிக்கவரட்டிய, வெலிமடை மற்றும் பேராதெனிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்ட மூவரே இவ்வாறு கொழும்பு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் தலைமையகத்துக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான ருவன் குணசேகர கூறினார். https://www.virakesari.lk/article/60119 ரி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்ட ஹமீத் ஹிஸ்புல்லா! கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி கைதுசெய்யப்…

    • 0 replies
    • 374 views
  3. July 9, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது. 3 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் சென்ற 6 பேர் கொ…

    • 1 reply
    • 322 views
  4. ஜனாதிபதியின் ஐந்தாண்டு பதவிக்காலம் உத்தியோகபூர்வமாக எப்பொழுது முடிவடைகிறது என்ற அபிப்பிராயத்தை உயர்நீதி மன்றத்திடம் ஜனாதிபதி விரைவில் கோரவுள்ளதாகத் தெரிகிறது. ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளா, ஆறு ஆண்டுகளா என்ற சர்ச்சை தோன்றிய போது, ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தை ஜனாதிபதி நாடியிருந்தார். 19வது திருத்தத்தின் பின்னர், தற்போதைய ஜனாதிபதிக்கும் 5 வருட பதவிக்காலமா அல்லது இனிமேல் பதவியேற்கும் ஜனாதிபதிக்கு 5 வருட பதவிக் காலமா என்ற குழப்பம் ஏற்பட்டிருந்தது. தற்போதைய ஜனாதிபதிக்கும் 5 வருட பதவிக்காலம்தான் என உயர்நீதிமன்றம் விளக்கமளித்திருந்தது. இந்தநிலையில், மீளவும் உயர்நீதிமன்றத்தை ஜனாதிபதி நாடவுள்ளார் எனத் தெரிகிறது. ஜனாதிபதி ப…

    • 1 reply
    • 731 views
  5. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞர்களின் எதிர்ப்பையடுத்து, நிகழ்வில் பாதியிலேயே அவர் வெளியேறி சென்றார். மட்டக்களப்பு குருமன்வெளியிலுள்ள ஆலயத்தின் மதில் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியனவற்றிற்கு கம்பெரலிய ஒதுக்கீட்டிலான அபிவிருத்தி திட்டங்களிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் சிறிநேசன் கலந்து கொண்டிருந்தார். நிகழ்வில் சிறிநேசன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, சில இளைஞர்கள் திடீரென மண்டபத்திற்குள் நுழைந்து, சிறிநேசனிடம் சரமாரியாக கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். “உங்களை வாக்களித்து அனுப்பியது கம்பெரலிய கொண்டு வருவதற்கு அல்ல, எமக்கா…

    • 1 reply
    • 597 views
  6. கோத்தாவை சிறையில் அடைத்தாலும் அவர் தேர்தலில் வெற்றி பெறுவார்-உதய கம்மன்பில தெரிவிப்பு கோத்தபாய ராஜபக்க்ஷ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமய யோசனை முன்வைக்கும். கோத்தபாய ராஜபக்க்ஷ சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர் சிறையில் இருக்கும் போது, அவருக்காக தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எம்புல்தெனிய மெக்ரின் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற பிவித்துரு ஹெல உறுமயவின் விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர், சிறையில் இருக்கும் போது தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் இலகுவானது என்பது கடந்த கால அனுபவங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். …

    • 1 reply
    • 334 views
  7. தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் ஐயா சிறு நோய் காரணமாக இன்று பி.ப 5,மணிக்கு கொழும்பு நவலோகா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவு விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். https://thinaseithy.com/தீவிர-சிகிச்சை-பிரிவில்/?fbclid=IwAR0vhRmomAFO9SVWaeSKJsLcb1JeKUHO_VBTCqadcG4pRzdMcWQRhKMQKTE

    • 6 replies
    • 1.5k views
  8. அமெரிக்காவின் தேவைக்காக காணி கொள்வனவு சட்டத்தை கொண்டு வர பிரதமர் முயற்சி - தயாசிறி நாட்டு மக்கள் அனைவருக்கும் தமது காணிகளை சொந்தமாக்கிக் கொள்வதற்காக காணி கொள்வனவு மற்றும் காணி தொடர்பான ஒழுக்க விதிகள் சட்டத்தின் மூலம் நாட்டில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, அமெரிக்காவின் வசதிக்கேற்பவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த சட்டங்களை கொண்டு வர முயற்சிக்கிறார் என்றும் குறிப்பிட்டார். காணி தொடர்பான இந்த சட்டங்கள் மூலம் திருகோணமலை தொடக்கம் கொழும்பு வரையான பொருளதார வலய திட்டத்திற்கு மில்லேனியம் சவால் ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவுக்கு இடங்களை தாரை வார்ப்பதே பிரதமரின் நோக்கமாக…

    • 1 reply
    • 960 views
  9. நெதர்லாந்தில் சிறிலங்காவின் இரண்டு தூதுவர்கள் நெதர்லாந்தில் தற்போது சிறிலங்காவின் இரண்டு தூதுவர்கள் இருப்பதாகவும், ஒருவர் அதிகாரபூர்வ வதிவிடத்திலும் மற்றொருவர் விடுதியிலும் தங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நெதர்லாந்துக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட சுமித் நாகந்தல, ஹேக் நகருக்குச் சென்று பதவியைப் பொறுப்பேற்றுள்ள போதும், சிறிலங்கா தூதுவராகப் பணியாற்றியவரின் பணிக்காலம் முடிந்த பின்னரும், அதிகாரபூர்வ வதிவிடத்தை விட்டுக் கொடுக்காமல் அங்கேயே தங்கியுள்ளார். சுமித் நாகந்தல பல வாரங்களுக்கு முன்னரே, பணிகளைப் பொறுப்பேற்று விட்ட போதிலும், அதிகாரபூர்வ வதிவிடம் ஒப்படைக்கப்படாததால், விடுதியொன்றில் தங்கியுள்ளார். பதவிக்காலம் முடிந்த தூதுவரும்,…

    • 3 replies
    • 932 views
  10. வடக்கு,கிழக்கை தவிர ஏனைய பகுதிகளை சிங்கள தேசமாக மாற்றுவதில் தமக்கு ஆட்சேபனை இல்லையென வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அத்தோடு, தமிழர்கள் தன்னாட்சி அமைப்பதற்கான கோரிக்கையை ஞானசார தேரர் முன்னெடுப்பாரானால், இந்த விடயத்தில் எந்தவித எதிர்ப்பையும் தாம் வெளியிட மாட்டோமென்றும் அவர் குறிப்பிட்டார். கண்டியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பௌத்த மாநாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், சிங்கள ஆட்சி அமைப்போம் தமிழர்கள் கோபிக்க வேண்டாமெனக் கூறியிருந்தார். இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் யாழில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “ஞானசாரரின் க…

    • 0 replies
    • 288 views
  11. இராஜினாமா செய்த முஸ்லீம் அமைச்சர்கள் மீண்டும் தங்களுடைய அமைச்சு பதவிகளை பொறுப்பேற்பதா?இல்லையா?என்பது தொடர்பில் எதிர்வரும் 11 ஆம் திகதி கூடி ஆராய்ந்து முடிவெடுப்பர் என்று அறியவருகிறது. எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் கூடும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இதனை கூடி ஆராய்ந்து தீர்மானத்திற்கு வருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. http://thinakkural.lk/article/31491

    • 0 replies
    • 301 views
  12. குருணாகலை - ரஸ்னாயக்கபுர பகுதியில் சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பினை பேணியதாக கைது செய்யப்பட்ட மௌலவி மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணை பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ககடந்த மே மாதம் முதலாம் திகதி நிகவெரட்டிய ஊழல் தடுப்பு கைது செய்யப்பட்ட சந்தேக நபரான மௌலவி தொடர்பான விசாரணைகளை ரஸ்னாயக்கபுர பொலிஸார் மேற்கொண்டு வந்தனர். அதற்கமைய இரு மாத காலமாக சந்தேக நபரை தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இதன் போது சந்தேக நபர் பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் நெறுங்கிய தொடர்பை பேணியுள்ளதாகவும் இஅவரது தலைமையின் கீழ் இயங்கி வந்த பயிற்சி முகாம்களில் சந்தேக நபர் பயிற்சி பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்தள்ளது. …

    • 0 replies
    • 286 views
  13. நாட்டில் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட சர்வதேச பயங்காரவாத அமைப்பான ஐ.எஸ். ஐ.எஸ், தீவிரவாத அமைப்பினை ஒரு மாததிற்குகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியுமாக இருந்தால் ஏன் இந்த சாதாரணமாக வடபகுதியில் ஒரு பகுதிக்குள் இயங்குகின்ற 15 - 20 இளைஞர்களைக் கொண்ட இந்தக் வாள் வெட்டுக் கும்பலை அடக்க முடியாது. என ஈரோஸ் கட்சியின் தலைவர் இ.பிரபாகரன் கேள்வி எழுப்பினார் . யாழ்ப்பாணதில் அமைந்துள்ள ஈரோஸ் கட்சியின் அலுவலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே மேற்படி கேள்விளை எழுப்பினார். இது தொடர்பில் அவர்,மேலும் தெரிவிக்கையில், இந்த வாள் வெட்டுக் குழுக்கள் தானாக தோற்றம் பெற்றது என்று சொல்லவிட முடியாது. இதற்கு பின்னால் ஏதோ ஒரு பலமான பி…

    • 0 replies
    • 378 views
  14. முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க கூடாது என்று கூறுவது இனவாதத்தின் உச்சக் கட்டம் - ஆரிப் சம்சுதீன் உயர் நீதிமன்ற ஓய்வு நிலை நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் ஐயா போன்ற படித்த பண்பாளரான ஒருவர் கேவலமான அரசியல் பிழைப்புக்காக பாவிகளை போல இனவாதம் பேசி அப்பாவி மக்களை உசுப்பேற்றுவது பேரதிர்ச்சி தருகின்றது என்று கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார். இவரின் நிந்தவூர் இல்லத்தில் ஊடகவியலாளர்களை இன்று (09) செவ்வாய்க்கிழமை சந்தித்து இவ்வாறு தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க கூடாது, குறிப்பாக தமிழர்களின் காணிகள் முஸ்லிம்களுக்கு விற்கப்பட கூடாது என்பதாக விக…

  15. தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த வீடு திருத்தப்படுகிறது… July 6, 2019 சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 26 திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த வீட்டை திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகளை கல்முனை இராணுவ படை முகாம் கட்டளை தளபதிகள் மேஜர் தர்மசேன தலைமையிலான இராணுவ அணி சென்று பார்வையிட்டுள்ளது. இன்று (6) காலை குறித்த பகுதிக்கு சென்ற இராணுவத்தினர் சேதமடைந்த வீட்டின் பகுதிகளை புகைப்படம் எடுத்ததுடன் அதனை மீள அமைப்பதற்கான உத்தேச வரைவு ஒன்றினையும் செயற்படுத்தி துரித கதியில் பழைய நிலைக்கு அவ்வீட்டை திருத்தி அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த வீட்டை இராணுவத்தினர் திருத்தியமைக்க முன்வந்துள்ளமை தொடர்பாக அப்பகுதி மக்கள…

  16. யாழ்ப்பாணம் அபூபக்கர் வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடப்பட்ட மரங்கள் இரவோடு இரவாக தறிக்கப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு குறித்த வீதிகளின் இரு மருங்கிலும் தேக்கு மரங்கள் புலிகளால் டப்பட்டன. அவை மிகவும் செழிப்பாக வளர்ந்திருந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் எனக் கருதப்படும் ஒருவரால் குறித்த மரங்கள் எந்த அனுமதியும் இன்றி அடியோடு சாய்க்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. https://newuthayan.com/story/16/விடுதலைப்-புலிகளால்-நடப்.html

  17. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தனது பதவிக்காலம் ஆரம்பித்து முடிவடையும் தினம் தொடர்பில் உச்சநீதிமன்றத்திடம் வியாக்கியானத்தைக் கோருவது பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆராய்ந்து வருவதாகத் தெரியவருகிறது. இதன் ஊடாக தனது பதவிக்காலம் முடிவடையும் சரியான தினத்தை, அவர் அறிந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 19ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் 2015 மே 15ஆம் திகதியே சபாநாயகர் கரு ஜயசூரிய தனது கையொப்பத்தையிட்டு அதனை உறுதிப்படுத்தியிருப்பதாக ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியிருப்பதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, மைத்திரிபால ச…

    • 0 replies
    • 547 views
  18. விக்கி – கஜேந்திரகுமார் உறவில் விரிசல் : கூட்டணியமைப்பதில் சிக்கல்? புதிய கூட்டணி ஒன்றினை அமைப்பது குறித்து வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிற்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் மக்கள் கூட்டணிக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குமிடையில் புதிய கூட்டணி ஒன்றினை அமைக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டிருந்தது. சுரேஷ் பிரேமச்சந்திரனை தவிர்த்து விக்னேஸ்வரன் மாத்திரம் தமது தரப்புடன் இணைய வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதற்கு நிபந்தனை விதித்து வந்தது. பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகித்த தரப்பினர், சுரேஷ் பிரேமச்சந்திரனை விட்டு விக்னேஸ்வரன் வர தயாராக…

    • 3 replies
    • 867 views
  19. முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் வெலிஓயா பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவரால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த சனிக்கிழமை (6)முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தமிழர் திருவிழா எனும் பெயரில் வருடாந்த பொங்கல் உற்சவம் வடக்கு கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களின் பங்களிப்புடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது . இந்த நிலையில் அந்த பொங்கல் உற்சவத்திற்கு ஆலய வளாகத்திலே தற்காலிக தகர பந்தல்கள் ஆலய நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டது . இந்த தற்காலிக தகர பந்தல்…

  20. இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டிருந்தால் இந்தியாவோ நோர்வேயோ தலையிடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. பல்வேறு நாடுகளும் தமது சுயதேவைகளுக்காக எமது நாட்டில் கால்பதிக்கும் நிலையும் ஏற்பட்டிருக்காதென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள வொய்ஸ் ஒப் மீடியா கற்கைகள் நிலையத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சிறுபான்மை மக்கள் பலத்த எதிர்பார்ப்புடன் இன்றைய ஜனாதிபதியை கொண்டு வந்தனர். ஆனால் இன்று சிறுபான்மை மக்கள் அவர் மீது நம்பிக்கையிழக்கும் வகையில் அவரது செயற்பாடுகள் காணப்படுகின்றன. போதையற்ற நாட்டில் தான் சு…

    • 0 replies
    • 363 views
  21. (நா.தினுஷா) தமிழ் மக்கள் ஒருபோதும் தனி இராஜ்ஜியத்தை கோரவில்லை. சமாதானம், ஒருமித்த நாட்டையே கேட்கின்றனர் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசாங்கங்கள் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஒவ்வொரு அரசாங்கமும் காலத்தைக் கடத்துகின்றன. தமிழ் மக்களின் கோரிக்கை பாரபட்சமற்ற முறையில் நிறைவேற்றிக்கொடுக்கப்பட வேண்டும். பிரிவினையற்ற,ஒற்றுமையான நாடாக எமது நாடு மாற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். சர்வதேசத்திடம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவ…

    • 2 replies
    • 519 views
  22. (எம்.எப்.எம்.பஸீர்) காத்தான்குடி பிரதேசத்தில் 20 பேருக்கு ஷரிஆ சட்டத்தின் கீழ் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறித்து தம்மிடம் தரவுகள் இருப்பதாக கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் அதனை மையப்படுத்தி சி.ஐ.டி. தற்போது குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார். h…

  23. பொதுபலசேனா கண்டியில் நடத்தவுள்ள மிகப்பிரமாண்டமான மாநாட்டில் இஸ்லாமிய அடிப்டைவாதத்துக் கெதிராக தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி – தலதா மாளிகை திடலில் பிக்குகள் மாநாடு இடம்பெறவுள்ளது. இதில் சுமார் ஒரு இலட்சம் பொது மக்கள் மற்றும் 10 ஆயிரம் பிக்குகள் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கவும் அனைத்து இன மக்களையும் ஒரு சட்டத்துக்கு கீழ் கொண்டு வருவதுமே இந்த மாநாட்டின் முக்கிய விடயமென பொதுபலசேனா தெரிவித்துள்ளது. முஸ்லிம் மக்களின் ஆடை விவகாரம் , ஹலால் , மத்ரஷா , காதிக்கோர்ட் சட்டம் மற்றும் தௌஹீத் பள்ளிவாசல்கள் …

    • 10 replies
    • 1.9k views
  24. மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழு உறுப்பினர்கள் யாழ்ப்பாணம், மயிலிட்டிப் பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தியது குறித்து தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். பியகமவில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “அமெரிக்க செனட் உறுப்பினர்கள் மயிலிட்டிப் பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தியது குறித்து நான் அறிந்திருக்கவில்லை. எனினும், சிலர் அங்கு சென்றிருந்தது குறித்து, அறிந்ததும், இந்த விடயத்தை ஆராய்ந்து எனக்குத் தெரியப்படுத்துமாறு உடனடியாக அறிவு…

    • 0 replies
    • 847 views
  25. அவநம்பிக்கை பிரேரணை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து நாளைய தினம் கலந்துரையாடல் அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து நாளைய தினம் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நாளை இடம்பெறவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் இந்த விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/219913/அவநம்பிக்கை-பிரேரணை-உள்ளிட்ட-பல-விடயங்கள்-குறித்து-நாளைய-தினம்-கலந்துரையாடல் நம்பிக்கையில்லாப் பிரேரணை;விவாதத்திற்கு கட்சி தலைவர்கள் இணக்கம் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையி…

    • 1 reply
    • 481 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.