Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த வீடு திருத்தப்படுகிறது… July 6, 2019 சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 26 திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த வீட்டை திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகளை கல்முனை இராணுவ படை முகாம் கட்டளை தளபதிகள் மேஜர் தர்மசேன தலைமையிலான இராணுவ அணி சென்று பார்வையிட்டுள்ளது. இன்று (6) காலை குறித்த பகுதிக்கு சென்ற இராணுவத்தினர் சேதமடைந்த வீட்டின் பகுதிகளை புகைப்படம் எடுத்ததுடன் அதனை மீள அமைப்பதற்கான உத்தேச வரைவு ஒன்றினையும் செயற்படுத்தி துரித கதியில் பழைய நிலைக்கு அவ்வீட்டை திருத்தி அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த வீட்டை இராணுவத்தினர் திருத்தியமைக்க முன்வந்துள்ளமை தொடர்பாக அப்பகுதி மக்கள…

  2. யாழ்ப்பாணம் அபூபக்கர் வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடப்பட்ட மரங்கள் இரவோடு இரவாக தறிக்கப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு குறித்த வீதிகளின் இரு மருங்கிலும் தேக்கு மரங்கள் புலிகளால் டப்பட்டன. அவை மிகவும் செழிப்பாக வளர்ந்திருந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் எனக் கருதப்படும் ஒருவரால் குறித்த மரங்கள் எந்த அனுமதியும் இன்றி அடியோடு சாய்க்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. https://newuthayan.com/story/16/விடுதலைப்-புலிகளால்-நடப்.html

  3. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தனது பதவிக்காலம் ஆரம்பித்து முடிவடையும் தினம் தொடர்பில் உச்சநீதிமன்றத்திடம் வியாக்கியானத்தைக் கோருவது பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆராய்ந்து வருவதாகத் தெரியவருகிறது. இதன் ஊடாக தனது பதவிக்காலம் முடிவடையும் சரியான தினத்தை, அவர் அறிந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 19ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் 2015 மே 15ஆம் திகதியே சபாநாயகர் கரு ஜயசூரிய தனது கையொப்பத்தையிட்டு அதனை உறுதிப்படுத்தியிருப்பதாக ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியிருப்பதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, மைத்திரிபால ச…

    • 0 replies
    • 547 views
  4. விக்கி – கஜேந்திரகுமார் உறவில் விரிசல் : கூட்டணியமைப்பதில் சிக்கல்? புதிய கூட்டணி ஒன்றினை அமைப்பது குறித்து வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிற்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் மக்கள் கூட்டணிக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குமிடையில் புதிய கூட்டணி ஒன்றினை அமைக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டிருந்தது. சுரேஷ் பிரேமச்சந்திரனை தவிர்த்து விக்னேஸ்வரன் மாத்திரம் தமது தரப்புடன் இணைய வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதற்கு நிபந்தனை விதித்து வந்தது. பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகித்த தரப்பினர், சுரேஷ் பிரேமச்சந்திரனை விட்டு விக்னேஸ்வரன் வர தயாராக…

    • 3 replies
    • 867 views
  5. முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் வெலிஓயா பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவரால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த சனிக்கிழமை (6)முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தமிழர் திருவிழா எனும் பெயரில் வருடாந்த பொங்கல் உற்சவம் வடக்கு கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களின் பங்களிப்புடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது . இந்த நிலையில் அந்த பொங்கல் உற்சவத்திற்கு ஆலய வளாகத்திலே தற்காலிக தகர பந்தல்கள் ஆலய நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டது . இந்த தற்காலிக தகர பந்தல்…

  6. இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டிருந்தால் இந்தியாவோ நோர்வேயோ தலையிடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. பல்வேறு நாடுகளும் தமது சுயதேவைகளுக்காக எமது நாட்டில் கால்பதிக்கும் நிலையும் ஏற்பட்டிருக்காதென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள வொய்ஸ் ஒப் மீடியா கற்கைகள் நிலையத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சிறுபான்மை மக்கள் பலத்த எதிர்பார்ப்புடன் இன்றைய ஜனாதிபதியை கொண்டு வந்தனர். ஆனால் இன்று சிறுபான்மை மக்கள் அவர் மீது நம்பிக்கையிழக்கும் வகையில் அவரது செயற்பாடுகள் காணப்படுகின்றன. போதையற்ற நாட்டில் தான் சு…

    • 0 replies
    • 362 views
  7. (நா.தினுஷா) தமிழ் மக்கள் ஒருபோதும் தனி இராஜ்ஜியத்தை கோரவில்லை. சமாதானம், ஒருமித்த நாட்டையே கேட்கின்றனர் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசாங்கங்கள் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஒவ்வொரு அரசாங்கமும் காலத்தைக் கடத்துகின்றன. தமிழ் மக்களின் கோரிக்கை பாரபட்சமற்ற முறையில் நிறைவேற்றிக்கொடுக்கப்பட வேண்டும். பிரிவினையற்ற,ஒற்றுமையான நாடாக எமது நாடு மாற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். சர்வதேசத்திடம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவ…

    • 2 replies
    • 519 views
  8. (எம்.எப்.எம்.பஸீர்) காத்தான்குடி பிரதேசத்தில் 20 பேருக்கு ஷரிஆ சட்டத்தின் கீழ் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறித்து தம்மிடம் தரவுகள் இருப்பதாக கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் அதனை மையப்படுத்தி சி.ஐ.டி. தற்போது குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார். h…

  9. பொதுபலசேனா கண்டியில் நடத்தவுள்ள மிகப்பிரமாண்டமான மாநாட்டில் இஸ்லாமிய அடிப்டைவாதத்துக் கெதிராக தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி – தலதா மாளிகை திடலில் பிக்குகள் மாநாடு இடம்பெறவுள்ளது. இதில் சுமார் ஒரு இலட்சம் பொது மக்கள் மற்றும் 10 ஆயிரம் பிக்குகள் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கவும் அனைத்து இன மக்களையும் ஒரு சட்டத்துக்கு கீழ் கொண்டு வருவதுமே இந்த மாநாட்டின் முக்கிய விடயமென பொதுபலசேனா தெரிவித்துள்ளது. முஸ்லிம் மக்களின் ஆடை விவகாரம் , ஹலால் , மத்ரஷா , காதிக்கோர்ட் சட்டம் மற்றும் தௌஹீத் பள்ளிவாசல்கள் …

    • 10 replies
    • 1.9k views
  10. மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழு உறுப்பினர்கள் யாழ்ப்பாணம், மயிலிட்டிப் பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தியது குறித்து தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். பியகமவில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “அமெரிக்க செனட் உறுப்பினர்கள் மயிலிட்டிப் பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தியது குறித்து நான் அறிந்திருக்கவில்லை. எனினும், சிலர் அங்கு சென்றிருந்தது குறித்து, அறிந்ததும், இந்த விடயத்தை ஆராய்ந்து எனக்குத் தெரியப்படுத்துமாறு உடனடியாக அறிவு…

    • 0 replies
    • 846 views
  11. அவநம்பிக்கை பிரேரணை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து நாளைய தினம் கலந்துரையாடல் அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து நாளைய தினம் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நாளை இடம்பெறவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் இந்த விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/219913/அவநம்பிக்கை-பிரேரணை-உள்ளிட்ட-பல-விடயங்கள்-குறித்து-நாளைய-தினம்-கலந்துரையாடல் நம்பிக்கையில்லாப் பிரேரணை;விவாதத்திற்கு கட்சி தலைவர்கள் இணக்கம் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையி…

    • 1 reply
    • 480 views
  12. (எம்.எப்.எம்.பஸீர்) களுத்துறை முதல் கதிர்காமம் வரையிலான தெற்கின் முன்னணி அரச நிறுவங்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல் அப் பிரதேசங்களில் பரவியுள்ளதால் அனைத்து அரச நிறுவங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உளவுத்துறைகள் எதுவும் உறுதி செய்யாத , மாத்தறை பொலிஸ் அத்தியட்சருக்கு கிடைத்த தகவலை மையப்படுத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது குறித்து பொது மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர குறிப்பிட்டார். இந் நிலையில் இந்த தகவலை மையப்படுத்தி, தெற்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் …

    • 1 reply
    • 354 views
  13. காத்தான்குடியில் 20 பேர் கொலை;ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் ஷரியா சட்டத்திற்கு ஏற்ப காத்தான்குடியில் இதுவரை 20 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர்,இதற்கான ஆதாரங்களும் தரவுகளும் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்தார். வகாப் அடிப்படைவாதத்துக்கு எதிரான மாநாடு ஒன்று நுகேகொடையில் நேற்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டிருந்தபோதே அபேதிஸ்ஸ தேரர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நான் விசேட தகவல் ஒன்றை வெளியிடவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தெரிவித்திருந்தேன். அதாவது, காத்தான்குடி பிரதேசத்தில் ஷரியா சட்டத்திற்கு இணங்க 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒருவர் தெரிவித்துள்ளார். அ…

    • 2 replies
    • 752 views
  14. வவுனியாவில் இன்று மாலை 5மணியளவில் கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற ரயிலுடன் மாடு மோதியதில் பாரிய விபத்துச்சம்பவம் ஒன்று ரயில் சாரதியின் சாதுரியத்தினால் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் பலமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 5மணியளவில் தாண்டிக்குளம் கொக்குவெளி இராணுவமுகாமிற்கு முன்பாகவுள்ள ரயில்க்கடவையில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளுடன் புகையிரதம் மோதியுள்ளது. இதன்போது பல மாடுகள் உயிரிழந்து துண்டுகளாகின. இந்நிலையில் மாடு ஒன்று ரயிலின் பிரதான கட்டுப்பாட்டு இயந்திரத்திற்குள் சிக்கிக்கொண்டுள்ளது. தண்டவாளத்திற்கு பொருத்தப்பட்டிருந்த தடுக்கைகள் ரயில்ப்பாதையில் காணப்பட்டன.…

  15. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, எந்தவொரு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் ராணுவத்திடம் நேரடியாக சரணடையவில்லை என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ராணுவத்தின் வசம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான தரவுகளை, தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் பீ.நிரோஷ் குமார் கோரியிருந்து நிலையிலேயே, இலங்கை ராணுவம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் தகவலை, அதிகாரியும், ஊடகப் பேச்சாளருமான பிரிகேடியர் சுமித் அத்தபத்து வெளியிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கை ராணுவத்திடம் சரணடையவில்லை என தெரிவித்துள்ள அவர், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர…

    • 0 replies
    • 353 views
  16. July 8, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn புலம்பெயர் நாட்டில் இருந்து சென்றவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் சுமார் 70 பவுண் நகைகளையும் , 10 இலட்ச ரூபாய் பணத்தினையும் திருடி சென்றுள்ளனர். வடமராட்சி துன்னாலை பகுதியில் நேற்று முன்தினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ள…

  17. July 8, 2019 நபர் ஒருவருடன் முரண்பட்டவரை கைது செய்ய பெருமளவான காவற்துறையினர் சாவகச்சேரி சந்தைக்குள் குவிந்ததால் சந்தைக்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.சாவகச்சேரி சந்தையில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இரு நபர்கள் முரண்பட்டுள்ளனர். முரண்பட்டவர்களில் ஒருவர் அங்கிருந்து சென்று சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதனை அடுத்து மூன்று வாகனங்களில் வந்த பெருமளவான காவற்துறையினர் சந்தைக்குள் புகுந்து தேடுதல் நடாத்தி முரண்பாட…

  18. July 8, 2019 அரசாங்கத்தை இலகுவில் கையளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்னும் 6 வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியே வைத்துக்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். இன்னும் 6 வருடங்களுக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னோக்கிக் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மொட்டின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு, 6 ராஜபக்ஸக்கள் இணைந்திருப்பதாகத் தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியில் இவ்வாறானதொரு குடும்ப ஆதிக்கம் இல்லை என்றும் தெரிவித்தார். வெற்றிப்பெறும் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்…

  19. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்வதற்கு, பிரதம நீதியரசரால், உயர்நீதிமன்ற நீதியரசர்கள் எழுவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. http://www.hirunews.lk/tamil/219917/நீதியரசர்கள்-எழுவர்-அடங்கிய-குழு-நியமனம்

    • 0 replies
    • 309 views
  20. மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் ஒன்றினை முன்னெடுத்து சென்றமை தொடர்பில் அவன்கார்ட் மெரிடைம் நிறுவனத்தின் தலைவர் நிசங்க யாப்பா சேனாதிபதி உள்ளிட்ட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்செய்யுமாறு சட்ட மா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனயவுப் பிரிவின் பணிப்பாளர் ஊடாக இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவே அவர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை ஒன்றினை முன்னெடுத்து சென்றதன் ஊடாக அரசாங்கத்துக்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகள் தொடர்பிலேயே இவர்கள் 8 ப…

    • 1 reply
    • 1k views
  21. தமிழர்களின் போராட்டத்தினை ஜனாதிபதியே கொச்சைப்படுத்தினாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது – கே. மஸ்தான் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தினை ஜனாதிபதியே கொச்சைப்படுத்தினாலும் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு கொள்ளர் புளியங்குளத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘எனது நிதியொதுக்கீட்டில் நடைபெற்ற வேலைத்திட்டங்களுக்கு வேலை முடிந்ததன் பின்னரும் அதற்கான பணத்தை வழங்காமல் உள்ளதாக அறிகின்றேன். இவ்வாறு பணத்தை வழங்க முடியாத நிலையில்தான் இந்த அரசாங்கம் இருக்கின்றது. எந்த செயற்பாட்டையும் அரசியல் ரீதியாக பார்ப…

    • 2 replies
    • 518 views
  22. யாழ்ப்பாணம் மாநகர சபையின் அனுமதியுடன் அதன் எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரங்கள் அமைக்கும் பணிகளை 10 நாட்களுக்கு இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணித்துள்ளார். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் இந்து ஆரம்பப் பாடசாலைக்கு அருகாமையில் தனியார் ஒருவரின் வீட்டு வளாகத்தில் அமைக்கப்படும் 5ஜி அலைக்கற்றைக் கோபுரம் தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் நேற்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். இந்த விடயம் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதனையடுத்தே யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரங்கள் அமைக்கும் பணிகளை 10 நாட்களுக்கு இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணித்துள்…

    • 0 replies
    • 337 views
  23. ஜனாதிபதி லண்டனிற்கு விஜயம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனிற்கு விஜயம் செய்யவுள்ளார். தனிப்பட்ட விஜயமாக அவர் இன்று(திங்கட்கிழமை) லண்டனிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது மகன் தஹாம் சிறிசேனவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு லண்டனிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்க மூன்று நாட்கள் தங்கியிருப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, தனது லண்டன் விஜயம் காரணமாக நாளை கூடவிருந்த அமைச்சரவை கூட்டத்தினை நேற்று கூட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ஜனாதிபதி-லண்டனிற்கு-விஜய/

    • 1 reply
    • 822 views
  24. அரசிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட இருக்கின்ற இந்த இறுதிச் சந்தர்ப்பத்திலாவது தமிழ் மக்களின் நலன்சார்ந்து சம்மந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா போன்றவர்கள் யோசித்து முடிவெடுக்க வேண்டுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.கட்டப்பிராயிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரனையொன்று நாடாளுமன்றத்தில் வர இருக்கின்றது. அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வருகின்ற பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடா…

  25. இன, மத அடிப்படையிலான கட்சிகளை பதிவுசெய்யாதிருக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்! இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறான கட்சிகள் உருவாக்கப்படுவதால், அரசியல், சமூகம் மற்றும் மத ரீதியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், இதன்காரணமாகவே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இவ்வாறான கட்சிகளை எதிர்வரும் காலங்களில் பதிவு செய்யாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.