Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜா-எல, ஏக்கல பள்ளி வாசலை அகற்றுமாறு கோரி மகஜர் கையளிப்பு நாட்டில் தற்போது நிலவும் பாதுகாப்பு நிலைஆமையைக் கருத்திற் கொண்டு, ஜாஎல, ஏக்கல, கம்பஹா வீதியில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிஆவாசலை உடன் அங்கிஆருந்து அகற்றுஆமாறு கோரி மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்புக்களில் ஒன்றான தெளஹீத் ஜமா அத்துக்குச் சொந்தமான ஏக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த பள்ளிவாசலை, அப்பிரதேசத்திலிருந்து உடன் அகற்றுமாறு கோரி கைச்சாத்திடப்பட்ட மகஜர் ஒன்றே கடந்த வாரம் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது. ஜாஎல, ஏக்கல ஆகிய பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், பயங்கஆரஆவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களிடமிருந்தும் தம்மைக் காப்பா…

  2. நாட்டின் ஏனைய பகுதிகளைப்போல வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் உள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் ஆயிரத்து 119 தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு திருகோணமலையில் நேற்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றம், கிராம எழுச்சி உள்ளிட்ட திட்டங்களின் ஊடாக வடக்கு, கிழக்கிற்கு இந்த வருடத்தில் 11 ஆயிரம் மில்லியன் ருபா செலவிடப்படவுள்ளது. அத்துடன், 17 ஆயிரம் வீடுகளை இந்த ஆண்டில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்க வேண்டும். இதுனூடாக அடுத்த தலைமுறையினரு…

  3. முஸ்லிம்கள் தொடர்பில் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரர் தெரிவித்த கருத்தைத் தான் முற்றாக நிராகரிப்பதாக திபெத்திய பெளத்த ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “நான் ஒரு பெளத்தன். பெளத்த மதத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, எனினும், நான் ஏனைய அனைத்து சம்பிரதாயங்களையும் மதிக்கின்றேன். முஸ்லிம்களின் வியாபாரங்களைப் புறக்கணிக்க வேண்டும் எனவும், முஸ்லிம்கள் மீது கல்லெறிந்து கொலைசெய்ய வேண்டும் எனவும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் தெரிவித்த கருத்தை முற்றாக நிராகரிக்கின்றேன். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முழுமூச்சுடன் செயற்பட வேண்டிய ஒருவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது பாரிய தவறாகும்” – என்…

    • 0 replies
    • 395 views
  4. 6 மாதத்திற்குள் 10 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க வேண்டும் – ஆளுநர் உத்தரவு முல்லைத்தீவில் அடுத்த 6 மாதத்திற்குள் 10 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் இடம்பெற்றது இதன்போது பிரதேச செயலகம், மாகாண காணி திணைக்களத்தில் இதை நடைமுறைப்படுத்த போதிய ஆளணி இல்லையென கூறப்பட்டது. இருப்பினும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை இணைத்து காணி உறுதி வழங்குமாறு ஆளுநர் …

  5. வெளிநாட்டு அகதிகளுக்கான இராணுவ பாதுகாப்பு விலக்கப்பட்டது! வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நேற்று(வியாழக்கிழமை) முதல் விலக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தங்கியிருந்த சுமார் 1600 அகதிகள் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலினைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதற்கமைய வெளிநாட்டு அகதிகள் சிலர் வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கட்டடத்தினை சூழவும் இராணுவம் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முதல் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவத்தினர் விலக்…

  6. காத்தான்குடியிலிருந்து பெருந்திரளான வெடிபொருட்கள் மீட்பு மட்டக்களப்பு, ஒல்லிக்குளம் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலக்நைட்கள் , ஆயிரம் டெடனைட்டர்கள் என்பவை குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் ஐ.எஸ் ஐ.எஸ். பயங்ரவாதிகளின் மட்டக்களப்பு ஒல்லிக்குளம் முகாமில் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள், வாள்கள், ஜெலக்நைட் குச்சிகள், டெடனைடர்கள் உட்பட பெரும் திரளான வெடிபொருட்கள் இன்று வியாழக்கிழமை மாலை குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன. கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய ஸஹ்ரானின் இரண்டாம் கட்ட த…

  7. மலையகத்தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட கட்டாய கருத்தடை திட்டம் தொடர்பில் தீர்க்கமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பது தொடர்பான பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதேவேளை, இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், மலையகத்தில் புதிதாக இராணுவ முகாம்களை நிறுவும் முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/2…

    • 0 replies
    • 578 views
  8. மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க பிரித்தானியா மறுப்பு! இலங்கையில் மீண்டும் மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால், பயங்கரவாத முறியடிப்பு உள்ளிட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரங்களில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவது கடினமென பிரித்தானியா எச்சரித்துள்ளது. போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (புதன்கிழமை) ஒப்புதல் வழங்கியிருந்தார். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே பிரித்தானியாவின் வெளிவிவகாரப் பணியக பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால், பொலிஸ், பாதுகாப்பு மற்றும் பிற…

  9. June 27, 2019 மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பாகவும், திரு விழாவுக்கான பாதுகாப்பு தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை (27) காலை 11 மணியளவில் மடு திருத்தலத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் இடம் பெற்றது. இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை,கிறிஸ்தவ கலாச்சார அலுவல்கள் பணிப்பாளர் சத்தூரி பின்ஜோ, மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் , குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உற்பட அழைக்கப்பட்ட திணைக்களங்களின் …

  10. June 27, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn தாம் எந்தவிதமான குற்றங்களுடனும் தொடர்பில்லை என்றால், மைத்திரி, ரணில், மகிந்த ராஜபக்ச ஏன் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கு அச்சப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்…

  11. June 27, 2019 அரசாங்க உத்தியோகத்தர்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிரூபம் ஒன்று பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு பல்வேறு தரப்பினாலும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டதனால் குறித்த சுற்றறிக்கையை திருத்தம் செய்ய கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அரச அலுவலகங்களில் சேலைஅல்லது ஒசரி மாத்திரம் அணிந்து கொண்டு பணிக்கு வருமாறு முன்னர் வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமையே எ திர்ப்…

  12. பயங்கரவாத தக்குதலால் தீர்வு முயற்சிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறுவது மக்களை முட்டாள்கள் என நினைத்து வெளிப்படுத்திய கருத்தாகும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார் வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச ஆயுதப் போராட்டத்தை முறியடித்துவிட்டதாக வெற்றிக்களிப்பில் திளைத்து தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை இனி நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்ற நிலைக்கு வந்திருந்தார். அது மட்டுமன்றி சர்வாதிகார குடும்ப ஆட்சி காரணமாக சிங்கள மக்கள் மத்தியிலும் ராஜபக்ச அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தது. சர்வதேசத்திற்கும் மகிந்த தா…

    • 0 replies
    • 265 views
  13. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது, தமது கட்சியிலிருந்து வேட்பாளரொருவரைக் களமிறக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, மீண்டும் வேட்பாளராகக் களமிறங்குவாரென, வீரகுமார திசாநாயக்க எம்.பி தெரிவித்துள்ளார். நேற்று (26) இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போதே, இது குறித்து ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டதென, அவர் கூறினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/மீண்டும்-ஜனாதிபதி-வேட்பாளராகக்-களமிறங்குகிறார்-மைத்திரி/175-234686 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் வேட்பாளராக நிறுத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் …

    • 0 replies
    • 740 views
  14. கட்சிக் கோட்பாடுகளையும், சற்று தள்ளிவைத்துவிட்டு தமிழினத்தின் கட்சிகள், தமிழினத்தின் தேவைகளையும், தேசியப் பிரச்சனைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வோடு, தமிழினத்தின் கட்சிகள் ஒன்று சேர இருக்கிறோம் என விஷேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஷ.ணன் தெரிவித்தார். அத்துடன் இந்த நாட்டில் வாழும் தமிழினத்தின் பிரச்சினைகள் தீர்வின்றி கிடப்பில் கிடக்கின்றன. அவைகளின் தீர்வுகளுக்கு நிதானத்தோடு கூடிய வேகம் அவசியம். அதற்காகவே தமிழினத்தின் கட்சிகள் தேசியப் பிரச்சனைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வோடு ஒன்று சேர இருக்கிறோம். அது காலத்தின் தேவை. அதற்கான இறுதிவடிவம் இன்னும் ஓரிரு வாரங்களில் கிடைத்துவிடும் எனவும் தெரிவித்தார். சமகால நிகழ்வுகள் தொடர்பில் அம…

    • 2 replies
    • 979 views
  15. கோத்தாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் புதிய சித்திரவதை குற்றச்சாட்டுகள் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக, அமெரிக்காவின் கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் புதிய சித்திரவதை குற்றச்சாட்டுகளுடன், நேற்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினர், தமது அரசியல் எதிரிகளை சித்திரவதை மற்றும், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுத்தினர் என்று, மூன்று பெண்கள் உள்ளிட்ட 10 பேர் நேற்று வழக்குத் தாக்கல் செய்தனர். இவர்களில் ஆறு பேர் தாங்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பாலியல் தாக்குதல்களுக்கு உள்…

    • 2 replies
    • 659 views
  16. புதையல்தோண்ட முற்பட்ட ஒரு பெண் உட்பட 14 பேர் கைது புதையல்தோண்ட முற்பட்ட ஒரு பெண் உட்பட பதினான்கு பேரை புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து புதையல் தேடும் கருவி மற்றும் கெமரா உள்ளிட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் இன்று(27) அதிகாலை புதையல் தோண்ட முற்பட்ட ஒரு பெண் உட்பட பதினான்கு பேரை புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து புதையல் தேடும் கருவி மற்றும் கெமரா உள்ளிட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சிவநகர் பகுதியில் இன்று அதிகாலை (27) புதையல் தோண்டும் முயற்சியில் ஒரு குழுவினர் ஈடுபட்ட…

    • 1 reply
    • 734 views
  17. தூக்கில் போட்டால் ஒத்துழைப்பது கடினம் – பிரித்தானியா எச்சரிக்கை சிறிலங்காவில் மரணதண்டனை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டால், தீவிரவாத முறியடிப்பு உள்ளிட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரங்களில் சிறிலங்காவுடனான ஒத்துழைப்பை கடினமாக்கும் என்று, பிரித்தானியா எச்சரித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். “மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால், காவல்துறை, பாதுகாப்பு மற்றும் பிற பாதுகாப்பு விவகாரங்களுடன் தொடர்புடைய தொழில்நுட்ப உதவித் திட்டங்களை பிரித்தானியா மறுபரிசீலனை செய்யும். மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தனது நீண்டகால தடையை சிறிலங்கா கைவிட விரும்புகிறது என்ற தகவல்கள் குறித்த…

    • 0 replies
    • 540 views
  18. தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழப்பு! கடந்த 14 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொழும்பு பொரளை, வனாத்துவில்லு சிறிசரஉயன வீட்டுத் தொகுதியை சேர்ந்த முத்தையா சகாதேவன் (62) என்ற தமிழ் அரசியல் கைதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கடந்த 2005ம் ஆண்டு குறித்த தமிழ் அரசியல் கைது செய்யப்பட்டிருந்தார். கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் இரண்டு வாரங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்தநிலையிலேயே அவர் சிகிச்சை பலனி…

  19. கன்­னி­யாவில் பௌத்த போதி அமைக்க நான்கு ஏக்கர் நிலம் கோரி­யுள்ள விகா­ரா­தி­பதியால் சலசலப்பு..! கன்­னி­யாவில் பௌத்த போதி அமைத்து மீண்டும் அந்தப் பகு­தியை கைய­கப்­ப­டுத்த கன்­னியா விகா­ரா­தி­பதி மீண்டும் முயற்சி எடுத்­துள்­ள­தாக குற்றம் சாட்­டப்­ப­டு­கி­றது. இதற்­கு­ரிய ஏற்­பா­டாக காணியை அள­வீடு செய்யும் நட­வ­டிக்கை இன்று கன்­னி­யாவில் இடம்­பெ­ற­வுள்­ள­தா­கவும் இது தொடர்­பாக கன்­னியா தென்­க­யிலை ஆதீனம், தமிழர் சமூகம், ராவண சேனை, கன்­னியா ஆலய நிர்­வாகம் மற்றும் கிராம அபி­வி­ருத்தி சங்­கங்கள் தமது கடு­மை­யான எதிர்ப்பை தெரி­வித்­துள்­ளன. வர­லாற்றுப் புகழ்­கொண்ட கன்­னியா வெந்­நீ­ரூற்று பிள்­ளையார் ஆல­யத்தை அண்­டிய பகு­தியில் புத்­த­போதி ஒன்றை அமைப்­ப­தற்கு நான்கு ஏக்…

  20. மட்டக்களப்பில் கடும் வரட்சி முற்றாக வற்றிய குளங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வெயிலுடன் கூடிய வெப்பமான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் படுவான்கரைப் பகுதியிலுள்ள சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளன. அப்பகுதியில் அமைந்துள்ள கோவில் போரதீவுக்குளம், பெரியபோரதீவு பெரியகுளம், வெல்லாவெளிகுளம், பழுகாமத்தில் அமைந்துள்ள குளங்கள் கொக்கட்டிச்சோலைப் பகுதியில் அமைந்துள்ள குளங்கள் அனைத்தும் முற்றாக வற்றியுள்ளன. அத்துடன், குடிநீருக்கு பயன்படும் கிணறுகளும் வற்றிப்போட்டுள்ளதால் போரதீவுப்பற்றுப் பிரதேச சபையினால் பொதுமக்களுக்கு வவுச்சர்கள் மூலம் குடி நீர் வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட பெறுகாமம் எனும் இடத்தில் அமை…

  21. யாழ் பல்கலை மாணவர்கள் சுட்டு கொலை விவகாரம் : மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது தண்டனை சட்டக் கோவை நடைமுறை 296ஆம் பிரிவின் கீழான குற்றஞ்சாட்டில் நீதிமன்றம் திருப்தி கொள்ளும் வகையில் சான்றாதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் கட்டளை வழங்கினார். அதனால் சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வகையில் வழக்கை சட்ட மா அதிபருக்கு பாரப்படுத்துமாறு உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று, சந்தேகநபர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட பிணையில் தொடர்ந்து…

  22. ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அம்பாந்தோட்டை பயிற்சி முகாமில் பயிற்சிபெற்ற ஒருவர் கைது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் அம்பாந்தோட்டை பயிற்சி முகாமில் பயிற்சிபெற்ற ஒருவரை காத்தான்குடியில் வைத்து கடந்த 24 ம் திகதி கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மட்டக்களப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடந்த 24 ம் திகதி காத்தான்குடி பிரதேசத்தில் குறித்த நபரின் வீட்டை சுற்றிவளைத்த பொலிசார் 36 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்தனர் இதில் கைது செய்யப்பட்டவரை பயிற்சி பெற்ற அம்பாந்தோட்டை முகாமிற்கு கொண்டு சென்று அங்கு வைத்து பயிற்சி பற்றிய ஒத்திகையிலான விசாரணைகளை மேற்கொண்டு பின்னர் அவரை 3 மாதகால பயங்கரவாத தடைச் சட்டத்தில் தடுத்துவைக்கப்பட்ட…

  23. முச்சக்கரவண்டியில் வந்த இருவர் பாதையால் நடந்து சென்று கொண்டிருந்த முஸ்லிம் பெண் ஒருவடைய முந்தானையை பறித்து, அவரது கழுத்தில் கட்டி வீதியில் இழுத்துச் சென்ற சம்பவம் ஒன்று மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் நடந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் மினுவாங்கொடை கல்லொழுவை கிழக்கு கிராமசேவகர் முஸ்லிம் பிரிவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கொழும்பு அப்பல்வத்தையில் வசிக்கும் ஒரு முஸ்லிம் பெண்மணி, கல்லொழுவையில் வசிக்கும் அவரது மகள் வீட்டிற்கு வந்திருந்தார். கடந்த திங்கட்கிழமை காலை 5 மணியளவில் மீண்டும் கொழும்பு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மினுவாங்கொட கொழும்பு வீதி திசையில் இருந்து திரும்பி கல்லொழுவ சந்தியால் வந்த ஒரு முச்சக்கரவண்டி, அந்த பெண்ணின்…

  24. யுத்தக் குற்றச்சாட்டு – கோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் மீண்டும் வழக்குத் தாக்கல் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சித்திரவதை குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மூன்று பெண்கள் உள்ளிட்ட 10 பேர் அமெரிக்காவின் கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான இலங்கை படையினர் மற்றும் பொலிஸார், தமது அரசியல் எதிரிகளை சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறியே அவர்கள் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் ஆறு பேர் தாங்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்…

    • 1 reply
    • 338 views
  25. ரயில் ஊழியர்கள், பணிப் பகிஷ்கரிப்பு. வாரந்தோரும் ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டுள்ள ரயில்வே தொழிற்சங்கம் அதனை இன்று முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. பல்வேறுப்பட்ட கோரிக்கைளை முன்வைத்து கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனையடுத்து கடந்த 23ஆம் திகதி தற்காலிகமாக ரயில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டிருந்தது. எனினும் தங்களது கோரிக்கைக்கான உரிய தீர்வு கிடைக்கும் வரையில் ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் நள்ளிரவு 12 மணி முதல் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.