Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மலையகத்தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட கட்டாய கருத்தடை திட்டம் தொடர்பில் தீர்க்கமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பது தொடர்பான பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதேவேளை, இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், மலையகத்தில் புதிதாக இராணுவ முகாம்களை நிறுவும் முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/2…

    • 0 replies
    • 579 views
  2. மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க பிரித்தானியா மறுப்பு! இலங்கையில் மீண்டும் மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால், பயங்கரவாத முறியடிப்பு உள்ளிட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரங்களில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவது கடினமென பிரித்தானியா எச்சரித்துள்ளது. போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (புதன்கிழமை) ஒப்புதல் வழங்கியிருந்தார். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே பிரித்தானியாவின் வெளிவிவகாரப் பணியக பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால், பொலிஸ், பாதுகாப்பு மற்றும் பிற…

  3. June 27, 2019 மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பாகவும், திரு விழாவுக்கான பாதுகாப்பு தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை (27) காலை 11 மணியளவில் மடு திருத்தலத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் இடம் பெற்றது. இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை,கிறிஸ்தவ கலாச்சார அலுவல்கள் பணிப்பாளர் சத்தூரி பின்ஜோ, மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் , குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உற்பட அழைக்கப்பட்ட திணைக்களங்களின் …

  4. June 27, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn தாம் எந்தவிதமான குற்றங்களுடனும் தொடர்பில்லை என்றால், மைத்திரி, ரணில், மகிந்த ராஜபக்ச ஏன் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கு அச்சப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்…

  5. June 27, 2019 அரசாங்க உத்தியோகத்தர்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிரூபம் ஒன்று பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு பல்வேறு தரப்பினாலும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டதனால் குறித்த சுற்றறிக்கையை திருத்தம் செய்ய கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அரச அலுவலகங்களில் சேலைஅல்லது ஒசரி மாத்திரம் அணிந்து கொண்டு பணிக்கு வருமாறு முன்னர் வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமையே எ திர்ப்…

  6. பயங்கரவாத தக்குதலால் தீர்வு முயற்சிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறுவது மக்களை முட்டாள்கள் என நினைத்து வெளிப்படுத்திய கருத்தாகும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார் வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச ஆயுதப் போராட்டத்தை முறியடித்துவிட்டதாக வெற்றிக்களிப்பில் திளைத்து தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை இனி நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்ற நிலைக்கு வந்திருந்தார். அது மட்டுமன்றி சர்வாதிகார குடும்ப ஆட்சி காரணமாக சிங்கள மக்கள் மத்தியிலும் ராஜபக்ச அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தது. சர்வதேசத்திற்கும் மகிந்த தா…

    • 0 replies
    • 266 views
  7. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது, தமது கட்சியிலிருந்து வேட்பாளரொருவரைக் களமிறக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, மீண்டும் வேட்பாளராகக் களமிறங்குவாரென, வீரகுமார திசாநாயக்க எம்.பி தெரிவித்துள்ளார். நேற்று (26) இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போதே, இது குறித்து ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டதென, அவர் கூறினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/மீண்டும்-ஜனாதிபதி-வேட்பாளராகக்-களமிறங்குகிறார்-மைத்திரி/175-234686 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் வேட்பாளராக நிறுத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் …

    • 0 replies
    • 741 views
  8. கட்சிக் கோட்பாடுகளையும், சற்று தள்ளிவைத்துவிட்டு தமிழினத்தின் கட்சிகள், தமிழினத்தின் தேவைகளையும், தேசியப் பிரச்சனைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வோடு, தமிழினத்தின் கட்சிகள் ஒன்று சேர இருக்கிறோம் என விஷேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஷ.ணன் தெரிவித்தார். அத்துடன் இந்த நாட்டில் வாழும் தமிழினத்தின் பிரச்சினைகள் தீர்வின்றி கிடப்பில் கிடக்கின்றன. அவைகளின் தீர்வுகளுக்கு நிதானத்தோடு கூடிய வேகம் அவசியம். அதற்காகவே தமிழினத்தின் கட்சிகள் தேசியப் பிரச்சனைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வோடு ஒன்று சேர இருக்கிறோம். அது காலத்தின் தேவை. அதற்கான இறுதிவடிவம் இன்னும் ஓரிரு வாரங்களில் கிடைத்துவிடும் எனவும் தெரிவித்தார். சமகால நிகழ்வுகள் தொடர்பில் அம…

    • 2 replies
    • 980 views
  9. கோத்தாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் புதிய சித்திரவதை குற்றச்சாட்டுகள் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக, அமெரிக்காவின் கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் புதிய சித்திரவதை குற்றச்சாட்டுகளுடன், நேற்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினர், தமது அரசியல் எதிரிகளை சித்திரவதை மற்றும், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுத்தினர் என்று, மூன்று பெண்கள் உள்ளிட்ட 10 பேர் நேற்று வழக்குத் தாக்கல் செய்தனர். இவர்களில் ஆறு பேர் தாங்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பாலியல் தாக்குதல்களுக்கு உள்…

    • 2 replies
    • 660 views
  10. புதையல்தோண்ட முற்பட்ட ஒரு பெண் உட்பட 14 பேர் கைது புதையல்தோண்ட முற்பட்ட ஒரு பெண் உட்பட பதினான்கு பேரை புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து புதையல் தேடும் கருவி மற்றும் கெமரா உள்ளிட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் இன்று(27) அதிகாலை புதையல் தோண்ட முற்பட்ட ஒரு பெண் உட்பட பதினான்கு பேரை புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து புதையல் தேடும் கருவி மற்றும் கெமரா உள்ளிட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சிவநகர் பகுதியில் இன்று அதிகாலை (27) புதையல் தோண்டும் முயற்சியில் ஒரு குழுவினர் ஈடுபட்ட…

    • 1 reply
    • 735 views
  11. தூக்கில் போட்டால் ஒத்துழைப்பது கடினம் – பிரித்தானியா எச்சரிக்கை சிறிலங்காவில் மரணதண்டனை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டால், தீவிரவாத முறியடிப்பு உள்ளிட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரங்களில் சிறிலங்காவுடனான ஒத்துழைப்பை கடினமாக்கும் என்று, பிரித்தானியா எச்சரித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். “மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால், காவல்துறை, பாதுகாப்பு மற்றும் பிற பாதுகாப்பு விவகாரங்களுடன் தொடர்புடைய தொழில்நுட்ப உதவித் திட்டங்களை பிரித்தானியா மறுபரிசீலனை செய்யும். மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தனது நீண்டகால தடையை சிறிலங்கா கைவிட விரும்புகிறது என்ற தகவல்கள் குறித்த…

    • 0 replies
    • 541 views
  12. தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழப்பு! கடந்த 14 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொழும்பு பொரளை, வனாத்துவில்லு சிறிசரஉயன வீட்டுத் தொகுதியை சேர்ந்த முத்தையா சகாதேவன் (62) என்ற தமிழ் அரசியல் கைதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கடந்த 2005ம் ஆண்டு குறித்த தமிழ் அரசியல் கைது செய்யப்பட்டிருந்தார். கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் இரண்டு வாரங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்தநிலையிலேயே அவர் சிகிச்சை பலனி…

  13. கன்­னி­யாவில் பௌத்த போதி அமைக்க நான்கு ஏக்கர் நிலம் கோரி­யுள்ள விகா­ரா­தி­பதியால் சலசலப்பு..! கன்­னி­யாவில் பௌத்த போதி அமைத்து மீண்டும் அந்தப் பகு­தியை கைய­கப்­ப­டுத்த கன்­னியா விகா­ரா­தி­பதி மீண்டும் முயற்சி எடுத்­துள்­ள­தாக குற்றம் சாட்­டப்­ப­டு­கி­றது. இதற்­கு­ரிய ஏற்­பா­டாக காணியை அள­வீடு செய்யும் நட­வ­டிக்கை இன்று கன்­னி­யாவில் இடம்­பெ­ற­வுள்­ள­தா­கவும் இது தொடர்­பாக கன்­னியா தென்­க­யிலை ஆதீனம், தமிழர் சமூகம், ராவண சேனை, கன்­னியா ஆலய நிர்­வாகம் மற்றும் கிராம அபி­வி­ருத்தி சங்­கங்கள் தமது கடு­மை­யான எதிர்ப்பை தெரி­வித்­துள்­ளன. வர­லாற்றுப் புகழ்­கொண்ட கன்­னியா வெந்­நீ­ரூற்று பிள்­ளையார் ஆல­யத்தை அண்­டிய பகு­தியில் புத்­த­போதி ஒன்றை அமைப்­ப­தற்கு நான்கு ஏக்…

  14. மட்டக்களப்பில் கடும் வரட்சி முற்றாக வற்றிய குளங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வெயிலுடன் கூடிய வெப்பமான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் படுவான்கரைப் பகுதியிலுள்ள சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளன. அப்பகுதியில் அமைந்துள்ள கோவில் போரதீவுக்குளம், பெரியபோரதீவு பெரியகுளம், வெல்லாவெளிகுளம், பழுகாமத்தில் அமைந்துள்ள குளங்கள் கொக்கட்டிச்சோலைப் பகுதியில் அமைந்துள்ள குளங்கள் அனைத்தும் முற்றாக வற்றியுள்ளன. அத்துடன், குடிநீருக்கு பயன்படும் கிணறுகளும் வற்றிப்போட்டுள்ளதால் போரதீவுப்பற்றுப் பிரதேச சபையினால் பொதுமக்களுக்கு வவுச்சர்கள் மூலம் குடி நீர் வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட பெறுகாமம் எனும் இடத்தில் அமை…

  15. யாழ் பல்கலை மாணவர்கள் சுட்டு கொலை விவகாரம் : மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது தண்டனை சட்டக் கோவை நடைமுறை 296ஆம் பிரிவின் கீழான குற்றஞ்சாட்டில் நீதிமன்றம் திருப்தி கொள்ளும் வகையில் சான்றாதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் கட்டளை வழங்கினார். அதனால் சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வகையில் வழக்கை சட்ட மா அதிபருக்கு பாரப்படுத்துமாறு உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று, சந்தேகநபர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட பிணையில் தொடர்ந்து…

  16. ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அம்பாந்தோட்டை பயிற்சி முகாமில் பயிற்சிபெற்ற ஒருவர் கைது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் அம்பாந்தோட்டை பயிற்சி முகாமில் பயிற்சிபெற்ற ஒருவரை காத்தான்குடியில் வைத்து கடந்த 24 ம் திகதி கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மட்டக்களப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடந்த 24 ம் திகதி காத்தான்குடி பிரதேசத்தில் குறித்த நபரின் வீட்டை சுற்றிவளைத்த பொலிசார் 36 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்தனர் இதில் கைது செய்யப்பட்டவரை பயிற்சி பெற்ற அம்பாந்தோட்டை முகாமிற்கு கொண்டு சென்று அங்கு வைத்து பயிற்சி பற்றிய ஒத்திகையிலான விசாரணைகளை மேற்கொண்டு பின்னர் அவரை 3 மாதகால பயங்கரவாத தடைச் சட்டத்தில் தடுத்துவைக்கப்பட்ட…

  17. முச்சக்கரவண்டியில் வந்த இருவர் பாதையால் நடந்து சென்று கொண்டிருந்த முஸ்லிம் பெண் ஒருவடைய முந்தானையை பறித்து, அவரது கழுத்தில் கட்டி வீதியில் இழுத்துச் சென்ற சம்பவம் ஒன்று மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் நடந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் மினுவாங்கொடை கல்லொழுவை கிழக்கு கிராமசேவகர் முஸ்லிம் பிரிவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கொழும்பு அப்பல்வத்தையில் வசிக்கும் ஒரு முஸ்லிம் பெண்மணி, கல்லொழுவையில் வசிக்கும் அவரது மகள் வீட்டிற்கு வந்திருந்தார். கடந்த திங்கட்கிழமை காலை 5 மணியளவில் மீண்டும் கொழும்பு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மினுவாங்கொட கொழும்பு வீதி திசையில் இருந்து திரும்பி கல்லொழுவ சந்தியால் வந்த ஒரு முச்சக்கரவண்டி, அந்த பெண்ணின்…

  18. யுத்தக் குற்றச்சாட்டு – கோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் மீண்டும் வழக்குத் தாக்கல் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சித்திரவதை குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மூன்று பெண்கள் உள்ளிட்ட 10 பேர் அமெரிக்காவின் கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான இலங்கை படையினர் மற்றும் பொலிஸார், தமது அரசியல் எதிரிகளை சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறியே அவர்கள் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் ஆறு பேர் தாங்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்…

    • 1 reply
    • 339 views
  19. ரயில் ஊழியர்கள், பணிப் பகிஷ்கரிப்பு. வாரந்தோரும் ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டுள்ள ரயில்வே தொழிற்சங்கம் அதனை இன்று முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. பல்வேறுப்பட்ட கோரிக்கைளை முன்வைத்து கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனையடுத்து கடந்த 23ஆம் திகதி தற்காலிகமாக ரயில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டிருந்தது. எனினும் தங்களது கோரிக்கைக்கான உரிய தீர்வு கிடைக்கும் வரையில் ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் நள்ளிரவு 12 மணி முதல் …

  20. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு எனக்கு அழைப்பு விடுத்தால் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளமாட்டேன். அது அலரி மாளிகையில் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் மேடையேற்றப்படும் நாடகம் என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. அவசரகால சட்டம் இந்த முறை மட்டுமே நீட்டிக்கப்படும். அடுத்த தடவை அது நீடிக்கப்படமாட்டா து என்று தெரிவித்த ஜனாதிபதி, அண்மைய தற்கொலை தாக்குதல்கள் குறித்தான விசாரணை திருப்தியாக உள்ளது. பிரதான சந்தேகநபர்கள் இறந்துவிட்டனர். ஏனையோர் கைது செய்யப்பட்டுவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்ட தகவல்களை தெரிவித்துள்ளார். http://thinakkural.lk/article/30595 Pr…

    • 0 replies
    • 278 views
  21. எங்களுக்காக எந்த அரசியல் பிரதிநிதிகளும் உண்ணாவிரதம் இருக்கவுமில்லை போராட்டத்தில் தொடர்ந்து அக்கறையுடன் கலந்துகொள்ளவுமில்லை என முல்லைத்தீவில் போராட்டம் நடத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இன்றுடன் (27) 842 ஆவது நாளாக தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.இந்நிலையில் நேற்றையதினம் (26.06.19 ) முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்கள் . இதன்போது முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி கருத்து தெரிவிக்கையில் , இன்னும் சில நாட்களில் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு நடைபெற்றவிர…

    • 0 replies
    • 485 views
  22. வடக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்ற ஜனவரி ஏழாம் திகதி முதல் நான் குடியை விட்டுவிட்டேன். என வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற தேசிய போதை தடுப்பு வாரத்தின் வட மாகாண நிகழ்வில் கலந்துகொண்ட விழிப்புணர்வு வாகன பேரணியின் இறுதியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் முன்னர் நான் விருந்துபசாரங்களில் கலந்துகொண்டால் மட்டும் மது அருந்துவதுண்டு. அது எனது நண்பர்களுக்கு தெரியும் ஆனால் எப்பொழுது ஆளுநராக பொறுப்பேற்றேனோ அன்றிலிருந்து எந்தவொரு குடியையும் தனிப்பட்ட ரீதியாகவோ, பிரத்தியேகமாகவோ கையில் எடுத்தது கிடையாது. இதுவொர…

    • 2 replies
    • 815 views
  23. சீனாவுடனான வர்த்தகப் போர் நிலவிவருகின்றமையால், இலங்கையில் இராணுவ முகாமொன்றை அமைக்கவே அமெரிக்கா தற்போது தீவிரம் காட்டி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்தார். மேலும், இதனை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “இலங்கை என்பது விசேடமான ஒரு நாடாகும். பல விடயங்களில் இலங்கை தனித்துவமாக திகழ்ந்து வருகிறது. எமது நாட்டைப் பொறுத்தவரை கடல்வளம் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்காகவே, வரலாற்றுக் காலம் முதல் திருகோணமலை துறைமுகம் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. …

  24. கல்முனையில் தனியாக தமிழ்ப் பிரதேச செயலகம் உருவாகுவதால் முஸ்லிம் சமூகத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனாலும் அவர்கள் அதற்குத் தடையை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களது செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கோ அல்லது முஸ்லிம் மக்களுக்கோ நல்லதல்ல. உண்மையில் தமிழ் முஸ்லிம் மக்களிடைய பரஸ்பர புரிந்துணர்வு வேண்டும். அந்தப் புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை நாங்கள் மாத்திரம் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்க முடியாது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன். யாழ்.சுன்னாகம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரி…

  25. முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தி அஸ்கிரிய மக நாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் அண்மையில் வெளியிட்டதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் இரு முறைப்பாடுகள் பொலிஸ் தலைமையகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அஸ்கிரிய மக நாயக்க தேரரின் கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியே இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந் நிலையில் அவ்விரு முறைப்பாடுகளும் பொலிஸ் தலைமையகத்தால் பொலிஸ் சட்டப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/59160

    • 0 replies
    • 440 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.