Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (எம்.ஆர்.எம்.வஸீம்) எமது ராஜினாமா தொடர்பாக மகாநாயக்க தேரர்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சந்தித்து தெளிவுபடுத்துவோம் என முன்னாள் அமைச்சர் எச்.எம்.ஏ, ஹலீம் சபையில் தெரிவித்தார். நாம் எமது மக்களுக்காகவே அமைச்சுப்பதவிகளை துறந்தோமே தவிர ரிஷாத் பதியுதீனுக்காக பதவி துறக்கவில்லை. பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் சில ஊடகங்கள் மேற்கொண்ட பொய் பிரசாரம் காரணமாக முஸ்லிம் மக்கள் மீது பல்வேறு நெருக்குவாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. முஸ்லிம் மக்களை சந்தேக கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தன. அதனால் எமக்கெதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட்டுக்கொள்ளவே நாங்கள் இந்த தீர்…

  2. காவற்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை குறித்து தாக்கல் செய்த வழக்கிற்காகவே அவர் உயர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியினால் தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை தனக்கு இழைக்கப்பட்ட அநீதி எனவும், தான் நிரபராதி எனவும் விடுமுறையை ரத்துச் செய்து தனது பணியை தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். #பூஜிதஜெயசுந்தர #காவற்துறைமாஅதிபர் http://globaltamilnews.net/2019/123687/

  3. June 7, 2019 கிளிநொச்சி பூநகரி ஜெயபுரம் வடக்கு பகுதியில் வனவளத்திணைக்களம் ஆக்கிரமித்துள்ள விவசாயிகளின் வயல்காணிகளை அந்த மக்களுக்கே உரித்துடையது என்றும் அதனை அவர்களுக்கு வழங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற உள்ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்;சின் பாராளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 1983ம் ஆண்டு காலப்;பகுதியில் நாட்டில் நிலவிய அச…

  4. தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கைகோர்த்து இணைந்த வடக்கு கிழக்கில் தம்மைத் தாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கிக் கொள்வதற்காகப் பாடுபடவேண்டியதன் அவசியத்தையும் நடைபெற்றுவரும் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தி யுள்ளார். நாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைக் குழிதோண்டி புதைக்கும் பேராபத்தான ஒரு நிலைமையை புத்த பிக்குமாரின் செல்வாக்கு தோற்றுவித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரரின் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை அடுத்து மேல் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களும் முஸ்லிம் அமைச்சர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில் நேற்று செய்வா…

    • 3 replies
    • 995 views
  5. தமிழர்களை பலியெடுத்த சிங்­கள பேரி­ன­வா­தம் முஸ்லிம் மக்­கள் மீது திரும்­பியுள்ளது -விக்னேஸ்வரன் சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தின் பசிக்கு சகோ­தர முஸ்லிம் மக்கள் இரை­யா­கி­வரும் இந்த தரு­ணத்தில் தமிழ் மக்கள் அவர்களை ஆத­ர­வு­டனும் பாசத்­து­டனும் ஆரத்­த­ழு­வு­வ­தா­கவும் அவர்­களின் துய­ரத்தில் பங்­கு­கொள்­வ­தா­கவும் வட மாகாண முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் நாய­க­மு­மான நீதி­ய­ரசர் விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். தமிழ் மக்­களைப் பல தசாப்­தங்­க­ளாக பலி­கொண்­டு­வரும் சிங்­கள பேரி­ன­வா­தத்தின் பார்வை தற்­போது முஸ்லிம் மக்­களின் மீது திரும்­பி­யி­ருக்கும் இந்த வேளையில் தமிழ் மக்­களும் முஸ்லிம் மக்­களும் கைகோர்த்து, இணைந்த வடக்கு கிழக்…

    • 3 replies
    • 519 views
  6. வடக்கில் உள்ள இராணுவ சோதனை சாவடிகளின் எண்ணிக்கைகளை குறைக்கவுள்ளதாக யாழ்.மாவட்ட கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யாழிலிருந்து, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, செல்லும்போதும், வரும்போது தெற்கில் இல்லாத அளவுக்கு, பெரும் எண்ணிக்கையில் அடிக்கடி, ஏற்றி இறக்கும் சோதனை கெடுபிடிகள் இருப்பதாக எனக்கு தகவல்கள் கிடைத்தது". இதனையடுத்து, யாழ்.மாவட்ட கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சியுடன் நேற்று தொலைபேசியில் கதைத்திருந்தேன். வடக்கில் இருந்து வந்த புகார்களை சொன்னேன். தமிழ் மக்களை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கெடுபிடிக்கு உள்ளா…

  7. முஸ்லிம் தலைமைகளைப்போல தமிழ் தலைமைகளும் செயற்படுவார்களா? – தவராசா கேள்வி இனத்தின் நலனை முன்னிலைப்படுத்தி முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து எடுத்த முடிவைப்போன்று தமிழ் தலைமைகளும் செயற்படுவார்களா என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வியெழுப்பியுள்ளார். நாட்டில் இடம்பெற்ற அசாதாரண நிலைமைகளைத் தொடர்ந்து முஸ்லிம் தலைமைகள் 9 பேர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இனத்தின் நலனை முன்னிலைப்படுத்தி முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து எடுத்…

    • 6 replies
    • 1k views
  8. “தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியான அச்சுறுத்தலை - ஆபத்தை நாடு சந்திக்கவில்லை. தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தமை நாம்விட்ட பெரும் தவறாகும். இதை இப்போதே நாம் உணருகின்றோம்.” இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “இன்று எங்களை இனவாதிகள் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், நாம் அப்படியானவர்கள் அல்லர். இந்த நாட்டை மீட்டெடுக்கவே களத்தில் இறங்கியுள்ளோம். இஸ்லாமிய பயங்கரவாதிகளிடமிருந்து விரைவில் நாட்டை மீட்டெடுப்போம். இது சிங்கள பௌத்த நாடு என்பதை அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும். ஆனால், இங்கு சிங்களவர், தம…

    • 2 replies
    • 836 views
  9. தமிழ் -முஸ்லிம் மக்கள் பலமான சக்தியாக ஒன்றிணைய வேண்டும்: கஜேந்திரகுமார் Jun 07, 20190 தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் தங்களை தாங்களே சுய விமர்சனத்திற்குள்ளாக்குவதன் ஊடாக ஒரு பலமான சக்தியாக உருவாக முடியுமென்றும் சிங்கள பௌத்த தேசியவாதமே இரு தரப்புக் கும் பொதுவான எதிரி எனவும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் பேசுகையில், 2009ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான போர் நிறைவடைந்த பின்னர் பொருளாதார மட்டத்தில் பலமாக வளர்ந்த முஸ்லிம் மக்கள் மீது …

    • 5 replies
    • 616 views
  10. சஹ்ரானின் சகாக்களது சடலங்கள் தோண்டப்படும் Editorial / 2019 ஜூன் 06 வியாழக்கிழமை, பி.ப. 07:01 Comments - 0 -கனகராசா சரவணன், வசந்த சந்திரபால சாய்ந்தமருதில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளதும் அவர்களது குடும்ப உறுப்பினர்களது சடலங்கள், மரபணு பரிசோதனைகளுக்காக, நாளைய தினம் (07) தோண்டி எடுக்கப்படவுள்ளதாக, தெரிவிக்கப்படுகிற்து. அம்பாறை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமையவே, இந்தச் சடலங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதியன்று, கல்முனை - சாய்ந்தமருது சுனாமி கிராமத்திலுள்ள வீடொன்றில், பாதுகாப்புத் தரப்பினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு இடம்பெற்றத…

  11. முஸ்லிம் எம்.பி.க்களின் இரா­ஜி­னாமா கடிதம் தொடர்பில் சபையில் சர்ச்சை (ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வஸீம்) முஸ்லிம் அமைச்­சர்­களின் இரா­ஜி­னாமா கடிதம் தொடர்பில் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஆளுங்­கட்­சி­யி­ன­ருக்­கு­மி­டையே கடும் வாதப்­பி­ர­தி­வாதங்கள் இடம்­பெற்­றன. பாரா­ளு­மன்றம் நேற்று வியா­ழக்­கி­ழமை சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் கூடி­யது. பிர­தான நிகழ்­வுகள் நிறை­வ­டைந்த பின்னர். முஸ்லிம் அமைச்­சர்­களின் இராஜி­னாமா கடிதம் குறித்து ஊட­கங்­களில் வெளிப்­பட்­டி­ருக்கும் செய்­தி­தொ­டர்­பிலும் மகா­சங்­கத்­தினர் விடுத்­தி­ருக்கும் கோரிக்கை தொடர்­பா­கவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விசேட…

  12. ஜனா­தி­பதி தேர்தல் திக­தியை ஆணைக்­கு­ழுவே தீர்­மா­னிக்கும் - ரட்­ண­ஜீவன் ஹூல் (நமது நிருபர்) தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்­கான அதி­கா­ரத்தை ஜனா­தி­பதி பறிக்­கும்­போது நாங்கள் அமை­தி­யாக இருக்க முடி­யாது. அத­னால்தான் ஜனா­தி­பதி தேர்­தலை வேறு திக­தியில் வைத்­தாலும் சரி, டிசம்பர் 7 ஆம் திகதி நடத்­தக்­கூ­டாது என்று தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விடம் கூறி­யி­ருக்­கிறேன் என ஆணைக்­கு­ழுவின் உறுப்­பினர் பேரா­சி­ரியர் ரட்­ண­ஜீவன் ஹூல் தெரி­வித்­துள்ளார். யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற நிகழ்வு ஒன்றில் பிர­தம விருந்­தி­ன­ராகக் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் தெரி­விக்­கையில், நாட்டில் தற்­பொ­ழுது ஜன­நா­யகம் சரி­…

  13. முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடக்கும் வன்முறைகள் தொடர்ந்தும் அதிகரித்தால், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு எச்சரித்துள்ளது. சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு என்பது உலகில் பலமிக்க முஸ்லிம் நாடுகளை கொண்ட, முழு உலகத்திற்கும் அழுத்தம் கொடுக்கக் கூடிய சர்வதேச அமைப்பு என்பதுடன் இந்த அமைப்பில் 57 நாடுகள் அங்கம் வகித்து வருகின்றன. சர்வதேச இஸ்லாமிய அமைப்பின் இந்த ஆண்டுக்கான கூட்டம் சவுதி அரேபியாவில் நடைபெற்றதுடன் அதில் அனைத்து உறுப்பு நாடுகளும் கலந்துக்கொண்டன. பொறுமையானவர்கள், அமைதியான நாட்டவர்கள் என்று இலங்கையர்கள் பெற்றுக்கொண்டுள்ள நற்பெயரை தொடர்ந்தும் பாதுகாத்துக்கொள்வார்கள் என எதிர்பார்ப்…

  14. மன்னாரில் வாகன விபத்து ; ஒருவர் பலி, ஒருவர் படுகாயம் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி புதுக்குடியிறுப்பு சந்தியில் இன்று (6) மாலை இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் பேசாலை முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த இன்றைய தினம் வியாழக்கிழமை(6) தனது பிறந்த நாளைக் கொண்டாடிய எ.அசோக்குமார் (வயது-25) என்ற இளைஞரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வருகின்றது. மன்னாரிலிருந்து தலைமன்னார் வீதியூடாக குறித்த இளைஞரும், பிறிதொரு நபரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, குறித்த வீதியூடாக மன்னார் நோக்க பயணித்த பட்டா ரக வாகனத்…

  15. முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதிகளாக காட்ட முற்படுகிறார்கள் ; வியாழேந்திரன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) வடக்கு-கிழக்கு இணைக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என எச்சரித்தவர்களும் தமிழ் மக்களின் காணிகளை பெற்று பள்ளிவாசல்களைக் கட்டினோம் என்று மார் தட்டியவர்களும் எம்மை முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதிகளாக காட்ட முற்படுகிறார்கள் என மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. வியாழேந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இலங்கை மதிப்பீட்டாளர்கள் நிருவாக திருத்த சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஐ.எஸ் .ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு உதவியவர்களை நாம் வெளிக்கொணர…

  16. அரபு மொழிச் சொற்களை அகற்றுவதற்கு பிரேரணை நிறைவேற்றம்! மட்டக்களப்பு மாநகர சபையின் 20ஆவது பொது அமர்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்த அமர்வில், மாநகர எல்லைக்குட்பட்ட பதாதைகளில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்தல் மற்றும் காத்தான்குடி வரவேற்பு வளைவில் உள்ள அரபு மொழிச் சொற்களை அகற்றுதல் தொடர்பான பல்வேறு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த அமர்வு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றதுடன் இதில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர உதவி ஆணையாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது, மாநகரசபை உறுப்பினர் தவராஜாவால் தமிழ்மொழி அமுலாக்கல் தொடர்பான பிரேரணை முன…

  17. கிழக்கு பல்கலைக்கழகத்தில், மருத்துவ பீடத்திற்கான... கட்டிடத்திற்கு அடிக்கல்! கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு, பிள்ளையாரடியில் சகல வசதிகளுடனும் அமைக்கப்படவுள்ள மருத்துவ சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி இராகல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் எம்.பி.கே.மாயாதுன்ன பிரதம அதிதியாக கலந்து அடிக்கல்லை நாட்டிவைத்தார். 700 மில்லியன் ரூபாய் செலவில் மருத்துவபீடம் மற்றும் சௌக்கிய பராமரிப்ப பீடம், நிர்வாக கட்டிடம், மாணவர்கள் தங்குமிடம், விரிவுரையாளர்கள் தங்குமிடம், விளையாட்டு மைதானம் உட்பட அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்த கட்டிட தொகுதி அமை…

  18. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவிகளைத் துறக்க தீர்மானம் ? அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சு பதவிகளை துறக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுப்பதற்கான ஊடக சந்திப்பு இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதிவியிலிருந்து ஜனாதிபதி விலக்க வேண்டும் அல்லது அவர்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும் எனக் கோரியும் அவர்களை குற்றப்புலனாய…

    • 23 replies
    • 2.7k views
  19. கொழும்புக்கு அண்மித்த பகுதியில் பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தினை விசாரித்த குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி நிஷாந்த சில்வாவை இடமாற்றம் செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழுத்தம் கொடுத்ததாக, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் முன்னிலையாகிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் http://globaltamilnews.net/2019/123647/

  20. மங்கள,ராஜித,சதுர ஆகியோருக்கு விகாரைக்குள் செல்லத் தடை – சாடும் மங்கள அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரட்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரட்ன ஆகியோரை, கம்பஹா மாவட்ட விகாரைகளுக்கும் மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கும் அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மகா நாயக்க தேரர்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார்கள் என்று கூறியே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கம்பஹா மாவட்ட பௌத்தசாசன பாதுகாப்புச் சபையின் விகாராதிபதி சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த அரசியல்வாதிகள் மூவரையும் கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள எந்தவொரு விகாரைகளுக்கும் அனுமதிக்க வேண்டாம் என்றும் கம்பஹா மாவட்டத்தில் மதம் சார்ந்த எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அழைக்க வேண்டாம் என்றும் அந…

  21. ஆனந்தசங்கரியை சந்தித்த கனட தூதுவர் இலங்கைக்கான கனட தூதுவர் டேவிட் மக்னொன் இன்று(05) தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு இன்று மாலை 6 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இலங்கைக்கான கனடா நாட்டு தூதுவர் டேவிட் மக்னொன், தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, கட்சியின் செயலாளர் இரா.சங்கையா மற்றும் அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இச் சந்திப்பு தொடர்பில் வீ.ஆனந்தங்கரி கருத்து தெரிவிக்கையில், இன்றைய சந்திப்பில் தமிழ், இஸ்லாமிய சமூகங்களிற்கிடையில் நல்லிணக்கம் காணப்பட வேண்டும் என்பது தொடர்பில் அவர் க…

  22. சிறு­பான்­மை­யி­னரின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது - இரா­ம­லிங்கம் சந்­தி­ர­சேகர் இன­வாதம் மற்றும் மத­வாதம் என்­ப­ன­வற்றை மையப்­ப­டுத்தி தவ­றான நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் சிலரால் சிறு­பான்­மை­யி­னரின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. பெரும்­பான்­மை­யி­னரை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக சிறு­பான்­மை­யி­னரைப் பலிக்­க­டா­வாக்கும் கலா­சாரம் நாட்டின் தேசிய ஒற்­று­மையை சீர்­கு­லைத்­தி­ருக்­கின்­றது என்று ஜே.வி.பி. யின் மத்­திய குழு உறுப்­பி­னரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா­ம­லிங்கம் சந்­தி­ர­சேகர் தெரி­வித்தார். நாட்டின் சம­கால நிலை­மைகள் குறித்து கருத்து வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் க…

  23. தமிழர்களின் தலைநகரான திருகோணமலை குடிப்பரம்பல் ரீதியாக முற்றாக அபகரிக்கப்பட்டுவிட்டது.இப்போது தமிழர்களின் காணிகள் சில அங்கொன்றும் இங்கொன்றுமாக எஞ்சியிருக்கின்றன. அவற்றையும் கபளீகரப்படுத்தும் நோக்குடன் தொல்லியல் மையங்கள் பிரகடனம் செய்யப்படுகின்றன. தனியார்களுக்கு சொந்தமான பாரம்பரிய வளவுகள் கூட விதிவிலக்கல்லாமல் கையகப்படுத்துகின்றன. அதுவும் புத்த விகாரைகளை அமைப்பதற்கென கையகப்படுத்தப்படுகின்றன. ஆனால் இதற்கெதிராகவும் தமிழர்கள் போராடுகின்றனர்.

  24. மஹிந்த அணியுடன் இணைந்தது தொழிலாளர் ஐக்கிய முன்னணி! மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி இணைந்துள்ளது. எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் செயலாளர் சதாசிவம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இரு கட்சிகளும் இணைந்து தனது எதிர்கால அரசியல் பயணத்தை முன்னெடுத்து செல்லவுள்ளதாக அவர் தெரிவித்தார். அத்தோடு எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளராக களமிறங்கவுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்…

  25. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப் பட்டுவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணையை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். நேற்றுக்காலை ஜனாதிபதியைச் சந்தித்த சபாநாயகர் கருஜயசூரயவிடமும் ஜனாதிபதி இந்த உத்ரவை விடுத்தார். தெரிவுக்குழுவின் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாதென ஜனாதிபதி பணித்திருந்த நிலையில் நேற்றையதினமும் அதனை ஒளிபரப்புச்செய்ய தெரிவுக்குழுவினர் முயற்சித்தவேளை அதனை ஜனாதிபதி தடுத்திருந்தார். இந்தநிலையில் நேற்றுக்காலை ஜனாதிபதியைச் சந்தித்த சபாநாயகர் ஒளிபரப்பு விடயம் குறித்து பேச்சு நடத் தினார்.இதன்போது ஒளிபரப்பை மட்டுமல்ல தெரிவுக்குழு விசாரணைணையே உ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.