Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 1 Min Read May 16, 2019 ஒருநாள் சேவை மூலம் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கு வருகைதருவோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாகவே இந்த நிலைமை தோன்றியுள்ளதாக, பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். இதன்படி, ஒருநாள் சேவைக்காக வருகைதருவோரின் எண்ணிக்கை 2,500 வரை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு முன்னர் ஒருநாள் சேவையைப் பெற்றுக்கொள்ள வருவோரின் எண்ணிக்கை 1,200 ஆக காணப்பட்டுள்ளது. அடையாள அட்டையை பெற்றுக்க…

  2. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் மன்னார் பிரதேச மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாச மீன் பிடி உபகரணங்கள் விற்பனை நிலையம் இன்று (16) காலை 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது குறித்த மீன் பிடி உபகரணங்கள் விற்பனை நிலையத்தினை பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இதன் போது மன்னார் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திருமதி சி.எஸ்.அமிர்தநாதன் , ஓய்வு பெற்ற மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஏ.செபமாலை ஆகியோர் கலந்து…

  3. வன்­மு­றையை தூண்டுவோருக்கு எதி­ராக கடும் சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் - ரண­துங்க (நா.தினுஷா) தேசிய பாது­காப்­புக்கு சவால் ஏற்­பட்­டி­ருக்கும் சந்­தர்ப்­பத்தில் இன­வா­தத்தை தூண்டும் வகை­யி­லான செயற்­பா­டு­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு இட­ம­ளிக்­கவும் முடி­யாது. இன்­னு­மொரு கல­வ­ரத்தை நாட்டில் ஏற்­ப­டுத்த இட­ம­ளிக்கப் போவ­தில்லை. ஒரு­வ­ருக்கு ஒருவர் குற்றஞ் சுமத்­து­வதை தவிர்த்து விரைவில் நாட்டின் நிலை­மை­களை சீர்­செய்­வ­தற்­காக ஆளும் மற்றும் எதிர்த்­த­ரப்­பினர் ஒற்­று­மை­யாக செயற்­ப­டு­வது அவ­சியம் என்று போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்­துள்ளார். நாட்டில் வன்­மு­றை­களை தூண்டும் வ…

  4. மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து ஆராய இன்று குழு விஜயம் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற உயர் கல்வி ஆலோசனைக் குழு இன்று அங்கு விஜயம் செய்யவுள்ளது. குழுவின் தலைவர் ஆசுமாரசிங்க எம்.பி.யின் தலைமையில் இக்குழுவினர் மட்டக்களப்புக்கு விஜயம் செய்து இந்தப் பல்கலைக்கழகம் குறித்து ஆராயவுள்ளனர். இந்தக் குழுவானது தனது ஆய்வறிக்கையை உயர் கல்வியமைச்சுக்கும் பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்கவுள்ளதாக அதன் தலைவர் ஆசுமாரசிங்க எம்.பி. தெரிவித்துள்ளார். இந்தப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதியில் முறைகேடு இடம்பெற்றுள்ளதா? பல்கலைக்கழகமானது உயர்கல்வி சட்டதிட்டங்களை மீறியுள்ளதா என்…

  5. யாழ் பல்கலைகழக,கிளிநொச்சி வளாகத்தில் சோதனை நடவடிக்கை யாழ் பல்கலைகழக,கிளிநொச்சி வளாகத்தில் இன்று காலை 8.30 மணிமுதல் இராணுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து சோதனை நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர். எதிர்வரும் 20 ம் திகதிக்கு பின்னர் பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் நடைபெற இருப்பதனால் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டமைக்கு அமைவாகவே இச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகின்றது. குறித்த சோதனை நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி படைத்தலைமையகத்தின் கீழ் நாநூற்று ஐம்பது இராணுவத்தினர் மற்றும் தொண்ணூறு பொலிசார் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது. இச் சோதனை நடவடிக்கைகளை செய்தி அறிக்கையிட சென்ற கிளிநொச்சி பி…

  6. யாழ். மாணவர்களின் விடுதலை – முக்கிய தீர்ப்பு! பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையிலிருந்து மீட்கப்பட்டதாக படையினர் தெரிவித்திருந்தனர். அத்துடன் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலையில் திலீபனின் ஒளிப்படம் ஒட்டப்பட்டிர…

  7. மன்னார் ஓலைத்தொடுவாய் உவரி பகுதியில் உள்ள சுமார் 508 ஏக்கர் காணிகள் கிழக்கு மாகாண ஆளுனர் கிஸ்புள்ளாவுக்கு சொந்தமான SEYLAN Business private limited நிறுவனத்தினூடாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இக் காணிகள் கொள்வனவு தொடர்பாக பெரும் சந்தேகம் இருப்பதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலனாதன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த ஓலைத்தொடுவாய் உவரி காணிப்பகுதிக்கு சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் முஸ்லீம் அரசியல்வாதிகள் பல பொது மக்களின் காணிகளை அடாத்தாகவும் அதே நேரத்தி…

    • 9 replies
    • 1.6k views
  8. மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸார் இருவரின் படுகொலையுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத முன்னாள் போராளியான அஜந்தன் என்ற கதிர்காமதம்பி இராஜகுமாரனை கைதுசெய்து தடுத்து வைத்திருந்த அரசாங்கம் அவருக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் ச.சுயன்சன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவில் நேற்று காலை நடத்திய ஊடக சந்திப்பில் துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் ச.சுயன்சன் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸாரின் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளியான அஜந்தன் ஆறு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தார். தடுப்பு காவலில் வ…

    • 0 replies
    • 557 views
  9. வவுனியாவில் பழந்தமிழ் கிராமங்கள் பல அரச அதிகாரிகளின் உறுதுணையுடன் சூட்சுமமான முறையில் திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வவுனியா A9 பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள நொச்சிமோட்டை கிராமத்தில் உள்ள பல காணிகளுக்கு காணிக் கச்சேரி என்ற பெயரில் மக்களை ஏமாற்றி காணிகளை அபகரிப்பதோடு அதில் முஸ்லீம் மக்களை குடியேற்றி தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் முயற்சிகள் நடந்தேறிவருகின்றது. சுமார் 180 ஏக்கர் அளவிலான காணிகளுக்கு காணிக்கச்சேரி இடம்பெற்று அவற்றில் சுமார் 100 ஏக்கர் அளவிலான காணிகளுக்கு இப்பிரதேசங்களை ஒரு போதும் சேர்ந்திராத பிரதேச செயலாளரின் மனைவியின் உறவினர்கள் அண்ணனின் உறவினர்கள் என ஏறத்தாழ நூறு பேருக்…

    • 6 replies
    • 1.3k views
  10. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் விடுவிக்கக் கோரி மாணவர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாக முன்றலில் போராட்டம் இடம்பெற்று வருகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் மீட்கப்பட்டன. அத்…

  11. நீங்கள் வெளியேறுங்கள் எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இராணுவத் தளபதியின் கருத்துக்கு பதிலளித்துள்ளார். அத்துடன், போர்க் குற்றங்களில் இலங்கை இராணுவம் ஈடுபடவில்லை என நாம் நட்டாற்றில் நிற்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஏமாற்ற வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். யுத்தக் குற்றங்கள் குறித்து இராணுவத் தளபதியின் கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “எமது தமிழ் மண்ணில் இருந்து இராணுவம் முழுமையாக வெளியேறுமாறு ஒரு போதும் கோரவில்லை. கோரவும் முடியாது. அப்படியாயின் ஒரு தனிநாடாகத் தான் இருக்க முடியும். ஆனால் 10 இலட்சம் மக்களுக்கு 2 இலட…

    • 0 replies
    • 489 views
  12. விடுதலைப் புலிகள் நேருக்கு நேர் நின்று போராடியவர்கள்: தற்போதைய நிலைமை வேறு – தயாசிறி விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற போர் இலகுவானது எனவும் அவர்கள் நேருக்கு நேர் நின்று போராடினார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்போதைய நிலைமை வேறு எனக் குறிப்பிட்ட அவர், முஸ்லிம் தீவிரவாதிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்வது மிகவும் கடினமானது எனவும் தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவிக்கையில், “முஸ்லிம் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் தரப்பிடம…

  13. ஸ்ரீலங்காவில் வாழும் எந்தவொரு நபருக்கும் சிறும்பான்மையின மக்கள் மீதோ அவர்களின் உடமைகள் மீதோ தாக்குதல் நடாத்த உரிமை இல்லையென சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீலங்காவின் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இன வன்முறையொன்று கடந்த இரண்டு தினங்களாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில் யாரும் சட்டத்தை கையிலெடுக்க வேண்டிய தேவையில்லையெனவும் தலை தூக்கியுள்ள முஸ்லிம் தீவிரவாதத்தை பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் தீவிரவாத தாக்குதல்களுக்கு இலக்காகி பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள நாட்டை மீட்டு …

    • 0 replies
    • 527 views
  14. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு – கொக்கிளாய் முகத்துவாரப்பகுதியிலுள்ள காணிகள் அனைத்தும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக தனியார் காணிகள் எனவும், அக்காணிகளைப் பறித்து மாற்று இனத்தவர்களுக்கு வழங்கவேண்டாம் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் தெரிவித்துள்ளார். கடந்த 11.05.2019அன்று, கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் அத்துமீறி குடியேறி இருக்கின்ற நீர்கொழும்பு பகுதி சிங்கள மக்கள், அவர்களுக்கான வீட்டுத் திட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்வை செய்ய இருந்ததாகவும், அந்த நிகழ்வை முல்லைத்தீவு மாவட்ட செயலகம், கரைதுறைப்பற…

  15. கிழக்கு ஆளுநரின் இனப்பாகுபாட்டு செயற்பாடு – வியாழேந்திரன் எச்சரிக்கை பொறுப்புணர்வு இல்லாமல் கிழக்கு மாகாண ஆளுநர் இன ரீதியாக செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். இதன்படி, கிழக்கில் தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்பித்துவரும் முஸ்லிம் ஆசிரியர்களை கிழக்கு ஆளுநர் உடனடியா இடமாற்றிவரும் செயற்பாட்டால் தமிழ் பிள்ளைகளுடைய கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிழக்கில் தமிழ் கல்வி வலயங்கள் பாடசாலைகளை மூடி பெற்றோர்கள் வீதியில் இறங்க வேண்டி ஏற்படும் வியாழேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் தமிழ் பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியவாளர…

  16. மண்முனை பிரதேசத்தின் பாதுகாப்புக் கருதி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் நாட்டில் நிலவும் அமைதியற்ற நிலைமை காரணமாக முஸ்லிம் வியாபாரிகளின் பாதுகாப்பு கருதி, ஆரையம்பதி பிரதேசத்தில் முஸ்லிம் வியாபாரிகளின் வியாபார நிலையங்களை தற்காலிகமாக தடை செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மண்முனை பிரதேச சபையின் 14ஆவது அமர்வு இன்று (புதன்கிழமை) பிரதேச சபைத் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிரதேசத்தின் பாதுகாப்பு விடயங்களைக் கருத்திற் கொண்டும் இன முறுகலைக் கட்டுப்படுத்தும் முகமாகவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சபை ஆரம்பத்தின் போது இந்த தீர்மானங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்து சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் ஐவர் வெளிநடப்புச்…

  17. உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் பயங்கரவாதிகளின் வலையமைப்பு ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் அனைத்துமே, மிகவும் திறமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் இவற்றை, இதற்கு முன்னர் இலங்கை இராணுவமோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ பயன்படுத்திய…

  18. சிரியாவில், ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள் – அதிர்ச்சி தகவல் சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புடன் இணைந்து மூன்று இலங்கையர்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இலங்கையர்கள், அண்மையில் இலங்கைக்கு அனுப்பியதாக கூறப்படும் சுமார் 40 இலட்சம் ரூபாய் பணம் குறித்தும் சிறப்பு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆரம்பித்துள்ளது. அண்மையில் தெஹிவளை வீடொன்றில் வைத்து பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் இரண்டாம் இலக்க விசாரணை அறை அதிகாரிகள் 23,500 அமெரிக்க டொலர்களைக் கைப்பற்றினர். அது குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளிலேயே இவ்வாறு பல விடயங்கள் வெளியாகின்றன. இதன்படி முன்னெடுக்கப்பட்டுள்ள விச…

  19. (நா.தனுஜா) ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை அடுத்து அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் தொடர்பிலும் திருப்தியடைய முடியாதுள்ளது. எனினும் அரசாங்கம் மேற்கொள்ளும் சரியான தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, நாட்டில் தற்போது காணப்படும் சூழ்நிலை தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் உரிமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சரவைக்கும் மாத்திரமே காணப்படுகின்றன. …

  20. றிஷாதுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – மஹிந்த எதிப்பு அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்றையதினம் சபாநாயகரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஆதவு தெரிவித்து கையொப்பமிட்டுள்ளனர். என்றாலும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (ஸ) http://www.dailyceylon.com/182707/

    • 8 replies
    • 987 views
  21. (செ.தேன்மொழி) நாட்டின் மகாநாயக்க தேரர்கள் என்ற வகையில் நாங்கள் பல ஆலோசனைகளை முன்வைத்தாலும், அவற்றை பொருட்படுத்தாமல் அரசியல் தலைவர்கள் செயற்படுவது கவலையளிக்கிறது என அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் தெரிவித்துள்ளன. அஸ்கிரிய பீடத்து மஹாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த தேரர் , அமரபுர பீடத்து மாநாயக்கர் கொடுகொட தம்மாவாச தேரர் மற்றும் ஸ்ரீலங்கா இராமாண்ய பீடத்து மாநாயக்கர் நாபால பிரேமசிறி தேரர் ஆகியோரின் கையெழுத்துடன் தேரர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர். அரசியல் தலைவர்கள் நாட்டை பற்றி சிந்திக்காது அவர்களின் வாக்குகளை பெருக்கிக் கொள்ளும் நோக்கிலான செயற்பாடுகளில…

  22. (நா.தனுஜா) கிழக்கு மாகாணத்தில் இயங்கிவரும் மட்டக்களப்பு வளாகம் மதத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றதே தவிர, அது நாட்டின் தேசிய கல்வித்திட்டத்திற்கு அமைவாக செயற்படவில்லை. இவ்வாறான அடிப்படைவாதத்தைப் போதிக்கும் கல்வி நிறுவனங்கள் எமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவை என்பதுடன், அவை அவசியமானவையும் அல்ல. எனவே மட்டக்களப்பு வளாகத்தை கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைத்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டங்களை உள்வாங்குவதே இதற்கான சிறந்த தீர்வாக அமையும் என்று மதகுருமார் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது. …

  23. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பேரப்பிள்ளைகளுக்கு விளையாட்டு பொருட்களை கொண்டு வந்த பெண்ணே இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் , வாக்கு மூலத்தை பெற்ற காவல்துறையினர் அவரை பின்னர் விடுவித்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ். வந்த புகையிரதத்தில் வந்த 70 வயதுடைய பெண்ணொருவரை இராணுவத்தினர் சோதனையிட்ட போது அவருடைய உடமையில் இலத்திரனியல் பொருட்கள் இருந்தன. அதனை அடுத்து அந்த பெண்ணை கைது செய்து யாழ்ப்பாண காவல்துறையினரிடம்இராணுவத்தினர் கையளித்தனர். குறித்த பெண்ணை காவல்துறையினர் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போ…

  24. உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு , குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிக்காவல்துறைமா அதிபரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது சேவையின் அவசியம் கருதி பிரதிக்காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்னவால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிக்காவல்துறைமா அதிபரின் கீழ் இயங்கிய நிலையில் பின்னர் காவல்துறைமா மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் அந்தப் பிரிவு அவருக்கு கீழ் கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது http:…

  25. முல்லைத்தீவில் குடியேறிய சிங்கள மக்களுக்கு வீட்டுத்திட்டம்! – கடும் பிரயத்தனத்தால் இணக்கம் முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் குடியேறிய சிங்கள மக்களுக்கு அவ்விடத்தில் வீடமைப்புத் திட்டத்துக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிங்கள மக்கள், இன்று (செவ்வாய்க்கிழமை) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தல் ஈடுபட்ட மக்கள், 1934 ஆம் ஆண்டு முதல் தங்களுடைய மூதாதையர்கள் இங்கு வந்து தொழில் செய்து வந்ததாகவும் அதனைத் தொடர்ந்து தாங்களும் இங்கு வாழ்ந்து வருவதாகவும் கடந்த 30 வருட யுத்தத்தின் போதும் தாங்கள் இந்த இடத்திலேயே இருந்ததாகவும் தெரிவித்தனர். அத்துடன், 1982 ஆம் ஆண்டு தமக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிக…

    • 2 replies
    • 865 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.