ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143232 topics in this forum
-
74 கிலோ கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இருவர் கைது May 12, 2019 யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் வைத்து 74 கிலோ கிராம் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தனர் என்னும் குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வடமராட்சி கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வடமராட்சி கட்டைக்காடு பகுதியை சேர்ந்த 28 மற்றும் 35 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை கடற்படையினர் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதனை தொடர்ந்து அவர்கள் மாவட்ட போதைப் பொருள் குற்ற தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்ப…
-
- 0 replies
- 231 views
-
-
ஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு May 11, 2019 ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது ஈஸ்டர் தினத்தில் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பிலும் அண்மையில் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #eastersundaylk #governor #vickneswaran #surenragavan http://globaltamilnews.net/2019/121392/
-
- 0 replies
- 300 views
-
-
கிளிநொச்சியில் மூன்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 101 குடும்பங்களுக்கு நிரந்த வீடு May 11, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கோரக்கன்கட்டு, கல்மடுநகர், உரியான், பரந்தன் பகுதியில் உள்ள 63 குடும்பங்களுக்கும் கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்கு உட்ப்பட்ட செலவாநகர், அம்பாள்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 23 குடும்பங்களுக்கும், பச்சலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்ப்பட்ட தம்பகாமம் கிராமத்தின் 15 குடும்பங்களுக்களுக்களுக்கு நிரந்த வீட்டுக்கான தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் (நாடுபூராகவும் 187 அடிக்கல் நாட்டுவோம் எனும் தொனிப்பொருளில்) இன்று (10.05.2019) அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. …
-
- 0 replies
- 201 views
-
-
படை அதிகாரிகளைக் கொண்டு வெளிநாடுகளின் பயண எச்சரிக்கைகளை நீக்க முயற்சி சிறிலங்காவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு வெளிநாடுகள் பல பயண எச்சரிக்கைகளை நீக்குவதற்காக, சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளைப் பயன்படுத்தி, அரசாங்கம் கடுமையான பரப்புரைகளில் இறங்கியுள்ளன. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, சிறிலங்காவுக்குப் பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளால், 37 பயண எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. குண்டுவெடிப்புகளை அடுத்து சிறிலங்கா வரும் சுற்றுலாப் பயணிகளின் தொகை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் சுற்றுலாத் துறையை தூக்கி நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் பெரும் பிரயத்தனம் எடுத்து வர…
-
- 2 replies
- 681 views
-
-
தாக்குதல்களை தடுக்க சிறிலங்காவுக்கு கிடைக்கவுள்ள நவீன தொழில்நுட்ப உதவிகள் இஸ்லாமிய தீவிரவாதிகள் மேலும் பல தாக்குதல்களை நடத்தும் அச்சுறுத்தல்கள் இருந்த போதும்,ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பெரும்பாலான வலையமைப்புகளை சிறிலங்கா பாதுகாப்பு பிரிவினர் அழித்து விட்டனர் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு நேற்று செவ்வி ஒன்றை அளித்துள்ள அவர், “குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்கள் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தனர் என்று விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த தொடர்புகள் எந்தளவுக்கு ஆழமானது என்பதைக் கண்டறிவதில் அதிகாரிகள் இப்போது ஈடுபட்டுள்ளனர். …
-
- 3 replies
- 586 views
-
-
ஹிஸ்புல்லா மகனுடன் கோத்தாவுக்கு நெருங்கிய தொடர்பு? இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்குத் தொடர்புகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் கோத்தாபய ராஜபக்சவுக்கும் நெருக்கமான உறவுகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் வெளிநாட்டு உதவிகளுடன் கட்டப்பட்டுள்ள ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பாக பலத்த சர்ச்சைகளும், சந்தேகங்களும் தோன்றியுள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தில் 500 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை ஹிஸ்புல்லாவின் மகன் பெற்றுள்ளார். எவ்வாறு அவருக்கு 500 மில்லியன் ரூபா பங்குகள் கிடைத்தன என்று விசாரணை செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் உ…
-
- 1 reply
- 632 views
-
-
கூட்டமைப்பு – தமிழர் முற்போக்கு கூட்டணி இணைந்து செயற்பட முடிவு தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில், இணைந்து செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் முடிவு செய்துள்ளன. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டு கட்சிகளும் சந்தித்து, இது தொடர்பாக கலந்துரையாடியதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் இஸ்லாமிய தீவிரவாத எழுச்சிக்குப் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் இணைந்து செயற்படுவதென இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யபப…
-
- 0 replies
- 597 views
-
-
புலனாய்வு தகவல் பரிமாற்றத்தினால் தீவிரவாதத்தை அழிக்கலாம் – மகிந்தவிடம் அமெரிக்க தூதுவர் தீவிரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகள் குறித்து, நட்பு நாடுகளுக்கிடையில் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என்று அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்தில் நேற்று முன்தினம் அமெரிக்க தூதுவர் சந்தித்துப் பேசினார். இதன்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். 2001 செப்ரெம்பர் 11 தாக்குதலை அடுத்து, தமது நாடு தீவிரவாதிகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளதன்…
-
- 0 replies
- 457 views
-
-
தாக்குதல்களை தடுக்க சிறிலங்காவுக்கு கிடைக்கவுள்ள நவீன தொழில்நுட்ப உதவிகள் இஸ்லாமிய தீவிரவாதிகள் மேலும் பல தாக்குதல்களை நடத்தும் அச்சுறுத்தல்கள் இருந்த போதும்,ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பெரும்பாலான வலையமைப்புகளை சிறிலங்கா பாதுகாப்பு பிரிவினர் அழித்து விட்டனர் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு நேற்று செவ்வி ஒன்றை அளித்துள்ள அவர், “குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்கள் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தனர் என்று விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த தொடர்புகள் எந்தளவுக்கு ஆழமானது என்பதைக் கண்டறிவதில் அதிகாரிகள் இப்போது ஈடுபட்டுள்ளனர். …
-
- 0 replies
- 154 views
-
-
கொழும்பில் இரு இடங்களில் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி, ஒருவர் காயம் கொழும்பு – வத்தளை, ஹுணுப்பிட்டிய பகுதியில் நேற்றிரவு நிறுத்தாமல் வேகமாகச் சென்ற வாகனம் ஒன்றின் மீது சிறிலங்கா கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். வேகமாகச் சென்ற கார் ஒன்றை நிறுத்துமாறு சிறிலங்கா கடற்படையினர் சைகை செய்தனர். எனினும், காரை நிறுத்தாமல் தப்பிச் செல்ல சாரதி முற்பட்டார். இதையடுத்து, கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காரைச் செலுத்திய சாரதி படுகாயமம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் மரணமானார். உயிரிழந்தவர் 34 வயதுடைய நபர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அதேவேளை, கொழும்பில் நேற…
-
- 0 replies
- 160 views
-
-
மே 12 முதல் 18 வரை தமிழின படுகொலை வாரமாக நினைவுகொள்ளத் தீர்மானம்! AdminMay 9, 2019 தமிழின படுகொலை வாரமாக மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான ஒருவாரத்தை வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் அனுஷ்டிக்கவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். இந்த நிகழ்வுகள் எதிர்வரும் 12ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து வரும் ஒரு வார காலத்தில் வடகிழக்கு மாகாணத்தின் 21 இடங்களில் இடம்பெற உள்ளதாகவும் இறுதி நாளான மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அ…
-
- 3 replies
- 1.2k views
-
-
வடக்கு மாகாணம் யுத்த பூமி போன்று இராணுவமயமாக்கப்பட்டுள்ளது – சிறிதரன் தென்னிலங்கை குண்டுத் தாக்குதல்களின் பின்னர், வடக்கு மாகாணம் யுத்த பூமி போன்று இராணுவமயமாக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “தமிழ் மக்கள் மிகவும் ஆபத்தான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். தென்னிலங்கை குண்டுத் தாக்குதலின் பின்னர், வடக்கு மாகாணம் யுத்த பூமி போன்று இராணுவமயமாக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் திறந்தவெளிச் சிறைச்சாலையில் தமிழர்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். அந்த செயற்பாடுகளை மா…
-
- 4 replies
- 865 views
-
-
எம்.எப்.எம்.பஸீர்) சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட்டுக்கு சொந்தமான, குண்டு தயாரிக்கப்பட்ட நிறுவனம் என சந்தேகிக்கப்படும் வெல்லம்பிட்டி செப்பு நிறுவனத்தில் சேவையாற்றிய 9 பேருக்கு பிணை கிடைத்த விவகாரம் தொடர்பில் சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் உள்ளிட்ட மூன்று உயர் பொலிஸ் அதிகாரிகளை எஸ்.ஐ.யூ. எனப்படும் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவு விசாரணை செய்துள்ளது. கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் உதய ஹேமந்த, வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் வித…
-
- 1 reply
- 782 views
-
-
மடு, நல்லூர், வற்றாப்பளை அம்மன் கோவில்களில் பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும் சபையில் செல்வம் எம்.பி.கோரிக்கை (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) பயங்கரவாத தாக்குதல் கிறிஸ்தவ தேவாலயங்களில் இடம்பெற்ற காரணத்தினால் தேவாலயங்கள் மட்டுமே இலக்காக இருக்காது. மடு, நல்லூர் கந்தசாமி கோவில், வற்றாப்பளை அம்மன் கோவில் ஆகியவற்றைக்கூட இலக்கு வைக்கலாம். ஆகவே மக்கள் அதிகமாக வாழும் இந்த பகுதிகளில் பாதுகாப்பை அரசாங்கம் பலப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாட்டின்…
-
- 0 replies
- 475 views
-
-
ரயிலுடன் மோதியது பஸ்; யாழில் சம்பவம் யாழ் எழுதுமட்டுவால் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு சிறியரக பஸ் விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்தி ரயில், கச்சாய் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த சிறியரக பயணிகளை ஏற்றும் பஸ்ஸில் மோதியுள்ளது. இதன்போது குறித்த பஸ் மோசமாக சேதமடைந்துள்ளது. பஸ் சாரதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த ரயில் கடவையை கடக்க முற்பட்ட போதே குறித்த சம்பவம் இடம்பெற்றள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை …
-
- 0 replies
- 464 views
-
-
மன்னார் மனித புதைகுழி அறிக்கை; மன்றில் சமர்ப்பிக்க தீர்மானம் மன்னார் மனித புதைகுழி குறித்து நீதிமன்றத்தால் கோரப்பட்ட அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை எதிர்வரும் மாதம் 31ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, அகழ்வுப்பணிகள் குறித்து ஆலோசனை வழங்கும் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த அறிக்கைக்கு தேவையான அனைத்து சோதனைகளும் நிறைவடைந்துள்ளது. அகழ்வின்போது மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தவிர்ந்த ஏனைய பொருட்கள் நீதிமன்ற அனுமதியின் பேரில் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தவுள்ளன. இது குறித்து எதிர்வரும் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கவுள்ளது. அறிக்கையை வழங்கியதன் …
-
- 1 reply
- 521 views
-
-
சஹ்ரானின் மரபணு பரிசோதனை அறிக்கையை இரண்டு நாட்களுக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை சஹ்ரான் ஹாஸிமின் தொடர்பான மரபணு பரிசோதனை அறிக்கையை இரண்டு நாட்களுக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்க முடியும் என அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சஹ்ரான் ஹஸீமின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, சஹ்ரான் ஹஸீமினின் மகளின் இரத்த மாதிரி பெற்றுக்கொள்ளப்பட்டு, மரபணு பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது. இந்த இரத்த மாதிரி பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், சஹ்ரான் ஹாஸிமின் தொடர்பான மரபணு பரிசோதன…
-
- 0 replies
- 385 views
-
-
பிரிவினையை மறந்து பயங்கரவாதம் என்ற பொது எதிரியை ஒழிக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜனாதிபதி இனம், சமயம், அரசியல் ரீதியாக பிரிந்திருக்காது பயங்கரவாதம் என்ற பொது எதிரியை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைவோம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அரசியல் ரீதியாக ஒருவரை ஒருவர் விமர்சித்தும் இனவாதத்தை தூண்டியும் பிரிந்து செயற்படும்போது பயங்கரவாதிகளே அதனூடாக பலமடைவர் என்பதை மறந்து விடக்கூடாது என ஜனாதிபதி குறிப்பிட்டார். கண்டி மாவட்டத்தின் அரசியல் தலைமைகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு துறை பிரதானிகளுடன் இன்று பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். இலங்கைக்கு மட்டுமன்றி முழு…
-
- 0 replies
- 628 views
-
-
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒருவர் மரணம்! May 11, 2019 தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் பெயர் அறியப்படாத நோயினால், நேற்றைய தினம் மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, நாலாம் கட்டையில் வசித்து வந்த, 31 வயதான குணசேகரம் வசீகரன் என்ற முன்னாள் போராளியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, சிகிச்சை பலனின்றி இவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. #LiberationTigersofTami Eelam #Formermilitant http://globaltamilnews.net/201…
-
- 0 replies
- 428 views
-
-
ஹர்த்தாலால் முடங்கியது திருகோணமலை கிழக்கு மாகாணத்தில் நியாயமானதோர் ஆளுனரை நியமிக்க வேண்டும் எனக்கோரி கிழக்கு மாகாணம் தழுவியதாக அனுஸ்டிக்கப்பட்ட ஹர்த்தால் கடையடிப்பினால் திருகோணமலை முற்றாக முடங்கியது. திருகோணமலை பொதுச்சந்தை வியாபாரநிலையங்கள் தனியார் நிறுவனங்கள் என்பன மூடப்பட்டிருந்து. மேலும் தனியார் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டிருந்தது. பாடசாலைகள் அரச அலுவலக திறந்திருந்தபோதும் சிறு அளவிலானவர்களே சமூகமளித்திருந்தமையால் அவர்களும் திரும்பி வீடுகளுக்கு சென்றுள்ளனர். எனவே மாவட்டத்தில் உள்ள சகல இன மக்களும் தமது கடமைகளை நிறுத்தி இந்த கடையடைப்பு ஹர்தாளுக்கு ஆதரவு வழங்கி வருகின்றமையை காணக்கூடியதாகவுள்ளது. http:/…
-
- 1 reply
- 786 views
-
-
குருணாகலில் 356 முஸ்லிம் கிராமங்கள் சோதனை (எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத்தின் பின்னர் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் சோதனைகள் மற்றும் தேடுதல்களில் குருணாகல் மாவட்டத்தில் மட்டும் 356 முஸ்லிம் கிராமங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பொலிஸார், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து முன்னெடுத்துள்ள இந் நடவடிக்கையின் போது சுமார் 152 பேர் வரியில் கைது செய்யப்பட்டதாக குருணாகல் மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இவர்களில் 108 பேர் நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 44 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத…
-
- 4 replies
- 1.6k views
- 1 follower
-
-
May 10, 2019 கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டி சாலை நடத்துனர் ஆகியோரை விடுவிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக ஜனாதிபதி செயலாளர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமநாதனின் ஏற்பாட்டில், ஜனாதிபதி செயலாளர் உதய ஆர் செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட ஆகியோருடன் இன்று (10.05.19) காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்த கலந்துரையாடலில், யாழ் மருத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ரவிராஜ், சிரேஷ்ட…
-
- 1 reply
- 835 views
-
-
May 10, 2019 கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்பட்டுள்ளன. பயணிகள் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். விமான நிலையத்திற்குள் செல்லும் போதும் அங்கிருத்து. வெளியேறும் போதும் பொதிகளுடன் நீண்ட தூரம் நடந்து செல்ல நேர்வதால் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பயணிகள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கமைய, நேற்று முன் தினம் இரவு முதல் அமுலாகும் வகையில் வரையறைகள் தளர்த…
-
- 1 reply
- 436 views
-
-
May 10, 2019 நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் தொடர்பில் இராணுவ அதிகாரி உள்ளிட்ட எதிர்மனுதாரர்களால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் அனைத்தையும் நிராகரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மனுதாரர்களுக்கு விரைவில் நிவாரணம் ஒன்றை வழங்குவதற்கு அனைத்துத் தரப்பினரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கட்டளையிட்டார். “காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைக் கண்டு பிடித்துத்தருமாறு மனுக்கள் செய்தவிடத்து எதிர்மனுதாரர்கள் பொறுப்புடன் செயற்பட்டு, உள்ளவற்…
-
- 0 replies
- 881 views
-
-
இலங்கை குண்டுவெடிப்புகளை ஒருங்கிணைத்தவர் சவூதியில் கைதானார். இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளை ஒருங்கிணைத்த சூத்திரதாரிகளில் முக்கியமானவர், சவூதியில் கைதானார் என இன்று இலங்கை ஜனாதிபதி அறிவித்தார். இலங்கையில் இருந்து சென்ற, அதிகாரிகள், சவூதி அதிகாரிகளுடன் இணைந்து இந்த கைது நடவடிக்கைகளை நடாத்தி உள்ளனர் என அவர் தெரிவித்தார். 130 முதல் 140 வரையான பயங்ககரவாதிகளை அடையாளம் கண்டுள்ளோம். சிலர் வெடிகுண்டுகளுடன் மரணித்து விட்டனர். பலர் கைதாகி உள்ளனர். இன்னும் பலரை விரைவில் கைது செய்வோம். இந்த நடவடிக்கைகளால், முஸ்லீம் சமூகம் சில வசதியீனங்களை அனுபவத்தினை நான் அறிவேன், எனினும், அது சில காலத்துக்கு தான். அதுவரை ஒத்துழைக்க வேண்டும் என கோரினார் அவர். dailymir…
-
- 6 replies
- 995 views
-