Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவில் நிரந்தர தளம் அமைக்கும் திட்டம் இல்லை – அமெரிக்கா சிறிலங்காவுடன் இராணுவ ரீதியான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா முயற்சிக்கின்ற போதிலும், இங்கு நிரந்தரமான தளம் எதையும் அமைக்கும் திட்டம் அமெரிக்காவுக்கு கிடையாது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் நிரந்தர இராணுவத் தளத்தை அமைக்க அமெரிக்கா திட்டமிடுவதாக வெளியாகி வரும் செய்திகள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “சிறிலங்காவில் அமெரிக்க இராணுவ தளத்தை நிறுவுவதற்கு எந்தவொரு திட்டமும் இல்லை. அவ்வாறான திட்டம், ஒருபோதும் எமது பாதுகாப்பு ஒத்துழைப்பின் அங்கமாக இருக்கவில்லை. எதிர்காலத்தில் இங்கு, அமெரிக்காவின் …

    • 0 replies
    • 280 views
  2. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகள் 100 வீதமான சித்தை எய்தியுள்ளனர். 50 மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர், 32 மாணவர்கள் தமிழ்மொழி மூலமும், 18 மாணவர்கள் ஆங்கில மொழிமூலமும் சித்தியடைந்துள்ளனர். 49 பேர் 8ஏ தரச் சித்தியினையும், 34 மாணவர்கள் 7ஏ தரச்சித்தியினையும் 35 மாணவர்கள் 6ஏ தரச்சித்தியையும் பெற்றுள்ளனர். பாடசாயில் மொத்தமாக 231 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் அவர்கள் 157 பேர் தமிழ்மொழி மூலமும், 74 பேர் ஆங்கில மொழியிலும் பரீட்சை எழுதியிருந்தனர். அதனடிப்படையில் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை 100 வீதம் சித்தியடைந்துள்ளது. …

  3. கிளிநொச்சியில் மாதிரி கிராமங்களை உருவாக்க நடவடிக்கை தேசிய வீடமைப்பு அதிகார சபை உருவாக்கப்பட்டு 40 ஆண்டுகள் நாளை (திங்கட்கிழமை) நிறைவடையும் நிலையில் மாதிரி கிராமங்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த 40ஆவது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கிளிநொச்சி அலுவலகத்திற்காக 40 இலட்சம் பெறுமதியில் அமைக்கப்படவுள்ள விடுதிக்கும், 15 இலட்சம் பெறுமதியில் அலுவலகத்தை மேலும் விரிவாக்குவதற்காகவும், அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் கிளிநொச்சியில் அமைந்துள்ள வீடமைப்பு அதிகார சபை அலுவலகத்தில் குறித்த அடிக்கல் நாட்டப்பட்டது. இதேவேளை 40 பயனாளிகளிற்கு தல…

  4. மரண தண்டனையை நடைமுறைப்படுத்த முடிவு – மைத்திரி அதிரடி ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் மரண தண்டனையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதன்படி போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான திகதி குறிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு மோதர பகுதியில் சர்வ மத தலைவர்களுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “போதை பொருள் வர்தகர்கள் ஒரு நாட்டின் தலை விதியை தீர்மானிக்கின்றனர் அவர்கள் யாரை அரயாசனத்தில் வைத்திருப்பதென்றும் யாரை அதிலிருந்து கீழை தள்ளவதென்றும் அறிவார்கள். அதனை உணர்து என…

  5. எனது குடும்பத்தைப் பழிவாங்குவதற்கே 19ஆம் திருத்தத்தைக் கொண்டுவந்தனர்:மஹிந்த (நா.தனுஜா) என்னையும், எனது குடும்பத்தவர்களையும் பழிவாங்கும் நோக்கிலேயே 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவந்து, ஜனாதிபதியையும் ஏமாற்றி அதனை நிறைவேற்றிக் கொண்டார்கள் என மஹிந்த ராஜபக்ஷ தெரவித்தார். பாராளுமன்றத்தில் தவறான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், அதற்கு அமைவாகவே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அளுபோமுல்ல எஸ்.மஹிந்த வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், என்னையும், எனது குடும்பத்தவர்களையும் பழிவாங்கும் நோக…

  6. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட பாலஸ்தீன நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி ஸூஹைர் எம்.எச்.ஸைட் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் காத்தான்குடிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயம் நேற்றைய தினம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. காத்தான்குடி அலுவலகத்திற்கு வருகை தந்த தூதுவருக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காத்தான்குடி பூர்வீக நூதனசாலைக்கு விஜயம் செய்து பார்வையிட்டதுடன் புதிய காத்தான்குடி அல்-அக்ஸா பெரிய பள்ளிவாயலுக்கும் விஜயம் செய்து பார்வையிட்டார். இதன்போது ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் தூதுவர் ஸூஹைருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. …

  7. யாழில் சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட மூன்று பெண்கள் உட்பட ஐவர் கைது யாழ்ப்பாணம்- சாட்டி பகுதியிலுள்ள தேவாலயத்தில், சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட குற்றசாட்டில் மூன்று பெண்கள் உட்பட ஐவரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த தேவாலயத்தில் நேற்றைய தினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற திருவிழாவில், பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பக்தர்கள் மத்தியில் ஊடுருவிய திருடர்கள் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டனர். இதில் மூன்று சங்கிலிகள் அறுக்கப்பட்டன. இந்நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஊர்காவற்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், தேவாலயத்திற்கு அருகில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத…

  8. இந்தியாவின் நடுநிலையைக் கோரும் விக்கி Leftin March 31, 2019 இந்தியாவின் நடுநிலையைக் கோரும் விக்கி2019-03-31T13:00:10+00:00Breaking news, உள்ளூர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்குவதற்கு, மூன்றாம் தரப்பு நடுநிலையை தமிழர்கள் கோருவதாக, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மூன்றாம் தரப்பு நடுநிலையாளராக இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கூறியுள்ளார். “இந்த தீர்மானத்துக்கு வரும் எந்தவொரு அணியுடனும் நாங்கள் நிச்சயமாக இணைவோம். எந்தவொரு தீர்வும் தெற்கில் இருந்தே வரை வேண்டும். சட்டப்பூர்வமாக …

  9. சர்வதேச விசாரணையை ஏன் கோருகின்றோம்?-சுமந்திரன் விளக்கம் Leftin March 31, 2019 சர்வதேச விசாரணையை ஏன் கோருகின்றோம்?-சுமந்திரன் விளக்கம்2019-03-31T13:25:30+00:00Breaking news, உள்ளூர் இறுதிப் போரின்போது, இரண்டு தரப்பினரும் குற்றமிழைத்துள்ளனர் எனக் குற்றச்சாட்டப்படும் காரணத்தால் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின ர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தினார். கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “இரண்டு தரப்பினரும் குற்றமிழைத்துள்ள நிலையில், ஏன் ஒரு தரப்பினர் மீது மட்டும் குற்றம் சுமத்தவேண்டும் என்…

  10. வில்பத்துக் காட்டை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அழிக்கிறார் என்று குற்றம் சாட்டியும், வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பல கோஷங்களை முன்வைத்து இன்று நாடு பூராகவும் உள்ள 28 பிரதான சிங்கள நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் உருவப் பொம்மைகள், அவருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட பதாதைகள் மற்றும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் புகைப்படங்களை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னனெடுக்கப்பட்டன. “இலங்கையைப் பாதுகாப்போம்” அமைப்பின் தலைவர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரரின் நெறிப்படுத்தலின் கீழ் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்…

    • 0 replies
    • 443 views
  11. நோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவ நிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. நோர்வே தமிழரான ‘ஏஞ்சல்’ மண்டப சேவை நிறுவனத்தின் உரிமையாளர் சுதர்சன் பத்மநாதன் அவர்களின் நிதியுதவியுடன் தமிழ் நோர்வே வள ஒன்றியம் (TNRA), மற்றும் தாயகத்திலுள்ள அஹிம்சா சமூக நிறுவனத்தின் கூட்டு அனுசரணையுடன் இந்த மருத்துவ நிலையக் கட்டடம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவ நிலையம் புதன்கிழமை 20.03.19 இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjørn Gaustedsæter அவர்களினால் வைபவ ரீதியாகத் …

  12. வடக்கு நோக்கி பயணித்த பேருந்துகள் விபத்து – 12 பேர் காயம் கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி பயணித்த இரு பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். சிலாபம் புத்தளம் வீதி பங்கதெனிய சந்தியில் இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பங்கதெனிய சந்தியில் …

  13. இலங்கையின் வரைபடத்தில் 3 இலட்சம் இடங்களின் பூகோள பெயர்கள் அடையாளம் இலங்கையின் வரைபடத்தில் உள்ள 3 இலட்சம் இடங்களின் பூகோள பெயர்கள் தற்போது அடையாளபடுத்தப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளதாக நில அளவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வரைபடைத்தில் பயன்படுத்தப்படும் பெயர்களை உரிய முறையில் இறுதிசெய்யும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமையவே பூகோள பெயர்கள் தற்போது அடையாளபடுத்தப்பட்டு இறுதி செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. தற்போதைய வரைபடத்தில் உள்ள கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகள், தொல்பொருள் முக்கியத்துவமிக்க பகுதிகள், மத வழிபாட்டுத் தளங்கள, நீர்த்தேக்கங்கள், கங்கைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் பூகோளப் பெயர்கள் …

  14. சர்வதேச நீதிப்பொறிமுறையை நடைமுறைப்படுத்துவால் இறையாண்மைக்கு பாதிப்பில்லை – சி.வி. சர்வதேச நீதிப்பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதால், இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வட.மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும், சர்வதேச நீதிப்பொறிமுறையை உள்நாட்டில் நடைமுறைப்படுத்த அரசமைப்பில் சிக்கல்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதைய சட்டத்தில் முன்புபோல நாட்டில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் ஏனைய நாடுகள் அது தொடர்பான கருத்துக்களையோ அல்லது சட்டநடவடிக்கைகளை எடுக்கமுடியாது என கூறமுடியாதென்றும் அவர்…

  15. சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. உபகுழு இலங்கைக்கு செல்லவுள்ளது…. March 30, 2019 சித்திரவதைகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக ஆராய்வதற்கு ஐ.நா. உபகுழு இலங்கைக்கு முதலாவது பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. அதன்படி குறித்த குழு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி இலங்கைக்கு செல்லவுள்ள அந்தக் குழு ஏப்பரல் 12ஆம் திகதி வரை இலங்கையின் பல இடங்களுக்கும் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நான்கு பேர் கொண்ட ஐ.நா. உபகுழு இந்தப் பயணத்தின் போது, அரசாங்க அதிகாரிகளுடனும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக அமைப்புகளுடனும் கலந்துரையாடவுள்ளது. மோல்டோவா நாட்டைச் சேர்ந்த விக்டர் சகாரியா தலைமையிலான இந்தக் குழ…

  16. மன்னார் மனிதப் புதைகுழி ஆய்வில், தவறு நடந்திருக்கிறது.. March 31, 2019 மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் ஆய்வு முடிவுகளில் முரண்பாடுகள் காணப்படுவதால் அதில் ஏதோ தவறு உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். மேலும் மன்னார் மனித புதைகுழி விடயத்தில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், மன்னார் மனித புதைகுழி தொடர்பான கார்பன் பரிசோதனை அறிக்கையை ஏற்பதா, இல்லையா என்பது தொடர்பாக நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட மனித எச்ச…

  17. சிறிலங்காவுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது – என்கிறார் வடக்கு ஆளுநர் சிறிலங்கா அதிபரின் ஒப்புதலைப் பெறாமலேயே ஜெனிவா தீர்மானத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபரின் பிரதிநிதிகளில் ஒருவராக ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்ற சுரேன் ராகவன், நாடு திரும்பிய பின்னர், கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் கூறினார். “ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக, சிறிலங்காவுக்கு அனுப்பப்பட்ட ஐ.நா தீர்மானத்துக்கு, பிரதமர் செயலகத்தில் உள்ள தனி நபர் ஒருவரே அங்கீகாரம் அளித்திருந்தார். அதற்கு அவர் சிறிலங்கா அதிபரின் அனும…

    • 33 replies
    • 3.2k views
  18. பட்ஜெட் : ஸ்ரீ ல.சு.க.யின் தீர்மானம் என்ன? – ஜனாதிபதி தலைமையில் கூட்டம் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குகிறதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய கூட்டமொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீது நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது வாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து இதன்போது கருத்தில் கொள்ளப்படவுள்ளதாகவும் கட்…

    • 0 replies
    • 220 views
  19. ஆளுநர் சுரேன் நாட்டாமை போல நடந்துகொண்டதாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு Mar 30, 20190 கிளிநொச்சி உணவகம் போடப்பட்ட விடயத்தில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஒரு நாட்டாமை போல நடந்துகொண்டதாக சட்டத்தரணி ஸ்ரீகாந்தா குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் உள்ள பிரபல உணவகத்திலிருந்து கிளிநொச்சி செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிற்கு வழங்கப்பட்ட மதிய உணவில் சிறிய புழு ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட புகாரின் பெயரில், கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்படவில்லை…

    • 1 reply
    • 755 views
  20. March 30, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn தன்னையும், தனது குடும்பத்தவர்களையும் பழிவாங்கும் நோக்கிலேயே 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏமாற்றி அதனை நிறைவேற்றிக் கொண்டுள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். …

  21. வவுனியா சின்னபுதுக்குளம் குடிமனைகளையண்டிய பகுதிகளில் சட்டவிரோதமாக கருங்கல் மற்றும் மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கொக்குவெளிய சின்னபுதுக்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டி நீண்ட நாட்களாக மண் அகழ்வு மேற்கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று (30) மதியம் 2 மணியளவில் களமிறங்கிய மடுகந்தை விஷேட அதிரடிபடையின் நிலைய பொறுப்பதிகாரி மனோஹரா தலைமையில் சென்ற விஷேட அதிரடிப்படையினர் இச் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர். இச் சுற்றிவ…

  22. எஹேலியகொட பிரதேசத்தில் இரண்டு கைகள் மற்றும் ஒரு காலினை இழந்த மாணவி ஒருவர் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவி சாதாரண தர பரீட்சையில் 8A, 1B சித்தியை பெற்று பாடசாலைக்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். எஹெலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற மாணவி இம்முறை சாதாரண தர பரீட்சையில் சிறந்த சித்தியை பெற்றுள்ளார். ஆசிரியர்கள், பெற்றோர்கள், தனது பாடசாலை நண்பர்களின் உதவியுடன் பரீட்சையில் விசேட வெற்றியை பெற்று கொள்ள முடிந்ததாக ரஷ்மி தெரிவித்துள்ளார். தனது ஒ…

  23. (நா.தனுஜா) ஜெனீவா 30(1) தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதி அறிந்திருந்தார் என பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த தீர்மானம் தொடர்பில் ஆராய்வதற்கென சர்வகட்சி மாநாடொன்றையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன நடத்தியிருந்தார். இப்போது அதில் என்ன இருக்கின்றது என்பது தனக்குத் தெரியாதென திடீரென்று நித்திரையிலிருந்து எழுந்தவர் போல அவர் கூறுவது நகைப்பிற்குரியது எனத் தெரிவித்திருக்கின்றார். 30(1) தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான இருவருட காலநீடிப்பே 2017 மார்ச்சிலும், 2019 மார்ச்சிலும் இ…

  24. 1 Min Read இவை நேற்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இடம்: ஏழுகோயில் – ஏழாலை அத்தியடிப் பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறமாகவும் அத்தியடி முருகன் ஆலயத்துக்கு அருகாமையிலும் அமைந்துள்ள பூந்தோட்டக் கிணறு. இவ்விடம் சுன்னாகம் மின்சார நிலைய வீதியில் இருந்து ஏறத்தாழ 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. தற்போது நாடுமுழுவதும் என்று மில்லாதவாறு வெப்பம் அதிகரித்துள்ளது. நீரூற்றுக்கள் வற்றிப் போகின்ற நிலை காணப்படுகின்றது. கடுங் கோடையான இக்காலப்பகுதியில் நிலத்தடி நீரில் கலந்துள்ள கழிவு எண்ணெய் அதிகரித்துள்ளதை இப்படங்கள் தெள…

  25. கூட்டமைப்பினர் தமது அரச விசுவாசத்தைக் காட்ட முனைகிறார்கள்-செ.கஜேந்திரன் Mar 30, 20190 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடாத்திய ஊடகவியியலாளர் சந்திப்பின்போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போது யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் நிறைவடையும் நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்றது. இக் கூட்டத் தொடரினூடாக ஒரு நீதி கிடைக்குமென தமிழ் மக்கள் பலத்த எதிர்ப்பார்ப்புக்களில் இருந்தனர். அதற்கமையவே இம்முறையும் இலங்கைக்கு சர்வதேச கண்காணிப்பு என்ற பெயரில் கால அவகாசம் வழங்கக் கூடாதென வடக்கு கிழக்கில் மக்கள் ஒன்று திரண்டு போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர் என செ.கஜேந்திரன் தெரிவித்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.