Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சூடுபிடிக்கிறது சுங்கப் பணிப்பாளர் நீக்க விவகாரம் – அமெரிக்க தலையீடா? சுங்களத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நீக்கப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும் தீவிரமான விவாதங்கள் தோற்றுவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நீக்கப்பட்டு, முன்னாள் கடற்படை அதிகாரியான, றியர் அட்மிரல் ஷேர்மல் பெர்னான்டோவை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது. இந்த நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுங்கத் திணைக்கள அதிகாரிகள், பணி நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதையடுத்து, முன்னாள் கடற்படை அதிகாரியான, றியர் அட்மிரல், ஷேர்மல் பெர்னான்டோ நியமனத்தை இடை நிறுத்தி வி…

    • 0 replies
    • 339 views
  2. வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சிக்காலத்தில் மத்திய அரசால் சுமார் 17 ஆயிரத்து 256 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக வடக்கு மாகாண திறைசேரியிடம் இருந்து இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக, அபிவிருத்திக்கு 618 மில்லியன் ரூபாய், பிரமாண கொடைக்காக 195 மில்லியன் ரூபாய், பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 310 மில்லியன் ரூபாயும், யுனிசெப் திட்டத்தில் 188.05 மில்லியன் ரூபாயும், 1000 பாடசாலை செயற்திட்டத்திற்காக 28 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. …

  3. UNHRC வழிகாட்டுதலின் கீழ் 83 அகதிகள் தாயகம் திரும்புகின்றனர்! தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்த 39 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் தமது தாயகத்திற்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் இந்த குழு தாயகத்திற்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 2009 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை 11,020 தமிழர்கள் நாடு திரும்பியுள்ளனர். இதனை விட மேலும் 3,815 அகதிகள் தங்கள் தாயகத்திற்கு திரும்புவதற்கு தற்போது ஒப்புக்கொண்டனர். இவ்வாறு வருபவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலையை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவர்கள் மீண்டும் தயக்கம் திரும்பும் முகமா…

  4. "இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2017ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதிக்கு முன்னர் மரணிப்பார்" என கணிப்பு கூறிய ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து, புதன்கிழமை அவர் விடுவிக்கப்பட்டார். மேற்படி வழக்கை சட்டமா அதிபர் மீளப்பெற்றமையினால், ஜோதிடரை அந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. இந்த ஜோதிடர் இலங்கை கடற்படையில் கடமையாற்றியவர் என்பதும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1987ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த போது, அவர் மீது தாக்குதல் நடத்திய கடற்படைச் சிப்பாய் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். …

  5. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தொடருந்துடன் சற்றுமுன்னர் ஒருவர் மோதி, தூக்கி வீசப்பட்டார். அவர் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் விபத்து நடந்துள்ளது. தொடருந்து மோதி தூக்கி வீசப்பட்ட நபர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் தூக்கி் வீசப்பட்டுள்ளது. நாவற்குழியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே விபத்தில் சிக்கினார் எனத் தெரிவிக்கப்படுகிறது. https://newuthayan.com/story/16/தொடருந்து-மோதி-தூக்கி-வீசப்பட்ட-நபர்.html

  6. (எம்.மனோசித்ரா) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக செய்துகொள்ளப்பட்ட புதிய கூட்டு ஒப்பந்தத்தை வர்த்தமானிப்படுத்தலை தற்காலிகமான இடைநிறுத்துவதற்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான தமிழ் முற்போக்கு கூட்டணியின் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. மேலும் எதிர்வரும் 5 ஆம் திகதி அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க மற்றும் ரவீந்திர சமவீர ஆகியோர்களது பங்குபற்றலுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை அலரி மாளிகையில் புதிய கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டிருந்தது. அதில் அடிப்…

  7. February 1, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn யாழ்.நாவாந்துறையில் இளம் பெண்ணை கடத்த முற்பட்டவர் என சந்தேகித்து தம்மால் மடக்கி பிடிக்கப்பட்ட நபரை காவற்துறையினர் கைது செய்யாதமையை கண்டித்து நாவாந்துறை மக்கள் இன்று காலை நாவாந்துறை சந்தை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்ற…

  8. February 1, 2019 ஹட்டன் நோர்வூட் பகுதியில் பெண்ணொருவரை மண்ணெண்ணை ஊற்றித் தீயிட்டுக் கொலை செய்த நபருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரணதண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இரு பிள்ளைகளின் தந்தையான 38 வயதான நபர் ஒருவருக்கே இவ்வாறு மரணதண்டணை விதிக்கப்பட்டுள்ளது. குடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றையதினம் , நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையிலேயே மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண், வைத்தியசாலையில் வைத்து வழங்கிய இறுதி வாக்குமூலத்தின் அடிப…

  9. இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி நடத்தவிருக்கும் போராட்டங்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணி தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. பிரித்தானியார்களிடம் இருந்து இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோதும் அதன் பலாபலன்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை. மாறாகத் தமிழ் மக்களுக்கு எதிராகப் பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட தொடர்ந்து வந்த பாராளுமன்றங்களினால் பல்வேறு அடக்குமுறைகளே கட்டவிழ்த்து விடப்பட்டன. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற யுத்தத்தில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு மற…

  10. 1 Min Read February 1, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn சர்வதேச கட்டுநாயக்க விமானநிலையத்தில் பயணிகளின் குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கையின் போது எற்படும் காலதாமதம் மற்றும் அசோகரியங்களை குறைப்பதற்கா…

  11. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள அரச வைத்திய சாலைகளில் உள்ள மருந்தாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (1) காலை முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் அரச வைத்திய சாலைகளில் உள்ள மருந்தாளர்களும் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். தற்போது அரசாங்கத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மருந்தக உதவியாளர் நியமனங்களை உடனடியாக நிறுத்த கோரி மன்னார் பொது வைத்…

  12. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சாவகச்சேரி காவல் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது 20 சிங்கள காவல்துறை உத்தியோகஸ்தர்களை காப்பாற்றிய தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தரான பாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை இயற்கை எய்தியுள்ளார். கடந்த 1984 ஆம் அண்டு சாவகச்சேரி காவல் நிலையம் மீது ரெலோ அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருந்த போது அங்கு கடமையில் இருந்த 20 சிங்கள காவல்துறையினரை பின்புறமாக பாதுகாப்பாக அழைத்து சென்று அங்கிருந்து காட்டு பாதையூடாக அழைத்து சென்று பின்னர் வான் ஒன்றில் அவர்களை ஏற்றி சென்று ஆனையிறவு இராணுவ முகாமில் பாதுகாப்பாக ஒப்படைத்திருந்தார். காவல்துறை …

  13. சிறிலங்கா படையினருக்கு பயிற்சி அளிக்கும் இந்திய கடற்படையின் டோனியர் விமானம் கடற்படை மற்றும் விமானப்படைக்குப் பயிற்சிகளை அளிப்பதற்காக, இந்திய கடற்டையின் டோனியர் விமானம் ஒன்று கடந்த திங்கட்கிழமை சிறிலங்கா வந்துள்ளது. வான்வழி அவதானிப்பு பயிற்சி ஒத்திகைக்காகவே, இந்த டோனியர் விமானம் இந்திய கடற்படையினால் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் தெற்கு கரைக்கு அப்பால் 10 கடல் மைல் தொலைவில், கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த இந்த பயிற்சி ஒத்திகை நேற்று வரை நீடித்தது. அரிதான இந்தப் பயிற்சியில், சிறிலங்கா கடற்படையின் 12 அதிகாரிகள் பங்கேற்ற…

  14. குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் கோப்பாய் காவல்துறையினரால் சேகரிப்பு January 31, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை கோப்பாய் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் . மேலும் தெரிவிக்கையில் , கோப்பாய் காவல்துறையினர்; வீடுகளுக்கு சென்று ஒரு படிவத்தை வழங்கி குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை சேகரித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வடக்கில் அமைதியான நிலை காணப்படும் நிலையில் எதற்காக இவ்வாறு தகவல்களை காவல்துறையினர்; சேகரிப்பது மக்கள் மத்தியில் …

  15. முரண்பட்டவர்களின் கூட்டு தமிழ் மக்களின் எதிர்காலம் என்ற தலைப்பில் ஐபிசி தமிழின் தீர்ப்பாயம் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் மக்களினுடைய உரிமைசார் அரசியல் போராட்டம், 30 ஆண்டுகள் ஜனநாயகத்திலும், இதர 30 ஆண்டுகள் ஆயுதத்திலும் ஆக, ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட விடுதலைக்கான அரசியல் கோட்பாட்டில் 2009 ற்கு பிந்திய மடைமாற்றம் பல்வேறு விதமான ஆயுத நிலைப்பாட்டிற்கும், ஜனநாயக சூழலிற்கும் இடைப்பட்ட மாறுதல்களையும் எங்களுக்கு பின்னடைவுகளையும் பல்வேறு வித நோக்கு நிலையில் கற்றுத் தந்திருக்கிறது. இதனடிப்படையில் ஐபிசி தமிழின் இந்த வார தீர்ப்பாயம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல அரசியல் பிரமுகர்களின் கருத்துக்களை நீங்களே பாருங்கள் ..... https://www.ib…

    • 4 replies
    • 631 views
  16. தமிழ்த் தரப்பினர், தமக்கான நீதியை, ஒருமித்த குரலில் ஒரே கோரிக்கையாக முன்வைக்க வேண்டும்.. சுரேஷ் பிரேமச்சந்திரன் February 1, 2019 எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, தமிழ்த் தரப்பினர், தமக்கான நீதியை, ஒருமித்த குரலில் ஒரே கோரிக்கையாக முன்வைக்க வேண்டுமென, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில், நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த் தரப்பினர், வௌ;வேறான கோரிக்கைகளை முன்வைக்கக் கூடாது எனத் தெரிவித்த அவர், தமிழ்த் …

    • 1 reply
    • 244 views
  17. சுதந்திர தினத்திலாவது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் : மன்னார் பிரஜைகள் குழு February 1, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. தமிழ் மக்களின் உரிமையையும்,வேண்டுகோளையும் அரசு மதித்து பல ஆண்டுகளாக அடிமைகளாக உரிமை இழந்து சிறைவாசம் அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதிகளை இலங்கையின் சுதந்திர தினத்திலாவது விடுதலை செய்யப்பட வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழு அரசிடம் வேண்டு கோள் விடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழு இன்று (01) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்து தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை அங்கீகரிக்குமாறு தமிழ் மக்களின் அரசியல் கைத…

    • 1 reply
    • 256 views
  18. கோத்­தாவை விசா­ரணை செய்ய விசேட மேல் நீதி­மன்­றுக்கு அதி­காரம் உள்­ளதா? (எம்.எப்.எம்.பஸீர்) இலங்கை காணி மீட்பு மற்றும் அபி­வி­ருத்தி கூட்­டுத்­தா­ப­னத்­துக்கு சொந்­த­மான 33.9 மில்­லியன் ரூபா பணத்தை நம்­பிக்கை மோசடி செய்­தமை தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்தபாய ராஜ­பக்ஷ உள்­ளிட்ட 7 பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கை நிரந்­தர விசேட மேல் நீதி­மன்றில் விசா­ரிக்க முடி­யுமா? முடி­யாதா? என்­பது குறித்து தீர்­மானம் எதிர்­வரும் 11 ஆம் திகதி அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த வழக்கு விசா­ர­ணை­களில் பிர­தி­வ­ட­ஹிகள் சார்பில் முன்­வைக்­கப்பட்­டுள்ள அடிப்­படை ஆட்­சே­பனம் மற்றும் அரச தரப்பின் பதில் ஆகி­ய­வற்றை ஆராய்ந்து எதிர்­வரும் 11 …

    • 1 reply
    • 283 views
  19. திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளம் திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக, லங்கா சமசமாசக் கட்சியின் பொதுச்செயலரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “இதுதொடர்பான இருதரப்பு உடன்பாடு, ஏற்கனவே சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதற்கமைய திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளம் அமைக்கப்படவுள்ளது. இதனால், நாட்டின் இறைமைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2019/02/01/news/36169

    • 0 replies
    • 438 views
  20. சிறிலங்காவின் தேசிய நாள் நிகழ்வு – புறக்கணிக்கிறார் சரத் பொன்சேகா காலி முகத்திடலில் எதிர்வரும் 4ஆம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்காவின், 71 ஆவது தேசிய நாள் நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என்று முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முடிவு செய்துள்ளார். தமக்கு இன்னமும், அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்று அவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். “பீல்ட் மார்ஷல் பதவியில் இருக்கும் ஒருவருக்கு உயர் மதிப்புக் கொடுக்கும் வழக்கம் உலகம் முழுவதும் இருக்கிறது. அவ்வாறான நிலையில் இந்தப் பதவிக்கு உரியை கௌரவம் கொடுக்கப்படா விட்டால், அத்தகைய நிகழ்வில் பங்கேற்கமாட்டேன்.” என்றும் அவர் தெரிவித்தார். சிறிலங்காவின் தேசிய நாளை முன்னி…

    • 0 replies
    • 162 views
  21. இந்த ஆண்டு இறுதிக்குள் சீனா- சிறிலங்கா இடையில் சுதந்திர வணிக உடன்பாடு சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வணிக உடன்பாடு இந்த ஆண்டு கையெழுத்திடடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சீனாவின் சைனா டெய்லி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தை மேற்கோள்காட்டியே இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சுதந்திர வணிக உடன்பாட்டை இறுதி செய்வதற்கான ஆறாவது கட்டப் பேச்சுக்கள் கடந்த 2017 மார்ச் மாதம் நிறைவடைந்து விட்டதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. சீன சந்தைக்கு சிறிலங்காவின் ஏற்றுமதிகளை விரிவுபடுத்துவதற்கு சிறிலங்கா மிகவும் ஆர்வமாக இருக்கிறது என்று, சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொட…

    • 0 replies
    • 181 views
  22. அடுத்த வாரம் மீண்டும் உருவாகிறது தேசிய அரசாங்கம்? அடுத்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் சாத்தியம் இருப்பதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு விருப்பம் தெரிவித்து, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக திசநாயக்கவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. நல்லாட்சி அரசுக்கான கொள்கைகளுடன், பல்வேறு கட்சிகளைக் கொண்ட தேசிய அரசாங்கம் ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கவிருப்பதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு விரும்பும் எந்தக் கட்சிக்கும், ஐதேக இடமளிக்கத் தயாராக இருப்பதாக, ஐதேகவின் தலைவர…

    • 0 replies
    • 694 views
  23. சிறுபான்மை மக்கள் ஒருபோதும் கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் – ரஞ்சன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அவருடைய வாழ்நாளில் ஒருபோதும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளமாட்டார் என, நெடுஞ்சாலை வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும், ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கத் தயார் என்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து கருத்து தெரிவித்த போதே இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த காலங்களில் கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டதாகவும், அதனால் அவருக்கு சிறுபான்மை மக்களின் வாக…

  24. ஏறாவூர் விபத்தில் – விரிவுரையாளர் உயிரிழப்பு மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்ற விபத்தில் விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே இன்று(வியாழக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது சந்தை வீதி, செங்கலடியைச் சேர்ந்த கந்தக்குட்டி கோமளேஸ்வரன் (வயது 48) என்ற மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையின் இரசாயனவியல் விரிவுரையாளரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த விரிவுரையாளரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள…

  25. வெற்றிலைக்கேணி முதல் சுண்டிக்குளம் வரை சத்தமின்றி பறிபோயுள்ளது! ஆக்கம்- கா.எழிலரசி.. வட தமிழீழம், வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி முதல் சுண்டிக்குள்ம நல்லதண்ணீர் தொடுவாய் வரை யான பகுதி வன ஜீவராஜிகள் திணைக்களத்தால் தேசியப்பூங்கா எனும் பெயரில் அபகரிக்கப்ப ட்டுள்ளது. இந்த அறிவித்தல் சுண்டிக்குளம் வனவிலங்குகள் காப்பகம் தேசிய பூங்காவாக 22 யூ ன் 2015 அன்று அதன் 19,565 ha (48,347 acres) பரப்புடன் அறிவிக்கப்பட்டது. சுண்டிக்குளம் சரணாலய விஸ்தரிப்­புக்காக வன ஜீவராசிகள் திணைக்களம் மக்களின் காணி களில் எல்லைக்கற்களை நாட்டியுள்ளது.இதன் கரையோர எல்லையே வெற்றிலைக்கேணியிலி ருந்து சுண்டிக்குளம் நல்லதண்ணீர் தோடுவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.