Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. January 12, 2019 இலங்கையில் உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பு உருவாக்கமானது, கிணற்றில் போடப்பட்ட கல்லுப்போல அசையாது உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இன்று வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 3 வருடங்களாக தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதாகக் கூறி புதிய அரசியலமைப்புக்கு கட்சிகளினால் வழங்கப்பட்ட ஆலோசனைகள் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அது வெறுமனவே கிணற்றில் போட்ட கல்லாகவே இருக…

  2. January 12, 2019 இலங்கையின் புதிய இராணுவ பிரதானி சவேந்திரசில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் யுத்த குற்றங்கள் குறித்து தீவிர சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதனை தடுப்பதற்கான , யுத்தத்திpன் பின்னரான பாதுகாப்பு துறை சீர்திருத்தங்களின் போது படையினர் குறித்து விசாரணைகளை மேற்கொள்வது மிகமுக்கியம் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. 2009 உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்கள…

  3. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு பின்னர் ஒன்பது பாரவூர்திகளில் நிவாரண பனர்கள் கட்டியவாறு கொண்டுவரப்பட்ட பொருட்கள் கிளிநொச்சி சதொச விற்பனை நிலையத்தில் இறக்கப்பட்டமை தொடர்பில் பொது மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சுமார் ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான அரிசி,மா, சீனீ, பருப்பு, கடலை, சோயா, ரின்மீன், பிஸ்கட், தண்ணீர் போத்தல்கள், வெங்காயம் போன்ற பொருட்களே இவ்வாறு இறக்கியதாக பொருட்களை இறக்கி ஏற்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு இறக்கப்பட்ட பொருட்களில் அரிசி, மா, சீனி, பருப்பு, கடலை, சோயா ஆகிய பொருட்கள் பொதி செய்யப்பட்டு வருவதாகவும…

  4. January 12, 2019 விரைவில் ஆட்சியை கைப்பற்றுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்து ஆளுங்கட்சி ஆசனத்தையும் கைப்பற்றுவோம் என அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் பதவி ஆசை கொண்ட அரசாங்கம் எனவும் மக்களுக்கு சேவையற்றாது பதவி ஆசையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர் நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும் செயற்பாடுகளில் அரசு ஈடுபடுவதாகவும் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டு மக்களும் தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கைய…

  5. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கண்டி மாவட்ட செயலகத்தினால் கற்றல் உபகரணங்கள் கையளிப்பு January 12, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கண்டி மக்களின் பங்களிப்புடன் கண்டி மாவட்ட செயலகம் 15 லட்சம் பெறுமதியான பாடசாலை பொதிகள் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மாவட்ட செயலகங்கள் ஊடாக உதவிக்கரம் நீட்டும் நோக்குடன் இன்று கண்டி மாவட்ட செயலகத்தினால் குறித்த பொருட்கள் கையளிக்கப்பட்டன. கண்டி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரால் குறித்த பொருட்கள் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலனிடம் கையளி…

  6. பன்னங்கண்டி பிரதேசத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணி துப்பரவு பணி January 12, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பன்னங்கண்டி பிரதேசத்தில் இன்று காலை அங்கஜன் இராமநாதனை தலமையாக கொண்ட சிறிலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணியினரால் துப்பரவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பன்னங்கண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உள்ளிட்ட பொது இடங்கள் இவ்வாறு துப்பரவு செய்யப்பட்டன. கிளிநொச்சி யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து இளைஞர் யுவதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டு பன்னங்கண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகம், பாடசாலை கட்டடங்களிற்கு வர்ணம் பூசுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தனர். இதேவேளை ந…

  7. டிரான் அலஸ் – ராடா நிறுவனம் – புலிகள் – கொடுக்கல் வாங்கல் – விசாரணை – நீதிபதி விலகல்… January 12, 2019 டிரான் அலஸ் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக தான் விலகுவதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் கலுஆராச்சி தெரிவித்துள்ளார். ராடா நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டில் டிரான் அலஸ் உள்ளிட்ட 04 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இதுவரையில் தனது முன்னிலையில் நடைபெற்றதாகவும், எனினும் சாட்சி விசாரணைகளின் போது வெளியாகிய பல விடயங்கள் காரணமாக தனிப்பட்ட ரீதியில் வழக்கு விசா…

  8. உண்ணாவிரதப் போராட்ட அரசியல்கைதியின் உடல் நிலை மோசம் January 12, 2019 அனுராதபுரம் சிறைச்சாலையில் விடுதலை கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்ற சிவப்பிரகாசம் சிவசீலன் (32) என்ற அரசியல் கைதியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைகள் முற்றுப்பெற்று, தீர்ப்பளிக்கப்படுகின்ற நிலையில் அவருடைய வழக்குத் தவணைகளுக்கு இராணுவ தரப்பினர் வருகை தருவதில் காட்டுகின்ற அசிரத்தையும் அக்கறையின்மையும் அவருடைய விடுதலையைத் தாமதிக்கச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் அவர் கடந்த 5 ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர் தண்ணீர் அருந்துவதையும் நிறுத்தியுள்ளதனால் அவருடைய உடல் நிலை மோசமடை…

  9. மாதகல் – போதிமயானத்தில் நிலைகொண்டிருந்த இராணுவம் வெளியேற்றம் January 12, 2019 வலி.தென்மேற்கு பிரதேசத்தின் மாதகல் முதலாம் வட்டாரத்திலுள்ள போதிமயானக் காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து மயானத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் பிரதேச சபை ஈடுபட்டுள்ளது. குறித்த மயானக் காணியின் ஒரு பகுதியில் இராணுவத்தினர் பல வருடங்களாக நிலைகொண்டிருந்த இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் பிரதேச சபையைக் கோரியிருந்த நிலையிலேயே இராணுவம் கடந்தவாரம் மயானத்தை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2019/109683/

  10. முல்லைத்தீவில் ஜனாதிபதி செயலணி தலைமையில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் : January 12, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் போதைத்தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் முன்னாயத்த கலந்துரையாடல் கூட்டம் ஒன்று 11.01.19 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலணியின் முதன்மை அதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய காவல்துறை அதிகாரி மகிந்த குணரத்தின பிரதேச செயலாளர்கள் மற்றும் முப்படை அதிகாரிகள் வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள் மாவட்ட செயலக அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டுள்ளார்கள். போதைக்கு எதிரான பாடசாலையின் பலம் என்ற தொனிப்பொ…

  11. இலங்கை கிழக்கு மாகாணம்: "தமிழ் மக்களுக்கு இனி அநியாயங்கள் நடக்கக்கூடாது" - சம்பந்தன் மாகாண நிர்வாகத்தில் தமிழ் மக்களுக்கு கடந்த காலங்களில் அநியாயங்கள் இடம்பெற்றதாகவும், அவ்வாறான அநியாயங்களும் எதிர்காலத்தில் நடந்துவிடக் கூடாது எனவும் இலங்கை கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிடம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரா. சம்பந்தன் கேட்டுக் கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை, இன்று வியாழக்கிழமை ஹிஸ்புல்லா கொழும்பில் சந்தித்தார். இதன்போது எந்தவொரு இனத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் நீதியாகவும், நேர்மையாகவும் தன…

    • 4 replies
    • 927 views
  12. வடபுலத்தில் இராணுவம் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் - அனந்தி மண்டைதீவு உட்பட வடபுலத்தில் இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் உள்ளன என்று ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சருமான திருமதி அனந்தி சசிதரன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இராணுவம் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் சர்வதேச கண்காணிப்புடன் மனித புதை குழி தொடர்பான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …

  13. ஆட்கடத்தல் கும்பலிடமிருந்து 24 இலங்கையர்கள் மீட்பு- மலேசிய பொலிஸார் அதிரடி மலேசியாவிலிருந்து அவுஸ்திரேலியா நியுசிலாந்திற்கு ஆட்களை கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கையர்களை கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள மலேசியா பொலிஸார் இவர்களிடமிருந்து 24 இலங்கையர்கள் உட்பட 34 பேரை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் மலேசி ய பொலிஸ்மா அதிபர்டன் சிறி முகமட் பியுஜி ஹருன் இதனை அறிவித்துள்ளார் மீட்கப்பட்டுள்ளவர்களில் எட்டு பெண்கள் உட்பட 24 இலங்கையர்களும் 10 இந்திய பிரஜைகளும் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் நுழைந்து தங்கியிருந்த குற்றச்சாட்டில் மூன்று இலங்கையர்களை கைதுசெய்துள்ளோம் இவர்களே ஆள்கடத்தலில் ஈடுபட்டனர் என சந்தேகிக்கின்றோம் எனவும் அ…

  14. ’இறுதிப் போரில் இடம்பெற்ற தவறுகள்; தீர்த்துக்கொள்வதற்கான நீதிப்பொறிமுறை இலங்கையில் இன்றுள்ளது' - அழகன் கனகராஜ் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர், சர்வதேச நாடுகளுடனான இலங்கையின் உறவு மிகவும் பலமானதாகவும் வலுவானதாகவும் மாறியுள்ளதென்றுத் தெரிவித்த அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி.பெரேரா, இறுதி யுத்தத்தில் எத்தகைய தவறுகள் இடம்பெற்றிருந்தாலும், அவற்றைத் தீர்த்துக்கொள்வதற்கான நீதிப்பொறிமுறை, இலங்கை இன்று உள்ளதென்றார். நாடாளுமன்றத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற இராஜதந்திரிகளது சிறப்புரிமைகள் சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இருள் சூழ்ந்த யுகத்தில் இருந்த இலங்கையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தோம் என்றார். …

    • 0 replies
    • 430 views
  15. ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் நகர்வுகள் குறித்து அரசியலமைப்பு சபையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரச தரப்பினருக்கும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எதிர்க்கட்சியினருக்கும் இடையில் காரசாரமாக வாக்குவாதம் இடம்பெற்றது. புதிய அரசியல் அமைப்பினை உருவாக்க வேண்டுமானால் வாருங்கள் பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுபோம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கோரிக்கை விடுத்தார். அரசியலமைப்புக்கான நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் உத்தேச வரைவுத் திட்டத்தை முன்வைத்து அரசியல் அமைப்பு சபை இன்று காலை 10 மணிக்கு கூடிய வேளை…

  16. வலி வடக்கு மீள்குடியேற்றப்பகுதிக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவர்கள் மூவர் போதை மாத்திரைகள் உட்கொண்டு போதை ஏறிய நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், நல்லிணக்க புரத்தில் உள்ள இரு மாணவர்களும் தெல்லிப்பழையை சேர்ந்த ஒரு மாணவனும் இணைந்து நேற்றுக் காலை பாடசாலைக்குள் சென்றுள்ளனர். அதில் நல்லிணக்கபுரத்தை சேர…

  17. January 11, 2019 தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்குழியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் அதிபர் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் சிலர் தாக்க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பாடசாலை மாணவர்கள் ஒன்று திரண்டு ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறிப்பிட்ட சில மாணவர்கள் பாடசாலையின் ஒழுக்க விதிகளை மீறியும் ஏனைய மாணவர்களை அச்சுறுத்தும் விதத்திலும் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்துள்ளனர். இவர்கள் பாடசாலைக்…

  18. January 11, 2019 புலமைச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட விமல் வீரவன்ச, மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வாவிற்கு 10 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு வணிக மேல்நீதிமன்ற நீதிபதி ருவன் பெர்னாண்டோவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமல் வீரவன்ச அவரது பெயரில் வௌியிட்ட நூல் ஒன்றில் உள்ளடக்கப்பட்டுள்ள விபரங்கள் அனைத்தும், அவர் மக்கள் விடுதலை முன்னணியில் அங்கம் வகித்த போது தாம் நிறைவேற்றுக்குழுவில் முன்வ…

  19. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் நடவடிக்கையினால் தென் கொரிய நாட்டின் பல்தேசிய கம்பனியான எம்.பி.ஜி குறூப் நிறுவனத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்டு கல்முனை பிரதான வீதியில் பொருத்தப்பட்ட நவீன ஒன்லைன் தொழில்நுட்ப எல்.ஈ.டி தெருமின்விளக்கு தொகுதி மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று(10) வியாழக்கிழமை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்; மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் அழைப்பின் பேரில் தென் கொரிய நாட்டின் எம்.பி.ஜி குறூப் நிறுவனத்தின் பிரதித் தலைவி ஹெ…

  20. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… பனை மரத்தின் அடிப்பகுதியில் இருந்து அழகு சாதன பொருட்களை உற்பத்தி செய்யும் பயிற்சிகளை வழங்க உள்ளதாக யாழ்ப்பாண பனை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. அனுமதியுடன் தறிக்கப்படும் பனைகள் , இயற்கை அனர்த்தங்களால் விழும் பனைகள் உள்ளிட்டவற்றின் அடிப்பகுதி குற்றிகள் விறகு தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவற்றில் இருந்து அழகு சாதன பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். அதற்கான பயிற்சிகளை வழங்கப்படவுள்ளது. சாவகச்சேரி சரசாலையில் உள்ள பயிற்சி நிலையத்தில் கிழமை நாட்களில் இந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. மூன்று மாத கால பகுதியை கொண்ட இந…

  21. January 11, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn இந்திய துனணத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்திய கல்வி கண்காட்சி பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சி மூலம் இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்கள் இந்தியாவில் கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடி…

  22. (எம்.பஹ்த் ஜுனைட்)கிழக்கு மாகாணத்தில் நல்லுறவுடன் வாழும் தமிழ்,முஸ்லிம் சமூகங்களுக்கிடையில்குழப்பங்களை உருவாக்கி பிரிவினைகளை தோற்றுவிக்கும் வகையிலும் ஜனாதிபதியினால் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு எதிர்ப்பு தெறிவிக்கும் வகையிலும் கிழக்கு மாகாண மக்கள் ஒன்றியம் எனும் பெயரில் இன்று (11) கிழக்கு மாகாணம் முழுவதும் வர்த்தக நிலையங்கள், அரச அலுவல்களையும் மூடி வாகனங்களை பயனிக்காது நிறுத்தி ஹர்தல் அனுஸ்திக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.இக் ஹர்தல் அழைப்பை புறக்கணித்து தமிழ்,முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையின் பலத்தை நிரூபிக்கும் வகையில் கிழக்கு மாகாணம் முழுவதுமாக வழமை போன்று கடைகள் திறக்கப்பட்டு போக்குவரத்து சீராக இடம்பெற்றது.இன்றைய …

    • 1 reply
    • 807 views
  23. தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தை பிள்­ளை­யான் உள்­ளிட்ட 6 பேர் இணைந்தே படு­கொலை செய்­தோம் என முத­லா­வது மற்­றும் இரண்­டா­வது எதி­ரி­கள் வழங்­கிய குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்தை மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்­றம் நேற்று ஏற்­றுக் கொண்­டது. வழக்­கின் எதி­ரி­க­ளில் ஒரு­வ­ரான பிள்­ளை­யான் (சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்­தன்) ஜோசெப் பர­ரா­ஜ­சிங்­கம் கொலை­யு­டன் தொடர்­பு­டை­ய­வர் என்று எதி­ரி­க­ளின் குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்­தில் குறிப்­பிட்­டுள்­ள­னர். அத்­து­டன், பிள்­ளை­யான் உள்­ளிட்ட 6 எதி­ரி­க­ளுக்­கும் எதி­ரான வழக்கை மேற்­கொண்டு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க சட்­டமா அதி­பர் திணைக்…

  24. ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு! ?? பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை, சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி, பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு, பெவதிஹட அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் இனம், மதம் தொடர்பில் அவர் ஆற்றியுள்ள பங்களிப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுக்குமாறு, குறித்த அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நாரஹன்பிட்டி அப்யராம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய…

    • 0 replies
    • 431 views
  25. கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு http://battinaatham.net/description.php?art=18313

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.