Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெற்றிக்கொண்டாட்டத்தில் ஐ.தே.க. ஆதரவாளர்கள் (2ஆம் இணைப்பு) புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதையடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு வெடித்தும் இனிப்புகளை பகிர்ந்தளித்தும் அவர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு முன்பிருந்தே ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் ஜனாதிபதி செயலகத்தை சூழ்ந்திருந்தனர். அத்தோடு குறித்த பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பரபரப்பாகும் ஜனாதிபதி செயலகம் -வெற்றிக்கொண்டாட்டத்திற்கு தயாராகின்றனர் ஐ.தே.க. ஆதரவாளர்கள் …

  2. சுவாமிநாதனின் அமைச்சு கூட்டமைப்பால் பறிபோனது – வீடமைப்பு அமைச்சராக மலிக்? முன்னாள் அமைச்சர் சுவாமிநாதனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு காட்டிய எதிர்ப்பையடுத்து, வடக்கு மீள்குடியேற்ற அமைச்சராக மலிக் சமரவிக்ரம நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் வடக்கு மீள்குடியேற்ற அமைச்சருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்கள் சிலருக்கும் இடையில் சுமுகமற்ற உறவு ஏற்பட்டது. இதனால் வடக்கு வீடமைப்பு திட்டம் குறித்து அமைச்சரவைக்குள் சர்ச்சை ஏற்பட்டதுடன், கூட்டமைப்பின் பிரமுகர்கள் சிலருடன் பகிரமங்கமான கருத்து மோதலிலும் சுவாமிநாதன் ஈடுபட்டார். இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி அமைக்கவுள்ள அரசாங்கத்தில் புதிய அமைச்சர் பதவிக்கு மலிக் சமரவிக்கிரம நியமிக்கப்ப…

  3. 21 எம்.பிக்களின் முடிவு - மைத்திரி அதிர்ச்சி! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தம்மால் எதிரணியில் அமரமுடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருடன் தனியாக பேசுவதற்காக கூட்டம் முடிவடைந்த பின்னரும் காத்திருந்தனர். எதிரணியில் அமர்வதால் எந்த அரசியல் எதிர்காலமும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை என சிறிசேனவிடம் தெரிவித்த அவர்கள் எதிரணியில் அமர்வதன் மூலம் நாங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்துக்களையே பிரதிபலிக்க முடியும்…

  4. சிங்கள பௌத்த இனவாதத்தை கையிலெடுக்கின்றார் மகிந்த- சுனந்த கருத்து மகிந்த ராஜபக்ச தனது பதவி விலகல் குறித்து தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் காணப்படும் கருத்துக்கள் அவர் தீவிர சிங்கள பௌத்த பிரச்சாரத்திற்கு தயாராவதை வெளிப்படுத்தியுள்ளதாக மனித உரிமை செயற்பட்டாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் மகிந்த ராஜபக்ச தனது அறிக்கையில் 103 ஆசனங்களை மாத்திரமே கொண்டுள்ள ஐக்கியதேசிய கட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது பணயக்கைதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பு சொல்வதை ஐக்கியதேசிய கட்சி செவிமடுக்காவிட்டால் ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற பெரும்பான்மையை இழக்கவேண்டிவரும் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். …

  5. மட்டக்களப்பில் தமிழ் குழந்தைகள் பிறந்தால் ஆபத்து!! இலங்கையின் வட,கிழக்கில் நடைபெற்ற யுத்தத்தில் தமிழ் மக்கள் பல்லாயிரம் உயிரழிவு, சொத்தழிவு, காணிகள் இழந்து இன்று மூன்றாவது இனமாக வீழ்ச்சியடைந்து உள்ளது. தமிழரின் சந்ததி பெருக்கம் மிகவும் குறைவு இதன் தொடக்கப்புள்ளி வறுமை நாம் யுத்தத்தைதான் மறந்தாலும் தற்பொழுது 2009க்கு பிறகு தற்போது வரை பத்தாண்டிலுள்ள தமிழர் கிழக்கில் அரச அமைச்சராகவோ, இல்லாததால் அரச வேலைவாய்ப்புகள், சாதரண தகமை கொண்ட சிற்றூழியர்கள், அரச போக்குவரத்து சாரதிகள், நடத்துனர்கள், பாடசாலை பாதுகாவலர், விவசாய திணைக்கள ஊழியர்கள் போன்ற பதவிகளில் கூட அரசியல் பலம் இல்லாததால் வேலைவாய்ப்பு இல்லை. இதனால் கூழித்தொழிலாளிகள், அத்தோடு கணவன்மார் சிறைக்கதி, உயிரிழ…

  6. கரு வீட்டில் ஒரு மணி நேரம் ரணிலுடன் மனம் விட்டுப்பேசினார் மைத்திரி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இரவு நீண்ட சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான, சிறிலங்கா அதிபரின் அரசிதழ் அறிவிப்பு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் நேற்றுமுன்தினம் மாலை அறிவித்திருந்தது. இதையடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சபாநாயகர் கரு ஜெயசூரியவும், ரணில் விக்கிரமசிங்கவும் மூடிய அறைக்குள் இரகசிய பேச்சு நடத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தப் பேச்சு 10 நிடங்களே இடம்பெற்றது என்ற…

  7. லண்டனைச் சேர்ந்த தம்பதி தமது மகனின் பிறந்த தினத்தை முன்னிட்டு வவுனியா மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளனர். வவுனியா நெடுங்கேணி மற்றும் ஒலுமடு பாடசாலையை சேர்ந்த 100 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ம.தியாகரசா மற்றும் வவுனியா வடக்குப் பிரதேச சபை உறுப்பினர்களான ரி. தமிழ்செல்வன், இராஜசுலோச்சனா மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர் தேவராசா ஆகியோர் கலந்து உபகரணங்களை வழங்கினர். ரி.ஆர்.ரி சமூகப் பணியினூடாக வருடாவருடம் இவ்வாறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. …

  8. ஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு December 15, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரும் அதன் ஊடக பேச்சாளருமான துளசி என அழைக்கப்படும் கணேசலிங்கம் சந்திரலிங்கத்தை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக நெடுங்கேணி சேணப்பிழவில் வசிக்கும் துளசியை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் இரண்டாம் மாடிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்ன காரணத்திற்காக விசாரணைக்கு அழைக்கப்படுகி…

  9. தாய் நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள் தாய் நாட்டின் எதிர்கால நன்மை கருதி அரசியல் கட்சி சார்பின்றி கடமைகளை நிறைவேற்ற அனைத்து பிரஜைகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.தியத்தலாவை இராணுவ கல்வியியற் கல்லூரியின் 93 ஆவது பயிற்சி நிறைவு விழாவில் இன்று முற்பகல் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பலப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவேற்ற தான் தயாராக உள்ளதாக தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பிலான பொறுப்புகளையும் தற்போது தாய் நாட்டுக்…

  10. ஐனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற ஐ.தே.க தயார்- சஜித் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஐக்கியதேசிய கட்சி தயார் என பிரதிதலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். ரணில்விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு சிறிசேன இணங்கியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதில்லை என முன்னர் உறுதியாக தெரிவித்திருந்த போதிலும் தற்போது ரணிலை நியமிப்பதற்கு அவர் இணங்கியுள்ளமை குறித்து நான் ஆச்சரியப்படவில்லை என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். இது ஜனாதிபதியின் உண்மையான குணாதிசயத்தை வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கத்தை விரும்பாத சிலர் ஜனாதிபதியை தவறாக வழிநடத்தினர் இதன் காரணம…

  11. “தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது” தற்போதைய அரசாங்கத்தின் ரிமோட் கன்ட்ரோல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடமே உள்ளது என தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் அறிக்கை வெளியிட்டுள்ளார் மஹிந்த ராஜபக்ஷ அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் மக்களுக்குப் பொதுத் தேர்தல் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதே எமது இலக்காக இருந்தது. பொதுத் தேர்தல் ஒன்று நடாத்தப்படாத சூழ்நிலையில் நான் பிரதமர் பதவியை வகிப்பதில் அர்த்தமில்லை. நீதிமன்றின் நீண்ட தீர்ப்பை நான் வாசித்தேன் அதனை மதித்து செயற்பட வேண்டும். பாராளுமன்றில் வெறுமனே 103 ஆசனங்களை கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியை தமிழ்த் தேசிய கூ…

  12. கோத்தபாயவிற்கு ஆதரவான பிரச்சாரங்கள் ஆரம்பம் மகிந்த ராஜபக்சவின் பதவி விலகல் அறிவிப்பை தொடர்ந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை முன்னிறுத்தும் நடவடிக்கைகளை அவரது ஆதரவாளர்கள் ஆரம்பித்துள்ளனர் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை முன்னிறுத்தும் நடவடிக்கைகள்ஆரம்பமாகியுள்ளன கோத்தபாய ராஜபக்சவின் ஊடக பேச்சாளர் மிலிந்தராஜபக்ச கோத்தபாய ராஜபக்சவை மையப்படுத்திய பிரச்சாரமொன்றை ஆரம்பித்துள்ளார். இதேவேளை கோத்தபாய ராஜபக்சவின் நண்பர் ஒருவரின் செய்தித்தாளான இரிதா அருண மைத்திரி கோத்தபாயவின் வருகையை வரவேற்கின்றார் விரும்புகின்றார் என செய்தி வெளியிட்டுள்ளது http://www.virakesari.lk/article/46440

  13. மைத்திரி அணியின் 20 பேர் எம்முடன் : அதிரடி நிபந்தனை விதிக்கிறது ஐ.தே.க (எம்.மனோசித்ரா) ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய அரசாங்கத்தில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 20 பேர் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தூய்மையான புதிய அமைச்சரவை பதவிப்பிரமானம் செய்து கொள்ளுமெனவும் தெரிவித்தார். அலரி மாளிகையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் எம்முடன் இணைந்தால் அதனை வரவேற்கின்றோம். ஆனால் அவர்கள் குழுவாக எம்முடன் இணைவதற்கு இடமளிக்கப்போவதில்லை. தனித்தனி உறுப்பினர்களா…

  14. மஹிந்த தலைமையில் விசேட கலந்துரையாடல் ! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் இடையிலான கூட்டமொன்று தற்பொழுது கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் நடைபெறுவதாக கூறப்படுகின்றது. இந்த கூட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்களும் கலந்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷவின் இராஜினாமா உரை இன்று காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இக்கூட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.dailyceylon.…

  15. ISIS குர்ஆனை ஆதாரம் காட்டி மக்களைக் கொலை செய்வது போன்றுதான் ஐ.தே.க.யின் நிலை- டளஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் ஜனநாயகம் குறித்து கருத்துத் தெரிவிப்பதற்கு உதாரணம், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் புனித குர்ஆனை ஆதாரம் காட்டி மனிதர்களின் கழுத்தை வெட்டிக் கொலை செய்வதைப் போன்றது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி எம்மைப் பார்த்து அரசியலமைப்பு சதிகாரர்கள் எனக் கூறுகின்றனர். உலகில் எந்தவொரு நாட்டிலாவது அரசியலமைப்புக்கு எதிராக செயற்படுபவர்கள் யாராவது தேர்தலைக் கேட்டு போராட்டம் நடாத்தியிருக்கின்றார்களா? இருந்தால், ஒரு உதாரணம் கூறுங்கள் எனவும் அவர் மேலும் கூறினார். இன்று (14) கொழும்பில்…

  16. புதிய அமைச்சர்களின் பட்டியல் இன்று மைத்திரியிடம் கையளிப்பு சிறிலங்காவின் புதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் கையளிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நாளை காலை 10 மணிக்கு, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்பார் என்று, ஐதேக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. புதிய அமைச்சர்களின் பதவியேற்பு நாளை மறுநாள் திங்கட்கிழமை இடம்பெறலாம் என்றும் எதிர்பாார்க்கப்படுகிறது. அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில் இடம்பெறவுள்ள அமைச்சர்களின் பட்டியலைத் தயாரிக்கும் பணி நேற்றிரவு அலரி மாளிகைய…

  17. மகிந்தவின் விலகல் நடந்தது எப்படி?- சமந்தா பவர் கூறும் காரணம் சிறிலங்கா மக்கள், சிவில் சமூகம், சுதந்திர ஊடகங்கள், நீதிமன்றம் ஆகியவற்றினால் தான், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகிக் கொள்ள முடிவு செய்திருப்பதாக நேற்றுமாலை, தகவல் வெளியானதை அடுத்தே, அவர், சிறிலங்கா மக்கள், சிவில் சமூகம், சுதந்திர ஊடகங்கள், நீதிமன்றம் ஆகியவற்றினால் தான், இது நடந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, நாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அரசிதழ் அறிவ…

  18. சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் தனியாக ஆலோசனை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று தமது எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பாக தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீரவின் இல்லத்திலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து செயற்படுவது குறித்தே இவர்கள் ஆலோசனைகளை நடத்தி வருவதாக நம்பகமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்பது தொடர்பான தெளிவா…

  19. ரணில் தலைமையிலான அமைச்சரவையில் ஸ்ரீ.சு.க. உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி! ரணில் விக்ரமசிங்க தலைமையில் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில், முதற்கட்டமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆறு உறுப்பினர்கள் இணைந்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அவர்களுக்கான அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. எனினும், குறித்த ஆறு பேரும் ஒரு கட்சியாக அன்றி, தனி நபர்களாகவே அரசாங்கத்தில் இணைந்துக் கொள்ள போவதாக கூறப்பட்டுள்ளது. ஐ.தே.க.யுடன் இதற்கான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நிறைவுசெய்து ஒரு உடன்படிக்கைக்கு வந்திருப்பதாக குறிப்பிடப்படுகின்ற போதிலும், அரசாங்கத்தில் இணையும் உறுப்பினர்கள் குறித்த …

  20. எதிர்க் கட்சியில் தொடர்ந்து நீடிப்பதா?- கூட்டமைப்பின் தீர்க்கமான முடிவை வலியுறுத்தும் ஐ.ம.சு.கூ. ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியாக செயற்படுவதா அல்லது எதிர்க்கட்சியாகவே திகழ்வதாக என்பது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பு, ஐ.தே.க.விற்கு ஆதரவாக செயற்பட்டிருந்த நிலையில், அது தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கூட்டமைப்பு தமது ஆதரவை வெள…

  21. கூட்டமைப்பின் ஆதிக்கத்தை தடுக்க ஜனாதிபதியின் திட்டம்! ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதிக்கம் செலுத்துவதை தடுப்பதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனிமேல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டு வைத்துக் கொள்ளாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் இரவு தமது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது கூறியிருந்தார். எனினும், தனிநபர்களாக, புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்பவர்களை தடுக்கமாட்டேன் என்றும், அ…

  22. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வார் என நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்திய பின்னர் தனது இராஜினாமா தொடர்பில் அறிவிப்பார் எனவும் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/46405

  23. நாட்டில் ஏற்பட்ட 49 நாட்கள் நெருக்கடி நிலை தீர்ந்தது – ஒரு பார்வை கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதியில் இருந்து 49 நாட்கள் நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலைமை தற்போது முற்றுபெற்றுள்ளது. அந்தவகையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து நாட்டில் பெரும் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டிருக்கவே, நாடாளுமன்ற அமர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அத்தோடு கட்சி தாவல்களும் இடம்பெற்றன. 113 என்ற பெருமைப்பாண்மையை நிரூபிப்பதில் தொடர்ந்தும் மஹிந்த மற்றும் மைத்திரி அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவு காணப்பட்டது. இதன் காரணமாக பு…

  24. பிரதமராக ரணில் ஞாயிறு பதவியேற்பார்! ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பிரதமராக பதவியேற்பார் என ஐக்கிய தேசிய கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி உத்தியோகப்பூர்வமான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளைய தினம் தான் புதிதாக ஏற்றுக்கொண்ட பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். இந்நிலையில் நாளை மறுதினம் ரணில் விக்ரமசிங்க 5 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/பிரதமராக-ரணில்-ஞாயிறு-பத/

    • 8 replies
    • 1.6k views
  25. December 7, 2018 விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டுஅம்மான் வெளிநாடொன்றில் உயிருடன் உள்ளார் என கருணா அம்மான் என்ற, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளமை முழு பொய் என முன்னாள் இராணுவதளபதியும் ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். வெடிகுண்டை வெடிக்கவைத்து பொட்டு அம்மான் யுத்தத்தின் இறுதி தருணங்களில் தற்கொலை செய்துகொண்டார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதி தருணங்களில் பிரபாகரனுடன் 75 போராளிகள் காணப்பட்டனர் அவர்களில் 70 பேர் வரை அவருடனேயே கொல்லப்பட்டனர். இவர்களில் ஐவருடன் இணைந்து த…

    • 25 replies
    • 3.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.