Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ரஜீவ் காந்தி கொலையில் எமக்கு எந்தவிதத் தொடர்புமில்லை - விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்ப் பீடம் எனும் அமைப்பினால் இன்று வெளியிடப்பட்டிருக்கும் ஒரு அறிக்கையில் 1991 ரஜீவ் கொலைக்கும் தமக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று கோரியிருக்கிறார்கள். அரசியத் துறையின் பொறுப்பாளர் குருபரன் குருஸ்வாமி மற்றும் சட்டத்துறை பொறுப்பாளர் லதன் சந்திரலிங்கம் ஆகியோர் இந்த அறிக்கையில் ஒப்பமிட்டிருக்கிறார்கள். மக்களால், மக்களுக்கு மக்களிடமிருந்து உருவாக்கப்பட்ட தமது அமைப்பு ஒருபோதுமே ரஜீவ் கொலையில் சம்பந்தப்படிருக்கவில்லை என்பதை பலமுறை தகுந்த சாட்சியங்களூடு நிரூபித்திருந்தாலும்கூட, தம்மேலான அவப்பெயர் இன்னும் மறையவில்லை என்று இவ்வறிக்கை ஆ…

  2. சிறிலங்கா குறித்து நாடாளுமன்றக் குழுவுக்கு விளக்கமளிக்கவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு இந்திய- சிறிலங்கா உறவுகள் குறித்தும், சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும், இந்திய நாடாளுமன்றத்தின் வெளிவிவகார நிலையியல் குழுவுக்கு, இந்திய வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் விளக்கமளிக்கவுள்ளனர். சசி தாரூர் தலைமையிலான இந்திய நாடாளுமன்றத்தின் வெளிவிவகார நிலையியல் குழுவுக்கு, இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரும் டிசெம்பர் 14ஆம் நாள், விளக்கமளிக்கவுள்ளனர் என்று, இந்திய நாடாளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது. இந்தநிலையியல் குழுவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அங்கம் வகிக்கிறார். இந்தக் குழுவின் முன்பாக, இந்திய வெளிவிவகாரச் செயலர…

  3. அமைச்சர் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டம். மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அடிவருடிகளினால் தமது முன்பள்ளி அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை மீட்டுத்தருமாறும் கோரி உண்ணாவிரத போராட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது. எதிர்வரும் 14ஆம் திகதிக்கு இடையில் குறித்த முன்பள்ளி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வினைப்பெற்றுத்தருவதாக வழங்கிய உறுதிமொழியையடுத்து உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. காத்தான்குடி அஸ்ஸக்றா முன்பள்ளியின் காணி,கட்டிடம் 2014ஆம் ஆண்டு தம்மிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலையில் தாங்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் குறித்த முன்பள்ளியைக்கொண்டு வேறு…

  4. அச்சுவேலியில், வாள்வெட்டு தாக்குதல். யாழ்ப்பாணம் -அச்சுவேலி மகிழடி பகுதியில் அயல் வீட்டுக்கு வந்த ஒருவரை வாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த சந்தேகநபரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர். அச்சுவேலி மகிழடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீட்டிற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விருந்திற்கு வந்திருந்த ஒருவரை அயல் வீட்டில் வசிக்கும் நபர் திடீரென வீடு புகுந்து வாளினால் வெட்டியுள்ளார். இதனையடுத்து வாள் வெட்டிற்கு இலக்கான நபரை வீட்டில் இருந்தோர் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேவேளை சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முற…

  5. ஜனநாயகத்தை நிலைநாட்ட பொதுத் தேர்தல் மட்டுமே தீர்வு உறுதியற்ற ஜனநாயகத்திற்கு ஸ்திரத்தன்மையை பெற்றுக்கொடுக்கக் கூடிய ஒரேயொரு வழி பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதே ஆகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட பொதுத் தேர்தலுக்கு செல்வதே ஒரே வழி என்றும் பிரதமர் கூறினார். பிரதமரின் செயலகத்தில் இன்று நிகழ்த்திய விசேட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு உள்ள சட்டபூர்வ அதிகாரம் குறித்து குறிப்பிடுகையில் இரண்டாவது குடியரசு யாப்பின் 70 (1) சரத்து நீக்கப்பட்டு 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் புதிதாக இணைக்கப்பட்ட 70 (1) சரத்திற்கு இணங்க நான்கரை வருடங்கள் …

    • 0 replies
    • 404 views
  6. மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து 239 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு. மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை வரை 239 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் சில வாரங்களாக இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 27ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. அந்தவகையில் குறித்த புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று திங்கட்கிழமை 109 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில்,சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் குறித்த அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இதுவரையில் 239 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட…

  7. வவுனியா நகரசபையின் ”எழு நீ” விருது – இரு ஊடகவியலாளர்கள் புறக்கணிப்பு வவுனியா நகரசபையின் எழு நீ விருதினை இரு ஊடகவியலாளர்கள் புறக்கணித்துள்ளனர். வவுனியா நகரசபையினால் ”எழு நீ” என் பல்துறை சாதனையாளர்கள் என்ற விதத்தில் விருதுகள் வழங்கப்பட்டன. குறித்த நிகழ்வு அரசியல் சார்ந்த நிகழ்வு எனவும் வவுனியா நகரசபை மக்கள் நலன் சார்பாக எவ்வித முனைப்பும் காட்டாத நிலையில் தமது நலன் சார்ந்து விருது வழங்கும் நிகழ்வை ஆட்சிக்கு வந்து 8 மாதத்தில் வழங்குவதாகவும் சமூகத்தில் பல்வேறு விமர்சனங்கள் இருந்துவந்தது. இந்நிலையில் சமூகத்தின் கருத்துக்கு மதிப்பளித்தும் விருதை பெறுவதனால் அரசியல் சாயம் பூசப்படலாம் என்கின்ற காரணங்களையும் முன்வைத்து இரு ஊடகவியலாளர்கள் குறித்த விர…

  8. கொள்கைகளின் உண்மை தன்மையை உணர்ந்தே பெரும்பாலானோர் அணியில் இணைகின்றனர்: சிவி எமது கொள்கைகளின் உண்மை தன்மையினை உணர்ந்தே பெரும்பாலானோர் என்னுடன் அரசியல் பயணம் மேற்கொள்ள விரும்பி, இணைந்து வருகின்றனரென முன்னாள் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் விக்கினேஸ்வரன் கூறுகையில், “ஒருசில அரசியல்வாதிகள் போலியான குற்றச்சாட்டுக்களை மக்களிடம் முன்வைத்து அரசியல் இலாபத்தினை பெற்றுக்கொள்ள முனைகின்றனர். அவர்களின் உண்மைத்தன்மையை விளங்கி அவதானத்துடன் மக்கள் செயற்பட வேண்டியது அவசியமாகும். மேலும் எமது அரசியல் பயணத்தில் கா…

  9. இராஜினாமா செய்யப்போவதில்லை- மகிந்த தனது பதவியை இராஜினாமா செய்யப்போவதில்லை என ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை அமைக்கும் எண்ணத்தை கைவிடப்போவதுமில்லை எனது பதவியை இராஜினாமா செய்யப்போவதுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தை கலைத்தமை தொடர்பாக நீதிமன்றம் வெளியிடும் அறிவிப்பை பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/45569

    • 3 replies
    • 655 views
  10. வடமாகாண முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் மீது மோசடி விசாரணை வடமாகாண சபை முன்னாள் தலைவர் சிவஞானத்தினால் எழுத்துமூலமாக சமர்பிக்கப் பட்ட மோசடி சம்பந்தமான முறைப்பாட்டினை தொடர்ந்து, முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் ஆனந்தி சசிதரன் மீதான விசாரணைக்கு மூவர் அடங்கிய குழுவொன்றினை ஆளுநர் நியமித்துள்ளார். இதய, சிறுநீரக நோய் தடுப்புக்காக வட மாகாண சபைக்கு வழங்கப்பட்ட நிதியினை தவறாக பயன்படுத்தினார் என குற்றம் அவர் மீது சுமத்தப் பட்டுள்ளது. இரு வாரத்தில் இந்த விசாரணை முடிவடைந்து, அது தொடர்பான அறிக்கை கிடைத்ததும் அடுத்த நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப் படும் என ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. http://www.dailymirror.lk/article/Three-member-committee-to-probe-all…

    • 0 replies
    • 519 views
  11. ரணிலுடன் இனி ஒருபோதும் இணைந்து பணியாற்ற மாட்டேன்: ஜனாதிபதி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது, “ரணிலுடன் இப்போது மற்றுமல்ல எதிர்காலத்திலும் கூட இணைந்து பணியாற்றும் விருப்பம் எனக்கு இல்லை. இதுவே எனது தீர்க்கமான முடிவாகும். மேலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவரை பிரதமராக தெரிவு செய்ய முடியுமென அரசியலமைப்பில் எங்கும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ஜனாதியினால் பிரதமர் ஒருவர் தெரிவு செய்யப்படுகின்றமை குறித்து அரசியலமைப்பில…

    • 3 replies
    • 1.1k views
  12. “தமிழர்களின் நீண்ட கால கொள்கைகளை நீங்கள் சார்ந்த கட்சியுடன் சேர்த்து எரித்துவிடாதீர்கள்” - விக்னேஸ்வரன் “என்னுடைய உருவப் பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் தமிழ் மக்களின் நீண்ட கால கொள்கைகளை நீங்கள் சார்ந்த கட்சியுடன் சேர்த்து எரித்துவிடாதீர்கள் என்று தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்” என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பல்துறை சேவையாளர்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். முதலமைச்சரின் வவுனியா வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் அரசுக் கட்சியினரால் தமிழ்…

  13. "சீனா-பாகிஸ்தான் பொருளாதார நுழைவாயில் திட்டத்தில் இலங்கை பயனடையும்" பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி. ~ஹித் அஹ்மத் ஹமத் “சீனா பாகிஸ்தான் பொருளாதார நுழைவாயில் பிராந்திய மற்றும் உலகளாவிய இணைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான புதிய பார்வை” என்ற தலைப்பின் கீழ் விரிவுரையொன்றினை நிகழ்த்தினார். இவ்விரிவுரையானது இலங்கை ஓய்வு பெற்ற படைஅதிகாரிகளின் அமைப்பின் அழைப்பின்பேரில் இலங்கை கடற்படை தலைமையத்திலே இடம்பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வொன்றிலே இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன். ஜெனரல். என்.யு.எம்.எம். சேனாநாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஸ்ரீமேவன் ரணசிங்க, கொதலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் …

  14. த.தே.கூட்டமைப்பின் முடிவு தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது - சுரேஷ் பிரேமசந்திரன் தேசிய அரசாங்கம் தேவை என ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கம் இல்லாது போனதன் பிற்பாடு ஜக்கியதேசியக் கட்சி அரசாங்கத்தை ஆதரிக்கின்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளமையானது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமன்றி தமிழ் மக்களையும் ஏமாற்றும் செயல் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் தொடர்பாக அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இது நாங்கள் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் ஒரு அரசியல் சாசன அடிப்படையில் நாட்டை நிர்வகிக்…

  15. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தனிமையில் வாழ்ந்த மூதாட்டியை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய கும்பல், அங்கிருந்து தப்பியோடியுள்ளது. படுகாயமடைந்த மூதாட்டியை குருதி வெள்ளத்திலிருந்த மீட்ட மகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளார். உடுவிலில் இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. எம் பொன்மலர் (வயது-72) என்ற மூதாட்டியே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலே மூதாட்டியைத் தாக்கினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த மூதாட்டியை அதிகாலையில் உணவு வழங்க சென்ற மகள் கண்ணுற்று அவசர இலக்கமான119 இற்கு அழைப்பினை மேற்கொண்டு உடனடியாக அம்புல…

  16. ரயிலிலுடன் வாகனம் மோதி விபத்து: சாரதி படுகாயம் ரயில் கடவையை கடக்க முற்பட்ட பட்டா ரக வாகனத்துடன் ரயில் மோதி விபத்துக்குள்ளாகியதில் சாரதி படுகாயமடைந்துள்ளார். கொடிகாமம் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள ரயில் கடவையில் இச்சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் இடம்பெற்றுள்ளது. மகேந்திரா ரக பட்டா வாகனத்தின் பின்பகுதியிலேயே ரயில் மோதியது. இதனால் வாகனம் வீதிக்கு தள்ளப்பட்டமையால் படுகாயமடைந்த நிலையில் சாரதி உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தில் படுகாயமடைந்த சாரதி கொடிகாமம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக வி…

  17. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் திருந்தி வாழ்வதற்கு சந்தர்ப்பம் கொடுக்காத வகையில் யாழ்.மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் செயற்படுவதுடன், அவர்களை கைது செய்து சித்திரவதை செய்வதுடன், பொய் வழக்குகளையும் பதிவு செய்வதாக பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சமூக நீதிக்கான இளைஞர் அணி அமைப்பின் ஊடக சந்திப்பு இன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். மேலும் தெரிவிக்கையில் , எமது…

  18. யாழில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் வாள்களுடன் கைது! யாழில் பெரும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த ஆவா குழுவைச் சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 3 அடி நீளமுள்ள 7 வாள்களும் மீட்கப்பட்டன என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். அண்மையில் வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது தாக்கப்பட்ட சம்பவத்துடன் சந்தேகநபர்கள் மூவருக்கும் தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதனைவிட அவர்களுக்கு எதிரான பல வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் கடந்த சில தினங்களால் 20இற்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்…

  19. 6 ஆவது தடவையாக மீண்டும் கட்சி தாவல் – பசிலுடன் வசந்த சேனநாயக்க! அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டு இத்துடன் 6 ஆவது தடவையாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க புதிய அரச தரப்பிற்கு சென்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே புதிய அரசாங்கத்தில் தாம் இணைந்து கொண்டதாகவும் பின்னர் ஜனநாயகம் அங்கு இல்லை என தெரிவித்து பகிரங்கமாக மன்னிப்பும் கோரினார். இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அத்துரலிய ரத்தன தேரரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பசில் ராஜபக்ஷ மற்றும் உதய கம்மன்பிலவுடன் இணைந்து வசந்த சேனநாயக்கவும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டார். ஏற்கனவே மீண்டும் மீண்டும் கட்சி தாவிய உறுப்பினர்கள் மீது…

  20. யாழில் போலி அட்டையைப் பயன்படுத்தி பணம் பெற முயன்றவர் கைது! சாவகச்சேரி பகுதியில் போலி அட்டையைப் பயன்படுத்தி பணம் பெற முயன்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். சாவகச்சேரியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை போலி அட்டை மூலம் பணம் பெறமுயன்ற ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வங்கியின் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரத்தில் போலி அட்டையைப் பயன்படுத்தி பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்ட வேளை வங்கி முகாமையாளருக்கு குறித்த இயந்திரம் அபாய ஒலி மூலம் தெரியப்படுத்தி உள்ளது. அதனை அடுத்து துரிதமாகச் செயற்பட்ட முகாமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்த…

  21. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதை தடுக்கவே ஜனாதிபதி, மஹிந்தவை பிரதமராக்கினாராம்! வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதை தடுக்கவே ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியதாக அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நாட்டின் சொத்துகளை பாதுகாக்கவும், வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், நாட்டில் சமஸ்டி ஆட்சி உருவாகுவதை தடுக்க, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதை தடுக்கவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணிலை அகற்றி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கினார். எனவே இதனை பொ…

    • 2 replies
    • 535 views
  22. புலிகளின் தலைமையோ தளபதிகளோ நாட்டைவிட்டு தப்பி ஓடுவதற்கு எத்தனிக்கவில்லை: துளசி கடினமான சூழ்நிலையிலும் புலிகளின் தலைமையோ தளபதிகளோ நாட்டைவிட்டு தப்பி ஓடுவதற்கு எத்தணிக்கவில்லை. அவர்கள் இறுதிவரை போராடி அம்மண்ணிலேயே தங்களை அர்ப்பணித்துக்கொண்டார்கள் என்பதே உண்மை என்று ஐனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார். வவுனியா ஊடக மையத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது, “தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற தன்மைக்கு மத்தியில் தமிழர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அசாதாரண நிலமைகள் தொடர்பாக மக்களுக்கு தெளிவுப்படுத…

  23. பெப்ரவரி 04 இல் தமிழீழம் மலரும் – விமல் பரபரப்புத் தகவல். ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான கள்ளத்தொடர்பு அம்பலமாகியுள்ளதாக மஹிந்த அணி தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் விமல்வீரவன்ஸ இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். ” பிரதான எதிர்க்கட்சிப் பதவியை கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்தகாலங்களில் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிபோலவே செயற்பட்டது. ஆனால், அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை. எனினும் தற்போது ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியமைப்பதற்கு ஆதரவளிக்கப்படும் என ஜனாதிபதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது. இதன்மூலம் ஐ.தே.கவுக்கும், கூட்டமைப்புக…

  24. காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் டிசம்பர் 10ல் பாரிய கவனயீர்ப்புக்கு அழைப்பு December 2, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் தமது பிள்ளைகளை தேடி கடந்த வருடம் மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 364 ஆவது நாளை கடந்து முல்லைத்தீவில் தொடர்கிறது. இந்நிலையில் எதிர்வரும் பத்தாம் திகதி தமது பிள்ளைகளுக்கு நீதி வேண்டி மாபெரும் போராட்டம் ஒன்றை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக நடாத்தவுள்ளதாகவும் அனைத்து தரப்பையும் தமது போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி தங்கள் பிள்ளைகளை தேடி கண்டறிய அணிதிரளுமாறு கோரியுள்ளனர் http://globaltamilnews.net/2018/105344/

  25. 50 கோடி வரை என்னிடம் பேரம் பேசினார்கள் December 1, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் தரப்புக்களிடம் மண்டியிடும் நிலையில் தேசிய கட்சிகள் உள்ளதாகவும் 6 கோடி முதல் 50 கோடிவரை தன்னிடம் பேரம் பேசினார்கள் எனவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்கு உட்ப்பட்ட கூழாமுறிப்பு பகுதியில் போரால் பாதிப்புக்களுக்குள்ளான பகுதியில் அல்லலுறும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கனடா செந்தில்குமரன் நிவாரண அமைப்பின் பத்து இலட்சத்து இருபத்தாறாயிரத்து ஐநூறு ரூபா செலவில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.