ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143283 topics in this forum
-
ரணில் பிரதமராவதே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ஜெனிவாவில் எடுத்துரைப்பு! ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக கொண்ட அரசாங்கத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு என ஜெனிவாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இன்று (வியாழக்கிழமை) அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விவாதம் ஒன்று நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் ‘மனித உரிமைகள் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை பாதுகாப்பதில் இலங்கை நாடாளுமன்ற வகிபாகம்’ எனும் தலைப்பில் சற்று முன்னர் ஆரம்பமான மாநாட்டில் மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வு நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து மேற்கண்டவாறு கூறியுள்ளார்…
-
- 1 reply
- 578 views
-
-
தேர்தலுக்கான அழைப்பை மீளப் பெறுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை – எஸ்.பி.திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் பெரும்பாண்மை எமக்கே காணப்படுகின்ற நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அழைப்பை மீள திரும்பப் பெறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கின்றது. அதனை நாங்கள் தேவை ஏற்படும்போது காட்ட தயாராக இருக்கின்றோம். 120 உறுப்பினர்களுக்கும் அதிகமானவர்கள் எங்களுடன் இருந…
-
- 0 replies
- 317 views
-
-
நாடா? ஆட்சி அதிகாரமா? ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும் - ராஜித (நா.தினுஷா) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஆட்சியதிகாரம் முக்கியமா அல்லது நாடு முக்கியமா என்பதை உடனடியாக தீர்மானிக்க வேண்டும். ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இவர்கள் தொடர்ந்து சூழ்ச்சிகளை மேற்கொண்டால் பாரிய எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தற்போது நாடு பாரிய அரசியல் நெருக்கடியினை சர்வதேச அளவில் எதிர்கொண்டு வருகின்றது . அதற்கு தீர்வினை காண்பதை விடுத்து நாட்டு தலைவர் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவது முரணானது எனவும் தெரிவித்தார். அலரி மாளிகையில் (22-11-2018) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந…
-
- 0 replies
- 469 views
-
-
"வெற்றிகொண்டாலும் ஐ.தே.க.வினால் தனித்து ஆட்சியமைக்க முடியாது” எம்.டி.லூசியஸ் பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு அதனை வெற்றிக்கொண்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியினரால் தனித்து ஆட்சியமைக்க முடியாது. மஹிந்த ராஜபக்ஷ மீது காணப்படும் வைராக்கியத்துக்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழக்கி வருகின்றதே தவிர ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்வதற்காக அல்ல என அமைச்சரவை பேச்சாளரான மஹிந்த சமரசிங்க மற்றும் அமைச்சர் தயாசிறிஜய சேகர ஆகியோர் தெரிவித்தனர். 122 பெரும்பான்மை இருக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சி தற்போது தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் நாளை தனித்…
-
- 0 replies
- 755 views
-
-
ஜேவிபியும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் வடக்கிலும் தெற்கிலும் அரசாங்கங்களால் ஒடுக்குமுறைக்குட்படுத்தப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். அந்தவகையில் இரு கட்சிகளுக்கும் மக்களது ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக இணைந்து போராடவேண்டிய கடமை காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் இந்து நாளிதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரு கட்சிகளும் கொள்கையின் அடிப்படையில் செயற்படுவதாகவும் இவ்வாறான செயற்பாட்டினைக் கொண்டுள்ள கட்சிகள் இணைந்து செயற்பட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த சில விடயங்களி…
-
- 4 replies
- 757 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய பல இரகசிய தகவல்கள் இன்னும் சிலநாட்களில் வெளியிடப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளரான மஹிந்த சமரசிங்க மற்றும் அமைச்சர் தயாசிறிஜய சேகர ஆகியோர் மேற்கண்ட தகவலை வெளியிட்டனர். http://www.virakesari.lk/article/44990
-
- 1 reply
- 449 views
-
-
தம்பி வந்திட்டானா? தம்பி வந்திட்டானா? அவனை பார்க்காமல் சாகமாட்டேன் என்று கூறியவர் அந்த ஏக்கத்துடனேயே மரணித்துவிட்டார் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்த எழிலனின்( சிசிதரன்) தந்தை கிருஸ்ணப்பிள்ளை சின்னத்துறை. இன்று 20-11-2018 அன்று மரணமடைந்த எழிலனின் தந்தையின் பூதவுடல் இல 156 விவேகானந்தசகர் கிளிநொச்சியில் வைக்கப்பட்டுள்ளது. இவரது இறுதி நிகழ்வு நாளை மறுதினம் (வியாழக்கிழமை) காலை பத்து மணிக்கு இடம்பெறவுள்ளது. என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் எழிலனின் மனைவியுமான அனந்தி சசிதரன தெரிவித்துள்ளார் இறுதி காலம் வரை தனது மகள் எழிலன் வருவான் என்றும் அவனை பார்க்க…
-
- 18 replies
- 2.3k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் மூன்றாம் எதிரியான பிள்ளையானை தொடர்புடுத்தி ஏனைய இரண்டு எதிரிகளால் வழங்கப்பட்ட வாக்குமூலமானது சுயமாக வழங்கப்பட்டதா இல்லையா என்பது தொடர்பான கட்டளையானது எதிர்வரும் ஜனவரி 09ஆம் திகதி வழங்கப்படும் என மட்டகளப்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு டிசெம்பர் 25ஆம் திகதி மட்களப்பு பெரிய தேவாலயத்தில் நத்தார் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை செய்யப்பட்…
-
- 0 replies
- 305 views
-
-
November 22, 2018 தங்கத்தை உரை கல்லால் உரசிப்பார்ப்பது போல், மக்களிடம் சென்று வாக்கு கோரி, ஒக்டோபர் 26க்கு பிறகு தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் சரியானவையா, அவற்றுக்கு இந்நாட்டு மக்கள் அங்கீகாரம் வழங்குகிறார்களா, தேடிப்பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. இந்நாட்டின் அரசியலமைப்பில் உள்ள கால அட்டவணையின்படி பதவியில் இருக்கும் ஜனாதிபதி, பதவிக்கு வந்து நான்கு வருடங்களுக்கு பிறகு முன்கூட்டியே ஒரு தேர்தலை நடத்தி, புதிய மக்களை ஆணையை கோரும் உரிமையை கொண்டுள்ளார். ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சி…
-
- 0 replies
- 309 views
-
-
இலங்கையில் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை தொடர்ச்சியாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அதிகாரத்தின் ஊடாக நாட்டு மக்களின் நலனை சீர்குலைக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருகின்றார் எனும் குற்றச்சாட்டினையும் அவர் முன்வைத்துள்ளார். நாட்டில் தொடர்ந்து வருகின்ற அரசியல் குழப்பநிலை உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச மட்டத்திலும் பல்வேறு எதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே சமந்தா பவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2018/104220/
-
- 0 replies
- 377 views
-
-
வழக்கு தாக்கல் செய்யப்படாது, தமிழ்க் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவர்… November 22, 2018 வழக்கு தாக்கல் செய்யப்படாது சிறைச்சாலைகளிலுள்ள தமிழ்க் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் றோகண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இவர்களது விடுதலை குறித்து அமைச்சரவைக்கு அறிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி மாதத்தில் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஜனவரி மாதத்திற்கு முன்னதாகவே கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தோட்டத்தொழிலாளர்களின்…
-
- 1 reply
- 585 views
-
-
தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையில் கப்பல் சேவை? November 22, 2018 தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சபரி மலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது எனவும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொம்பனித்தெரு ஸ்ரீ ஹரி ஹர சுதன் ஐயப்ப யாத்திரைக் குழுவினருக்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அமைச்சு, விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய …
-
- 0 replies
- 391 views
-
-
2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமே, பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும்….. November 22, 2018 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமே பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும் அதற்கு இடைப்பட்ட காலத்தில் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்தவேண்டியதே அவசியமாகும் எனவும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றையதினம் அலரிமாளிகையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது பெரும்பான்மை…
-
- 0 replies
- 389 views
-
-
அமெரிக்க செனட் உறுப்பினர் சிறிசேனவிற்கு கடிதம்- உறவுகள் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை பிரதமரை பதவிநீக்குவது, பாராமன்றத்தை இடைநிறுத்துவது தேர்தலை நடத்த முயல்வது மற்றும் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் வாக்களிப்பை நிராகரிப்பது போன்ற ஜனாதிபதி சிறிசேனவின் நடவடிக்கைகள் அமெரிக்கா இலங்கை மத்தியிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வலுப்படுத்துவதற்கு தடையாக அமையலாம் என அமெரிக்க செனெட் உறுப்பினர் கிறிஸ் வன் ஹொலன் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இரு ஜனநாயக நாடுகளிற்கும் இடையில் நட்புறவை வலுப்படுத்துவதற்கு கடினமாக பாடுபட்ட நண்பரிற்கு இந்த கடிதத்தை எழுதுகின்றேன் என ஜனநாயக கட…
-
- 0 replies
- 389 views
-
-
இந்திய, அமெரிக்க தூதுவர்கள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் ஆலோசனை சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரும், இந்திய துணைத் தூதுவரும், உயர்மட்ட அதிகாரிகளுடன் இணைந்து, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவைச் சந்தித்து தனித்தனியாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை இந்தச் சந்திப்புகள், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளன. இந்தியத் துணைத் தூதுவர் கலாநிதி ஷில்பக் அம்புலே தலைமையிலான இந்தியத் தூதரக உயர் அதிகாரிகள், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவுடன் நடத்திய பேச்சுக்களின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில…
-
- 0 replies
- 294 views
-
-
இராஜதந்திரிகளை சந்திக்கின்றார் மகிந்த மகிந்த ராஜபக்ச இன்று கொழும்பில் வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கவுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் பின்னர் மகிந்த ராஜபக்ச வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார் இலங்கையின் அரசியல் சூழ்நிலை தொடர்பில் இராஜதந்திரிகள் மத்தியில் கடும் விசனம் காணப்படும் நிலையில் இந்த சந்திப்பு நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து இராஜதந்திர வட்டாரங்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/44964
-
- 0 replies
- 390 views
-
-
அனைத்துலக ஆதரவு தேடி இரகசியப் பேச்சுக்களில் ‘மொட்டு’ – அம்பலப்படுத்திய கனேடிய தூதுவர் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு இதுவரை அனைத்துலக அங்கீகாரம் கிடைக்காத நிலையில், சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவர்கள், அனைத்துலக ஆதரவைப் பெறுவதற்கான இரகசியப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாமல் ராஜபக்ச மற்றும் கனடியத் தூதுவருக்கு இடையிலான கீச்சகப் பதிலடிகள் இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன அனைத்துலக இராஜதந்திரிகளுடன் நடத்திய சந்திப்புகளை விமர்சிக்கும் வகையில், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நாடாள…
-
- 0 replies
- 441 views
-
-
நாடாளுமன்ற தேர்தல்: புதுக்கூட்டணியில் களமிறங்க ஐ.தே.க. வியூகம்! எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணி அமைத்து புது சின்னத்தில் போட்டியிடும் முனைப்பில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே ஐக்கிய தேசிய முன்னணியில் பங்காளிகளாகவுள்ள தமிழ் முற்போக்கு முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஹெல உறுமய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் ஏனைய கட்சிகளையும் இணைத்துக்கொள்வதற்கான தீவிர முயற்சியில் ஐ.தே.க. ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் மனுத்தாக்கல் செய்துள்ளன. இதன் தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி அறிவிக்கப்…
-
- 1 reply
- 479 views
-
-
அரசியல் சர்ச்சைக்கு மத்தியில் நாளை (வெள்ளிக்கிழமை) கூடுகிறது நாடாளுமன்றம்! இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில், நாடாளுமன்றம் மீண்டும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கூடவுள்ளது. இந்நிலையில், நாளைய அமர்வு நேரத்தின்போது நாடாளுமன்ற வளாகம் மற்றும் கட்டடத்தொகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் கடந்த 14,15 மற்றும் 16ஆம் திகதிகளில் ஆளும் எதிர்த்தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்தே, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில், நாளைய அமர்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களும் உரிய சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டே சபைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்க…
-
- 0 replies
- 304 views
-
-
நாடாளுமன்ற தேர்தல்: ஏட்டிக்குப் போட்டியாக மஹிந்த அணி களத்தில்! நாட்டின் தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பிற்கு விரோதமானதென தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி நாடெங்கும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த அறிவித்துள்ள நிலையில், தேர்தலை வலியுறுத்தி மஹிந்த அணி நாடாளாவிய ரீதியில் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் போராட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து கொழும்பில் கூடிய பிரதமர் மஹிந்த தலைமையிலான அணியினர், இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் மக்கள் சந்திப்புகள் மற்றும் கருத்தரங்குகளையும் நடத்தி மக்களுக்கு விளக்கமளிக்கவும் மஹிந்த தரப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங…
-
- 0 replies
- 359 views
-
-
29ஆம் திகதி வாக்கெடுப்பில் பலத்தைக் காட்டுங்கள்: ரணில் எதிர்வரும் 29ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ள, பிரதமர் செயலகத்திற்கான நிதியொதுக்கீட்டை நிறுத்தும் பிரேரணையை தோற்கடித்துக் காட்டுமாறு மஹிந்த அணிக்கு ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க சவால் விடுத்துள்ளார். தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பிற்கு முரணானதென்றும், பிரதமர் நியமனம் செல்லுபடியாகாதென்றும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில் புதிய பிரதமர் செயலகத்திற்கான நிதியொதுக்கீட்டை நிறுத்தும் பிரேரணையை எதிர்வரும் 29ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளது. இதுகுறித்து நேற்று அலரி மாளிகையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஏற்கனவே கொண்டுவரப்பட்ட பிரேரணைகள்…
-
- 0 replies
- 359 views
-
-
November 20, 2018 யாழ். கந்தர்மட பகுதியில் இடம்பெற்ற கார் – புகையிரத விபத்தில் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரத்துடன் கந்தர்மட பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கார் விபத்துக்குள்ளானது. மதியம் 1.45 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் காரினை செலுத்தி சென்ற யாழில் உள்ள பிரபல வர்த்தகரான பாலா என்பவரே படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த குறித்த வர்த்தகர் ஆபத்தான முறையில் மீட்கப்பட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். http://globaltamilnews.net/2018/103987/
-
- 13 replies
- 1.5k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி கிராமங்களின் உள்ளக வீதிகள் தொன்னூறு வீதமானவை மிக மோசமான நிலையில் காணப்படுகின்றன. இவ்வாறான வீதிகளால் நாளாந்தம் பல்வேறுத் தேவைகளுக்காக பயணம் செய்கின்ற பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய(21) தினம் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் முச்சக்கர வண்டியில் பாண் வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவரின் முச்சக்கர வண்டி வீதியில் மழை நீர் தேங்கி நின்ற குழியினுள் சரிந்து விழந்துள்ளது. இதனால் கடனுக்கு கொள்வனவு செய்யப்பட்ட பல றாத்தல் பாண்கள் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்கள் சேற்று நீரினுள் வீழ்ந்துள்ளது. இந்த விபத்து…
-
- 6 replies
- 1.1k views
-
-
பிள்ளையானின் வழக்கு; ஜன. 9ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு Editorial / 2018 நவம்பர் 21 புதன்கிழமை, பி.ப. 06:20 Comments - 0 க. விஜயரெத்தினம், ரீ.எல்.ஜவ்பர்கான் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசத்துரை சந்திரகாந்தனிடம் (பிள்ளையான்) உண்மை விளம்பல் விசாரணை பெறப்பட்டு, எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரையும் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிள்ளையான், இன்றைய தினம் (21) விடுதலை செய்யப்படுவார் என்ற பலத்த எதிர்பார்ப்புடன், மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத்தொகுதிக்கு முன்னால் கட்சி உயர்பீட உறுப்பினர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் காத்திருந்த நிலையிலேயே, மீண்டும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 547 views
-
-
சட்டத்தரணி மணிவண்ணனின் மேன்முறையீட்டு மனு ஒத்திவைப்பு யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் தாம் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு வரும் ஜனவரி 8ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த மேன்முறையீட்டு மனுவை அடிப்படை உரிமைகள் மற்றும் நிர்வாகச் சட்ட வல்லுநரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சஞ்சீவ ஜெயவர்த்தன தாக்கல் செய்திருந்தார். அவரின் சகோதர உறவுமுறையான உயர் நீதிமன்ற நீதியரசர் பிரசன்ன ஜெயவர்த்தன இந்த மனு மீதான விசாரணையின் அமர்வில் பங்கேற்றிருந்தார். அத…
-
- 0 replies
- 686 views
-