ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
November 19, 2018 இலங்கை நாட்டில் தற்போது அரசாங்கம் என்ற ஒன்று இல்லை என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா, மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகிக்க வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் சிறந்த பொறுப்புடன் தெரிவு செய்வதாகவும், சிறந்த தலைவனுக்கு தமது வாக்குகளை பிரயோகிப்பதே மக்களின் கடமை எ…
-
- 0 replies
- 659 views
-
-
November 19, 2018 நாடு முன்னொருபோதும் இல்லாதவாறு அரசியல் ரீதியில் பிளவுபட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். இந்த நிலைமையை மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என மிலிந்த மொறகொட சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யும் நடுநிலையான பிரதமர் மற்றும் காபந்து அரசாங்கத்துடன் தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 305 views
-
-
November 19, 2018 சிங்களயே அபி தேசிய அமைப்பு உள்ளிட்ட மேலும் சில அமைப்புக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தேரர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்று (19) முற்பகல் அறிக்கையொன்றை கையளிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த வேளையில் அவர்களின் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட காரணத்தினால் ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனிப்பட்ட முறையில் தனது கவலையை தெரிவித்துள்ளார். இத் தேரர்கள் இன்றைய தினம் ஜனாதிபதியை சந்திக்க வருகை தருவதாக அறிவித்திருக்கவில்லை என்பதுடன், கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்வதற்கு ஆலோசனை வழங்கியவர…
-
- 0 replies
- 438 views
-
-
எமக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி எம்மை நாமே அழிக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட நாம் இனிமேலும் இடமளிக்கமுடியாது என முன்னாள் வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “எவ்வாறு எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடையப்போகிறோம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு கடமையாற்ற வேண்டிய காலகட்டத்தில் நாம் இன்று நிற்கின்றோம். எமக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் நாம் முரண்பட்டுக் கொண்டு சண்டையிட்டுக்கொண்டு எம்மை நாமே அழிக்கும் ஒரு துர்ப்பாக்கி…
-
- 9 replies
- 1.4k views
-
-
ஈ.பி.டி.பி தவிர்ந்த அனைத்து கட்சிகளுக்கும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் பொதுச்சின்னத்தில், தமிழ் மக்கள் கூட்டணி தேர்தலை சந்திக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார். யாழ். பலாலியிலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வின்போது, பேரவையின் இணைத்தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மீண்டும் மீண்டும் குரோதங்களையும் விரோதங்களையும் வளர்த்துக்கொண்டு முரண்பாடுகள் ஏற்பட இடமளிக்காமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை அடிப்படையில் தேர்தல் அரசியலை எதிர்நோக்குவதற்கு முன்வருமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொள்கை அடிப்படையில் ஒன்றுபட…
-
- 0 replies
- 490 views
-
-
November 18, 2018 குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொள்ளை விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி காவல்துறைப் பரிசோதகர் நிஷாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை உள்ளிட்ட முக்கிய விசாரணைகளை நிஷாந்த சில்வாவே முன்னெடுத்து வந்திருந்தார். இந்தநிலையில் உடனும் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது இவர் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட 60 குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் செய்து, பல சந்தேகநபர்களை…
-
- 2 replies
- 2.4k views
-
-
புளொட் பிரதிநிதிகளை பேரவையினர் வெளியேற்றியுள்ளனர் Editorial / 2018 நவம்பர் 19 திங்கட்கிழமை, மு.ப. 05:30 Comments - 0 -எஸ்.நிதர்ஷன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்குச் சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகளை, பேரவையினர் வெளியேற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம், பலாலி வீதியிலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் பேரவையின் கூட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்துக்கு பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் பொது அமைப்புகளின் பிரதிதிநிதிகள் பேரவை உறுப்பினர்கள் எனப் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய புளொட் அமைப்பின் சார்பில் அக்கட்சியின் செயலாளர் சதானந்தம் மற்றும் பொருளாளரும் வட மாகாண சபை…
-
- 2 replies
- 888 views
-
-
கொச்சிக்காய் தூள் தாக்குதல் : சம்பந்தப்பட்ட எம்.பி. சம்பவம் தொடர்பில் விளக்கம் பாராளுமன்றத்தில் கொச்சிக்காய்த் தூள் தாக்குதல் என்று அறியாத நிலையிலேயே நான் மேற்கொண்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார். பாராளுமன்றத்துக்குள் எந்தவித பொருட்களையும் அன்றைய தினம் எடுத்துச் செல்ல முடியாதவாறு சோதனை இடம்பெற்றது. இதனால், எந்தவொரு பொருளும் என்னிடம் இருக்கவில்லை. அந்த பதற்ற நிலைமையின் போது பார்வையாளர்கள் பகுதியிலிருந்து எம்மை நோக்கி ஒரு போத்தல் வீசப்பட்டது. அதனையே நானும் திருப்பி எறிந்தேன். அதில், என்ன இருந்தது என்பதை நான் அறிந்திருக்க வில்லையெனவும் அவர் குறிப்பிட்டார். அங்கிருந்த பொலிஸார் மீதும் கதிரையால் தாக்குதல் நடாத்…
-
- 4 replies
- 1.5k views
-
-
வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு அருகில் இராணுவத்தினரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலின்போது இராணுவத்தினர் திருப்பித்தாக்கியதில் விவசாய கல்லூரி வளவில் கற்றல் நடவடிக்கை மேற்கொண்டிருந்த ச.கிந்துஜன், சி.கோபிநாத், இரா.அச்சுதன், ஆர்.மொகமட், தி.சிந்துஜன் ஆகிய ஜந்து மாணவர்கள் உயிரிழந்தனர். இவர்களின் நினைவு தினம் வருடாவருடம் விவசாய கல்லூரியில் இடம்பெற்று வருவதுடன் குறித்த மாணவர்களின் நினைவாக மரநடுகை, இரத்ததானம், தாகசாந்தி போன்ற சேவைகளை விவசாயக்கல்லூரி மாணவர்கள் குறித்த நினைவு தினத்தில் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 12 ஆவது நினைவேந்தல் மாணவர் ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டில் நேற்று (18.11) இடம்பெற்றது இந் நிகழ்வில் தாண்டிக்குளம் விவச…
-
- 1 reply
- 1.6k views
-
-
நாட்டில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் நாடு பேராபத்துக்கள் பலவற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, இவற்றில் பிரிவினைவாதத்திற்கு துணைபோகும் புதிய அரசியல் சாசனம் நடைமுறைப்படுத்தும் ரணில் அரசாங்கத்தின் திட்டத்தை தோற்கடித்ததே மகத்தான வெற்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் படைத் தளபதிகள், சிங்கள பௌத்த கடும்போக்கு தொழில்சார் நிபுணர்கள் ஆகியோரை உள்ளடக்கி சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவின் சகோதரரான கோட்டாபய ராஜபக்ச உருவாக்கியிருக்கும் 'எலிய' அமைப்பினர் நேற்று அவிசாவளைப் பகுதியில் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு நாட்டின் தற்போதைய அரசியல் குழப்பம் தொடர்பில் உரையாற்றும் போதே அவ…
-
- 1 reply
- 532 views
-
-
இலங்கைகான நிதியுதவியை, சர்வதேசநாணநிதியம் இடைநிறுத்தியுள்ளது… November 19, 2018 இலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்துவதற்கு சர்வதேச நாணயநிதியம் தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான பேச்சாளர் ஹெரி ரைஸ் இதனை தெரிவித்துள்ளார். தனது அமைப்பு இலங்கைக்கான நிதிஉதவியை இடைநிறுத்திவைக்க தீர்மானித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அரசியல் நிலை குறித்து மேலதிக தெளிவு ஏற்படும் வரை தாம் நிதியுதவியை இடைநிறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நிதிவிவகாரங்களிற்கான இராஜாங்க அமைச்சர் சர்வதேச நாணயநிதியம் குறித்து தனக்கு தகவல் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். 2016 ம் ஆண்டு சர்வதேச நாணயநிதியம் இல…
-
- 1 reply
- 557 views
-
-
திரைமறைவில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் - கெஹெலிய பாராளுமன்றத்தில் திரை மறைவில் என்ன நடக்கின்றது என்பது பற்றி மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும், மேன்மைக்குறிய பாராளுமன்ற சம்பிரதாயங்கனை துச்சமென மதித்து நடவடிக்கை எடுக்கும் போது அனைப் பார்த்துக்கொண்டு எங்களால் அமைதியாக இருக்க முடியாது என்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கண்டி பூஜாபிட்டிய பிரதேசத்தில் நேற்ற இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த சில தினங்களாக பாராளுமன்றத்தில் ஏற்பட்டு வரும் சம்பவங்கள் தொடர்பாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். சிலர் பாராளுமன்ற உறுப்ப…
-
- 0 replies
- 473 views
-
-
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை? Editorial / 2018 நவம்பர் 19 திங்கட்கிழமை, மு.ப. 05:15 Comments - 0 நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை ஏற்றுக்கொள்ளாமல், அரசமைப்பு மற்றும் நிலையியற்கட்டளைகளை சவாலுக்குட்படுத்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவருவதற்கு, ஐக்கிய தேசிய முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் மூலமாகத் தோற்கடிக்கப்பட்ட நபரை, பிரதமராக ஏற்றுக்கொள்வது அரசமைப்புக்கு முரணானது என்பதால், ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக அம்முன்னணி அறிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ, ஒரு பொறுப்புமிக்க அரசியல்வாதி என்றால், நம்பிக்கையி…
-
- 0 replies
- 484 views
-
-
வித்தியா கொலை உள்ளிட்ட முக்கிய விசாரணைகளை மேற்கொண்ட நிசாந்த சில்வா உடனடி இடமாற்றம்! மகிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டமை,லசந்த விக்கிரமதுங்க வாசிம் தாஜூடீன் படுகொலை, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு மிகத்திறமையாக செயற்பட்டுக்கொண்டிருந்தார். நிசாந்த சில்வா கடந்த மாதம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து உடனடியாக நீர்கொழும்பிற்கு இடமாற்றப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளால் மேற்கொள்…
-
- 0 replies
- 1k views
-
-
‘எனக்கு நேரமில்லை’ அரசாங்கத்துக்காகப் பேரம் பேசுவதற்குத் தனக்கு நேரமில்லையென தெரிவித்துள்ள, மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோசித்த ராஜபக்ஷ, தன்னை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாமென்றும் கோரியுள்ளார். றக்பி போட்டிகளுக்காக, தான் மிகவும் வேலைப்பளுவுடன் இருப்பதால், பேரம் பேச தனக்கு நேரமில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளுங் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யோசித்த ராஜபக்ஷவே, அதனை முன்னின்று செயற்படுத்துகின்றார் என, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, தன்னுடைய டுவிட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார். …
-
- 0 replies
- 389 views
-
-
ஜே.வி.பி. உறுப்பினர்களும் சபாநாயகரும் சர்வ கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று (18) பிற்பகல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சர்வகட்சிகள் சந்திப்பில் சபாநாயகர் மற்றும் ஜே.வி.பி. கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்தில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லையென மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே ஜனாதிபதி கடிதம் ஒன்றி மூலம் அறிவித்தல் விடுத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. பாராளுமன்றத்தில் தற்பொழுது நிலவுகின்ற பதற்ற நிலைமைக்கு ஜனாதிபதியே காரணம் என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணி அவ்வறிவித்தலில் தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. http://www.dailyc…
-
- 0 replies
- 550 views
-
-
நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னர் கட்சி தலைவர்கள் கூட்டம்! நாட்டில் காணப்படும் அரசியல் நெருக்கடி நிலைக்கு மத்தியில் இன்று (திங்கட்கிழமை) நான்காவது முறையாகவும் பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கட்சித்தலைவர்களுக்கான கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி தலைமையில் மாலை அனைத்துக் கட்சி தலைவர்களுடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்த்க்கது. http://athavannews.com/நாடாளு…
-
- 1 reply
- 393 views
-
-
பெரும்பான்மையை மீண்டும் நிரூபிப்போம்! – ஐ.தே.க. நாடாளுமன்றில் தமக்குள்ள பெரும்பான்மையை இன்று மீண்டும் நிரூபிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது. இந்நிலையில் இன்று நடத்தப்படும் வாக்கெடுப்பிலும் பெரும்பான்மையை நிரூபிப்போம் என ஐ.தே.க. குறிப்பிட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கடந்த அமர்வுகளில் குரல்மூல வாக்கெடுப்பு இடம்பெற்றது. பெரும் கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் இந்த வாக்கெடுப்பு இடம்பெற்ற போதும், நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிகொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். எனினும், ஆளுந்…
-
- 1 reply
- 241 views
-
-
சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! இலங்கை அரசியலில் நீடிக்கும் குழப்பநிலைக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன. ஏற்கனவே இடம்பெற்ற அமர்வுகளில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கடும் அமளி துமளி ஏற்பட்டு கைகலப்பில் முடிவடைந்தது. சிலர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கடந்த அமர்வுகள் யாவும் ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே நீடித்ததோடு, பிரதமர் மஹிந்தவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குரல்மூல வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். எனினும், அதனை ஏற்க முடியாதென ஆளுந்தரப்பு…
-
- 0 replies
- 635 views
-
-
மைத்திரி, ரணிலுடன் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தனித்தனியே பேச்சு சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலர், நேற்று இருதரப்புகளுடனும் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு இராஜதந்திரிகள் குழுவொன்று நேற்று முற்பகல், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, அவரது செயலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியது. பின்னர், நேற்று மாலை அந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள், அலரி மாளிகைக்குச் சென்று ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இரண்டு தரப்புகளுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியாக- தற்போதைய அரசியல் நெருக்கடிகளை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருமாறு அழுத்தம் …
-
- 0 replies
- 181 views
-
-
ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய சின்னம் ‘டயமண்ட்’ எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ஒரு புதிய சின்னத்தின் கீழ் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அதன்படி டைமண்ட் சின்னத்தில் போட்டியிட கூட்டணியினர் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கையை தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் யானை சின்னத்திற்குப் பதிலாக ஒரு புதிய சின்னத்தின் கீழ் ஒரு கூட்டணியாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சின்னம் தொடர்பில் கட்சிக்குள் இருதரப்பட்ட கருத்துக்கள் நிலவினாலும், தற்போது டைமண்ட் சின்னத்…
-
- 0 replies
- 358 views
-
-
புதிய பொதுச்சின்னத்தில் போட்டியிட கூட்டமைப்பு, ஈபிடிபி அல்லாத கட்சிகளை அழைக்கிறார் விக்கி ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் – தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுதி உள்ள எல்லோரையும் ஒன்றிணைக்கும் வகையில், தமிழ் மக்கள் கூட்டணியின் கீழ் போட்டியிட- தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே நிற்கும், ஈபிடிபி தவிர்ந்த மற்றைய தமிழ்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம், க.வி.விக்னேஸ்வரன். யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “கடந்த மாதம் 24 ஆம் நாள், சிறப்பு பெருங் கூட்டத்தின் பின்னர் இன்று கூடுகின்றோம். அன்று தமிழ் மக்கள் கூட்டணி என்ற அ…
-
- 0 replies
- 474 views
-
-
நாடாளுமன்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு! நாடாளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அத்துடன், கடந்த வௌ்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலின்போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் மருத்துவ அறிக்கைகளையும் பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இதுவரையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவரின் மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த அணியினர், நேற்று முந்தினம் சப…
-
- 2 replies
- 691 views
-
-
மைத்திரியை இன்று சந்திக்கிறார் ரணில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சந்தித்துப் பேசவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்தே இன்று இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கொழும்பில் இருக்கவில்லை. அவர் பொலன்னறுவ சென்றிருந்ததால் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இன்று மாலை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிற…
-
- 2 replies
- 871 views
-
-
நாட்டின் ஸ்திரமற்ற நிலைக்கு ஜனாதிபதியே காரணம் - ஜே.வி.பி. (ஆர்.யசி) ஜனாதிபதி தலைமையில் கூடிய சர்வ கட்சி கூட்டத்தை புறக்கணித்த மக்கள் விடுதலை முன்னணி, மக்களின் இறையாண்மையை பிரதிநிதித்துவப் படுத்துவதாக கூறப்படும் பாராளுமன்றத்தில் கடந்த மூன்று பாராளுமன்ற அமர்வு நாட்கள் இடம்பெற்ற மோதல் மற்றும் அவமதிப்புச் செயற்பாட்டு நிலைமைக்கும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலைமைக்கும் முழு பொறுப்பும் ஜனாதிபதியும் அவரது தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுமே காரணம் என சுட்டிக்கட்டியுள்ளது. சர்வ கட்சி கூட்டத்தை புறக்கணித்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்ப…
-
- 1 reply
- 631 views
-