ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்ற இப் பேச்சுவார்த்தை வெற்றிகாரமாக நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரண்டு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். முதலாவதாக பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை கருத்திற் கொண்டு ஜனநாயக ரீதியாகவும் சுயாதீனமாகவும் தான் நடந்து கொள்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழப்ப நிலை தொடர்பில் அதிருப்தியையும், கண்டனத்தையும் வெளியிட்டிருந்தார். அத்துடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறுவோருக்கு ஆட்சி வழங்கப்படும் என்று…
-
- 0 replies
- 460 views
-
-
November 15, 2018 பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கவுள்ளதாக இடம்பெறவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குறித்த பிரேரணையில் கையொப்பமிட்ட 122 உறுப்பினர்களும் ஜனாதிபதியை சந்திப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளதுடன், 122 உறுப்பினர்களுக்கு அப்பால் கட்சித் தலைவர்களும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2018/103396/
-
- 0 replies
- 332 views
-
-
கீரிமலை செய்திகள்:யாழ். கீரிமலையிலுள்ள அம்மாச்சி உணவகத்தை அடையாளம் தெரியாதோர் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் உணவகத்தின் கண்ணாடி மற்றும் ஜன்னல்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. அடையாளம் தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. www.todayjaffna.com
-
- 0 replies
- 732 views
-
-
பொதுத் தேர்தல் ரத்துச் செய்யப்படவில்லை:தினேஷ் குணவர்த்தன உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பொதுத் தேர்தல் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி முன்வைக்கும் கருத்து ஒரு மாயை ஆகும் என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் நேற்றிரவு இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். உயர்நீதிமன்றத்தின் உத்தரவு இறுதித் தீர்ப்பல்ல. நீதிமன்றம் விதித்துள்ள தற்காலிக தடை உத்தரவுக்கு மதிப்பளிப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் பொதுத் தேர்தல் இரத்துச் செய்யப்படவில்லை. தற்காலிக தடை மாத்திரமே விதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயகத்தை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தது. இதனை முறியடித்து பொதுத் தேர்…
-
- 1 reply
- 346 views
-
-
ஜனாதிபதியின் கௌரவம் இழக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் பதில் Editorial / 2018 நவம்பர் 15 வியாழக்கிழமை, பி.ப. 12:13 Comments - 0 ஜனாதிபதியின் கௌரவம் இழக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் பதில் நீண்ட காலமாக, அரசியல் வாழ்க்கையில், ஜனாதிபதியால் சம்பாதித்து வைக்கப்பட்டிருந்த நற்பெயரும் கௌரவமும், மிக விரைவில் இழக்கப்பட்டு வருவதாக, சபாநாயகர் கரு ஜயசூரியவினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம், நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விடயங்களை, ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தி, சபாநாயகரால் ஜனாதிபதிக்குக் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, அதன் உள்ளடக்கங்களைத் தான் நிராகரிப்பதாக, ஜனா…
-
- 0 replies
- 439 views
-
-
மகிந்த பாராளுமன்றில் விசேட உரை – சத்தத்தை வைத்து பாராளுமன்றில் வாக்கெடுப்பு நடத்த முடியாது November 15, 2018 சத்தத்தை வைத்து பாராளுமன்றில் வாக்கெடுப்பு நடத்த முடியாதென, மகிந்த ராஜபக்ஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தான் பிரதமராகப் பதவியேற்றதும், நாடு முழுவதும் பல புதிய எதிர்பார்ப்புகள் தோன்றியது எனவும் தெரிவித்த அவர் ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் ஒரு வருடம் நாட்டை ஆட்சி செய்திருந்தால் நாட்டின் நிலை மோசமாகியிருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில்; இன்று விசேட உரையை ஆற்றும் போதே மகிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை ஐக்கிய தேசியக் கட்சி 21 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் வாங்கியுள்ளதாகவும் கடந்…
-
- 2 replies
- 396 views
-
-
பாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் ? பாராளுமன்ற அமர்வினை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. பாராளுமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெற்ற சபாநாயகர் தலைமையிலான கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆளும் தரப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர் தரப்பினரினும் ஊடகவியலாளர் சந்திப்பும் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/44523
-
- 0 replies
- 326 views
-
-
நாட்டைக் காக்கும் நாடாளுமன்றை காக்க STF களமிறங்கியது… November 15, 2018 நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமளியை அடுத்து, நாடாளுமன்ற வளாகத்துக்குள் விசேட அதிரப்படையினரின் பாதுகாப்பை சபாநாயகர் கரு ஜயசூரிய கோரியுள்ளார். அதன் பிரகாரம், விசேட அதிரடிப்படையினரை பாதுகாப்புக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. http://globaltamilnews.net/2018/103361/
-
- 0 replies
- 476 views
-
-
பாராளுமன்றில் இனிமேல் பிரதமரோ அமைச்சரவையோ இல்லை – அவர்களை ஏற்கவும் முடியாது… November 15, 2018 பாராளுமன்றத்தில் இனிமேல் பிரதமரையோ அமைச்சரவை அமைச்சர்களையோ ஏற்றுக் கொள்வதில்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். நேற்றைய தினம் நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பிரதமரோ அமைச்சரவையோ இல்லை என்று அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அனுப்பிய கடிதத்திற்கு பதில் வழங்குவதாகவும், அதற்கு தனக்கு உரிமை இருப்பதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2018/103334/
-
- 0 replies
- 412 views
-
-
முன்னாள் போராளிகளுக்களுக்காக அவர்களின் விடுதலைக்காக சுமந்திரன் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை
-
- 4 replies
- 738 views
-
-
நாடாளுமன்றத்தில் இன்று மேலும் குழப்பங்கள் வெடிக்கும் சாத்தியம்? நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என்பது நிருபணமாகியுள்ள நிலையில்,நாடாளுமன்றத்தில் இன்று தாம் ஆளும் கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொள்ளப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளதுடன், மகிந்த ராஜபக்சவை பிரதமராக சிறப்பு உரையாற்ற அனுமதிக்கப் போவதில்லை என்றும் எச்சரித்துள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் இன்று மீண்டும் குழப்பங்கள் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது. ”புதிதாக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை பெரும்பான்மை உறுப்பினர்கள் நிராகரித்துள்ள நிலையில், நாங்கள் அரசாங்கத் தரப்பு ஆசனங்களில் அமர்ந்து கொள்வோம். எமக்கு அரசா…
-
- 0 replies
- 338 views
-
-
சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! – மைத்திரி சமூகமளிப்பாரா? அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில், நாடாளுமன்றம் இன்று (வியாழக்கிழமை) காலை மீண்டும் கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது. இன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். சம்பிரதாயப்படி நேற்று ஜனாதிபதி நாடாளுமன்றிற்கு வருகைதருவாரென எதிர்பார்க்கப்பட்ட போதும், அவரது வருகை இடம்பெறவில்லை. எனினும், ஜனாதிபதியின் உரை நேற்று நாடாளுமன்ற அமர்வில் வாசிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஜனாதிபதி நாடாளுமன்றிற்கு வருகைதருவாரென எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லையென சபாநாயகர் …
-
- 0 replies
- 605 views
-
-
பிரதமருக்கு பெரும்பான்மையை காண்பிப்பதற்கான தேவை கிடையாது: ஜனாதிபதி பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை உண்டா இல்லையா என்பதை காட்டும் தேவை நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் நம்பிக்கைக்குரிய ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் உள்ளபோதும், நாடாளுமன்ற சம்பிரதாயங்ளுக்கு அமைய அது அவசியமற்றதென ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டு, உறுப்பினர்களின் கையொப்பங்கள் அடங்கிய கடிதத்தை ஜனாதிபதிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அனுப்பிவைத்தார்…
-
- 0 replies
- 434 views
-
-
அபி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்குமாயின் பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை தவிர்த்து வேறு ஒருவரின் பெயரை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து தொடர்ந்தும் தன்னால் பணியாற்ற முடியாது என்பதால், அது சம்பந்தமாக சிந்தித்து பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி அறிவி்த்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுக்கு பதிலாக வேறு ஒருவர் இருந்தால், மஹி…
-
- 3 replies
- 1.1k views
-
-
November 14, 2018 மஹிந்த ராஜபக்ஸ, சில சதிகாரர்களின் வலைகளில் சிக்கிக்கொண்டார் என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டுமென்ற எண்ணத்தில், மஹிந்த ராஜபக்ஸவை பலிகொடுத்துள்ளார் என்றும், நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டு வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2018/103283/
-
- 3 replies
- 601 views
-
-
இன்று கூட்டமைப்பில் இணைய விரும்பிய வியாழேந்திரன்… நாடாளுமன்றில் நடந்த சுவாரஸ்யம்! November 14, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கட்சி தாவி பிரதியமைச்சராக பதவியேற்ற ச.வியாழேந்திரன், மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைய இரகசிய தூது விட்டு வருகிறார் என்பதை தமிழ்பக்கம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது. தமிழரசுக்கட்சியின் சில தலைவர்கள் அவரை மீண்டும் இணைக்க முயற்சிகள் மேற்கொண்டிருந்த போதும், இரா.சம்பந்தன் அவரை மீள இணைத்துக் கொள்ள எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் அப்போது அவரை மீள இணைக்கும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. பெரும் சர்ச்சையின் பின்னர் இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது, வியாழேந்திரன் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைய முயற்சித்தார்…
-
- 4 replies
- 972 views
-
-
ஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி November 14, 2018 ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அமைத்தவுடன் தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படும் என ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தனுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ரணில் இவ்வாறு வாக்குறுதியளித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் தாம் ஆதரவை தெரிவிக்கின்றோம் எனினும் அதற்குப் பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிற…
-
- 2 replies
- 841 views
-
-
பழைய முறையில் மாகாண சபை தேர்தல் Editorial / 2018 நவம்பர் 14 புதன்கிழமை, பி.ப. 05:47 Comments - 0 எஸ்.ஷிவானி ஒன்பது மாகாண சபைகளில், 6 மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் நிறைடைந்துள்ள நிலையில், விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. தொகுதி வாரி அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கு, எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியடையாதுள்ள காரணத்தினால், மாகாண சபைத் தேர்தலை முன்னர் காணப்பட்ட விகிதாசார பிரதிநிதித்துவ முறைக்கமைய, 25 சதவீதம் அவசியம் பெண்களின் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையிலான திருத்தச் சட்டத்தை மேற்கொள்வதற்கு, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா சமர்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்…
-
- 0 replies
- 410 views
-
-
வாக்களித்த தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படுவதை விடு த்து அரசாங்கத்தை காப்பாற்றுவ தற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி மைத்திரி குணரட்ண தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்;றுக் காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்க ண்டவாறு தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண சபை தமக்கு இருக்கின்ற அதிகாரங்களை உரிய முறையில் பயன்ப டுத்திக் கொண்டு தமக்கான அதிகாரங்களைக் கோரவேண்டும். ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மக்களின் வாக்கைப் பெற்றுக் கொண்டு அதன் பின்னர் வெளியில் ஓடிவிடுவர். அவர் கள் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் வீடுக ளைக் கட்டிக் கொண்டு தமத…
-
- 4 replies
- 847 views
-
-
பதவி நீக்கப்பட்டார் மஹிந்த? நா.உறுப்பினர் தகவல் https://www.tamilwin.com/parliment/01/198593?ref=breaking-news thamilwin.com
-
- 6 replies
- 1.5k views
-
-
இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன் இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி இதுவென ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்வரும் 07ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்தோடு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சகல மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதித்துள்ளது. இந்தநிலையில் இந்த வரலாற்று…
-
- 1 reply
- 712 views
-
-
November 14, 2018 ஜனநாயகம் தொடர்பில் துளி அளவேனும் மரியாதை மற்றும் வெட்கம் இருக்குமானால் கொள்ளைக்கார ஆட்சி வெளியேற வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஒன்றின்போது அவர் இக் கருத்தை வெளியிட்டுள்ளார். அத்துடன், 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 122 பேர் பெரும்பான்மையை சிறப்பான, பண்பான மற்றும் முறையான விதத்தில் வெளிப்படுத்தி உள்ளதாக குறிப்பிட்ட அவர், மஹிந்த ராஜபக்ஸ தொடர்ச்சியாக தேசபக்தி, தேசியம் மற்றும் நாட்டு மக்கள் தொடர்பில் எங்களுக்கு வகு…
-
- 6 replies
- 549 views
-
-
நாடாளுமன்றில் நாளை பிரதமர் மஹிந்த விசேட அறிவிப்பை விடுக்கவுள்ளார்! புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளைய தினம் நாடாளுமன்றில் விசேட அறிவிப்பு ஒன்றினை விடுக்கவுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றில் கொண்டு வரப்பட்டு அதற்க்கு 122 பேர் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த நடவடிக்கை முற்றிலும் தவறானது என புதிய அரசாங்க தரப்பினர் கூறிவருகின்ற நிலையில், பிரேரணையின் பிரதியை சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளையத்தினம் நாடாளுமன்றில் விசேட அறிவிப்பு ஒன்றினை விடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உ…
-
- 0 replies
- 390 views
-
-
தேர்தல் நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தால், அதுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதி நீதிமன்றம் போவது உலகில் இங்கே தான் நடக்கின்றது. தனது பதிவிக்காலத்தில் அரசியல் அமைப்பின் பிரகாரம் அமைத்திருக்க வேண்டிய இந்த ஆணைக்குழுவினை அமையாது இருந்த மகிந்த, கடந்த அரசாங்கத்தினால் அமைக்கப் பட்ட இந்த அமைப்பில், தமிழர் தேசிய கூட்டமைப்பு சார்பில் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப் பட்ட, ரத்ன ஜீவன் கூல், இனவாத நோக்குடன் நீதிமன்றினை நாடி, தேர்தலை தடுத்து மக்களின் ஜனநாயக உரிமைகளை தடுக்க முனைகிறார் என்று கடுப்புடன் கூறினார் மகிந்த. தேர்தலை விரும்பாத, தடுக்க முனையும் அரசியல் நோக்குடைய ஆணைக்குழு பிரதிநிதிகள், உலகில், இந்த நாட்டில் மட்டுமே உள்ளனர் என்று மேலும் சொன்னார் அவர். …
-
- 2 replies
- 849 views
-
-
November 14, 2018 புதிய பிரதமர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் விடுக்கும் வரையில், தற்போதைய பிரதமர் பதவியில் நீடிப்பார் என இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மகிந்த சமரசிங்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் தலைமையில் இன்று ஊடக சந்திப்பு இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பிற்கு இணங்கவே நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் கூறிய மகிந்த சமரசிங்க, சட்டத்திற்கு மாறான எந்தவொரு செயற்பாட்டையும் ஜ…
-
- 0 replies
- 306 views
-