ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை தேர்தல் செயற்பாடுகளை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்வரும் 07ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்போதே நீதிமன்றம் மேற்கண்டவாறும் தேர்தல்கள் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் முன்னாயத்த நடவடிக்கைகளை தேர்தல்கள்…
-
- 2 replies
- 460 views
-
-
தமிழ் மக்களுடைய நலன்களை சிந்திக்காமல் ஆளுக்கு ஒரு கட்சியை தொடங்கிவைத்திருப்பவர்கள்தான் உரிமைகளை பெற்றுக்கொடுப்பார்கள் என தமிழ் மக்கள் நம்புவார்கள் என்பது பகல் கனவு மட்டுமே. அந்த கனவு நனவானால் தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற இயலாமல்போகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொது தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து தாமாக விலகி சென்று ஆளுக்கு ஒரு கட்சியை தொடங்கியிருப்பவர்கள் கூட பொது தேர்தலில் களமிறங்குவது குறித்து பேசிக் கொண்…
-
- 2 replies
- 367 views
-
-
November 13, 2018 வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள கஜா புயல் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு பக்கமாக தென்மேற்கு திசை நோக்கி வலுப்பெறும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கஜா புயல் காரணமாக எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் வடக்கு, வடமத்திய மாகாணங்கள், புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. யாழ். குடா நாட்டை அண்மித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மன்னார், புத்தளம், திருக…
-
- 1 reply
- 424 views
-
-
November 13, 2018 கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு (11.11.2018) விசுவமடு குமாரபுரம் பகுதியில் வசித்துவரும் 29 அகவையுடைய மரிய ஜெபசேன் விஜிதன் என்ற முன்னாள் போராளி திடீர் மரணத்திற்கு உள்ளாகியுள்ளார். புன்னை நீராவியில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தரான முன்னாள்போராளி மரிய ஜெபசேன் விஜிதன் மூன்று ஆண்டுகள் புனர்வாழ்வு பெற்று நிலையில் குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு அவரது வீட்ட…
-
- 1 reply
- 386 views
-
-
கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி பொன்னகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தீபாவளி தினத்தன்று அறிவியல் நகர் பல்லைக்கழக சந்தியிலுள்ள உணவகத்திற்கு சென்று வருவதாகத்தெரிவித்து அவரது உறவினர் அழைத்துச்சென்றநிலையில்; குறித்த இளைஞன் வாகனம் ஒன்றில் பொலனறுவையைச் சேர்ந்தவர்களால் கடத்தப்பட்டு இளைஞரின் உறவினர்களிடம் ஐந்து இலட்சம் ரூபா பணம் தருமாறும் அவரை உயிருடன் விடுவதாக கடத்தல்காரர்கள் தொலைபேசியூடாக அச்சுறுத்தினர். இதையடு…
-
- 0 replies
- 377 views
-
-
November 13, 2018 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn கோத்தபாய ராஜபக்ஸவினால் புதிய உற்பத்தி தளமாக அடையாளப்படுத்தப்பட்ட ரிபோலியே அவரது சித்திரவதை முகாம் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் திடீரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை …
-
- 0 replies
- 358 views
-
-
SC stays proclamation dissolving parliament. http://www.dailymirror.lk/article/SC-stays-proclamation-dissolving-parliament--158295.html அய்யோ சிறிசேன தீடீரென சன்னதம் கொண்டு ஆடி, நாட்டினைப் இரு வாரங்களாக கடும் பரபரப்பில் வைத்திருந்த ஜனாதிபதி மைத்திரிபாலவின் பாராளுமனற கலைப்புக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. நாளை நாடாளுமன்றம் கூடுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், முன்னாள் பாராளுமனற உறுப்பினர்கள், மீண்டும் இந்நாள் உறுப்பினர்களான அதிசய அரசியல் நிகழ்வு இலங்கையில் நடந்துள்ளது. பதவிப் பேராசையால், மைத்திரிபலாவை மடக்கி, கையாண்ட மகிந்தவுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப் படுகின்றது. நாடாளுமன்றம் மீண…
-
- 3 replies
- 570 views
-
-
மொட்டில் போட்டியிடுகிறார் நாமல் குமார – வெளுத்தது சாயம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்ட நாமல் குமார, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். தாம் பொதுஜன முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நாமல் குமார் அறிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் படுகொலைச் சதித் திட்டத்தில் முதலில் பாதாள உலகை சேர்ந்தவரையும், காவல்துறை அதிகாரி ஒருவரையும் குற்றம்சாட்டிய நாமல் குமார பின்னர், சரத் பொன்சேகாவையும் அதில் தொடர்புபட்டுள்ளார் என்று கூறியிருந்தார். மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட பி…
-
- 1 reply
- 756 views
-
-
சுதந்திர கட்சியிலிருந்து விலகினார் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் நேற்றைய தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருந்தார். இதேவேளை, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி 05ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்த சின்னத்தின்கீழ் போட்டியிடுவது என்பது குறித்து மைத்திரி, மஹிந்த கூட்டணிக்குள் கருத்த…
-
- 6 replies
- 1.1k views
-
-
முஸ்லிம்களிடம் அருகிவரும் பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறப்பு நிகழ்வு. (எச்.எம்.எம்.பர்ஸான்) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்திய முஸ்லிம் பாரம்பரிய கலைகலாசார நிகழ்வு மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களிடம் அருகிவரும் பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் கோலாட்டம் களிகம்பு, சீனடி, வாள்வீச்சு, கம்புவீச்சு, கஸீதா, நாட்டார் கவி, றபான், ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கல்குடா, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கலைமன்றங்களின் உறுப்பினர்கள், …
-
- 1 reply
- 657 views
-
-
தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களை மையப்படுத்தி வடக்கு கிழக்கில் தற்போது பெரும் அரசியல் தகிடுதாளங்கள் தொடங்கியுள்ளன. வடக்கு, கிழக்கு மக்களுக்கு உள்ள தமிழ்த்தேசியப்பற்றையும் புலிகள் தொடர்பாக அப்பகுதி மக்களுக்கு உள்ள செல்வாக்கையும் வைத்து அதனை மூலதனமாக்கி தமக்கான வாக்கு வேட்டை நடாத்தவே தற்போதய தமிழ் அரசியல்வாதிகள் முன்னிலையில் நிற்கின்றார்கள். வடக்கில் தற்போது 3 அணிகள் தமிழ்த்தேசியத்தையும் புலிப்பபுராணத்தையும் வைத்து களமிறங்க ஆயத்தமாகியுள்ளன. வீட்டுச்சின்னம் மற்றும் சைக்கிள், இன்னொன்று தற்போது புதிதாய் அவதாரம் எடுத்துள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அணி என்பனவாகும். தற்போது முஸ்லீம் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய பாதையில் பயணிக்க ஆயத்தமாகி வரும் சமயத…
-
- 0 replies
- 627 views
-
-
ஐதேக தலைவராக, பிரதமர் வேட்பாளராக நிற்கத் தயார் – சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கத் தயார் என்றும், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள சேவைக்கு நேற்று செவ்வி அளித்த அவரிடம், கட்சிக்குத் தலைமையேற்கத் தயாராக இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ”சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டால்,எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். கட்சியின் தற்போதைய தலைமை மற்றும் ஏனையவர்களின் ஆதரவு இருந்தால், எந்தப் பதவியையும் ஏற்றுக் கொள்ளத் தயார். கட்சித் தலைவராக வருவதற்கு காட்டுச் சட்டங்களை, பின்…
-
- 0 replies
- 368 views
-
-
தந்தை இறந்த செய்தி அறிந்ததும் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்த வவு. பல்கலைகழக மாணவி! November 12, 2018 தந்தை இறந்த செய்தி கேட்டு அதனை தாங்கிக் கொள்ள முடியாத மகள், புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியாவை சேர்ந்த பல்கலைகழக மாணவியான இவர், கண்டியில் தற்கொலை செய்துள்ளார். வவுனியா கற்குளத்தை சொந்த இடமாக கொண்ட, கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவு 2ஆம் வருட மாணவி செல்வநாயகம் மதுசா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா கற்குளம் 4 ஐ சேர்ந்த செல்வநாயகம் என்பவர் நேற்றைய தினம் இயற்கை எய்தினார். இந்தச் செய்தி பேராதனைப்பல்கலைக்கழகத்தில் பயிலும் அவரது மகளுக…
-
- 1 reply
- 532 views
-
-
இன்று காலை மீண்டும் உலகின் கவனத்தை ஈர்க்கும் உச்சநீதிமன்றம் நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபரின் உத்தரவு சட்டவிரோதமானது என்றும், பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரியும், தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் நேற்று பிற்பகல் 2 மணியளவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போது மனுதாரர்கள் தரப்பில் முன்னிலையான சட்டவாளர்கள் தமது வாதங்களை முன்வைத்தனர். எனினும், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய காலஅவகாசம் கோரியதால், இந்த மனுக்கள் மீதான விசாரணையை தலைமை நீதியரசர் நளின் பெரேரா தலைமையி்லான மூன்று நீதியரசர்கள் குழு, இன்று காலை 10 மணிவரை ஒத்தி …
-
- 0 replies
- 397 views
-
-
பிரதமர் மஹிந்த குருநாகலிலும் நாமல் அம்பாந்தோட்டையிலும் போட்டி! எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் மாவட்டத்திலும் அவரது மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது, அதில் கலந்துகொண்ட அக்கட்சியின் உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, “மஹிந்த ராஜபக்ஷ கடந்த முறைய நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு பெறும் வெற்றியை பெற்றிருந்தார். ஆகவே இம்முறை நடைப…
-
- 2 replies
- 345 views
-
-
November 12, 2018 வடக்கு, கிழக்கில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் அந்தக் கட்சி ஈடுபட்டுள்ளதுடன் வேட்பாளர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கிலேயே முன்னாள் முதலமைச்சரால் அண்மையில் புதிய கட்சி தொடர்பில் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்த போதும் தற்போது திடீரென பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பாராள…
-
- 3 replies
- 646 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார் தொல்.திருமாவளவன் VanniNov 12, 2018 by in செய்திகள் தமிழ்நாட்டின் விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். இதன்போது அவர், வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அத்துடன், வடமாகாண மரநடுநகை மாத நிகழ்விலும் பங்கேற்றிருந்தார். நேற்றிரவு அவர் முல்லைத்தீவுக்குச் சென்று இறுதிப் போர் நடந்த முள்ளிவாய்க்காலில், அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் வணக்கம் செலுத்தினார்.…
-
- 1 reply
- 533 views
-
-
November 12, 2018 தமிழீழ விடுதலைப்புலிகள் இரு தடவைகள், தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் என அரசியல் யாப்புக்கு உட்பட்ட பிரதமர் என கூறப்படும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை நிராகரித்த ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கருஜெயசூரியவை கட்சிதலைவர்கள் சந்தித்தவேளை எவரும் இது குறித்து தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.இரத்தக்களறியேற்படும் ஆபத்துள்ளது என அவர்கள் கருதியிருந்தால் …
-
- 1 reply
- 544 views
-
-
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி முன்அறிவித்தல்களின்றி இடைநிறுத்தம் மன்னார் மனித புதைகுழியில் இதுவரை இடம்பெற்ற மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகளின் போது 232 க்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 224 அதிகமான மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அடையாளப்படுத்தப்பட்டு இன்னமும் அப்புறப்படுத்தப்படாத மேலதிக மனித எலும்புக்கூடுகளை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. இந்தநிலையில் முன் அறிவிதல் இன்றி நேற்று முதல் எதிர்வரும் இரு வாரங்களுக்கு திடீர் என அகழ்வு பணியானது இடைநிறுத்தப்பட்டுள்ளது. அகழ்வ…
-
- 1 reply
- 895 views
-
-
கூட்டமைப்பில் இணையும் புதிய கட்சிகள்! – மாவை கருத்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் புதிய கட்சிகள் அல்லது அமைப்புக்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் இன்னும் சில தினங்களில் தீர்மானிக்கவுள்ளதாக கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளும் ஐனநாயகப் போராளிகள் அமைப்பினரும் இன்னும் சில தினங்களில் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவுப் பொருட்களை சேகரிக்கும் பணியை பருத்தித்துறையில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பித்து வைத்த மாவை சேனாதிராஜாவ…
-
- 1 reply
- 718 views
-
-
தெற்கு சிங்களவர்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களுக்கு தீர்வில்லை என்கிறார் கெஹெலிய! தெற்கு சிங்கள மக்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காதென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். எனவே, தெற்கு சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்ற மஹிந்தவிற்கு ஆதரவளித்து தமிழ், முஸ்லிம் மக்கள் தமக்கான தீர்வினைப் பெறவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார். கண்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்- ”தெற்கு மக்களின் ஆசிர்வாதம் இல்லாமல் வடக்கு கிழக்கிற்கு நிரந்தர தீர்வு சாத்தியமில்லை என, வடக்கு மக்களும் புலம்பெயர் சமூகமும் நன…
-
- 14 replies
- 1.5k views
-
-
நிதஹாஸ் பொதுஜன பெரமுன என்ற புதிய கூட்டணியை அமைக்க சிறிசேன- மகிந்த இணக்கம் நிதஹாஸ் பொதுஜன பெரமுன என்ற புதிய கூட்டணியை அமைத்து பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு ஜனாதிபதி சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். நேற்றிரவு சிறிசேனவிற்கும் மகிந்தராஜபக்சவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது இது குறித்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வெளியேறி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து வருகின்ற ஒரு சூழ்நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிதஹாஸ் பொதுஜன பெரமுன ன கூட்டணிக்கு பெயரிடப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும…
-
- 0 replies
- 410 views
-
-
ஐக்கியதேசிய கட்சியின் தலைமையை ஏற்க தயார்- சஜித் Published by rajeeban on 2018-11-13 10:49:40 ஐக்கியதேசிய கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பதற்கும் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கும் நான் தயார் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிபிசியின் சிங்கள சேவைக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். உரியநடைமுறைகள் பின்பற்றப்பட்டால் நான் எந்த பொறுப்பையும் ஏற்க தயார் என அவர் தெரிவித்துள்ளார். கட்சியின் தற்போதைய தலைமைத்துவத்தின் ஆதரவும் ஏனையவர்களின் ஆதரவும் கிடைத்தால் எந்த பொறுப்பையும் ஏற்க தயார் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கட்சி தலைவராவதற்கு வேறு எந்த நேர்மையற்ற ஜனநாயக விரோத வழிமுறைகளையும் பின்பற்றதயாரில்லை எனவும் அவர்…
-
- 0 replies
- 271 views
-
-
ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு ஆதரவாக உயர்நீதிமன்றில் மனு பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன கலைத்தமைக்கு ஆதரவாக இன்று ஐந்துபேர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். பேராசியர் ஜிஎல் பீரிஸ் உதயகம்மன்பில வாசுதேவ நாணயக்கார உட்பட ஐவர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களை உயர் நீதிமன்றம் இன்று ஆராய்ந்து வருகின்ற நிலையிலேயே ஜனாதிபதியின் முடிவு சரியானது என வாதிடும் மனுக்கள் தாக்கல் செய்யப்ட்டுள்ளன. ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களை ஆராய்ந்து வரும் உயர்நீதிமன்றம் இன்று தனது முடிவை அறிவிக்கவுள்ளது http://www.virakesari.lk/article/44375
-
- 0 replies
- 300 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அவரது குடும்பத்தினர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்விவகாரங்கள் தொடர்பான ஆணைக்குழுவின் விசேட பேச்சுவார்த்தை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இலங்கை தொடர்ந்தும் சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உத்தியோகபூர்வ அறிக்கை கிடைத்துள்ளதாகவும், இதனை அடிப்படையாக கொண்டு இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் …
-
- 3 replies
- 790 views
-