Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம்: தீர்மானம் மிக்க முடிவு இன்று! இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படவுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக ஐ.தே.க., தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி., அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சிவில் அமைப்புகள் சார்பாக 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 10 மனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்டதோடு, எஞ்சியவை இன்று பரிசீலிக்கப்படவுள்ளன. பிரதம நீதியரசர் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழாமில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளன. அத்தோடு, இன்றைய தினம் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தமது விளக்கத்தை முன்வைக்கவ…

  2. மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்! கடந்த வெள்ளிக்கிழமை 104ஆவது தடவையாக இடம்பெற்ற அகழ்வுப் பணியானது கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளை தொடர்ந்து நேற்று (திங்கட்கிழமை) காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கவேண்டும். எனினும், அவ்வாறு ஆரம்பிக்கப்படவில்லை. மேலும் இரண்டு வார காலத்திற்கு அகழ்வுப் பணிகள் இடம்பெறாதென்றும் தெரிவிக்கப்படுகிறது. மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணியானது மாவட்ட நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையிலும் சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையிலும் இடம்பெற்று வருகின்றது. இதுவரை இடம்பெற்ற மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப் பணிகளின்போது 232இற்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 224இற்கு அதிகமான மன…

  3. November 12, 2018 இலங்கை பாராளுமன்றத்தை ஜனாதிபதி சிறிசேன கலைத்ததற்கான தங்கள் எதிர்ப்பை வெளியிடும் வகையில் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சரத் அமுனுகமவுடனான சந்திப்பை எட்டு மேற்குலக நாடுகள் புறக்கணித்துள்ளன. வெளிவிவகார அமைச்சர் சரத்அமுனுக சந்திப்பொன்றிற்காக 43 நாடுகளின் பிரதிநிதிகளிற்கு அழைப்பை விடுத்திருந்த போதிலும் மிக்குறைந்த அளவு வெளிநாட்டு இராஜதந்திரிகளே இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர். பிரிட்டன் பிரான்ஸ் நெதர்லாந்து நோர்வே அவுஸ்திரேலிய கனடா தென்ஆபிரிக்கா இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்கள் இன்றைய சந்திப்பை புற…

  4. அபி நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பழமை வாய்ந்த மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி சபையின் உப தவிசாளர் ஜெயன் பிரேரணை ஒன்றை சபையில் முன்மொழிந்தார். நல்லூர் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு சபை மண்டபத்தில் தவிசாளர் தியாகமூர்த்தி தலைமையில் இன்று இடம்பெற்றது. இதன்போது முன்வைக்கப்பட்ட இந்தப் பிரேரணை அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் ஊடாக சபையில் எல்லைக்குள் உள்ள பழமை வாய்ந்த மரங்களில் உள்ள குருவிச்சை,பாரிய கொப்புக்கள் போன்றவற்றை வெட்ட…

  5. இன்று காலை சுமார் 12 மனுக்களை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்று, மாலை 2 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. பின்னர் நாளை காலை வரை ஒத்தி வைத்து உள்ளது. நாட்டின் முக்கியமான அரசியல்வாதிகள் பலர் இன்று நீதிமன்றுக்கு வந்திருந்தனர். அவர்களில் சுமந்திரன் போன்ற சட்டத்தரணிகள் கறுப்பு சட்டத்தரணிகள் உடையுடன் வந்திருந்தனர். http://www.dailymirror.lk/article/Dissolution-of-parliament-Petitions-to-be-taken-up-today-158227.html http://www.dailymirror.lk/article/-SC-adjourns-sittings-till-pm-158228.html http://www.dailymirror.lk/article/FR-petitions-SC-adjourned-till-tomorrow-158237.html

    • 4 replies
    • 1.1k views
  6. November 12, 2018 ஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. அதனடிப்படையில், பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 16ஆவது அத்தியாயத்தின் கீழ் சுயாதீன குழுக்கள் தத்தமது வேட்புமனு தாக்கலின்போது ஒவ்வொரு வேட்பாளருக்கும் 2ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் கணக்கிட்டு தெரிவத்தாட்சி அதிகாரியிடம் வைப்பிலிடவேண்டும். அத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட …

  7. November 12, 2018 இலங்கையின் போலிப் பிரதமர் எனப்படும் மகிந்த ராஜபக்ஸவின் கூட்டம் ஒன்றில் தமிழ் முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களை நீக்கிய சர்ச்சைக்குரிய கொடி பயன்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹர்சடி சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மேடையில் அமர்ந்திருக்கையில் இந்தக் கொடியைப் பயன்படுத்தி இருப்பது வெட்கக் கேடானது என ஹர்சடி சில்வா தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இது குறித்து மீள் ருவீட் செய்துள்ள ஒருவர் இந்தக் கொடி கணிணியூடாக மாற்றப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்…

  8. November 12, 2018 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn கொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று வவ்ன்புனர்வுக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 12 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர…

  9. ஐ.தே.க.வுக்கு கூட்டமைப்பு ஆதரவு இல்லை: துரைராசசிங்கம் கூட்டமைப்பு ஜனநாயகத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளதே தவிர ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக இல்லையென கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு இலங்கை தமிழ் அரசுக் கட்சிக் காரியாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறியுள்ளதாவது, “நாம் ஒத்த கருத்தோடு மாத்திரம் செயற்படுகின்றோமே ஒழிய ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாக செயற்பட வேண்டிய அவசியமில்லை. மேலும் கூட்டமைப்பை பொறுத்தவரை அரசியலமைப்பில் 19ஆவது திருத்தச் சட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மீறப்பட்டுள்ளது. ஆகையால் ஜனந…

  10. தர்மத்திற்கமைய நடப்பவரை தர்மமே பாதுகாக்கும் - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் வெளியிடப்பட்ட விசேட அறிக்கை November 11, 2018 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் வெளியிடப்பட்ட விசேட அறிக்கை ( 2018.11.11) தற்போதைய அரசியல் நிலைமைகளை தெளிவுபடுத்தும் வகையில் 14 நாட்களுக்குள் இது நான் உங்கள் முன் உரையாற்றும் மூன்றாவது முறையாகும். முதலாவதாக கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமர் பதவியில் அமர்த்தியதை அடுத்து நான் எனது கருத்துக்களை முன்வைத்தேன். அதேபோன்று நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி பத்தரமுல்லையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது இரண்டாவது தடவையாக அரசியல் நிலைமைகளை உங்களுக்கு தெளிவுபடுத்தினேன். இன்று மூன்றாவது முறையாக உங்கள் முன் உரையாற்றுகின்றேன்…

    • 9 replies
    • 1.2k views
  11. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கைமாறப்பட்ட தொகை மைத்திரிக்கு எவ்வாறு தெரியும்?- பாலித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைக்குபோன தொகை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எவ்வாறு தெரியுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும கேள்வி எழுப்பியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தற்போதைய இலங்கை அரசியல் தொடர்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தெவரப்பெரும இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தமை தொடர்பாக நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றினை நிகழ்த்தியிருந்தார். அதில், “நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் 100 மில்லியன் ரூபாய் முதல் 150 மில்லியன் ரூபாய் வரை…

  12. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்.மாணவர்கள் உதவி கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சேகரிக்கப்பட்ட உலருணவுப் பொருட்களை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கி வைத்துள்ளனர். கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் கிழக்கு மாகாணத்தில் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் மட்டக்களப்பின் சில பகுதிகளில் வெள்ளநீர் வீடுகளில் புகுந்தமையினால் அதிலிருந்த மக்கள் பாதுகாப்பாக பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனர். இந…

  13. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கெதிராக உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல் November 12, 2018 பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக 10 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன கலைத்தமைக்கு எதிராக இவ்வாறு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருந்தார். இதனை அடுத்து அரசியல் கட்சிகள் தமது எதிர்ப்பை தெரிவித்திருந்த நிலையில் இவ்வாறு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2018/103041/

  14. அரச வாகனங்கள்- சொத்துக்களை ஒப்படைக்காத முன்னாள பிரதமர் அமைச்சர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை November 12, 2018 அரச வாகனங்கள், சொத்துக்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டுமக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி, பிரதமர், புதிய அமைச்சரவையின் உறுப்பினர்களைத் தவிர முன்னாள் பிரதி, இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என எந்தவொரு நபரும் அரச வாகனங்கள் மற்றும் அரச சொத்துக்களைப் பயன்படுத்துவது தேர்தல் சட்டத்தின் கீழ் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும…

  15. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக இன்று வழக்குத் தாக்கல்! இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து குறித்த வழக்கை தாக்கல் செய்யவுள்ளன. நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் செயற்பாடு அரசியலமைப்பிற்கு முரணானதோடு, ஜனநாயக விரோத செயற்பாடு என தெரிவித்துள்ள குறித்த கட்சிகள், அதன் பிரகாரம் இன்று வழக்குத் தாக்கல் செய்யவுள்ளன. நாட்டின் பிரதமர் நியமனத்தில் ஏற்பட்ட சர்ச்சை நிறைவடையாத நிலையில், நாடாளுமன்றத்தைக் கூட்டவேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி …

  16. விசுவாசமானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவேன் – சந்திரிகா 2015 ஜனவரி 8 இல் வெளிப்படுத்தப்பட்ட மக்களின் அபிலாசைகளுக்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த சிலர், துரோகம் செய்வதாக குற்றம்சாட்டியுள்ள முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, விசுவாசமானவர்களுடன் இணைந்து கட்சியை மீளக்கட்டியெழுப்பப் போவதாக தெரிவித்துள்ளார். “ஏனைய பல கட்சிகள் குழுக்களுடன் இணைந்து நல்லாட்சியை கொண்டு வருவதற்கான யுத்தத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெற்றது. சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்வதன் மூலம் சிலர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்க முனைகின்றனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து யார் விலகினாலும் நான் …

  17. பிரதமர் பதவிக் காலம் பற்றி சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் அரசியல் சாசனத்தினது 46வது சரத்தின் 2வது பிரிவு சொல்வது ..... 46. (1) The total number of– (a) Ministers of the Cabinet of Ministers shall not exceed thirty; and (b) Ministers who are not members of the Cabinet of Ministers and Deputy Ministers shall not, in the aggregate, exceed forty. (2) The Prime Minister shall continue to hold office throughout the period during which the Cabinet of Ministers continues to function under the provisions of the Constitution unless he - (a) resigns his office by a writing under his hand addressed to the P…

    • 10 replies
    • 1.5k views
  18. பண்டாரநாயக்க, கல்லறைக்கு உள்ளே கண்ணீர் வடிப்பார் – மனோ சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிலைமை தொடர்பில் கட்சியின் ஸ்தாபகர் பண்டாரநாயக்க, கல்லறைக்கு உள்ளே கண்ணீர் வடிப்பார் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் இன்று இணைந்துள்ளளார். இந்நிலையிலேயே முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது டுவிட்டரில் இது குறித்து கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில்.”எல்லோரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை நோக்கி……. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர் பண்டாரநாயக்க, கல்லறைக்கு உள்ளே செய்த பாவங்களுக்காக கண்ணீர் வடித்துக் கொண்டு இருப்பார்” என்று பதிவிட்டுள்ளார். http://…

    • 4 replies
    • 1.1k views
  19. பூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் தற்போதைய நிலை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பூகோள அரசியல் போட்டியின் விளைவாகவே தற்போது நாட்டில் சட்டத்திற்கு முரணான ஆட்சிக் கலைப்பும் நாடாளுமன்ற கலைப்பும் ஏற்படக் காரணமாக இருப்பதாகவும் இவற்றின் பின்னணியின் சீனாவின் செயற்பட்டு வருகின்றது எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஆதவன் தொலைக்காட்சியின் சிறப்பு நிலைவரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருந்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்ச்சியில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; “மஹிந்த அரசாங்கத்தின் காலத்தில் சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அபரீதமாக வளர்ச்சியடைந்தது. அதனை தடுத்து நி…

    • 3 replies
    • 722 views
  20. பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் Image caption மைத்திரிபால சிறிசேன இலங்கையில் நாடாளுமன்றத்தை கலைத்து, வரும் ஜனவரி 2019 தொடக்கத்தில் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்ல தலைவராக இல்லை என்றும், நாட்டின் பின்னடைவுக்கு வித்திட்ட மனிதராகிவிட்டார் என முன்னர் செயல்பாட்டில் இருந்த இலங்கை நாடாளுமன்றத்தின் குழுக்களின் தலைவராக விளங்கிய செல்வம் அடைக்கலநாதன் கூறுகிறார். …

    • 4 replies
    • 743 views
  21. முடங்குகிறது தேர்தல் ஆணைக்குழு – முற்றுகிறது நெருக்கடி நாடாளுமன்றத்தை சிறிலங்கா அதிபர் கலைத்துள்ள நிலையில்,தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய , சுதந்திர தேர்தல் ஆணைத்தின் அதிகாரங்களையும் பொறுப்புகளையும், தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.பீ.சி பெரேராவிடம், கையளித்துள்ளதை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. சுதந்திர தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மகிந்த தேசப்பிரியவும் நளின் அபயசேகரவும் கையெழுத்திட்டு, இது தொடர்பான அறிக்கையொன்றை நேற்று வெளியிட்டுள்ளனர். எனினும், ஆணைக்குழுவின் மூன்றாவது உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூ…

    • 3 replies
    • 477 views
  22. சிறிலங்காவில் ஜனநாயகத்துக்காக மெழுகுவர்த்தி போராட்டம் சிறிலங்காவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும்- நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கொழும்பில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது. கங்காராமய விகாரைக்கு அருகே நேற்று மாலை நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி ஒழுங்கு செய்திருந்தது. இந்தப் போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களான மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன, ருவான் விஜேவர்த்தன, ரோசி சேனநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். http://www.puthinappalakai.net/2018/11/12/news/34300

  23. ஐ.தே.க.வுக்கு கூட்டமைப்பு ஆதரவு இல்லை: துரைராசசிங்கம் கூட்டமைப்பு ஜனநாயகத்துக்கு எதிராக குரல் கொடுத்துள்ளதே தவிர ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக இல்லையென கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு இலங்கை தமிழ் அரசுக் கட்சிக் காரியாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறியுள்ளதாவது, “நாம் ஒத்த கருத்தோடு மாத்திரம் செயற்படுகின்றோமே ஒழிய ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாக செயற்பட வேண்டிய அவசியமில்லை. மேலும் கூட்டமைப்பை பொறுத்தவரை அரசியலமைப்பில் 19ஆவது திருத்தச் சட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மீறப்பட்டுள்ளது. ஆகையால் ஜனநாயகத்துக்கு முரணா…

  24. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடும் நோக்கில், சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, இந்த வாரக் கடைசியில் மாலைதீவுக்குப் பயணம் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலைதீவில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகிம் சோலி வரும், 17ஆம் நாள் பதவியேற்கவுள்ளார். இந்த நிகழ்வில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாலைதீவு அதிபரின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க, இந்தியப் பிரதமர் மோடி மாலேக்கு வரும் 17ஆம் நாள் செல்லவுள்ளார். மாலைதீவு அதிபரின் பதவியேற்பு நிகழ்வுக்கு செல்லுமாறும், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேச ம…

    • 3 replies
    • 405 views
  25. வடக்கில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி? நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில், வடக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளன. உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐதேக, ஜேவிபி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளன. இந்த மனுவின் மீது உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்படும் வரை- சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசிதழ் அறிவிப்புக்கு அமைய நாடாளுமன்றத் தேர்தலை ஜனவரி 05ஆம் நாள் நடத்துவதற்கான பணிகள் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.