Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஏனைய நாடுகளின் கடற்படைகள் பாவித்த கப்பல்கள் நன்றாகவே உள்ளன – சிறிலங்கா கடற்படை ஏனைய நாடுகளின் கடற்படைகள் பயன்படுத்திய கப்பல்களை நல்ல நிலையிலேயே சிறிலங்கா கடற்படை பெற்றுக் கொள்கிறது என்று சிறிலங்கா கடற்படையின் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார். அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் கடற்படைகளின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட கப்பல்களை சிறிலங்கா கடற்படை வாங்கி வருகிறது. இதுகுறித்து முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயந்த கொலம்பகே, கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், சிறிலங்கா கடற்படையின் தலைமை அதிகாரி, பாவித்து கழிக்கப்பட்ட போர்க்கப்பல்களை தாம் வாங்குவதை நியாயப்படுத்தியுள்ளார். …

  2. இலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo! இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த பெண் விடுதலை புலி உறுப்பினர்கள் பலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமையை உறுதிப்படுத்தும் இன்னொரு சான்றாக #MeToo பரப்புரையில் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இந்தியா, இலங்கை உட்பட உலகம் முழுவதும் தற்போது பெரும் பூதாகரமான பிரச்சினையாக #MeToo விவகாரம் காணப்படுகின்றது. குறிப்பாக பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்கிய பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் முகமாக #MeToo பதிவு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பு…

    • 16 replies
    • 1.8k views
  3. தன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு. நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன தன்னை இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ படுகொலைசெய்ய முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் பிரதமர் நரேந்திர மோடி இந்தத் திட்டம் தொடர்பாக ஒருவேளை அறிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளதாக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியபோது தாம் அதிர்ச்சியடைந்ததாக தம்மை இனங்காட்டிக் கொள்ள விரும்பாத அந்த வட்டாரத்தினர் கூறியுள்ளனர். இந்த விடயத்தினை உறுதிப்படுத்துவதற்…

    • 17 replies
    • 1.5k views
  4. தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் சின்னத்துடனான துண்டுபிரசுரங்கள் மூலம் இனம்தெரியாதோர் அழைப்பு October 22, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுபிரசுரங்கள் மூலம் இனம்தெரியாத நபர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். யாழில் எதிர்வரும் 24ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் அறிவிப்பார் என தெரிய வருகிறது. இந்நிலையில் குறித்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இன்றைய தினம் திங்கட்கிழமை தமிழீழ விடுதலைப்புலிகளின் ச…

    • 1 reply
    • 475 views
  5. தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகமாட்டேன்: சீ.வீ.கே.சிவஞானம் ஒற்றுமையீனத்தின் சின்னமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பல பிரிவுகளாக பிளவடைந்து காணப்படுவதாகவும், எனினும் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகப் போவதில்லையென்றும் வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் நாளை (புதன்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. அது தொடர்பாக தமது அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டபோது 30 உறுப்பினர்களுடன் 4 பங்காளிக் கட்சிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபையில் ஆட்சியமைத்தது. இன்று அது மூன்று பங்காளிக் கட்சிகளுடன் காண…

    • 1 reply
    • 667 views
  6. சிறிலங்கா கடற்படையின் அழைப்பை 35 நாடுகள் நிராகரிப்பு கொழும்பில் சிறிலங்கா கடற்படை நடத்தும், காலி கலந்துரையாடலில் இம்முறை அதிகளவு நாடுகள் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் நேற்று ஆரம்பமாகிய, ‘காலி கலந்துரையாடல்-2018’ கடல்சார் பாதுகாப்பு மாநாடு இன்று இரண்டாவது நாளாக தொடரவுள்ளது. இந்த மாநாட்டில், அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் கடற்படை அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தினால், 73 நாடுகளுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தன. எனினும், 38 நாடுகள் மாத்திரமே தமது பிரதிநிதிகளை அனுப்பியுள்ளன. 35 நாடுகள் …

    • 0 replies
    • 307 views
  7. வடக்கு மாகாண சபை கீதத்திற்கு அங்கீகாரம் வடக்கு மாகாணசபை கீதம் உருவாக்கப்பட்டு சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய இறுதி அமர்வில் குறித்த கீதம் ஒலிக்கவிடப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு ஆரம்பமான வடக்கு மாகாண சபையின் 5 வருடங்களைக் கொண்ட ஆட்சிக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அதன் இறுதி அமர்வு நடைபெறுகிறது. அந்தவகையில், வடக்கு மாகாண சபைக்கென ஒரு கீதம் இல்லாத நிலையில், அது உருவாக்கப்பட்ட இன்று சபையில் அங்கீகாரம் பெறப்பட்டது. இலங்கையின் தேசிய கீதம் இரு மொழிகளில் உள்ளதைப் போன்று, வடக்கு மாகாண கீதமும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் அமைய வேண்டுமென வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜயதிலக உள்ளிட்டோர் இதன்போது கே…

  8. வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இன்று சபையின் கடைசி அமர்வு இடம்பெறவுள்ளது. 2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர், முதலாவது சபை அமர்வு 2013 ஒக்டோபர் 25ஆம் திகதி கூடியது. அதன்படி, சபையின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் முடியவுள்ளது. இதன் பின்னர்,அடுத்த தேர்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வரை,ஆளுநரே வடக்கு மாகாணத்தை முகாமைத்துவம் செய்வார். அதேவேளை, வடக்கு மாகாண சபையின் முதலாவது சபையின் இறுதி அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்த அமர்வு …

  9. மைத்திரி – கோத்தா கொலை முயற்சி – இந்தியப் பிரஜை பயங்கர வாத தடைச் சட்டத்தின் கீழ் இன்று விசாரணை October 23, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்ய சதி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜையான மேர்சலி தோமஸ் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இன்று தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பணி இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதிக் காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வாவிடம் நேற்றையதினமும் 9 மணி நேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் இன்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்றையதினம் கொலை செய்ய சதி செய்தார்…

  10. ஜனாதிபதிக்கு எதிரான கொலை சதி விசாரணைக்கு சீன நிபுணர்களுக்கு அழைப்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வது தொடர்பான தொலைபேசி உரையாடலை ஆய்வு செய்வதற்காக சீன நிபுணர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக எக்கனமி நெக்ஸ்ட் இணையத்தளம் தெரிவித்துள்ளது. குறித்த சதித் திட்டத்தை வெளிப்படுத்திய முன்னாள் விமானப் படையைச் சேர்ந்தவரும் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவருமான நாமல் குமார, பிரதிப் பொலிஸ்மா அதிபருடனான தனது தொலைபேசி உரையாடல்கள் பெரும்பாலானவை நீக்கப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பான பிரதிப்பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வாவின் குரல் பதிவொன்று இருப்பதாக கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஊடக…

  11. வட மாகாண கல்வி அமைச்சினால் இலத்திரனியல் கற்றல் இறுவட்டும் இணையத்தளமும் வெளியீடு October 22, 2018 வடமாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள் விளையாட்டு;ததுறை,இளைஞர் விவகார அமைச்சானது மாணவர்களின் சுய கற்றலை வலுப்படுத்தவும்,பிரதன பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத குறையை ஓரளவுக்குப் போக்கவும் அல்லது முக்கிய பாடங்களான கணிதம்,விஞ்ஞானம்,ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் பாடசாலைக்குச் சமுகம் அளிக்காத சந்தர்ப்பங்களில் தடையின்றிப் பாடங்கள் நடைபெறுவதற்கென்ற பல்வேறு உயர்ந்த நோக்கங்களைக் கருத்தில் கொண்டு ஆரம்ப வகுப்புகள் தொடக்கம் க.பொ.த. உயர்தரம் வரை கணிதம், விஞ்ஞானம்,ஆங்கலம் போன்ற முக்கியமான பாட்களுக்கு அவ்வப் பாடங்களின் அறிவுரைப்பு வழிகாட்டிக ளுக்கு அமைய மாணவர்கள்…

  12. கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்தானது: மூன்று கட்சிகள் இணைந்தன! October 22, 2018 கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கட்சிகள் இணைவு தொடர்பான ஒப்பந்தத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், அகில இலங்கை தமிழர் மகா சபை ஆகிய கட்சிகள் ஒப்பமிட்டுள்ளதாக கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் செ. கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்லடியில் உள்ள அலுவலகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஒப்பந்தம் கைச்சாத்திடல் தொடர்பான கலந்தரையாடலை அடுத்து நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே செ. கோபாலகிருஷ்ணன் இதனை தெரிவித்தார். இந்த ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி…

  13. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து தமிழ் தலைமைகள் தீர்மானிக்க வேண்டும்: வியாழேந்திரன் வடக்கு – கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவளிக்க முடியாது என தமிழ் தலைமைகள் தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திராய்மடு ஸ்ரீகிருஸ்ணா விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகள் இன்று (திங்கட்கிழமை) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “மலையக மக்களின் சம்பளப் பிரச்சினையை தீர்க்காவிட்டால் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டோ…

  14. இந்தியாவிலிருந்து 35 இலங்கையர் நாடு திரும்பினர் இந்தியாவின் தமிழ்நாட்டு அகதிமுகாமில் இருந்த 35 இலங்கை தமிழர்கள் விமானம் மூலம் இன்று திங்கட்கிழமை (22) யுனிசெவ் நிறுவனத்தினால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர் கடந்த கால யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இந்தியா தமிழ் நாட்டில் தஞ்சமடைந்த வடக்குகிழக்கைச் சேர்ந்த பலர் அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழலில் தமது தாய்நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்தவர்களை மீள்குடியேற்ற யுனிசெப் நிறுவனம் செயற்பட்டு வருகின்றது இதன் அடிப்படையில் கிளிநொச்சி,வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த 15 குடும்…

  15. டிசம்பர் 31க்கு முன் காணிகளை விடுவிப்பதற்கு பங்களிப்பை வழங்குமாறு ஜனாதிபதி ஆளுநர்களுக்கு பணிப்பு. October 22, 2018 வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரின் வசமுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கையினை இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய தேவையான பங்களிப்பினை வழங்குமாறு ஜனாதிபதி மாகாண ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 2018ஆம் ஆண்டிற்கான மாகாண சபை செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த பணிப்புரையினை விடுத்துள்ளார். சகல மாகாணங்களினதும் ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் பிரதம செயலாளர்…

  16. நாளை திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது போதநாயகியின் வழக்கு : October 21, 2018 கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின் இறப்புத் தொடர்பான வழக்கு நாளை 22ஆம் திகதி திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த நிலையில் போதநாயகியின் கணவர் செந்தூரன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. போதநாயகியை திருகோணமலை கடற்கரையில் ஏற்றிச் சென்று இறக்கிய முச்சக்கர வண்டி சாரதி மற்றும் போதநாயகியின் தாயார் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் காவற்துறையினர் வழக்கை முன்னெடுக்கவுள்ளனர். போதநாயகியின் பெற்றோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் போதநாயகியின் உயிரிழப்புத் தொடர்பில் முழுமையான விசாரணைக்கு கா…

  17. மன்னார் கடற்பரப்பில் இயற்கை எரிவாயு – எரிபொருள் வளத்தை கண்டறிவதற்கான ஆய்வுப்பணிகள் ஆரம்பம் : October 22, 2018 1 Min Read மன்னார் கடற்பரப்பில் இயற்கை எரிவாயு மற்றும் எரிபொருள் வளத்தை கண்டறிவதற்கான ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களை தெளிவுபுடுத்தும் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த ஆய்வுப்பணிகளை டீ.ஜு.பி பயணியர் கப்பலே மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆய்வுக் கப்பல் தனது முதலாவது ஆய்வினை மார்ச் மாதம் 30 முதல் தற்போதுவரை லங்கா பேசின் பகுதிகளான ஜே.எஸ்- 05லிருந்து ஜே.எஸ்-06 பகுதி வரை மேற்கொண்டுள்ளது. இன்று இந்த ஆய்வுக் கப…

  18. அழிந்துவரும் இனங்களில் மூன்றாம் இடத்தில் சிங்கள இனம்: கரு ஜயசூரிய உலகில் அழிந்துவரும் இனங்களில், சிங்கள இனம் மூன்றாம் இடத்தில் காணப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அரநாயக்க பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் அமெரிக்க நிபுணர் ஒருவர் தலைமையிலான குழுவினரால் நடத்தப்பட்ட ஆய்வின்போதே இவ்விடயம் கண்டறியப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி அமெரிக்காவின் செவ் இந்தியர்கள், எஸ்கிமோக்கள் மற்றும் சிங்களம் ஆகிய இனங்களே உலகில் அழிவடைந்து வரும் இனங்களாக அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ள…

  19. தென்-இந்தியாவிலிருந்து பலாலி ,மட்டக்களப்புக்கு நேரடி விமான சேவை Editorial / 2018 ஒக்டோபர் 21 ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 10:06 தென்-இந்தியாவிலிருந்து பலாலி மற்றும் மட்டக்களப்புக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக, இந்திய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான 3 நாள்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கிடையில் நேற்று (20) புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ராஜ்நாத் சிங் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை பொலிஸ் நடமாடும் பிரிவை முறையாக ஒழுங்கமைப்பதற்காக, 750 …

  20. October 22, 2018 Add Comment Share This! கடந்த 5 ஆண்டுகளாக நரகாசுரனின் பிடியில் சிக்கி தவித்துவந்த வடபகுதி தமிழ் மக்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி அதிலிருந்து விடுதலை கிடைக்கிறது. அந்தவகையில் அன்றையதினம் அவர்களுக்கு தீபாவளி தினமாகவே அமையவுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் தெரிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு அன்றைய அரசு வடபகுதிக்கான தேர்தலை அறிவித்தவுடன் பதவியை எப்படியாவது கைப்பற்றி தமது சுயலாபங்களை மேற்கொள்வதற்காக ஒரு கூட்டாக இணைந்து அதன் ஆட்சிப்பொறுப்பை கைப்பற்றியிருந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு. …

  21. புத்தளம் பாலாவியிலிருந்து கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கொச்சிக்கடைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 100 கிலோகிராமுக்கும் அதிகமானளவில் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர். கேரளா கஞ்சாவின் பெறுமதி, 8 மில்லியன் ரூபாயெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/story/14/80-இலட்சம்-ரூபா-பெறுமதியான-கேரளா-கஞ்சாவுடன்-இருவர்-கைது.html

  22. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு : October 21, 2018 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு இன்று (21)யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் மஹ்மூத் மண்டபத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் பெரும் திரளான முஸ்லீம் மக்கள் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன. இதன் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அய்யூப் அஸ்மின் இ.ஜெயசேகரம் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மனுவல் ஆனோல்ட் ஆகியோர் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். பாறுக் ஷிஹான்- …

  23. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று இணுவிலில் மௌனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.அரசியல் சுயநலன்களுக்காக எல்லை மீள் நிர்ணயத்தின்போது இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைத்து தொன்மைமிகு இணுவில் துண்டுபோடும் கைங்கரியம் இணுவிலில் உள்ள சில புத்திஜிவிகளால் திரைமறைவில் செயற்பட்டுவருவதாக இணுவில் கிராம மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பில் ஆராயும் மக்கள் ஒன்றுகூடல் ஒன்று நேற்று இணுவில் சிவகாமி அம்மன் மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இணுவிலைத் துண்டாடும் குறித்த முயற்சிக்கு எதிர்…

  24. வாள்களுடன் கடைக்குள் புகுந்து அட்டகாசம்!! பதிவேற்றிய காலம்: Oct 22, 2018 மோட்­டார் சைக்­கிள்­க­ளில் வாள்­க­ளு­டன் வந்த 6 பேர் கொண்ட குழு பல­ச­ரக்­குக் கடை மற்­றும் வீதி­யில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த முக்­கச்­சக்­கரவண்டி என்­பற்றை அடித்து நொருக்­கித் தப்­பிச் சென்­றது. இந்­தச் சம்­ப­வம் நேற்று இரவு 7.45 மணி­ய­ள­வில் யாழ்ப்­பா­ணம், உப்­பு­ம­டச் சந்­தி­யில் நடந்­துள்­ளது. 2 மோட்­டார் சைக்­கிள்­க­ளில் வந்த 6 பேர் வாள்­க­ளு­டன் கடைக்­குள் புகுந்­தது. அங்­கி­ருந்த பொருள்­களை அடித்து நொருக்­கி­யது. கடைக்கு முன்­பா­கத் தரித்து நின்ற முச்­சக்­கர வண்­டி­யை­யும் தாக்­கிச் சேதப்­ப­டுத்­தி­யது. அதன்­பின்­னர் அங்­கி­ருந்து தப்­பிச் சென்­றது. சம்­ப­வம் தொடர்­பில் ப…

    • 1 reply
    • 466 views
  25. ‘நிலத்தின் மீதான அதிகாரம் அரசியல் தீர்வின் அத்திபாரம்’ - சுமந்திரன் Editorial / 2018 ஒக்டோபர் 22 திங்கட்கிழமை, மு.ப. 05:26 Comments - 0 -செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன் “நிலத்தைப் பாதுகாக்காவிட்டால் அரசியல் தீர்வு என்பது ஒரு மாயையாகும். நிலம் இல்லாத பிரதேசத்தில் ஆட்சி செய்யமுடியாது. மக்கள் இல்லாத ஊரில் அரசாங்கம் இருக்கமுடியாது. நிலமும் ஆட்புலமும் ஒரு தேசத்துக்கு அத்தியாவசியமானது” எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பியுமான எம்.ஏ.சுமந்திரன், “நிலத்தின் மீதான அதிகாரம்தான் அரசியல் தீர்வின் அத்திபாரம்” என்றார். “நிலம், பறிபோய்க்கொண்டிருக்கின்றது, மக்களும் நாட்டை விட்டுப் போய்க்கொண்டிருக்கின்றார்கள். அரைவாசி மக்கள் போய்விட்டா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.