ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143294 topics in this forum
-
வவுனியாவில் இடம் பெற்ற டெலோவின் சிரேஸ்ட உறுப்பினர்களின் ஒன்று கூடலில் சிறி டெலோவின் முக்கியஸ்தர்கள் : October 21, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் ஆரம்ப கால சிரேஸ்ட உறுப்பினர்களின் ஒன்று கூடல் இன்று ஞாயிற்றுக்கிழமை(21)மாலை வவுனியா மாவட்ட டெலோ அலுவலகத்தில் இடம் பெற்ற நிலையில் சிறி டெலோ கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக ஆயுத போராட்ட காலத்திலும்,அரசியல் களத்திலும் செயற்பட்ட தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் உறுப்பினர்களே இன்று இடம் பெற்ற குறித்த ஒன்று கூடலில் கலந்து கொண்டிருந்தனர். டெலோ கட்சியின் சர்வதேச ஒருங்கிண…
-
- 0 replies
- 565 views
-
-
கடற்படையினரால் மூடப்பட்ட முள்ளிக்குளம் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்லும் பிரதான வீதி மக்களின் எதிர்ப்பினால் திறப்பு October 21, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முள்ளிக்குளம் கிராமத்திற்கு கடற்படை முகாமினூடாக செல்லும் பிரதான வீதியை திடீர் என கடற்படையினர் முற் கம்பிகள் கொண்ட வேலியினால் வீதியை இடை மறித்து அடைத்தமையினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) காலை முதல் கடற்படையினருக்கும்,முள்ளிக்குளம் கிராம மக்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினை சுமூக நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லோரான்ஸ் லியோ தெரிவித்தார்.குறித்த சம்பவம் தொடர்பாக முள்ளிக்குளம் பங்குத்…
-
- 0 replies
- 337 views
-
-
எல்லை நிர்ணயத்திற்கெதிராக இணுவிலில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டம். October 21, 2018 தற்போது முன்னெடுக்கப்படும் கிராம எல்லைகள் நிர்ணய முயற்சி தொடர்பாக 21.10.2018 அன்று மாலை 4மணியளவில் இணுவில் கிராமத்தில் இணுவில் கிழக்கு சிவகாம சுந்திரி மெ்மன் கோவிலுக்கு அருகே உள்ள கல்யாண மண்டபத்தில் ஒரு பொதுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அயல் கிராமங்களின் எல்லை அகலிப்பு நடவடிக்கையால் நலிவுற்றுக் காணப்படும் இணுவில் கிராம எல்லைகளை மீள் நிர்ணயந் தொடர்பாக அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டியே இக் கூட்டம் நடைபெற்றது. யுத்தாகாலத்தின்போது இணுவில் கிராமத்தைச் சேர்ந்த தெருக்கள் பல அயல்கிராமமாக எல்லைப்படுத்தப் பட்டிருப்பதும், வீதிப் பெயர்கள் எல்லாம் தான்தோன்றித்தனமாக மாற்றப்பட்டிருப்பதும்…
-
- 0 replies
- 326 views
-
-
பதினொராயிரத்து எண்பத்து ஆறு அபாயகரமான வெடிபொருட்கள் ஸார்ப் நிறுவனத்தால் அகற்றம் October 21, 2018 இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் நிதியுதவி நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமான ஸார்ப் (Sharp) 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 ஒக்டோபர் ; மாதம்; 15 ஆம் திகதி; வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் ஆறு இலட்சத்து நாற்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று பதின்மூன்று சதுரமீற்றர் பரப்பளவில் (649,613ள…
-
- 0 replies
- 807 views
-
-
யாழில் படையினர் விவசாயம் செய்து அவற்றை விற்பனை செய்வது இல்லை யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வசமிருக்கின்ற காணிகளில் பொதுமக்களின் காணிகளில் படையினர் விவசாயம் செய்து, அதனை சந்தைகளில் விற்பனை செய்வது இல்லை என விவசாய பிரதி அமைச்சர் அங்கஐன் இராமநாதன் தெரிவித்துள்ளார். மேலும், அவ்வாறு படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால் அதனை உடனடியாகத் தான் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். கோவில் வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது பொதுமக்களின் காணிகளில் படையினர் விவசாயம் செய்வதால் பல்வேறு பாதிப்புக்களை மக்கள் எதிர்நோக்கி வருவதால் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போத…
-
- 0 replies
- 294 views
-
-
சிறிலங்கா அதிபராகும் கோத்தாவின் கனவு டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் அமைப்பதில் 80 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக, அடுத்த அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என நம்பப்படும் கோத்தாபய ராஜபக்ச கடந்த செவ்வாய்க்கிழமை புதிதாக உருவாக்கப்பட்ட மேல்நீதிமன்றுக்குச் சென்றிருந்தார். அங்கு, கோத்தாபய ராஜபக்சவிடம் ‘மகிந்த தங்களை அடுத்த அதிபர் வேட்பாளராகக் களமிறக்காது, தங்களின் சகோதரரான பசில் ராஜபக்சவை அடுத்த அதிபர் வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக கூறப்படுகிறது’ என ஊடகங்கள் கேள்வியெழுப்பின. ‘எமது குடும்பத்திற்குள் பிரிவை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டே இவ்வாறான ஊடக அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. மகிந்த ராஜபக்ச அடுத்த அ…
-
- 0 replies
- 302 views
-
-
மாலிக்கு அனுப்பப்பட்ட படையினரை நாம் தெரிவு செய்யவில்லை: மனித உரிமை ஆணைக்குழு. மாலிக்கு அனுப்பப்பட்ட இலங்கை படையினர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லவென மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடலகம தெரிவித்துள்ளார். மாலியின் இலங்கை இராணுவ அணியின் கட்டளை அதிகாரியான லெப்.கேர்ணல் அமுனுபுரவை திருப்பி அனுப்புவதற்கு ஐ.நா எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “ஐக்கிய நாடுகள் அமைதி படைக்கு தெரிவு செய்யப்படும் படையினரை ஆய்வு செய்வதற்கு மனித உரிமை ஆணைக்குழு இணக்கம் தெரிவித்திருந்தது. இருப்பினும் இவ்விடயம் தொடர்பாக எந்ததொர…
-
- 0 replies
- 200 views
-
-
ஐ.நா.வின் செயற்பாடு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது: யஸ்மின் சூக்கா இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதி கலன அமுனுபுர தொடர்பில் ஐக்கிய நாடுகள் எடுத்துள்ள தீர்மானம், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நாவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். சர்வதேச அமைதிப் படையில் அங்கம் வகிப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கை இராணுவ அதிகாரி விவகாரம் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது, “யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு என்றோ ஒருநாள் தீர்வு கிடைக்குமெனற எண்ணத்தை, இலங்கை …
-
- 0 replies
- 253 views
-
-
அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் உதயம்! வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த கட்சியின் செயலாளர் நாயகமாக வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் செயற்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அனந்தி சசிதரன் வெற்றி பெற்றிருந்தார். அந்த கட்சியின் உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி எடுத்திருந்த நிலையில், கட்சியிலிருந்து விலகியே செயற்பட்…
-
- 10 replies
- 1.4k views
-
-
நானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன்; விக்கி தமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ விட்டு நாடாளுமன்ற பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது.அப்போது ஆட்சியாளர்களுக்கு நிபந்தனைகள் எதுவுமற்ற ஆதரவை நல்க முற்பட்டதனூடாக அரசின் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டது. தமது அரசியல் தீர்வு விடயங்களை சுமூகமாக கையாளமுடியும் என்ற எதிர்ப்பை எமது தலைவர்கள் கொண்டிருந்தனர். ஆனால் அது கை கூடவில்லை.எமது அப்போதைய தலைவர்களின் தூரநோக்கற்ற செயல்போல அதே பிழையை தற்போது எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளும் செய்துவருகின்றவென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். …
-
- 9 replies
- 1.4k views
-
-
கொலை அச்சுறுத்தல் விடுத்த தாதிய போதனாசிரியர், அச்சத்தில் மாணவர்கள்!
-
- 5 replies
- 701 views
-
-
முள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்வதற்கு கடற்படையினர் தடை: பிரதேசத்தில் பதற்றம்! அண்மையில் விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை கடற்படையினர் முடியதால் கடற்படையினருக்கும், முள்ளிக்குளம் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. கடற்படை முகாமினூடாக முள்ளிக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடற்படையினர் மூடியதாலேயே இருதரப்பினருக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை லோரான்ஸ் லியோ தெரிவிக்கையில், “முள்ளிக்குளம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்ட சுமார் 77 ஏக்கர் காணியில் மக்கள் பராமரிப்பு நடவடிக…
-
- 0 replies
- 269 views
-
-
மக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு! மக்களை அணிதிரட்டி அதன் ஊடாக அரசியல் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பயணிப்போம் என ஈழப்புரட்சி அமைப்பு தெரிவித்துள்ளது. வவுனியா, பூந்தோட்டத்தில் அமைந்துள்ள ஈழப்புரட்சி அமைப்பின் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கட்சியின் பொதுக்குழு கூட்டமும் நிர்வாகத் தெரிவும் நடைபெற்றது. அதன்பின்னர் கட்சியின் சார்பில் தேசிய அமைப்பாளர் மாணிக்கம் ஜெகன் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “அரசியல் நகர்வுபற்றி வடமாகாண முதலமைச்சர் ஒரு ஸ்திரமான பதிலை எந்த இடத்திலும் கூறவில்லை. எனினும் தமிழ்மக்களைப் பொறுத்…
-
- 0 replies
- 496 views
-
-
அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவிக்கு கொலை அச்சுறுத்தல்! தமக்கு இனந்தெரியாத நபர்களினால் தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்படடோர் உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார். அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள காணாமல் அக்கப்பட்டோர் உறவுகளின் சங்க அலுவலகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து பணத்தைப் பெற்று மீண்டும் இயக்கத்தினை வளர…
-
- 0 replies
- 176 views
-
-
விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் என தமிழரசு கட்சி தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது மனக்குமுறலை வெளியிட்டுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வழிகாட்டலில் இலங்கை தமிழரசு கட்சியின் திட்டமிடலில் இடம்பெறும் நில அதிகாரமும் அதிகாரப்பகிர்வும் சிறப்பு பேருரை நிகழ்வு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா தலைமையில் இன்று மாலை ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்…
-
- 9 replies
- 824 views
-
-
ஒதியமலை படுகொலை நினைவுத்தூபி அமைக்க தடை October 21, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு ஒதியமலை படுகொலை நினைவுத்தூபி அமைக்க ஒட்டுசுட்டான் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான ஒதியமலையில் கடந்த 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 02ஆம் திகதி 33 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அன்றைய தினம் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக படுகொலை இடம்பெற்ற பகுதியில் நினைவு தூபி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெறவிருந்தது.எனினும் நினைவு தூபி அமைக்க அனுமதிக்க முடியாது எனவும், தூபி அமைப்பதற்காக பெற்றுக் கொண்ட அனுமதி பத்திரம் உள்ளடங்கலாக உரிய ஆவணங்களை தம்மிடம் சமர்ப்பித்த பின்னர்…
-
- 2 replies
- 599 views
-
-
சிங்களத்தில் தேசிய கீதம் – கவலை தெரிவித்த மாநகர முதல்வர் மட்டக்களப்பில் இடம்பெற்ற வீட்டுதிட்ட திறப்பு விழாவில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் கவலை வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பில் நேற்று(சனிக்கிழமை) காலை இடம்பெற்ற வீடமைப்பு திட்டத்தினை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சிக்காலத்திலேயே தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடமுடியாத நிலையிருந்ததாகவும் ஆனால் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து மேற்கொண்டுள்ள இந்த நல்லாட்சியிலும் தேசிய கீதம் தமிழர்கள் வாழும் பகுதியில் ஒரு மொழியில் பாடப்பட்டது கவலைக்குரிய விடயம் எனவும் முதல்வர் குறிப்ப…
-
- 0 replies
- 588 views
-
-
சிறிலங்கா மீது அதிருப்தியை வெளிப்படுத்திய மோடி – மன்னிப்புக் கோரினார் ரணில் இரண்டு நாடுகளும் இணங்கிக் கொள்ளப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை, சிறிலங்கா அரசாங்கம் தாமதப்படுத்தி வருவதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார். நேற்று பிற்பகல் புதுடெல்லியில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுக்களின் போதே, இந்தியப் பிரதமர் தமது அதிருப்தியையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார் என்று புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், செய்து கொள்ளப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா காட்டி வரும் தாமதம் குறித…
-
- 1 reply
- 904 views
-
-
“சிறுபான்மையினரைக் காப்பாற்றவே யுத்தம் செய்தேன்” அவர்கள் என்னை வெறுப்பது நியாயமா? October 20, 2018 சிறுபான்மையினர் தனக்கு எதிராக செயற்பட எந்தவித நியாயமும் இல்லையென, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியாக, சிறுபான்மையினரின் நம்பிக்கையை வென்ற ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என கூட்டு எதிரணி தெரிவித்து வருகின்றமை குறித்து கேள்வி எழுப்பியபோது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார் தாம் சிறுபான்மையினரைக் காப்பாற்றுவதற்காகவே யுத்தம் செய்ததாகவும், அவர்களுக்கு எதிராக அல்ல எனவும் தெரிவித்த கோத்தாபய தான் ஜனநாயகத்தைக் காப்பதற்காக இராணுவத்தில் 20 வருடங்கள் சேவையாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். http://globalt…
-
- 2 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா! October 15, 2018 நடிகர் பாக்கியராஜூம் கலந்து கொண்டார்!! கிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள இயக்குநர் இமயம் பாரதிராஜா மேலும் வீரம் விளைந்த மண்ணில் நின்று இக்கலைஞர்களைப் பாராட்டுவது எமக்கு மேலும் பெருமையைத் தேடித்தருகின்றதெனவும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி புகைப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் புகைப்படப்பிடிப்பாளர்களைக் கௌரவிக்கம் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டார். இந்த நிகழ்வுக்காக தமிழகத்தை சேர்ந…
-
- 23 replies
- 1.6k views
-
-
படுகொலை செய்யப்பட்ட, யாழ்.பல்கலைகழக மாணவர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல்… October 20, 2018 துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.பல்கலைகழக மாணவர்களால் நினைவு கூறப்பட்டது. யாழ்.பல்கலைகழக மாணவர்களான நடராஜா கஜன் மற்றும் விஜயகுமார் சுலக்சன் ஆகிய இரு மாணவர்களும் கடந்த 2016ஆம் ஆண்டு நள்ளிரவு வேளை காங்கேசன்துறை வீதி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டு இருந்த வேளை கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் நின்ற காவற்துறையினர் மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் மாணவர்கள் உயிரிழந்து இருந்தனர். படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி யாழ் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் நடத்திய ப…
-
- 0 replies
- 241 views
-
-
ஆய்வுக்கான பட்டியலில் லெப்.கேணல் பெயர் இருக்கவில்லை – தீபிகா உடகம மாலிக்கு அனுப்பப்பட்ட சிறிலங்கா படையினர் சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்கள் அல்ல என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்துள்ளார். மாலியில் சிறிலங்கா இராணுவ அணியின் கட்டளை அதிகாரியான லெப்.கேணல் அமுனுபுரவை திருப்பி அனுப்ப ஐ.நா எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஐ.நா அமைதிப்படைக்குத் தெரிவு செய்யப்படும் சிறிலங்கா படையினரை ஆய்வு செய்வதற்கு சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு இணங்கியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக எமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது எமது ஆணை…
-
- 0 replies
- 397 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images இலங்கையின் தலைநகரத்தில் மட்டுமே புழக்கத்திலிருந்த ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள், இப்போது, சிறிய கிராமங்களில் கூட விற்பனைக்கு வந்து விட்டன. சமூக மற்றும் சமய ஒழுங்குகளையும் பேணுவதில் அதிக கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்த ஊர்களில் கூட, ஹெராயின் விற்கப்படுகிறது. கைது நடவடிக்கை சில நாட்களுக்கு முன்னர், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஹெராயின் வைத்திருந்த சிலர் கைது செய்யப்பட்டார்கள். மது வரி …
-
- 1 reply
- 412 views
-
-
‘கைதிகள் விவகாரத்தில் த.தே.கூ மீது பொதுமக்கள் சந்தேகம்’ Editorial / 2018 ஒக்டோபர் 20 சனிக்கிழமை, பி.ப. 12:28 Comments - 0 க. விஜயரெத்தினம் தமிழ் அரசியல்கைதிகள் விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனும் அவரது சகாக்களும் விதண்டாவாதம் பேசிகின்றார்களா எனப் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுகின்றது என, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவிப்பு. அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமாக நேற்று (19) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “மஹிந்த ஆட்சிக் காலத்தில், 12…
-
- 0 replies
- 447 views
-
-
இலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சினை ஒருபோதும் தீராது: டி.எம்.சுவாமிநாதன் இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களின் அத்துமீறல் பிரச்சினை ஒரு போதும் முடிவுக்கு வராதென்றும், அதற்கு தீர்வுகாண இறைவனால் மட்டுமே முடியும் என்றும், இலங்கையின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர், நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை திருவண்ணாமலையில் உள்ள சாய்பாபா ஆலயத்திற்கு சென்று ஆலய தரிசனம் செய்தார். அப்போது, சாய்பாபா படத்துடன் கூடிய 100 தபால் முத்திரைகள் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஆலய வளாகத்தில் அமைச்சரை சந்தித்த இந்திய ஊடகவியலாளர்கள், இலங்கை-இந்திய மீனவர்கள் …
-
- 0 replies
- 362 views
-