Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையற்று விடுவிக்க வேண்டும்… October 11, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு , புனர்வாழ்வோ வேண்டாம். அவர்கள் அனைவரும் நிபந்தனையற்ற ரீதியில் விடுவிக்கப்பட வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை ம.சக்திவேல் கோரியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , அனுராதபுர சிறைச்சாலையில் 11 அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்களின். அரசியலைக்கு தமது வாழ்வை அர்ப்பணித்து இன்று சிறையில். வாடுகின்றனர் இவர்களின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்க…

  2. இலங்கையில் முதல் பத்து கோடீஸ்வர அரசியல்வாதிகள் பட்டியலில் கருணா ஐந்தாம் இடம். Published on October 4, 2018-1:33 pm · No Comments இலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான “FORBES”சஞ்சிகையை மேற்கோள் காட்டி இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருக்கின்றது. அதில் முதலாவதாக யார் இருப்பார்கள் என்று நீங்கள் எல்லோரும் இலகுவாக ஊகித்து விடுவீர்கள். நம் எல்லோரினதும் பேச்சில் அடிபட்ட தமிழர் இருவர் இதில் அடங்குகின்றார்கள். நீங்கள் ஊகித்தது போல் முதலிடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தான். அந்த சஞ்சிகையின் படி அவரது சொத்து மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 1800 கோடி ட…

    • 25 replies
    • 2.5k views
  3. தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் அரச கரும மொழிகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஊற்றுப்புலம் குளத்தின் அபிவிருத்திப் பணிகளை வனவளத்திணைக்களம் நிறுது்தியுள்ளது. கிளிநொச்சி கமலசேவைகள் திணைக்களத்தின் கீழ் உள்ள பதிவு செய்யப்பட்ட குளமான ஊற்றுப்புலம் குளம் 23 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது அதனை கிளிநொச்சி வனவளத்திணைக்களம் தங்களுடைய வனவளப் பிரதேசம் எனத் தெரிவித்து தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் குறித்த 23 மில்லியன் ரூபா நிதி திரும்பிச் செல்லும் நிலையில் காணப்படுகிறது. என கமநல சேவைகள் திணைக்களம் கவலைத் தெரிவித்துள்ளர். குறித்த குளத்தித்தை புனரமைப்புச் செய்வதனால் தங்களுடைய வனவளம் பாதிப்படைகிறது, பல பெறுமதியான மரங்க…

  4. அரசியல் கைதிகளின் விடுதலை குறித்துக் கலந்துரையாடுவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதமரிடம் கேள்வி எழுப்பும் நேரத்தில் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2001, 2002ஆம் ஆண்டுகளில், அப்போதைய அரசாங்கத்தாலும் பிரபாகரனாலும் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது. அப்போது நீங்கள் பிரதமராக இருந்தீர்கள். அன்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் இருந்தது. ஆனால், இன்று பிரபாகரன் இல்லை. இருப்பினும், அச்சட்டம் இன்னும் அமுலில் உள்ளது. இதனால், அரசியல் கைதிகள் 107 பேர் இன்று வரையில் சி…

  5. கிழக்கிலிருந்து புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து உதவி மறுக்கப்படுகிறது: யோகேஸ்வரன். மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்களில் ஒரு சிலரே தமது சொந்த பிரதேசங்களுக்கான உதவிகளை செய்து வருவதாகவும், பெரும்பாலானோரது உதவி மறுக்கப்படுவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு – பண்டாரியாவெளி அறிவாலயம் அமைப்பின் அனுசரணையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (செவ்வாய்கிழமை) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து …

    • 2 replies
    • 578 views
  6. அமைச்சர் அர்ஜுனா ரணதுங்க மீது, இந்திய விமானப் பணிப்பெண் பாலியல் குற்றச்சாட்டு… October 10, 2018 இலங்கை கிரிக்கட்ட அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய அமைச்சருமான அர்ஜுனா ரணதுங்கா மீது இந்தியாவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அந்தப் பணிப்பெண் தனது முகநூல் பக்கத்தில் தன்னிடம் ரணதுங்கா எவ்வாறெல்லாம் தவறாக நடந்து கொண்டார் என்பதையும், எப்போது நிகழ்ந்தது என்பதையும் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பெண்ணின் பெயரைப் பாதுகாப்பு கருதி மறைத்து இந்தியா டுடே இணையதளம் வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கு இலங்கை அணி பயணம் மேற்கொண்டபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். மும்பை ஜூஹு பகுதியில் உள்ள ஒ…

    • 2 replies
    • 533 views
  7. தமிழினம் வன்முறைக்குள் தள்ளப்பட்டுள்ளது: ஸ்ரீதரன் இன ரீதியான வன்முறைக்குள் தமிழினம் தள்ளப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஸ்ரீதரனின் உரையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிக்கீடு செய்து தனது கருத்துக்களையும் முன்வைத்துள்ளார். இதனால் சபையில் சற்று அமைதியின்மை ஏற்பட்டது. ஸ்ரீதரனின் உரையின் போது குறுக்கிட்டு பேசிய நாமல் ராஜபக்ஷ, “மகசின் சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் விடுதலைக்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? ந…

  8. வடக்கு மாகாண விவசாயக் கண்காட்சி- வவுனியாவில் ஆரம்பம்!! பதிவேற்றிய காலம்: Oct 10, 2018 “காலத்தின் சவாலுடன் உணவு உற்பத்தியை நோக்கியதாக” எனும் தொணிப்பொருளில் வடக்கு மாகாண விவசாயக் கண்காட்சி, வவுனியா முருகனூரில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இன்று ஆரம்பமானது. வவுனியா மாவட்டபிரதி விவசாய பணிப்பாளர் சகிலா பாணுவின் தலைமையில் நடைபெற்றுவரும் நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா,ஜெயதிலக், மாவட்டச் செயலர் எம்.கனீபா, மேலதிக மாவட்டச் செயலர் தி.திரேஸ்குமார்,வடமாகாண விவசாய பணிப்பாளர்,வவுனியா வளாகமுதல்வர் ரி.மங்களேஸ்வரன், கமநல ஆணையாளர் விஜயகுமார், மற்றும் விரிவுரையாளர்கள், மாணவர்கள், பொலிஸார்…

  9. அம்பாந்தோட்டையில் சீனாவின் கடற்படை தளம் - அமெரிக்காவிற்கு தெளிவுபடுத்தியது இலங்கை இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா தனது கடற்படை தளத்தை அமைக்கலாம் என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள இலங்கை இது குறித்து அமெரிக்காவிற்கு தெளிவுபடுத்தியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலுவலகம் இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையிலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் சீனாவின் கடற்படை தளம் உருவாகலாம் என சிலர் கற்பனை செய்கின்றனர் என தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம் அம்பாந்தோட்டை துறைமுகம் என்பது இலங்கையின் துறைமுக அதிகார சபைக்கும் சீனா மேர்ச்சன்ட் நிறுவனத்திற்கும் இடையிலான வர்த்தக முயற்சி எனவும் குறிப்பிட்டுள்ளது. இலங்க…

  10. நாமல் குமார மீண்டும் CIDயில் முன்னிலையாகவுள்ளார். October 11, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்ய சதி செய்யும் விதமாக தொலைபேசியில் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தல் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் காவற்துறைமா மா அதிபர் நாலக சில்வாவுக்கும், காவற்துறை உளவாளி நாமல் குமாரவுக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஒலிப்பதிவுகள் தொடர்பிலான குரல் சோதனை மாதிரிகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட குரல் மாதிரிகள் அவ்விருவரின் குரல் மாதிரிகளுடன் ஒத்துப் போவதாக அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந் நி…

  11. யாழில் ஆரம்பிக்கப்பட்ட அதிவேக தபால் சேவை வெற்றிகரமாக நகர்கிறது… October 11, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழில் ஆரம்பிக்கப்பட்ட அதிவேக தபால் சேவை தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்.பிரதான தபாலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் யாழில் ஆரம்பிக்கப்பட்ட அதிவேக தபால் சேவை தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். தபால் தொடர்பு அமைச்சினால் வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை பயன் படுத்தி இந்த அதிவேக தபால் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அது தற்போது வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்படுவதுடன் குறித்த சேவையினை மேலும் பரவலாக்க நடவடிக்கைகளை மேலும் தெரிவித்தார். http://globaltamilnews.net/2018/99029/

  12. என்னுடன் மோதிப்பார்க்க வேண்டாம்: யாழில் மனோ எச்சரிக்கை! மரங்கொத்தி வாழை மரத்தைக் கொத்தி மாட்டுப்பட்டது போல என்னுடன் மோதி மாட்டுபட வேண்டாம் என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வட.மாகாண முதாலமைச்சர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோருடன் மோதுவது போல என்னுடன் மோதவேண்டாம். மரங்கொத்தி பல மரங்களை கொத்திய பிறகு வாழை மரத்தை கொத்தி மாட்டுப்பட்டது போல என்னுடன் மோதி மாட்டுபட வேண்டாம். எங்கள் அரசாங்கம் எனக்கு வீட்டு திட்டம் வழங்க அனுமதித்து உள்ளது. அதனை நல்லிணக்க அமைச்சுக்கு கொடுக்க வேண்டாம் என யாரும்…

  13. அபிவிருத்தித் திட்டங்களுக்கு வட.மாகாண அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை: மனோ வட.மாகாணத்தில் முன்னெடுக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களிற்கு வடக்கிலுள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பு போதவில்லை என அமைச்சர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வடக்கில் முன்னெடுக்க முயற்சித்தபோதும் வடமாகாண சபையினரும் தகுந்த ஒத்துழைப்பை தமக்கு வழங்கவில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டினார். வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று அமைச்சின் செயலாளர் ஆர்.தென்னக்கோன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு, அமை…

  14. அமைச்சரின் 150 பில்லியன் வைப்பிலிடப்பட்ட கணக்கு முடக்கம் – மலிக் சமரவிக்ரம விளக்கம்! அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவின் வங்கிக்கணக்கில் 150 பில்லியன் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி அந்தப் பணத்தை முடக்கியதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என கூறினார். மேலும், தான் இது தொடர்பில் மத்திய வங்கியிடம் வினவிய போது இத்தகைய பணம் எந்தவொரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரின் வங்கிக் கணக்கிலும் வைப்பிலிடுவதற்காகக் கிடைக்கவில்லை என அவர்கள் கூறியதாக தெரிவித்தார். அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் சில இலத்திரனியல் ஊடகங்களி…

  15. பெண் சட்டத்தரணிகளின் உடையில் மாற்றம்: அதிவிசேட வர்த்தமானி வெளியீடு. இலங்கையில் பெண் சட்டத்தரணிகளின் தசாப்தங்கள் பழைமைவாய்ந்த ஆடை நெறிமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தினால் ஏற்படுத்தப்பட்ட குறித்த ஆடை நெறிமுறை மாற்றமானது, அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய திருத்தத்தின் பிரகாரம் வெள்ளை, கறுப்பு, சாம்பல் நிறம் மற்றும் இளம் ஊதா நிற சேலைகளை அணியலாம். அல்லது குறித்த நிறங்களில் கணுக்காலுக்கு கீழ் சட்டை அணியலாம். அத்தோடு, வெள்ளைநிற, கை நீளமான சேர்ட் அணிந்து, கறுப்பு நிற முழுக் காற்சட்டையும் கோட்டும் அணியலாம். கர்ப்பிணித் தாய்மார்கள் கறுப்பு நிற நீண்ட சட்டையுடன் வெள்ளை நிற, கை நீளமான சேர்ட் அணியலாம். அல்லது மேற்குறித்த …

  16. புதிய சட்டமூலம் அரசியல் கைதிகளைப் பாதிக்கக்கூடாது: சம்பந்தன் பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு பதிலாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இழப்பீட்டு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை. அவர்களால் வழங்கப்பட்ட வாக்குமூலங்களைத் தவிர எந்த ஆதாரமும் கிடையாது. அநீ…

  17. சுவிஸ் குமார் தப்பிய வழக்கு – தலைமறைவானவர் இன்றி வழக்கை தொடரமுடியுமா? October 10, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியாக காணப்பட்ட சுவிஸ் குமார் தப்பி செல்வதற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள இரண்டாம் சந்தேக நபர் இன்றி வழகக்கினை மேற்கொண்டு நடத்த முடியுமா? என்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை பெறுமாறு குற்றபுலனாய்வு பிரிவினருக்கு ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியாக காணப்பட்ட சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் தப்பி செல்ல உதவினார்கள் எனும் குற்றசாட்டில் அக்கால பகுதியில் வடமாகாண சிரேஸ…

  18. உரிய பதில் கிட்டாவிட்டால் போராட்டம் உக்கிரப்படுத்தப்படும்….. October 10, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… தமது பூர்வீக வாழ்விடங்கள் தமக்கு கிடைக்குமென எதிர்பார்த்திருந்த போதும் தமது வாழ்விடத்தை தாங்களே போராடிபெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கேப்பாபுலவு மக்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கு உரிய பதில் கிட்டாவிட்டால் போராட்டத்தை உக்கிரப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக்கோரி 588 நாட்களுக்கு மேலாக போராடி வரும் மக்கள் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்டோருக…

  19. அனைவருக்கும் பொது மன்னிப்பு எனும் கருத்தை ஆரம்ப புள்ளியாக்கி பேச்சை ஆரம்பித்திருக்கலாம்… October 10, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. அனைவருக்கும் பொது மன்னிப்பு எனும் கருத்தை ஒரு ஆரம்ப புள்ளியாக வைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கலாம் என தேசிய ஒருமைப்பாடு , நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பலர் வெளியே போராட்டம் நடத்துவது போல நான் அரசாங்கத்தினுள் இருந்த…

  20. 140 மில்லியன் ரூபாய் இழப்பு – இலங்கை போக்குவரத்துச் சபையின் மனுவுக்கு, பதில் வழங்க மகிந்தவுக்கு உத்தரவு.. October 10, 2018 140 மில்லியன் ரூபாய் நட்டத்தை மீளப் பெற்றுக் கொடுக்குமாறு கோரி இலங்கை போக்குவரத்துச் சபையால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 06ம் திகதி பதில் வழங்குவதற்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (10.10.18) வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகளை …

  21. பகிடிவதையால் தூக்கில் தொங்கிய மாணவன், பெற்றோர் சந்தேகம் மட்டக்களப்பு - கல்வியற் கல்லூரியில் முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவனின் சடலம் தாழங்குடாவில் உள்ள கல்வியற் கல்லூரி விடுதியிலிருந்து நேற்று (08/10/2018) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில், கல்வியற் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவனான முல்லைத்தீவை சேர்ந்த 23 வயதுடைய மனுவேல்பிள்ளை பிரதீபன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் கல்லூரியில் இணையும் போது ஏழு பேர் கொண்ட மாணவ குழுவினால் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் கல்லூரிக்கு செல்லமாட்டேன் எனத் தெரிவி…

  22. வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களது நிலவுரிமையை இன்னும் அரசாங்கம் முழுமையாக சீரமைக்கவில்லை என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றின் ஊடாக குற்றம் சுமத்தியுள்ளது. 2015ம் ஆண்டு புதிய அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னரும், தேசிய பாதுகாப்பை மையப்படுத்தியும், வெளிப்படைத் தன்மை அற்ற செயற்பாடுகள் இல்லாமையாலும், இந்த பணிகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. ‘எங்களால் ஏன் வீடு செல்ல முடியாது, இலங்கையில் இராணுவத்தின் காணி சுவீகரிப்பு’ என்ற பெயரில் 80 பக்க அறிக்கை ஒன்றை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில், காணி விடுவிப்பு விடயங்களில் வெளிப்படைத் தன்மை இல்லாமை, உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமை, சுவீகரிக்கப்பட்ட காணிகள…

  23. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை மூட வேண்டும் Report us Steephen 3 hours ago தினமும் நஷ்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நாட்டுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளதாகவும் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் 7 ஆயிரம் ஊழியர்களுக்கு இழப்பீடுகளை வழங்கி நிறுவனத்தை மூடி விடுவது சிறந்தது எனவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான காலத்தில் 18 ஆயிரத்து 400 கோடி ரூபாய் நஷ்டத்தையும் மிஹன் லங்கா ஆயிரத்து 900 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களின் நஷ்டம் என்பது 20 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு போன்…

    • 9 replies
    • 1.4k views
  24. கொழும்பு நகரின் பிரதான வீதியொன்று திடீரென தாழிறங்கியுள்ளது. நாரஹென்பிட்டி சித்ரா லேன் பகுதியிலேயே இவ்வாறு நிலம் திடீரென தாழிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்தவானை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் குறித்த பாதை ஊடாக பயணிப்பவர்களை வேறு வீதியைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். https://newuthayan.com/story/15/கொழும்பில்-திடீரென-தாழிறங்கிய-வீதி.html

  25. ஜனாதிபதி கொலை சதி முயற்சி தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை சிஐடியினர் விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனாதிபதி கொலை சதி முயற்சியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் சசி வீரவன்சவை சந்தித்துள்ளமை சிஐடியினரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியர் தான் விமல்வீரவன்சவின் வீட்டிற்கு சென்றதாக தெரிவித்துள்ளார். விமல்வீரவன்சவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, தான் அவரது வீட்டிற்கு சென்றதாகவும் அவ்வேளை விமல்வீரவன்சவின் மனைவியை சந்தித்து பேசியதாகவும் கைது செய்யப்பட்டுள்ள …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.