ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
ரணிலுக்கு பதிலாக பிரதமராக மஹிந்த? – மைத்திரி-ராஜபக்ஷ தரப்பினர் ரகசிய சந்திப்பு! இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று கடந்த புதன்கிழமை இடம்பெற்றிருப்பதாக, நம்பகமான அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கிலப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சந்திப்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் பத்தரமுல்ல இல்லத்தில் இடம்பெற்றதாகவும், பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும் இதில் பங்கேற்றனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தச்சந்திப்பின் போது இடைக்கால பரந்த கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாகவும் மஹிந…
-
- 3 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகளின் செயற்கை காடுகளில் இராணுவத்தினரின் புதிய திட்டம். Report us Mohan 2 hours ago முல்லைத்தீவு - கேப்பாபுலவு பிரதான இராணுவமுகாமை சூழவுள்ள தேக்குமரக்காடுகளை பாதுகாப்பதில் படையினர் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. “சூழுலை நாம் பாதுகாப்பின் சூழல் நம்மை பாதுகாக்கும்" "மர நிழல் தரும் குளிர்ச்சி மனதிற்கு இதமானது.” போன்ற வாசகங்களை பெரிய கருங்கற்களில் எழுதி காட்சிப்படுத்தியுள்ளனர். 2009ம் ஆண்டிற்கு முன்னர் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் வனவள பாகுகாப்பு பிரிவினாரால் முல்லைத்தீவில் பல்வேறு இடங்களில் தேக்குமரங்களை நட்டு செயற்கை காடுகளை உருவாக்கியிருந்தனர். இந்த நிலையில் இறுதியு…
-
- 0 replies
- 360 views
-
-
யாழ்.வடமாராட்சியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இரு பெண்கள் கைது… October 7, 2018 யாழ்.வடமாராட்சி பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியினை மேற்கொண்டார்கள் எனும் குற்றசாட்டில் இரு பெண்களை நெல்லியடி காவற்துறையினர் கைது செய்துள்ளனர். வடமராட்சி துன்னாலை பகுதியில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக நெல்லியடி காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை காலை குறித்த வீட்டினை காவற்துறையினர் முற்றுகையிட்ட போது , வீட்டில் இருந்த ஆண் ஒருவர் தப்பி சென்ற நிலையில் வீட்டில் இருந்த இரு பெண்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அத்துடன் குறித்த வீட்டினுள் காவற்துறையினர் தேடுதலை மேற்கொண்ட போது , 115 லீட்டர் க…
-
- 3 replies
- 587 views
-
-
நாடுபூராகவும் நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாக, பல ஆறுகள் பெருக்கெடுத்து, பல பிரதேசங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை சுற்றி காணப்படும் தியவன்ன ஓயாவின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாகவும், இதனால் நாடாளுமன்றத்தைப் பாதுகாப்பதற்காக, அங்கு மணல் மூட்டைகள் வைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத்தினரால் நாடாளுமன்ற வளாகத்தில் மணல் மூட்டைகள் வைக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடப்படுகின்றது. http://globaltamilnews.com/
-
- 0 replies
- 301 views
-
-
இலங்கையில் நேற்று, சனிக்கிழமை இரவு, கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ரயில் மோதியதால், மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன. பொலநறுவை மாவட்டம் - புனானை பிரதேசத்துக்கு அருகிலுள்ள அசலபுர எனும் இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 'மீனகயா' எனும் அந்த கடுகதி ரயிலில் மட்டக்களப்பிலிருந்து - கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது. புனானை மற்றும் வெலிக்கந்தை பிரதேசங்களுக்கு இடையிலுள்ள அசலபுர எனும் இடத்தின் காட்டுப் பகுதியில், இரவு சுமார் 10.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக, மட்டக்களப்பு ரயில் நிலைய பிரதம அதிபர் ஏ. வசந்தகுமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இந்த விபத்தினால், தண்டவாளத்திலிருந்து ரயில் தடம் மாறியதாகவும், அதன் காரணமாக, போக்குவரத்து தடைப்பட்டத…
-
- 0 replies
- 451 views
-
-
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தலும் – வதையும் – கொலையும் – வசந்த கரனாகொடவின் தொடர்பும்…. October 7, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் முக்கிய சந்தேக நபராக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொடவும் காணப்படுகின்றார் என இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் குறித்து முன்னாள் கடற்படை தளபதிக்கு நன்கு தெரிந்திருந்தும் அவர் ஆதாரங்களை மறைக்கின்றார் எனவும் முக்கிய சாட்சியை கூட மௌனமாக்கியுள்ளார் எனவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் கடத்தப்பட்ட இளைஞர்கள் திருகோணமலையில் உள்ள கடற்படை தளத்தின் இரகசிய சித்திரவதை முகாமில் தடுத்துவைக்கப்பட்டிரு…
-
- 0 replies
- 285 views
-
-
பூநகரியில் மீட்கப்பட்டது யாழ் அரசர்களின் சேது நாணயம்! October 7, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… பூநகரியில் கண்ணிவெடியகற்றும் பணியாளர்களின் மீட்புப் பணியின்போது, கண்டுபிடிக்கப்பட்ட நாணயம் யாழ்ப்பாண அரசர்கள் வெளியிட்ட சேது நாணயம் என்று தெரிவிக்கப்படுகின்றது. சேது நாணயம் என்பது 13 தொடக்கம் 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திவம்சத்தினரால் வெளியிடப்பட்ட நாணயம் ஆகும். இதன் ஒரு பக்கத்தில் நின்றநிலையிலான ஒரு மனித உருவமும், அதன் இரு பக்கங்களிலும் விளக்குகளும் பொறிக்கப்பட்டுள்ளன. மறு பக்கத்தில் யாழ்ப்பாண அரசின் சின்னமான நந்தியும், “செது” என்ற சொல்லும், மேலே பிறையும் பொறிக்கப்பட்டுள்ளன. சேது நாணயங்கள் இலங்கையின் வட பகுதியி…
-
- 0 replies
- 1.2k views
-
-
போராட செல்லாவிட்டால் நான் இன்று ஒரு மருத்துவர்: தனது வாழ்க்கை வரலாற்றைக் கூறிய கருணா! Report us Steephen 5 hours ago தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சமாதானத்தை விரும்பவில்லை எனவும் அவர் போரையே விரும்பியதாகவும் அந்த அமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சிறப்பு தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதன் தெரிவித்துள்ளார். சிங்கள வாராந்த பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். கேள்வி - நீங்கள் தெற்கை சேர்ந்தவரா.. கருணா - இல்லை நான் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவன். எனினும் எனது பாட்டனார் தெற்கை சேர்ந்த மீனவர். அவரது பெயர் நினைவில்லை. எனது தந்தை பி…
-
- 2 replies
- 920 views
-
-
அம்பாந்தோட்டையில் விரைவில் சீனாவின் இராணுவத் தளம் – அமெரிக்க துணை அதிபர் எச்சரிக்கை கார்வண்ணன்Oct 07, 2018 | 2:34 by in செய்திகள் கடன் இராஜதந்திரத்தை தனது பூகோள செல்வாக்கை விரிவுபடுத்திக் கொள்வதற்கு சீனா பயன்படுத்திக் கொள்கிறது என்றும், அம்பாந்தோட்டை துறைமுகம், பீஜிங்கின் வளர்ந்து வரும் நீல நீர் கடற்படையின் முன்னரங்க தளமாக விரைவில் மாற்றமடையும் என்றும் அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உயர்மட்ட சிந்தனைக் குழாமான, ஹட்சன் நிறுவகத்தில், வெளிவிவகாரக் கொள்கை தொடர்பாக வியாழக்கிழமை நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”ஆசியா, ஆபிரிக்கா, தொடக்கம், ஐரோப்பா வரை மட்டுமன்றி, இலத்தீன் அமெரிக்கா வரையான நாடுகளுக்கு, …
-
- 1 reply
- 763 views
-
-
வடக்கு – கிழக்கை இணைப்பதற்கே சிங்கள – முஸ்லிம் கலவரம்- விமல் வீரவங்ச புலம்பெயர் தமிழ் தலைமைகள் இந்நாட்டில் சிங்கள – முஸ்லிம் கலவரங்களை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், அதற்காக சிங்கள குழுக்களை வைத்து செயற்படுவதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார். முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கு இணைப்பதனை விரும்புவதில்லை. சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தினால், முஸ்லிம்கள் இலகுவாகவே தமிழ் மக்களுடன் இணைந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்களில் ஒருவரை திட்டமிட்டு கொலை செய்தால், சிங்களவர்கள் மீது வெறுப்புக் கொண்டு தமிழர்களுடன் முஸ்லிம்கள் இணைய வழி ஏற்படுகின்றது. …
-
- 2 replies
- 847 views
-
-
ரஷ்யா போர்த் தளபாடங்களை சிறிலங்கா வாங்குவதற்கு அமெரிக்கா முட்டுக்கட்டை கார்வண்ணன்Oct 07, 2018 | 3:43 by in செய்திகள் ரஷ்யாவின் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளால், ரஷ்யாவிடம் இருந்து பெருமளவிலான பாதுகாப்புத் தளபாடங்களை கொள்வனவு செய்யும் சிறிலங்காவின் முயற்சிக்கு, பாரிய முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. ஜிபார்ட் 5.1 போர்க்கப்பல் மற்றும், கவச துருப்புக்காவிகள் (BTRs), எம்.ஐ.-17 உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்வதற்கு, ரஷ்யாவின் Rosboronoexport நிறுவனத்துடன், சிறிலங்கா இரண்டு உடன்பாடுகளைச் செய்து கொள்வதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டன. இந்தப் பேச்சுக்களில் ஈடுபட்ட Rosboronoexport என்ற நிறுவனம் , ரஷ்ய அரசுக்குச் சொந்தமான ஆயுத ஏற்றுமதி நிறுவனமாகும். இந்த நிறுவனம் …
-
- 0 replies
- 445 views
-
-
நாவலர் கோட்டம் மாதிரிக் கிராமம் மக்களிடம் கையளிப்பு! தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் யாழ்ப்பாணம் சாவகச்சேரி மந்துவில் பகுதியில் அமைக்கப்பட்ட நாவலர் கோட்டம் மாதிரிக் கிராமம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 135 ஆவது மாதிரிக் கிராமமாக அமைக்கப்பட்டுள்ள மேற்படி மாதிரிக் கிராம வீடுகளை அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) பொது மக்களிடம் உத்தியோகப்பூர்வமாக கையளித்துள்ளார். இதன்போது மாதிரிக் கிராமத்திற்கான பெயர்பலகையை திரை நீக்கம் செய்து வைத்த அமைச்சர் சஜித் பிரேமதாச, குறித்த கிராமத்தில் அமைக்கப்பட்ட வீடுகளையும் நாடாவெட்டித் திறந்து வைத்து மக்களிடம் கையளித்தார். வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் ஆலோசனையில…
-
- 0 replies
- 637 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா? October 5, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனா அல்லது வேறு நபர்களா என்ற சந்தேகம் இருப்பதாகவும், சம்பந்தன் மௌனம் காப்பதனால் நன்மை ஏற்படுமென்பதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று (04.10.18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நீங்கள் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளின் பின்னர், உங்கள் கட்சியின் தலைவர் மௌனம் சாதிக்கின்றார். கட்சி தலைவரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவ…
-
- 4 replies
- 928 views
-
-
ஓரு விரைந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் நடைபெற்று வருகின்றது -வரதராஜப்பெருமாள் “இப்பொழுது திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் கணிசமான அளவு நிலப் பகுதிகளை ஒருங்கிணைத்த வகையில் ஓரு விரைந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. இந்தப் பகுதிகள் அரசின் குடியியல் நிர்வாகங்களின் கீழில்லாமல் அரச படைகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.” இவ்வாறு வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சரும், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி அமைப்பு செயலாளருமான அ.வரதராஜபெருமாள் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- 'வடக்கு மாகாணமும் …
-
- 0 replies
- 349 views
-
-
சிங்களவர்களினால் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படவில்லை- அகுரடியே நந்த தேரர் சிங்கள மக்களினால் தமிழ் மக்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கருதுகின்ற எம்மவர்களும் இருக்கின்றனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் குறிப்பிடத்தக்கவர்கள் எனவும் கலாநிதி அகுரடியே நந்த தேரர் தெரிவித்துள்ளார். இன்றைய சகோதர தேசிய வார இதழொன்றுக்கு தேரர் வழங்கிய செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார். பயங்கரவாதத்தை தோற்கடிக்கச் செய்து நாட்டுக்குள் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை புதிய கோணத்தில் பார்க்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதே…
-
- 0 replies
- 317 views
-
-
கொழும்பு துறைமுகத்தில் சீன கடற்படையின் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் சீன கடற்படையின் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் (Submarine Support Ship)நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வந்துள்ளது. இந்தக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். நான்கு நாட்கள் பயணமாக கொழும்பு வந்துள்ள, Type 926 ரகத்தைச் சேர்ந்த Ocean Island (864) என்ற சீனாவின் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல்,135 மீற்றர் நீளத்தையும், 18.6 மீற்றர் அகலத்தையும் கொண்டது. நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு வழித்துணையாக செல்லும் இந்தக் கப்பலில்- விநியோக ஆதரவு மற்றும் நீர்மூழ்கிகளைப் பழுதுபார்க்கும், செயலிழந்த நீர் மூ…
-
- 0 replies
- 412 views
-
-
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் விடுதலைப்புலி உறுப்பினர்களான குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகள் நினைவாக ஏற்கனவே இருந்து அழிக்கப்பட்ட நினைவு தூபியை புனரமைப்பதுடன்,ஏனைய சகல போராளிகளுக்கும் சேர்த்து பிறிதொரு தூபியை அருகில் அமைப்பது என வல்வெட்டித்துறை நகரசபையில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டிருந்தது இதற்கு அமைவாக இன்று இந்த தூபிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற இருந்தது இதன்போது அங்கு வந்த ஒரு தொகுதியினர் இந்த தூபியை அமைக்கும் நடவடிக்கைக்கு எதிராக கோசம் எழுப்பினர். விடுதலைப்பலிகளை தவிர வேறு எந்த இயக்கத்தையும் நினைவு கூரும் தூபிகளை இங்கு அமைக்க வேண்டாம் என இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பினார்க…
-
- 1 reply
- 989 views
-
-
October 5, 2018 Add Comment Share This! முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஆதிசிவனுக்கும், ஐயனாருக்கும், கிராமத்து மக்களும் இளைஞர்களும் இணைந்து பொங்கல் பொங்கி வழிபாடு மேற்கொண்டுள்ளனர். இன்றையதினம் இடம்பெற்ற இந்த வழிபாட்டு நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் கலந்துகொண்டுள்ளார். இந்த மலைப்பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் விகாரை ஒன்றினை அமைக்கும் நோக்குடன் கடந்த செப்ரம்பர் 4ம் திகதி அன்று பௌத்த துறவிகள் உள்ளிட்ட குழுவினர் பயணம் மேற்கொண்டுடிருந்த நிலையில் பிரதேச இளைஞர்களால் குறித்த முயற்சி தடுத…
-
- 0 replies
- 418 views
-
-
யாழ்.நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் வாகனங்கள் , கடைகளை அடித்து உடைத்து அட்டகாசம் புரிந்துள்ளனர். நாச்சிமார் கோவிலடி, ஓட்டுமடம் மற்றும் தம்பி லேன் ஆகிய இடங்களில் இரவு 8.45 மணி முதல் 9.30 க்கு இடைப்பட்ட இடைவெளிகளில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாச்சிமார் கோவிலடியில் வீதியால் சென்ற பட்டா ரக வாகனத்தை இடைமறித்த குறித்த கும்பல் வாகன சாரதியை தாக்கியதுடன், வாகனத்தையும் அடித்து நொருக்கி விட்டு தப்பி சென்றுள்ளது. பின்னர் தம்பிலேனுக்கு சென்ற கும்பல் அங்கிருந்த கடையொன்றினை அடித்து நொருக்கி அட்டகாசம் புரிந்ததுடன், கடையில் நின்றவர்களையும் அச்சுறுத்தி சென்றுள்ளனர். பின்னர் ஓட்டுமடம் பகுதியில் சிறிது நேரம்…
-
- 0 replies
- 927 views
-
-
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கிளிநொச்சி மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டதோடு “நாம் பயிரிட்டு நாம் உண்போம்” என்ற தொனிப்பொருளில் வடக்கின் துரித விவசாய மீள்எழுச்சி எனும் எண்ணக்கருவில் கமத்தொழில் அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் பல்வேறு திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தனர் இன்று மாலை கிளிநொச்சி இரணைமடு விவசாய பண்ணைக்கு சென்ற விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் வடமாகாண சபை உறுப்பினர் தவநாதன் உள்ளிட்ட பிரமுகர்கள் கமத்தொழில் அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்துக்கான வேலைத்திட்டத்தை பார்வையிட்டு அதற்க்கான நாடாவைவெட்டி ஆரம்பித்துவைத்தார்கள். அதனைத் தொடர்ந்து இரணைம…
-
- 0 replies
- 249 views
-
-
இந்த வருடம் நிறைவடைவதற்குள் 1500 மாதிரிக்கிராமங்கள் அமைக்கப்படும் – மன்னாரில் சஜித் October 6, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர் -மன்னார் மாவட்டம் ஒரு அழகான பிரதேசம். இங்குள்ள மக்கள் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் இன,மத வேறுபாடுகள் இன்றி மன ஒற்றுமையுடனும், செயல்பட்டு வருகின்றமையை நான் இங்கு அவதானித்தேன் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் அமைக்கப்பட்ட 134 ஆவது மாதிரிக் கிராமமான ‘வளனார் புரம்’ மாதிரிக்கிராமத்தில் அமைக்கப்பட்ட 50 வீடுகள் இன்று( 6) சனிக்கிழமை காலை 9 மணிளவில் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து உரையாற்றுகையிலேயே…
-
- 0 replies
- 241 views
-
-
மன்னாரில் ‘வளனார் புரம்’ மாதிரிக்கிராமத்தில் அமைக்கப்பட்ட 50 வீடுகள் கையளிப்பு October 6, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் ‘செமட்ட செவண’ தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வாழிகாட்டலில் மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் அமைக்கப்பட்ட 134 ஆவது மாதிரிக் கிராமமான ‘வளனார் புரம்’ மாதிரிக்கிராமத்தில் அமைக்கப்பட்ட 50 வீடுகள் இன்று சனிக்கிழமை காலை 9 மணிளவில் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. -மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வீடமைப்பு மற்று…
-
- 0 replies
- 281 views
-
-
கமத் தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை அலுவலகம் திறப்பு October 6, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டத்தில் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை பத்து மணிக்கு கிளிநொச்சி பழைய கச்சேரி வளாகத்திற்குள் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. அலுவலகத்தினை விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்டவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. நெல், சோளம், கச்சான், பெரிய வெங்காயம், போஞ்சி, ஆகிய ஆறு பயிர்களுக்கும் தற்போது காப்புறுதி வழங்கப்…
-
- 0 replies
- 341 views
-
-
முல்லைத்தீவு நெடுங்கேணி மாமடு, பழம்பாசி அ.த.க.பாடசாலை மாணவி துஷ்சாதனா, 2018 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 195 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட பகுதியான மாமடு,பழம்பாசி அ.த.க.பாடசாலை, பௌதீக வழங்கள் குறைந்த பாடசாலை என்பதுடன், தந்தையைப் பிரிந்து தாயின் அரவனைப்பில் வாழ்ந்து வரும் குறித்த மாணவியை சாதனையைப் பாடசாலைச் சமூகத்தினர் பாராட்டியுள்ளனர். https://newuthayan.com/story/15/முல்லைத்தீவு-மாணவி-வரலாற்றுச்-சாதனை.html
-
- 6 replies
- 828 views
-
-
உண்மையை கண்டறிவதற்கான ஆணைக்குழு நிறுவப்படாமை குறித்து கூட்டமைப்பு, பிரித்தானியாவிடம் எடுத்துரைப்பு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் பாரிய தாமதம் காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், பிரித்தானியாவிடம் எடுத்துரைத்துள்ளார். இலங்கைக்கு சென்றுள்ள பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியங்களுக்கான அமைச்சர் மார்க் பீல்ட் இன்று(வெள்ளிக்கிழமை) எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போதே சம்பந்தன் இந்த விடயத்தை எடுத்து கூறியுள்ளார். கடந்த அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளில் மாற்றம் உள்ளதாக இந்த சந்திப்பில், அமைச்சர் மார்க் பீல்டிடம், சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.…
-
- 3 replies
- 448 views
-