ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
வடக்கு அமைச்சரவை விவகாரம் இன்றைய அமர்வும் குழம்பலாம்! வடக்கு மாகாண அமைச்சரவை விவகாரத்தால், மாகாண சபையின் இன்றைய அமர்விலும் குழப்பம் ஏற்படக்கூடும் என்று தெரியவருகின்றது. வடக்கு அமைச்சரவை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரினால் அவசர கோரிக்கை ஒன்று அவைத் தலைவருக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவசர கோரிக்கை இன்றைய அமர்வில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பான விவாதத்தால் மாகாண சபையில் குழப்பம் வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு அமைச்சரவை தொடர்…
-
- 0 replies
- 268 views
-
-
யாழ். வன்முறை குறித்து முக்கிய சந்திப்பு ; முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? யாழ்ப்பாணக் குடாநாட்டின் தற்போதைய சிவில் நிலைமை தொடர்பில் ஆளுநர் இன்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் ஓர் சந்திப்பினை ஏற்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை , வழிப்பறி , வாள் வெட்டுக்கள் தொடர்பில் ஆராயும் நோக்கிலேயே மேற்படி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு சந்திப்பு இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பில் பொலிஸ் உயர் அதிகாரி சர்வ மதத் தலைவர்கள் மூத்த ஆர்வலர்கள் கல்வியாளர்கள் எனப் பலரும் அழைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மை நாட்களாக மீண்டும் அதிகரிக்கும் வன்முறை தொடர்பில…
-
- 0 replies
- 314 views
-
-
முஸ்லிம்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் ஒழித்து விட்டு அம்மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வடக்கு கிழக்கு இனப்பிரச்சினைக்கு ஒரு போதும் தீர்வு காண முடியாது என்பதை தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடி தேசிய ஷுஹதாக்கள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பள்ளிவாசல்கள் படுகொலை சம்பவதை நினைவு கூறும் 28ஆவது ஷுஹதாங்கள் தின பிரதான நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:- “…
-
- 37 replies
- 3.8k views
- 1 follower
-
-
ஞனாசார தேரருக்கு எதிரான தீர்ப்பு இன்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றை அவமதித்ததாக கூறி, அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று மேன் முறையீட்டு நீதிமன்றினால் அறிவிக்கப்படவுள்ளது. மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இந்த தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. இந் நிலையில் நேற்று திடீரென சுகவீனமுற்ற பொது பலசேனா செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கலகொட அத்தே ஞானசார தேரருக்…
-
- 5 replies
- 831 views
-
-
இராணுவ குழுக்களை ஒன்றிணைக்கும் பணி ஆரம்பம்; காணி விடுவிப்பு இராணுவத்தினர் வடக்கில் இருந்து அகற்றப்படுவதாகக் கூறப்படுவது தவறாகும். இராணுவக் குழுக்களை ஒன்றிணைக்கும் பணியே மேற்கொள்ளப்படுகிறது. முகாம்கள் அகற்றப்படும் போது அதற்கு ஏற்ப அங்கு நிரந்தர வசிப்பிடம் கொண்டவர்களுக்கு அக்காணிகள் வழங்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கா தெரிவித்தார். இராணுவத் தளபதி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த போதே இவ்வாறு தெரிவித்தார். நடைபெற உள்ள பெரஹரா வைபத்த…
-
- 0 replies
- 246 views
-
-
வித்தியா படுகொலை வழக்கின் மேன்முறையீட்டு விசாரணை இன்று யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் ட்ரயல் அட்பார் நீதிமன்றினால் 7 எதிரிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகளால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின் மீதான விசாரணையானது இன்றைய தினம் உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த மேன்முறையீட்டின் மீதான விசாரணையானது 5 நீதியரசர்களை உள்ளடக்கிய நீதியரசர்கள் குழுவினர் முன்னிலையிலேயே இடம்பெறவுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு குறித்த மாணவி பாடசாலை செல்லும் போது கடத்திச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வல்லுறவின் பின்…
-
- 0 replies
- 190 views
-
-
இளைஞர்களுடன் ரோந்து பணிக்கு தயாராகும் யாழ் பொலிஸார் வட்டுக்கோட்டை – அராலி பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களைப் பீதிக்குள்ளாக்கும் இனந்தெரியாத நபர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் உள்ளூர் இளைஞர்கள் பத்து பத்து பேர் வீதம் உள்ளடக்கி அவர்களோடு மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இணைத்து குழுக்கள் அமைக்கப்படும். அந்தக் குழுக்கள் இரவு நேர ரோந்து நடவடிக்கையை முன்னெடுக்கும். உடனடியாக அந்தக் குழுக்கள் அமைப்படும் என்று யாழ்.பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். அராலி பகுதியில் கடந்த சில வாரங்களாக அந்தப் பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந…
-
- 0 replies
- 498 views
-
-
வாள் வெட்டு சந்தேகநபர்கள் உயர்தர பரீட்சை எழுதி வருகின்றனர்… வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள மூன்று சந்தேகநபர்கள் உயர்தர பரீட்சை எழுதி வருகின்றனர். தென்மராட்சி பகுதிகளை சேர்ந்த 10 இளைஞர்களை, வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என மானிப்பாய் பொலிசார் கடந்த 04ஆம் திகதி கைது செய்தனர். அவர்கள் அனைவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் மூவர் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ளனர் என நீதிமன்றின் கவனத்…
-
- 5 replies
- 748 views
-
-
கருணாநிதியின் மறைவால் தமிழ் கூறும் நல்லுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது - வடக்கு முதல்வர் விக்கி இரங்கல் “இலங்கையில் தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும்” என்ற தீர்மானத்தைப் முன்மொழிந்திருந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகை சோகத்தில் ஆழ்தியுள்ளதென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் மறைவுச் செய்தி கேட்டுத் தமிழ்க் கூறும் நல…
-
- 1 reply
- 537 views
-
-
போருக்குப் பின்னர் -இலங்கையின் முன்னேற்றம் மந்த கதியில்- இரா. சம்பந்தன்!! போருக்குப் பின்னர் இலங்கையின் நிலைமைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்ற நிலைமைகள் போதுமானதாக இல்லை. முன்னேற்றம் மிகவும் மந்தமாக அமைந்துள்ளது. இவ்வாறு சுவிட்ஸர்லாந்தின் முன்னாள் அரச தலைவரும், அந்த நாட்டின் சமஸ்டிப் பேரவையின் உறுப்பினரும், சட்டம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரிமான சிமோனேட்டா விடம் சுட்டிக்காட்டியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன். இலங்கை வந்துள்ள சிமோனேட்டாவை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்ப…
-
- 3 replies
- 710 views
-
-
கோல் கம்பம் விழுந்து மாணவன் பலி ; கிளிநொச்சியில் சம்பவம் மைதானத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற பின்னர், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் மைதானத்தில் விளையாடச் சென்றபோது உதைபந்து கோல் கம்பம் விழுந்ததில் இவர் காயமடைந்துள்ளார். இதனையடுத்து 1990 இந்திய அம்புலன்ஸ்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அம்புலன்ஸ் உரிய நேரத்தில் வரவில்லை எனவும் அவர்களால் சம்பவம் நிகழ்ந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. பின்னர் முச்சக்கரவண்டி ஒன்றில் மாணவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது வழியில் மாணவனின் உயிர் பிரிந்து விட்டதாக தெரிவ…
-
- 9 replies
- 1.2k views
-
-
விக்கினேஸ்வரன் உட்பட இரு அமைச்சர்களை மன்றில் ஆஜராகுமாறு உத்தரவு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன், கே.சிவநேசன் ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக சட்டப்படி பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டின் பிரகாரமே இவர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 07 ஆம் திகதி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் வட மாகாண முன்னாள் அமைச்சர்…
-
- 1 reply
- 450 views
-
-
யாழ் போதனா வைத்தியசாலையின் தரம் மேலும் ஒரு படி உயர்ந்து நிற்கின்றது… நிமலேந்திரா…. யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு மார்கழி மாதம் 20, 21 ஆம் திகதிகளில் திறந்த இருதய சத்திரசிகிச்சையானது முதற்றடவையாக இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி சிதம்பரநாதன் முகுந்தன் தலைமையிலான சத்திரசிகிச்சைக் குழுவினாரால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இது யாழ் போதனா வைத்தியசாலையின் வளர்ச்சியில் ஏற்பட்ட ஓரு முக்கிய மைல் கல்லாகும் (Milestone). இதனால் இலங்கையில் திறந்த இருதய சத்திர சிகிச்சை நடைபெறும் 4 அரச மருத்துவமனைகளில் ஒன்றாக யாழ் போதனா வைத்தியசாலையும் தரம் உயர்ந்தது. இதுவரைகாலமும் இலங்கையில் திறந்த இருதய ச…
-
- 7 replies
- 1.1k views
-
-
புகைப்படம், வீடியோ எடுக்க ஊடகவியலாளர்களுக்கு தடை மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணியின் போது புகைப்படம் எடுப்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள்,தொலைக்காட்சி,அச்சு மற்றும் சமூக வலையமைப்புகளுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தடை உத்தரவு தொடர்பில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ள கட்டளையில், மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் B 232/2018 கொண்ட வழக்குடன் சம்மந்தப்பட்ட அகழ்வு மேற்கொள்ளும் பூமியில் உட்பிரவேசித்தல், புகைப்படம் எடுத்தல்,மற்றும் ஒளிப்பதிவு செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 400 views
-
-
"என்னிடம் ஆயுதம் இருக்கிறதா? இல்லையா? என்பதை பொலிஸாரினூடாக விசாரிக்கவும்" என்னிடம் ஆயுதம் இருக்கின்றதா? அல்லது இல்லையா? என்பதை சாவகச்சேரி பொலிஸாரினூடாக தகவல்களை பெற்று சபைக்கு சமர்ப்பிக்குமாறு நான் அவைத் தலைவரிடம் கடிதம் மூலமாக கோரிக்கையொன்றை முன்வைக்கப் போகின்றேன் என வடமாகாண மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் வெளியிட்ட கருத்தானது தனக்கும் தன் குடும்பத்துக்கும் ஆபத்து என்றும் இவ் விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறும் அனந்தி சசிதரன் சாவகச்சேரரி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தார். இந் நிலையில் இது தொடர்பாக இன்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப…
-
- 0 replies
- 387 views
-
-
முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பரபரப்பு- நான்கு கைதிகள் தப்பியோட்டம்!! முல்லைத்தீவு நீதிமன்ற சிறைச்சாலை கட்டத்தில் இருந்து நான்கு கைதிகள் இன்று தப்பி ஓடியுள்ளனர் என்று முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி, கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அதேவேளை முல்லைத்தீவு நகர் கள்ளப்பாட்டு உள்ளிட்ட பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அதில் மூன்று குற்றவாளிகளும், கொலைக்குற்றவாளியும் இன்று விசாரணைக்காக முல்லைத்தீவு ம…
-
- 1 reply
- 431 views
-
-
யாழில் கொள்ளையருடன் போராடி சங்கிலியை மீட்ட 60 வயதுப் பெண் தனது சங்கிலியை அறுத்த கொள்ளையருடன் போராடி சங்கிலியை மீட்டு எடுத்துள்ளார் அறுபது வயது பெண்ணொருவர். யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சூராவத்தை பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த குறித்த பெண்ணுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் அவரின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி செல்ல முற்பட்டனர். உடனே சுதாகரித்துக்கொண்ட குறித்த பெண் சங்கிலியை அறுத்த கொள்ளையனின் டீ-சேர்ட்டை எட்டி பிடித்துக்கொண்டார். அதனால் கொள்ளையர்கள் நிலை தடுமாறிய போது , கொள்ளையர்கள் அறுத்த சங்கிலியை மீட்டு எடுத்துள்ளார். அத்துடன் கொள்ளையர்களின் கையடக்க தொலைபேசியையும் அவர்களிட…
-
- 0 replies
- 720 views
-
-
யாழில் கேக் விற்பனை நிலையத்தில் பேதைப்பொருள்! யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய கேக் விற்பனை நிலையம் (7) செவ்வாய்க்கிழமை முற்றுகையிடப்பட்டது. அங்கு முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் 3 கிலோ கிராம் மாவா போதைப்பொருள் மீட்கப்பட்டது. அதனை விற்பனைக்காக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். “யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் உள்பட இளைஞர்களுக்கு மாவா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்தன. அவை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரா…
-
- 1 reply
- 363 views
-
-
விஞ்ஞான பீட கட்டடத்தை ஜனாதிபதி மாணவர்களிடம் கையளிப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரயோக விஞ்ஞான பீட கட்டடத் தொகுதியை மாணவர்களிடம் கையளித்தல் மற்றும் புதிய கேட்போர் கூடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஆகியன ஜனாதிபதியின் தலைமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. இன்று பிற்பகல் கிழக்குப் பல்கலைக்கழத்திற்கு சென்ற ஜனாதிபதியை மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். நினைவுப் பலகையை திறந்து வைத்து புதிய பிரயோக விஞ்ஞான பீடக் கட்டடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி புதிய கேட்போர் கூடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார். சக…
-
- 0 replies
- 311 views
-
-
ஏ 9 வீதியில் கோர விபத்து- தாயும் -வெளிநாட்டிலிருந்து வந்த மகளும்- உயிரிழந்த சோகம்!! வெளிநாட்டிலிருந்து வந்த மகளை கொழும்பிலிருந்து அழைத்துக் கொண்டு வீடு திரும்பியவர்கள் ஏ- 9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சி்க்கினர். அதில் தாயும் மகளும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கோர விபத்து கிளிநொச்சி ஏ 9 வீதி இயக்கச்சிப் பகுதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது. வீதியில் முறையற்ற விதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார சபையின் வாகனத்துடன், கொழும்பு இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கயஸ் வாக…
-
- 17 replies
- 2.2k views
-
-
வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபரை கண்கலங்க வைத்த தாயார்! வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பிரியாவிடை நிகழ்வு இன்று காலை நகரசபை காலாச்சார மண்டபத்தில் சிவில் சமூக அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது மகாறம்பைக்குளம் பகுதியிலுள்ள கணவனை இழந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் அவரது பிள்ளைகளுடன் வசதியற்ற நிலையில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின்பேரில் பொலிசாரின் பங்களிப்புடன் அண்மையில் வீடு அமைத்துக்கொடுக்கப்பட்டிருந்தது. இன்று இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய குறித்த தாயார் வன்னிபிராந்தியத்தில் பல மக்களுக்கு நல் வேலைத்திட்டத்தை மேற்க…
-
- 2 replies
- 574 views
-
-
அரசாங்கத்தின் பங்காளிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க முடியாது: சுமந்திரன் அமைச்சரவையில் அங்கம் வகித்துக்கொண்டு அரசாங்கத்தின் பங்காளியாக உள்ள ஒரு கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்குமாறு மஹிந்த அணியினர் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் கடுமையாக வாதிட்டுள்ளனர். இதன்போது குறுக்கிட்டு பதிலளித்த சுமந்திரன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றது. அவ்வாறான நிலையில், ஐக…
-
- 4 replies
- 669 views
-
-
வாள்வெட்டு கலாசாரத்தின் பின்னணியில் இராணுவம் - ஸ்ரீதரன் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) வடக்கின் வாள்வெட்டு கலாசாரத்தின் பின்னணியில் இராணுவமே உள்ளது. இதனை பொலிஸார் அறிந்தும் கவனத்தில் கொள்ளவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் திருத்த சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறிகையில், வடக்கில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டு சம்பவங்களின் பின்னணயில் இராணுவமே உள்ளது. இராணுவ முகாம்களில் இருந்தே இந்த தூண்டுதல் வெளிவருகின்றது. இதணை…
-
- 0 replies
- 347 views
-
-
விக்னேஸ்வரன் கோரிய பொலிஸ் அதிகாரத்தை நக்கலாக விமர்சித்த மாகல்கந்தே சுதந்த தேரர்! பொலிஸ் அதிகாரத்தை தன்னிடம் வழங்கினால் வடக்கில் தலைதுக்கியுள்ள ஆவா குழு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை களையெடுப்பதாக வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளமை வேடிக்கையானது என, சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்திருக்கின்றார். மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள பொலிஸாரைக் கொண்டு குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில், அதே பொலிசாரை வைத்துக்கொண்டு வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எவ்வாறு குற்றச்செயல்களை தடுக்கப் போகின்றார் என்றும் சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பான சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் கேள…
-
- 1 reply
- 601 views
-
-
இலங்கையில் ஜனநாயக சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்கான உதவிகளை சுவிஸ் அதிகரித்துள்ளது (நா.தனுஜா) ஜனநாயக சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்கு இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவை அதிகரிப்பதற்கு சுவிட்ஸர்லாந்து திட்டமிட்டிருப்பதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அந் நாட்டின் நீதியமைச்சர் சிமொனெட்டா சொமருகா தெரிவித்ததாக நீதியமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையுடனான குடிப்பெயர்வு ஒத்துழைப்பு உடன்படிக்கையை விரிவு படுத்துவதற்கும் அவர் இணங்கியிருக்கிறார். இது தொடர்பாக புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்துறை அமைச்சர் எஸ்.பி.நாவின்னவுடன் அவர் இன்று கைச்சாத்திட்டார். மனித உரிமைகளை வலுப்படுத்துவதற்கான ஈடுபாட்டை அதிகரிப்பதற…
-
- 1 reply
- 311 views
-