ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
மட்டக்களப்பிற்கு அரசாங்க அதிபரை நியமிப்பதில் இழுபறி: அரசியல் தலையீடு காரணமா? மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலை நிலவி வருகிறது. இந்த இழுபறி நிலைக்கு அரசியல் தலையீடே காரணம் என சிவில் அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றன. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகமாக பதவியேற்று சென்ற நிலையில், இன்னமும் நிரந்தர அரசாங்க அதிபர் நியமிக்கப்படவில்லை. http://newsfirst.lk/tamil/2017/11/மட்டக்களப்பிற்கு-அரசாங்/
-
- 0 replies
- 230 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே வலுப்பெறும் கருத்து முரண்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையே கருத்து முரண்பாடு வலுப்பெற்று வருகின்றது. இந்த நிலையில், தமிழ் அரசியல் பிரதிநிதிகளை இன்று நேரில் அழைத்து மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கலந்துரையாடினார். தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து உத்தியோகப்பூர்வமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆரம்பித்தன. எனினும், பின்னர் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழரசுக் கட்சி, கூட்டமைப்பின் அதிகாரத்தை தமது கட்டுப்பாட…
-
- 0 replies
- 365 views
-
-
வடக்கு,கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒரு போதும் அனுமதியளிக்க முடியாது. வடக்கு கிழக்கு இணையும் பட்சத்தில் கிழக்கில் இரத்த ஆறே ஓடும். மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் வகையில்புதிய அரசியலமைப்பு உரு வாக்கப்படக்கூடாது என மீள்குடி யேற் றம், புனர்வாழ்வு இராஜாங்க அமைச் சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எச்ச ரிக்கை விடுத்தார். அரசியலமைப்பு சபையில் நேற்று புதன்கிழமை புதிய அரசியலமைப்புக் கான வழிநடத்தல் குழுவின் இடைக் கால அறிக்கை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரை யாற்றுகையில் மேற்கண்டவாறு தெரி வித்தார். அவர…
-
- 6 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்தின் 3 நகர சபைகளுக்குமான உறுப்பினர்களில் மாற்றமில்லை! யாழ்ப்பாண மாவட்டத்தின் 3 நகர சபைகளுக்குமான உறுப்பினர்களில் மாற்றமில்லை! யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை,வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி நகர சபைகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படவில்லை. பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகர சபைகளுக்கு 9 உறுப்பினர்களும், சாவகச்சேரி நகர சபைக்கு 11 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவேண்டும். அவர்களின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் நடைமு…
-
- 1 reply
- 398 views
-
-
கூட்டமைப்பை பிளவுபடுத்துவது மக்கள் ஆணையை மீறும் செயல் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் ஒற்றுமை, தமிழ் மக்களுக்கு அவசியம். கூட்டமைப்பு பிளவுபட்டுப் போகக் கூடாது. மக்கள் கூட்டமைப்பாகச் செயற்படுவதற்கே ஆணை வழங்கியுள்ளனர். இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார். புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் அழைப்பில் புலம் பெயர்ந்த தமிழ் மக்களைச் சந்திப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருந்தபோது, புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்த பத்திரிகைச் செய்திக் குறிப்பில் தெரிவி…
-
- 5 replies
- 338 views
-
-
மைத்திரி- மகிந்த விரைவில் சந்திப்பு மைத்திரி- மகிந்த விரைவில் சந்திப்பு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வுக்கும், முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது. முக்கியமான அரசியல் விடயங்கள் குறித்து மகிந்தவும், மைத்திரியும் நேரடியாகச் சந்தித்து பேசுவது நல்லதென மகிந்த அணி முக்கிய உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் பரஸ்பரம் தீர்மான மொன்றை எடுத்ததை அடுத்தே இருவரும் நேரில் சந்…
-
- 0 replies
- 201 views
-
-
தனி நபரின் அடாவடியின் பின் இருப்பது அரசியலா? அல்லது அதிகாரிகளின் துணையா? முல்லைத்தீவு - மாங்குளம் புதிய கொலனியில் தனிநபர் ஒருவர் நாற்பது ஏக்கர் வரையான காணியினை வலுக்கட்டாயமாக பிடித்து வேலி அமைத்து வருவது தொடர்பாக அக்கிராம பொது அமைப்புகள் பலத்த எதிர்ப்பினைத்தெரிவித்து வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள் குடியமர்ந்துள்ள மக்களில் காணியற்ற குடும்பங்களுக்கு அரை ஏக்கர் வீதம் காணி வழங்கப்படும் நிலையில் தனிநபர் ஒருவர் எவ்வாறு நாற்பது ஏக்கர் வரையான காணியினை வலுக்கட்டாயமாக பிடித்து வேலி அமைக்க முடியும்? எனவும், குறித்த நபரின் செயற்பாட்டினைத் தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்ட நடைமுறைகளுக்கப்பால் தனிநபர் ஒருவர்…
-
- 3 replies
- 388 views
-
-
ஈ.பி.டி.பி. தனித்தே போட்டியிடும் – கூட்டமைப்புடன் ஒரு போதும் கூட்டு சேராது. உள்ளூராட்சி தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவரான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , உள்ளூராட்சி சபை தேர்தலில் ஈ.பி.டி.பி தனித்து போட்டியிட உள்ளது.1998 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10 சபைகள் பெற்றோம். பின்னர் ஐக்கிய முன்ணணியுடன் கூட்டு சேர்ந்து இணக்க அரசிய…
-
- 4 replies
- 510 views
-
-
-
- 1 reply
- 343 views
-
-
முஸ்லிம்களுடன் இணைந்து வாழவே விரும்புகிறோம்; இழந்து வாழ விரும்பவில்லை எல்லைக்காவலன் குஞ்சித்தம்பி ஏகாம்பரம் இழந்தவைகள் இழந்தவைகளாக இருக்கட்டும். இருப்பவைகளையாவது எமது சந்ததியினரை காப்பாற்ற வேண்டும். இதனால் நடந்தவைகளை மறந்து இரு சமூகங்களும் இணைந்து வாழவே விரும்புகிறோம். கல்முனையில் தமிழர்கள் முஸ்லிம்களுடன் இணைந்து வாழவே விரும்புகிறார்கள். ஆனால் எதையும் இழந்து வாழ விரும்பவில்லை. இவ்வாறு கூறுகிறார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் கல்முனை மாநகர சப…
-
- 2 replies
- 313 views
-
-
ஜனாதிபதியாக நான் நாட்டில் இருக்கும் வரை எந்த இராணுவ வீரரையும் யுத்த நீதிமன்றில் நிறுத்த இடமளியேன் திட்டவட்டமாக அறிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (ரொபட் அன்டனி) இந்த நாட்டின் ஜனாதிபதியாக நான் இருக் கும் வரையில் எந்தவொரு இராணுவ வீரரையும் வெளிநாட்டு நீதிபதிகள் முன் நிறுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்பதை மிகவும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்ற இராணுவ வீரர்களுடனான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே…
-
- 1 reply
- 504 views
-
-
வடக்கு விவசாய அமைச்சரின் கருத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு வடக்கு விவசாய அமைச்சரின் கருத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு முல்லைத்தீவில் வட்டுவாகல் ஏரியைத் திறந்துவிடுவது தொடர்பில் வடக்கு மாகாண சபை அமைச்சர் சிவநேசனின் கருத்தால் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நேற்றுக் குழப்பம் ஏற்பட்டது. அமைச்சரின் கருத்துக்கு மீனவ சங்கப் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப் புக் குழுக்கூட்டம் மாவட்டச் செயலகத்தில் நேற்று மதியம் 2 மணிக்கு ஆரம்பித்து நேற்றிரவு சுமார் 8 மணிவரை நீ…
-
- 0 replies
- 311 views
-
-
மட்டக்களப்பில் 36 பேர் கைது பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் விசேட வீதிசோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 36 பேரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ் விசேட வீதிசோதனை நடவடிக்கை நேற்று இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 3 மணிவரை இடம்பெற்றுள்ளது. இதில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 19 பேரையும், ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 3 பேரையும், வாகரை பொலிஸ் பிரிவில் 4 பேரையும், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 5 பேரையும்,கரடியனாறு பொலிஸ் பிரிவில் 2 பேர் உட்பட 36 பேரை கைது செய்துள்ளனர் மதுபோதையில் வாகனம் செலுத்தியோர்,…
-
- 0 replies
- 185 views
-
-
இந்த நாடு சிங்களவர்களுக்கு சொந்தமானது என்று கூறும்வரை தனிநாடு கோரும் உரிமை தமிழருக்கு உண்டு! வடக்கு கிழக்கை இணைக்க ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டோம் என்று கூறியுள்ளது ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி. ஜே.வி.பியைப்போல நுட்பமான இனவாத கட்சி ஒன்று இலங்கையில் இல்லை. மகிந்த ராஜபக்சவும் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பு வெளியிடுகிறார் ஜே.வி.பியும் எதிர்ப்பு வெளியிடுகிறது. வடக்கு கிழக்கு இணைந்தால் தமிழீழம் என்று மகிந்த ரராஜபக்சவும் வெளிப்படையாக இனவாதத்தை கக்கும் பேரினவாதிகளும் கூறுகின்றனர். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இணையக்கூடாது என்று நினைப்பவர்கள், தமிழ் மக்கள் சிங்களவர்களுடன் இணைய வேண்டும் என எப்படிக் கூறமுடியும்? எந்த உரிமையும் இன்றி, வடக்கு …
-
- 0 replies
- 449 views
-
-
மூன்று அறிக்கைகளை இலங்கை எதிர்கொள்ளும் ? 37 ஆவது ஜெனிவா கூட்டத்தொடருக்கு தயாராகும் தரப்புகள் (ரொபட் அன்டனி) இலங்கை தொடர்பான நான்கு அறிக்கைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுடன் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரிமாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் 23 ஆம்திகதிவரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெறவுள்ளதுடன் காரசாரமான அறிக்கைகளும் முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஒரு அறிக்கையும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் …
-
- 0 replies
- 356 views
-
-
ஐந்தாயிரம் ரூபா நாணயத்தாள் விவகாரத்தினால் சபையில் சர்ச்சை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) ஐந்தாயிரம் ரூபா நாணய தாள் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்த கருத்தினை அடுத்து நேற்று சபையில் கடுமையான சர்ச்சை ஏற்பட்டது. இதன்போது பந்துல குணவர்தன எம்.பி.யுடன் ஆளும்தரப்பு எம்.பி.க்களான எரான் விக்கிரமரத்ன சுஜீவ சேனசிங்க, நளின் பண்டார ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்து…
-
- 0 replies
- 422 views
-
-
யாழில்.கனமழை – நீரேரிகளின் நீர்மட்டம் உயர்வு – மக்களை விழிப்பாக இருக்குமாறு எச்சரிக்கை யாழில் பெய்து வரும் கன மழை காரணமாக தொண்டமனாறு கடல் நீரேரியின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அதனைச் சூழவுள்ள கிராம மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்பாசனத் திணைக்களம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. யாழில்.கடந்த 24 மணிநேரமாக மழை பெய்து வருகின்றது. இந்த மழை தொடர்ந்து நீடிக்குமாயின் தொண்டமனாறு கடல் நீரேரியின் நீர் மட்டும் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. அதனால் கோப்பாய், அச்சுவேலி, புத்தூர், வாதரவத்தை மற்றும் மாண்டான் ஆகிய பகுதி மக்களை விழிப்பாக இருக்குமாறு வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் என். சுதாகரன் அறிவித்துள்ளார். …
-
- 4 replies
- 1.2k views
-
-
வரி அதிகரிப்பினால் சொகுசு கார்களின் விலைகள் சடுதியாக உயர்வு மறைமுக தாக்கமே அதிகமென சந்தேகம் (எம்.சி.நஜிமுதீன்) பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தின் பிரகாரம் இறக்குமதி செய்யப்படும் சொகுசு வாகனங்களின் விலைகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் Toyota Aqua வின் இறக்குமதி வரியானது 2994750 ரூபாவிலிருந்து 3726750 ரூபாவாக 732000 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேவேளை Toyota Axio (HYBRID) காருக்கு இது வரை விதிக்கப்பட்டு வந்த 2995950 இறக்குமதி வரியானது 3726750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு 73080…
-
- 0 replies
- 707 views
-
-
சவீந்திர சில்வா மிகமோசமான போர்க் குற்றவாளி – கொதிப்படைந்தது இலங்கை இராணுவம் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று ஆணையாளரும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினை மிக மோசமான யுத்த குற்றவாளி என சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான செயற்திட்டத்தின் தலைமைச் செயற்பாட்டாளரான யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளமை குறித்து இலங்கை இராணுவம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் கஜபா படைப்பிரிவின் நிகழ்வொன்றிற்கு கோக் நிறுவனம் அனுசரணை வழங்கியமை குறித்து அந்நிறுவனத்துக்கு எழுதியுள்ள கடித்திலேயே யஸ்மின் சூக்கா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் கஜபா…
-
- 3 replies
- 598 views
-
-
சாத்தியமற்ற முயற்சியில் புலிகளின் ஆதரவாளர்கள்!! – மைத்திரிபால தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தற்போதும் உலகம் முழுவதிலும் நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். தமிழீழத்தை உருவாக்குவதற்கான சாத்தியமற்ற ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளளர். இவ்வாறு தெரிவித்துள்ளார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. நாரேஹின்பிட்டி இராணுவ மருத்துவமனையில் நேற்று நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்தாவது- சர்வதேச ரீதியாக ஒழுங்கமைந்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், தமிழீழத்தை உருவாக்குவதற்கான சாத்தியமற்ற ஒரு முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.…
-
- 1 reply
- 389 views
-
-
நுளம்புக்கொல்லி மீன்களை பொதுமக்களிடம் கோருகிறார் சுகாதார அதிகாரி! [Friday 2017-11-10 19:00] யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் கடந்த வருடம் 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருடத்தில் 4700 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த தகவல்களை வௌியிட்டார். 'பருவமழை ஆரம்பித்திருக்கும் நிலையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. மேலும், மலேரியா நுளம்பு பெருக்கம் பல இடங்களில் அவதானிக்கப்பட்டுள்ளது. ஆரம்…
-
- 4 replies
- 2k views
-
-
ரவிராஜ் அவர்களின்11 ஆவது நினைவு தினம் இன்று யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜ் அவர்களின்11 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலை சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள அன்னாரது நினைவுச் சிலை முன்பாக நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. வட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சி.துரைராஜா தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. http://newuthayan.com/story/45267.html
-
- 3 replies
- 877 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வதில் உள்ள தடை என்ன? தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து யாரும் வௌியேறலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் அண்மையில் ஊடகங்கள் மூலம் தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில், தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படமுடியாது என EPRLF தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதய சூரியன் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அங்கத்துவக் கட்சிகள் இணங்கின. எனினும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள…
-
- 0 replies
- 377 views
-
-
அம்மாச்சி உணவக கட்டடப் பணி: பொலிஸ் விசாரணை மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் அம்மாச்சி உணவக கட்டடம் நிர்மாணிக்கும் பணியில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து மன்னார் மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளரிடம் புலானாய்வுப் பிரிவினர் விசாரணை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: மன்னார் மாவட்ட கால்நடை மருத்துவ வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் அம்மாச்சி உணவகக் கட்டடம் அமைப்பதில் ஊழல் இடம்பெறுவதாக சில இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் இது த…
-
- 0 replies
- 480 views
-
-
மட்டக்களப்பை நோக்கிப் படையெடுக்கும் யானைப் பட்டாளம்! மட்டக்களப்பில், அண்மைக் காலமாக யானைகளின் ஆதிக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளதாக மட்டக்களப்பின் பின்தங்கிய கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்கள் அதிகமாகப் பயணிக்கும் கொழும்பு செல்லும் பாதையைக் கடந்து செல்லும் இந்த யானைப் பட்டாளங்கள் எங்கிருந்து வந்தன என்று தெரியாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பும் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பல உயிர்ச் சேதங்களும் இடம்பெற்றுள்ள நிலையில் இதுபோன்ற யானைப் பட்டாளங்கள் அதிகரிப்பதனால் இன்னும் பல உயிர்கள் இழக்க நேரிடும் தெரிவிக்கின்றனர். http://www.virakesari.lk/article/26895
-
- 1 reply
- 372 views
-