Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பிற்கு அரசாங்க அதிபரை நியமிப்பதில் இழுபறி: அரசியல் தலையீடு காரணமா? மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலை நிலவி வருகிறது. இந்த இழுபறி நிலைக்கு அரசியல் தலையீடே காரணம் என சிவில் அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றன. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகமாக பதவியேற்று சென்ற நிலையில், இன்னமும் நிரந்தர அரசாங்க அதிபர் நியமிக்கப்படவில்லை. http://newsfirst.lk/tamil/2017/11/மட்டக்களப்பிற்கு-அரசாங்/

  2. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே வலுப்பெறும் கருத்து முரண்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையே கருத்து முரண்பாடு வலுப்பெற்று வருகின்றது. இந்த நிலையில், தமிழ் அரசியல் பிரதிநிதிகளை இன்று நேரில் அழைத்து மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கலந்துரையாடினார். தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து உத்தியோகப்பூர்வமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆரம்பித்தன. எனினும், பின்னர் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழரசுக் கட்சி, கூட்டமைப்பின் அதிகாரத்தை தமது கட்டுப்பாட…

  3. வடக்கு,கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒரு போதும் அனுமதியளிக்க முடியாது. வடக்கு கிழக்கு இணையும் பட்சத்தில் கிழக்கில் இரத்த ஆறே ஓடும். மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் வகையில்புதிய அரசியலமைப்பு உரு வாக்கப்படக்கூடாது என மீள்குடி யேற் றம், புனர்வாழ்வு இராஜாங்க அமைச் சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எச்ச ரிக்கை விடுத்தார். அரசியலமைப்பு சபையில் நேற்று புதன்கிழமை புதிய அரசியலமைப்புக் கான வழிநடத்தல் குழுவின் இடைக் கால அறிக்கை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரை யாற்றுகையில் மேற்கண்டவாறு தெரி வித்தார். அவர…

  4. யாழ்ப்பாண மாவட்டத்தின் 3 நகர சபைகளுக்குமான உறுப்பினர்களில் மாற்றமில்லை! யாழ்ப்பாண மாவட்டத்தின் 3 நகர சபைகளுக்குமான உறுப்பினர்களில் மாற்றமில்லை! யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை,வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி நகர சபைகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படவில்லை. பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகர சபைகளுக்கு 9 உறுப்பினர்களும், சாவகச்சேரி நகர சபைக்கு 11 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவேண்டும். அவர்களின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் நடைமு…

  5. கூட்டமைப்பை பிளவுபடுத்துவது மக்கள் ஆணையை மீறும் செயல் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் ஒற்­றுமை, தமிழ் மக்­க­ளுக்கு அவ­சி­யம். கூட்­ட­மைப்பு பிள­வு­பட்­டுப் போகக் கூடாது. மக்­கள் கூட்­ட­மைப்­பா­கச் செயற்­ப­டு­வ­தற்கே ஆணை வழங்­கி­யுள்­ள­னர். இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் விந்­தன் கன­க­ரட்­ணம் தெரி­வித்­தார். புங்­கு­டு­தீவு மக்­கள் ஒன்­றி­யத்­தின் அழைப்­பில் புலம் பெயர்ந்த தமிழ் மக்­க­ளைச் சந்­திப்­ப­தற்­காக ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு சென்­றி­ருந்­த­போது, புலம்­பெ­யர் செயற்­பாட்­டா­ளர்­கள் மத்­தி­யில் உரை­யாற்­றும் போதே இவ்­வாறு தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் அனுப்பி வைத்த பத்­தி­ரி­கைச் செய்­திக் குறிப்­பில் தெரி­வி…

  6. மைத்­திரி- மகிந்த விரை­வில் சந்­திப்பு மைத்­திரி- மகிந்த விரை­வில் சந்­திப்பு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ வுக்­கும், முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வுக்­கும் இடை­யில் அவ­சர சந்­திப்­பொன்று நடை­பெற ஏற்­பா­டா­கி­யுள்ளது. முக்­கி­ய­மான அர­சி­யல் விட­யங்­கள் குறித்து மகிந்­த­வும், மைத்­தி­ரி­யும் நேர­டி­யா­கச் சந்­தித்து பேசு­வது நல்­ல­தென மகிந்த அணி முக்­கிய உறுப்­பி­னர்­க­ளும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர்­க­ளும் பரஸ்­ப­ரம் தீர்­மா­ன­ மொன்றை எடுத்­ததை அடுத்தே இரு­வ­ரும் நேரில் சந்…

  7. தனி நபரின் அடாவடியின் பின் இருப்பது அரசியலா? அல்லது அதிகாரிகளின் துணையா? முல்லைத்தீவு - மாங்குளம் புதிய கொலனியில் தனிநபர் ஒருவர் நாற்பது ஏக்கர் வரையான காணியினை வலுக்கட்டாயமாக பிடித்து வேலி அமைத்து வருவது தொடர்பாக அக்கிராம பொது அமைப்புகள் பலத்த எதிர்ப்பினைத்தெரிவித்து வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள் குடியமர்ந்துள்ள மக்களில் காணியற்ற குடும்பங்களுக்கு அரை ஏக்கர் வீதம் காணி வழங்கப்படும் நிலையில் தனிநபர் ஒருவர் எவ்வாறு நாற்பது ஏக்கர் வரையான காணியினை வலுக்கட்டாயமாக பிடித்து வேலி அமைக்க முடியும்? எனவும், குறித்த நபரின் செயற்பாட்டினைத் தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்ட நடைமுறைகளுக்கப்பால் தனிநபர் ஒருவர்…

    • 3 replies
    • 388 views
  8. ஈ.பி.டி.பி. தனித்தே போட்டியிடும் – கூட்டமைப்புடன் ஒரு போதும் கூட்டு சேராது. உள்ளூராட்சி தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவரான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , உள்ளூராட்சி சபை தேர்தலில் ஈ.பி.டி.பி தனித்து போட்டியிட உள்ளது.1998 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10 சபைகள் பெற்றோம். பின்னர் ஐக்கிய முன்ணணியுடன் கூட்டு சேர்ந்து இணக்க அரசிய…

    • 4 replies
    • 510 views
  9. முஸ்லிம்களுடன் இணைந்து வாழவே விரும்புகிறோம்; இழந்து வாழ விரும்பவில்லை எல்லைக்காவலன் குஞ்சித்தம்பி ஏகாம்பரம் இழந்தவைகள் இழந்தவைகளாக இருக்கட்டும். இருப்பவைகளையாவது எமது சந்ததியினரை காப்பாற்ற வேண்டும். இதனால் நடந்தவைகளை மறந்து இரு சமூகங்களும் இணைந்து வாழவே விரும்புகிறோம். கல்முனையில் தமிழர்கள் முஸ்லிம்களுடன் இணைந்து வாழவே விரும்புகிறார்கள். ஆனால் எதையும் இழந்து வாழ விரும்பவில்லை. இவ்வாறு கூறுகிறார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் கல்முனை மாநகர சப…

    • 2 replies
    • 313 views
  10. ஜனா­தி­ப­தி­யாக நான் நாட்டில் இருக்­கும் ­வரை எந்த இரா­ணுவ வீர­ரையும் யுத்த நீதி­மன்றில் நிறுத்த இட­ம­ளியேன் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்தார் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன (ரொபட் அன்­டனி) இந்த நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக நான் இருக் கும் வரையில் எந்­த­வொரு இரா­ணுவ வீர­ரையும் வெளி­நாட்டு நீதி­ப­திகள் முன் நிறுத்­து­வ­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டேன் என்­பதை மிகவும் உறு­தி­படத் தெரி­வித்­துக்­கொள்­கின்றேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். கொழும்பு இரா­ணுவ வைத்­தி­ய­சா­லையின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்­தினம் இடம்­ பெற்ற இரா­ணுவ வீரர்­க­ளு­ட­னான நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லே…

    • 1 reply
    • 504 views
  11. வடக்கு விவ­சாய அமைச்­ச­ரின் கருத்­துக்கு மீன­வர்­கள் எதிர்ப்பு வடக்கு விவ­சாய அமைச்­ச­ரின் கருத்­துக்கு மீன­வர்­கள் எதிர்ப்பு முல்­லைத்­தீ­வில் வட்­டு­வா­கல் ஏரி­யைத் திறந்­து­வி­டு­வது தொடர்­பில் வடக்கு மாகாண சபை அமைச்­சர் சிவ­நே­ச­னின் கருத்­தால் மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக்­கு­ழுக் கூட்­டத்­தில் நேற்றுக் குழப்­பம் ஏற்­பட்­டது. அமைச்ச­ரின் கருத்­துக்கு மீனவ சங்­கப் பிர­தி­நி­தி­கள் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­ட­னர். முல்­லைத்­தீவு மாவட்ட ஒருங்­கி­ணைப் புக் குழுக்­கூட்­டம் மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று மதி­யம் 2 மணிக்கு ஆரம்­பித்து நேற்­றி­ரவு சுமார் 8 மணி­வரை நீ…

  12. மட்டக்களப்பில் 36 பேர் கைது பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் விசேட வீதிசோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 36 பேரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ் விசேட வீதிசோதனை நடவடிக்கை நேற்று இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 3 மணிவரை இடம்பெற்றுள்ளது. இதில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 19 பேரையும், ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 3 பேரையும், வாகரை பொலிஸ் பிரிவில் 4 பேரையும், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 5 பேரையும்,கரடியனாறு பொலிஸ் பிரிவில் 2 பேர் உட்பட 36 பேரை கைது செய்துள்ளனர் மதுபோதையில் வாகனம் செலுத்தியோர்,…

  13. இந்த நாடு சிங்களவர்களுக்கு சொந்தமானது என்று கூறும்வரை தனிநாடு கோரும் உரிமை தமிழருக்கு உண்டு! வடக்கு கிழக்கை இணைக்க ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டோம் என்று கூறியுள்ளது ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி. ஜே.வி.பியைப்போல நுட்பமான இனவாத கட்சி ஒன்று இலங்கையில் இல்லை. மகிந்த ராஜபக்சவும் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பு வெளியிடுகிறார் ஜே.வி.பியும் எதிர்ப்பு வெளியிடுகிறது. வடக்கு கிழக்கு இணைந்தால் தமிழீழம் என்று மகிந்த ரராஜபக்சவும் வெளிப்படையாக இனவாதத்தை கக்கும் பேரினவாதிகளும் கூறுகின்றனர். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இணையக்கூடாது என்று நினைப்பவர்கள், தமிழ் மக்கள் சிங்களவர்களுடன் இணைய வேண்டும் என எப்படிக் கூறமுடியும்? எந்த உரிமையும் இன்றி, வடக்கு …

  14. மூன்று அறிக்­கை­களை இலங்கை எதிர்­கொள்ளும் ? 37 ஆவது ஜெனிவா கூட்­டத்­தொ­ட­ருக்கு தயா­ராகும் தரப்­புகள் (ரொபட் அன்­டனி) இலங்கை தொடர்­பான நான்கு அறிக்­கைகள் மற்றும் பல்­வேறு நிகழ்ச்சி நிரல்­க­ளுடன் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் பெப்­ர­வ­ரி­மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் 23 ஆம்­தி­க­தி­வரை ஜெனி­வாவில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பாக பல்­வேறு விவா­தங்கள் நடை­பெ­ற­வுள்­ள­துடன் கார­சா­ர­மான அறிக்­கை­களும் முன்­வைக்­கப்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில் ஒரு அறிக்­கையும் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் …

  15. ஐந்­தா­யிரம் ரூபா நாண­யத்தாள் விவ­கா­ரத்­தினால் சபையில் சர்ச்சை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) ஐந்­தா­யிரம் ரூபா நாணய தாள் தொடர்பில் கூட்டு எதிர்­க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்த கருத்­தினை அடுத்து நேற்று சபையில் கடு­மை­யான சர்ச்சை ஏற்­பட்­டது. இதன்­போது பந்­துல குண­வர்­தன எம்.பி.யுடன் ஆளும்­த­ரப்பு எம்.பி.க்­க­ளான எரான் விக்­கி­ர­ம­ரத்ன சுஜீவ சேன­சிங்க, நளின் பண்­டார ஆகியோர் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்­டனர். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தின் மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­து…

  16. யாழில்.கனமழை – நீரேரிகளின் நீர்மட்டம் உயர்வு – மக்களை விழிப்பாக இருக்குமாறு எச்சரிக்கை யாழில் பெய்து வரும் கன மழை காரணமாக தொண்டமனாறு கடல் நீரேரியின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அதனைச் சூழவுள்ள கிராம மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்பாசனத் திணைக்களம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. யாழில்.கடந்த 24 மணிநேரமாக மழை பெய்து வருகின்றது. இந்த மழை தொடர்ந்து நீடிக்குமாயின் தொண்டமனாறு கடல் நீரேரியின் நீர் மட்டும் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. அதனால் கோப்பாய், அச்சுவேலி, புத்தூர், வாதரவத்தை மற்றும் மாண்டான் ஆகிய பகுதி மக்களை விழிப்பாக இருக்குமாறு வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் என். சுதாகரன் அறிவித்துள்ளார். …

  17. வரி அதிகரிப்பினால் சொகுசு கார்களின் விலைகள் சடுதியாக உயர்வு மறைமுக தாக்கமே அதிகமென சந்தேகம் (எம்.சி.நஜி­முதீன்) பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் சமர்ப்­பிக்­கப்­பட்ட வரவு செலவு திட்­டத்தின் பிர­காரம் இறக்­கு­மதி செய்­யப்­படும் சொகுசு வாக­னங்­களின் விலை­களில் பாரிய மாற்றம் ஏற்­பட்­டுள்­ள­தாக வாகன இறக்­கு­ம­தி­யா­ளர்கள் சங்கம் தெரி­வித்­துள்­ளது. இதன் பிர­காரம் Toyota Aqua வின் இறக்­கு­மதி வரி­யா­னது 2994750 ரூபா­வி­லி­ருந்து 3726750 ரூபா­வாக 732000 ரூபாவால் அதி­க­ரித்­துள்­ளது. அதே­வேளை Toyota Axio (HYBRID) காருக்கு இது வரை விதிக்­கப்­பட்டு வந்த 2995950 இறக்­கு­மதி வரி­யா­னது 3726750 ரூபா­வாக அதி­க­ரிக்­கப்­பட்டு 73080…

  18. சவீந்திர சில்வா மிகமோசமான போர்க் குற்றவாளி – கொதிப்படைந்தது இலங்கை இராணுவம் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று ஆணையாளரும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினை மிக மோசமான யுத்த குற்றவாளி என சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான செயற்திட்டத்தின் தலைமைச் செயற்பாட்டாளரான யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளமை குறித்து இலங்கை இராணுவம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் கஜபா படைப்பிரிவின் நிகழ்வொன்றிற்கு கோக் நிறுவனம் அனுசரணை வழங்கியமை குறித்து அந்நிறுவனத்துக்கு எழுதியுள்ள கடித்திலேயே யஸ்மின் சூக்கா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் கஜபா…

    • 3 replies
    • 598 views
  19. சாத்தியமற்ற முயற்சியில் புலிகளின் ஆதரவாளர்கள்!! – மைத்திரிபால தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தற்போதும் உலகம் முழுவதிலும் நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். தமிழீழத்தை உருவாக்குவதற்கான சாத்தியமற்ற ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளளர். இவ்வாறு தெரிவித்துள்ளார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. நாரேஹின்பிட்டி இராணுவ மருத்துவமனையில் நேற்று நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்தாவது- சர்வதேச ரீதியாக ஒழுங்கமைந்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், தமிழீழத்தை உருவாக்குவதற்கான சாத்தியமற்ற ஒரு முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.…

    • 1 reply
    • 389 views
  20. நுளம்புக்கொல்லி மீன்களை பொதுமக்களிடம் கோருகிறார் சுகாதார அதிகாரி! [Friday 2017-11-10 19:00] யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் கடந்த வருடம் 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருடத்தில் 4700 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த தகவல்களை வௌியிட்டார். 'பருவமழை ஆரம்பித்திருக்கும் நிலையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. மேலும், மலேரியா நுளம்பு பெருக்கம் பல இடங்களில் அவதானிக்கப்பட்டுள்ளது. ஆரம்…

  21. ரவிராஜ் அவர்களின்11 ஆவது நினைவு தினம் இன்று யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜ் அவர்களின்11 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலை சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள அன்னாரது நினைவுச் சிலை முன்பாக நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. வட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சி.துரைராஜா தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. http://newuthayan.com/story/45267.html

  22. தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வதில் உள்ள தடை என்ன? தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து யாரும் வௌியேறலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் அண்மையில் ஊடகங்கள் மூலம் தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில், தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படமுடியாது என EPRLF தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதய சூரியன் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அங்கத்துவக் கட்சிகள் இணங்கின. எனினும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள…

  23. அம்­மாச்சி உண­வக கட்­ட­டப் பணி: பொலிஸ் விசா­ரணை மன்­னார் மாவட்­டத்­தில் அமைக்­கப்­பட்டு வரும் அம்­மாச்சி உண­வக கட்­ட­டம் நிர்­மா­ணிக்­கும் பணி­யில் ஊழல் இடம்­பெற்­றுள்­ள­தாக வெளி­யான செய்­தி­களை அடுத்து மன்­னார் மாவட்ட உதவி விவ­சா­யப் பணிப்­பா­ள­ரி­டம் புலா­னாய்­வுப் பிரி­வி­னர் விசா­ரணை செய்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இச்­சம்­ப­வம் தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது: மன்­னார் மாவட்ட கால்­நடை மருத்துவ வளா­கத்­தில் அமைக்­கப்­பட்டு வரும் அம்­மாச்சி உண­வ­கக் கட்­ட­டம் அமைப்­ப­தில் ஊழல் இடம்­பெ­று­வ­தாக சில இணை­யத்­த­ளங்­க­ளில் செய்­தி­கள் வெளி­யாகி இருந்­தன. இந்த நிலை­யில் இது த…

  24. மட்டக்களப்பை நோக்கிப் படையெடுக்கும் யானைப் பட்டாளம்! மட்டக்களப்பில், அண்மைக் காலமாக யானைகளின் ஆதிக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளதாக மட்டக்களப்பின் பின்தங்கிய கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்கள் அதிகமாகப் பயணிக்கும் கொழும்பு செல்லும் பாதையைக் கடந்து செல்லும் இந்த யானைப் பட்டாளங்கள் எங்கிருந்து வந்தன என்று தெரியாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பும் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பல உயிர்ச் சேதங்களும் இடம்பெற்றுள்ள நிலையில் இதுபோன்ற யானைப் பட்டாளங்கள் அதிகரிப்பதனால் இன்னும் பல உயிர்கள் இழக்க நேரிடும் தெரிவிக்கின்றனர். http://www.virakesari.lk/article/26895

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.