ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
வீட்டுக்குள் புகுந்து கும்பல் அட்டகாசம் -யாழில் சம்பவம் Share யாழ்ப்பாணம் பிறவுண் வீதியிலுள்ள வீட்டுக்குள் புகுந்த நால்வர் கொண்ட கும்பல் வீட்டின் உடைமைகளை அடித்து நொறுக்கிவிட்டுத் தப்பிச் சென்றது என்று கோப்பாய் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுப் பி.ப. 3 மணியளவில் இடம்பெற்றது. 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டது. அவர்கள் முகத்தைத் துணியால் மறைத்திருந்ததால் அடையாளம் காணமுடியவில்லை என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 201 views
-
-
தீர்வு பற்றி அறிவதிலேயே அமெரிக்கா கடும் அக்கறை Share இலங்கையின் புதிய அரசமைப்பு முயற்சிகள் தொடர்பாக அறிந்து கொள்வதில் அமெரிக்க அதிகாரிகள் ஆர்வம் கொண்டிருந்த தாகத் தெரியவருகின்றது. இந்த முயற்சியின் ஊடாக தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைக்குமா? என்பதைத் தெரிந்து கொள்வதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது. அமெரிக்காவுக்கு கடந்த மாத இறுதியில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, சந்திரானி பண்டார, இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜித ஹேரத், குமார வெல்க…
-
- 0 replies
- 155 views
-
-
ஹம்பாந்தோட்டையில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட கூட்டு எதிரணி ஆதரவாளர்களை எதிர்வரும்16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டையில் நேற்று கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, 3 பொலிஸார் காயமடைந்ததுடன் 28 ஆர்ப்பாட்டக்கார்கள் கைதுசெய்யப்பட்டனர். ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டதுடன் நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொண்டு ஆர்ப்பாட்டத்தை கலைக்க முற்பட்டனர…
-
- 0 replies
- 123 views
-
-
மகிந்தவின் வீட்டினுள் நுழைந்தவர் மனநோயாளியா ? : விளக்கமறியல் நீடிப்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கொழும்பில் உள்ள வீட்டினுள் அத்துமீறி பிரவேசிக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஷானிமா விஜேபண்டார உத்தரவு பிறப்பித்தள்ளார். குறித்த நபர் மனநோயாளியாக காணப்படும் பட்சத்தில் அங்கொடை மனநலவைத்தியசாலை ஊடாக சிறைச்சாலையில் வைத்து சிகிச்சைகளை வழங்குமாறும் பணித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபவின் கொழும்பு விஜேராமவில் உள்ள வீட்டினுள் கடந்த மாதம் 21ஆம் திகதி கத்தியுடன் அத்துமீறி நுழைய முயன்ற குற்றச்சாட்டில் கைது ச…
-
- 0 replies
- 162 views
-
-
ஐ.தே.க.வின் அங்கத்தவர்களுக்கு இன்று விளக்கமளிப்பு.! உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் தேர்தல்கள் ஆணைக்குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ரீதியிலான பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்களுக்கான மூன்று நாள் செயலமர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கும் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.முஹமட் இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள்…
-
- 0 replies
- 203 views
-
-
அலுவலகத்தில் கடமையிலிருந்த ஊழியரைத் தாக்கிய பெண் கிளிநொச்சி நகரில் உள்ள உள்ளுராட்சி அலுவலகம் ஒன்றில் கடமையில் இருந்த ஊழியர் ஒருவரை குறித்த அலுவலகத்திற்குச் சென்ற பெண் ஒருவா் தாக்கிய சம்வபமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, போலி முகநூல் ஒன்றில் குறித்த பெண் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் இராணுவத்திற்கும் இடையில் தகவல்களை பரிமாறுவதாக பதவேற்றி, அதில் இந்த பெண் இராணுவ முகாம் ஒன்றின் வாயிலில் நிற்கும் படத்தினை பதிவேற்றியது தொடர்பில் ஆத்திரமடைந்த பெண்ணே, குறித்த ஊழியரை தாக்கியுள்ளதாக தெரி…
-
- 0 replies
- 123 views
-
-
வரவு - செலவுத் திட்டத்தில் விவசாயப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் பல்வேறு யோசனைகள் : ஜனாதிபதி விவசாய தொழில்நுட்ப உபகரணங்களுக்கு வரிவிலக்கு, 2018 ஆம் ஆண்டு தேசிய உணவு உற்பத்தி ஆண்டாகப் பிரகடனம், 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் விவசாயப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் பல்வேறு யோசனைகள், விவசாயத் தொழிற்துறையைப் பலப்படுத்துவதற்காக தேசிய வீடமைப்புக் கொள்கை ஆகிய சில முன்மொழிவுகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று வெளியிட்டார். தேசிய உணவு உற்பத்தி புரட்சியை வெற்றிகொள்வதற்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து விவசாய தொழிற்துறை பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களுக்கு வரிவிலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாத…
-
- 5 replies
- 732 views
-
-
வட,கிழக்கு இணைந்தால் தனி அலகு அவசியமாகும் : ஹக்கீம் வடகிழக்கு மாகாணங்கள் இணையும்போது முஸ்லிம்களுக்கு தனியலகு உருவாக்கப்பட வேண்டும் என்ற எமது நீண்டகால கொள்கை ரீதியான தீர்மானத்தில் எந்தவிதமான மாற்றுக் கருத்துமில்லை. இந்த விடயத்தில் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக முடிவெடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வடக்குடன் கிழக்கை இணைக்கவிட மாட்டோமென கூறி சிக்கலை ஏற்படுத்த முயலும் தரப்பினருக்கு தூபமிடுவதற்கு முடியாது. நீண்ட கலந்துரையாடல்கள், விட்டுக் கொடுப்புகள் இடம்பெற வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்…
-
- 9 replies
- 866 views
-
-
சீனாவிற்கு அஞ்சி மத்தள விமான நிலையத்தை பலவந்தமாக பெற்றுக்கொள்ள இந்தியா முயற்சி : சமல் ராஜபக்ஷ (லியோ நிரோஷ தர்ஷன்) ஹம்பாந்தோட்டை ஊடான சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு அச்சப்பட்டு மத்தள விமான நிலையத்தை இந்தியா பலவந்தமாக பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது. ஆகவே நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்தள விமான நிலையத்தை பாதுகாக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபகஷ தெரிவித்தார். பொறுப்புணர்வுடன் செயற்பட்டு மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு கொடுக்கும் திட்டத்தை அரசாங்கம் நிறுத்த வேண்டும். அவ்வாறு அல்லாது தேசிய வளங்களை தொடர்ந்தும் அந்நிய நாடுகளுக்கு வழங்கி வந்தால் கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அ…
-
- 4 replies
- 371 views
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் அவர்கள் அண்மைக்கால மாக ஆற்றுகின்ற உரைகள், விடுக்கின்ற அறிக் கைகள் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைப்பதாக இருப்பதைக் காணமுடிகின்றது. அதிலும் குறிப்பாக இடைக்கால வரைபு தொடர்பில் அவர் விடும் அறிக்கைகள் ஒரு திட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் அவர் செயற்படுகின்றாரோ என்று எண்ணுமளவுக்கு நிலைமையுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மிகவும் நிதானமாக இருக்கும் போது, அந்தக் கட்சியின் செயலாளர் துரைராஜ சிங்கம் இடைக்கால வரைபை கடுமையாக ஆதரிப்பதுடன் அதில் எல்லாம் இருப்பதாகவும் கூறுகிறார். அவரின் சொந்த இடமான கிழக்கு மாகா ணத்தில் நடந்த பாடசாலை ந…
-
- 3 replies
- 508 views
-
-
நாடு "ஒற்றையாட்சி' அரசாக இருக்கின்றதென்று அரசியல் அமைப்பு பிரகடனப்படுத்துகின்ற போதிலும் "ஒருங்கிணைந்த நாடாக' இருக்க வேண்டுமென்ற கருத்தை சிலர் கொண்டிருக்கின்றனர். மக்களின் இறைமை அதிகாரத்தை 13 ஆவது திருத்தம் பாதிக்கின்றதென சட்டத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். காணி மற்றும் பொலிஸ் போன்ற அதிகாரங்களை பிராந்திய அரசாங்கங்களுக்கு ( மாகாணங்கள் ) பகிர்ந்தளிப்பதன் மூலம் இலங்கையின் முழுமைத் தன்மையை அது இல்லாமல் செய்வதாகவும் அழித்து விடுவதாகவும் சமஷ்டி அரசொன்றுக்கான வழியை திறந்துவிடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். "ஒற்றையாட்சி அரசு' மற்றும் "ஒன்று பட்ட அரசு' என்ற கருத்தீடுகள் தொடர்பாக தர்க்கங்களும் விவாதங்களும் இடம்பெற்றுவரும் தருணத்தில் ஜனாதிபதி சட்டத்தரணியும் அரசியல் அம…
-
- 0 replies
- 347 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (06-10-2017)
-
- 0 replies
- 303 views
-
-
வீடு புகுந்து கொள்ளை : கல்லடியில் சம்பவம் மட்டக்களப்பு - கல்லடி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று இனந்தெரியாதோரினால் கொள்ளை சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த வீட்டில் இருந்த 200 கிலோ கிராம் எடையுள்ள பாதுகாப்பு பெட்டியை உடைத்து ஒரு தொகை தங்கமும், இலங்கை ரூபாய் ஒரு இலட்சமும், வெளிநாட்டு பணம் ஒரு இலட்சம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் பிடிபடாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். http://www.virakesari.lk/article…
-
- 3 replies
- 734 views
-
-
பிரித்தானிய ஆசிய பசுபிக் அமைச்சர் முகமாலையில் மீள்குடியேறியுள்ள மக்களை சந்தித்துள்ளார். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள பிரித்தானிய ஆசிய மற்றும் பசுபிக் விவகார அமைச்சர் மார்க் பீல்ட் வடக்கில் பரித்தானியாவின் நிதி உதவியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணி வெடி அகற்றும் பணியினையும் நேரில் சென்று பார்வையிடுவதற்காக இன்று (06) பிற்பகல் முகமாலை பகுதிக்கும் சென்றுள்ளார். முகமாலை பிரதேசத்தில் கண்ணி வெடி அகற்றும் நிறுவனமான ஹரோ ட்ரஸ்ட நிறுவனத்தினரை சந்தித்தோடு, முகமாலை பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள மக்களையும் சந்தித்துள்ளார். தனது பயணத்தின் போது எதிர் கட்சி தலைவா் …
-
- 1 reply
- 337 views
-
-
சரத்தின் மனுவிற்கு சுமந்திரனின் இடையீட்டு மனு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தை இரத்துச்செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் 28 ஆம் திகதியன்று தாக்கல் செய்த மனுவுக்கு இடையீட்டு மனுவொன்று இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தச் சட்டமூலமானது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முறைமை தவறானது என்றும் அந்தத் திருத்தத்தை உடனடியாக இரத்துச்செய்யுமாறும் கூறியே அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனுவில் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, சபாநாயகர் கரு ஜயசூரிய, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்…
-
- 0 replies
- 326 views
-
-
முதலமைச்சர் தொடர்பான கூட்டமைப்பின் கோரிக்கைக்கு சுதந்திரக் கட்சி பச்சைக்கொடி மாகாண முதலமைச்சரது அதிகாரங்கள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது. நியாயமான கோரிக்கைகளை சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொள்ளும் என்றாலும், நாட்டைப் பிரிக்கின்ற எந்தவொரு யோசனைக்கும் தமது கட்சி ஆதரவளிக்காது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாந்த பண்டார தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போது முன…
-
- 0 replies
- 412 views
-
-
தொண்டராசிரியர் நியமனத்தில் முறைக்கேடு க.அகரன் வட மாகாண சபையால் வழங்கப்படவுள்ள தொண்டராசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து வவுனியா தெற்கு கல்வி வலய தொண்டராசிரியர்கள் இன்று (06) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். வட மாகாண சபையினால் ஆசிரியர் நியமனத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ள 182 தொண்டராசிரியர்களின் பெயர்ப்பட்டியலில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், தகுதியானவர்களின் பெயர்கள் தெரிவுப்பட்டியலில் உள்வாங்கப்படவில்லை எனவும் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தொண்டராசியர்களாக கடமையாற்றிய தாம் பல தடவைகள் நேர்முகத்தேர்வுகளுக்கு சென்றிருந…
-
- 2 replies
- 580 views
-
-
கல்கிஸை கலவரம்; முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவரும் கைது கொழும்பு – கல்கிஸை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற அமைதியின்மையின்போது கலவரத்தை தூண்டிய குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்றைய தினம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்காவுக்கு புகலிடம் கோரிவந்த மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் 31 பேர் ஐ.நா அகதிகள் காப்பு முகவரத்தின் வழிகாட்டலின் கீழ் கல்கிஸை பகுதியிலுள்ள இடைத்தங்கல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களை நாடு கடத்தும்படிகோரி தென்னிலங்கையிலுள்ள கடும்போக்குவாத பிக்குமா…
-
- 0 replies
- 284 views
-
-
வடமாகாண சபை உறுப்பினர் ரிப்ஹான் பதியுதீன் இராஜிநாமா வட மாகாண சபை உறுப்பினர் ரிப்ஹான் பதியுதீன் தனது இராஜிநாமா கடிதத்தை கையளித்துள்ளார். வடமாகாண சபை உறுப்பினரான ரிப்ஹான் பதியுதீன் தனது இராஜிநாமா கடிதத்தை வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திடம் கையளித்துள்ளார். வடமாகாண சபை உறுப்பினரான ரிப்ஹான் பதியுதீன் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/25395
-
- 0 replies
- 382 views
-
-
தியாகதீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் வித்தியாசமானது! - சம்பந்தன் [Sunday 2017-09-24 18:00] தியாக தீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் வித்தியாசமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் கல்முனையில் இன்று இடம்பெற்றது. இதில் தியாக தீபம் திலீபனுக்கு இரா.சம்பந்தன் சுடரேற்றி அஞ்சலி தெசலுத்தினார். இதனையடுத்து கருத்து தெரிவித்த அவர், “தமிழ் மக்களின் விடுதலைக்காக பல்வேறு அஹிம்சை போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் தியாகி திலீபனின் விடுதலைப் போராட்டம் வித்தியாசமானது. இந்…
-
- 9 replies
- 1.1k views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்தார் மார்க் ஃபீல்ட் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் மார்க் ஃபீல்ட் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை இன்று காலை சந்தித்துள்ளார். இச் சந்திப்பின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தாங்கள் நீண்ட நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் எதுவித தீர்ப்பும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் தாங்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றியும் அவரிடம் எடுத்து கூறினர். Tags http://www.virakesari.lk/article/25390
-
- 0 replies
- 294 views
-
-
தமிழீழம் வேண்டும்! ஆவேசமாகக் கோசமிட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக்கழக சமூகத்தினால் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மானவர்களால் பல கோசங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் ”வேண்டும் வேண்டும் தமிழீழம் வேண்டும்” என்ற கோசமும் மாணவர்களால் பலமாக எழுப்பப்பட்டுள்ளது. சிங்களத்தில் எழுதப்பட்ட சுலோகத்தினைத் தாங்கிய மாணவர்களும் குறித்த கோசத்தினை பலமாக எழுப்பியுள்ளனர். இராமநாதன் வீதிவழியாக பல்கலைக்கழக வாயிலை வந்தடைந்த ஆர்ப்பாட்டக்குழு, தமிழ் க…
-
- 7 replies
- 697 views
-
-
ஜெனீவாவில் வாய்மூடி இருந்தது ஏன் ? வெளிவிவகார அமைச்சு கேள்வி !! ஐ.நா மனித உரிமைச்சபையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்காவின் பிரதிநிதி வாய்மூடி மௌனமாக இருந்தது ஏன் என்ற கேள்வியினை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கேள்வி எழுப்பியுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. செப்பெரம்பர் 26ம் நாளன்று மைய அமர்வில் இடம்பெற்றிருந்த தொடர்பிலான விவாவத்தின் போது 14 தடவைகள் சிறிலங்காவை மையப்படுத்தி குற்றச்சாட்டுக்கள் அரச சார்பற்ற அமைப்புக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிப்பதற்கான உரிமை சம்பந்தபட்ட நாடு என்ற வகையில் சிறிலங்காவுக்கு …
-
- 4 replies
- 427 views
-
-
முன்னாள் போராளியின் ஹோட்டலில் அத்துமீறி நுழைந்து வயோதிபரைத் தாக்கிய பொலிஸார் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒருவரின் ஹோட்டலுக்குள் அத்துமீறி சிவில் உடையில் சென்ற ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு பணி புரிந்துகொண்டிருந்த வயோதிபரை தாக்கியதோடு ஹோட்டல் உரிமையாளரையும் அச்சுறுத்தியுள்ளனர். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான வயோதிபர் சிகிச்சைகளுக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் சாவகச்சேரியில் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; கடந்த மூன்றாம் திகதி குறித்த மது விற்பனை நிலையம் பூட்டப்பட்டு அ…
-
- 1 reply
- 396 views
-
-
அரசியல் தீர்வு இல்லையேல் மீண்டும் வன்முறை வெடிக்கும்- சம்பந்தன் அரசியல் தீர்வு ஒன்றை நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்கத் தவறினால் மீண்டும் வன்முறை வெடிக்கும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இர.சம்பந்தன் பிரித்தானியாவிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான அமைச்சர் மார்க் பீலட் மற்றும் பிரித்தானிய தூதரக அதிகாரிகளை சந்தித்து உரையாடியபோது சமபந்தன் இவ்வாறு எச்சரிக்கை விடுத்ததாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்புத் தொடர்பாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் சம்பந்தனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார். தேசிய…
-
- 6 replies
- 569 views
-