ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142757 topics in this forum
-
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும் January 21, 2025 12:20 pm பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும் என அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை கேள்வியொன்றை முன்வைத்து உரையாற்றிய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். சிறீதரன் எம்.பி தனது சிறப்புரிமை கேள்வியில், கடந்த வாரம் தாம் இந்தியாவுக்குச் சென்ற தருணத்தில் தமக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவுக்குச் செல்ல முடியாது ஆவணங்களை பரிசீலிக்க வேண்டும் என விமான நிலையத்தில் இருக்கும் குடிவரவ…
-
- 4 replies
- 293 views
- 1 follower
-
-
Published By: VISHNU 23 JAN, 2025 | 04:56 AM (நா.தனுஜா) ஒற்றையாட்சி முறைமையே இனப்பிரச்சினையாக அடிப்படைக்காரணமாக விளங்குவதாகவும், எனவே தம்மால் ஒருபோதும் ஒற்றையாட்சி முறைமையை ஏற்றுக்கொள்ளவியலாது எனவும் கனேடிய உயர்மட்டப்பிரதிநிதி மேரி-லூயிஸ் ஹனனிடம் கூட்டாக சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தாம் கோரிநிற்கும் சமஷ்டித்தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான வலுவான அழுத்தங்களை கனடா பிரயோகிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். அதுமாத்திரமன்றி சமஷ்டி முறைமை தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அவசியமான நிதியளிப்பை மேற்கொள்வதற்கு கனடா முன்வரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
அபு அலா- அரசாங்கம் அடுத்தடுத்து முஸ்லிம்களை புறக்கணித்து வருகின்ற போதிலும் அரசிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து கவனம் செலுத்தாது மௌனமாக இருப்பது முஸ்லிம் சமுகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் முஸ்லிம்கள் புறக்கணிப்பு விடயத்தில் தற்போது உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம் பேசுபொருளாகியுள்ளது. சிரேஸ்டத்துவ அடிப்படையில் முன்னிலையிலிருந்த ஒருவரை விடுத்து புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்டு…
-
- 0 replies
- 125 views
-
-
யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை நிர்வாணமாக்கி, கட்டிவைத்து தாக்கிய கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், ஏனையவர்களை தேடும் நடவடிக்கையில் கோப்பாய் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையின்போது, தாயின் கண்ணெதிரிலேயே இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞரை சிலர், அவரது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி, சித்திரவதை செய்து, கட்டிவைத்து மிக மோசமான தாக்கியுள்ளனர். இளைஞரை சித்திரவதை செய்து தாக்கிய காட்சிகளை, அந்த கும்பல் கையடக்கத் தொலைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் தொடர்பில் கோப்பாய் பொலிஸா…
-
- 1 reply
- 204 views
-
-
தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையில் புதிய சரக்குக் கப்பல் சேவை மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த இரண்டு துறைமுகங்களுக்குமிடையே நிரந்தரமான தொடர் சேவையை வழங்குவதற்காக ஏ & என் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 700 மெட்ரிக் தொன் எடை கொண்ட ‘தாரா கிரண்’ என்ற கப்பலை தயார்படுத்தியுள்ளது. கடலில் பயணிக்கும் தகுதி மற்றும் பிற சான்றிதழ்களை பெறும் செயல்முறைகள் பெப்ரவரி மூன்றாவது வாரத்துக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதன் முதல் பயணம் மார்ச் முதல் வாரத்தில் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகால உலகளாவிய கப்பல் போக்குவரத்து நிபுணத்துவத்துடன் அந்தமானில் தலைமையகத்தைக் கொண்ட ஏ&am…
-
- 1 reply
- 120 views
-
-
இராணுவ ‘கூலி’ கொலையாளிகள் பற்றி ஜனாதிபதி வெளிப்படுத்துகிறார் January 22, 2025 12:11 pm பாதாள உலகக் கைக்கூலிகள் குழுவொன்று இராணுவத்தினரே என ஆயுதப் படைகளின் கட்டளைத் தளபதியான ஜனாதிபதி தெரிவிக்கின்றார். அச்சத்தை ஏற்படுத்தும் இந்த தகவலை ஜனாதிபதி வெளிப்படுத்துவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், மன்னாரில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், கடமையிலுள்ள இராணுவச் சிப்பாய் என, இலங்கை பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவருக்கு ஆதரவாக இருந்த பிரதான சந்தேகநபர் ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர் என்பதுடன் 2023 இல் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரே அவர் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். தேர்தல் வெற்றியை கொண்டாடும் பொதுக்கூ…
-
- 1 reply
- 244 views
-
-
மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு நீதிபதி இளஞ்செழியனுக்கு திட்டமிட்டு அநீதி இழைத்துள்ளதாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வமைப்பின் சார்பில் கலந்துகொண்ட கருணாகரன் நாவலன் மற்றும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் ஆகியோர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் கருணாகரன் நாவலன் தெரிவிக்கையில், இலங்கையின் சிறந்த நீதிபதிகளுள் ஒருவரும் தற்துணிவாக அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது தீர்ப்புக்களை வழங்கி நீதியை எதிர்பார்த்த மக்களை ஆற்றுப்படுத்திய நீதிபதி இளஞ்…
-
-
- 4 replies
- 245 views
-
-
யாழ். சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்! பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று நண்பகல் செவ்வாய்க்கிழமை(21) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அடிப்படை கட்டுமானங்கள் மற்றும் வசதிகளை துரிதமாக மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர், முதல்கட்டத்தில் இந்தப் பணிகளை முழுமைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டனர…
-
-
- 3 replies
- 396 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் 2014 முதல் 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மொத்தமாக 451.3 பில்லியன் ரூபா நஷ்டமடைந்துள்ளதுடன், 2023 - 2024 காலப்பகுதியில் 3.8 பில்லியன் ரூபா இலாபம் அடைந்துள்ளது என நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் பதிலளித்ததாவது, ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனமானது 2014 - 2015 ஆண்டுகாலப்பகுதியில் 16.4 பில்லிய…
-
-
- 2 replies
- 292 views
-
-
வடமாகாணத்தில் கடமையாற்றி வந்த 28 பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், 34 படுகொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கால பகுதியில் 28 பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இலஞ்சம் பெற்றமை, மோசடிகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, வடக்கு மாகாணத்தில் கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கால பகுதியில் 34 படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் மேலும், 255 கொள்ளைகள், 501 திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், 70 பேர…
-
- 0 replies
- 194 views
-
-
புதிய அரசாங்கத்தின் கீழ் 90 நாட்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த சுவேந்திர ராஜன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் கண்டி மக்கள் மன்ற உறுப்பினர்கள் அவரை சந்தித்துள்ளனர். இதேவேளை பயங்கரவாத தடைச்சட்;டத்தை நீக்குவது குறித்த தனது தேர்தல் வாக்குறுதியை தேசிய மக்கள் சக்தி நீக்கவேண்டும் என மக்கள் மன்றம் வேண்டுகோள்விடுத்துள்ளது. இது தொடர்பில் மக்கள் மன்றம் மேலும் தெரிவித்துள்ளதாவது. புதிய அரசாங்கத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்து மாத்தளை நீதிவான் நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி சுப்பிரமணியம் சுவேந்திர ராஜனை கண்டி மக்கள் மன்ற உறுப்பினர்கள்இன்று சந்தித்தனர். . 15 ஆண்டுகளாக பய…
-
- 0 replies
- 356 views
-
-
கிளிநொச்சியில் இரணைதீவை அண்மித்த கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 இந்திய மீனவர்களுக்கும் 6 மில்லியன் ரூபா அபராதத்துடன் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட எட்டு மாத கால சிறைத்தண்டனையும் விதித்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 12ஆம் திகதி அதிகாலை இரணைதீவை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அதனையடுத்து, நீதிமன்ற கட்டளைக்கு அமைய இன்று வரை அந்த 8 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் இன்றைய தினம் (22)கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போ…
-
- 0 replies
- 101 views
-
-
(நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும், ஏனைய சர்வதேச அரங்குகளிலும் இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை சீனா தொடர்ந்து வழங்கிவந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அரசாங்கம், அந்த ஒத்துழைப்பு எதிர்வருங்காலங்களிலும் தொடரும் எனத் தெரிவித்துள்ளது. அத்தோடு 'ஒரே சீனக்கொள்கையின்' பிரகாரம் சீனாவின் இறையாண்மைக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டினை ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட அரங்குகளில் இலங்கை வெளிப்படுத்தும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின்போது ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் க…
-
- 0 replies
- 128 views
-
-
(எம்.மனோசித்ரா) வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய சதொச விற்பனை நிலையங்களில் பல்வேறு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. நிலக்கடலை கிலோ ஒன்றின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 995 ரூபாவாகும். சிவப்பு சீனியின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 300 ரூபாவாகும். உருளைக்கிழங்கின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 180 ரூபாவாகும். சிவப்பு கௌப்பியின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 765 ரூபாவாகும். நெத்தலியின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 940 ரூபாவாகும். பாஸ்மதி அரிசியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை…
-
- 0 replies
- 134 views
-
-
( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்தின் செயற்திட்டங்களின் பலவற்றின் சொற்கள் மக்களுக்கு புரியவதில்லை. திட்டத்தின் தலைப்பு புரியாத சந்தர்ப்பத்தில் அந்தத் திட்டம் எவ்வாறு வெற்றியளிக்கும் என்பது சந்தேகத்திற்குரியது. அஸ்வெசும என்பதன் அதன் தமிழாக்கம் என்ன, 16ஆம் திருத்தச் சட்டத்தில் வடக்கு கிழக்கில் ஆட்சி மொழி தமிழாகும். புதிய சொற்பதங்களை அறிமுகப்படுத்தும் போது அதற்குரிய தமிழ் பதங்களை அறிமுகம் செய்யுங்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உர…
-
- 0 replies
- 83 views
-
-
(எம்.வை.எம்.சியாம்) உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத்தொடர்ந்து அரசியலமைப்புக்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனத்தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற நேர்காணலில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடயம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கேள்வி - தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்துக்கு ஏற்ப நிறைவேற்று அதிகாரம் கொண…
-
- 0 replies
- 92 views
-
-
Published By: RAJEEBAN 22 JAN, 2025 | 04:57 PM லசந்த விக்கிரமதுங்க, வாசிம் தாஜூதீன், பிரகீத்எக்னலிகொட விவகாரங்களிற்கு நீதி வழங்குவேன் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க உறுதியளித்துள்ளார். தொலைக்காட்சி பேட்டியொன்றின் போது இதனை தெரிவித்துள்ள அவர் கடந்தகால குற்றங்கள் காலவோட்டத்தில் மறக்கப்படாமலிருப்பதை உறுதி செய்வது குறித்த தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். விசாரணைனகளை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், நீதித்துறை போன்ற நிறுவப்பட்ட கட்டமைப்புகள் உள்ளதை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விசாரணைகளிற்கு மிகவும் அவசியமான விசாரணையாளர்கள் பலர் …
-
- 0 replies
- 133 views
- 1 follower
-
-
Published By: VISHNU 22 JAN, 2025 | 06:25 PM (நா.தனுஜா) அடுத்துவரும் மூன்று மாதகாலத்தில் 3 பிரதான செயற்திட்டங்களுக்கென மொத்தமாக 200 மில்லியன் டொலர் நிதியுதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு உத்தேசித்திருப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத் தலைவர் மார்ட்டின் ரெய்ஸர் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் நாட்டுக்கு வருகை தந்திருந்த உலக வங்கியின் தெற்காசியப் பிராந்திய பிரதித்தலைவர் மார்ட்டின் ரெய்ஸர், இலங்கையில் தங்கியிருந்த இருநாட்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, ஏனைய அரசாங்க உத்தியோகத்தர்கள், தனியார்துறை முதலீட்டாளர்கள், அபிவிருத்திப்பங்…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
அரிசி ஆலைகளை இராணுவம் கண்காணிக்கும்! -ஜனாதிபதி தெரிவிப்பு. அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய செயற்படாத அரிசி ஆலைகளை கட்டுப்படுத்த இராணுவத்தை களமிறக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரிசி ஆலைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது ”பாரிய நெல் ஆலைகளின் உரிமையாளர்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படாவிட்டால், நெல் ஆலையில் உள்ள தமது கடைக்கு அரிசி கொண்டு செல்லும் வரை இராணுவ கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அத்துடன் அரிசி தேசிய சொத்து என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கம் இதுவரை எந்தவிதமான நியாயமற்ற விதிமுறைகளையும் ஏற்படுத்தவில்லை எனவும் மில்…
-
- 0 replies
- 131 views
-
-
சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு! சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதுடன், நுகர்வோர் இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இன்னிலையில் ரூ.1095 ஆக இருந்த நிலக்கடலை ரூ.995 ஆக குறைக்கப்பட்டுள்ளது 340 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பிரவுன் சீனி 300 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது அத்துடன் 210 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 180 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது 795 ரூபாவாக இருந்த சிவப்பு கௌபி கிலோ ஒன்று 765 ர…
-
- 0 replies
- 123 views
-
-
முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா மைத்திரி மகிந்த வசிக்கும் வீடுகளின் பெறுமதி என்ன ? அம்பலப்படுத்தினார் ஜனாதிபதி BatticaloaJanuary 22, 2025 முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்டுள்ள ஆடம்பர உத்தியோகபூர்வவாசல்ஸதலங்களினால்அரசாங்கத்திற்கு ஏற்படும் இழப்புகள் குறித்து ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி பேட்டியொன்றில் கருத்துதெரிவித்துள்ள ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் வழங்கிய வீட்டிலேயே வசிக்கின்றார் அந்த வீட்டின் மாதாந்த வாடகை பெறுமதி 2 மில்லியன் ரூபாய் என தெரிவித்துள்ள ஜனாதிபதி அதேபோன்று முன்னாள் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவும் 0.9மில்லியன் ரூபாய் இல்லத்தில் வசிக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார். …
-
- 5 replies
- 216 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில் நான் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு பாரிய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனடா நாட்டில் உள்ள தடை செய்யப்பட்டுள்ள அமைப்புடன் பேசுவதற்காகவே நான் சென்னை சென்றதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இவரை விசாரணை செய்தால் உண்மையை கண்டறியலாம். விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எவருக்கும் நெருக்கடி ஏற்படவில்லை என அய்யூப் அஸ்மின் குறிப்பிட்டுள்ள விடயத்துக்கும், சுமந்திரனின் கருத்துக்கும் தொடர்பு உள்ளதென சந்தேகிக்கிறேன். எனது சிறப்புரிமை மீறப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது ஆகவே விசாரணைகளை மேற்கொள்ளுங்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் …
-
-
- 11 replies
- 497 views
-
-
நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் பிரிந்து செல்லக் கூடிய ஒரு பொருளாதாரத் திட்டம் தயாரிப்பு! நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற முதற்கட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். செயற்திறனுடனும் திறமையாகவும் பொருளாதார செயல்முறையை கையாள்கையில் பொதுப் போக்குவரத்தை நிறுவுவதன் முக்கியத்துவம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்…
-
- 0 replies
- 164 views
-
-
22 JAN, 2025 | 01:08 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஒருவாரகாலப்பகுதியில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளோம் அவை முழு வீச்சில் இடம்பெறுகின்றன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி குறித்த விசாரணைகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதிஅர்ஜூனமகேந்திரன் சிங்கப்பூர் பிரஜைஎன்பதால் அவரை இலங்கைக்கு கொண்டுவருவது கடினமாக உள்ளது என தெரிவித்துள்ளார். எனினும் இந்த விவகாரத்தின் பாரதூரதன்மையை சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தி,அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண:டுவருவதற்கான முயற்சிகளில் ஈ…
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 21 JAN, 2025 | 10:32 AM முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் தனது உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி இந்த விடயத்தை தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்கு பதில் எழுத்து மூல வேண்டுகோளை விடுக்கவேண்டும் எனதெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையின் அனுமதியின் பின்னரே தனக்கு உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர் முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் எனது பாதுகாப்பிற்காக அதனை வழங்கினார்கள் அரசமைப்பின் கீழ் எனக்குஅதற்கான உரிமையுள்ளது என குறிப்பிட்டுள்ளார். நான் அந்த வீட்டிலிருந்து வெளி…
-
- 2 replies
- 198 views
- 1 follower
-