ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143349 topics in this forum
-
ரணிலுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த மாதம் வரும் என்கிறது பொது எதிரணி (ஆர்.யசி) மஹிந்தவுடன் இணைந்து போட்டியிட்டு இன்று நல்லாட்சி அரசாங்கத்தில் அமர்ந்துள்ள பலர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மீண்டும் எம்முடன் இணைவார்கள். மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் அமர்வார்கள். அவர்கள் தவிர்ந்த வேறு எவருக்கும் எமது அணியில் இடமில்லை என்று பொது எதிரணியினர் தெரிவித்தனர். ராஜிதவை அடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக அடுத்த மாதம் நம்பிகையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்தும், பொது எதிரணியின் அடு…
-
- 0 replies
- 227 views
-
-
மீனவர்களின் வலைகள் தீ வைப்பு : மட்டுவில் சம்பவம் மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்தொழிலாளர்களின் 20 இலட்சம் பெறுமதியான வலை இன்று அதிகாலை 1.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக மீனவர்களுக்கு இடையில் பல முரண்பாடுகள் ஏற்பட்டு கொண்டுவரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த இந்த தீ வைப்பு சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/23698
-
- 0 replies
- 226 views
-
-
சட்டவிரோத மரங்களை ஏற்றிவந்த லொறி விபத்தில் சிக்கியது.! Published by RasmilaD on 2017-08-28 11:25:34 சட்டவிரோத மரங்களை ஏற்றி வந்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கிரான் பாலத்தினுள் இன்று அதிகாலை விழுந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். செங்கலடி மணலாறு பகுதியில் இருந்து சட்டவிரோத மரங்களை கிரான் பகுதியினூடாக ஓட்டமாவடிக்கு கொண்டு வரும் வழியில் புலியாந்தகல் பகுதியில் வைத்து வாழைச்சேனை வனஇலகா அதிகாரிகள் கைது செய்வதற்காக துரத்தியுள்ளனர். அதன்போது அவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக வேகமாக வந்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கிரான் பாலத்தினுள் விழுந்துள்ளது. 10 அடி தொடக்கம் 12 அடி நீளம் கொண்ட முப்பதுக்கு மேற்பட…
-
- 0 replies
- 223 views
-
-
துன்னாலையில் கைதானோர் அடையாள அணிவகுப்பில் வடமராட்சி கிழக்கில் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததன் பின்னரான சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 36 சந்தேக நபர்கள் இன்று பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அடையாள அணிவகுப்பில் முற்படுத்தப்பட்டுள்ளனர். 6 பேர் கொண்ட குழுக்களாக அவர்கள் அணிவகுப்பில் முற்படுத்தப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. துன்னாலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். அதையடுத்து அந்தப் பகுதியில் இயல்பு நிலை குழம்பியது. பொலிஸ் வாகனம் மீதும், பொலிஸ் காவலரண் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பின்னர் துன்னாலைப் பகுதியில் பொலிஸாரும், சிறப்பு…
-
- 0 replies
- 143 views
-
-
சீதனக் கொடுமையால் இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்துத் தனது உயிரை மாய்த்த சம்பவம் யாழ். மாவட்டம், தென்மராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெற ஏற்பாடாகியிருந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டார் சீதனத்தை அதிகரித்துத் தரும்படி கேட்டதால் மனமுடைந்த பெண் தன் உயிரை மாய்த்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். 29 வயதான முன்பள்ளி ஆசிரியை ஒருவரின் வாழ்க்கையையே சீதனக் கொடுமை சிதைத்துள்ளது. திருமணத்துக்கான ஏற்பாடுகள் இடம்பெறும் நிலையில், சீதனம் போதாது சீதனத்தை அதிகரித்துத் தர வேண்டும் என்றும், அதிகரித்துத் தராவிட்டால் திருமணம் இடம்பெறாது என்றும் மணமகனின் உறவுகள் திடீரென நேற்று மணமகள் வீட்டாருக்குக் கூறினர் என்று மணமகளின் உறவி…
-
- 0 replies
- 320 views
-
-
வான் முச்சக்கரவண்டி விபத்து – 5பேர் படுகாயம் புதுமனைபுகுவிழாவிற்குச் சென்றுவிட்டு திரும்பிய முச்சக்கரவண்டி ஓமந்தையில் விபத்துக்குள்ளானதில் தந்தை இரு மகன் உட்பட 5பேர் படுகாயமடைந்துள்ளனர். முச்சக்கரவண்டி சாரதி ஆபத்தான நிலையில் அதிதீவிர சிக்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிக்சை பெற்று வருகின்றார். வவுனியா ஓமந்தை பறநட்டான்கல் பகுதியில் இன்று அதிகாலை 12.25மணிக்கு முச்சக்கரவண்டியுடன் சொகுசு வான் மோதியதில் 5பேர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிகாலை 12.25மணிக்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு வான் முச்சக்கரவண்டியுடன் மோதியதில் முச்சக்கரவண்டி கடுமையாக சேதமடைந்துள்ளது. இதில்…
-
- 0 replies
- 393 views
-
-
கிளிநொச்சி வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தொகுதி திறப்பு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மனநல மருத்துவ பிரிவுக்கான கட்டடத் தொகுதி மற்றும் வைத்திய நிபுணா்கள் விடுதி என்பன இன்று வட மாகாண முதலமைச்சர் மற்றும் வட மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபையின் 9 மில்லியன் ரூபா குறித்தொதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட மனநல மருத்துவ பிரிவு கட்டிடத் தொகுதியும் 20 மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்ட வைத்திய நிபுணர்கள் விடுதியும் இன்று திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சேவையினை விரிவுப்படுத்தும் வகையில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது மேற்…
-
- 0 replies
- 231 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இலங்கை வருகின்றது.! ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐந்து பேர் அடங்கிய குழு ஒன்று செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளது. இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்கு பின்னரான சூழல் தொடர்பில் கண்காணிக்கும் முகமாகவே அவர்கள் இலங்கைக்கு வரவுள்ளனர். குறித்த விஜயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான வதிவிட பிரதிநிதி போல் கொட்பிரி, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்ததன் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள களநிலைவரங்களை ஆராய்வதற்கென ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐந்து பேர் அடங்கிய குழு செப்…
-
- 0 replies
- 152 views
-
-
ஐ.நா. தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுங்கள் இந்தியா, அமெரிக்காவிடம் கூட்டமைப்பு வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொழும்பு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற அழுத்தத்தை பன்னாட்டுச் சமூகம் உறுதியாக வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது. இந்த வார இறுதியில் கொழும்புக்கு வருகின்ற அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் மற்றும் இந்தியாவின் அயலுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரைச் சந்திக்…
-
- 0 replies
- 141 views
-
-
முதலமைச்சருக்கு பக்கபலமாக இருக்க வேண்டிய தேவை எமக்குள்ளது ; புதிய சுகாதார அமைச்சர் வடமாகாண சபையின் மிகுதி காலம் மிகவும் குறைந்த காலமாக இருப்பதினால் இருக்கின்ற காலத்தினுள் சரியான திட்டங்களை மேற்கொள்ள சகலரது ஒத்துழைப்பும் தேவைப்படுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார். மன்னாரில் வைத்து ஊடகங்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கருத்த தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை முதலமைச்சரினால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் சுகாதார, சுதேச, வைத்தியத்துறை, சிறுவர் நன்னடத்தை ம…
-
- 0 replies
- 307 views
-
-
ரணிலுக்கு அருளாத மூகாம்பிகை அம்மன் மழையால் பயணம் தடைப்பட்டது. தோச நிவர்த்தி செய்வதற்காக இந்தியா சென்ற தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கம் நிறைவேறவில்லை. அதற்கான அருள் அவருக்குக் கிடைக்கவில்லை. சீரற்ற காலநிலை காரணமாக ஆலயத்துக்கு அவரால் செல்ல முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தோச நிவர்த்திக்காக இந்தியாவின் கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் நேற்று வழிபாடு நடத்துவதற்கு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டி ருந்தார். அதற்காக மூன்று நாள்கள் பயணமாக இந்தியா சென்றுள்ளார். கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் நேற்றுக் காலை 11 மணிக்கு நடைபெறும்சிறப்பு பூ…
-
- 0 replies
- 272 views
-
-
ஐ.தே.க.- சு.க.வுக்கு இடையில் டிசம்பரில் புதிய ஒப்பந்தம் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்த மாதம் நிறைவடையவுள்ளது. இதன்படி டிசம்பர் மாதம் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு கைச்சாத்திடப்படும் என மின்வலு மற்றும் மீள்புத்தாக்க பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்தம் அடுத்த மாதம் நிறைவடையவுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு குறித்து வினவிய போதே பிரதி அமைச்சர் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 179 views
-
-
எங்களைத் தண்டிப்பதற்காகவே புதிய நீதி அமைச்சர் நியமனம் என்னையும் எமது தரப்பையும் தண்டிக்கவே புதிய நீதி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எவ்வாறு செயற்படப்போகின்றார் என்பது குறித்து வேடிக்கை பார்க்கின்றோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். என்னை குற்றவாளி என கூறிக்கொண்டு உண்மையான குற்றவாளிகள் நல்லாட்சிக்குள் ஒளிந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முகத்துவாரம் ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹா விஸ்ணு ஆலயத்திற்கு தரிசனம் பெற சென்றிருந்தார். வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 207 views
-
-
நான் அமெரிக்க உளவாளியல்ல ; புதிய கடற்படை தளபதி தெரிவிப்பு இலங்கை கடற்படை மீதான போர்க்குற்றங்களை நான் மறுக்கின்றேன். எனினும் கடற்படை சீருடையில் குற்றங்கள் இடம்பெற்றிருக்குமாயின் அவர்களை தண்டிப்பதில் மாற்றுக் கருத்து இல்லை என புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா தெரிவித்தார். நான் ஒரு அமெரிக்க உளவாளி அல்ல. இந்த குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய கடற்படை தளபதியாக கடமை பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா நேற்று கடற்படை தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்டிருந்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அதில் ம…
-
- 16 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா குறித்து அனைத்துலக சமூகம் ஏமாற்றம் – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 18 மாதங்கள் கழித்தும், சிறிலங்கா அரசாங்கம் எந்த முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை என்பது அனைத்துலக சமூகத்தை ஏமாற்றமடையச் செய்துள்ளது என்று சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின், இராஜதந்திர விவகாரங்களுக்கான பிரதிநிதி போல் கொட்பிறி தெரிவித்துள்ளார். ‘சிறிலங்கா அரசாங்கம் கூடிய விரைவில் சிறப்பு நீதிமன்றம் ஒன்றையோ, நீதிப் பொறிமுறையையே அமைப்பதற்கான வாய்ப்பு எதுவும் தென்படவில்லை. தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 18 மாதங்கள் கழித்தும், சிறிலங்கா அரசாங்கம் எந்த முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை என்பது அனைத்துலக சமூகத்தை ஏமாற்றமடையச் செய்துள்ளது கடந்த ஆண்ட…
-
- 2 replies
- 445 views
-
-
முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று சிரமதானப் பணிகள் நடைபெற்றன என்று தெரிவிக்கப்பட்டது. சிரமதானப் பணிகளை பொது மக்களும், ஜனநாயக போராளிகள் கட்சியினரும் மேற்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/23401.html
-
- 1 reply
- 381 views
-
-
கிளிநொச்சி ஜெயந்திநகர் மகாதேவ ஆச்சிரம முதலாவது குருபீடாதிபதி ஸ்ரீமத் தவத்திரு வடிவேல் சுவாமிகளின் சீடனும் மகாதேவா ஆச்சிரமத்தின் இரண்டாவது குருபீடாதிபதியும் ஆன ஸ்ரீமத் தவத்திரு கணேசானந்தா மகாதேவ சுவாமிகள் மகா சமாதி எய்தியுள்ளார். இவர் இன்று நண்பகல் காலமாகியுள்ளார். கிளிநொச்சியில் உள்ள சைவ நிறுவனங்கள் மற்றும் மகாதேவ சைவச் சிறுவர் இல்ல ஸ்தாபகரும் மற்றும் சைவ அன்பர்களை சைவநெறியில் தழைத்தோங்க செய்தவரும் ஆவார். இவரின் அளப்பெரிய சேவைகளின் காரணமாக சைவமும், தமிழும் கிளிநொச்சியில் மேலோங்கி வளர்ந்துள்ளது. மேலும், இவரின் சமாதிக் கிரிகைகள் நாளை கிளிநொச்சி ஜெயந்திநகர் மகாதேவ ஆச்சிரமத்தில் நடைபெற உள்ளது என மகாதேவ ஆச்சிரம நிர்வாக உறுப்பினர்கள் தெரிவிக்கின்…
-
- 10 replies
- 1.5k views
-
-
சக்தி டிவி செய்திகள் 27 08 2017 , 8PM
-
- 0 replies
- 361 views
-
-
உயிலங்குளம் வீட்டுத்திட்டத்தில் இருந்த மக்கள் வௌியேற்றம் -சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு - துணுக்காய் - உயிலங்குளம் இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்ள மக்கள், அடிப்படை வசதிகள் இன்மை மற்றும் வீடுகள் ஆபத்தான நிலையில் காணப்படுதல் காரணமாக, இப்பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர். முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள உயிலங்குளம் கிராமத்தில், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட 50 வீட்டுத்திட்டத்தில், தற்போது 20 வரையான குடும்பங்களே வாழ்ந்து வருகின்றன. கடந்த 2012ஆம் ஆண்டு, மேற்படி இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 50 வீட்டுத்திட்டத்தின் மாதிரிக் கிராமத்தில…
-
- 0 replies
- 536 views
-
-
கொழும்பில் கற்க வாய்ப்பு -வி.தபேந்திரன் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள விசேட தேவை உடைய மாணவர்களும், விக்டரி விசேட தேவை உடைய மாணவர்களுக்கு கல்வி வழங்கும் நிலையத்தில் சேர்ந்து கொள்ள முடியும் என, அந்த நிலையத்தின் இணைப்பாளர் நித்தியா தெரிவித்துள்ளார். இது தொடர்பில், அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “கொழும்பு - 13, புளுமென்டல் வீதியிலுள்ள இப்பாடசாலையில், விசேட தேவை உடைய மாணவர்களை ஒன்றாக இணைத்து, கல்வி கற்பிப்பதுடன், அவர்கள் தமது தேவையை தாமே நிறைவு செய்யவும் பழக்கி விடப்படுகிறது. “அத்தகைய மாணவர்களிடையே ஒரு தோழமையை வளர்த்து, சமூகத்தில் ஒன்றிணைந்து வாழ்வதற்கும் குழந்தைகளின் தன…
-
- 0 replies
- 675 views
-
-
‘தொடர்பற்ற கல்வி முறைமை, நடுத்தெருவுக்கு கொண்டுசெல்லும்’ ஒன்றுடன் ஒன்று தொடர்பு அற்ற நிலையில் மேற்கொள்ளப்படுகின்ற கல்வி முறைமை, மாணவ - மாணவியரை நடுத்தெருவுக்குக் கொண்டு செல்வதுடன், அரசாங்கத்தின் பொருளாதார மேம்படுத்தல் கொள்கைகளும் வெற்றி பெறாமல் போகின்றன என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஜெற்விங் ஹொட்டலில், இன்று (27) காலை நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட கல்விக் கொள்கை மாற்றங்கள், எத்தனையோ திறமை மிக்க மாணவர்கள் சர்வதேச தரத்தில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்குத் தடை…
-
- 0 replies
- 260 views
-
-
இலங்கையில் இருந்து, கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி 45 கிலோகிராம் தங்கத்தை இந்தியாவுக்கு கடத்திச் செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் அந்த தங்கம் வட பிராந்திய கடற்படை தளபதியின் உத்தரவின் அடிப்படையில் சுங்க திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. ரணதீர என்ற கப்பல் மூலம் வடபகுதி கடலில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்த தங்கம் கைப்பற்றப்பட்டது. இருப்பினும் இந்த நடவடிக்கையில் பங்கேற்ற கடற்படையினர் மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய சிறப்பு கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தேடுதல் நடத்தப்பட்டமை சம்பந்தமாக கடற்படை வெளியிட்ட அறிக்கையில் காணப்பட்ட குறைபாடு…
-
- 3 replies
- 455 views
-
-
கம்பவாரிதி ஜெயராஜ் சைவத் தமிழர்களின் புனிதமான வணக்கத்திற்குரிய அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தைக் கேலிச் சித்திரமாகப் பயன்படுத்தியுள்ளமைக்கு அகில இலங்கை சைவ மகா சபை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அவர் தனது செயலுக்காகச் சைவத் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். தனது இணையத்திலிருந்து குறித்த படத்தை நீக்க வேண்டும் எனவும் அகில இலங்கை சைவ மகாசபை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அகில இலங்கை சைவ மகா சபை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது. கம்பவாரிதி ஜெயராஜ் சைவத் தமிழர்களின் புனிதமான வணக்கத்திற்குரிய அம்மை அப்பர்களான சிவன் - உமை இணைந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தை இலங்கை ஆட்சியாளரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில…
-
- 2 replies
- 803 views
-
-
திலீபனின் தூபி நல்லூரில் துப்புரவு தியாகதீபம் திலீபனின் நினைவு நாள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் நல்லூரில் அமைந்துள்ள நினைவுத் தூபியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்றுத் துப்பரவு செய்துள்ளனர். தியாக தீபத்தின் நினைவுநாளை கடந்த ஆண்டு ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன முன்னெடுத்திருந்த நிலையிலேயே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இந்தத் துப்புரவு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி வீரச்சாவ டைந்த தியாக தீபம் திலீபனின் நினைவுநாள் அடுத்த மாதம் 15ஆம் திகதி…
-
- 2 replies
- 610 views
-
-
அண்மையில் தென்னிந்திய நடிகர் அஜித்தின் விவேகம் படம் உலகெங்கிலும் வெளியாகியது. அத்திரைப்படம் யாழ்ப்பாணத்திலும் சில திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், நடிகர் அஜித்தின் இரசிகர்கள் அவர்மீது கொண்ட மோகத்தினால், யாழ் நகரில் அவரது கட்டவுட்டினை உந்துருளிகளில் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். இன்றைய இத்தலைமுறையினரின் இச்செயற்பாடானது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மாபெரும் விடுதலைப் போராட்டம் ஒன்று நடந்த மண்ணில், வியப்பூட்டும் கதாநாயகர்கள் வாழ்ந்த மண்ணில் நடிகர்களுக்கு விழா எடுக்கும் தலைமுறை வளர்வது யாழ். மக்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இவ்வாறு நடிகர்களுக்கு விழாவெடுக்கும் சம்பவங்கள் அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்துகொண்ட…
-
- 9 replies
- 1.1k views
-