Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஊடகவியலாளர்கள் பண மோசடியெனச் செய்தி; விசாரணைக்கு பூஜித் உறுதி -எம்.றொசாந்த் “யாழ். ஊடகவியலாளர்கள் மூவர், துபாயில் பண மோசடியில் ஈடுபட்டதாக, சிங்கள இணையத்தளமொன்றில் வெளியாகிய செய்தி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உறுதி வழங்கியுள்ளார். யாழ். ஊடகவியலாளர்கள் மூவர், துபாயில் பண மோசடியில் ஈடுபட்டதாக, சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது. துபாயில் உள்ள பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில், இலங்கையைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் பணியாற்றியதாகவும், அவர்கள் அந்த நிறுவனத்தின் 1,198,000 துபாய் டினாரை மோசடி செய்ததாகவும், செய்தி வெளி…

    • 2 replies
    • 411 views
  2. பெற்றோரை இழந்து 31 சிறுவர்கள் நிர்க்கதி - நடராசா கிருஸ்ணகுமார் கிளிநொச்சி - கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்கின்ற 8,203 சிறுவர்களில், தாயையும் தந்தையும் இழந்து 31 சிறுவர்கள் உள்ளனரென, பிரதேச செயலகப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தந்தையை மட்டும் இழந்த சிறுவர்கள் 325 பேரும், தாயை மட்டும் இழந்த சிறுவர்கள் 40 பேரும், தந்தையைப் பிரிந்து வாழும் சிறுவர்கள் 13 பேரும், தாயைப் பிரிந்து வாழும் சிறுவர்கள் 12 பேரும், மாற்று வலுவுள்ள சிறுவர்கள் 65 பேரும், மனவளர்ச்சி குன்றிய சிறுவர்கள் 03 பேரும், சிறுவர்கள் இல்லங்களில் 96 சிறுவர்களும், சீர்திருத்தப் பாடசாலைகளில் 13 …

  3. தமிழர்கள் வாழ்கின்ற தாயகப் பிரதேசத்தில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தாமாக உருவானதாக நாம் கருதவில்லை. திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதொன்றாகவே காணப்படுகிறது என வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்துள்ளார். இதனை வலுப்படுத்தும் முகமாகத் தான் யாழ். குடாநாட்டிற்கு வருகை தந்த இலங்கையின் பொலிஸ்மா அதிபர் கொக்குவில் பகுதியில் பொலிஸார் மீது நேற்று முன்தினம் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலுடன் முன்னாள் போராளிகளைத் தொடர்புபடுத்திக் கருத்துக்கள் கூறியிருக்கின்றார். இன்று செவ்வாய்க்கிழமை (01) முற்பகல் யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் எமது செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவித்…

    • 1 reply
    • 254 views
  4. காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர் முன்னாள் போராளி – முப்படைகளையும் களத்தில் இறக்கி கைது செய்வோம். – காவல்துறைமா அதிபர் சூளுரை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொக்குவில் பகுதியில் காவல்துறையினர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடத்தியவர்களில் பிரதான சந்தேகநபர் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் எனவும் தற்போது ஆவா குழுவுடன் சேர்ந்து இயங்கும் நபர் என காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட காவல்துறைமா அதிபர் யாழ்.தலைமை காவல் நிலையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடாத்தி இருந்தார். அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , …

    • 11 replies
    • 731 views
  5. சுவிஸ் மாணவி பாலியல் துஷ்பிரயோகம் ; முச்சக்கரவண்டிச் சாரதி கைது சுவிஸிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த 22 வயதுடைய மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவி அநுராதபுரத்தில் இரவுநேரக் களியாட்டங்களில் கலந்துகொண்டு விட்டு, பின்னர் தான் தங்கியிருந்த விடுதிக்கு செல்ல முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு நிறுத்தி அதில் ஏறியுள்ளார். அச் சந்தர்ப்பத்தில் குறித்த நபர் மாணவியை விடுதிக்கு அழைத்துச் செல்லாமல் வேறு இடத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். முச்சக்கரவண்டி சாரதி குறித்த சுவிஸ் மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்…

    • 1 reply
    • 353 views
  6. சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய மதவாச்சி மாமாவுக்கு கடூழிய சிறை வவுனியா போகஸ்வேவ பிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய மதவாச்சி மாமா என அழைக்கப்படும் முத்துபண்டாகே செனரத் அனுர சாந்த சரத்குமார என்ற நபருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று 27 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி வவுனியா போகஸ்வெவே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை கடத்தி வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முத்துபண்டாகே செனரத் அனுர சாந்த சரத்குமார (வயது 56) என்பவரை வவுனியா பொலிஸார் கைது செய்து வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியதன் அடி…

  7. பிரித்தானிய மகாராணியிடமிருந்து இளைஞர் தலைமைத்துவ விருதுவென்ற இரு இலங்கையர்கள் இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் பிரித்தானிய மகாராணியிடம் இருந்து விருதுவென்ற இலங்கையர்களான ரகிதமாலேவன மற்றும் செனெல்வன்னியாரச்சி ஆகிய இரு இளைஞர்களும் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். இந்த இரு இளைஞர்களும் இலங்கைக்கு பெற்றுத்தந்துள்ள பெருமையை பாராட்டிய ஜனாதிபதி, அவர்களது எதிர்காலத்திற்காக தனது ஆசிகளை தெரிவித்தார். பொதுநலவாய நாடுகளில் உள்ள மக்களிடம் நிலையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் தனிப்பட்டதிறன்களை பொதுமக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்காக பயன்படுத்தும் இளைஞர் யுவதிகளை அடையாளம் காண்பதற்காக இந்…

  8. நல்ல தெரிவு இன்றி அல்லாடும் மக்கள் அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்­தத்­தில் கொழும்பு அரசு கையெ­ழுத்­திட்­ட­தைத் தொடர்ந்­தும், அண்­மை­யில் பெற்­றோ­லி­யத் துறை ஊழி­யர்­கள் வேலை நிறுத்­தத்தை அறி­வித்­த­தும் படை­யி­ன­ரைக் கள­மி­றக்கி நில­மை­யைக் கட்­டுப்­பாட்­டில் கொண்­டு­வர முயற்­சித்­ததை அடுத்­தும் அரசு மீதான எதிர்ப்­பலை எகி­றி­யி­ருக்­கி­றது. கிட்­டத்­தட்ட எல்லா ஊட­கங்­க­ளும் அரச எதிர்ப்­புச் செய்­தி­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கும் நில­மையே இருக்­கி­றது. ஊட­கங்­கள் அர­சுக்கு எதி­ரா­கச் செயற்­ப­டு­கின்­றன என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் ஏற்­க­னவே குற்­றஞ் சாட்­டி­யி­ருக்…

  9. மண் அகழ்வில் பெறப்பட்ட நிதி எங்கே? – சுமந்திரன் எம்.பி. கேள்வி வடமராட்சி கிழக்கில் அகழப்பட்ட மண் மூலம் பெறப்பட்ட நிதி எங்கே? என்று கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். வடமராட்சி, மருதங்கேணி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அதிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். மகேஸ்வரி நிதியத்துக்கு எதிரான வழக்கில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் மண் அகழ அனுமதி பெறப்பட்டுள்ளது என்று வழக்கில் நீதிமன்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் மகேஸ்வரி நிதியம் சட்டத்துக்குப் புறம்பான வகையில் பெற்றுக்கொண்ட நிதியை மீள ஒப்படைக்குமாறு நீதிமன்று குறிப்பிடவில்லை. புத…

  10. வாக்­கு­று­தி­க­ளுக்கு ஏற்ப அர­சாங்கம் துணிந்து அர­சியல் தீர்வை முன்­வைக்க வேண்டும் சம்­பந்தன் வலி­யு­றுத்தல் ; சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு அவ­சியம் என்­கிறார் (திரு­கோ­ண­மலை நகர்) ஒரு காலத்தில் இலங்கை மீது நல்­ல­பிப்­பி­ரா­யத்தை சர்­வ­தேசம் கொண்­டி­ருக்­க­வில்லை. அந்­நி­லைமை தற்­பொ­ழுது மாறி­யுள்­ளது. நம்­பிக்­கை­களும் நல்­ல­பிப்­பி­ரா­யமும் தொடர்ந்து நீடிக்­க­வேண்­டு­மாயின் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை துணிந்து இலங்கை அரசு முன்­வைக்க வேண்டும் என்று எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். தேசிய ஒருங்­கி­ணைப்பு நல்­லி­ணக்க அமைச்சின் ஏற்­பாட்டில் திரு­கோ­ண­மலை இந்து கலா­சார மண்­ட­பத்தில் மாவட்ட அர­சாங்க அதிபர்…

  11. யாழ். நல்லூரில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று அல்ல என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், இந்த துப்பாக்கிச்சூடு நீதிபதியை இலக்கு வைத்ததா? இல்லையா? என்பதை விசாரணை செய்ய வேண்டும், ஆனால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இது திடீரென ஏற்பட்ட சம்பவமாகவே உள்ளது. திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பூரண விசாரணைகள் நடைபெறுகின்றன. இதனால் மேலதிகமாக என்னால் எதையும் கூறமுடியாது என்றும் க…

    • 0 replies
    • 312 views
  12. தமிழ் வர்த்­த­கரின் ரூ.26 கோடி பெறுமதியான காணியை போலி உறுதி ஊடாக விற்க முயற்சி பம்­ப­லப்­பிட்டி பகு­தியில் தமிழ் வர்த்­தகர் ஒரு­வரின் 26 கோடி ரூபா பெறுமதியான காணியை போலி காணி உறுதிப் பத்­திரம் ஊடாக 5 கோடி ரூபாவுக்கு விற்­பனை செய்ய முயன்ற திட்­ட­மிட்ட கும்பல் ஒ ஒன்­றினை கொழும்பு மோசடி தடுப்புப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர். அந்த திட்­ட­மிட்ட கும்­ப­லி­ட­மி­ருந்து மேலும் நூற்றுக் கணக்­கான ஆவ­ணங்கள் மீட்­கப்­பட்­டுள்ள நிலையில் இத்­த­கைய மோசடி நட­வ­டிக்­கைகள் ஏதும் இந்த கும்­பலால் அந்த ஆவ­ணங்­களை பயன்­ப­டுத்தி முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளதா என்­பதைக் கண்­ட­றிய விசேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த சம்­பவம் தொடர்பில் …

    • 4 replies
    • 553 views
  13. கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். உயர்தர பரீட்சை எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்தப் பரீட்சையில் மூன்று இலட்சத்து 15 ஆயிரத்து 227 மாணவர்கள் தோற்றவுள்ளனர். 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இந்த மாதம் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. மூன்று இலட்சத்து 56 ஆயிரத்து 778 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இரண்டு பரீட்சைகளுக்கு முன்னரும் பாடசாலை சூழலை சுத்தப்படுத்துமாறு சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு அதிபர்களுக்கும் கல்வ…

    • 0 replies
    • 231 views
  14. படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தை அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதன் போது மயிலிட்டி முறைமுகத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது குறித்தும் மீனவர்களுடன் அமெரிக்க துணை தூதுவர் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பின் போது அரசியலமைப்பு தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் காணாமல் போனோர் செயலகத்தின் செயற்பாடுகள் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக …

    • 0 replies
    • 381 views
  15. ஆயுத குழுக்கள் மீது எதிர்த்­தாக்­குதல் நடத்த வடக்கு பொலிஸார் அச்சம் யாழ்ப்­பா­ணத்தில் பொலிஸார் மீதான தாக்­குதல் அதி­க­ரித்­துள்­ளது. தீவி­ர­வா­தி­களின் ஆரம்ப காலமும் இவ்­வாறுதான் இருந்­தது. எனவே பிர­தமர் பார­தூர தன்­மையை விளங்­கிக்­கொள்­ளா­விடின் விலகி செல்ல வேண்டும் என தூய்­மை­யான ஹெல உறு­மய அமைப்பு தெரி­விக்­கின்­றது. அதே­நேரம் வடக்­கிலுள்ள பொலிஸார் மீது ஆயுத தாக்­குதல் நடத்­து­கின்ற போது எதிர்­தாக்­குதல் நடத்த பொலிஸார் அச்­சப்­ப­டு­கின்­றனர் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். கொழும்பில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்பன்பில மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். …

    • 2 replies
    • 433 views
  16. மன்னார் மனிதப் புதைகுழி: நீதவானுக்கு எதிராக நீதிச்சேவை ஆணைக்குழுவில் மனுத்தாக்கல் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி வழக்கில் மன்னார் மாவட்ட நீதவானுக்கு எதிராக விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் நீதவான் ஆசீர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஐா, பாதிக்கப்பட்டவர்களுக்கு சார்பாக செயற்படுவதாக தெரிவித்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதவான் ஆசீர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஐா குற்ற விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாகவும், இந்த வழக்கை வ…

    • 4 replies
    • 411 views
  17. வாக்கு தவறிவிட்டார்அரச தலைவர் மைத்திரி அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்­தம் ஓகஸ்ட் முத­லாம் திகதி வரை கைச்­சாத்­தி­டப்­ப­ட­மாட்­டாது என அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தங்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தியை மீறி­யுள்­ளார் என பெற்­றோ­லி­யக் கூட்­டுத்­தா­ப­னத்தின் தொழிற்­சங்­கச் சம்­மே­ள­னம் குற்­றஞ்­சு­மத்­தி­யி­ருக்­கின்­றது. இந்த ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­ப­டு­வ­தற்கு முன் தங்­க­ளது சம்­மே­ள­னத்­து­டன் கலந்­து­ரை­யா­டப்­போ­வ­தாக வாக்­கு­றுதி வழங்­கிய அரச தலை­வர், அவ­சர அவ­ச­ர­மாக இந்த ஒப்­பந்­தத்தை நிறை­வேற்­றி­ யி­ருப்­பது பெரும் நம்­பிக்­கை­த்­ துரோ­கம் என­வும், நாட்­டின் தலை­வ­ரொ­ரு­வர் ஒரே வாரத்­தில் தான் கொடுத்த வாக்­கு­…

  18. 30 வருடங்களின் பின் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்ட வீதி வவுனியா தெற்கிலுப்பைக்குளம் மற்றும் மாமடுசந்தியை இணைக்கும் ஒளவையார் வீதியானது கடந்த முப்பது வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வீதி நேற்று கிராம மக்களின் முயற்சியால் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. குறித்த வீதியை புனரமைக்க வவுனியா பிரதேசசெயலம் 4 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கியுள்ள நிலையில், வவுனியா நகரசபையினரின் அனுமதியுடனும் மக்களின் பங்களிப்புடனும் குறித்த வீதி திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட வீதியானது ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் சுமார் இரண்டு கிலோமீற்றர் சுற்றி…

  19. கிளிநொச்சியில்யில் இடம்பெற்ற விபத்தில் சாரதி உட்பபட நான்குபேர் படுகாயம் கிளிநொச்சி திரேசா ஆலயத்திற்கு முன்பாக தனியார் பேருந்து ஒன்றும் மகேந்திரா ரக பிக்கப் ஒன்றும் மோதுண்டதில், மகேந்திரா ரக வாகனத்தில் வந்தவர்கள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சாரதிக்கு கை ஒன்று முறிவடைந்துள்ளதுடன் பலத்த காயங்களும் காணப்படுகின்றன. மற்றைய மூவரிற்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதையடுத்து குறித்த நால்வரையும் வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்தனர். குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, டிப்போ சந்தியில் இருந்து கரடிப்போக்கு நோக்கி மிக வேகமாக சென்றுகொண்டிருந்த மகேந்திரா ரக…

  20. ‘ஆட்சி பீடமேற கனவு காண வேண்டாம்’ பாரா­ளு­மன்­றத்தில் தலை­களின் எண்­ணிக்­கையை மாற்றி ஆட்சி பீடம் ஏறி விடலாம் என்று கனவு காண வேண்டாம். தவறு செய்­வோ­ருக்கு நாட்டில் இருப்பு இல்லை. பௌத்த புண்­ணிய பூமி­யான இந்த நாட்டில் நியா­ய­மான சமூ­கத்தை நோக்கி பய­ணிப்­ப­வர்கள் மாத்­தி­ரமே நிலைத்­தி­ருக்க முடியும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். குடும்ப ஆதிக்­கத்தை விதைத்து , ஆட்சி அதி­கா­ரத்தை துஷ்­பி­ர­யோகம் செய்­தனர். இவர்கள் தற்­போது 113 ஆச­னங்­களை பெற்று பாரா­ளு­மன்­றத்தில் அதி­கார்தை நிரூ­பிக்க முயற்­சிக்­கின்­றனர். அதற்கும் ஜனா­தி­ப­தியின் ஆசிர்­வாதம் வேண்டும் என்­பதை அவர்கள் வேண்டும் என­லுவும் குறிப்­பிட்டார். ஹிங்­க…

  21. இந்து மகளிர் கல்லூரியின்புதிய கட்டடத் திறப்பு விழா யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடத் தொகுதி நேற்றுத் திறக்கப்பட்டது. அமெரிக்த் தூதரகத்தின் ஐக்கிய மாநிலங்களின் பிரதி நிதி ரொபேர்ட் ஹில்டன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து கட்டடத்தைத் திறந்தனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அனுசரணையுடன், அமெரிக்க தூதரகத்தின் ஐக்கிய மாநிலங்களின் நிதி உதவியுடன் இந்தக் கட்டம் அமைக்கப்பட்டது. கட்டடத் தொகுதியின் தளபாடங்கள் 15 மில்லியன் ரூபா செலவிலும், கட்டிட தொகுதி 75 மில்லியன் ரூபா செலவும் அமைக்கப்பட்டன. .நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர…

  22. சபையில் எம்.பிக்களுக்கு சீனாவின் மடிக்கணினிகள் இந்த வாரம் பொருத்தப்படும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 225 பேரும், நாடா­ளு­மன்­றத்­துக்­குள் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக இணைய வச­தி­க­ளு­டன் கூடிய மடிக்­க­ணி­னி­கள் பொருத்­தப்­ப­ட­வுள்­ளன. நாடா­ளு­மன்ற அவை­யில், இந்த வாரத்­தில் இருந்து இணைய வச­தி­க­ளு­டன் இந்த மடிக் கணி­னி­க­ளைப் பயன்­ப­டுத்த முடி­யும் என்று, நாடா­ளு­மன்ற நிதிப் பணிப்­பா­ளர் ஜெய­சாந்த தெரி­வித்­துள்­ளார். நாடா­ளு­மன்ற அவை­யில் உள்ள உறுப்­பி­னர்­க­ளின் ஆச­னங்­க­ளில் இந்த மடிக்­க­ணி­னி­கள் பொருத்­தப்­ப­டும். இதற்­கா­கச் சீனா அன்­ப­ளிப்­புச் செய்த 265 கணி­னி­கள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நாடா­ளு­மன்­றத்­துக்கு வந…

  23. கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 31-07-2017

  24. சக்தி டிவி செய்திகள் 31th July 2017, 8PM

  25. கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா 2017 கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா-2017, மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி வளாகத்தில், இன்று (31) ஆரம்பமாகியது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், தமிழ், முஸ்லிம், பாரம்பரிய கலை, கலாசார,விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில், பாடசாலை மாணவர்களின் பண்பாட்டுப் பேரணி இடம்பெற்றது. கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழில்நுட்பக்கல்வி முன்பள்ளிக்கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்…

    • 1 reply
    • 522 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.