ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143368 topics in this forum
-
பாரத பிரதமர் இன்று வருகிறார் : கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் வரவேற்புக்கு ஏற்பாடு (ரொபட் அன்டனி) இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை மாலை இலங்கைக்கு வருகை தருகின்றார். வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாக அமைந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் ஆகியோரை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த…
-
- 1 reply
- 501 views
-
-
‘இந்தியாவுக்குத் தடிமல் பிடித்தால் இலங்கைக்குக் காய்ச்சல் அடிக்கும்’ “இந்தியாவுக்குத் தடிமல் பிடித்தால் இலங்கைக்குக் காய்ச்சல் அடிக்கும் என்பது, படித்தவர்களும் பரம்பரைச் சரித்திரம் தெரிந்தவர்களும் அறிந்த உண்மையாகும்” என்று குறிப்பிட்டுள்ள சௌமிய இளைஞர் நிதியம், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடியைப் பறக்கவிடுமாறு, ஒப்பாரி ஓலமிடுவது நகைப்புக்குரியதாகும்” என்றும் தெரிவித்துள்ளது. “1988 மற்றும் 1989 களில் இந்தியப் பொருட்களை இலங்கையில் தடைசெய்ய வேண்டும் என்று சுவரொட்டி ஒட்டியவர்கள் தான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கறுப்புக்கொடி காட்ட வேண்டும் என்று கூச்சலும் கோசமும் போடுகின்றனர்” என்றும் க…
-
- 1 reply
- 342 views
-
-
மைத்திரியை எதிர்க்க யாருக்கும் அருகதை இல்லை?-சரவணபவன் கேள்வி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நெருங்கி வருகிறது. கூடவே அது தொடர்பான சர்ச்சைகளும் கிளம்புகின்றன. அன்றைய தினத்தில் முல்லைத்தீவுக்கு மைத்திரி வருகை தருவதற்கு இருக்கிறார் என்ற செய்தி வெளியானதும் தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புக்கள் எழுந்திருந்தது. இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உடனடியாக வருகையை கைவிடவேண்டும் என அறிக்கை விட்டார் அதற்கு பதிலளிக்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையை கடுமையாக சாடியுள்ளதோடு அது தொடர்பாக ஜெனாதிபதியை எதிர்ப்பதற்கு இவர்களுக்…
-
- 0 replies
- 329 views
-
-
கூட்டமைப்பின் எதிர்ப்பையும் மீறி வடக்கு - கிழக்கில் 6000 பொருத்து வீடு - அனுமதி வழங்கியது அமைச்சரவை வடக்கு - கிழக்கில் முன்நிர்மாணிக்கப்பட்ட - பொருத்து வீட்டை அமைப்பதற்கு நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தலா 15 லட்சம் ரூபா செலவில் 6 ஆயிரம் வீடுகள் இதற்கு அமைவாக அமைக்கப்படவுள்ளன. முன்நிர்மாணிக்கப்பட்ட - பொருத்து வீட்டை, வடக்கு - கிழக்கில் அமைப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. வடக்கு மாகாண சபையும் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இவற்றைப் புறமொதுக்கி, முன் நிர்மாணிக்கப் …
-
- 0 replies
- 320 views
-
-
நீளமான புத்தர் மணற் சிற்பம்: பத்தரமுல்லையில் உலகிலேயே மிகவும் நீளமான புத்தரின் மணற் சிற்பம், இலங்கையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சயன நிலையிலுள்ள புத்தரின் மணற் சிற்பமே இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லை, நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள தியவன்ன ஓயாவுக்கு அண்மையிலேயே இந்த மணற் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய மணற் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் என்பவரினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த சிற்பத்தை எதிர்வரும் 14ஆம் திகதி வரை, காலை 10 மணிமுதல் இரவு 7 மணிவரையிலும் பார்வையிடலாம். புத்தர் பெருமான் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல்வகை வடிவங்களுள் மிகவும் பிரசித்தமானதொரு நிலையே சயன நிலையிலுள்ள புத்தர் சிற்பமாகும். இந்த …
-
- 0 replies
- 571 views
-
-
மோடியின் நிகழ்வில் மஹிந்த (க.கமலநாதன்) பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை முன்னிலைப்படுத்தி வெளியாகும் கறுப்புக்கொடி செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் வெசாக் தின நிகழ்வுகளில் நானும் கலந்துகொள்வேன். எனக்கு எந்த தடையும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல, கோனகல்தெனிய, அரியசிந்தாசிரம விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்…
-
- 0 replies
- 364 views
-
-
மோடியின் நேரடி பாதுகாப்புக்கு எஸ்.பி.ஜி. சிறப்புப் படையணி (எம்.எப்.எம்.பஸீர்) சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் பங்கேற்க இன்று இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடு களும் பூரணப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி பாதுகாப்பானது, இந்தியாவில் இந்திய பிரதமருக்கு பாதுகாப்பளிக்கும் எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு ஊடாகவே முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் தேவையான எஸ்.பி.ஜி. சிறப்பு பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தலை…
-
- 0 replies
- 410 views
-
-
அரசியல்வாதிகளின் காலில் விழவில்லை புதிய துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன். தெரிவிப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியை நான் அரசியல்வாதிகளின் காலில் வீழ்ந்துதான் பெற்றுக்கொண்டேன் என்று யாழ். ஆயர் கூறியிருப்பது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று நிராகரித்திருக்கிறார் புதிய துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன். ஆயரின் கருத்தைத் தான் வன்மையாகக் கண்டிக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார். புலனாய்வுப் பிரிவின் அறிக்கையின் அடிப்படையிலேயே பேராசிரியர் சிறி சற்குணராஜாவுக்கு துணைவேந்தர் பதவியை அரச தலைவர் மைத் திரிபால சிறிசேன வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். சில…
-
- 0 replies
- 334 views
-
-
மலையகத்தில் கற்பிக்க விரும்பும் பட்டதாரிகள் உடனடியாக வாருங்கள் நியமனம் வழங்கத் தயார் - அமைச்சர் இராதாகிருஷ்ணன் கணித, விஞ்ஞான உயர்தர மாணவர்களுக்குக் கற்பிக்கக் கூடிய பட்டதாரிகள் நாட்டில் எங்கிருந்தாலும் பரவாயில்லை. மலையகத்தில் உங்களுக்கு ஆசிரியர் தொழில் செய்ய விருப்பம் என்றால் உடனடியாக என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கான நியமனத்தை நான் பெற்றுத் தருகின்றேன். இந்தியாவிலிருந்து பட்டதாரிகளைக் கொண்டு வருவதை விமர்சிப்பவர்களுக்கு நான் சவால் விடுகின்றேன். முடிந்தால் அறிக்கை விடாமல் உயர்தரக் கணித, விஞ்ஞான மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கக் கூடிய பட்டதாரிகளைக் கொண்டு வந்து தாருங…
-
- 2 replies
- 359 views
-
-
யாழ்ப்பாண நகரில் மழை யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று மாலை மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரமாக மழை தொடர்ந்து பொழிகின்றமை குறிப்பிடத்தக்கது. http://uthayandaily.com/story/2134.html
-
- 2 replies
- 552 views
-
-
இந்திய பிரதமரின் வருகையை முன்னிட்டு ஹெலிகொப்டர் ஒத்திகை! (படங்கள்) ஹட்டன் டன்பார் மைதானத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி மலையகத்துக்கு வருகைத்தரவுள்ள இந்திய பிரதமர் மற்றும் முக்கியஸ்தர்கள் ஹெலிகொப்டரில் தரையிறங்குவது தொடர்பான ஒத்திகை நிகழ்வு இன்று நடைபெற்றது. இதன் போது இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஹெலிக்கொப்டர்கள் டன்பார் மைதானத்தில் தரையிறக்கப்பட்டன. டன்பார் மைதானத்துக்கு யாழப்பாணத்துக்கான இந்திய தூதுவர் நடராஜன் , கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் , இந்திய உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். Tags http://www.virakesari.lk/article/19861 …
-
- 3 replies
- 532 views
-
-
சக்தி டிவி செய்திகள் 10th May 2017, 8PM
-
- 0 replies
- 209 views
-
-
சட்டம் ஒழுங்கு குறித்த கூட்டத்தை வடக்கு முதலமைச்சர் நடத்தாதது ஏன்? சபையில் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி மாவட்டச் செயலரால் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாகவும் சட்ட ஒழுங்கு தொடர்பாகவும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடிகிறது. அதேபோன்று மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர னால் சட்ட ஒழுங்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஏன் கலந்துரையாட முடிய வில்லை? இவ்வாறு வடக்கு மாகாண சபையில் கேள்வியெழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா. வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில் உறுப்பினர் லிங்கநாதனால், வடக்கிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பசு மாடுகள் கடத்தப்படுவதைத் தடுக்க அவ…
-
- 2 replies
- 360 views
-
-
புலி உறுப்பினர்களின் வாக்குமூலம் சட்டரீதியானது அநுராதபுரம் வானூர்தித் தாக்குதல் வழக்கு அனுராதபுரம் விமானப்படை முகாம் மீது வான் மற்றும் தரை வழியாகத் தாக்குதல் நடத்தினார்கள் என்று குற்றச்சாட்டப்பட்டுள்ள, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர் வழங்கிய வாக்குமூலம் சட்டப்படியானது என்று அனுராதபுரம் மேல் நீதிமன்று நேற்று அறிவித்தது. இது தொடர்பான வழக்கு அநுராதபுர மேல் நீதிமன்றில் நீதிபதி மகேஸ் வீரமன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அனுராதபுரம் விமானப்படை முகாம் மீதான தாக்குதல் காரணமாக சுமார் 400 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் …
-
- 1 reply
- 364 views
-
-
ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிங்கள இளம் பாடகரின் முடிவு! சிங்கள மொழியில் பல பாடல்களுக்குச் சொந்தக்காரரான பிரபல இளம் சிங்களப் பாடகர் மொஹான் விக்கிரமசூரிய பௌத்த துறவியாகிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரத்தினபுரியைச் சேர்ந்தவர் மொஹான் விக்கிரமசூரிய. இவர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் பணிபுரிந்து வந்தவர். இசையில் பெரும் ஆர்வம் உள்ள இவர், சமீப காலமாக முழு நேரப் பாடகராக வலம் வந்துகொண்டிருந்தவர். இவரது பல பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் மொஹான் பௌத்த துறவியாக மாறினார். கடவத்தை, வேபடவில் உள்ள ‘அரஹந்தக சமாதி ஆரண்ய’ என்ற பௌத்த மடாலயத்தில் இவர் து…
-
- 8 replies
- 898 views
-
-
வவுனியாவில் 12 சிறைக்கைதிகள் விடுதலை வவுனியா சிறைச்சாலையிலிருந்து இன்று(10) காலை 10 மணியளவில் சிறுகுற்றங்கள் புரிந்து 12 சிறைக்கைதிகள் வெசாக் தினத்தை முன்னிட்டு விடுவித்துள்ளனர். சிறுகுற்றங்கள் புரிந்து தண்டனை அனுபவித்து வந்தவர்களே இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட 12 கைதிகளும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/19890 மட்டு சிறையில் இருந்து 8 சிறை கைதிகள் விடுதலை வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக எட்டு கைதிகள் விடுலை செய்யபட்டுள்ளனர். இன்று 10 ஆம் திகதி காலை 10.30…
-
- 0 replies
- 354 views
-
-
உலகம் சமத்துவத்தையே உருக்கமாக வேண்டி நிற்கிறது..! வெசாக் தின செய்தியில் ஜனாதிபதி மைத்திரி “சமூக நீதி மற்றும் பேண்தகு உலக சமாதானத்துக்கான பௌத்த தர்மத்தின் போதனைகள்” என்பதே இலங்கையில் நடத்தப்படும் இந்த சர்வதேச விசாக விழாவின் தொனிப்பொருளாகும். சமத்துவமே சமூக நீதியின் அடித்தளமாகும். புத்தபிரானின் காலத்திலும் அடிப்படைக் கோட்பாடாக சமத்துவம் எனும் உலக நீதியே இருந்துவந்தது. இன்றைய உலகம் மிக உருக்கமாக வேண்டி நிற்பதும் அந்த சமத்துவத்தையேயாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வெசாக் தின செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளத…
-
- 3 replies
- 421 views
-
-
24 வருட சிறைவாசம் அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதி தண்டனை குறைப்பு கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு இராணுவத்தின் சுற்றவளைப்பு தேடுதல் ஒன்றின்போது 19 வயதில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த 24 வருடங்களாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்ற தமிழ் அரசியல் கைதியொருவர், தனது சிறைத் தண்டனையைக் குறைத்து சாதாரண பிரஜையாக வாழ வழிசெய்யுமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார். மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த செல்லப்பிள்ளை மகேந்திரன் என்ற தமிழ் அரசியல் கைதியே இத்தகைய வேண்டுகோளை விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு கருணை மனு ஒன்றை…
-
- 0 replies
- 664 views
-
-
அமைச்சரவையில் விரைவில் மாற்றம்.? (லியோ நிரோஷ தர்ஷன்) புதிய அரசியலமைப்பு, சர்வஜன வாக்கெடுப்பிற்கான எவ்விதமான சிறிதளவான வாய்ப்பும் தற்போதைக்கு இல்லை. ஆனால், அமைச்சரவையில் மாற்றம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதைவிட தனித்து ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒய்வின்றி உழைத்து வருகின்றது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை மீண்டும் வலுப்படுத்தும் நடவடிக்கையில் முழுமையாக ஈடுபட்டுள்ளோம். அதே போன்று சுதந்திர கட்சியின் மறுசீ…
-
- 1 reply
- 388 views
-
-
வெளிநாட்டு நீதிபதிகள் : போர்க்குற்ற விசாரணையில் வேண்டும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். அதற்காக நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படவேண்டும். அதற்கு வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடனான கலப்பு நீதிமன்றப் பொறிமுறையே அவசியம்” இவ்வாறு முன்னாள் அரச தலைவரும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலணியின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தெரிவித்தார். போர்க் குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படுவது தொடர்பில் சாதகமான கருத்தை, கொழும்பு அரசியலில் முக்கியமான தலைவ…
-
- 1 reply
- 293 views
-
-
குழப்பங்களை ஏற்படுத்துவதே புலம்பெயர் அமைப்புக்களின் எதிர்பார்ப்பு (ஆர்.யசி) இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட தரப்பினர் முன்வைக்கும் காரணிகள் நியாயமானவையே. எனினும் ஒரு தரப்பினர் சர்வதேச விசாரணை பொறிமுறை அவசியமென கருத்துக்களை முன்வைத்த போதிலும் இவர்களின் கோரிக்கையை சாதகமாக பயன்படுத்தி நாட்டில் மீண்டும் குழப்பங்களை புலம்பெயர் அமைப்புகள் எதிர்பார்த்து உள்ளன எவரையும் தனிப்பட்ட முறையில் திருப்திப்படுத்த சர்வதேச விசாரணைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை கருத்தில் கொண்டு சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கருத்து…
-
- 0 replies
- 685 views
-
-
மோடியின் இலங்கை வருகை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது பொதுபல சேனாவின் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவிப்பு (க.கமலநாதன்) இந்தியாவின் இலங்கை மீதான ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற போது இந்திய பிரதமர் இலங்கை வருகின்றார். எனவே அவரின் வருகை தேசப்பற்றுள்ளவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனா அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரி…
-
- 6 replies
- 517 views
-
-
யாழ்ப்பாணத்தில் தளத்தை விரிவாக்கம் செய்யும் இந்திய உளவுத்துறை – ஆதவன் “கிரேக்கர்கள் அன்பளிப்போடு வரும்போது அவதானமாக இருங்கள்” என்று சொல்லப்படும் பழமொழியானது யாழ்ப்பாணத்தில் இந்தியர்களை பார்க்கும்போதெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது. “யாழ்ப்பாணத்தில இருக்கிற இந்தியத் துணைத்தூதர் நடராஜன் செத்தவீடுகள் ஏன் சாமத்தியவீடுகளுக்கும் அழையா விருந்தாளியா வந்திர்றான்.. என்ன அழிவுக்கோ தெரியல!!” என்று யாழ்ப்பாணத்தில் புலம்பல்கள் கிளம்பியிருக்கும் நிலையில் இந்த கட்டுரையை பதிவு செய்கிறோம். இலங்கைத்தீவில் சிறிலங்காவிலும் தமிழீழத்திலும் பன்னாட்டு உளவு அமைப்புகளும் தத்தமது செயற்பாடுகளை விரிவாக்கம் செய்துவருகின்றனர். தமிழர் தாயகத்தில் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தை மையப்படுத்…
-
- 2 replies
- 706 views
-
-
‘மஹிந்தவின் பாதுகாப்பில் தலையீடு இல்லை’ -கவிதா சுப்ரமணியம் “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கும் அரசாங்கத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை” என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பைத் தீர்மானிப்பது, பாதுகாப்புத் துறையைச் சார்ந்தவர்களே தவிர, அரசாங்கம் இதில் எந்தவொரு தலையீட்டையும் செலுத்தாது” என்று, இதன்போது அவர் கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயகத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவ…
-
- 0 replies
- 197 views
-
-
ராஜபக்ஸக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்குளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதனை சட்ட மா அதிபர் தடுக்கின்றாரா? தமிழில்: குளோபல் தமிழ்ச் செய்திகள்:- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதனை சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தடுப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரியளவிலான குற்றச் செயல்கள் மோசடிகள் தொடர்பில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகின்றது. எனினும் இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு …
-
- 0 replies
- 235 views
-