Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஊடக செயலாளரின் பிரத்தியேக கடிதம் எவ்வாறு பொதுவான கடிதமாக மாறியது தெரண ஊடக வலையமைப்பு தொடர்பில் ஊடகத்துறை அமைச்சின் செயலாளரினால் பிரத்தியேகமாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதமொன்று சிரச தொலைக்காட்சியில் நேற்றிரவு 10 மணி பிரதான செய்திகளில் முதன்மை செய்தியாக ஒளிபரப்பப்பட்டமை ஆச்சரியத்திற்குரிய விடயமாகும். இந்த பிரத்தியேக கடிதம் ஊடக நெறிமுறைகளை மீறி போட்டி ஊடக நிறுவனமொன்றில் ஒளிபரப்புகின்றமையானது, யாருடைய தேவைக்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எல்.எம்.ஆர்.பி தரவுகளின் பிரகாரம், தெரண தொலைக்காட்சி முதலாவது இடத்தை தன்வசப்படுத்திக் கொண்டுள்ள பின்னணியில், பொதுமக்கள் எம்மீது கொண்டுள்ள நன்மதிப்பை சீர்குலைப்பதற்கு போட்டி ஊடக நிறுவனம் முன்னெ…

    • 0 replies
    • 363 views
  2. இனப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் : ரவூப் ஹகீம் (ஆர்.யசி) சர்வஜன வாக்கெடுப்பிற்கு அஞ்சி புதிய அரசியல் அமைப்பில் பகுதி அளவில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் நிரந்தர தீர்வுகாண முடியாது. இனப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார். குறித்த காலத்தினுள் விரைவாக மேற்கொள்ள வேண்டிய விடயங்களில் கவனம் செலத்தும் வகையில் பிரதான இரண்டு கட்சிகளும் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நில…

  3. முதல் அந்தஸ்தை பெறப்போகும் யாழ். நகர் இலங்கையில் முதன் முறையாக சைக்கிள்களுக்கு பிரத்தியோக பாதை கொண்ட நகராக யாழ்ப்பாணம் மாற்றப்படவுள்ளது. உங்க வங்கி வழங்கிய 55 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் பல வேலைத்திட்டங்கள் யாழ். நகரில் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்களின் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களை இணைக்கும் வகையில் குறித்த பாதை அமைக்கப்படவுள்ளது. பல்வேறு இடங்களை சுற்றுலாப்பயணிகள் இலகுவாக பார்வையிடக்கூடிய வசதியுடன் 20 கிலோமீற்றர் தூரம் வரையில் இந்த பாதை அமைக்கப்படவுள்ளது. இந்த வீதி அமைக்கப்படுவ…

    • 1 reply
    • 669 views
  4. ரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை கட்டுரைகள் - தீபச்செல்வன் ரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை என்று கூறுகிறார் கவிஞர் தீபச்செல்வன். இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை நிறுத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த். தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் தடுத்தமை காரணமாகவே ரஜனிகாந்த் தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளார். ரஜனிகாந்த் வருகைக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில் ஈழத்தில் உள்ள தமிழ் மக்களின் நிலைப்பாடு எப்படியானது என கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்த கருத்துக்கள். ரஜனிகாந்த் ஈழத்திற்கு வந்து லைக்கா நிறுவனத்தால் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை கையளிப்பதாக இருந்தது…

    • 0 replies
    • 431 views
  5. கிளிநொச்சியில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை பலி -இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் கிளிநொச்சி புதுமுறிப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளார். கிளிநொச்சியிலிருந்து முழங்காவில் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் கிளிநொச்சியிலிருந்து அக்கராயன்குளம் நோக்கி பயணித்த சிறியரக உந்துருளியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இலக்கம் ஏழு அக்கராயன்குளம் பகுதியைச்சேர்ந்த இராமச்சந்திரன் ஆறுமுகம் வயது 67 என்பவரே படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார். இறந்தவர…

  6. வருடம் முழுவதும் முட்டாள்கள் தினமா? - கே.சஞ்சயன் ஏப்ரல் முதலாம் நாள் முட்டாள்கள் தினம். கடந்த சனிக்கிழமை முட்டாள்கள் தினத்தன்று வெளியாகிய சில ஊடகங்களில், அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்த கருத்து ஒன்று பிரசுரமாகியிருந்தது. ஆனால், அது முட்டாள்கள் தினச் செய்தி அல்ல. ஏனென்றால், முட்டாள்கள் தினத்துக்கு முதல் நாளான, மார்ச் 31 ஆம் திகதி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில்தான், அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதனால்தான், அது முட்டாள்கள் தினச் செய்தியல்ல. ஆனால், முட்டாள்கள் தினச் செய்தியை விட, மக்களை முட்டாள்களாக்கும் செய்தியே அத…

  7. எனக்கு வீடுகளில் வைத்து உணவளிக்க வடக்கு மக்களுக்கு முடியவில்லை: ராஜித சேனாரத்ன கடந்த அரசாங்கம் மனிதவள செயற்பாடு தொடர்பில் கவனம் செலுத்தவில்லையென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தாம் கடந்த அரசாங்கத்தில் செயற்பட்டபோது அதிவேக வீதிகளையும் விமான நிலையங்களையும் துறைமுகங்களையும் அமைத்த போதிலும் மக்களுக்கான வீடுகளை அமைக்க முடியாமற்போனதாக ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முடியாமற்போனமையை வடக்கின் தேர்தல் முடிவு வெளிப்படுத்தியதாக சுட்டிக்காட்டினார். வட பகுதிக்கு நூற்றுக்கணக்கான பில்லியன்களை செலவிட்டு, அதிவேக வீதிகளை அமைத்தாலும் அப்பகுதி மக்களுக்கு அதில் நடந்து செல்லவ…

  8. இம்முறை தேசிய மீலாதுன் நபி விழா யாழ்ப்பாணத்தில் ; அமைச்சர் ரிஷாத் அறிவிப்பு .. April 8, 2017 சுஹைப் எம் காசீம் தேசிய மீலாதுன் நபி விழா இம்முறை யாழ்ப்பாணத்தில் நடாத்தபடும் என அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் இன்று(08/04/2017) யாழ்ப்பாணத்தில், அரசாங்க அதிபர் என். வேதநாயகம் தலைமையில் யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் தொடர்பில் இடம்பெற்ற உயர்மட்ட கூட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய மீலாதுன் நபி விழாவின் மூலம் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களால் மக்களுக்கு இன்னும் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் கலாசார மேம்பாட்டை விருத்தி செய்ய உதவும் எனவும் அவர் நம்பிக்…

    • 8 replies
    • 827 views
  9.  ‘எனது கூட்டத்துக்கு வரவேண்டாம்’ “நான் வரும் போது மக்கள் வருகின்றனர். மக்கள் கூட்டத்தை பார்த்து அரசாங்கம், ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு தேர்தலை ஒத்திவைக்கின்றது. இனிமேல் நான் வரும் கூட்டங்களுக்கு மக்களை வரவழைக்க வேண்டாம்” என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகம் ஒன்றைத் திறந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். "வெளிநாடுகளில் நடைபெறும் கூட்டங்களில் ஹம்பாந்தோட்டையில் எமக்கு சிறந்த துறைமுகம் இருப்பதாக பிரதமர் கூறுகிறார். அங்கு வந்து தொழிற்சாலையை அமைக்குமாறும் கூறுகிறார். எனினும் இலங்கை திரும்பியதும்…

  10. இறைவனுக்கு சோடனை செய்த கணவன், மனைவிக்கு நேர்ந்த அவலம் : யாழில் அதிர்ச்சி சம்பவம் மின்சார தாக்குதலுக்கு இலக்கான கணவனை காப்பாற்ற முற்பட்ட மனைவியும், கணவனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இடம்பெற்றுள்ளது. சுன்னாகம் ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த குணதாசன், மாக்ரெட் ஜோஜ் சுகந்தி ஆகியோரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இறைவனுக்கு சோடனை செய்வதற்காக மின் விளக்கு அலங்காரம் செய்ய முற்பட்ட கணவன் மின் மானியில் ஆணி அடித்து கம்பி கட்டும் போது மின்சாரம் தாக்கியதாகவும் இதனையடுத்து கணவனை காப்பாற்றும் முயற்…

    • 2 replies
    • 556 views
  11. முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள மக்களின் சிறப்பு வழிபாட்டு நிகழ்வு நேற்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறப்பு வழிபாட்டு நிகழ்வில் தென்னிலங்கையில் இருந்து சென்ற ஏராளமான சிங்கள மக்களும் முள்ளிவாய்க்கால் பகுதி பொதுமக்களும் இணைந்து பங்கேற்றிருந்தனர். தமிழ் மக்களுக்கு சிங்கள பேரினவாதிகளினால் காலங்காலமாக திட்டமிட்டு நடாத்தப்பட்ட நீதியற்ற செயல்களுக்கு சிங்கள மக்கள் மன்னிப்பு கோரும் சிறப்பு வழிபாடாகவே இந்த நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழிபாட்டினை நிகழ்த்திய பிரதான ஏற்பாட்டாளர்கள் முள்ளிவாய்க்கல் வழிபாட்டின்போது கூறுகையில், 2009ம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தின் அடக்கு முறைக்குள் இவ்விடத்தில் பொதுமக்கள் அகப்பட்டுள்ளனர். அப்பொழு…

    • 7 replies
    • 807 views
  12. தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தின் பத்தாவது ஆண்டு பூர்த்தி விழா யாழ். சுழிபுரம், தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தின் பத்தாவது ஆண்டு பூர்த்தி விழா இன்று 08.04.2017 சனிக்கிழமை பிற்பகல் 3.30மணிளவில் சிவபூமி முதியோர் இல்ல பாலச்சந்திரன் மண்டபத்தில் கலாநிதி ஆறு திருமுருகன் (தலைவர், சிவபூமி அறக்கட்டளை) அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக திரு. திருமதி கந்தையா நீலகண்டன் (அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர்) தம்பதிகளும், சிறப்பு விருந்தினர்களாக திரு. நா.வேதநாயகன் தம்பதிகள் (அரச அதிபர், யாழ் மாவட்டம்), திரு. வை.ஈழலிங்கம் தம்பதிகள் (இளைப்பாறிய கணக்காளர்) ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததோடு,இந்நிகழ்வில்…

    • 2 replies
    • 1.1k views
  13. தமிழ் தடுப்பு காவல் கைதிகளுக்கும் பிணை வழங்குமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள், தமக்கு பிணை அல்லது புனர்வாழ்வு அல்லது விடுதலை ஆகிய தெரிவுகளில் ஏதாவது ஒன்றை பெற்று தரும்படி கோருகிறார்கள் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பொது எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு பிணை வழங்க சட்ட மாஅதிபர் தரப்பு ஆட்சேபனை தெரிவிக்காததையடுத்து சாத்தியமாகியது. இந்நிலையில் பல வருடங்களாக நீண்ட கால தடுப்பில் இருக்கின்ற தமிழ் கைதிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, கடந்த காலங்களை விட , இன்று தமிழ் மக்களால் அதிகமாக உணரப்படுகிறது …

  14. தினேஷ் – மைத்திரி இரகசிய சந்திப்பு? ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சித் தலைவர் தினேஷ் குண­வர்­தன உட்­பட மேலும் இரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கடந்த 7ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து இர­க­சிய பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­தாக சிங்­களப் பத்­தி­ரி­கை­யொன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது. இந்த பேச்­சு­வார்த்தை பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தி­யி­லுள்ள ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ அலு­வ­ல­கத் தில் நடை­பெற்­றுள்­ளது. தினேஷ் குண­வர்­தன, பந்­துல குண­வர்­தன, விம­ல­வீர திசாநாயக்க ஆகியோர் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர். http://www.virakesari.lk/article/18888

  15. ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுவதற்கான கால அட்டவணையை தயாரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் ஐ.நா. தீர்மானத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள 2 வருட கால அவகாசத்தினுள் அதனை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்த கால அட்டவணை ஒன்றை தயாரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறித்த அட்டவணையை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்குதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  16. விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேற வேண்டும் – யாழ் அரசாங்க அதிபர் வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேற வேண்டும் என அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கேட்டுக்கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு ஊறணி கிராம சேவையாளர் பிரிவில் மக்களின் காணிகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார். தையிட்டி வடக்கு மற்றும் மயிலிட்டி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கடற்கரைப் பகுதியில் காங்கேசன்துறை மகாவித்தியாலயம் தொடக்கம் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையை எல்லையாகக் கொண்ட பகுதிகளில் 28.8 எக்கர் மக்களின் நிலம் நேற்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் காணி விடுவிப்பதற்கான உறுதிப்பதிரத்தை யாழ் மாவட…

  17. சர்ச்சைக்குரிய நீலப்படையணி மீளவும் இயங்கத் தொடங்கியுள்ளது சர்ச்சைக்குரிய நீலப்படையணி மீளவும் இயங்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இந்த நீலப்படையணியை வழிநடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து, இந்தப் படையணியின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்த போதும் தற்பொழுது மீளவும் இந்த படையணியின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாமல் ராஜபக்ஸவின் பிறந்த நாளைத் தொடர்ந்து இந்தப் படையணியின் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளது. நீலப்படையணி பல்வேறு மோசடிகளுடன் தொடர்புபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. …

  18. இலங்கையிலிருந்து ஓமானிற்கு தினமும் நேரடி விமானச்சேவை..! இலங்கையிலிருந்து ஓமான் வரை தினமும் நேரடி விமான சேவை ஒன்றை தொடங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓமான் மற்றும் இலங்கையிற்கிடையிலான பயணத்தை இலகுவாக்கு முகமாக, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, மஸ்கட் விமான நிலையம் வரையான நேரடி விமானசேவையை தொடங்கவுள்ளது. மேலும் குறித்த விமான சேவையானது வாரத்தில் 5 தடவைகள் இடம்பெறவுள்ளதாகவும், குறித்த பயண சேவையின் மூலம், ஓமானிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்தோடு …

  19. 10 இலட்சம் பெறுமதியான தங்கநகைகள் மற்றும் பணம் கொள்ளை : களுவாஞ்சிக்குடியில் சம்பவம்! களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பெரியகல்லாற்றில் நேற்று இரவு வீடு புகுந்து திருடர்களால் தங்கநகைகள், பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. பெரியகல்லாறு மூன்றாம் குறிச்சியில் உள்ள திருமதி ராஜேந்தினி ஞானசேகரம் என்பவரின் வீட்டிலேயே குறித்த திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது. தங்கநகைகள், மூவாயிரம் ரூபா ரொக்கப்பணம், 11 முக்கால் பவுண் தாலிக்கொடி ஒன்றும், ஒரு பவுண் அளவில் இரண்டு காப்புக்களும், மூன்றரை பவுண் மாலை ஒன்றும் உள்ளிட்ட 17 1/4 பவுண் நகைகளையும் அபகரித்துச்சென்றுள்ளார்கள் இச்சம்பவம் அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட…

  20. எனது பிள்ளை ஏதோ ஒரு முகாமில்தான் இருப்பான் – தாயொருவரின் கதறல் இராணுவத்திடம் சரணடைந்த தன்னுடைய மகன் வேறு எங்கே போவது? அவன் ஏதோ ஒரு முகாமில்தான் இருப்பான் என தாயொருவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மீட்பை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் கவன ஈர்ப்பு நிகழ்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மீட்பை வலியுறுத்தி கிளிநொச்சியில் பெப்ரவரி 20 தொடங்கப்பட்ட போராட்டம் இன்று 49ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. இறுதி யுத்தத்தின்போது, இராணுவத்திடம் சரணடைந்த, போரின் இறுதியில் காணாமல் போன தம்முடைய பிள்ளைகளின் விடுதலையை வலியுறுத்தியே இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. …

  21. நீதிமன்ற செயற்பாடுகளில் பிரதமர் தலையிடுகின்றார் – அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு அரச வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஜே.என்.பி. கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு பிணை வழங்குவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட ரீதியில் நீதிமன்ற செயற்பாடுகளில்; தலையீடு செய்துள்ளார் என என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானத்தை ஜனாதிபதியும், பிரதமரும் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, அவ் அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை ம…

  22. ஜேர்மனி இளம் விஞ்ஞானிகள் போட்டியில் மன்னார் மாணவன் பங்கேற்கிறார்! [Saturday 2017-04-08 08:00] ஜேர்மனியில் ஸ்டுட்கார்ட்டில் இடம்பெறும் 24வது தேசிய இளைஞர் விஞ்ஞானிகள் போட்டியில், இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இரண்டு போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டி எதிர்வரும் 16ஆம் திகதியில் இருந்து 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. கொழும்பு நாலந்தா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் ரகிது விக்ரமரத்ன மற்றும் மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரியை சேர்ந்த மாணவன் ஜிதேந்திரன் ஜீட் சஜித் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். அவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்கான விமான டிக்கட்டுகள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் வழங்கப…

  23. ஆவா குழுவைச் சேர்ந்த ஐவர் கைதடியில் கைது - மறைந்திருந்தவேளையில் மடக்கினர் யாழ். பொலிஸார் ஆவா எனப்­ப­டும் வாள்­வெட் டுக் குழு­வைச் சேர்ந்­த­வர்­கள் என்று சந்­தே­கிக்­கப்­ப­டும் 5 பேர் யாழ்ப்­பா­ணம், கைத­டி­யில் தலை­ம­றை­வாக இருந்­த­போது கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். குறித்த நபர்­கள் மறைந் திருப்பதாகப் பொலிஸா ருக்கு இரகசியத்தகவல் கிடைத்தது. இதனை அடுத்து கைதடியில் நேற்று அதிகாலை 4 மணியளவில் களமிறங்கிய பொலிஸார் அனைவரையும் கைது செய்தனர் என யாழ்ப்பாணப் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஸ்ரெனிஸ்லஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த காலங்களில் ஆ…

    • 1 reply
    • 278 views
  24. அதிரடிப்படையினரால் கிளிநொச்சியில் கஞ்சா மீட்பு – ஒருவர் கைது கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக இன்று மாலை பரந்தன் சிவபுரம் உண்டியல் சந்திக்கு அருகில் வைத்து கஞ்சாவுடன் சென்ற இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள்ளார் கறுப்புநிற பை ஒன்றினுள் கஞ்சாவினைக் கொண்டு குறித்த பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த வேளை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர.; குறித்த இளைஞன் வயல் வெளியினூடு ஓடுவதற்கு முற்ப்பட்ட வேளை மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாவும் அவரிடம் இருந்து சுமார் நான்கு கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் விசேட அதிரடிப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர் …

  25. உணவு விஷமானதில் 203 பேர் வைத்தியசாலையில் அனுமதி - 3 பேர் உயிரிழப்பு அம்பாறை பகுதியில் உணவு விஷமானமையினால் மூவர் உயிரிழந்துள்ளனர். அம்பாறை - தமன - வானேகமுவ பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வழங்கப்பட்ட உணவே இவ்வாறு விஷமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் இரண்டு பெண்களும், ஆண்ணொருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உணவு விஷமானமையினால் மேலும் 203 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவர்களில் 120 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அம்பாறை, சம்மாந்துறை ஆகிய வைத்தியசாலைகளிலேயே பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை - இறகாமம் பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.ஹலீமா (45), மொஹமட் காசிம் (53) மற்றும…

    • 2 replies
    • 324 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.