Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் தொண்டர் ஊழியர்களின் பிரதிநிதிகள் சிலரை, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தலைமையிலான குறித்த குழுவினர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரை இன்றையதினம் சந்தித்து இவ்வாறு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சினைகளை முன்வைக்கும் சந்தர்ப்பம் இதன்போது, குறித்த தொண்டர் ஊழியர்களுள் 28 பேர் சுகாதார அமைச்சுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், தங்களது பிரச்சினைகளை நேரடியாக அமைச்சர் உள்ளிட்ட குழுவினரிடம் முன்வைப்ப…

  2. யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் Published By: DIGITAL DESK 7 30 DEC, 2024 | 03:21 PM இலங்கையில் உள் நாட்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வாழும் உறவுகள் இன்றையதினம் திங்கட்கிழமை (30) தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நீதி வேண்டி வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஒரு அங்கமாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராடமானது ஊர்வலமாக யாழ். பிரதான வீதி மற்றும் காங்கேசன்துறை வீதியூடா…

  3. 29 DEC, 2024 | 02:05 PM சீன அரசாங்கத்தினால் "சீனாவின் சகோதர பாசம்" என்ற தொனிப்பொருளில் திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) வழங்கி வைக்கப்பட்டன. சீன தூதுவர் H.E.Qi Zhenhong திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வைத்து இப்பொதிகளை வழங்கி வைத்தார். திருகோணமலை மாவட்டத்தில் 700 பேருக்கு தலா 6500 ரூபா பெறுமதியான பொதிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செயலகத்தில் வைத்து 200 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சீனத்தூதுவர் …

  4. கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 401 பேர் கைது 30 Dec, 2024 நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போக்குவரத்து நடவடிக்கைக்கு அமைய திங்கட்கிழமை (30) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் மாத்திரம் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 401 பேர் உள்ளடங்களாக 8068 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கில் பதில் பொலிஸ் மா அதிப…

  5. அரச வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கியில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 15 லட்சம் ரூபாவை ஒருவரிடம் இருந்து மோசடி செய்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்தே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தான் பெற்றுக்கொண்ட பணத்துக்காக சந்தேகநபர் காசோலை வழங்கிய போதிலும், குறித்த காசோலை திரும்பியதைத் தொடர்ந்தே அவர் மீதான முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் தலைமறைவாக இருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். https://thinakkural…

  6. மட்டக்களப்பில் கிராம உத்தியோகத்தர்கள் போராட்டம்! 30 Dec, 2024 | 12:50 PM மட்டக்களப்பு மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் இன்று (30) மட்டக்களப்பு காந்தி பூங்கா சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் கோறைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாசிவன்தீவு பகுதி கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவர்களை கைது செய்யக் கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் ஒருவரும் தாக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. …

  7. பொதுமக்களை அச்சுறுத்திய பேருந்துக்கு எதிராக நடவடிக்கை December 29, 2024 07:48 pm யாழ்ப்பாணம் - பருத்தித்துறை 750 வழித்தடத்தில் நேற்று (28), சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்த தனியார் பேருந்து உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேநாயகத்திற்கு அறிவித்துள்ளார். தனியார் பேருந்து மேற்படி வழித்தடத்தில் சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தமை தொடர்பாக சமூக ஊடகங்களில் காணொளிகள் பகிரப்பட்டிருந்ததுடன் அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இத…

  8. 19 DEC, 2024 | 01:30 PM முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று கரை ஒதுங்கிய சம்பவம் ஒன்று இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது. குறித்த படகில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர். அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த படகில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்க…

  9. ஆண்டுகள் பல கடந்தாலும், எமது போராட்டத்துக்கான தீர்வும், நீதியும் இன்றுவரை கிடைக்கவில்லை! தாய்மாரின் கண்ணீருக்கு பதில் தருவதாகக் கூறிய புதிய ஜனாதிபதியும் ஏமாற்றியுள்ளார் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். குறித்த போராட்டம் இன்று காலை கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அலுவலகம் முன்பாக இடம் பெற்றதுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது படங்களை ஏந்தியவாறு குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எமது பிள்ளைகள் கையளித்தும், சரணடைந்த…

  10. பாடசாலை நாட்கள் எண்ணிக்கையில் மாற்றம்! 2025 ஆம் ஆண்டு பாடசாலை பருவ நாட்கள் எண்ணிக்கை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடாத்தினாலும் வருடத்திற்கு பாடசாலை நாட்களை அடுத்த வருடம் 181 நாட்களாக குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதிகளவிலான அரசு விடுமுறைகள் மற்றும் முதல் தவணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மற்றும் அரசுப் பாடசாலைகளில் ஆண்டுதோறும் கல்வி பயிலும் மாணவர்களின் வருகை திகதி குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையை நிறைவு செய்வதற்கு, ஜனவரி 2 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை பாடசாலையின் முதல் 03 வாரங்கள் நடைபெறவுள்ளது. …

  11. 30 DEC, 2024 | 10:59 AM இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 350 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் காட்டு யானைகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகளவான காட்டு யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள நிலையில் அவற்றின் மொத்த எண்ணிக்கை 70 ஆகும். அத்துடன், மின்சாரம் தாக்கி 50 காட்டு யானைகளும், யானை வெடி வெடித்து 35 காட்டு யானைகளும், ரயிலில் மோதி 10 காட்டு யானைகளும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மேலும் …

  12. விலை மனுக்கோரல் மூலம்; 78 கோடி ரூபா நட்டம்! கடந்த மூன்று மாதங்களில் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் நிலக்கரி எரிக்கப்பட்டதன் பின்னர் எஞ்சியிருக்கும் சாம்பல் விலை மனுக்கோரலுக்கு விடப்பட்டதன் மூலமாக அரசாங்கத்திற்கு 78 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. சீமெந்து உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய இந்த சாம்பல், தொன் ஒன்று 13,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டாலும், தொன் ஒன்றுக்கு 2,900 ரூபாவுக்கு விலை மனுக்கோரல் விடப்பட்டுள்ளது. இதனால், தொன் ஒன்றுக்கு 10,400 ரூபாய் நஷ்டத்தில் இந்த ஆண்டு மே 15 ஆம் திகதி அவசர விலை மனுக்கோரல் அழைப்பின் மூலம் பெரிய அளவில் சீமெந்து வியாபாரிகளுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு இந்த விலை மனுக்கோ…

  13. 30 DEC, 2024 | 10:38 AM யாழ்ப்பாணத்தில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இருபாலை மற்றும் நீர்வேலிப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பனை மரங்களை வெட்டியவர்கள் மீது சட்ட நடவடிக்கையின் பிரகாரம் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை தனங்கிளப்புப் பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவர்கள் மீதும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச…

  14. வெளிநாட்டு நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட நீர்வழங்கல் திட்டங்களில் பாரிய நிதியிழப்பு : தேசிய கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டு 29 Dec, 2024 (நமது நிருபர்) பல முக்கிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களில் ஏற்பட்டுள்ள தாமதங்கள், திறன் இன்மை மற்றும் தவறான முகாமை காரணமாக சுமார் 1.44 பில்லியன் ரூபா இழப்பு அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த அண்மைய தேசிய கணக்காய்வறிக்கை இந்த விடயத்தினை வெளிப்படுத்தியுள்ளது. குறித்த அறிக்கையின் பிரகாரம், தற்போது முன்னெடுக்கப்பட்டுக்கொண்ட…

    • 3 replies
    • 310 views
  15. ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva), பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக இருந்து இம்மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சவேந்திர சில்வாவின் சேவைக் காலத்தை எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடித்திருந்தார். புதிய அரசாங்கத்தின் கீழ் அவருக்கு பதவி நீடிப்பு கிடைக்காது என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சவேந்திர சில்வாவின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை நீக்குவதா அல்லது தக்கவைப்பதா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை. இது தொடர்பில் அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்பில் வினவிய போது, அதனை தொடர்வது அல்லது இல்லாதொழிப்பது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்க…

  16. ஓட்டமாவடி - காவத்தமுனை வயலில் யானை உயிரிழப்பு! 30 Dec, 2024 கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை - வட்ட எனும் வயல் பகுதியில் யானை ஒன்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை உயிரிழந்துள்ளது. இந்த யானை ஞாயிற்றுக்கிழமை (29) காலை எழும்ப முடியாத நிலையில் வயலில் விழுந்து கிடந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். இவ்வாறு எழும்ப முடியாமல் விழுந்து கிடந்த யானைக்கு சிகிச்சையளிக்க வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதிகாரிகள் பார்வையிட்டு சிகிச்சையளிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் யானை உயிரிழந்துள்ளது. https://www.virakesari.lk/article/2…

  17. இலங்கையின் புதிய அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை இடும் பொறுப்பு புதிய அமைச்சர்வைக்கு வழங்கப்பட்டுள்ளது - நளிந்த ஜயதிஸ 30 Dec, 2024 இலங்கையின் புதிய அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை இடும் பொறுப்பு புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பை நேர்மையாகவும் மிகத் துல்லியமாகவும் பொறுப்புடனும் நிறைவேற்ற புதிய அமைச்சரவை தனது அதிகபட்ச ஆற்றலுடன் முழு நேர கடமையில் ஈடுபட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இலங்கை அறக்கட்டளைகளின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் ஆராய, கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை…

  18. வடகிழக்கில் மாணவர்களின் கல்வியில் மீள் எழுச்சி தேவை; அதற்கு உதவத் தயார் - ரவிகரன் எம்.பி 30 Dec, 2024 வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தில் கடந்தகாலங்களில் எழுச்சி பெற்றிருந்த மாணவர்களின் கல்வி, தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கவலைதெரிவித்துள்ளார். இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ள கல்வியில் மீள் எழுச்சி தேவையெனவும், அதற்காக உதவுவற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். திருகோணமலை - பத்தாம்குறிச்சி, அறிவொளிமையம் கல்விநிலையத்தில், கல்விபயிலும் மாணவர்கள் தமது கல்விச் சுற்றுலாவின்போது, முல்லைத்தீவிற்குப் பயணம…

  19. 16 அடி நீளமான முதலையொன்று பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது. 30 Dec, 2024 மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதி இரண்டில் சுமார் 16 அடி நீளமான முதலையொன்று ஞாயிற்றுகிழமை (29) பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு பிரதேச ஆற்றில் தென்பட்ட இந்த முதலை ஞாயிற்றுகிழமை (29) மாலை கரைக்கு வந்தது. இதன்போதே, பொதுமக்கள் முதலையைப் பிடித்தனர். https://www.virakesari.lk/article/202505

  20. நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளியோம்! - அமைச்சர் சுனில் கடும் எச்சரிக்கை! இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளிக்கமாட்டோம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "இன, மத வன்முறைகளைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் இன, மத ரீதியிலான சில பிரச்சினைகள் இருக்கின்றமை உண்மைதான். அவற்றுக்கு நாம் தீர்வு காண்போம். ஆனால், அந்தப் பிரச்சினைகளை ஊதிப்பெருக்கும் வகையில் - வன்முறைகளைத் தூண்டும் வகையில் எவராயினும் கருத்துக்களை வெளியிட்டால் அவர்களுக்கு எதிராகக் கடும்…

  21. Published By: DIGITAL DESK 7 29 DEC, 2024 | 05:56 PM (நமது நிருபர்) இலங்கையில் மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கும் சட்ட சவால்களைத் தீர்ப்பதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. மருந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் விடயத்தில் நிர்ணய விலைகள் விடயங்களில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உரிய ஏற்பாடுகள் போதாமையின் காரணமாகவே தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. எவ்வாறாயினும் புதிய சட்டமொன்றை இயற்றுவதா, இல்லை தற்போதுள்ள ஏற்பாடுகளை திருத்தியமைத்…

  22. Published By: DIGITAL DESK 2 28 DEC, 2024 | 05:24 PM (இராஜதுரை ஹஷான்) முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எவ்வித அச்சுறுத்தலுக்கும் கிடையாதென புலனாய்வு பிரிவு வழங்கிய அறிக்கையின் பிரகாரமே இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அடுத்த மீளாய்வு அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள 60 பொலிஸ் பாதுகாப்பு அதிகம் என்று குறிப்பிடப்பட்டால் அதை 30 ஆக குறைக்கலாமென அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பொருளதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் உரிய நடவடி…

  23. தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை December 26, 2024 11:42 am இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை கதிரையை முன்னாள் அவைத்தலைவரிற்கு வழங்கப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தரப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றது. இதன்மூலம் கட்சியை சீரழிப்பதற்கு சதிவலை பின்னப்பட்டுள்ளதென்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். கட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதானது துரதிஸ்டவசமானது. தமிழரசுக் கட்சிக்கு எதிராக நான்கு வழக்குகள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையான நோக்கமானது கட்சியை செயற்பாடுகளில் இர…

  24. சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 20 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாளை காலை 9.25 மணி முதல் 02 நிமிடங்கள் மௌனத்தை கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை கோரியுள்ளது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி நடந்த சுனாமி பேரழிவில் 35,000 க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயினர். மேலும், மாவட்ட மட்டத்திலும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/314131

  25. போர் முடியும்வரை இந்தியா எமக்கு உதவியது – புதுடில்லியில் ரணில் உரை! December 28, 2024 3:53 pm அமைதிப் பேச்சுவார்த்தையை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எதிர்த்ததில் இருந்து 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடையும்வரை இந்தியா இலங்கைக்கு உதவியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நடைபெற்ற 7வது அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவுச் சொற்பொழிவில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது, வாஜ்பாயும் நானும் அதிகாரத்தில் இருக்கும் போது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் உச்சத்தில் இருந்தது. நாங்கள் வெளியிட்ட இரண்டு அறிக்கைகள் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் உலகளவில் எத…

      • Like
    • 5 replies
    • 597 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.