Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை இழந்தார் ஜீ.எல்.பீரிஸ் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை இயல்பாகவே இழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் புதிய கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதால் அவரது உறுப்புரிமை இயல்பாகவே பறிக்கப்படும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/13204

  2.  'சி.வி தொடர்பான முடிவு சரியானது' வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவில், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நாம் அன்று தெரிவு செய்தது சரி என நான் நினைக்கிறேன'; என்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாளிதழ் ஒன்றின் சிறப்பு இதழ் வெளியீடு, யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் சனிக்கிழமை (05) இடம்பெற்றது. இங்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடக்கு மாகாண தேர்தல் நடாத்துவதற்கு முடிவு வந்த போது முதலமைச்சர் தெரிவு என்பது ஒரு முக்கிய விடயமாக இருந்தது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்று கூடி ஆராய்ந்தது. அதற்கு முன்பே, சி.வி.விக்னே…

  3. சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள இராணுவ வீரர்களை சந்தித்தார் மஹிந்த..! ஓய்வூதியத்தில் காணப்படும் முரண்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ஒல்கோட் மாவத்தையில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ள விசேட தேவையுடைய இராணுவ வீரர்களை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை சந்தித்துள்ளார். 12 வருடங்கள் இராணுவ சேவையாற்றாத விசேட தேவையுடையோருக்கும் ஓய்வூதிய கொடுப்பனவை வழங்கக் கோரி இந்த போராட்டம் கடந்த 5 தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்றிலிருந்து சாகும் வரையான உண்ணாவிரத போராட்டமாக விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/13161

  4. கிளிநொச்சி கோவில் ஒன்றில் திருடர்கள் கைவரிசை : அம்மனின் நகைகள் திருட்டு கிளிநொச்சி ஆனந்தநகா் ஜெயதுர்க்கை அம்மன் ஆலயம் நேற்றிரவு உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது. ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு அல்லது ஆலய மண்டபத்தின் மேலுள்ள துவாரத்தின் ஊடாக திருடா்கள் உள்நுழைந்து திருடியிருக்கலாம் என சந்தேகிப்படுகிறது. இச்சம்பவத்தின் போது 5 பவுண் தங்க நகைகளான இரண்டு அம்மனின் தாலி, ஒரு சங்கிலி, ஒரு கண்மடல் போன்றன திருடப்பட்டுள்ளதோடு ஆலயத்தின் மூல விக்கிரகத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த ஜம்பொன் இயந்திர தகடும் திருடா்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும் உண்டியலும் உடைக்கப்பட்டு சுமா…

  5. காலைக்கதிர் பத்திரிகை வெளியீடு ; ஒரே மேடையில் சம்பந்தனும், விக்னேஸ்வரனும் ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனின் காலைக்கதிர் பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லுாரியில் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. காலைக்கதிர் பத்திரிகை நாளாந்த பத்திரிகையாக வெளிவரவுள்ளதுடன் வார இறுதியில் சஞ்சிகை ஒன்றும் வெளியிடப்படவுள்ளது. பத்திரிகை வெளியீட்டு விழாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். …

    • 2 replies
    • 853 views
  6. ஆவா குழுவின் பின்னணியில் இராணுவம் இல்லை ; வடமாகாண ஆளுநர் (ஆர் .யசி) ஆவா குழுவின் பின்னணியில் அரசியல் பலம் உள்ளதா அல்லது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உள்ளாரா என எனக்குத் தெரியாது. யாரால் இயக்கப்படுகின்றது என்பதை ஆராயவேண்டும். ஆனால் ஆவா குழுவின் பின்னணியில் இராணுவ செயற்பாடுகள் இல்லையென உறுதியாக கூறமுடியும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல் குரே தெரிவித்தார். வடக்கில் இராணுவத்தின் வசம் உள்ள பொதுமக்களின் காணிகளை மக்களிடம் ஒப்படைக்க வேண்டியது அரசாங்கதின் கடமையாகும். ஆனால் வடக்கில் பொதுமக்களின் காணிகளை ஒப்படைக்க வேண்டும் என்பது இராணுவ முகாம்களை அகற்றவேண்டும் என்று அர்த்தம் அல்ல. வடக்கில் இராணுவத்தை பலப்படுத்துவது அவசியம் எனவும் அ…

    • 4 replies
    • 451 views
  7. யாழ். அரச அதிபர் தலைமையிலான குழுவினர் வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட்டுள்ளனர். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இன்றைய தினம் யாழ். அரச அதிபர் என். வேதநாயகன் தலைமையிலான குழுவினர் வலி வடக்கு பகுதியில் ராணுவத்தினரால் மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட காணிகளை பார்வையிட்டுள்ளனர். மேலும் அங்கு மீள்குடியேறவுள்ள மக்களுடனும் கலந்துரையாடியுள்ள அரச அதிபர் ராணுவத்தினர் வசமுள்ள மீதிக் காணிகளையும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார். கடந்த 31ம் திகதி யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்த 454 ஏக்கர் நிலத்தை மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக யாழ். அரச அதிபர் …

  8. கிளிநொச்சியில் பல இலட்சம் பெறுமதியான மரங்கள் கடத்தல் : 7 பேர் கைது கிளிநொச்சி – கல்மடு காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட பாலை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்மடு காட்டுப்பகுதியில் உள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்ட சுமார் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட பாலை மரக்குற்றிகளே இவ்வாறு மீட்கப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தல் இடம்பெற்றுவரும் நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை கல்மடுநகர் பகுதியல் உள்ள விமானப்படை அதிகாரிகளால் கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு …

  9. இணக்கப்பாடுகளுடன் முடிவடைந்த டில்லி மீனவர் பேச்சுவார்த்தை: படகுகளை விடுவிக்க இலங்கை அரசாங்கம் மறுப்பு : இழுவைப் படகை தடை செய்வதை ஏற்றுக்கொண்டுள்ளது இந்தியா இலங்கை இந்திய மீனவர் பிரச்சினையில் இணக்கப்பாடுகளுக்கு சாதகமாக டில்லி பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன. இதற்கு இருதரப்பு பிரதிநிதித்துவம் கொண்ட கூட்டுச் சபை ஊடாக அடுத்தக்கட்ட தீர்வுக்கு இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் இந்தியா இழுவை படகை தடை செய்வதை ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள இருநாட்டு மீனவர்களை விடுவிக்கவும் மீனவ படகுகளை விடுவிக்காமல் இருக்கவும் இருதரப்பிலும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. சர்வதேச க…

    • 1 reply
    • 188 views
  10. சவுக்கடியில் ஆயுதங்கள் மீட்பு -பேரின்பராஜா சபேஷ் மட்டக்களப்பு, சவுக்கடிப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள், நேற்று வெள்ளிக்கிழமை (04) மாலை, மைலம்பாவெளி முகாம் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டன. சவுக்கடிப் பகுதியில் மரமுந்திரிகைத் தேட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, உரப்பபை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் கைக்குண்டுகள் 4, வெற்று மகசீன்கள் 2, ரீ56 ரக துப்பாக்கி ரவைகள் 4, சயனட் குப்பி மற்றும் அடையாளத்தகடு ஆகியன மீட்கப்பட்டன. குறித்த வெடிபொருட்கள் அசாதாரண சூழலின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட…

    • 1 reply
    • 380 views
  11. தந்தையை தொடர்ந்து தனயன் : தமிழ் மொழியை ஆயுதமாகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் : வெளியானது காணொளி மக்களின் மனங்களை கவருவதற்காக அரசியல்வாதிகள் பலரும் பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர். குறிப்பாக இலங்கையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழ் மொழியில் பேசுவது என்பது ஆச்சரியத்துக்குரிய விடயமாக பார்க்கப்படுகின்றது. கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தட்டுத்தடுமாறி தமிழ் மொழியில் பேசியமை அனைவராலும் கவரப்பட்டது. பெருபான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தமிழ் மொழியில் பேசுவது என்பது அரிதான ஒன்றாக இருந்த போதும் மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஒரு சிலர் சிறுபான்மை மக்களிடையிலான உறவை வளர்ப்பதற்கு ஆயுதமாக மொழியை பயன்படுத்தினர…

    • 3 replies
    • 520 views
  12. நேர்மையாக நடந்த முச்சக்கர வண்டி சாரதிக்கு நோர்வே தூதரகம் பாராட்டு நோர்வேயிலிருந்து இலங்கை வந்த மாணவி ஒருவர் முச்சக்கர வண்டியில் தொலைத்த பயணப்பையை முச்சக்கர வண்டி சராதி தேடிப்போய் வழங்கிய சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு நேர்மையான நடத்தையை வெளிக்காட்டிய முச்சக்கர வண்டி சாரதியான பிரான்ஸிஸ்க்கு நோர்வே தூதரகம் நன்றி தெரிவித்துள்ளதுடன், தங்களது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது. எஸ்.எஸ் சோலன்டட் என்ற உலகின் பழமை வாய்ந்த கப்பலில் கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு வந்த பெண்ணொருவர் முச்சக்கர வண்டியொன்றில் தனது பயணப்பையை விட்டுச்சென்றுள்ளார். குறித்த பையினை துறைமுக அதிகாரசபை மற்றும் கப்பல் துறை முகவர்கள் …

  13. “ இராணுவமுகாமிற்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் எலும்புத் துகலாகக்கூட இருக்கலாம்” : படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் (சசி) கடந்த 30 ஆண்டு காலமாக கடந்த அரசாங்கங்களின் திட்டமிட்ட சதிகளால் இனப்படுகொலைக்குள்ளாகி உயிர்களை இழந்த கிழக்குத் தமிழர்களுக்கும் சரியான தீர்வினை வழங்கவும் முன்வர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வடக்கில் தமிழர்களை அதிகளவில் இனப்படுகொலை செய்த இடமாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அடையாளப்படுத்தப்பட்டு தற்போது ஐ.நா வரை தமிழ்த்தரப்பினர் நீதி கோரி சென்றுள்ளனர். அதுபோன்றே கிழக்கிலும் தமிழர் பிரதேசங்களான ம…

  14. மன்னார் கடலில் கடற்­ப­டை­யி­னரின் கெடு­பி­டி : மீன­வர்­கள் பாதிப்பு மன்னார் நகர் பாலத்­த­டி­யி­லி­ருந்து தென் கடல் பரப்­புக்கு பட­கு­களின் மூலம் மீன்­பி­டிக்கச் சென்ற மீன­வர்­களை நேற்று கடலில் வைத்து கடற்­ப­டை­யினர் திருப்­பி­ய­னுப்­பி­யதால் சில மணிநேரம் இப்­ப­கு­தியில் அல்­லோலகல்­லோல நிலைமை ஏற்­பட்­டது. இப்­பி­ரச்­சினை குறித்து விட­ய­ம­றிந்த மன்னார் மறை­மா­வட்ட குரு முதல்வர் அருட்­பணி அந்­தோனி விக்ரர் சோசை அடி­களார், வன்னி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாள்ஸ் நிர்­ம­ல­நாதன், மன்னார் கடற்­தொழில் திணைக்­கள உதவிப் பணிப்பாளர் பி.சகா­ய­நாதன் மிராண்டா, மன்னார் பங்­குத்­தந்தை பெப்பி சோசை அடி­களார் ஆகியோர் இணைந்து மேற்­கொண்ட நட­வ­டிக்­க…

  15. புலிகளின் செயற்பாடு பயங்கரவாதம் என்றால், காணி பிடிப்பது, அரச பயங்கரவாதம் இல்லையா? வடக்கு ஆளுனரிடம் அமைச்சர் மனோ கேள்வி அமைச்சர் ராஜித சேனாரத்ன பற்றியும், முதல்வர் விக்னேஸ்வரன் பற்றியும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சொல்வது பிழை. ரெஜினோல்ட் இவை பற்றிய விபரங்களை அறியாமல் குழந்தைத்தனமாக பேசுகிறார் என நினைக்கின்றேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த நொடியில் என் மனதில்’ என்ற தன் முகநூல் பக்கத்தில் இன்று(5) காலை மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, வடக்கில் ஆவா குழுவை இப்போ…

  16. இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கும், இலுவைப்படகுகளை பயன்படுத்துவதற்கும் இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இந்தி மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இரு நாட்டு மீனவப்பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது ராமேஸ்வரம் மீனவ சங்கப்பிரதிநிதி சங்கத் தலைவர் தேவதாஸ் இவ்வாறு கூறினார். இலங்கை - இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். “இலங்கை கடற்பரப்பில் 83 நாட்கள் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி வேண்டும், இலங்கை அரசால் த…

  17. புலம்பெயர் தமிழர்கள் தங்களது குடியுரிமையை தக்கவைத்துக்கொள்வதற்காக நாட்டிற்குள் வன்முறையை ஏற்படுத்துகிறார்கள் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார், தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,புலம்பெயர் தமிழர்கள் தங்களது குடியுரிமையை பாதுகாத்து கொள்வதற்காக நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதோடு, தமிழ் அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட வைக்க முனைகிறார்கள்.மற்றும் புலம்பெயர்ந்து வாழும் இனவாதிகள் அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு சதிமுயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் என குறிப்பிட்டார். இரகசிய முகாம்கள் தொடர்பாக இத…

  18. இந்தியா செல்லும் அமைச்சர்கள் மட்டக்குழுவில் சுமந்திரனும் பங்கேற்பு மீனவர் பிரச்சினை குறித்துப் பேச்சு நடத்த இந்தியா செல்லும் அமைச்சர்கள் மட்டக்குழுவில் முதல் முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இடம்பெறவுள்ளதாக, வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி இன்று புதுடெல்லி செல்லும் அமைச்சர்கள் மட்டக்குழுவில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திர னும் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தரப்புக் குழுவின் ஒரு உறுப்பினராக இவர், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடனான பேச்சுக்களில் பங்கேற்பார் என்றும் அவர் தெரிவித்தார். இழுவைப்…

  19. மூத்த சிங்கள மொழி இசையமைப்பாளர் காலமானார் மூத்த சிங்கள மொழிப் பாடகரும் இசையமைப்பாளருமான பண்டித் டபிள்யூ. டி. அமரதேவ தனது 88 ஆவது வயதில் காலமானார். திடீரென சுகயீனம் ஏற்பட்டதால் ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தநிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். http://www.virakesari.lk/article/13079

  20. முன்னாள் போராளிகளும் துரத்தும் அவலங்களும்? செல்வா. நிலா: இந்தப் பதிவு செல்வா. நிலாஎன்பவரால் எமது மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது:- இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் முன்னாள் போராளிகள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. ஒரு புறம் சிங்கள இனவாத அமைப்புக்கள் வடக்கில் ஏற்படுத்தப்பட்ட சம்பவங்களுக்கு முன்னாள் போராளிகளே காரணம் என குற்றம் சாட்டியுள்ள நிலையில். மறு புறம் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் தடுப்பில் உள்ள முன்னாள் போராளிகளின் குடும்ப உறுப்பினர்கள் அச்சுறுத்தல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாவதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக ஒரு புறம் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச்…

    • 2 replies
    • 554 views
  21.  கிளிநொச்சியில் கடைகளை இழந்தோருக்கு நட்டஈடு கிளிநொச்சி நகரத்தில் 2016 செப்டெம்பர் 16ஆம் திகதியன்று ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தாக்கல் செய்திருந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அனுமதி கிடைத்துள்ளது. அதனடிப்படையில் 74 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் 122 பேர் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். http://www.tamilmirror.lk/185187/க-ள-ந-ச-ச-ய-ல-கட-கள-இழந-த-ர-க-க-நட-டஈட-

  22. தமது சொந்த நிலத்தை காண இருபத்தெட்டு ஆண்டுகள் காத்திருந்து அந்த நிலத்தை இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்து கடந்த 31 ம் திகதி மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 454 ஏக்கர் மக்களுடைய நிலத்தை இன்றைய தினம் காலை மக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த 31ம் திகதி யாழ்.மாவட்டத்திற்கு விஐயம் மேற்கொண்ட ஐனாதிபதி வலி, வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து 454 ஏக்கர் நிலத்தை மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக யாழ்.அரசாங்க அதிபர் என். வேதநாயகனிடம் கையளித்தார். இதனை தொடர்ந்து மேற்படி பகுதிகளை பார்வையிட இன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு படையினர் அனுமதி வழங்கினர்.…

    • 2 replies
    • 478 views
  23. தென் ஆசிய நாடுகளில் அதிகளவு மது பயன்படுத்தும் நாடுகளில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதிய ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் இலங்கையர்கள் அதிகளவில் மது அருந்துவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு அடுத்த படியாக இந்தியா 2ஆம் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக அளவில் மது பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இலங்கை 115ஆம் இடத்திலுள்ளது. இலங்கையர்களின் தலா மது பாவனை 3.03 லீற்றர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, உலகில் அதிகளவில் மது அருந்துவோர் வரிசையில் பெலரஸ் பிரஜைகள் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/special/…

    • 2 replies
    • 315 views
  24. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வருடாந்த பாதுகாப்பு கலந்துரையாடல் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றதாக இந்திய உயர்ஸ்தானிகரம் அறிவித்துள்ளது. நான்காவது தடவையாக இந்தக்கலந்துரையாடல் இடம்பெற்றதாக உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் மோகன்குமார் மற்றும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கருணாசேனா ஹெட்டியாராச்சி ஆகியோரின் தலைமையில் இந்தக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது இரண்டு நாடுகளின் தரப்பிலும் பாதுகாப்பு அமைச்சுக்களின் அதிகாரிகள், வெளியுறவுத்துறை அதிகாரிகள், படையதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். கலந்துரையாடலின்போது பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள், கூட்டுப்பாதுகாப்பு நடவடிக்கைகள் கடல்வலய பாது…

  25. இலங்கையில் தமிழீழ அரசு ஒன்றை அமைப்பது தொடர்பிலான பிரேரணை ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது. மதுரையிலுள்ள ஓய்வு நிலை நீதிபதி எஸ்.சிவசுப்பிரமணியம் இந்த பிரேரணையை முன்வைத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பிரேரணைக்கு அமெரிக்காவின் முன்னாள் சட்ட மா அதிபர் ரம்ஸே கிளாக் பங்களிப்புச் செய்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ அரசு ஒன்றை அமைப்பதற்கு இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின் 6வது உறுப்புரை தடையாக இருப்பதாக குறித்த பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, இலங்கை அரசியலமைப்பிலிருந்து குறித்த உறுப்புரையை நீக்குவதற்கு நடவடிக்கை எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.