Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குடாநாட்டின் அமைதியைக் குலைத்துள்ள பல்கலை மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு – பி.மாணிக்கவாசகம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தி கொலைச் சம்பவமானது, முழு நாட்டையும் பரபரப்படையச் செய்திருக்கின்றது. குறிப்பாக இந்தச் சம்பவத்தில் பொலிசார் மேற்கொண்ட முன்யோசனையற்ற துப்பாக்கிப் பிரயோகம் யாழ் குடாநாட்டின் அமைதியைக் குலைத்துவிட்டிருக்கின்றது. பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் அமைதியின்மையையும், ஆத்திரத்தையும் கிளறிவிட்டிருக்கின்றது. பொலிசார் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழப்பதற்கும், அவர்களுடைய செயற்பாடுகளை சந்தேகக் கண்கொண்டு நோக்குவதற்கும் வழியேற்படுத்தியிருக்கின்றது. யுத்தத்தின் பின்னரான வடமாகாணம் குழப்பகர…

  2. பொலிஸார் மீது வாள்வெட்டு ஐந்து பொலிஸ் குழுக்கள் களத்தில் யாழ்ப்பாணம் - சுன்னாகம் பிரதேசத்தில் வைத்து தேசிய புலனாய்வுத்துறை பொலிஸ் உத்தியோகத்தர் மீது நேற்றைய தினம் நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்காக ஐந்து விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்படடுள்ளதாக பொலிஸ் திணைக்கள ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்தக் குழுக்களுக்கு மேலதிகமாக விசேட பொலிஸ் அதிரடிப்படைக் குழுவொன்றும் விசாரணைகளுக்காக நியமிக்கப்ட்டுள்ளது. யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் சிவில் உடையில் இருந்த என்.ஐ.பீ என அழைக்கப்படும் தேசிய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள…

  3. நாம் அனைவரும் இனங்களாக இருக்கிறோம் என்பதை விடவும், இலங்கையராக இருக்கிறோம் என்பதே இலட்சணமாக இருக்க முடியும் என கிழக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் கலைமகள் மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற பல்வேறு கல்வி மற்றும் புறக்கிருத்திய நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த நாட்டுக்கு என்ன நடந்தது என்பது பற்றி நாமறிவோம். நாம் இலங்கையர் என்பதை மறந்து இனங்கள் என்று கூறி ஒருவரையொருவர் அழித்திருக்கிறோம். கொல்லப்பட்ட ஒருவருடைய சடலத்தையும், எண்ணிக்கை அதிகரிப்பையும் கண்டு இன்னொருவர் மகிழ்ந்திருக்கின்றோம். ஆனால், நமது தேசிய கீதத்தில் மட்…

    • 0 replies
    • 304 views
  4. காற்றுடன் கூடிய மழை: அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை நாட்டின் வடக்கு தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் அடுத்து வரும் நாட்களில் அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மொஹமட் சாலி தெரிவித்தார். இதனடிப்படையில் அதிகளவிலான மழை வீழ்ச்சி மேல் மாகாணத்தில் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய காலநிலையின் பிரகாரம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இடி மின்னல் தாக்கம் அதிகளவில் காணப்படும் என்பதனால் பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர், வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் வடக்கு தெற்…

  5. மனிதம் தலைகுனிந்துவிட்டது : யாழில் இடம்பெற்ற துன்பியல் சம்பவம் ( காணொளி இணைப்பு) ( மயூரன் ) யாழ் நகரிலுள்ள உணவகமொன்றின் முன்பாக யாசகர் ஒருவரை உணவகத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் நீர் ஊற்றி துரத்தும் காணொளி காட்சிகள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது. குறித்த கடை முன்பாக யாசகம் பெற்றுவந்த வயோதிபரை கடையில் வேலை செய்யும் நபர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்குடன், நீரினை அவர் மீது ஊற்றி அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தியுள்ளார். http://www.virakesari.lk/article/12586

  6. காவல்துறை உத்தரவினை மீறியமைக்காக துப்பாக்கிச் சூடு நடத்த முடியாது – சம்பந்தன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு காவல்துறை உத்தரவினை மீறிய காரணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று சம்பந்தனிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் காவல்துறையினரின் உத்தரவினை மீறி பயணம் செய்தமைக்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட முடியாது எனவும் இந்த சம்பவம் தொடர்பில் கிரமமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். துப்ப…

  7. வடக்கில் மாணவர் கொலை போன்று தெற்கிலும் நடக்கிறதாம் -மகிந்த கூறுகிறார் வடக்கில் நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் கொலை போன்று தெற்கிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். சோமாவதி விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், யாழ். இளைஞர்கள் இருவரின் மரணத்தை அரசாங்கத்தின் கணக்கில் பாரமாக்கப்படக் கூடாது எனவும் தென் பகுதியிலும் இது போன்ற சம்பவங்கள் பொலிஸாரினால் இடம்பெற்றுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். நல்லிணக்கம் எனும் போர்வையில் இதனை அரசாங்கம் அள்ளிக் கொள்ளாம…

  8. யாழ் மாணவர்கள் கொலை பொலிஸ் ஆணைக்குழு கவனம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு கவனம் செலுத்தி யுள்ளது. இதற்கமைய மாணவர்களின் மரணம் தொடர்பில் அடுத்த வாரம் பொலிஸ் ஆணைக்குழு அவரசமாகக் கூடி ஆராயவு ள்ளதாக அந்த ஆணைக்குழுவின் செயலாளர் ஆசியதாச குரே தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை 21 ஆம் திகதி இரவு 11.30 அளவில் யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் வைத்து பொலிசாரால் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்விகற்ற மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டு அட…

  9. பியர் அருந்திய மாணவிகள் இடைநீக்கம் நடந்துக்கொண்டமையால், பாடசாலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, தென் மாகாண கல்வித்திணைக்களத்தின் பாடசாலை ஒழுக்காற்றுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தை பாடசாலையின் அதிபர் மறைப்பதற்கு முயற்சி செய்ததாகவும் எனினும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் போன்றவர்களால், குறித்த பிரிவுக்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, சோதனையொன்றை நடத்திய ஒழுக்காற்று பிரிவு, தவறு செய்த மாணவிகள் தொடர்பில் கண்டறிந்தது. 11ஆம் தரத்தில் கல்விக்கற்கும் குறித்த மாணவிகள், 13 பியர் டின்களை பாடசாலைக்கு கொண்டுவந்து, அவற்றை வகுப்பறையில் வைத்து அருந்தியுள்;ளனர். இதன்போது, மாணவியொருவரது கையிலிருந்த பியர் டின், கைதவறி…

  10. மாணவர் கொலையை கண்டித்து வடக்கில் நாளை பூரண கதவடைப்பு யாழ்.பல்லைக் கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் வட கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடரும் அரச பயங்கரவாதத்தை கண்டித்தும் வட மாகாணம் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. கடந்த 21ஆம் திகதி யாழ்.கொக்குவில் – குளப்பிட்டி பகுதியில் யாழ்.பல்லைக் கழக மாணவர்கள் இருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்டனர். மேற்படி சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று மாலை 3.30 மணிக்கு தமிழ்தேசியகூட்டமைப்பின் 4 அங்கத்துவ கட்சிகளும் ம…

  11. “இதுவே சர்வதேச நியதி” : ஜனாதிபதி ஒரு இனம் எந்த மொழியைப் பேசுகிறதோ அதேமொழியில் அவர்களது கல்வியைத் தொடரவும் அரச கருமங்களை மேற்கொள்ளவும் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானமாக இருப்பதுடன் சர்வதேச நியதியாகவும் அது உள்ளது என ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனா தெரிவித்தார். கண்டி தர்மராஜ கல்லூரி மண்டபத்தில் இன்று இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் மொழி தின பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/12666

    • 4 replies
    • 694 views
  12. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாத் பதியூதீன் ஆகியோர் அமைச்சரவை கூட்டத்தின் போது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கூட்டத்தில் அமளி ஏற்பட்டுள்ளது. கேள்வி மனு ஊழல், தரகு பணம் பெறுதல், ஊழல், மோசடி சம்பந்தமாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி கடும் தொனியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு அமைச்சர் நீ திருடன் எனக் கூற மற்றைய அமைச்சர் நீ பச்சை கள்ளன் என திட்டியுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜனாதிபதி நிறுத்துமாறு சில முறை கூறிய பின்னரே இருவரும் தமக்கிடையிலான வாக்குவாதத்தை நிறுத்தியுள்ளனர். http://www.tamilwin.com/politics/01/121875?ref=…

  13. பதவி விலக ஜனாதிபதியே காரணம்-தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தான் இராஜினாமா செய்ய நேரடியான காரணமாக அமை ந்தது என இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக் குழுவின் முன்னாள் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் முதல் குடிமகன் தனது பணி மற்றும் சுயாதீன ஆணைக்குழுவின் பணிகள் குறித்து சந்தேகம் வெளியிட்ட பின்னர், பதவியில் தொடர்ந்தும் இருப்பது நியாயமானதல்ல எனவும் தான் நான்கு பக்கங்களை கொண்ட நீண்ட ராஜினாமா கடிதத்தை எழுதி விட்டு பதவி விலகி யதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வங்கி கணக்கொன்று சம்பந்தமான தகவலை அவ…

  14. மாணவர் படுகொலையை கண்டித்து கிளிநொச்சியில் நாளை பேரணி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து நாளை திங்கட்கிழமை கிளிநொச்சியில் பணிப்புறக்கணிப்புடன் கூடிய பேரணி இடம்பெற வுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து இந்த பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பிக்கும் பேரணி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தைச் சென்றடையவுள்ளது. இந்தப் பேரணியில், பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், சிவில் பொது அமைப்புக்கள், வர்த்தகர்கள், கல்விச்சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், அரசிய…

  15. வெகுவிரைவில் இந்த அரசாங்கம் வீழ்ந்து விடுமாம் ஆரூடம் கூறுகிறார் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அன்று சுயாதீனமானது எனக் கூறிய ஆணைக்குழுக்களையும் அதன் அதிகாரிகளையும் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் தெரிவித்துள்ளார். நாங்கள் ஆரம்பித்திலிருந்தே இதைக் கூறி வந்துள்ளோம். காலம் கடத்தாது இதை அவர் ஏற்றுக் கொண்டதையிட்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிக்கவெரட்டிய தொகுதியின் அமைப்பாளர் சீ.பீ.தென்னகோனின் இறுதிக் கிரியைகளின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக் ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்று இந்த அரசாங்கம் நாளுக்கு நாள் ஒன்றிணைந்த எதிர…

  16.  மட்டக்குளியில் சூடு: நால்வர் பலி; ஒருவர் காயம் மட்டக்குளிய பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவரை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. http://www.tamilmirror.lk/184547/மட-டக-க-ள-ய-ல-ச-ட-ந-ல-வர-பல-ஒர-வர-க-யம-

  17. பல்கலைக்கழக மாணவர் சுட்டுக்கொலை: ஐந்து பொலிஸார் கைது கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் வெள்ளிக்கிழமை (21) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டு பின்னர் அவர்களில் ஒருவர் சுட்டுக்கொலைச் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஐவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இவ்வாறு உயிரிழந்த இந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்களுடைய சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். http://www.tamilmirror.lk/184470/பல-கல-க-கழக-ம-ணவர…

  18.  சுன்னாகத்தில் வாள்வெட்டு: பொலிஸார் இருவர் படுகாயம் செல்வநாயகம் கபிலன் சுன்னாகம் சந்தை பகுதியில், மர்ம நபர்கள் இருவரால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் படுகாயமடைந்த பொலிஸார் இருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீதே வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் இலக்கத்தகட்டையும், முகத்தையும் துணியால் மறைத்தபடி வந்த இருவரே இவ்வாறு வாள் வெட்டை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http:/…

    • 6 replies
    • 1.1k views
  19. சிரித்துக்கொண்டே தமிழர்களைப் படுகொலை செய்யும் சிறிசேன! - கொதிக்கும் எம்.பி சிவாஜிலிங்கம் இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணப் பகுதியான யாழ்ப்பாணத்தில் சோதனைச்சாவடியில் கடந்த வியாழக்கிழமை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச் சென்ற யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படித்த விஜயகுமார் சுலாக்‌ஷான், நடராஜா கஜன் இருவரையும் போலீசார் சுட்டுக்கொன்றனர் .இந்த சம்பவம் அங்குள்ள தமிழ் சமூகத்திடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது . அப்பாவி மாணவர்களான காந்தோரோடையைச் சேர்ந்த விஜயகுமார் சுலாக்‌ஷான், கிளிநொச்சியைச் சேர்ந்த நடராஜா கஜன் ஆகியோரை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் அங்குள்ள தமிழர்களிடையே …

  20. வடக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் வடக்கில் நாளை மறுதினம் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து, நாளை மறுதினம் செவ்வாய் கிழமை வடக்கு மாகாணம் முழுவதும், ஹர்த்தாலுக்கு அனைத்து தமிழ்க் கட்சிகளாலும் கூட்டாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை யாழ். நகரில் நடந்த கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/4208

  21. கிளாலியில் மர்மப்பொருள் வெடித்து ஒருவர் படுகாயம் யாழ்ப்பாணம் கிளாலிப் பகுதியில் மர்மப் பொருள் வெடித்து ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலசுப்பிரமணியம் -பகீரதன்(38) என்பவரே படுகாயமடைந்தவராவார். சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://onlineuthayan.com/news/19313

  22. இராணுவப் புரட்சி ஆபத்து உள்ளதா? இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் கடந்த 12ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிகழ்த்­திய உரை, பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. இதன் விளை­வாக, தற்­போ­தைய கூட்­ட­ர­சாங்கம் எந்­த­ளவு காலத்­துக்கு நிலைத்து நிற்­குமோ என்ற கேள்­வியும் எழுந்­தி­ருக்­கி­றது. ஜனா­தி­ப­தியின் கருத்து, அவரை ஆட்சி பீடத்தில் ஏற்­றிய தரப்­பு­களைக் கடும் ஏமாற்­றத்­துக்கும் உள்­ளாக்­கி­யி­ருக்­கி­றது. ராஜபக் ஷ குடும்­பத்­தினர் உள்­ளிட்ட, முன்­னைய ஆட்­சியில் இருந்­த­வர்­களை பாது­காக்க முற்­ப­டு­கி­றாரா என்ற சந்­தே­கத்தை பகி­ரங்­க­மாக எழுப்பும் நிலையை ஜனா­தி­ப­தியின் கருத்து ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. ஊழல், மோ…

  23. இலங்கையில் வடக்கு-கிழக்கு இணைப்பு முதலமைச்சர் பதவியுடன் தொடர்புடையதல்ல: சம்பந்தன் இலங்கையில் வடக்கு-கிழக்கு இணைப்பு என்பது முதலமைச்சர் பதவியுடன் தொடர்புடைய விவகாரம் அல்ல என, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான இரா.சம்பந்தன் மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற மாகாண தமிழ் இலக்கிய விழாவில் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ''வடக்கு -கிழக்கு இணைந்த பிராந்தியத்தில் படித்த, பண்பான ஒரு முஸ்லிம் முதலமைச்சரைக் கூட ஏற்றுக் கொள்வதற்கு தயார் '' என்றும் வலியுறுத்தி கூறினார். கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் தினைக்களத்தின் …

    • 1 reply
    • 371 views
  24. கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா ஆரம்பம் கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பில் கோலாகலமான முறையில் ஆரம்பமானது. இன்று காலை மட்டக்களப்பு கல்லடி உப்போடை விபுலானந்தர் சமாதியில் நடைபெற்ற வணக்க நிகழ்வினை தொடர்ந்து தமிழ் இலக்கிய விழா ஆரம்பமானது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் ஆரம்பமான கலாசார பவனி கல்லடியில் இருந்து ஆரம்பமானது. கிழக்கு மாகாணத்தில் உள்ள மூவினங்களின் பாரம்பரிய கலை கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த கலாசார பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு இராமக்கிருஸ்ண மிசன் சுவாமி பிரபு பிரபானந்த ஜி மற்றும் கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் திருமதி சிவப்ப…

    • 4 replies
    • 626 views
  25. கிளிநொச்சியில் பெரும் திரளானவா்களின் கண்ணீருடன் கஜனின் இறுதி ஊா்வலம் – அரசியல்வாதிகளின் உரைகளுக்கு தடை விதித்த மாணவர்கள்:- யாழ் பல்கலைகழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்று கிழமை அவரது கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு இரணைமடு பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. காலை பத்து மணிக்கு இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று திருப்பலி ஓப்புக்கொடுக்கப்பட்டு பூதவுடல் நல்லடக்கத்திற்கு ஊா்வலமாக பல்கலைகழக மாணவா்கள், பொது மக்கள் மற்றும் அரசியல் பிரமுகா்கள் என பெரும் திரளானவா்கள் கலந்துகொள்ள இறுதி ஊா்வலம் இடம்பெற்றது. அஞ்சலி நிகழ்வின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.