ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
அமைச்சர் சஜித் பிரேமதாசவின் சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் லஞ்சல் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்திளர் சந்திப்பின் போது, சோசலிச இளைஞர் சங்கம் இந்த விடயத்தின தெரிவித்துள்ளது. குழுவொன்றுக்கு தொழில்வழங்குவது தொடர்பிலான சர்ச்சைக்குரிய காணொளி குறித்து இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சோசலிச இளைஞர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒருவருடைய உயரம், கட்டை என்பவற்றைப் பார்த்து தொழில்வழங்குவதற்கு அமைச்சர் ஒருவருக்குள்ள அதிகாரம்தான் என்ன? தனக்காக தேர்தலில் பணியாற்றியவர்களுக்கு மாத்திரம் தொழில்வழங்கு…
-
- 3 replies
- 368 views
-
-
சிறுபான்மை இனத்தவர்கள் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் – ரீடா இசாக் குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு சிறுபான்மை இனத்தவர்கள் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுபான்மை விவகாரம் குறித்த பிரதிநிதி ரீடா இசாக் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இசாக், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்துள்ள நிலையில் பாதுகாப்புப் படைகளில் சிறுபான்மை சமூகத்தினர் உள்வாங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் சிறுபான்மை சமூகத்தினர் பாதுகாப்புப் படையில் அங்கம் வகிக்காமை சிறுபான்மை சமூகத்தினர் எதிர்நோக்கி வரும் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 2 replies
- 559 views
-
-
யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் நாளை பணிப்புறக்கணிப்பு. குளோபல் தமிழ்ச்செய்தியாளர் யாழ்ப்பாணம் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ஆனந்தராஜா ஆகியோர் தொடர்பில் அவதூறான செய்திகளை இணையத்தளமொன்று செய்திகள் வெளியிட்டு வருவதனை கண்டித்து யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். குறித்த இணையத்தளத்தில் கிளிநொச்சி நீதிபதி தொடர்பாகவும் , கிளிநொச்சி நீதிபதியையும் , யாழ்ப்பாண சிறைச்சாலையில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரை தொடர்பு படுத்தியும், யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி தொடர்பாகவும் அவதூறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த இணையத்தள செய்தி தொடர்ப…
-
- 3 replies
- 378 views
-
-
குமார வெல்கமவின் தோட்டம் சோதனை -ஜனாதிபதி விசனம் அரசாங்கத்திற்கு சொந்தமான குண்டு துளைக்காத வாகனங்கள் இரண்டினை மறைத்து வைத்துள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் தோட்டத்தை சுற்றிவளைத்து சோதனையிட்டமை முறையற்ற செயல் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான செயல்களினால் முழு அரசாங்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். யார் என்ன கூறினாலும் இது ஒரு சிறுபிள்ளைத்தனமான செயல் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக யாராவது தகவல் வழங்கினால் இவ்வாறான குழந்தைத்தனமான செயற்பாடுகளை …
-
- 1 reply
- 497 views
-
-
-
மன்னார் அரிப்பு கிராம வீட்டில் திருட்டில் ஈடுபட முயன்ற கடற்படை சிப்பாயை சுற்றி வளைத்துப் பிடித்த கிராம மக்கள்: கடற்படை துப்பாக்கி பிரயோகம்! ஆலயத்தில் சிறைப்பிடிக்கப்பட்டவர் சிலாபத்துறை பொலிஸாரிடம் ஒப்படைப்பு 2016-10-20 10:58:15 (எஸ்.றொசேரியன் லெம்பேட், வாஸ் கூஞ்ஞ) முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அரிப்பு கிராமத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு கடற்படையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதோடு கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அரிப்பு கிராமத்தில் கடந்த சில தினங்களாக திருட்டுச்சம்பவங்கள் இடம் பெற்…
-
- 0 replies
- 171 views
-
-
இலங்கை வருகிறார் இந்திய வெளியுறவுச் செயலர் இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை மறுதினம் சனிக்கிழமை இலங்கை வருகிறார். உயர்மட்டக்குழுவினருடன் இலங்கை வரும் இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ். ஜெய்சங்கர், இலங்கைகையில் தங்கியிருக்கும் 3 நாட்களில் இந்தியாவின் புதிய முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடவுள்ளார். இதன்போது இலங்கையின் உயர்மட்ட அதிகரிகள் மற்றும் வர்த்தகர்களுடன் சந்திப்புக்களை மேற்கொள்வார். இவரது விஜயத்தின் போது எட்கா ஒப்பந்தம் தொடர்பில் எவ்வித பேச்சுக்களும் இடம்பெறாதென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/1…
-
- 0 replies
- 326 views
-
-
நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களிலும் பக்கசார்பின்மையும் சுயாதீனத்துவமும் பேணப்பட வேண்டும் – ஜனாதிபதி நாட்டுக்காக தான் பக்கசார்பற்ற மத்திம கொள்கையைப் பின்பற்றுவதாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களும் பக்கசார்பின்மையையும் சுயாதீனத்துவத்தையும் பேணுவதுடன் அதற்கு புறம்பாக செயற்பட எவருக்கும் இடமளிக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மகஒய நீர்வழங்கள் திட்டத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று (19) கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அனைவருக்கும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் நகர திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சினூடாக ஜெய்க்கா நிதி உதவியின் கீழ் நிர…
-
- 0 replies
- 183 views
-
-
நாட்டுக்காக செய்யப்படாதிருந்த பொறுப்புக்களை அரசு என்ற வகையில் நிறைவேற்றுகிறோம் – ஜனாதிபதி தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த போதிலும் எதனையும் மேற்கொள்ளவில்லையென முன்னாள் தலைவர்கள் கூறிவந்தாலும் தற்போதைய அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னாள் தலைவர் நாட்டுக்காக நிறைவேற்றாத பொறுப்புக்களையே நிறைவேற்றி வருவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். அவை தொட்டுணர முடியாத கண்ணுக்கு புலப்படாத விடயங்களாக இருந்தபோதிலும் தாய் மண்ணினதும் இளம் தலைமுறையினரின் எதிர்காலத்திற்காகவும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்களே எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், நாட்டு மக்கள் இழந்துபோயிருந்த சுதந்திரம், ஜனநாயகம், அடிப்படை உரிமைகளை வெற்றி கொள்வதற்கும், நாடு இழந்திர…
-
- 0 replies
- 195 views
-
-
கிளிநொச்சியில் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம் : மக்கள் பூரண ஆதரவு (எஸ்.என்.நிபோஜன்) கிளிநொச்சி பரந்தன் கரடிப்போக்கு டிப்போ சந்தி ஆகிய பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கம் கிளிநொச்சி மாவட்ட சிவில் அமையம் ஆகிய இணைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்து நடத்திவருகின்றது. இன்று காலை 8 மணிக்கு ஆரம்பிக…
-
- 0 replies
- 337 views
-
-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல், அப்போதைய அரசாங்கத்தினால் திட்டமிட்ட நடவடிக்கை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தகவல் வெளியிட்டிருந்தார். அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர் வெளியிட்ட கருத்தும் அமைந்துள்ளது. 2006ம் ஆண்டி டிசம்பர் மாதம் முதலாம் திகதி பித்தல சந்தியில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவம் கோத்தபாயவினால் திட்டமிடப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியில் இருந்த நபர், இராணுவ புலனாய்வு பிரிவுக்கு நீண்ட காலமாக தகவல் வழங்கிய தமிழ் நன்றாக பேசக்கூடிய அரசாங்கத்த…
-
- 1 reply
- 720 views
-
-
அடிப்பாங்கள், உதைப்பாங்கள், எரிப்பாங்கள், கொழுத்துவாங்கள் ஆனாலும் தொடர்ந்தும் வரும் என்றார் யோகர் சுவாமிகள் 1961 இல். யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகை ஆரம்பிக்கப்ட்ட போது யோகர் சுவாமிகளிடம் அருள் வாக்குப்பெறச் சென்றபோது இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். ஆம் அவருடைய அருள்வாக்கு பின்நாட்களில் பலித்துத்தான் போய்விட்டது. உலகெங்கிலும் இல்லாத அளவிற்கு வீறுகொண்டெழுந்த போராட்டங்களும், அதனோடு எழுச்சி பெற்ற தமிழ் ஊடகவியலும் பின்னாளில் மிக மோசமாக அடக்கி ஒடுக்கப்படும் என்பதை அன்றே யாழ்ப்பாணத்தின் சித்தர் பரம்பரை வெளிப்படுத்திவிட்டது, அந்த வகையில் தமிழ் ஊடகவியலும், தமிழ் ஊடகவியலாளர்களும் எவ்வளவு வேகமாகவும், அறிவியல் சார்ந்தும் வளர்ச்சியுற்றார்களோ அவர்கள் அவ்வளவ…
-
- 0 replies
- 481 views
-
-
யாழ்பாண தீவுகளுக்கிடையேயான போக்குவரத்திற்கு ஜனாதிபதி அனுமதி யாழ் தீபகற்பத்தில் அமையப்பெற்றுள்ள தீவுகளுக்கிடையே பயணிகள் போக்குவரத்தினை சீரான முறையில் நடாத்தும் வேலைத்திட்டத்திற்கு இலங்கை கடற்படையினரின் முழுமையான ஆதரவினை வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிக்காட்டலிற்கமைவாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதன் அடிப்படையில் யாழ்ப்பாண தீவுகளிற்கருகாமையில் படகுதுறைகள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிக்கும் பொருட்டு கடற்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. கரையோர பயணிகள் போக்குவரத்து சேவ…
-
- 16 replies
- 835 views
- 1 follower
-
-
கோத்தா, மஹிந்த தரப்பு இராணுவப் புரட்சியை ஏற்படுத்தலாம்..! (ஆர்.யசி) நல்லாட்சியை பலப்படுத்த நாம் தடுக்கும் முயற்சிகளில் கோபமடையும் கோத்தாபய, மஹிந்த தரப்பினர் சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்த இராணுவப்புரட்சி வரையில் செல்லலாம் என அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் அவருக்கு விசுவாசமான இராணுவத்தினர் இன்றும் மஹிந்த ராஜபக் ஷவை ஆதரித்து பாதயாதிரைகளையும் பிரச்சாரங்களை செய்துகொண்டு உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு தரப்பை விசாரிப்பதும், அவர்களை நீதிமன்றில் கொண்டு செல்வதும் முரண்பாடுகளை ஏற்படுத்தும் என ஜனாதிபதி தெரிவித்த நிலையில் அது இராணுவப்புரட்சியை நோக்…
-
- 0 replies
- 341 views
-
-
பிளவுபடாத நாட்டுக்குள் சமாதானம்: த.தே.கூ வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, நீதி மற்றும் சமவுரிமையை அடிப்படையாகக் கொண்டு பிளவுபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் நிரந்தர சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் கருமத்தில், தொடர்ந்தும் தமது ஆதரவை வழங்கும் என்பதை வலியுறுத்த விரும்புவதாக, அக்கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் புதிய செயலாளர் நாயகமாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும், அன்டோனியோ குட்டரஸுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. ஏகமனதாக இடம்பெற்ற அவரது தெரிவானது, அவர் மீதான நம்பிக்கைக்கு ஓர் ஆதாரமாகும் எனவும், அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குற…
-
- 1 reply
- 258 views
-
-
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா சிறுபான்மை இன விவகாரங்களை ஆராயும் விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார். இலங்கையின் பாராளுமன்ற கட்டட தொகுதியில் இன்று புதன்கிழமை (19.10.2016) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்திப்பின் போது இலங்கையில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக பல்வேறு இன மத ரீதியிலான இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்ற நிலையில், மக்களுக்கு சம அந்தஸ்து அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின…
-
- 6 replies
- 784 views
-
-
எல்.ரீ.ரீ.ஈ குடும்பத்துக்கு நட்டஈடு சந்தேகநபரின் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பைச் சேர்ந்தவர் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரொருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட, முன்னாள் இராணுவ லெப்டினன், சுட்டுக்கொல்லப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ சந்தேகநபரின் குடும்பத்தினருக்கு, இரண்டு மில்லியன் ரூபாயை, நட்டஈடாக வழங்கினார். பருத்தித்துறை இராணுவ முகாமில் 1998ஆம் ஆண்டு, குறித்த சந்தேகநபர், கைவிலங்கிட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. http://www.tamilmirror.lk/184197/எல-ர-ர-ஈ-க-ட-ம-பத-த-க-க-நட-டஈட-சந-த-கநபர-ன-
-
- 5 replies
- 459 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 210 மில்லியன் யூரோ வழங்குவதாக உறுதிமொழி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு சுமார் 210 மில்லியன் யூரோக்களை வழங்குவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது. 2020ம் ஆண்டு வரையிலான அபிவிருத்திப் பணிகளுக்காக இவ்வாறு உதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2007ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையில் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திடம் பெற்றுக்கொண்ட உதவிகளை விடவும் இந்த தொகை இரண்டு மடங்கு அதிகமானது என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. தற்போது பெல்ஜியத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐரோப்பிய ஒன்றிய முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். நீடி…
-
- 1 reply
- 319 views
-
-
தமிழ் ஊடகப்பரப்புக்கு எதிரான படுகொலை கலாச்சாரம் 41 ஊடகவியலாளர் மற்றும் ஊடகப்பணியாளர்களை கொல்லவோஅல்லதுகாணாமல் போகவோ செய்துள்ளது ஊடக அறிக்கை 19.10.2016 இன்றுடன் எங்கள் சக நண்பன் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்து செல்கின்றது. இலங்கையினில் தமிழர் தாயகத்தினில் படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான எமது மக்களிற்கு எவ்வாறு நீதி கிடைக்கவில்லையோ,அதே போன்று படுகொலை செய்யப்பட்ட நிமலராஜன் உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களிற்கும் இது வரை நீதி கிடைக்கவில்லை. நிமலராஜன் படுகொலையுடன் கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழ் ஊடகப்பரப்புக்கு எதிரான படுகொலை கலாச்சாரம் 41 ஊடகவியலாளர் மற்றும் ஊடகப்பணியாளர்களை கொல்லவோஅல்ல…
-
- 0 replies
- 168 views
-
-
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவை சுட்டுக்கொலை செய்வதற்கு இராணுவப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்ட பாதுகாப்பு அமைச்சின் பிரதானி யார்? அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜே.வி.பியின் பிரச்சார செயலாளரும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித தெரிவித்துள்ளார். புரட்சியாளர் சேகுவராவை நினைவுகூரும் நிகழ்வு, சோஷலிஸ இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் நீர்கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே விஜித இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "ஊழல், மேசடிகள் குறித்தும், மர்ம கொலைகள் பற்றியுமே இன்று மக்களுக்கு பேசவேண்டியநிலை உருவாகியுள்ளது. அன்று தோழர் சேகுவரா…
-
- 1 reply
- 340 views
-
-
யாழினில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி நாளைஆர்ப்பாட்டம்! படுகொலையான ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16வது ஆண்டு நினைவு நாளான நாளை புதன்கிழமை ஊடக சுதந்திரத்திற்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பதாக நாளை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டினில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. படுகொலையான மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியார்களிற்கு சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையினில் காலதாமதமின்றிய விசாரணை! -ஊடகவியலாளர்கள் தமது பணிகளை சுதந்திரமாக ஆற்றுவதற்கான சுதந்த…
-
- 2 replies
- 377 views
-
-
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டை நகர உடன்படிக்கையை இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் கிங்ஸ்டன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) என்ற மாநகரம் யாழ்ப்பாணத்துடன் வரலாற்றுமுக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டுள்ளது. குறித்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பொருளாதார வளர்ச்சி, வன்முறை ஒழிப்பு, அனைவருக்கும் பொதுவான சட்டவரைமுறை, நிர்வாகம், தேவை அறிந்து உரிய முடிவு எடுக்கும் பொறுப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது உரை…
-
- 3 replies
- 820 views
-
-
யாழில் கைதி சித்திரவதை செய்து கொலை :ஏழு பேருக்கு விளக்கமறியல் ; ஒருவருக்கு பிடியாணை (ரி.விரூஷன்) யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் 2011ஆம் ஆண்டு திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பொலிஸாரினால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் 7 பேரை எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இவ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஏழாவது சந்தேக நபர் மன்றில் முன்னிலையாகாத நிலையில் குறித்த நபருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி ம…
-
- 0 replies
- 447 views
-
-
மன்னார் முசலி பிரதேச பகுதியில் இன்று ஏற்பட்டிருந்த பதற்ற நிலையை அடுத்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன. குறித்த பகுதியில் இன்று இரவு ஏற்பட்ட அசாதாரண நிலையை தொடர்ந்து அங்கு பொது மக்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் அண்மைய நாட்களில் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த ஒருவரை இன்று பொது மக்கள் மடக்கி பிடித்துள்ள நிலையில், பொது மக்களுக்கும், கடற்படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உண்மையில் அங்கு இடம்பெற்ற சம்பவம் என்ன..? தற்போது கடற்படையினருடைய நிலைப்பாட…
-
- 1 reply
- 712 views
-
-
பெல்ஜியத்தில் சொக்லெட் தயாரித்த ரணில் (படங்கள் இணைப்பு) பெல்ஜியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க சொக்லெட் நிறுவனமொன்றில் வைத்து சொக்லெட்டுகளை தயாரித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க சொக்கலட் தயாரிப்பதை போன்ற புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வது மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பிரதமர் பெல்ஜியம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/12472
-
- 1 reply
- 372 views
-