ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143434 topics in this forum
-
இலங்கை குறித்த ஐ.நாவின் செயற்பாட்டில் திருப்தி இல்லை. இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பதவிக்காக போட்டியிட உள்ள ஹெலன் கிளார்க் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கப் படையினருக்கும் இடையிலான யுத்தத்தின் போதுஐக்கிய நாடுகள் அமைப்பின் பங்களிப்பு போதுமானதல்ல என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். உலகில் ஏற்படும் வன்முறைகளுக்கான மூல காரணிகளை கண்டறிந்து அதற்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதவி வகிக்கும் காலத்திற்க…
-
- 1 reply
- 314 views
-
-
குமார் சிறையில், விமல் வௌியில்: எங்கும் இருப்பது டீல் தான்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகம் அவதானம் செலுத்துவது யார் குறித்து என்பது தொடர்பில் தௌிவில்லை என, அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதாகவும், அவர் கடந்த காலங்களில் அவ்வாறான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள டிலான் பெரேரா, எனினும் அது குறித்து ஏனையோருக்கு எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அத்துடன், ஜனாதிபதி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரை விட ஒன்றிணைந்த எத…
-
- 0 replies
- 319 views
-
-
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு பிணை கோரிய மனுத் தொடர்பான வழக்குகள் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டன குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிள்ளையானை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நடந்த கடும் வாதப்பிரதிவாதங்களுக்கு பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 மணி நேரம் வரை இந்த விவாதங்கள் இடம்பெற்றதாக அறியமுடிகின்றது. Go to Videos நீண்ட நேர விவாதத்தின் மத்தியில் பிள்ளையானின் வழக்கு மீதான விசார…
-
- 1 reply
- 657 views
-
-
யாழில் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு 971 மில்லியன் ரூபா ஒதுக்கீடு வடக்கில் இடம்பெயர்ந்த நிலையில் 31 முகாம்களில் தஞ்சமடைந்துள்ள 971 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்காக 971 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் சுவாமிநாதன் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இணை அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக இந்த தகவலை வெளியிட்டார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களை விர…
-
- 0 replies
- 247 views
-
-
கீழ் மட்டத்தில் வாக்கு வங்கியும் வரவேற்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே இருப்பதாகவும் மகிந்த ராஜபக்சவுக்கு அப்படியான கீழ் மட்ட வாக்கு வங்கி எதுவும் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக்கல்லூரியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை தெரிவு செய்யும் நிகழ்வில் பேசும் போதே சந்திரிக்கா இதனை கூறியுள்ளார். இணைந்து செல்லாவிட்டால் வெற்றி பெற முடியாது எனவும் கிராமங்களில் உள்ளவர்கள் மகிந்த ராஜபக்சவையே இன்னும் விரும்புவதாகவும் அமைச்சர் ஜோன் செனவிரட்ன கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மே…
-
- 2 replies
- 374 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் ஒன்றுக்கு அமையவே முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச விளக்கமறியலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரதூரமான பல்வேறு ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் இருக்கும் நிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடந்து 24 மணிநேரம் முடிவதற்கு பசில் ராஜபக்ச இலங்கையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். நாடு திரும்பிய அவர் கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுக்கப்பட்டார். இந்த நிலையில், திவிநெகும திட்டத்தின் கீழ் நிதியை பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் பசில் ராஜபக்ச அண்மையில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வை…
-
- 0 replies
- 389 views
-
-
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும், குறைவாகவே வரி வருமானம் கிடைத்திருப்பதாக, சிறிலங்காவின் நிதி அமைச்சர் சார்பில் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிதியமைச்சரின் சார்பில், நாடாளுமன்ற அவைத்தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல, 2016ஆம் ஆண்டுக்கான நடுஆண்டு நிதிநிலை குறித்த அறிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன்படி, இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் சிறிலங்கா அரசாங்கத்தினால் 473 பில்லியன் ரூபா வரி வருமானமாக பெறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 19.6 வீதம் அதிகமாகும். எனினும், கடந்த ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான இந்த நான்கு மாத காலப்பகுதியில், 495 பில்லியன…
-
- 0 replies
- 249 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளால், தமிழ் மக்களின் அடையாளங்களும், உரிமைகளும் ஒட்டுமொத்தமாக தாரைவார்க்கப்பட்டு விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், குற்றம்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புகூறல் ஆகியன இரண்டும் சமாந்திரமாக நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே தமிழ் மக்கள் கடந்தகால அடக்குமுறைகளில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்றும் கூறினார். ஜெனிவா தீர்மானங்கள், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைக் கொண்டு பலம்வாய்ந்த நாடுகள் தமது தேவைகளைப் ப…
-
- 0 replies
- 284 views
-
-
சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12000 வெளிநாட்டவர்கள் உரிய வீசாயின்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்தார். இவ்வாறானவர்கள் நாட்டில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாதெனத் தெரிவித்த அவர் இவர்களைக் கைதுசெய்து நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவவும் குறிப்பிட்டார். உரிய வீசா அனுமதியில்லாமல் 12000 வெளிநாட்டவர்கள் நாட்டில் தங்கியுள்ளனர். சீனா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் பிரஜைகளே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் நாட்டில் உள்ளனர். இவர்கள் அனைவரையும் கைது செய்து கூடிய விரைவில் நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெளிநாட்டவர்களில் அதிகமானவர்கள் சுற்றுலா வீ…
-
- 0 replies
- 427 views
-
-
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள்குறித்த விசாரணைகள் மீளஆரம்பம் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளது. ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டமை, தாக்குதல் நடத்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரேஸ்ட ஊடகவியலாளர்களான உபாலி தென்னக்கோன் மற்றும் கீத் நொயர் உள்ளிட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளன. இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்க்பபடுகிறது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71…
-
- 0 replies
- 269 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: ‘இடைத்தரகர்’ அமைப்புகள் தாமாகவே விலகிக்கொள்ள வேண்டும்: இல்லையேல் பகிரங்கப்படுத்தப்படும். FFSHKFDR – Vavuniya District தலைவி அறிவுறுத்தல். சிறீலங்கா அரசின் மிகவும் மோசமான ‘ஆள்கடத்தல்கள் தடுத்து வைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘பரிகார நீதியும் - நியாயமான இழப்பீடுகளும்’ கிடைக்க வேண்டும் என்பதற்காக, விசுவாசமாகவும் - அர்ப்பணிப்பாகவும் பணி செய்யும் செயல்பாட்டாளர்கள் யார்? காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை வெளிநாட்டு தூதுவராலயங்களிடமிருந்து நிதியை பெற்றுக் கொள்வதற்கு ஒரு வழிமுறையாக பயன்படுத்தி வரும் அமைப்புகள் எவை? என்பதை கடந்த ஏழு வருட காலத்தில் தம்மால் அறிந்தும் - தெளிந்தும் கொள்ள மு…
-
- 0 replies
- 264 views
-
-
பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர் மற்றும் யுவதி கைது யாழ்பாணத்தில் வீடொன்றில் புகுந்து தங்கக் கட்டிகளை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 20 வயதான இளைஞர் மற்றும் யுவதி ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (20) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் இருவரும் வவுனியா, சிதம்பரப்புரம் பகுதியை சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்…
-
- 1 reply
- 320 views
-
-
தமிழ்த் தலைமைகளும் றிஸ்க் எடுக்க வேண்டும்-நிலாந்தன் தமிழ் அரசியல் தலைமைகள் சிங்களத் தலைவர்களைப்போல தமிழ் மக்களின் உரிமைக்காக றிஸ்க் எடுக்குமாறு நிலாந்தன் கேட்டுக்கொண்டார். மன்னாரில் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட த.தே.கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் , கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள்,கல்விமான்கள் மற்றும் மதத்தலைவர்களுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே அரசியல் ஆய்வாளரும் பத்தி எழுத்தாள…
-
- 1 reply
- 476 views
-
-
ரவிராஜ் கொலைவழக்கு 7பேர் மீது வழக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், 7 சந்தேகநபர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் படுகொலை வழக்கில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதீப் சந்திம தாக்கல் செய்த மீளாய்வு மனு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான மூத்த அரச சட்டவாளர் சுகர்சினி ஹேரத், இந்த வழக்குத் தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் முடிந்துள்ள நிலை…
-
- 0 replies
- 302 views
-
-
யாழ் பல்கலைக்கழக நிலைமைகள் வழமைக்குத் திரும்பவில்லை – IUSF யாழ்ப்பாண பல்கலைக்கழக நிலைமைகள் வழமைக்குத் திரும்பவில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது. அரசாங்கம் நிலைமைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக கூறிய போதிலும் உண்மையில் இயல்பு நிலை ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தமிழ் சிங்கள மாணவர்களுடன் பேசியதாகவும் ஒவ்வொரு தரப்பினரும் மற்றைய தரப்பினர் மீது குற்றம் சுமத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாதுகா…
-
- 0 replies
- 342 views
-
-
பல்கலைகழக மோதல் : சிங்கள தமிழ் இனவாதிகளுக்கு தீனியாக அமைந்துவிட்டது யாழ். பல்கலைக்கழக மோதல் குறித்து ஆராய பல்கலைக்கழக நிர்வாகக் குழுவொன்றை நியமித்து சம்பவம் தொடர்பில் நாட்டின் சட்டம் நீதி முறைமைகளுக்கு அமைய பொலிஸ் மட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்ளப்படும். இந்த செயற்பாட்டின் ஊடாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல் குரே தெரிவித்தார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நகர்வுகளில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது. இது சிங்கள தமிழ் இனவாதிகளுக்கு தீனியாக அமைந்துவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டார். வடமாகாண ஆளுநரின் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போத…
-
- 0 replies
- 230 views
-
-
விசாரணைக்கு எத்தனைபேர்? முரணாகும் தகவல்கள். யாழ் பல்கலைக்கழக மோதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள்வெளியாகி வருகின்றன. இதன்படி விஞ்ஞான பீட மாணவர்களிடையே கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல் தொடர்பான விசாரணைகளுக்காக நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “ யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், இந்த விசாரணைக் குழுவை நியமித்துள்ளார்…
-
- 0 replies
- 343 views
-
-
எடுத்தவுடனேயே “சிங்களவன் துவேசி” என்றும் கூறும் யாருடனும் நான் அதிகமாக பேசுவதில்லை: சிரித்துக்கொண்ட பேச்சை மாற்றிவிடுவேன்! யாழ் பல்கலைக்கழக அசம்பாவிதம் இரண்டு நாட்களாக மனதில் ‘தி்க் திக்’ என்று அடிக்கிறது! நீண்டகாலமாக கசிந்துகொண்டிருந்த நெருப்பு அது! வெடித்துவிட்டது! தமிழ் மாணவர்கள் என்றுமே உணர்வுகளால் வேறுபட்டவர்கள்: நொந்து போனவர்கள் அவர்கள்! பல்கலைக்கழகத்தின் உள்ளேயும் சரி வெளியேயும் சரி, மிகவும் சங்கடப்படுத்தப்படுபவர்கள். பகடிவதையின் உச்சத்தை தொடுமளவு மிகவும் பயங்கரமான தாக்குதல்களை கடந்துதான் அவர்கள் சாதிப்பது! முஸ்லிம்கள் எந்தளவு மத கடமைகளுக்கு முக்கியம் கொடுப்பார்களோ அதே போன்றுதான் தமிழர்கள் கலாச்சாரத்…
-
- 21 replies
- 1.3k views
-
-
மத்தல ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் முதலீட்டாளர்கள் ஜூன் இறுதிக்குள் தமது முதலீடுகளை செய்ய முடியும் என அசராங்கம் அறிவித்துள்ளது. இந்த விமான நிலையம் இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தினசரி இரண்டு விமானங்களே தற்போது இந்த விமான நிலையத்தில் சேவையில் ஈடுபட்டுள்ளன. 2013ஆம் ஆண்டு இந்த விமான நிலையம் திறக்கப்பட்டதை அடுத்து, இலங்கையின் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைப்பே சீராக்கி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தை அமைப்பதற்காக சீனாவிடம் கடனாக பெற்றுக் கொண்ட 190 மில்லியன் டொலரை திருப்பி செலுத்த போதுமான வருவாய் தற்போது இல்லை. …
-
- 1 reply
- 441 views
-
-
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மற்றுமொரு விமான ஓடுதளத்தை நிர்மாணிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசேகா அபேசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு நாராஹேன்பிட்டியில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்போதுள்ள ஓடுதளத்தில் இருந்து 2 ஆயிரம் மீற்றர் தொலைவில் இந்த இரண்டாவது ஓடுத்தளத்தை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஓடுதளத்தை நிர்மாணிக்க தேவையான காணி தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போதுள்ள விமான ஓடுதளத்தை நவீனமயப்படுத்த…
-
- 0 replies
- 339 views
-
-
'சந்தேகநபரை காணவில்லை': குரே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக இனங்காணப்பட்ட சந்தேகநபர் தற்போது அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட குரே தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். பிழைசெய்தவர்கள் நீதியின் முன்னால் நிறுத்தப்படவேண்டும். சந்தேகநபரை இன்னும் தீவிரமாகத் தேடி விரைவில் கைதுசெய்ய வேண்டும்' என்றும் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/177539/-சந-த-கநபர-க-ணவ-ல-ல-க-ர-#sthash.3FL4JhcL.dpuf
-
- 2 replies
- 373 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்க சர்வதேசத்திடம் போகக்கூடாது! sritha 4 hours ago செய்திகள் 4 Views தமிழர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு சர்வதேசத்திடம் போகக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தில் சிறீலங்கா இராணுவத்தினால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழர் தரப்பினால் சர்வதேச விசாரணை கோரப்பட்டுவரும் நிலையில் ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், உள்நாட்டில் யுத்தம் நடைபெற்றது, உள்நாட்டில் நடந்த யுத்தத்துக்கு உள்நாட்டிலேதான் தீர்வு காணவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 594 views
-
-
சீன ஆதிக்கத்தை முறியடிப்பதற்கான இந்திய மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, சிறிலங்காவின் பௌத்த பீடங்களின் முக்கிய பௌத்த பிக்குகளை புதுடெல்லிக்கு அழைத்து, நாலந்தா மரபு பிக்குகளுடன், பேச்சுக்களை நடத்த இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. பிராந்தியத்தில் சீனாவின் தலையீட்டை முறிடியப்பதற்காக, கொழும்புடனான தொடர்புகளை ஆழப்படுத்தி வரும் இந்தியா, சிறிலங்காவின் தேரோவாத பௌத்த பிக்குகளையும், நாலந்தா மரபைப் பின்பற்றும், பௌத்த பிக்குகளையும், புதுடெல்லியில் முதல் முறையாகச் சந்தித்துப் பேசும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், தலாய்லாமாவை இன்று சந்திக்கவுள்ள சிறிலங்கா பௌத்த பிக்குகள், அவரைத் தமது நாட்டுக்கு அழைக்கவும் திட்டமிட்டுள்ளனர். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால …
-
- 1 reply
- 322 views
-
-
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம் தொடர்பான கைது செய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர் பிரேமானந்த உதலாகம, ஜேர்மனியில் தமிழர்களிடம் கப்பம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாயுள்ளன. லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட பின்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, உதலாகமவை ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்திற்கு சாதாரண ஊழியர் பணிக்கு அனுப்பி வைத்துள்ளார். மூன்று வருடங்கள் ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணிப்புரிந்து வந்த உதலாகம, 2014 ஆம் ஆண்டு இலங்கை அழைக்கப்பட்டுள்ளார். உதலாகம, ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணிப்புரிந்த காலத்தில், புதிதாக கடவுச்சீட்டு கோரி விண்ணப…
-
- 1 reply
- 516 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் நீதிமன்றில் ஆஜராகினார் -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ரி. சிசிதரன் யாழ்ப்பாணம் நீதவான் நீதமன்றத்தில் இன்று புதன்கிழமை (20) ஆஜராகினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், வணிக முகாமைத்துவபீட பீடாதிபதி ரி. வேல்நம்பி மற்றும் விரிவுரையாளர்கள் ஊடாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகினார். இவரை நேற்றுச் செவ்வாய்க்கிழமை (19) இரவு விசாரண…
-
- 4 replies
- 853 views
-