Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 16 அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளது 16 அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சினால் இது பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாளைய தினம் முதல் இந்த புதிய விலை நிர்ணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கோழி இறைச்சி ஒரு கிலோ கிராம் தோலுடன் 410 ரூபா, தோல் உரித்து 495 ரூபா சிகப்பு பருப்பு ஒரு கிலோ கிராம் 169 ரூபா நெத்தலி ஒரு கிலோ கிராம் 495 கடலை ஒரு கிலோ கிராம் 260 பயறு ஒரு கிலோ கிராம் 220 டின் மீன் 480 கிராம் 140 ரூபா வெள்ளை சீனி ஒரு கிலோ கிராம் 95 ரூபா மாவு ஒரு கிலோ கிராம் 87 ரூபா இறக்குமதி செய்யப்ப…

  2. யாழ்.பொம்மைவெளியில் கைக்குண்டுகள் மீட்பு யாழ்.பொம்மைவெளி பகுதியில் 6 கைக்குண்டுகள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீட்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியிலுள்ள வீடொன்றின் கிணற்றில், வீட்டு உரிமையாளர்கள் இன்று (வியாழக்கிழமை) துப்பரவு பணியினை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, குறித்த கிணற்றில் 6 கைக்குண்டுகள் இருப்பதை அவதானித்த வீட்டார், யாழ்.பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனடிப்படையில் விசேட அதிரடிப்படையினரின் துணையுடன், யாழ்.பொலிஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். http://onlineuthayan.com/news/15014

  3. அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளார். இன்று (14) காலை 9.45 மணியளவில் திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கு விஜயம் செய்ததாக அறியமுடிகின்றது. இதன்போது திருக்கோணேஸ்வரம் கோயிலின் சிறப்பு வழிபாடுகளில் நிஷா பிஸ்வால் கலந்துகொண்டுள்ளார். மேலும், இந்த வழிபாடுகளில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்நாண்டோ உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/statements/01/110893

    • 1 reply
    • 437 views
  4. இனப்பிரச்சினை தீர்வு முயற்சியில் எந்தவொரு சமூகமும் பாதிக்கப்படாத வகையில் தீர்வுத் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். இதன் மூலமாகவே நிரந்தர சமாதானத்தை பேணமுடியும் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் வலியுருத்தியுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வாலை நேற்றைய தினம் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் அமெரிக்க உதவிச் செயலாளர் டொம் மலி நவ்ஸ்கியும் பங்கேற்றியமையும் குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கை இனப்பிரச்சினை காரணமாக முஸ்லிம் சமூகமும் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது. இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தலைவர்கள் ப…

    • 0 replies
    • 165 views
  5. பௌத்த பிக்குகள் இவ்வாறு ரவுடிகளைப் போல் நடந்துகொள்வதற்கு மஹிந்த ராஜபக்சவும் அவரது சகாக்களுமே காரணம் என ஊழலுக்கு எதிரான தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்ம மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் தலைமை பௌத்த பிக்குவான அம்பிட்டியே சுமனரத்தன தேரரின் செயல்கள் தொடர்பில் கடும் ஆத்திரம் அடைந்த ஊழலுக்கு எதிரான தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா ஊடகங்களுக்கு பின்வருமாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியால் அனுசரணை வழங்கப்பட்டு போஷிக்கப்பட்ட பௌத்த பிக்குகள் தலைமையிலான இனவாத மற்றும் அடிப்படைவாத குழுக்களுக்கு சுதந்திரமாக செயற்பட நல்லாட்சி அரசாங்கம் அனுமதி அள…

    • 0 replies
    • 232 views
  6. காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றப்படவுள்ள மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு இன்று யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் காணிகள் அற்ற மக்கள் காங்கேசன் துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். இவ்வாறு மீள்குடியேற்றப்படவுள்ளவர்களில் முதற்கட்டமாக 100 பேருக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன. அனைத்து வசதிகளுடன் 45 நாள் திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில் ந…

  7. நீண்ட காற்­சட்­டை­களை அணியக் கூடாது பல்­க­லையில் புதிய மாண­விக்கு பகி­டி­வதை நீண்ட காற்­சட்டை அணியக் கூடாது என தெரி­வித்து புதி­தாக களனி பல்­க­லைக் ­க­ழ­கத்­துக்கு அனு­மதி பெற்றுச் சென்ற மாண­விக்கு பகிடிவதை செய்த அப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட மாணவர்கள் ஐவர் கிரி­பத்­கொடை பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்பட்­டுள்­ளனர். கிரி­பத்கொடை பொலிஸ் நிலை­யத்தில் மாணவி ஒருவர் செய்த முறைப்­பாடு ஒன்­றுக்கு அமை­வான விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த ஐவ­ரையும் கைது செய்­த­தாக களனி பொலிஸ் வல­யத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் தேச­பந்து தென்­னகோன் தெரி­வித்தார். இது தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது, தற்­போது பல்­க­லைக்­க­ழ­கங்­களில் புதிய மாண…

  8.  உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வீடுகள் இடித்தழிப்பு -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில், தொடர்ந்தும் உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள வீடுகளை, இராணுவத்தினர் தொடர்ச்சியாக இடித்தழித்து வருகின்றனர். கட்டுவன் மற்றும் குரும்பசிட்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளே இராணுவத்தினரால் இடித்தழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விரு கிராமங்களினதும் பகுதியளவு பிரதேசங்கள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில், விடுவிக்கப்படாத காணிகளில் உள்ள வீடுகளே இவ்வாறு இடித்தழிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு…

  9. ‘கொத்­தணி குண்டு’ சாச­னத்தில் இலங்கை கைச்­சாத்­தி­ட­வில்லை கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி கொண்­டு­ வ­ரப்­பட்ட கொத்­தணி ஆயுத விவ­காரம் குறித்த சாச­னத்தில் இலங்கை அர­சாங்கம் கைச்­சாத்தி­டவில்லை. இந்தச் சட்­டமானது 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திக­தியே அமு­லுக்கு வந்­தது என்று காணாமல் ­போனோர் தொடர்­பான முறைப் பா­டு­களை விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பர­ண­கம தெரி­வித்­தி­ருக்­கிறார். இது தொடர்­பாக அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல்­ஹுசேன் வெளியிட்ட வெளியிட்ட இலங்கை தொடர்­பான வாய்­மூல அறிக்­கையில் கொத்­த­ணிக்­கு…

    • 1 reply
    • 644 views
  10. சிறிலங்காவுடனான இருதரப்பு பொருளாதார, வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு ஊக்கமளிக்க அமெரிக்கா வலுவான ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், உறுதியளித்துள்ளார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக, முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. http://www.puthinappalakai.net/2016/07/14/news/17424

  11. நாட்டைக் கட்டியெழுப்பும், அமைதியைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளில், சிறிலங்கா படைகளை காத்திரமான வகையில் ஈடுபடுத்துவதற்கு சிறிலங்காவின் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்காக, சிவில் – இராணுவ ஒருங்கிணைப்பு அமைப்பு ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில்,சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். இதற்கமைய முப்படைகளினது அறிவும், வளங்களும், நாட்டைக் கட்டியெழுப்பும் மற்றும் அமைதியைப் பேணும் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது. புதிதாக உருவாக்கப்படவுள்ள தேச அபிவிருத்தி அமைப்பில் சிறிலங்கா படையினர் முக்கிய பங்கு வகிக்கவுள்ளனர் என்று, அம…

  12. 5 மாணவர்களும் உயிருடனுள்ளனர் - வைபரில் செய்தி வந்ததாக பெற்றோர் தெரிவிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) கடந்த 2008 ஆம் ஆண்டு தெஹிவளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து கடத்தப்பட்ட ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேரில் மாணவர்கள் அனைவரும் உயிருடனேயே உள்ளதாக, பாதிக்கப்பட்டோரின் உறவுகளுக்கு வைபர் ஊடாக செய்தி அனுப்பட்டுள்ளதாக மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர். கடந்த 10 ஆம் திகதி நள்ளிரவில் சவூதி அரேபியாவில் உள்ள உறவினர் ஒருவர் ஊடாக தாம் இந்த செய்தியை அறிந்துகொண்டதாக கடத்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவர் வீரகேசரி இணையத்தளத்திடம் தெரிவித்தார். ஐந்து மாணவர் கடத்தல் விவகாரம் தொடர்பிலான வழக்கு இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில் வழக்கு ம…

  13. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட உள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட சிலர் நேற்று பார்வையிடச் சென்றிருந்தனர். நாமலை பார்வையிட்டு விட்டுத் திரும்பிய முன்னாள் அமைச்சர் மஹிந்த யாபா அபேவர்தன, மேலும் இரண்டு ராஜபக்சக்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். என்ன காரணத்திற்காக யார்? யார்? இந்த இருவரும் என்பது பற்றிய விபரங்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.…

  14. ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நிறைவு காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நாளையுடன் முடிவிற்கு வருகின்றது. எனினும் தற்போது காணமல் போனோர் தொடர்பிலான சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டு வருகின்ற காரணத்தினால் ஆயுட்காலத்தை நீடிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். இந்நிலையில் பதிவுசெய்யப்பட்ட சாட்சியங்கள் தெடர்பான அறிக்கையொன்று தயார் செய்யப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார். இதேவேளை தற்போதுவரை 19 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், முறையான சாட்சிகள் இல்லாத காரணத்தினால் 4 ஆயிரம் முறைப்பாடுகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஆ…

  15. யாழ் உட்பட 8பல்கலைக்கழகங்களுக்கு தொழில்நுட்பபீடம் யாழ்ப்பாணம் உள்ளிட்ட எட்டு பல்கலைக்கழகங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, தொழில்நுட்ப பீடங்களை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 'ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக அனுமதி 5 வீதத்தால் அதிகரிக்கின்றது. இந்நிலையில், பட்டப்படிப்பை தொடரும் அனைத்து மாணவர்களுக்கும் முழுமையான வசதிகளை செய்துகொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், யாழ்ப்பாணம், தென்க…

  16. படித்த பக்குவமான முஸ்லிம் ஒருவரை எமது முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதற்கு நாம் எப்போதும் தயாராகவிருக்கின்றோம். எமது பெரும்பான்மை பாதுகாக்கப்படுவதை சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்துவதாக இருந்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதை அன்பாகவும் தாழ்மையாகவும் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். தொழிற்சங்கவாதியும், எழுத்தாளருமான ஐ. தி. சம்பந்தன் அகவைவையை முன்னிட்டு வெளியிடப்பட்ட ‘சாதனையாளர் ஐ. தி. சம்பந்தன் முத்து விழா’ ‘தமிழ் அரச ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி’ என்ற நூல்களின் வெளியீட்டு நிகழ்வு ஓய்வுநிலை அரச அதிபரும், …

    • 0 replies
    • 241 views
  17. இறுதிப் போரின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை குறித்து விசாரணை நடாத்தப்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாக காணப்படுவதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துடன் சர்வதேச சமூகம் நட்புறவு பாராட்டி வருவதாகவும் இதனால் விசாரணைகளுக்கான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் குறைவு எனவும் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் உள்ளிட்ட ராஜதந்திரிகள் வெளியிட்டுள்ள கருத்துக்களும் இதனையே பறைசாற்றுகின்றன. இவ்வாறான ஓர் நிலையில் கொத்தணி குண்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் மிகவும் அரிது என அந்…

    • 0 replies
    • 167 views
  18. நாட்டில் போர்க் குற்ற நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டின் சுயாதீனத்தன்மை பௌதீக ஒருமைப்பாடு இறைமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் அரசாங்கம் எந்தவிதமான தீர்மானத்தையும் எடுக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துருகிரிய – பனாகொட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் போர்க் குற்ற நீதிமன்றம் உருவாக்கப்பட உள்ளதாக செய்யப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். குற்றம் சுமத்தும் தரப்பினர்களே இந்த நீதிமன்றம் எப்போது எவரால் எவ்வாறு அமைக்கப்படும் என்பதனை விளக்க வேண்டும் அரசாங்கம் அதுபற்றி விளக்க வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். …

    • 0 replies
    • 175 views
  19. பொறிமுறைகள் அமுல்படுத்தப்படும்வரை கூட்டமைப்பு காத்திருக்கும் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டிருத்தல் தொடர்பாக, அரசாங்கத்தின் பல்வேறு தரப்புகளிலும் பல்வேறு கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டுவரும் நிலையிலும் கூட, பல்வேறான பொறிமுறைகள் அமுல்படுத்தப்படும்வரை காத்திருந்தே, அது தொடர்பான கருத்துகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்துமென நிஷா தேசாய் பிஸ்வாலுக்கு எடுத்துரைத்ததாக, கூட்டமைப்பின் எம்.பியான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நிஷா பிஸ்வாலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்றுக் காலை 8.30க்கு, அமெரிக்கத் தூதுவரின் வதிவிடத்தில் வைத்து, எதிர்க்கட்சித…

  20. வயோதிப பிக்குவின் காமலீலை : கதிர்காமத்தில் பதிவான வீடியோ காட்சி புனித தலமான கதிர்காமத்தில் வயோதிப புத்த பிக்கு ஒருவர் சிறுமி ஒருவரிடம் கீழ்தரமான முறையில் நடந்துகொள்ளும் வீடியோ காட்சி எமது கமராவில் பதிவானது. கதிர்காமம் ஏழுமலை கோயிலுக்கு செல்லும் படிவரிசையில் நின்று கொண்டிருந்த இளம் பெண் ஒருவரின் காலை, வயோதிப பிக்கு ஒருவர் காலால் சுரண்டுவதும் அதற்கு அந்த பெண் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் நிற்பதும் காணொளியில் பதிவானது. பெண்ணின் உறவினர்கள் குறித்த பெண்ணை அழைத்த போதும் தான் சிறிது நேரம் இவ்விடத்தில் இருந்துவிட்டு வருகிறேன் என தெரிவித்துள்ளார். பின்னர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்திய போதும் பொலிஸா…

  21. புலிகளின் துப்பாக்கிகளைத் தொட்டுப் பார்க்கும் சிங்களவர்கள்! புதுக்குடியிருப்பிலிருந்து முல்லைத்தீவுக்கு முள்ளிவாய்க்கால் ஊடாகச் செல்லும் தெருவொன்றிருந்தது. 2002ஆம் ஆண்டுக்கு முன் அது செவ்வீதி. அதற்குப் பிறகு அது தார் வர்ணக்கலருக்கு மாற்றப்பட்டது. அந்த வீதியின் இடையில் மந்துவில் என்ற ஒரு கடல் கலப்புக் கிராமம் இருந்தது. அந்தக் கிராமமும் வன்னியின் ஏனைய கிராமங்களைப் போல படுகொலையொன்றினூடாகவே தனக்கான விளம்பரத்தைத் தேடிக்கொண்டது. 1999ஆம் ஆண்டில் மந்துவில் சந்தை மீது நடத்தப்பட்ட கிபீர் தாக்குதலில் 50 சனங்கள் பிணமாகினர். அப்போது வட இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து போரின் பெயர்வாளர்களாய் வந்த சனங்களுக்கு மந்துவிலும் மடமளித்தது. அதனால் தான் இப்படியான சாவுகளும் அதிகரித்தன. …

    • 3 replies
    • 664 views
  22. நல்லாட்சி அரசிலும் தமிழரின் உரிமைகள் பறிப்பு-அமைச்சர் மனோகணேசன் விரக்தி நல்லாட்சி அரசாங்கத்திலும் தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக நல்லாட்சி அரசாங்கத்தின் தேசிய சுகவாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதனால் தாம் ஏற்படுத்தியதாகக் கூறிக்கொள்ளும் மைத்ரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செயற்பட வேண்டியது இன்றியமையாதது என்றும் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் கடந்தவார இறுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரைய…

    • 2 replies
    • 638 views
  23. மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பிரதேசத்தில் நடைபெற்றுவரும்அத்துமீறிய சட்டவிரோத குடியேற்றம் தற்போது வீட்டுத்திட்டமாக மாறியுள்ளது. இந்நிலையில், குறித்த பகுதியில் அமைக்கப்பட்ட வீடுகளை சிலர் உடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பிரதேசமான மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கடந்த ஒரு வருடகலமாக நடைபெற்றுவரும் அத்துமீறிய சிங்கள குடியேற்றம் தற்போது வீட்டுத்திட்டமாக மாறியுள்ளது. அந்தப்பகுதியில் சிங்கள மக்கள் வீடுகளை அமைத்து வருகின்றனர். குறித்த பிரதேசத்திற்கு கடந்த மே மாதம் நேரடி விஜயத்தினை மேற்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிழக்குமாகாண விவசாய அமைச்சர் ஆகியோர் அங்கு அத்துமீறிய சட்டவிரோத சிங்களக் குடியேற்றம் நடைபெற…

    • 0 replies
    • 428 views
  24. மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், சிறிலங்காவின் அரச தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் இன்று பங்கேற்றார். ரூபவாஹினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், “நுக செவன” என்ற சமையல் நிகழ்ச்சியில், இன்று காலை நிஷா பிஸ்வால் கலந்து கொண்டார். சிறிலங்காவின் பிரபல சமையற்கலை நிபுணரான பப்ளிஸ் சில்வாவின் வழிகாட்டலில், நிஷா பிஸ்வால், உள்ளூர் உணவு ஒன்றை சமைத்துக் காட்டினார். http://www.puthinappalakai.net/2016/07/13/news/17406

    • 2 replies
    • 537 views
  25. இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஊடுருவல் ; உளவுப் பிரிவினர் தயார் நிலையில் (ப.பன்னீர்செல்வம்) ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஊடுருவல் தொடர்பில் உளவுப் பிரிவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடிய ஜயநாத் ஜயவீர, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்திய ஊடகம் ஒன்றில் வெ ளியான செய்தியில் ஐ.எஸ். அமைப்பில் இணைந்து கொள்வதாக 3 இளைஞர்கள் இலங்கையில் சமயக் கல்வி கற்பதற்காக செல்வதாக அவர்களின் உறவினர்களிடம் தெரிவித்து சென்றுள்ளனர் என்றும், கேரளாவிலிருந்தே இவர்கள் ஊடுருவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடிய ஜயநாத் ஜயவீரவிடம் கேட்ட…

    • 2 replies
    • 551 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.