Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. படையினர் வசமுள்ள நிலங்கள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் ஆலோசனை! [Sunday 2016-05-08 08:00] வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள நிலங்கள் தொடர்பிலும், அதனை விடுவிப்பது தொடர்பானதுமான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் அபயக்கோன் தலைமையில் இடம்பெற்றது. நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், தற்போது படையினரிடம் உள்ள மொத்தக் காணிகளின் விவரங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள நிலங்கள் தொடர்பிலும், அதனை விடுவிப்பது தொடர்பானதுமான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் அபயக்கோன் தலைமையில் இடம்பெற்றது. நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், தற்போது படையினரிடம் உள்ள மொத்தக் காணிகளின் வி…

  2. புலம்பெயர் நாடுகளில் தேடுதலை ஆரம்பித்தது: ரி.ஐ.டி [ Saturday,7 May 2016, 03:01:52 ] தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளுக்கு பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் உயர் மட்டக்குழு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் முக்கிய விசாரணையாளர்கள் 7 பேர் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் நோக்குடன் புலம்பெயர் நாடுகளிலிருந்து செயற்படுபவர்களை இலக்கு வைத்து குறித்த குழு தேடுதலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்தக்குழுவினர் இரண்டு பிரிவாக விசாரணைகள தீவிரமாக முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சர்வதேச பொலிஸாருடன் இணைந்து…

    • 3 replies
    • 622 views
  3. ஐ.நா பொதுச் சபை விசேட அமர்வில் சந்திரிக்கா பேச உள்ளார் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் விசேட அமர்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பேசவுள்ளார். எதிர்வரும் 10 மற்றும் 11ம் திகதிகளில் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் இந்த அமர்வு நடைபெறவுள்ளது. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்து அமர்வில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து சந்திரிக்கா உரையாற்றவுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131881/language/ta-IN/article.aspx

    • 2 replies
    • 596 views
  4. உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் வளாக புகுவிழா நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (01) பிரித்தானியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. திரு.இன்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மூன்று மாவீரர்களின் தாயாரான திருமதி இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம், தமிழகத்தின் பிரபல பாடகர் திரு.டி.எல்.மகாராஜன், நாடுகடந்த தமிமீழ அரசாங்கத்தின் பிரித்தானிய அவை உறுப்பினரும் இரண்டு மாவீரர்களின் சகோதரனுமாகிய திரு.திருக்குமரன், கடற்கரும்புலி மாவீரர் காந்தரூபனின் தந்தை மற்றும் மாவீரர் சிரித்திரனின் சகோதரர் திரு.ஒப்பிலான் ஆகியோர் பொதுச்சுடர்களினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சிய கொடியினை பிரித்தானிய காவல்துறையை சேர்ந்த திரு.சுரேசும், தமிழீழ தேசியக் கொடி…

    • 15 replies
    • 1.7k views
  5. காணாமல் போனவர்கள், சித்திரவதைகள் குறித்து ஐ.நா. வல்லுநர்கள் கவலை இலங்கையில் போர் நடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போது சித்திரவதைகள் குறைந்துள்ளபோதிலும் அதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என ஐ நாவின் இரண்டு உயரதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இன்றைய செய்தியாளர் சந்திப்பில் மொனிக்கா பின்டோ மற்றும் யுவான் இ மென்டிஸ் அரசின் அழைப்பை ஏற்று அங்கு ஒருவார காலம் பயணம் மேற்கொண்டிருந்த ஐ நாவின் இரண்டு உயரதிகாரிகள் தமது பயணத்தின் முடிவில் இக்கருத்தை வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான வல்லுநர்கள் மொனிக்கா பின்டோ மற்றும் யுவான் இ மென்டிஸ், தமது பயணத்தின் முடிவில் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்தின்போது இக…

  6. யாழ் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக 100 மில்லியன் ரூபா யாழ் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக இவ் வருடம் 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார மற்றும் சுதேச வைத்திய துறையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித்த மகிபால கூறினார். மேலும் வைத்திசாலைக்கான விசேட மருந்து உபகரண இயந்திரங்களை வழங்க எதிர்பார்த்துள்ளதுடன், அதி விசேட சிகிச்சைக்கான பிரிவுகள் மற்றும் விபத்துக்கான பிரிவுகளும் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். சுகாதார மற்றும் சுதேச வைத்தியதுறை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான நிவாரணங்களை பெற்றுக…

  7. தொலைபேசி மூலம் பண மோசடி! பொலிஸார் எச்சரிக்கை தொலைபேசி சேவையில் பணம் கிடைத்துள்ளதாக கூறி பல நபர்களிடம் கொள்ளைகள் இடம்பெற்று வருதாக தெரிவித்துள்ள யாழ்.பொலிஸார் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். தொலைபேசி அழைப்பு நிறுவனங்களிடம் இருந்து, அனாமதேய அழைப்பு ஒன்று வாடிக்கையாளர்களுக்கு வருகின்றது. இதன்போது அந்த அழைப்பில் பேசுபவர்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்திற்கு குலுக்கல் மூலம் இலட்சம் ரூபாய்கள் விழுந்துள்ளது எனவும், ஆகையால் அந்த பணத்தை பெற வேண்டுமாயின் முற்பணம் செலுத்த வேண்டி இருக்கும் என கூறி ஆசை வார்த்தைகளால் பணம் செலுத்துவதற்கு சம்பந்தப்பட்ட நபர் சம்மதம் தெரிவிக்கும் வரை, சந…

  8. இன்று மதியம் செம்மணிப் பகுதியில் நடந்த சம்பவத்தால் ஆசிரியை ஒருவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். தென்மராட்சிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் திருமணமான ஆசிரியை அவசர தேவை நிமிர்த்தம் பாடசாலையில் அரை நாள் விடுமுறையில் நல்லுார்ப் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். செம்மணிப் பகுதியில் ஆசிரியையின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த காவாலிகள் இருவர் ஆசிரியையை வழி மறித்து அவரை கடும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியுள்ளனர். ஒருவன் ஆசிரியையைப் பிடித்துக் கொண்டிருக்க இன்னொருவன் ஆசிரியை மீது கைகளால் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். துாரத்தில் இன்னொரு மோடார் சைக்கிள் வருவதைக் கண்டு அவர்கள் ஓடித்தப்பியுள்ளனர். அதிர்ச்சியில் …

  9. வடக்கு கிழக்கு பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய முடியாத அரசாங்கம் நாட்டை எவ்வாறு சிங்கப்பூராக மாற்றும் என நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற விவாதங்களில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்… வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளில் பல்வேறு வளப் பற்றாக்குறைகள் காணப்படுகின்றன. மேசை, நாற்காலிகள் இல்லாத பல பாடசாலைகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்றன. பாடசாலைகளுக்கு மேசை நாற்காலிகளை வழங்க முடியாத அரசாங்கம், நாட்டை எவ்வாறு சிங்கப்பூர் அளவிற்கு மாற்றும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். http://battinaatham.com/description.php?art=3852

    • 0 replies
    • 358 views
  10. மீள்குடியேறிய மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் வகையில் யாழ்.சமூக செயற்பாட்டு மையமானது பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் USAID நிதி நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தால் மாதகல் சம்பில்துறையில் ரூபா. 2.4 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மீனவர்களுக்கான இளைப்பாறு மண்டபம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.பி.செந்தில்நந்தன் அவர்களால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மீனவர்களின் பாவனைக்காக வழங்கப்பட்டது. இதன் மூலம் புனித சூசையப்பர் கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் உதயதாரகை கடற்றொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த மீனவர்களுடன் சம்பில்துறையில் தொழில் புரியும் அனைத்து மீனவர்களும் பயன்பெறுவர் என்பத…

    • 0 replies
    • 602 views
  11. கிளிநொச்சி மாவட்டத்தின் நகரதிட்டமிடல் தொடர்பாக ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியைப் பெறுவதற்கான கலந்துரையாடல் மாவட்டச் செயலகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்களுமான சி.ஸ்ரீதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோர் இதில் கலந்துகொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் மாவட்டத்தில் கரும்பு செய்கை, பொதுத்தேவைக்கான காணி ஒதுக்கீடு போன்ற விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன. http://www.tamilmirror.lk/171646#sthash.ENuKY5iU.dpuf

    • 0 replies
    • 298 views
  12. வவுனியாவில் அமைதிப்பேரணி மத்திய அரசின் கிராமிய பொருளாதார அமைச்சினால் வவுனியாவில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மையத்தை தாண்டிக்குளம் விவசாய பண்ணையின் பயன்படுத்தப்படாத காணியில் அமைப்பதற்கு முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்து வவுனியாவில் இன்று அமைதிப்போரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த அமைதிப்பேரணியில், அபிவிருத்தியில் அரசியல் கலக்காதே, வலியவரும் வாய்ப்பை நழுவ விடாதே, மத்தியா மாகாணமா இதுவல்ல எமது பிரச்சனை மாவட்டத்தின் அபிவிருத்தியே, சந்தை வாப்பில்லாமல் நாம் படும் துன்பம் தெரியுமா, தரவில்லை என்று குறை கூறாமல் தந்ததை பயன்படுத்து, வேண்ட…

  13. அமைச்சர் பைசல் காசீம் தலைமையில் 60 பேரடங்கிய உயர்குழு யாழ்.விஜயம் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் பாலித மகிபால உள்ளடங்கிய 60 உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு இன்று யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு நடமாடும் சேவையொன்றினை மேற்கொண்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள், தேவைகள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கான துரித தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதன் நோக்கத்தின் அடிப்படையில் இந்த குழு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது. நடமாடும் சேவை தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார பிரதி …

  14. ஸ்ரீலங்கா தொடர்பான முக்கிய அறிக்கை, ஐ.நா பிரதிநிதிகளால் இன்று வெளியீடு [ Saturday,7 May 2016, 02:44:38 ] சித்திரவதைகள் மற்றும் நீதிமன்ற சுயாதீனத்துவம் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா தொடர்பான முக்கிய அறிக்கை ஒன்றை இன்று சனிக்கிழமை வெளியிடவுள்ளனர். குறித்த பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை மற்றும் பரிந்துரைகள் என்பவற்றை கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா கிளை காரியாலயத்தில் வைத்து பகிரங்கமாக வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நீதிமன்ற சுயாதீனத்துவம் தொடர்பிலான ஐ.நாவின் விசேட நிபுணர் மொனிகா பின்டோ மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் ஆராயும் விசேட நிபுணர் ஹுவான் ஈ மென்டிஸ் ஆகிய…

  15. வடக்கில் பல்வேறு உதவித்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. இதனடிப்படையில், யாழ்ப்பாணத்தில் மழைநீரைச் சேமிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 300மில்லியன் சிறீலங்கா ரூபாய்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. இதனை யாழ்ப்பாத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதர் என் நட்ராஜன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். அத்துடன் வடக்கு மாகாண பாடசாலைகளின் அபிவிருத்திக்காக 250 மில்லியன் ரூபாய்களை வடமாகாணசபையிடம் கையளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கிiயில், போரினால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மக்களின் நலனில் அக்கறை கொண்டு இந்திய அரசாங்கம் வீட்டுத்திட்டங்களை வழங்கி வந்துள்ளது. அய…

    • 1 reply
    • 505 views
  16. யாழ்ப்பாணம் சீரழிக்கப்படுகிறது - பிறைவாணன் போர் இடம்பெற்ற காலப் பகுதியில் உலகமே வியர்ந்து பார்த்த தமிழ் கலாச்சார பண்பாடுகளைக் கொண்ட யாழ்ப்பாணம், போர் முடிவடைந்து 7 வருடங்களைத் தாண்டவுள்ள நிலையில் பண்பாடுகள் சீரழிக்கப்பட்டு களவு, கொலை, பாலியல் வல்லுறவு, போதைப் பொருள் பாவனை, விபச்சாரம் என்று வாழ்வை இழந்து நிற்கிறது. யாழ்ப்பாணம் மாதகலில் கடல் மூலமாக போதைப் பொருள் வந்து இறங்குகிறது. இந்தப் பகுதி கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியாகும். அக் கட்டுப்பாட்டை மீறி எப்படி கடத்தல்காரர்களால் போதைப் பொருளை இலகுவாக இங்கு கொண்டு வரமுடிகிறது? மாணவர்கள் மத்தியில் இந்தப் போதைப் பொருள் பழக்கத்தை உருவாக்கி விடுகின்றார்கள். இதற்காக ஆசிரியர்களை பயன்படுத்துகின்றார்கள…

    • 2 replies
    • 815 views
  17. தமிழ் தெரிந்த சிங்கள அலுவலர்கள் உருவாகவுள்ளனர்: சி.வி. தெற்கில் பெரும்பான்மையின மாணவ, மாணவியர் தமிழ் படிக்கத் தொடங்கியுள்ளனர். விரைவில் தமிழ் தெரிந்த பெரும்பான்மையின அலுவலர்கள் இங்கு அனுப்பப்படுவார்கள். நாங்கள் தமிழில் மட்டும் பாண்டித்தியம் பெற்றிருந்தால் என்னாகும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணக் கல்வி வலயம் ஆசிரியர் மாநாடு – 2016, யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் இன்று வெள்ளிக்கிழமை (06) நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'கல்விப் புலத்தி…

    • 2 replies
    • 484 views
  18.  நகரைக் குளிர்மைப்படுத்தும் யாழ். மாநகர சபை -எம்.றொசாந்த் யாழ். நகர்ப் பகுதியிலுள்ள வீதிகளை வெப்பத்திலிருந்து தணிக்கும் நடவடிக்கையை யாழ்ப்பாணம் மாநகர சபை மேற்கொண்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் நடமாடுவதற்கு அஞ்சும் நிலைமை காணப்படுகின்றது. அதிக மக்கள் வந்து செல்லும் இடமாக இருக்கும் யாழ்ப்பாண நகர வீதிகளில் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் வெப்பம் காணப்படுகின்றது. இதனைத் தணிக்கும் வகையில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தண்ணீர் வண்டிகள், யாழ்ப்பாணம் நகர வீதிகளில் தண்ணீர் தெளித்து வெப்பத்தை குறைக…

  19. மட்டக்களப்பின் மேற்கு எல்லையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் 'வனவளம் அழிப்பு' இலங்கையின் கிழக்கே, மட்டக்களப்பின் மேற்கு எல்லையில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு வனவளம் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் துரைராஜசிங்கம் கூறுகின்றார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், செங்கலடி பிரதேச செயலாளர் ஆகியோருடன் அந்தப் பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளதாக கூறும் அமைச்சர் துரைராஜசிங்கம் இந்த வன-அழிப்பை அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை சிங்கள சமூகத்தினரே மேற்கொண்டுள்ளதாகக் கூறினார். மேற்கு எல்லையில் அடையாளம் காணப்பட்ட 50 ஆயிரம் ஏக்கர் காணி மட்டக்களப்பு மாவட்ட கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை காணி எனவும் த…

  20. இலங்கையுடனான இராணுவ தளவாட வர்த்தக கெடுபிடிகளை அமெரிக்கா தளர்த்தியது இலங்கையுடனான இராணுவ தளவாட வர்த்தக கெடுபிடிகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது. இலங்கையுடனான இராணுவ தளவாட வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களுக்கு அமெரிக்கா நீண்ட காலமாக தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு எதிர்காலத்தில் இராணுவ தளவாடங்களை விற்பனை செய்ய அனுமதியளிக்கப்படும் என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பாதுகாப்பு வர்த்தக பிரிவு அறிவித்துள்ளது. இலங்கைக்கு மிக நீண்ட காலமாக இராணுவ தளவாடங்கள் மற்றும் யுத்த உபகரணங்களை அமெரிக்கா விற்பனை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/…

  21. 'சர்வதேச விசாரணையே அவசியம்': ஐநா வல்லுனர்களிடம் தமிழ் மக்கள் பேரவை மோனிக்கா பின்டோ இலங்கை சென்றுள்ள ஐநா மனித உரிமைகள் வல்லுனர்களான மோனிக்கா பின்டோ மற்றும் ஜுவான் இ மென்டஸ் ஆகிய இருவரையும் சந்தித்த தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் சிலர் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறும் விடயத்தில் சர்வதேச விசாரணையே அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர். பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் கட்நத காலங்களில் உள்நாட்டு ஆணைக்குழுக்கள் நடத்திய விசாரணைகளில் எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை என்பதால் உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை என அவர்கள் கூறியுள்ளனர். பொறுப்பு கூறலுக்கான சர்வதேச விசாரணையின் மூலம் அரசியல் தீர்வு ஒன்றுக்கு சர்வதேசம்…

  22. சம்பந்தனுக்கும் எனக்கும் பனிப்போர் இல்லை: சி.வி. -சொர்ணகுமார் சொரூபன் 'தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், எனக்கும் எவ்வித பனிப்போரும் இல்லை. எனது உடல் ஆரோக்கியமற்றுள்ளது. மருத்துவ உதவியை நாடியிருப்பதால்தான், சம்பந்தனை சந்திக்க முடியாமல் போனது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிமனை ஆசிரிய மாநாடு வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்றது. இந்நிகழ்வு முடிந்து வெளியில் வந்த முதலமைச்சரிடம், 'வடமாகாண சபையின் தீர்வுத்திட்டம், எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிக்கப்படாமல் நேரடியாக அரசாங்கத்திடம் கையளிக்கப்ப…

    • 1 reply
    • 427 views
  23. வெள்ளை வான் கடத்தல்கள், முறையற்ற கைதுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறையில் கவனஈர்ப்பு போராட்டம் வெள்ளை வான் கடத்தல்கள், முறையற்ற கைதுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறையில் கவனஈர்ப்பு போராட்டம் : இலங்கையின் வெள்ளை வான் கடத்தல்கள், முறையற்ற கைதுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனக்கோரி அம்பாறையில் நேற்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றுள்ளது காணாமல் போனவர்களின் குடும்பங்களின் ஓன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நல்லிணக்கத்தை முறியடிக்கும் வெள்ளை வான் கடத்தலை நிறுத்து போன்ற வாசகம் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு காணப்பட்டனர். அம்பாறை, கிளிநொச்ச…

  24. டக்ளஸ் வராததால் 'நினைவுத்தூபி' ஒத்திவைப்பு -அழகன் கனகராஜ் யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூருவதற்கான நினைவுத்தூபி ஒன்றை ஓமந்தையில் அமைத்தல் மற்றும் நினைவு கூறுவதற்கான பொதுத் திகதி ஒன்றை அறிவித்தல் தொடர்பான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பியான டக்ளஸ் தேவானந்தாவின் தனிநபர் பிரேரணை விவாதத்துக்கு எடுக்கப்பட்ட போதும் சபைக்கு எம்.பி வருகைதராமையினால் அப்பிரேரணை ஒத்திவைக்கப்பட்டது. யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நிறைவுகூர்வதற்காக நினைவுத்தூபியொன்றை அமைத்தல் மற்றும் நினைவு கூர்வதற்கான பொதுத் திகதியொன்றைக் குறித்தொதுக்குதல் - வட மாகாணத்தில் கடந்த பல தசாப்தங்களாகக் காணப்பட்ட யுத்த நிலவரம் நீங்கி அமைதியானதொரு வாழ்க்கை முறைக்கு மக…

  25. ஆசியாவின் சொர்க்கபூமியாக மாறும் இலங்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ள உல்லாச பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதங்களை விடவும் 11.6% வீதத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய ஏப்ரல் மாதத்தில் இந்த நாட்டிற்கு வந்துள்ள பயணிகளின் எண்ணிக்கை 136,367 என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதத்தில் அதிகளவான பயணிகள் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 25,890 ஆகும். சீனாவிலிருந்து 18,927 சுற்றுலா பயணிகள் கடந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதற்கமைய இந்த நாட்டிற்கு வந்துள்ள பயணிகளில் 1/3 வீதம் இந்தியா மற்றும…

    • 4 replies
    • 463 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.