ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
ஸ்கன்டினேவியன் பொருளாதார முதலீட்டுக் குழுமத்தின் ஊடாக ஈழத் தமிழர் சாதனை நமக்கு நாமே உதவும் திட்டம் பற்றி TNA எம்.பிக்களுடன் பேச்சுவார்த்தை சமூக, பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள டென்மார்க்கைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் ஸ்கன்டினேவியன் (Scandinavian) பொருளாதார முதலீட்டுக் குழுமம் திட்டமிட்டுள்ளதாக அதன் சர்வதேச மற்றும் இலங்கைத் திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் தருமன் தர்மகுல சிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள இவர் கடந்த வாரம் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரது உத்தியோகபூர்வ பணிமனையில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் தலைமையில் வடக்கு…
-
- 2 replies
- 637 views
-
-
தமிழ் - சிங்களப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக நுவரெலியா சென்றிருந்த ஏராளமானோர், வழக்கத்தை விட அங்கு அதிகமான வெப்பநிலை நிலவுவதாக, சமூக ஊடக இணையத்தளங்கள் மூலமாகக் கவலைப்பட்டிருந்தனர். யாழ்ப்பாணம், வவுனியா, அநுராதபுரம் போன்ற பகுதிகளுக்குச் சென்றோரைப் பற்றிச் சொல்லித்தெரியத் தேவையில்லை. நுவரெலியாவைப் பொறுத்தவரை, புத்தாண்டுக்காக அங்குசென்ற அதிக வாகனங்களும் சனநெருக்கடியும், அதிகரித்த வெப்பநிலையை உணருவதற்குக் காரணமாக அமைந்ததை மறுக்கமுடியாது என்றபோதிலும், அதையும்தாண்டி வேறு காரணங்களும் இருந்ததை மறுக்க முடியாது. இவ்வாறு, அதிகரித்த வெப்பநிலையென்பது, இலங்கைக்கோ அல்லது தெற்காசிய நாடுகளுக்கோ மாத்திரமான ஒரு விடயமென எண்ணினால், அது மிகவும் தவறானது. உலகம் முழுவதுமே, முடிவடைந்த மார்ச்…
-
- 0 replies
- 397 views
-
-
மனித எலும்புக்கூடுகளின் தடயங்கள் நிறைந்த வட்டுவாகல் மண்ணில் “வட்டுவாகல் சப்தகன்னிமார்” ஆலயத்துக்கான அத்திவாரப்பணிகள் இம் மாதம் 19 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. இவ்வத்திவார அகழ்வின்போது அகப்பட்ட மிகப்புராதனத் தொல்பொருட் தடயமாக ஒரு பானை கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 11 அடி ஆழத்திற்குத் தோண்டும் போதே இவ் வரலாற்றுத் தடயம் கண்டுபிடிக்கப்பட்டது. இது எவ்வகைக் காலத்தைச் சேர்ந்தது என்பதை இலங்கைத் தொல்பொருட் திணைக்களமும் யாழ். பல்கலைக்கழக தொல்லியல் சார் அறிஞர்களும் இனம்காண்பார்கள். http://tamilleader.com/
-
- 0 replies
- 668 views
-
-
இணுவில் முதலிகோயில் பகுதியில் கடந்த 19ஆம் திகதி இரவு அபாயகரமான ஆயுதங்களுடன் கைதான பாடசாலை மாணவர்கள் ஒன்பது பேரையும், எதிர்வரும் மே மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் ரி.கருணாகரன், நேற்று புதன்கிழமை (20) உத்தரவிட்டார். குழு மோதல் ஒன்றுக்கு மேற்படி மாணவர்கள் இணுவில் பகுதிக்கு வந்திருப்பதாக யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய பறக்கும் படையினருக்கு இரகசியத் தகவல் கிடைக்கப் பெற்றதையடுத்து, சிவில் உடையில் சென்ற பொலிஸார், காயங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் கைக்கோடாரி, கத்தி, இரும்பு மற்றும் கொட்டன்கள் என்பவற்றை மீட்டதுடன், மாணவர்களையும் கைது செய்திருந்தனர். இவர்கள் யாழ்ப்பாணத்தின் பிரபலக் கல்லூரிகளில் கல்வி கற்கும் உயர்தர…
-
- 0 replies
- 369 views
-
-
<p>Your browser does not support iframes.</p> ஈபிடிபியில் இருந்து விலகியது ஏன்? பிற கட்சியில் சேர முடிவா? சந்திரகுமார் விளக்கம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து விலகிவிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார். யாழில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 17ம் திகதிக்குப் பின்னர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து விலகி விட்டதாக இதன்போது சந்திரகுமார் அறிவித்தார். இதுவரையில் கட்சியின் தலைமைத்துவத்திற்கு அறிவிப்பினை விடுக்கவில்லை என்றும், ஊடகத்தின் வாயிலாக கட்சியில் இருந்து விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ள…
-
- 1 reply
- 582 views
-
-
மீண்டும் சேவையில் இணைந்த பாதை ஐ.நேசமணி காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையில் கடல்வழி சேவையில் ஈடுபட்டு பழுதடைந்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்த பாதை புதன்கிழமை (20) முதல் மீண்டும் வழமைக்கு திரும்பியது. இந்தப் பாதைச் சேவையானது, நாளொன்றுக்கு 6 தடவைகள் என்ற ரீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால், இலவசமாக நடத்தப்பட்டது. இதன் மூலம் பயணிகள், மோடடார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியவற்றை கொண்டுச் செல்லக்கூடியதாக இருந்தது. எனினும் கடந்த மார்ச் மாதம் முதலாவது வாரம் தொடக்கம் இந்தப் பாதை பழுதடைந்தது. இதனால், இரண்டு இடங்களுக்கும் கட்டண அடிப்படையிலான படகு சேவை ஈடுபடுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், பழுதட…
-
- 0 replies
- 579 views
-
-
ஸ்ரீலங்காவில் அமெரிக்கா உட்பட சில நாடுகளின் கடற்படை முகாம்கள் ; வாசுதேவ தகவல் [ Thursday,21 April 2016, 03:26:58 ] அமெரிக்கா உட்பட சில சர்வதேச நாடுகளுடன் மேற்கொள்ளும் இரகசிய ஒப்பந்தங்கள் மூலமாக ஸ்ரீலங்காவில் அந்நாடுகளின் கடற்படை முகாம்கள் மறைமுகமாக நிறுவப்பட்டுவருவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். அமெரிக்கா, வடகொரியா உட்பட சில சர்வதேச நாடுகளுடன் இணைந்து இரகசிய ஒப்பந்தங்கள் மூலமாக நாடளாவிய ரீதியில் இரகசிய கடற்படை முகாம்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட…
-
- 0 replies
- 454 views
-
-
புலிகளும் ஆயுதங்களை ஒப்படைக்கலாம் : பாதுகாப்பு செயலாளர் கூறுகிறார்.! சட்டவிரோத ஆயுதங்களை அரசாங்கத்திடம் 2016 ஏப்ரல் 25ஆம் திகதி முதல் 2016 மே 6ஆம் திகதி வரையில் ஒப்படைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த காலகட்டத்தினுள் தம்மிடமுள்ள சட்டவிரோத ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் நபர்களுக்கு தண்டனையோ அல்லது தண்டமோ கிடையாது மாறாக தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எவரேனும் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தால் குறித்த காலத்தினுள் ஆயுதங்களை ஒப்படைத்தால் அவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும். குறித்த காலத்தின் பின்…
-
- 0 replies
- 601 views
-
-
வவுனியாவில் பெற்றதாயைக் கூட்டில் அடைத்துக் கொடூரம் ; பொலிஸில் முறைப்பாடு [ Thursday,21 April 2016, 03:10:36 ] வவுனியா சாந்தசோலை கிராமத்தில் 95 வயதான பெற்றதாயைக் கூட்டில் அடைத்து வைத்துள்ளமை தொடர்பில் வவுனியா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்படுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா - சாந்தசோலைக் கிராமத்தில் வசித்துவரும் மகன் தனது தாயை 5 வருடங்களாக கூட்டில் அடைத்து வைத்ததாக பொதுமகன் ஒருவரால் வவுனியா பொலிஸாரிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தாயை மீட்டதுடன் அவரை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக சந்தேக நபரிடம் பொலிஸார…
-
- 0 replies
- 354 views
-
-
'பயங்கரவாத தடுப்புச்சட்டம் நீக்கப்படாது' ஜே.ஏ.ஜோர்ஜ் 'பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அகற்ற வேண்டும் என்றால் அதற்கு இணையான அல்லது நாட்டைப் பாதுகாக்கக்கூடிய சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறான புதிய பலமான சட்டம் உருவாக்கப்படும் வரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்படாது' என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். பயங்கரவாத தடுப்புச்சட்டம் அகற்றிக்கொள்ளப்படுமா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். நீதியமைச்சுடன் வெளிவிவகார அமைச்சு இணைந்து புதிய சட்டமொன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் முதற்கட்ட வரைபுப் பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. …
-
- 0 replies
- 352 views
-
-
மாலைத்தீவிலிருந்து நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள வடக்கைச் சேர்ந்த மூன்று கைதிகளும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆம் திகதி நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 12 கைதிகளும் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார். இவர்களில் வடக்கைச் சேர்ந்த குறித்த மூன்று கைதிகளுக்கும் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மாலைத்தீவில் பதினைந்தரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவர்கள் மாலைத்தீவு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தை கவனத்திற்கொண்டே இலங்கையில் தடுத்து வைக்க வேண்டிய காலம் தீர்மானிக்கப்படும் என சிறைச்சாலைக…
-
- 2 replies
- 731 views
-
-
சம்பந்தனும் தலைக்கனமும்.... சம்பந்தனும் தலைக்கனமும்....
-
- 37 replies
- 4k views
- 1 follower
-
-
போர் விசாரணைப் பொறிமுறை: 'வேண்டும்- 42.2 வீதம், வேண்டாம்- 44.2 வீதம்' இலங்கையில் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் ஜனநாயகம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவினை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் யுத்தகாலத்தில் கடத்தப்பட்டு அல்லது சரணடைந்த பின்னர் காணாமல்போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச விசாரணை பொறிமுறையை கோரி வருகின்றனர். இதில், இறுதி யுத்தத்தின் போது நடந்தவற்றை விசாரிப்பதற்கான பொறிமுறை எதுவும் அவசியம் அவசியம் இல்லை என்று ஆய்வில் பங்கேற்றவர்களில் 44.2 வீதமானவர்கள் கூறியுள்ளனர். அதேநேரம், விசாரணை பொறிமுறை ஒன்று அவசியம் என்ற நிலைப்பாட்டை 42.2 வீதமானோர் வெளிப்படுத்தியுள்ளனர். …
-
- 0 replies
- 516 views
-
-
<p>Your browser does not support iframes.</p> மைத்திரி அனுமதியளித்தாக கூறியது பொய், அப்போது ஜனாதிபதி நானே - மஹிந்த கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த தனது போட்டியாளர் விரும்பும் பாதுகாப்புக் குழுவைத் தெரிவு செய்து ஹெலிக்கொப்டர் மூலம் ஊருக்கு செல்ல அனுமதி அளித்ததாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கூறப்பட்டதாக தெரிவிக்கப்படும் கருத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார். தேர்தலில் தோல்வியடைந்து அலரிமாளிகையில் இருந்து வௌியேறும் போது, இலங்கை ஜனாதிபதி பதவி இருந்தது தன் வசம் என அவர் பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்த பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை கண்டுகொள்ள …
-
- 1 reply
- 692 views
-
-
யாழ். இந்து கல்லூரியை அண்மித்த கில்னர் வீதியில் குடும்பஸ்தர் ஒருவரை இனந்தெரியாத நபர்கள் வாளால் வெட்டி படுகாயப்படுத்தினர். நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, எஸ்.சிவலிங்கம் என்பவரும் அவருடைய மனைவி சி.நிலந்தினியும் யாழ். நகரில் உள்ள தமது வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு இரவு 8 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இருவரையும் தாக்கி வாளால் வெட்டினர். இதன்போது கணவன் சிவலிங்கம் கையிலும், நெஞ்சிலும் படுகாயமடைந்தார். அவரின் மனைவியான நிலாந்தினி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் நிலாந்தினிக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை. தாக்குதல் நடத்தியவர்கள் நிலாந்தினியிடம் இருந்த கைப்பையை பறித்துச் செ…
-
- 10 replies
- 922 views
-
-
<p>Your browser does not support iframes.</p> பொலிஸ் மா அதிபராக பூஜித்த ஜெயசுந்தர நியமனம் இலங்கையின் 34வது பொலிஸ் மா அதிபராக பூஜித்த ஜெயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். சற்று முன்னர் இதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை ஜனாதிபதியிடம் இருந்து பூஜித்த ஜெயசுந்தர பெற்றுக் கொண்டுள்ளார். பொலிஸ் மா அதிபராக இருந்த என்.கே.இளங்கக்கோன் அண்மையில் ஓய்வு பெற்றதை அடுத்து, அந்தப் பதவிக்காக மூவரின் பெயர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்திருந்தார். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த எஸ்.எம்.விக்ரமசிங்க, பூஜித்த ஜெயசுந்தர மற்றும் சந்தன விக்ரமரத்ன ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அவர்களில் பூஜித்த ஜெயசுந்தரவை அரசியலமைப…
-
- 1 reply
- 544 views
-
-
புங்குடுதீவுமாணவி கொலைவழக்கு. 12ம் சந்தேக நபர் வாக்குமூலம் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் அரச தரப்பு சாட்சியம் என மன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேக நபர் தனக்கு கொலை தொடர்பில் எதுவும் தெரியாது என நீதவானிடம் தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள பதினோராம் மற்றும் பன்னிரெண்டாம் சந்தேக நபர்கள் இன்று புதன் கிழமை ஊர்காவற் துறை நீதிமன்றில் நீதவான் எம்.எம்.றியாழ் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். அதில் பன்னிரெண்டாம் சந்தேக நபரான ரவீந்திரன் அரச தரப்பு சாட்சியாக மாறியுள்ளதாகவும், அவர் கொலை தொடர்பிலான வாக்கு மூலத்தை மன்றில் அளிக்க தயாராக உள்ளதாகவும் நீதவானிடம் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். அதனை தொடர்ந…
-
- 0 replies
- 388 views
-
-
தாஜுதீன் கொலை : முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலை தொடர்பிலான ஆதாரங்களை இல்லாதொழித்த குற்றச்சாட்டின் பேரில் நாராஹென்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/5390
-
- 0 replies
- 452 views
-
-
ஜின்டெக் நிறுவன அதிகாரிக்கு அழைப்பாணை -எம்.றொசாந்த் புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் டி.என்.ஏ அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்காமை குறித்து விளக்கமளிப்பதற்கு, ஜின்டெக் நிறுவனத்தின் அதிகாரியை மே மாதம் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் இன்று புதன்கிழமை (20) உத்தரவிட்டார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, 'ஏன் டி.என்.ஏ அறிக்கை இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை?' என்று நீதவான், குற்றப்புலனாய்வு பொலிஸாரிடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த குற்றப்புலனாய்வு பொலிஸார், டி.…
-
- 0 replies
- 307 views
-
-
அமெரிக்கா கோத்தபாயவை கைது செய்ய வேண்டும் : ஒபாமாவிடம் அவசர கோரிக்கை அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை அமெரிக்கா கட்டாயம் கைது செய்ய வேண்டும் என அமெரிக்காவில் உள்ள முக்கிய இரண்டு தமிழ் குழுக்கள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளன. போர்க் குற்றவாளிகளில் பிரதான நபராக காணப்படும் கோத்தபாய ராஜபக்ஷவை அமெரிக்கா கட்டாயம் கைது செய்யவேண்டும். கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கோத்தபாய ராஜபக்ஷவை அமெரிக்க கைது செய்யாவிட்டால் போர்குற்றங்களில் ஈடுபட்ட ஏனைய குற்றவாளிகளை ஊக…
-
- 0 replies
- 523 views
-
-
புலிகள் கோரிய தனிநாட்டைக் கோரும் சி.வி.யை கைது செய் 20-04-2016 08:49 புலிப் பயங்கரவாதிகளினால் துப்பாக்கி முனையில் முன்வைக்கப்பட்ட தனிநாட்டுக் கோரிக்கையை, முன்வைத்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனைக் கைதுசெய்து, அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென சிஹல ராவய அமைப்பு கோரியுள்ளது. நாட்டில், பெரும்பான்மையான மக்களாக சிங்களவர்கள் இருப்பார்களாயின், அந்த இன விகிதாசாரத்துக்கு ஏற்ப எதிர்க்கட்சித் தலைவர் நியமிக்கப்படவேண்டும். அவ்வாறாயின், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தனை விலக்கிவிட்டு, எதிர்க்கட்சித் தலைவராக சிங்களவரை நியமிக்கவேண்டும் என்றும் அவ்வமைப்புக் கோரியுள்ளது. கொழும்பு-05இல் உள்ள பொதுபலசேனா தலைமையகத்தில், நேற்று செவ்வா…
-
- 5 replies
- 1k views
-
-
புலம்பெயர் பிரஜையின் கால் துண்டிப்பு -செல்வநாயகம் கபிலன் செம்மணிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (18) இரவு கும்பலொன்று ஒருவரைத் துரத்தித் துரத்தி வெட்டியதில் அந்நபர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர் கைதடியைச் சேர்ந்த இங்கிலாந்தில் வசித்து தற்போது விடுமுறையில் நாட்டுக்கு வந்திருந்த பொன்னம்பலம் நந்தகுமார் (வயது 44) என்பவரே இவ்வாறு வாள் வெட்டுக்கு இலக்கானார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - See more at: http://www.tamilmirror.lk/170310#sthash.usb8nbVF.dpuf
-
- 10 replies
- 1.2k views
-
-
சம்பந்தனின் சமஸ்டி நல்லிணக்கத்தைப் பாதிக்குமாம்! [Tuesday 2016-04-19 08:00] எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சமஸ்டி ஆட்சி முறைமை குறித்து வெளியிட்ட கருத்து நாட்டின் நல்லிணக்கத்தை பாரதூரமாக பாதிக்கும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.சமஸ்டி ஆட்சியை பெற்றுக் கொள்ள முடியும் அதுவரையில் பொறுமையாக இருக்க வேண்டுமென அண்மையில் சம்பந்தன் கூறியிருந்தார். இந்தக் கருத்து நல்லிணக்கத்தை பாதிக்கும். தமிழ் சமூகத்தை சமஸ்டி ஆட்சி குறித்த எதிர்பார்ப்பிற்குள் தள்ளும் வகையில் இந்த கருத்து அமைந்துள்ளது. இது குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் விசேட கவனம் செலுத்த வேண்டும். கடந்த 16ம் திகதி வட மாகாணசபையின் உறுப்பினர்களை சந்தித்த சம…
-
- 2 replies
- 694 views
-
-
110 கோடி ஹெரோயின் விவகாரம் : மீள் விசாரணை ஆரம்பம் பாகிஸ்தானிலிருந்து, ஈரானிய மீனவக் கப்பல் ஊடாக நாட்டுக்குள் கடத்த முற்பட்ட போது தென் கடலில் வைத்தும் நீர்கொழும்பு பகுதியில் வைத்தும் கைது செய்யப்பட்ட 14 வெளிநாட்டவர்களில் 13 பேர் உட்பட 16 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோட்டை நீதிவான் நீதிமன்றின் நீதிபதி லங்கா ஜயரத்ன இதற்கான உத்தரவை பிறப்பித்தார். அத்துடன் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு சந்தேக நபர்கள் 14 பேரிடமும் மேலதிக விசாரணை ஒன்றினை சிறையில் வைத்தே மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் மீளவும் நடத்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிவான் அனுமதி வழங்கினார். 110 கோடி ரூபா பெறுமதியான 11…
-
- 0 replies
- 308 views
-
-
வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய போது மிகப்பெரிய ஒரு வரலாற்றுச் சாதனையைப் புரிந்த மனமகிழ்ச்சி தமிழ் மக்களிடம் இருந்தது. யுத்த வெற்றியில் திளைத்திருந்த அன்றைய அரசாங்கத்துக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை மிகச் சரியான வகையில் நிறைவேற்றிய திருப்தி தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது. ஆயுதத்தால் அடக்கிய அரசாங்கததுக்கு வாக்கின் பலத்தை உணர்த்திய அலை ஓய்வதற்கிடையில் அமைச்சுப்பதவியைப் பெறுவதற்கான நுண் அரசியல் ஆரம்பமாகியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளை தமிழ் அரசுக்கட்சி மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாகத் தொடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை தமிழ் அரசுக்கட்சி மறுத்தாலும் ஏனைய கட்சிகள…
-
- 0 replies
- 619 views
-