Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மீன் ஏற்றுமதித் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கவில்லை! - இலங்கை அரசு விளக்கம் [Tuesday 2016-04-19 18:00] இலங்கை கடலுணவுப் பொருட்கள் மீதான இறக்குமதித் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்குகிறது என வெளியான ஊடகச் செய்திகளை, மீன்பிடி அமைச்சு மறுத்துள்ளது. அந்தச் செய்தி அடிப்படையற்றது எனக் கூறும் செய்திக் குறிப்பு, இது தொடர்பிலான முடிவொன்றை எடுப்பதற்கான முக்கிய பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளன எனவும் கூறுகிறது. முன்னதாக இலங்கை மீன்பிடி அமைச்சரின் ஊடக இணைப்புச் செயலர் எம்.டி.வன்னிநாயக்க வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக் கடலுணவு இறக்குமதிக்கு விதித்திருந்தத் தடையை நீக்க முடிவு ச…

    • 0 replies
    • 496 views
  2. அரசியல் தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்பு கோரும் "YES TO REFERENDUM" இலச்சினை: - உலகத்தமிழ் வரைகலைஞர்களுக்கு அறைகூவல் ! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ! [Tuesday 2016-04-19 18:00] ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்புக்கு கோரும் "YES TO REFERENDUM" செயல்முனைப்புக்கு, இலச்சினை கோரும் அறைகூவல் ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது ஆண்டாக 2016 அமைந்துள்ள நிலையில், இத்தீர்மானத்தினது அரசியற் பரிமாணமாக,பொதுசன வாக்கெடுப்பினை அனைத்துலக சமூகத்திடம் கோரும் செயற்திட்டமாக "YES TO REFERENDUM"அமைகின்றது. எதிர்வரும் மே 14 முதல் 16 வரை அமெரிக்காவில் இடம்பெறவிர…

    • 0 replies
    • 279 views
  3. சரணடைந்த போராளிகளின் பட்டியலை சமர்ப்பிக்காமல் இழுத்தடிக்கிறது அரசதரப்பு? [Tuesday 2016-04-19 18:00] இறுதிக்கட்டப்போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போன விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட பலர் தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதிக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவு முகாமில் இருப்பதாக அந்தப் படையணியின் தளபதி சாட்சியமளித்த நிலையில், இதனை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு முல்ல…

    • 0 replies
    • 537 views
  4. ஈ.பி.டி.பியிலிருந்து வெளியேறும் சந்திரகுமார் புதிய செயற்பாட்டை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிப்பு [ Sunday,17 April 2016, 05:41:52 ] தமிழ் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். தனது புதிய நிலைப்பாடு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களுக்குரிய நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு அர்த்தபூர்வமாக செயற்படவுள்ளதாகவும் இதற்கான புதிய சூழ்நிலைகள் உருவாகி வரும் சந்தர்ப்பத்தில் பல்வேறு சக்திகளையும் அவற்றின் தனித்தன்மைகளுடன் ஒன்றிணைய வைத்துச் செயலாற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். …

  5. சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு வழக்கு விசாரணை: பொ.ஐங்கரநேசன் நீதிமன்றில் ஆஜர் சுன்னாகத்தில் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பான வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய தினம் வட மாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். வழக்கு தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனை நீதிமன்றில் ஆஜராகுமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனடிப்படையில் இன்றைய தினம் அவர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். இன்றைய தினம் உடுவில், தெல்லிப்பளை, வலிகாமம் பொது சுகாதார உத்தியோகத்தர்களது அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள…

  6. சிறைச்சாலை திறப்பு என்னிடம் இல்லை என்பது உகந்த பதில் அல்ல – சுரேஸ் பிரேமச்சந்திரன் inShare விடுதலைக்காக அறவழியில் போராடி நீண்ட காலம் சிறையில் வாடுகின்றவர்களுக்கு, சிறைச்சாலை திறப்பு என்னிடம் இல்லை என்று வேண்டா வெறுப்பாய் பதில் கூறுவது உகந்தது அல்லவென ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அண்மையில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை விடுதலையான தமிழ் அரசியல் கைதிகள் இருவர் சந்தித்திருந்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார…

  7. மாலைத்தீவிலிருந்து அனுப்பப்பட்ட கைதிகளில் காணாமற்போன 3 தமிழ் இளைஞர்கள் அடங்குகின்றமை உறுதி inSha இரு நாடுகளுக்கும் இடையில் நல்லெண்ணத்தை மேம்படுத்தும் வகையில் மாலைத்தீவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 12 கைதிகளில் யுத்தம் இடம்பெற்றபோது காணாமற்போனதாக முறையிடப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களும் அடங்குகின்றமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. விசுவமடு, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமற்போனதாக அவர்களது பெற்றோர்களினால் மன்னார் பிரஜைகள் குழுவின் ஊடாக காணாற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தத…

  8. 'வேண்டாப் பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் '' : சம்பந்தனின் கருத்துக்கு சுரேஷ் பதில் தமிழ் மக்களுக்கு உறுதியான தீர்வு கிடைக்கவேண்டும் என்பது தொடர்பாகவும் அதற்கு எவ்வாறான வழிவகைகள் உண்டு என்பது தொடர்பாகவுமே நான் கூறிவருகிறேன். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருப்பது வேண்டாப் பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் போன்ற கதையாகிவிட்டது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனை குழம்பி…

  9. நீதிமன்றிலிருந்து கைதி தப்பியோட்டம் - சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் வழக்கு ஒன்றிற்காக அழைத்துவரப்பட்ட கைதியொருவர் தப்பிச்சென்றுள்ளார். இந்த சம்பவம், இன்று செவ்வாய்க்கிழமை (19) பிற்பகல் 2.20க்கு இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். தப்பிச்சென்ற கைதியைக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். - See more at: http://www.tamilmirror.lk/170311#sthash.rsMYC9si.dpuf

  10. சாவகச்சேரி - தனங்கிளப்பு வீதியில் அருகில் பனை வடலிக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு, சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் நேற்று திங்கட்கிழமை (18) செயலிழக்கப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். வீதியால் சென்றவர்கள் இக்குண்டை அவதானித்து பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்கினர். இது தொடர்பில் பொலிஸார், நீதிமன்றத்தில் கவனத்துக்கு கொண்டு சென்றனர். நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அங்கு சென்ற விசேட அதிரடிப் படையினர் குண்டை மீட்டு, பாதுகாப்பான இடத்தில் செயலிழக்க வைத்தனர். http://www.tamilmirror.lk/170272#sthash.jWWCi8Zq.dpuf

  11. தற்கொலை அங்கி : இன்ரப்போலின் உதவியை நாடும் இலங்கை யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேசத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரத்தில் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் புலம்பெயர் தமிழர் இருவரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை இலங்கைப் பொலிஸார் நாடியுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இருவரும் ஜேர்மன் நாட்டில் வாழ்ந்து வருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய கைது செய்வதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. தற்கொலை அங்கி மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரு…

  12. வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு -செல்வநாயகம் கபிலன் அச்சுவேலி தெற்கு மற்றும் நவக்கிரி பகுதியில் 3 வீடுகள் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் சகாக்களால், வீட்டு உரிமையாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ரீ.கருணாகரன், அச்சுவேலிப் பொலிஸாருக்கு திங்கட்கிழமை (18) உத்தரவிட்டார். மேலும், கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைதாகிய சந்தேகநபர்களை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கவும் நீதவான் உத்தரவிட்டார். மூன்று வீடுகளில் 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான ந…

  13. இந்தியாவிடம் இருந்து போர் விமானங்களைக் கொள்வனவு செய்ய ஸ்ரீலங்கா தீர்மானம் [ Tuesday,19 April 2016, 03:43:39 ] உலகின் மிகவும் இலகு ரக போர் விமானமும், இந்தியாவின் சொந்தத் தயாரிப்புமான ‛தேஜஸ்' விமானங்களைக் கொள்வனவு செய்ய ஸ்ரீலங்கா ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய ஊடகமொன்று இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா, எகிப்து ஆகிய நாடுகள் இந்த போர் விமானத்தைக் கொள்வனவு செய்ய விருப்பம் காண்பித்து வருவதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தயாரிப்பு விமானத்தை (ஜே.எப்-17) ஸ்ரீலங்கா அரசாங்கமும், பிரான்ஸ் தயாரிப்பு (24 ரபேல்) விமானத்தை எகிப்தும் கொள்வனவு செய்ய தீர்மானித்திருந்தன. …

  14. இன்று (18) யாழ்.பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவிருந்த “சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்” என்ற நூலின் அறிமுக விழாவினை அங்கு நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது என யாழ். பல்கலைக்கழகம் நிர்வாகம் இறுதி நேரத்தில் தடை விதித்தது. இதனால் இவ் நிகழ்வு இன்று மாலை யாழ். மறைக்கல்வி நிலையத்தில் இடம் பெற்றது. ஆசிரியர் மு.சி.கந்தையா 1965ஆம் ஆண்டு சிறீமா – சாஷ்த்திரி ஒப்பந்தம் மூலம் மலையகத்திலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது. சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் என்பது, இலங்கையில் நாடற்றவர்களாக இருந்த 975,000 இந்திய வம்சாவளித் தமிழர்களின் எதிர் காலம் தொடர்பாக, அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கும், இந்தியப் பிரதமரான …

    • 1 reply
    • 445 views
  15. யாழ்.குடாநாட்டில் மட்டும், வலிகாமம் வடக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்துக்கு மேலதிகமாக, 118 இடங்களில் படையினருக்குக் காணி வேண்டும் என முப்படையினராலும் கோரப்பட்டுள்ளது. மேற்குறித்த காணிகளைப் படை யினருக்குக் கையகப்படுத்தும் நோக்கில் அளவீடு செய்வதற்காக நில அளவைத் திணைக்களத்துக்கு விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. குறித்த எண்ணிக்கையின் பிரகாரம் வலி. வடக்கில் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் உயர் பாதுகாப்பு வலயம் நீங்கலாக 3 நிலங்கள் கோரப்பட்டுள்ளன. இதேபோன்று மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 21 இடங்களும் , வேலணை மற்றும் சாவகச்சேரி ஆகிய இரு பிரதேச செயலக எல்லைப் பரப்புகளுக் குள் தலா 16 இடங்களும் , ஊர்காவற்றுறை, சங்கானை, கோப்பாய் ஆகிய மூன்று…

  16. ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் இரத்து : காரணம் வெளியானது.! ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அமெ­ரிக்க விஜயம் இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி ஊடக பிரிவு தெரி­வித்­துள்­ளது. சூழல் பாது­காப்பு தொடர்பில் இடம்­பெ­ற­வுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் நான்கு நாள் உத்­தி­யோ­க­பூர்­வ­மான விஜயம் மேற்­கொண்டு 21 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை ஜனா­தி­பதி அமெ­ரிக்­கா­வுக்கு பய­­ண­மா­க­வி­ருந்தார். இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அமெ­ரிக்க விஜயம் இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­ப­தியின் செல­வீ­னங்­களை குறைப்­ப­தற்­காக சர்­வ­தேச நாடு­க­ளுக்­கான விஜ­யங்­களை குறைக்­க­வுள்­ள­தாக ஜனா­தி­பதி ஏற்­க­னவே அறி­வித்­திருந்த…

  17. ஒருவருக்கு கடுமையான மறதி நோய். மறதி நோய்க்காக அவர் டாக்டரைச் சந்தித்தார். டாக்டர் எனக்கு கடுமையான மறதி என்றார் அந்த நபர். அதற்கு டாக்டர் எவ்வளவு காலமாக இருக்கிறது என்று கேட்டார். நோயாளியோ எதை டாக்டர் கேட்கிறீர்கள் என்றார். மறதி என்று சொன்னதையே அந்தாள் மறந்து போனார். இதுதான் உண்மையான மறதி என்பதை அந்த டாக்டர் புரிந்து கொண்டார். இப்படியான மறதி எங்கள் அரசியல் தலைவர்களுக்கு வந்து விட்டால், என்ன கதி என்று நினைத்த போது தலை சுற்றியது. சரி, முதுமைப் பருவத்தில் மறதி என்ற நோய் தாக்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அத்த கையதொரு மறதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் தலைவர் இரா.சம்பந்தர் ஆளாகி விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இதை நாம் கூறும் போது ஐயா! மறதிக்கு…

    • 0 replies
    • 403 views
  18. இலத்திரனியல் ஊடகங்களை கட்டுப்படுத்த அதிகார சபை இலத்திரனியல் ஊடகங்களை கட்டுப்படுத்த சுயாதீன அதிகார சபையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது. பிரித்தானியாவில் செயற்படுத்தப்படும் முறைமையை போன்றே, இவற்றை செய்வதற்கு அரசாங்கம் ஆலோசித்துள்ளது. இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த தீர்மானத்தை அரசாங்கம் எட்டியுள்ளதாக அறியமுடிகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/170268/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%A…

  19. முன்னாள் புலி உறுப்பினர் கைது தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், ஆயுதங்களுடன் காலியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/170235/%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A4-#sthash.ZRsZmDIf.dpuf

  20. 65,000 வீட்டுத்திட்டத்தை மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் சம்பந்தன் கோரிக்கை inha வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான 65,000 வீட்டுத்திட்டத்தை மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற குழுவின் ஏகோபித்த தீர்மானத்தை விளக்கும் வகையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இன்று எதிர்க்கட்சி தலைவர் கடிதங்களை அனுப்பியுள்ளார். வடக்கு கிழக்கில் 1,37,000 வீடுகள் தேவையாக உள்ள நிலையில் அரசாங்கம் மேற்கொள்ளும் முய…

  21. வடமராட்சி, மணற்காடு சவுக்குகாட்டை பாதுகாப்பதற்கு விசேட செயற்றிட்டம் ஒன்றை 1,500 தொண்டர்களின் உதவியுடன் எதிர்வரும் 22ஆம் திகதி காலை 7 மணி முதல் 2 மணி வரையில் முன்னெடுக்கவுள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கே.கனகேஸ்வரன், செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார். 'மணற்காடு சவுக்கு காடுகளுக்கு தீ வைத்து, சவுக்கு மரங்களை விறகுக்கு எடுக்கும் செயற்பாட்டை அண்மைக்காலமாக சிலர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சவுக்கு காடு அழிவடையும் நிலையில் உள்ளது. இதனைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயமாகும். எதிர்வரும் 22ஆம் திகதி உலக பூமி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அத்தினத்தில் இராணுவம், பொலிஸார், பல்கலைக்கழக மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோரை இணைத்து, சவுக்கு காட்டை பாதுகா…

    • 1 reply
    • 516 views
  22. பனாமா ஆவணத்திலுள்ள ஸ்ரீலங்கா பிரஜைகளின் பெயர் விபரம் இன்று அம்பலம்? [ Tuesday,19 April 2016, 02:54:23 ] அனைத்துலக மட்டத்தில் நிதி மோசடி குறித்து கசிந்துள்ள பனாமா ஆவணத்திலுள்ள ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்களின் பெயர் விவரம் இன்று அம்பலப்படுத்தப்படும் என்று ஊழல் எதிர்ப்புக் குரல் அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி இத்தகவல்களை அம்பலப்படுத்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், ஊழல் எதிர்ப்புக் குழுவினால் நிதி சோசடி விசாரணைப் பிரிவு, ஜனாதிபதி ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு ஆகியவற்றுக்கு தாக்கல் செய்துள்ள முறைப்பாடுகளின்…

  23. குடாநாட்டில் பறிபோகும் மக்கள் காணிகள் ; ஜனாதிபதி தலைமையில் நேற்று முக்கிய பேச்சு [ Tuesday,19 April 2016, 02:48:57 ] யாழ்.குடாநாட்டில் வலிகாமம் வடக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்துக்கு மேலதிகமாக, 118 இடங்களில் படையினருக்குக் காணி வேண்டும் என முப்படையினராலும் கோரப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை முக்கிய பேச்சு ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இதில் வடமாகாணத்திலுள்ள மாவட்ட அரசாங்க அதிபர்கள் கலந்துகொண்டு இந்த விவகாரத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். இதேவேளை இந்தக் காணிகளைப் படையினருக்குக் கையகப்படுத்தும் நோக்கில் அளவீடு செய்வதற்காக நில அளவைத் திணைக்களத்துக்கு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா…

  24. இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் தீர்வுகாண முடியும் என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணக் கூட்டத்தில் சம்பந்தர் ஆனால் அந்தத் தீர்வை எட்டுவதற்கு அனைத்துத் தரப்பும் விசுவாசமாகச் செயல்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு சுமுகமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது என, யாழ்பாணத்தில் செய்தியாளர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உண்மையாக விரும்புகின்றனர் என தான் கணிப்பதாகவும் சம்பந்தர் கூற…

    • 2 replies
    • 470 views
  25. “சந்தைகளில் விற்பனை செய்ய முடியாத, வலையில் சிக்கும் சிறு மீன்களை அவை உயிருடன் இருக்கும் போதே கடலில் விடுவியுங்கள். அதன்போதே கடல்வாழ் உயிரினங்கள் அழிவடைவதைத் தடுக்க முடியும்” என யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப்பணிப்பாளர் பா.றமேஸ்கண்ணா மீனவர்களிடம் திங்கட்கிழமை (18) வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், “பண்ணை – ஊர்காவற்றுறை, புங்குடுதீவி – வேலணை, காரைநகர் - பொன்னாலை ஆகிய பாலங்களில் கீழ் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் தங்கள் வலையில் சிக்கும், சந்தையில் விற்க முடியாத சிறிய மீன்கள் மற்றும் சிறிய நண்டுகளை வீதியில் போட்டுவிட்டுச் செல்கின்றனர். சிறிய மீன்களைப் பிடித்து வீதியில் போட்டுவிட்டுச் செல்வதால் வீதியில் போக்குவரத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.