ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய அரசாங்கத்தினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மகிந்தவும் அவரது ஆதரவாளர்களும் ”எட்கா” எனப்படும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் இந்த உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் ஊடாக, மகிந்த ராஜபக்ஷ கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=153603&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 467 views
-
-
Yarl IT Hubஇன் Ideation பயிற்சிப்பட்டறை - ஜெயக்குமரன் சந்திரசேகரம் இராகவன், அறிவியலில் மிகத் தேர்ச்சியுடையவர், தொழில்நுட்பங்களை எல்லாம் கரைத்துக் குடித்தவர். ஒரு விஞ்ஞானக் கருவியையோ கணணி மென்பொருளையோ வடிவமைக்கக் கோரினால் தாமதமேயில்லாமல் செய்துகொடுப்பார். அவருடைய நுண்ணறிவு அளவு நூற்றைம்பது இருநூறுவரை போகலாம். நாளுக்கு ஒன்று என்று விதம் விதமான செயலிகளை வடிவமைக்கும் அளவுக்கு இராகவனுக்கு ஆற்றல் இருக்கிறது. ஒருநாளின் பதினைந்து மணித்தியாலங்களை இராகவன் ஆய்வுகூடங்களிலும் கணணித்திரை முன்னாலும் கழிக்கிறார். இவ்வளவு தகுதிகள் இருந்தாலும் இராகவனால் இந்தத் திகதி வரையிலும் உருப்படியான, மக்களுக்கு பயன்படும் வண்ணம் ஒரு விடயத்தை அறிமுகப்படுத்தப்பட முடியாமல் போய்விட்டது. அ…
-
- 1 reply
- 474 views
-
-
G7 மாநாடு : இலங்கை ஜனாதிபதிக்கு முதன்முறையாக அழைப்பு G7 மாநாட்டில் பங்கேற்பதற்கு இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு முதன்முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜேர்மனியில் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளதாக பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே G7 மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். …
-
- 3 replies
- 567 views
-
-
ரவிராஜ் கொலை வழக்கு:`கருணா குழு உறுப்பினர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடியுள்ளனர்' முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு ஒன்றை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணைகளின் பின்னர் தீர்ப்பை அறிவித்த நீதிபதி இதனை தெரிவித்தார். ரவிராஜ் கொலை வழக்கில் கடற்படை உறுப்பினர்கள் இரண்டு பேர், காவல்துறை அதிகாரி ஒருவர், மற்றும் கருணா குழுவை சேர்ந்த இரண்டு நபர்களுக்கு எதிராக காவல்துறையினர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர். சந்தேக நபர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் ச…
-
- 2 replies
- 314 views
-
-
இறுதி யுத்தத்தின் போது மரணமடைந்து விட்டதாகக் கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரும், கரும்புலிகள் அமைப்பின் கட்டளைத் தளபதியுமான பொட்டு அம்மான் என்றழைக்கப்படும் சண்முகலிங்கம் சிவசங்கரன், மறைந்திருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில், தமிழ் நாட்டிலேயே அவர், தலைமறைவாக வாழ்வதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், குருடீ என்ற பெயரிலேயே தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளையுடன் வாழ்வதாகவும் அச்செய்தி குறிப்பிடுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான பொட்டு அம்மான், முல்லைத்தீவு நந்திக்கடலில் பலியாகிவிட்டதாக இறுதி யுத்த காலத்தில் பிரசாரப்படுத்தப்பட்டிருந்தாலும், அவருடைய சடலத்தைப் பாத…
-
- 8 replies
- 1k views
-
-
புனித பத்திரிசியார் கல்லூரியில் விளையாட்டு அரங்கு திறந்து வைப்பு! யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு அரங்கு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. புனித பத்திரிசியார் கல்லூரியின் 166ஆவது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபர் ஜெறோம் செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை பிரதம அதிதியாக கலந்து கொண்டு திருப்பலி ஒப்புக்கொடுத்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்தார். இந்நிகழ்விற்கு பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். …
-
- 1 reply
- 314 views
-
-
57 ஆவது படைப்பிரிவின் கழிவு நீரால் பாதிப்பு பல தடவைகள் முறைப்பாடு செய்தும் பயனில்லை:- கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு பின்புறமாக திருநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள 57 ஆவது படைப்பிரிவின் நிர்வாக தலைமையகத்தின் கழிவு நீரால் சூழலுக்கும் பொது மக்களுக்கும் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதாக பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்;டுள்ளது. குறித்த முகாமிலிருந்து தொடர்ச்சியாக கழிவு நீர் திருநகர் பிரதான வீதி வழியாக மஞ்சுளா பேக்கரி சந்திக்கு ஊடாக கணேசபுரம் விவசாய வாய்காலுக்குள் விடப்படுகிறது. மேற்படி கழிவு நீர் செல்லும் பிரதேசம் அதிகளவு மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும் அத்தோடு குறித்த வீதியும் நாளாந்தம் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்ற பிரதான வ…
-
- 1 reply
- 352 views
-
-
போரால் பாதிக்கப்பட்ட படுவான்கரையில் எப்போது அபிவிருத்தி கிழக்கு மாகாணத்தில் போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றுதான் படுவான்கரை. இந்தப் பிரதேசத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை என்று குறிப்பிடும் பிரதேச மக்கள் தமது பிரதேசம் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறதா என்றும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கடந்த காலத்தில் போர் இடம்பெற்றபோது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்றும் அரசின் கட்டுப்பாடற்ற பிரதேசம் என்றும் பல்வேறு நடவடிக்கைகளிலும் படுவான்கரை புறக்கணிக்கப்பட்டு வந்ததாகவும் இப்போது எதற்காக படுவான்கரை புறக்கணிக்கப்படுகிறது? என்றும் கேள்வி எழுப்புகின்றனர். பிரதேச செயலகம் ஒன்றை அமைக்க அப்போதைய அரசாங்க…
-
- 0 replies
- 148 views
-
-
மனைவியின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்திய கணவன் கைது -செல்வநாயகம் கபிலன் மனைவியின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்தியதுடன், மனைவியின் தலைமுடியையும் வெட்டி வீசிய கணவனொருவரை, 3 மாதங்களில் பின்னர், அச்சுவேலி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார், புதன்கிழமை (16) இரவு கைது செய்தனர். வல்வெட்டித்துறை பகுதியினை சேர்ந்த மேற்படி சந்தேகநபர், உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இருப்பினும், இருவருக்கும் இடையில் சிலகாலமாக கருத்து முரண்பாடு நிலவி வந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த மனைவியை,…
-
- 2 replies
- 772 views
-
-
கம்பஹா மாவட்டத்தில் “சிவாவின் நடனம்” என்ற பெயரில் சைவ சமயத்தின் தலைமைக்கடவுளாக கருதப்படும் சிவபெருமானின் பெயரையும், உருவப்படத்தையும் பயன்படுத்தி களியாட்ட இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதை உடன் தடுத்து நிறுத்தும்படி மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது, அகில இலங்கை இந்து மாமன்றத்தில் இருந்தும், தேசிய தமிழ் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்தும் இது தொடர்பான கோரிக்கைகள் எனக்கு விடுக்கப்பட்டுள்ளன. இந்த பெயரையும், உருவப்படத்தையும் தவிர்த்துக்கொண்டு இத்த…
-
- 0 replies
- 287 views
-
-
கடந்த காலங்களில் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அநீதி இழைக்கப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பான தகவல் இந்த குழுவினரால் சேகரிக்கப்பட்டு நியாயம் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அநீதி இழைக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களும் தமது தொழில்சார் அடையாளத்துடன், தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக உறுத்திப்படுத்தப்பட்ட தகவலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்கமுடியும். குறித்த தகவல்கள் அனைத்தும் எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் திகதி முன்னார் எஸ்.ரி..கொடிக்கார, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பிவைக்…
-
- 0 replies
- 168 views
-
-
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், யாழ்ப்பாணத்தில் வீதிகளில் போட்டிபோட்டு ஓடும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு நேற்று பொலிஸாருக்கு உத்தரவிட்டார். போட்டிபோட்டு ஓடுவதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்ச்சேதங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு போட்டிபோட்டு ஓடுபவர்களைக் கைது செய்வதுடன், பஸ்களையும் கைப்பற்றவும், பஸ்களில் பயணிக்கும் பயணிகளை வேறு பஸ்களில் பயணம் செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும். விபத்து ஏற்பட்ட பின்னர் பொலிஸாரும் நீதிபதியும் அந்த இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்துவதை விட விபத்து நடைபெற முன்னர் அதனைத் தடுக்க வேண்டும். இவ்வ…
-
- 0 replies
- 211 views
-
-
தன்னை கொலை செய்ய முயற்சித்தவர்களை விடுவிக்குமாறு சரத் பொன்சேகா கேட்டுள்ளார் தன் மீதான தற்கொலைத் தாக்குதலுக்கு உதவிய தமிழ் கைதிகளை விடுதலை செய்யுமாறு இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா கேட்டிருக்கின்றார். தன்னை கொலை செய்ய முயற்சித்தவர்களை விடுவிக்குமாறு சரத் பொன்சேகா கேட்டுள்ளார் இன்று கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயற்சித்ததற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த சந்தேக நபருக்கு அவர் பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். அதனையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். அதனை வரவேற்ற சரத்பொன்சேகா அதேபோன்று தன்னை கொலை செய்ய நடத்தப்…
-
- 2 replies
- 540 views
-
-
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இராணுவத்தில் பணிபுரிந்த காலத்தில் நடந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் மரணம் குறித்து அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் சிங்க படைப்பிரிவில் பணியாற்றிய காலத்தில் படை அணி ஒன்றை அழைத்துக்கொண்டு காட்டுப் பகுதிக்கு சென்றதாகவும் அது போர் சம்பந்தப்பட்ட பயணம் அல்ல எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். அணியில் சென்ற சிப்பாய் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சுகவீனமுற்ற நேரத்தில், அந்த சிப்பாயை தரையில் இழுத்துச் செல்லுமாறு கோத்தபாய ஏனைய சிப்பாய்களுக்கு கட்டளையிட்டதாகவும் அவ்வா…
-
- 8 replies
- 995 views
-
-
வித்தியா படுகொலை வழக்கும் துரிதப்படுத்தப்பட வேண்டும் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனிடம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2015 மே மாதம் 13ஆம் திகதி யாழ்ப்பாணம், புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட நிலையில், இவ் வழக்கு இன்னும் தொடரும் நிலையிலேயே உள்ளது. தீ…
-
- 0 replies
- 305 views
-
-
இராணுவ தலைமையகத்தில் தன்னை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரை விடுதலை செய்யுமாறு பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இன்று இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வந்த சந்தேக நபரை விடுதலை செய்தது போன்று, இராணுவ தலைமையகத்தில் புலிகள் நடத்திய தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிறையில் இருக்கும் மொரிஸ் என்பவரை விடுதலை செய்ய வேண்டுமென கூறியுள்ளார். தன்னை …
-
- 0 replies
- 251 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சற்றுமுன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என அவர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவிருந்த, கூட்டு எதிரணியினரின் கூட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ள ஹைட் மைதான வளாகத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில், பொல்லுகளுடன் சிலர் அலைந்து திரிவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமையவே, அப்பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த மைதானத்தை அண்டிய பகுதிகளிலுள்ள வீதிகளும் பொலிஸாரால் மூடப்ப…
-
- 0 replies
- 261 views
-
-
அரசியல் ரீதியில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய கூட்டு எதிர்கட்சியினரின் பேரணியும் கூட்டமும் ஆரம்பம் (பொதுக்கூட்டத்திற்கு தயார்ப்படுத்தப்பட்டு உள்ள அரங்கு) அரசியல் ரீதியில் பெரும் எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ள கூட்டு எதிர்கட்சியினரின் பேரணியும் பொதுக்கூட்டமும் சற்று முன்னர் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளன. இந்த பேரணியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பல முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவும் இதில் கலந்துகொள்ளவுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130142/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 149 views
-
-
மஹிந்தவும் வந்தார் கூட்டு எதிரணியினரால் நடத்தப்படும் மக்கள் பொதுக் கூட்டமொன்று கொழும்பு ஹைட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தற்போது கலந்துகொண்டுள்ளார். கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர், அவர் அக்கூட்டத்திற்கு வந்து கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/168412/%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0-#sthash.MbTXmWEm.dpuf
-
- 0 replies
- 295 views
-
-
வடக்கு - கிழக்கை இணைக்க அனுமதிக்க முடியாது - ரவூப் ஹக்கீம் [ Thursday,17 March 2016, 03:39:10 ] முஸ்லீம்களின் பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அணுகும் வரை வடக்குடன் கிழக்கை இணைப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்சின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக வடக்கு கிழக்கு இணைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்மொழியுமாயின் முஸ்லீம்களுக்கு தனியான ஒரு மாகாணம் கட்டாயம் தேவை என அவர் கூறியுள்ளார். ஒலுவில் பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ…
-
- 3 replies
- 741 views
-
-
பாடசாலை மாணவர்களைக் குறிவைக்கும் பாபுல்! பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட பெருந்தொகை பாபுல்கள், கடந்த இரண்டு மாதங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, கைப்பற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மாலைதீவு, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து இவை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொண்டுவரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பாபுல் தொகை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபாலவால் நேற்று பரிசீலனைக்குட்படுத்தப்பட்டது. குறித்த போதைப் பொருள் அடங்கிய பாபுல் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக, இத…
-
- 3 replies
- 393 views
-
-
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிப்போரை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முயற்சிக்கும் பயணிகளின் முயற்சிகளை முறியடிக்க, தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டில் போலி பயண ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த 230 பேரை பிடிப்பதற்கு ஸ்ரீலங்கன் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது என தெரிவிக்கப்படுகிறது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி செல்வோரை கண்டு பிடிக்காவிட்டால் அபராதம் செலுத்தவும், நாடு கடத்தப்படும் பயணியின் பயண செலவை ஏற்கவும் நேரி…
-
- 0 replies
- 308 views
-
-
அம்பாறை- பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவர் குறித்து அவதூறாக முகநூலில் செய்தி வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான நபரின் பிணை மனுவை பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ. வஹாப்தீன் நிராகரித்துள்ளார். கடந்த மாதம் 28ம் திகதி குறித்த நபர் பெண் ஒருவர் மீது அவதூறாக குற்றம் சுமத்தி தனது முகநூலில் செய்தி வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரின் சார்பாக அவரது சட்டத்திரணி ஊடாக பிணை மனு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த வேளையில் இதனை நிராகரித்த நீதவான் குறித்த நபரை எதிர்வரும் 29ம் திகதி வரை தொடர்ந்து …
-
- 0 replies
- 234 views
-
-
தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நான்கு பேரின் சடலங்கள் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை வௌியாகியுள்ளது. வீட்டிற்குள் நச்சு வாயுவை சுவாசித்ததன் காரணமாகவே குறித்த நான்கு பேரும் உயிரிழந்திருப்பதாக களுபோவில போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றுக்காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்ளிட்ட நால்வரின் சடலங்கள் தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. நேற்றுக்காலை 10 மணியளவில் தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி குறித்த சடலங்கள் மீட்கப்பட்டன. இவ்வாறு உயிரிழந்தவர்கள் வெலிகம பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய தந்தை, …
-
- 0 replies
- 717 views
-
-
சிங்கப்பூர் மாதிரியான வீடு வடக்கில் அவசியமில்லை! சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கும் வழிகோலும்! 21இலட்சம் வீட்டிற்கு பலத்த எதிர்ப்பு உண்டு. மக்களை பொறுத்த வரையில் இந்த வீட்டின் சூழல் நிலையை எங்களுடைய மக்கள் முழுமையாக பார்க்கும் போது அதனை ஏற்கமுடியாது. வீடில்லாத குடும்பத்திற்கு இந்த வீட்டைக் கையளித்து ரி.வி, கட்டில் கொடுத்தால் சரி என்று சொல்லக்கூடும். ஆனால் சமுதாயத்தில் என்ன நடக்கும். ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுத்தும் நிலையை தோற்றுவிக்கும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். 21இலட்சம் வீட்டுத்திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 287 views
-