ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
756 ஹெக்ரேயர் காணியை விடுவிக்க நடவடிக்கை -வடமலை ராஜ்குமார்,பதுர்தீன் சியானா திருகோணமலை, பட்டிணமும்சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் இலங்கைத் துறைமுக அதிகாரசபைக்காக 1984.09.12 அன்று வர்த்தமானி அறிவித்தல் மூலம் கையகப்படுத்தப்பட்டிருந்த 07 கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள 756 ஹெக்ரேயரில்; 3,257 குடியிருப்புகள் உள்ள காணிகளை விடுவிப்பதற்கான அனுமதியை துறைமுக அதிகாரசபை வழங்கியுள்ளது. திருகோணமலை அரசாங்க அதிபர் செயலகத்தில்; நடைபெற்ற கூட்டத்தின்போதே, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இதனைக் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'பட்டிணமும்சூழலும் பிரதேச…
-
- 0 replies
- 431 views
-
-
ஓட்டோவுக்குள் புகுந்தது பல்சர்! நெல்லியடியில் சம்பவம்! நெல்லியடி நாவலர்மடம் பகுதியில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் முச்சக்கரவண்டிக்குள் பல்சர் மோட்டார் சைக்கிள் உட்புகுந்து விபத்துக்குள்ளானதில் இரு சாரதிகளும் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். …
-
- 0 replies
- 397 views
-
-
பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவோர் மீது தண்டப்பணம் அறவிட நடவடிக்கை! யாழ். மாநகரப் பகுதியில் குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களைக் கண்ட கண்ட இடங்களில் கொட்டுவோர் மீது தண்டப் பணம் அறவிடப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை கழிவகற்றும் கண்காணிப்புப் பிரிவினர் தீவிரப்படுத்தியுள்ளதாக யாழ். மாநகர ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்துள்ளார். இன்று யாழ். மாநகர சபையில் நடைபெற்ற எதிர்காலத்தில் கழிவகற்றலில் எற்படுத்த வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல் கேட்பேர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மாநகரப் பகுதியி…
-
- 1 reply
- 425 views
-
-
கிபீர் தாக்குதலில் கொல்லப்பட்ட 450 உடல்களுக்குள் என் மகனை தேடினேன் கிபிர் தாக்குதலில் கொல்லப்பட்ட 450 க்கும் அதிகமான உடல்களின் மத்தியில் எனது மகனை தேடினேன் என கண்ணீர் மல்க தாய் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். மேலும் தனது சாட்சியத்தில் குறிப்பிடுகையில், நாம் இடம்பெயர்ந்து மாத்தளன் பகுதியில் தங்கி இருந்தோம். எம்முடன் எமது மகனான சேவியர் உஷாந்தனும் (காணாமல் போகும் போது வயது 17 ) இருந்தார். யுத்தம் தீவிரமடைந்து இருந்த வேளை பாதுகாப்பு வலயம் என கூறப்பட்ட பிரதேசத்தில் நாம் கொட்டகை போட்டு இருந்த பகுதிகளில் மீது 2009ம் ஆண்டு 3ம் மாதம் 09ம் திகதி காலை மதியம் மற்றும் மாலை என மூன்று நேரத்தில் நாம் இர…
-
- 29 replies
- 1.8k views
-
-
அரசியல் கைதிகள் தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாட வேண்டும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சட்ட மாஅதிபருடன் கலந்துரையாட வேண்டியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு முன்னர் இருந்தவாறு தான் காணப்படுகின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறு…
-
- 0 replies
- 222 views
-
-
நாட்டை அபிவிருத்தி செய்யும் போது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நேராது தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் நேராத வகையில் நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுனெ துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று திருகோணமலை மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைப்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார். முதலீட்டாளர்கள் சிங்கப்பூரிலிருந்தா, சீனாவிலிருந்தா, ஜப்பானிலிருந்தா?, அல்லது இந்தியாவிலிருந்தா? வருகைதருகின்றார்கள் என்பது முக்கியமல்ல மாறாக இங்கே வருகைத்தருகின்ற முதலீட்டாளர்கள் இந்நாட்டு சட்டதிட்டங்கள…
-
- 0 replies
- 171 views
-
-
கே.கே.எஸ் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அட்டகாசம் -செல்வநாயகம் கபிலன் பருத்தித்துறை கடற்பரப்புக்குள் 20க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள், அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த தென்னிலங்கை மீனவர்களின் படகுகளை சேதமாக்கியதுடன் வலைகளையும் அறுத்து, 600 கிலோகிராம் நிறையுடைய மீன்களை எடுத்துச்சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள், இன்று புதன்கிழமை (02) முறைப்பாடு செய்ததாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, செவ்வாய்க்கிழமை (01) இரவு திருகோணமலை பகுதியிலிருந்து வந்த தென்னிலங்கை மீனவர்கள் சிலர், பருத்தித்துறைக்கு வடமேற்கு கடற்பரப்பினுள் மீன்…
-
- 4 replies
- 421 views
-
-
அரசியல் கைதிகள் புனர்வாழ்வுக்கு தயார் -சண்முகம் தவசீலன் 'சில மாதங்களுக்கு முன்னர் ஒருசில அமைச்சர்களும் அரசியல்வாதிகளும், தமிழ் அரசியல் கைதிகள் - புனர்வாழ்வுக்குச் செல்ல விரும்பவில்லை என்று ஜனாதிபதியிடம் கருத்துப்படத் தெரிவித்திருந்தனர். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. நாங்கள் எப்பொழுதும் புனர்வாழ்வுக்குத் தயாராக இருக்கின்றோம். போராட்டத்தில் சம்பந்தப்படாத ஒருசிலர் மாத்திரம், தமக்கு புனர்வாழ்வு தேவையில்லை என்றும் தாம் விடுதலை செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இந்த உண்மை நிலைப்பாட்டினை உரிய இடத்துக்கு கொண்டுசெல்லுங்கள்' என்று, விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல…
-
- 0 replies
- 258 views
-
-
இந்திய மீனவர்கள் 8 பேர் கைது! எல்லை தாண்டி வந்து யாழ்.நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்றொழிலில் இரு படகுகளில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ரமேஸ்கண்ணா தெரிவித்தார். இலங்கைக் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி வந்த 8 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ். நீரியல் வளத் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. …
-
- 1 reply
- 539 views
-
-
வித்தியா கொலையின் விசாரணை அறிக்கைகள் நாளை சமர்ப்பிப்பு! புங்குடுதீவு மாணவி மீதான கூட்டு வன்புணர்வுக் கொலை தொடர்பான குற்றப்புலனாய்வு பொலிஸாரின் விசாரணை அறிக்கைகள், நீதிமன்றத்தில் நாளை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்படி கொலை தொடர்பான விசாரணை அறிக்கைகளை, அடுத்த வழக்குத் தவணையில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏம்.எம்.எம்.றியால், கடந்த 19 ஆம் திகதியன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு கடுந்தொனியில் உத்தரவிட்டிருந்தார். சான்றுப் பொருட்களின் அறிக்கைகள், டீ.என்.ஏ பரிசோதனை அறிக்கைகள் என சுமார் 12 அறிக்கைகள், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட…
-
- 0 replies
- 270 views
-
-
சி.விக்கு எதிராகவும் முறையிட முஸ்தீபு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் உணவு வழங்கலும் விநியோகமும் சுற்றாடலும் கூட்டுறவும் அமைச்சர் பி. ஐங்கரநேசன் ஆகியோருக்கு எதிராக, முறைப்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப் -பட்டுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. வடமாகாண சபை உறுப்பினர்களே, நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. வடமாகாண விவசாய அமைச்சில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல சம்பவங்கள் தொடர்பில், விவசாய அமைச்சருக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அக்குற்ற…
-
- 1 reply
- 439 views
-
-
ஈழத்து பிரபல எழுத்தாளன் செங்கை ஆழியான் பூதவுடல் தீயில் சங்கமம்! இலக்கியத் துறையிலும், எழுத்துத் துறையிலும் செங்கை ஆழியான் விட்டுச் சென்றுள்ள வெற்றிடத்தினை நிரப்புவதென்பது பெரும் சவாலான விடயமென இன்று இறுதி அஞ்சலி செலுத்திய துணைவேந்தர்கள், கல்வி மான்கள், சமூகவியலாளர்கள் தெரிவித்தனர். செங்கை ஆழியான் என்று அழைக்கப்படும் மிகப்பெரிய எழுத்தாளர் குணராசாவின் இறுதிக் கிரியைகள் இன்று நீராவியடியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது. இறுதி அஞ்சலியின் போது, அரசியல் கட்சியினர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், எழுத்தாளர்கள் பெரும் திரளானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். அன…
-
- 7 replies
- 762 views
-
-
எமில்காந்தனுக்கு மீண்டும் பிடியாண தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிப் பிரிவின் தலைவர் எனக் கூறப்படும் அன்டனி எமில்காந்தனுக்கு எதிராக மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு முன்னதாக, பிடியாணை மற்றும் ரெட் நோட்டீஸ் என்பன வௌியிடப்பட்டது. எனினும், நீதிமன்றத்தில் ஆஜராவதாக அவரது சட்டத்தரணி மூலம் எமில்காந்தன் அறிவித்ததை அடுத்து, குறித்த பிடியாணை விலக்கிக் கொள்ளப்பட்டது. சந்தேகநபர் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனவும், இது பிரச்சினைகளை தோற்றுவிப்பதாகவும் நீதிமன்றத்தில் இன்று அரச தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். இதன்படி, சந்தேகநபர…
-
- 0 replies
- 279 views
-
-
குடிநீர்ப் போத்தலில் கரப்பான்! தகவலை மூடி மறைக்க ஐந்து இலட்சம் பேரம்! கோண்டாவிலைச் சேர்ந்த இளைஞரொருவர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாருக்கு அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட Nature Green நிறுவன தயாரிப்பான 19 லீற்றர் நீர் கொள்ளளவுடைய குடிநீர்ப் போத்தலை சுன்னாகம் நகரிலுள்ள மருந்தகமொன்றில் நேற்று கொள்வனவு செய்திருந்தார். இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட குடிநீர்ப் போத்தலிற்குள் இறந்த கரப்பான் பூச்சி காணப்பட்டமை அதிர்ச்சியையும், கடும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவரான 33 வயதான இளைஞன் தனது முகநூலில் நேற்றுப் பதிவு செய்துள்ள நிலையில் அநாமதேய தொலைபே…
-
- 0 replies
- 571 views
-
-
திருமலைக்குள் பிரசன்னமாவதற்கு சீனா போன்ற பகீரதப் பிரயத்தனம் சம்பூர் நிலப்பரப்பை தம்வசமாக்க சீனா போன்ற நாடுகள் பகீரதப்பிரயத்தனங்களை இன்னும் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இப்பகுதியில்அனல் மின் நிலையமொன்று நிறுவப்படுவதால் ஏற்படும் பாதிப்புக்களை நான் உணருவேன். இருப்பினும் உரியதரப்பினருடன் கலந்து பேசி நல்லதொரு முடிவைப் பெற முயற்சிப்போம் என்று எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையும், தனியார் நிறுவனமும் இணைந்து 10 கோடி ரூபா பெறுமதியான ஆடைத்தொழிற்சாலையொன்றை மூதூர் சீதனவெளிப் பிரதேசத்தில் நிர்மாணிக்கும் முகமாக நேற்றைய தினம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அடிக்கல்…
-
- 0 replies
- 544 views
-
-
எச்ஐவி வதந்தி: குளியாப்பிட்டிய சிறுவன் பள்ளிக்கூடத்திலிருந்து நீக்கம் சிறுவனுக்கு எச்ஐவி இல்லை என்று மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இலங்கையில் வடமேல் மாகாணத்தில் குளியாபிட்டிய என்ற இடத்தில், எச்ஐவி தொற்றுக்கு உள்ளானவர் என்ற வதந்திக்கு உள்ளான 6 வயது சிறுவனை அண்மையில் சேர்த்துக் கொண்டிருந்த பள்ளிக்கூடம் இப்போது அவரை நீக்கியுள்ளது. அந்தச் சிறுவனின் தந்தை எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக உள்ளூரில் வதந்தி பரவியிருந்த நிலையில், அவரை சேர்த்துக்கொள்ள எந்தப் பள்ளிக்கூடமும் முன்வந்திருக்காத நிலையில், கல்வி அதிகாரிகளின் தலையீட்டால் பள்ளிக்கூடம் ஒன்று அவரை அண்மையில் சேர்த்திருந்தது. உள்ளூர் மக்களிடமிருந்து தொடர்ந்து வந…
-
- 1 reply
- 374 views
-
-
இலங்கை: செய்தி இணையதளங்களை பதிவு செய்யக் கோருவது ஏன்? இலங்கையில் இயங்கும் சகல செய்தி இணையதளங்களும் இம்மாதம் 31-ம் திகதிக்கு முன்னதாக ஊடக அமைச்சில் பதிவுசெய்துகொள்ளப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஊடக தர்மங்களுக்கும் தராதரங்களுக்கும் உட்பட்டவகையில் செய்தி இணையதளங்கள் தடையின்றி இயங்குவதற்கு இந்த பதிவு அவசியம் என்று நாடாளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் கீழ் ஏற்கனவே பல இணையதளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பதிவு செய்துகொள்ளாத இணையதளங்கள் உரிய திகதிக்குள் பதிவுசெய்யப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 280 views
-
-
வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் புனர்வாழ்வு! - மேஜர் ஜெனரல் ரத்நாயக்க [Tuesday 2016-03-01 07:00] ஓரு அமைப்புக்கு எதிராகவே இராணுவம் போரிட்டதே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் ஒரு போதும் செயற்பட்டதில்லை என்று புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஜே.ஏ.ரத்நாயக்க தெரிவித்தார். வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் கடந்த ஒரு வருடங்களாக புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் போராளிகள் 14 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். '2009 ஆம் ஆண்டிலிருந்து 2015 வரை 12 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வளித்து சமூகத்துடன் …
-
- 17 replies
- 1k views
-
-
சந்திரிகா குமாரதுங்க சுஸ்மா சுவராஜை சந்தித்து பேச்சுவார்த்தை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இன்று புதன்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சரின் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப் இது குறித்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளதுடன் இலங்கையிலிருந்து இன்னொரு பழைய நண்பர் இந்தியா வந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129591/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 358 views
-
-
ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மௌனித்திருந்த வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா நூறு மாணவர்களுக்கு மூன்று ஆசிரியர்கள் எங்களுடைய அவலத்தை தீருங்கள் மயில்வாகனபுர பாடசாலைப் பெற்றோர்கள்:- கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் பாடசாலையில் நூறு மாணவர்கள் கல்வி கற்கின்ற போதும் அங்கு மூன்று ஆசிரியர்கள் மட்டுமே கற்பிப்பதாகவும் இந்த அவலத்தை தீர்த்து எங்கள் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துங்கள் என மயில்வாகனபுரம் பாடசாலை பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று செவ்வாய் கிழமை கண்டாவளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. தங்களது பாடசாலையில் மிக நீண்ட காலமா…
-
- 0 replies
- 335 views
-
-
யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு புதிய பணிப்பாளராக முகுந்தன் நியமனம்! யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரியின் புதிய பணிப்பாளராக திரு. முகுந்தன் அவர்கள் இன்று முதல் பணிப்பாளர் நாயகம் திரு. து. யு. ரஞ்சித் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை வவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் அதிபராக கடமையாற்றி வந்துள்ளார். வாழ்க்கை திறன் மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் கௌரவ மகிந்த சமரசிங்கவும் மற்றும் அமைச்சின் உயரதிகாரிகளும் எதிர்வரும் 04.03.2016 அன்று யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு நேரடியாக விஜயம் செய்ய இருக்கின்றனர். யாழ். கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரி சீராக இயங்க ஒத்துழைத்த முதலமைச்சர் வடமாகாணம், கௌரவ நாடா…
-
- 1 reply
- 422 views
-
-
சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் சந்தேகநபர்கள் பயணித்த சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கடை நீதிமன்றத்துக்கு சென்று, பின்னர் வெலிக்கடை சிறைச்சாலை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த வேளை, தெமட்டகொட பகுதியில் வைத்து குறித்த பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது காயமடைந்த பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த சந்தேகநபரான தெமட்டகொட சமிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார். http://onlineuthayan.com/news/9887
-
- 0 replies
- 322 views
-
-
ஆயுதம் ஏந்தி போராடும் மனநிலையில் எவரும் இல்லை! உறவுகளின் பாசத்துக்காகவே காத்திருக்கிறார்கள்! சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது உறவுகளான தமிழ் அரசியல் கைதிகள் எவரும் ஆயுதம் ஏந்திப் போராடும் மனநிலையில் இல்லை. அவர்கள் தமது உறவுகளின் பாசத்துக்காகவே காத்திருக்கின்றார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். இரும்புக் கதவுகளுக்குப் பின்னாலிருக்கும் வலிகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் அரசியல் ரீதியான தீர்மானமொன்றை எடுத்து அரசு உடன் விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார் ஏழு வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாகத் தடுத…
-
- 1 reply
- 321 views
-
-
உயிரை அடகுவைத்து உண்ணா நோன்பிருக்கும் உறவுகளின் உயிருக்கு விலைபேசாதே! நீண்டகாலமாக விசாரணைகளின்றி மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் 14 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி இன்று ஒன்பதாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறான நிலையில் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையிலும் யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கா…
-
- 0 replies
- 433 views
-
-
அனைத்து தென்னாசிய நாடுகளுக்கும் இலங்கை பாலமாக அமைகிறது. அது அனைத்து நாடுகளுடனும் சிறந்த உறவைப் பேணி வருகிறது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முறுகலை, தென்னாசிய நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பே தடுத்தது. உலகளாவிய பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது தென்னாசிய பொருளாதார ஒருங்கிணைப்பு மிகவும் தாமதத்துடன் நகர்கிறது. இந்தநிலையில் தென்னாசிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் பலப்படுத்தப்படவேண்டும். பிராந்திய சுற்றாடல் மற்றும் தேசிய பாதுகாப்பு என்ற விடயங்களில் ஒவ்வொரு …
-
- 1 reply
- 334 views
-