Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மிகப்பெரிய வாகன போக்குவரத்து கப்பல் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்துள்ளது ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள இக்கப்பலில் 7,700 வாகனங்களை கொண்டு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. Hyperion Highway எனப்படும் இக்கப்பலிலிருந்து இலங்கையின் வாகனத் தேவைக்காக இறக்குமதி செய்யப்பட்ட 553 வாகனங்கள் அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்டன. கடந்த 3 மாதங்களுக்கு முன் தனது பயணத்தை ஆரம்பித்த இக்கப்பல் ஜப்பானிலிருந்து உலகின் பல்வேறு துறைமுகங்களுக்குச் சென்றுள்ளதோடு, அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான அதன் வருகையையிட்டு சிறிய வரவேற்பு நிகழ்வும் இடம்பெற்றது. இதன்போது இலங்கைத் துறைமுக அதிகார சபைக்கும் குறித்த கப்பலின் அதிகார…

  2. ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக யாழில் கறுப்புக் கொடி போராட்டம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு எதனையும் பெற்றுக் கொடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம். இன்று காலை யாழ். மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டத்தில் ஈடுபட்டார். இனப்படுகொலை போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைகளை முன்னெடுத்தல், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை கொண்டு நிரந்தரத் தீர்வை பெறல், இராணுவத்தினர் வச…

  3. நாளைக்கான எமது உரிமை போராட்ட அரசியலின் நிலைபாட்டையோ அல்லது எமது பிள்ளைகளின் எதிர்கால உரிமைப் போராட்ட அரசியல் நிலைப்பாட்டையோ இன்றே நாம் எடுக்க வேண்டும் என சிலர் குறிப்பாக களத்துக்கு வெளியே கொழும்பிலும் வெளியிலும் வாழும் சிலர் வலியுறுத்துகிறார்கள். போராளிகளின் நிகழ்ச்சிநிரல் தோற்றுப்போய் மெல்ல எழுகிறவர்களது நிகழ்ச்சி நிரலாக முடியாது. ஒவொரு காலக்கட்டத்துக்குமான சாத்தியமான அரசியல் நிகழ்ச்சி நிரலை புரிந்துகொள்வது முக்கியம். கால் முறிந்த ஒரு ஓட்ட பந்தயகாரர் கட்டிலில் கிடந்து சிகிட்சை செய்வதற்கான காலத்தையும் கட்டுப் போட்டபடி மெதுவாக செயல்படும் காலத்தையும் ஆதரிப்பவர்களா மறுப்பவர்களா நாளை அவர் எழுந்து போட்டிகளில் ஓடி வெல்வதற்க்கான சூழலை உருவாக்குகிறவர்? தூரத்து உறவுகள் சிக…

  4. வடக்கு,கிழக்கு தமிழர்கள் இனிமேல் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கமாட்டார்கள் என்றும், ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கு நியாயமான தீர்வை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று நடந்த விவாதத்தின் போது உரையாற்றிய இரா.சம்பந்தன்- அனைத்து சமூகங்களும் ஏற்கக்கூடிய தீர்வுவொன்றை நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்க வேண்டும். ஸ்ரீலங்காவை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வுதான் சிறந்தது. இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவரது அணியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். …

    • 8 replies
    • 864 views
  5. சம்பந்தனின் பாராளுமன்ற உரையும் ஊடகங்களும் பரபரப்புகளும் - ஒரே பார்வையில் அரசியல் சாசனப் பேரவை அமைப்பது தொடர்பில் நேற்றைய தினம் பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட்ட போது எதிர்க்கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஆற்றிய உரை இலங்கை ஊடகங்களில் மாறுபட்ட கோணங்களில் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தெற்கின் சிங்கள ஊடகங்கள் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை தேசிய தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் புதிய அரசியல் சாசன உருவாக்கத்திற்கு மஹிந்தவின் பங்களிப்பு அவசியமானது எனவும் கூறினார் என்ற கோணத்திலும் இன்னும் பல விடயங்களையும் உள்ளடக்கி செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோன்று தெற்கின…

  6. புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் மகிந்த-மைத்திரி தரப்பு இணக்கப்பாடு புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தரப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பிற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் மகிந்த தரப்பிற்கும், மைத்திரி தரப்பிற்கும் இடையில் முரண்பட்ட நிலைப்பாடு காணப்பட்டது. இந்த நிலையில், நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டு தரப்புக்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது. புதிய அரசியல் அமைப்பு தொடர்பில…

  7. 2020இல் கண்ணிவெடிகளற்ற நாடாக இலங்கை மாறும்! மிதிவெடிகளுடன் காணப்படும் மீதமுள்ள காணிகளின் 64 சதுர கிலோமீற்றர் அளவான நிலப்பரப்பு, முல்லைத்தீவு மாவட்டத்திலேயே உள்ளதாக, மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். குறித்த பிரதேசங்களிலுள்ள கண்ணிவெடிகளை இரண்டு வருட காலப்பகுதிக்குள் அகற்றுவது தொடர்பாக, ஹலோ ட்றஸ்ட் அரச சார்பற்ற நிறுவனம் முன்னெடுத்துள்ள திட்டம் தொடர்பில் விசாரணை செய்யும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இரண்டு வருடக்காலப்பகுதிக்குள் முல்லைத்தீவில் உள்ள கண்ணிவெடிகள் அகற்றப்படுமிடத்து 2020ஆம் ஆண்டளவில் கண்ணிவெடிகள் அற்ற சுதந்திர நாடாக இலங்கை திகழும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின்…

  8. ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கம் குறித்து கூட்டமைப்புடன் பேச்சு நாட்டைப் பிளவுபடுத்தும் கொள்கையில் இருந்து கூட்டமைப்பு விலகியுள்ளது. ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரத்தை பரவலாக்கத்தை முன்னெடுப்பதற்கே அரசாங்கம் திட்டமிட்டுள்ளன. இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசவுள்ளோம் என்று பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன.இந்த யாப்பில் உள்ளடங்கியுள்ள நி…

  9. 'காணாமற்போனது 1997, விசாரணை நடத்தியது 2015இல்' -எம்.றொசாந்த் எனது மகன் 1997ஆம் ஆண்டு காணாமற்போனமை தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் கடந்த 2015ஆம் ஆண்டே விசாரணைகளை மேற்கொண்டனர். காணாமற்போனமை உண்மையா என அயலவர்களையும் விசாரித்துச் சென்றனர் என்று காணாமற்போன கணேஷ் கருணாரட்ணம் என்பவரின் தாய் ரேவதி தெரிவித்தார். யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால் இன்று புதன்கிழமை நடைபெற்ற கறுப்புக்கொடி போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 1997ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி ஆலைக்கு, தனது நண்பனுடன் சென்ற …

  10.  யதார்த்த அரசியல் என்பது சரணாகதி அரசியல் அல்ல தமிழ்த் தேசிய அரசியல் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் பெருவாரியாக ஒரே புள்ளியில் ஒருங்கிணைகின்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும், அதற்கு எதிராக விமர்சனங்களும், வியாக்கியானங்களும் பலமாக முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. அந்த விமர்சனங்களிலும், வியாக்கியானங்களிலும் குறிப்பிட்டளவான நியாயப்பாடுகள் இருந்திருக்கின்றன. அதனை மறுப்பதற்கில்லை. ஆனால், அவற்றை முன்வைக்கும் தரப்புக்கள் அதிகமான சந்தர்ப்பங்களில் மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பதுவும் கவனத்தில் கொள்ளப்பட கூடியது. அரசியல் மற்றும் அது சார்பிலான போராட்டக் களங்களில் 'நிராகரிக்க…

    • 2 replies
    • 364 views
  11. தீர்வுக்காகக் கூட்டமைப்பு பாடுபடும்போது குழப்பியடிக்கக் கடும்போக்காளர்கள் முயற்சி!- அமைச்சர் மனோ சாடல்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவர்களும் அரசியல் தீர்வுக்காக பாரிய சிக்கலான காரியத்தை செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், கூட்டமைப்புக்கு எதிராக வடக்கிலும், புலம்பெயர் நாடுகளிலும்கூட எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. தீவிரவாதிகளே இவ்வாறு குழப்பம் விளைவிக்கின்றனர் இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தை அரசமைப்புச் சபையாக நியமிப்பதற்குரிய பிரேரணை மீதான விவாதத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். …

  12. ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவல்! கூட்டமைப்புடன் பேசுவோம் என்கிறது அரசாங்கம் [ புதன்கிழமை, 13 சனவரி 2016, 01:17.27 AM GMT ] நாட்டை பிளவுபடுத்தும் கொள்கையில் இருந்து கூட்டமைப்பு விலகியுள்ளது. ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரத்தை பரவலாக்கத்தை முன்னெடுப்பதற்கே அரசாங்கம் திட்டமிட்டுள்ளன. இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசவுள்ளோம் என்று பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன மேலும குறிப்பிடுகையில், 1978ம் ஆண்டு அரசியலமைப்…

  13. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஒத்துழைப்பு நாட்டிற்கு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற விவாதத்தில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு கோரிக்கையொன்றை விடுக்கவுள்ளதாகவும், ஆனால் அவர் இந்த சபையில் தற்போது இல்லை எனவும் அவர் கூறினார். மஹிந்த ராஜபக்ஸ நாட்டின் தேசிய தலைவர்களில் ஒருவராகவே கருதப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அவர் தற்போது நாட்டிற்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும், அவரின் ஒத்துழைப்பு இந்த நாட்டு மக்களுக்கு தேவையான…

  14. பலாலி இராஜேஸ்வரி ஆலயத்திற்கு அருகிலுள்ள படைமுகாம்களை அகற்றும் இராணுவம் [ Wednesday,13 January 2016, 05:30:14 ] ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துகொள்ளவுள்ள தேசிய பொங்கல் விழா நடைபெறவுள்ள பலாலி இராஜேஸ்வரி ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள படைமுகாம்களை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படைமுகாம்களை அகற்றும் நடவடிக்கையானது அப்பகுதியினை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றதா? அல்லது ஜனாதிபதி பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வு இடம்பெறும் பகுதியை படைமுகாம்கள் அற்ற பகுதியாகக் காட்டுவதற்கு எடுக்கப்படும் முயற்சியா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பலாலி கண்ணார் …

  15. கிரித்தலே இராணுவ முகாம் சீல் வைத்து மூடப்பட்டது? [ புதன்கிழமை, 13 சனவரி 2016, 12:53.10 AM GMT ] கிரித்தலே இராணுவப் புலனாய்வு முகாம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பணிப்புரைக்கு அமைய நேற்று இந்த முகாம் சீல் வைத்து மூடப்பட்டது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போதல் சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை இராணுவத் தளபதி ஏற்றுக் கொள்ளத் தவறினால் அவருக்கு எதிராக வழக்குத் தொடருமாறு ஹோமாகம நீதவான், புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து கிரித்தலே முகாம் மூடப்பட்டுள்ளது. கிரித்தலே புலனாய்வு முகாமில் கடமையாற்றி வந்த இராணுவப் புலனாய்வ…

  16. பௌத்த பிக்குகளின் ஒழுக்கத்தை உறுதி செய்ய புதிய சட்டங்கள்: குளோபல் தமிழ்ச செய்தியாளர் கொழும்பு:- 13 ஜனவரி 2016 நாட்டின் பௌத்த பிக்குகளின் ஒழுக்கத்தை உறுதி செய்ய புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பௌத்த பிக்குகளின் ஒழுக்கத்தை உறுதி செய்யும் வகையிலான உத்தேச சட்டமொன்று நேற்றைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. உத்தேச சட்டத்தை ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க பாராளுமன்றில் சமர்ப்பித்திருந்தார். இந்த புதிய உத்தேச சட்டத்தில் பல்வேறு விடங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பௌத்த பிக்குகள் ஜோதிடம் பார்ப்பதற்கும், மாந்ரீக நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது. ஜோதிட மற்றும் மாந்ரீக நடவடிக்கைகளுக்காக பிரச்சார…

  17. பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அதிகநேரம் ஓதுக்கப்படுவதாக மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களை உள்ளடக்கிய கூட்டு எதிர்கட்சி அதிருப்தி வெளியிட்டுள்ளது. கடந்த வரவுசெலவுதிட்ட விவாதங்களின்போது தமது தரப்பிற்கு வழங்கப்பட்டதை விட தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு அதிகநேரம் ஓதுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார். இதனை நான் தெரிவிப்பதால் சிலர் என்னை இனவாதி என தெரிவிக்கக் கூடும். பரவாயில்லை. எதிர்கட்சி அந்தஸ்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. வரவுசெலவுதிட்ட விவாதம் இடம்பெற்ற 25 நாட்கள் முழுவதும் முதல் ஓரு மணித்தியாலம் அந்த கட்சிக்கே வழங்கப்பட்டது. அடுத்த ஓருமணி நேரம் ஜே.விபிக்கு வழங்கப்பட்டத…

  18. முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்ரூ தனது பிணை நிபந்தனையில் கையெழுத்திடாமல் நீதிமன்றத்தை விட்டு வெளியேற முயற்சித்தது தொடர்பாக கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார். தனது வீட்டுப் பணிப்பெண்ணை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் ஆப்ரூ கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது முன்னாள் நீதியரசர் சரத் ஆப்ரூவுக்கு தலா ஒரு லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபா ரொக்கப்பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பின்னர் சரத் ஆப்ரூ தனது பிணை நிபந்தனையில் கையெழுத்திடாமல் நீதிபதிகளுக்கான வாசல் வழியாக வெளியேறிச் சென்றிருந்தார்.…

  19. இந்தவாரம் இலங்கை வரவுள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியகத்தின் இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் யாழ்ப்பாணத்தில் வடமாகாகண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் பேச்சு நடத்தவுள்ளார். இதன்போது இணைத்தலைவர்களில் ஒருவராக அவர் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பேரவை மற்றும் அவரின் தீவிர நிலைப்பாடுகள் தொடர்பாக பிரித்தானிய அரசின் கவலைகளை விக்னேஸ்வரனிடம் ஹியூகோ ஸ்வயர் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கையின் புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவும், பிரித்தானியாவும் திருப்தி கொண்டுள்ளன. இந்நிலையில், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தீவிர நிலைப்பாடுகள் மிதவாத அணுகுமுற…

  20. இந்த வருட இறுதியில் இந்திய மீனவர்களின் வருகை முற்று முழுதாக நிறுத்தப்படும் என கடற்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். மன்னாருக்கு இன்று வருகை தந்த கடற்தொழில் அமைச்சர், மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் தொடர்பாகவும் மன்னார் கடற்தொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தில் கலந்துரையாடினார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், மன்னார் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ள மீன்பிடி முறைமைகளை பயன்படுத்தி பலர் மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சிறு மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இது தொடர்பில் பலர் இங்கு என்னிடம் முறையிட்டுள்ளனர். எனவே தடை செய்யப…

  21. யாழில் காதலுக்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்ததால் காதலர்கள் கிணற்றில் பாய்ந்துள்ளனர். இச் சம்பவத்தில் காதலன் உயிரிழந்துள்ளார். காதலி கிணற்றிலுள்ள குழாயை பிடித்து உயிர் தப்பியுள்ளார். கோப்பாய் தெற்கைச் சேர்ந்த சிவபாதம் தினேஸ்குமார் (வயது 19), யோகராசா அனுசியா (வயது 21) ஆகியோரே இன்று காலை கிணற்றில் பாய்ந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒருவருடமாக காதலித்து வந்ததாகவும், காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilwin.com/show-RUmuyBSWSWipyC.html

  22. கடும்போக்குடைய அமைப்புக்களை தடை செய்ய வேண்டுமென கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன மற்றும் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகள் மற்றும் கடும்போக்குடைய அமைப்புக்களை தடை செய்ய வேண்டும். இவ்வாறான கட்சிகள் அமைப்புக்கள் எம்மை ஐக்கியப்படுத்த முயற்சிப்பதில்லை. மாறாக எம்மை பிளவடையச் செய்யவே முயற்சிக்கின்றன. நீண்ட கால அடிப்படையில் கடும்போக்குடைய அமைப்புக்கள் மற்றும் இன மதவாத அடிப்படையிலான அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும். நாட்டின் சில பகுதிகள் தமக்கு மட்டும் சொந்தமானது என நினைப்பது பிழையானது. அவ்வாறு …

  23. Published on January 11, 2016-6:38 pm · No Comments தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒரே குரலில் பேசுதல், வினைத்திறன் மிக்க மாகாண நிர்வாகம் இதுவே எங்கள் எதிர்பார்ப்பு. என முதல்வரிடம் தெரிவித்தனர் வட மாகாணசபை உறுப்பினர்கள். வட மாகாணசபை ஆளும்தரப்பு உறுப்பினர்களுக்கும், வட மாகாணசபையின் முதலமைச்சர் கௌரவ.நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று [11-01-2016] முற்பகல் 10:00 மணிமுதல் முதலமைச்சர் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. வட மாகாணசபையின் ஆளும்தரப்பு உறுப்பினர்களின் கூட்டான வேண்டுகோளுக்கிணங்க முதலமைச்சர் அவர்கள் இந்த சந்திப்பிற்காக நேரம் ஒதுக்கித்தந்திருந்தார். மேற்படி சந்திப்பில் 18 ஆளும்தரப்பு உறுப்பினர்கள் கலந்துகொண்…

    • 0 replies
    • 633 views
  24. சில விடயங்களை நீக்கிவிட்டு கொழும்புபோர்ட்சிட்டி திட்டத்தை தொடர்வதற்கு அரசாங்கம் தீர்மானம் 12 ஜனவரி 2016 முன்னைய அரசாங்கம் சீனாவுடன் செய்துகொண்டஓப்பந்தத்தில் காணப்படும் சில விடயங்களை நீக்கிவிட்டு கொழும்புபோர்ட்சிட்டி திட்டத்தை தொடர்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேசவர்த்தக விவகாரங்களிற்கான பிரதியமைச்சர் சுஜீவசேனசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ள அவர் முன்னைய அரசாங்கம் செய்துகொண்ட ஓப்பந்தத்தில் 50 ஏக்கர ;நிலத்தை தனியாரிற்கு வழங்குவது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது, அதனை இந்த அரசாங்கத்தினால் ஏற்க முடியாது இதனால் ஓப்பந்தத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டியுள்ளது. நாங்கள் த…

  25. நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவது குறித்த பிரேரணை மீது நாடாளுமன்றில் இன்று விவாதம் நடத்தப்பட உள்ளது. அரசியலமைப்பு உருவாக்கும் நோக்கில் அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அரசியலமைப்பு பேரவை குறித்த யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக இன்று காலை 9.30 முதல் பிற்பகல் 1.30 வரையில் இந்த விசேட விவாதம் நடத்தப்படவுள்ளது. இந்த யோசனை கடந்த சனிக்கிழமை பிரதமரினால் முன்வைக்கப்பட்ட போதிலும் எதிர்க்கட்சியினர் கருத்து வெளியிட சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. அரசியலமைப்பு குறித்த எதிர்க்கட்சியினருக்கு கருத்து வெளியிட சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடுக்கப்பட்ட கோரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.